Jump to content

மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்துவருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத்தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத்தேர்தலில் ஆற்றல்மிக்க முதிய முகங்களைக் களமிறக்கவேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இதுகுறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194947

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

 

வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁

இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?..

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயம் said:

 

வெளிநாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகளிடம் அவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு வேட்பாளர் பட்டியலை கேட்கலாம். தேடலை அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சுமந்திரன் தனது விசுவாசியை கொண்டு வருகின்றார் என போர்க்கொடி தூக்குவார்கள். 😁

இளையவர்கள், ஆற்றல் உள்ளவர்கள், அனுபவசாலிகள் பெண்கள்?..

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பல வித்துவான்கள் உள்ளார்கள். ஆனால், இவர்களால் மேசை/சோபாவை விட்டு எழும்பி இறங்கி களத்தில் பணியாற்ற முடியுமா என்பது சந்தேகமே.

தமிழரசு   என்று ஒரு கட்சி இப்போது இருக்கிறதா  ??? உண்மையில் இல்லை    அந்த கட்சிக்கு இந்த சுமத்திரன்  மரணச்சடங்கு நடத்திவிட்டார்.    

ஆசிரியர்கள் இடமாற்றம் 

அரசாங்க அதிபர் இடமாற்றம்   இவற்றை அமைச்சர்கள் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இப்போது   தன்னிச்சையாக அரசாங்கம்   தருமாயின்    இவர்கள் தேவையில்லை   முதலில் இவர் விலகட்டும் 

இப்போது உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது அல்லது வேறு தொழில் செய்வது நன்று    

புதிய அரசாங்கம் செய்வதை பொறுத்து இருந்து பார்ப்போம்   🙏🙏

12 minutes ago, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

நல்லது வரவேற்க வேண்டிய விடயம்.    சேவை செய்யும் ஆர்வம்  மனப்பான்மை உள்ளவர்கள் தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும்   வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம். வாழ்த்துக்கள். 

மாற்றம் ஒன்றே மாறாதது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
27 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2 late.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எனது கிராமத்தில் தேசிய மக்கள் சக்தியில் 2 இளையோர் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக விரும்புகிறார்கள். ஒருவர் பல்கலைக் கழக மாணவர்!

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

அப்படியானால் இளைஞர்கள் படித்தவர்கள் வரணும் என்பது?????

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

அப்படியானால் இளைஞர்கள் படித்தவர்கள் வரணும் என்பது?????

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன்.

சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤪ஆடு தானாகத் தலையை நீட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நியாயம் said:

ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன்.

சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இம்முறை 6 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட இருப்பதால் 9 பேர் ஒரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட வேண்டும். எனவே ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் 9 பேருக்கும் 18000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍
ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது.

முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
அதை செய்யாமல்...
"வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂

சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍

சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு...
அவர்,
கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.  animiertes-gefuehl-smilies-bild-0374.gif

அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... 
இவரின்
நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா?

உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன் 

அவர்களுடைய ஆர்வத்தைச் சொன்னேன் அண்ணை.
எனக்கு ஆர்வமில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் மாவட்டத்தில் ஒரு சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இம்முறை 6 உறுப்பினர் தெரிவுசெய்யப்பட இருப்பதால் 9 பேர் ஒரு சுயேட்சைக் குழுவில் போட்டியிட வேண்டும். எனவே ஒருவருக்கு தலா 2000 ரூபாய் வீதம் 9 பேருக்கும் 18000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்படல் வேண்டும்.

 

தகவலுக்கு நன்றி வாலி. ஒரே கொள்கை உடையவர்கள் ஒரு குழுவை உருவாக்கி இறக்கலாமோ?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் 16 தாண்டி 17 போறேன் .......... மிக ஜாலியான ஒரு பாடல் . ........நாகேஷ் & மனோரமா ..........!   😍
    • இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள் 28 SEP, 2024 | 11:54 AM   இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194977 இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து Published By: DIGITAL DESK 3   28 SEP, 2024 | 01:46 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் மைக்கல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 514 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன்முறையில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து மதிய போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் ஓவரை வீசிய நிஷான் பீரிஸ் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஒட்டங்களைக் குவித்து டிக்ளயா செய்தது. https://www.virakesari.lk/article/194984
    • வணக்கம் வாத்தியார் . .........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ   பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---
    • அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.  டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மின்சார விலை திருத்தம் இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/remove-taxes-on-fuel-as-promised-kanchana-urges-1727501122?itm_source=parsely-detail
    • 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்)   புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.   நேற்று வெள்ளிக்கிழமை (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும் அவர் தெரிவிக்கையில்  நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.   வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.   நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.   ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து  வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.