-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
வட மாகாண மட்ட சிங்கள தின போட்டி நிகழ்வுகள் நேற்றைய தினம் (18) யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கோட்டக்கல்வி அலுவலக கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. எந்த விதமான அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்த போட்டி நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நடுவர் குழு உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் பல்வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த பொறுப்பாசிரியர்களை நடுவர்களாக நியமித்தமை தொடர்பில் பல்வேறுபட்ட ஆட்சேபனைகளை வெளியிட்ட பெண் ஆசிரியை ஒருவரை கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவ்வாறான பல சர்ச்சைகள், குழப்பங்களுக்கு மத்தியில் நேற்றைய தினம் இந்தப் போட்டி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன. ஒரு மாகாண மட்ட போட்டி நிகழ்த்தப்படுவதாயின், ஏற்கனவே உரிய முறையில் அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டிருத்தல் வேண்டும். ஆனால், எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற்றதை அறியமுடிகிறது. குறிப்பாக, காலை 8.30 மணிக்கு கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்துக்கு மாணவர்களும் பொறுப்பாசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய தூரப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இந்தப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டிய தேவை இருந்தபோதிலும் இலகுவில் அடையக்கூடிய ஓரிடத்தில் இந்தப் போட்டி நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. ஐந்து மாவட்ட மாணவர்களும் இலகுவில் செல்லக்கூடிய ஒரு மத்திய நிலையத்தில் இந்த போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல்கள் பெரும் அசௌகரியங்களை மாணவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. இப்போட்டிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கோட்டக் கல்வி அலுவலக வளாகமானது துப்பரவு செய்யப்படாது குப்பைகள் நிறைந்த பாதுகாப்பற்ற ஒரு பகுதியாகவே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த பகுதியில் மாணவர்கள் தங்குவதற்கு எந்த விதமான இட வசதிகளும் ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அத்தோடு, அவ்விடங்களில் அமர்வதற்கு கதிரைகள் இடப்படாதிருந்ததையும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அங்கே காணப்பட்ட ஒரு கொட்டகை பாதுகாப்பற்ற நிலையில் கூரை பொறிந்து விழும் அபாயத்தில் இருந்ததாகவும் இந்த கூரை விழுந்தால் பல மாணவர்களுக்கு உயிராபத்து கூட ஏற்படலாம் என்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு உள்ளதா, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அவதானித்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்து சீர்செய்யும் அதிகாரிகள், சிறுவர்களை ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்போது பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் கவனத்தில் எடுப்பதற்கு தவறுவது ஏன் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வளாகத்தில் குடிநீர் வசதி எதுவும் மாணவர்களுக்காக செய்து கொடுக்கப்படவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியதாக கூறப்படும் இந்த போட்டி நிகழ்வில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படாமல் மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த போட்டி நிகழ்வுக்காக மாணவர்களுக்கு சிற்றூண்டி, குளிர்பானங்களை வழங்குவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் அவை உரிய முறையில் பகிர்ந்து வழங்கப்படவில்லை. கல்வித் திணைக்கள அதிகாரிகள் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டிகள் அருந்துவதை கண்ட சில மாணவர்கள் தாக மிகுதியால் அவர்களிடம் கையேந்தி நின்று, அதனை பெற்றதாகவும் அதன் பின்னர் சில மாணவர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் பொருட்களை பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு வழங்கி அவர்களினூடாக அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் செய்திருக்க முடியும். எனினும், அவ்வாறான நடவடிக்கை எதுவும் இங்கு எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களிலாவது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இலகுவில் அடையக்கூடிய ஓர் இடத்தினை தெரிவுசெய்து, இந்த போட்டி நிகழ்வுகள் நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், வலய ரீதியாக சுழற்சி முறையில் இந்த போட்டிகள் நடைபெற வேண்டும். ஆங்கில தினம், தமிழ்மொழி தினம், சிங்கள மொழி தினம் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டிகளும் அனைத்து வலயங்களிலும் சுழற்சி முறையில் வைக்கப்பட்டால் போக்குவரத்து, உணவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்புகள் குறையும். அவ்வாறன்றி, ஒரு சிலரின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது கவலைக்குரிய விடயமே. இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் விசாரணை நடத்தி, இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான போட்டி நிகழ்வுகள் புதிய கட்டமைப்புடனும் உரிய ஏற்பாடுகளுடனும் மாணவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்காத வகையிலும் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/196647 -
இங்குள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் வாசித்தேன். கொல்லப்பட்டவர் அகதி முகாமில் பிறந்தார், இஸ்ரேல் சிறையில் 21 வருடங்கள் அடைக்கப்பட்டார் என தகவல்கள் உள்ளன. இப்படியான ஒருவரிடம் எப்படியான மனித நேயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? அவலத்தை கொடுத்தவனுக்கு அவலத்தை கொடுத்துள்ளார். இறுதியில் கொல்லப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் பதினாறு வயதில் போராட சென்ற தலைவர் பிரபாகரனை விட இவருக்கு போராடுவதற்கான தேவை மிக அதிகமாகவே காணப்பட்டது.
-
13 எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையாது; சி.வி தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது, 13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது. ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது. இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும். ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம். இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார். அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன. வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது. வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை எப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது. அதனை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் முன்னாள் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும். ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரணம் இருக்கலாம். அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது. ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர். மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார். https://thinakkural.lk/article/310897
-
By ஏராளன் · பதியப்பட்டது
இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுகநிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (18) காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு நா.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வன்னிமாவட்டத்தில் இம்முறை தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன், வைத்தியர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், சமூக செயற்ப்பாட்டாளர் தே. சிவானந்தராசா, ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ. கமலேஸ்வரன் சட்டத்தரணி, செ. டினேசன், சட்டத்துறை மாணவிஅ. கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196644 -
எல்லாமே நாடகம் சிறியர்...ஒன்றுமே நடக்காது...எல்லாம் காவித்துணிகளின் செட்டப்...இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள் ஆக்குவதுதான்...எந்தவித உதவியையும் கிடைக்காமல் செய்வது...அதன் பின்பு விசிட்டர் விச்சவுக்கு திறந்து விடுவ்து...தாமிழரின் ஆட்டம் முடிந்தது...இதில் முசுலிம் பதுங்கியிருந்து காரியம் பார்க்க கங்கணம் கட்டுகிறான்...இது தெரியாமல் .நம்மடயள் நாற்பது கட்ட்சியாக எலச்சன் கேட்கினம் ..அதிலை தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாவிப்பதுபோல..தேசியம் சொல்லுகினம்...தூ ...*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இனம்..
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts