Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக  அமெரிக்க பிரஜைகளுக்கு  அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

இலங்கையில் அருகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என தூதரகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் உடனடியாக மற்றும் மறு அறிவித்தல் வரை அறுகம் பேக்கான பயணத் தடையை தூதரக பணியாளர்களுக்கு விதித்துள்ளது.

மறுஅறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள்.

அந்தவகையில் அமெரிக்க பிரஜைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக,

அனைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் மற்றும் அவசரநிலைகளை 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள் மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளத்தை நம்புங்கள், ஒரு சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து வெளியேறுங்கள்.

உங்களிடம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வகையான தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசிகளை வைத்திருத்தல் வேண்டும்.

செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/311020

  • கருத்துக்கள உறவுகள்

usa-sri-lanka-flags.jpg?resize=750,375&s

பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்-அமெரிக்க தூதரம் விசேட அறிவிப்பு!

அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

அத்துடன் அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1405325

  • கருத்துக்கள உறவுகள்

நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் : சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - பொலிஸ் திணைக்களம்

image

நம்பத்தகுந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைந்துள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் எதிராக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள்  பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் திணைக்களம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏதேனும் அவசரநிலை அல்லது  தகவல்களை ‘1997’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/196894

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ஆட்சி மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போடுறாங்களோ?..அது சரி யார் தாக்குதல் நடத்துவார்கள்...இந்தியா ரோ,சகரான் குழு.புதிய புலிகள் ,பழைய புலிகள்,ஈரான்,இஸ்ரேல்.சீனா...
சொல்லுங்கோ....ஒரு யூடியுப் போடப் போறன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

என்னப்பா ஆட்சி மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போடுறாங்களோ?..அது சரி யார் தாக்குதல் நடத்துவார்கள்...இந்தியா ரோ,சகரான் குழு.புதிய புலிகள் ,பழைய புலிகள்,ஈரான்,இஸ்ரேல்.சீனா...
சொல்லுங்கோ....ஒரு யூடியுப் போடப் போறன்

யூற்ரூப்பர்களுக்கு வேலை வந்துவிட்டது. இனியென்ன.. ஒரே அலப்பறைதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்னரே கிடைத்த தகவல்! அறுகம்பைக்கு அனுப்பப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள்

அறுகம்பை பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார். 

அறுகம்பை சுற்றுலாப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தற்போது  அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கிடைத்த தகவல் 

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்னரே கிடைத்த தகவல்! அறுகம்பைக்கு அனுப்பப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள் | Police Strengthen Security In Arugam Bay

ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் அலைச் சறுக்கு விளையாட்டுக்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக ஈடுபடுவதாகவும், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்

இதேவேளை, கொழும்பு அல்லது வேறு எந்த பிரதேசங்களிலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறவுள்ளதாக எவ்வித புலனாய்வுத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னரே கிடைத்த தகவல்! அறுகம்பைக்கு அனுப்பப்பட்டுள்ள 500 பொலிஸ் அதிகாரிகள் | Police Strengthen Security In Arugam Bay

இதேவேளை, அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த அச்சுறுத்தல் இருப்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கிழக்கு இலங்கையின் அறுகம்பை தொடர்பில் இவ்வாறான பயணக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/police-strengthen-security-in-arugam-bay-1729665124#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் மக்களைப் பொறுத்தவரை  அவர்கள் எந்த இனத்திராக இருருந்தாலும் இவை மகிழ்ச்சியான செய்தி அல்ல.  ஏற்கனவே இவ்வாறான யுத்தத்தினதும்  தாக்குதல்களதும்  விளைவுகளை அனுபவிப்பர்கள் அவர்கள். புலம் பெயர் தேசிக்காய்களுக்கு இது மனமகிழ்வூட்டும் நகைச்சுவை செய்தியாக இருப்பதில் வியப்பு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

யூற்ரூப்பர்களுக்கு வேலை வந்துவிட்டது. இனியென்ன.. ஒரே அலப்பறைதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

சும்மா சொல்லப்படாது உந்த யூடியுப் காரங்கள் நல்லா சம்பாதிக்கராங்கள் போல கிடக்கு...தேர்தல் முடிய முதல் சம்பாதிச்சா சரி...அதற்கு பிறகு கொஞ்சம் கஸ்டம் தான்...இலண்டனில் வாழும் ஒருத்தர் 24 மணித்தியாலம் யூடியுப் போடுகிறார் என்றால் பாருன்கோவன் அவரது உழைப்பை..
 

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-9-10.jpg?resize=750,375&ssl=

இலங்கையிலுள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

அறுகம்பை வளை குடாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து, இலங்கையிலுள்ள ரஷ்ய பிரஜைகளை அவதானமாக இருக்குமாறும், அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதகரம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய இராச்சியம் அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்ட அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே ரஷ்ய தூதகரத்தின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://athavannews.com/2024/1405373

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

இலங்கையில் வாழும் மக்களைப் பொறுத்தவரை  அவர்கள் எந்த இனத்திராக இருருந்தாலும் இவை மகிழ்ச்சியான செய்தி அல்ல.  ஏற்கனவே இவ்வாறான யுத்தத்தினதும்  தாக்குதல்களதும்  விளைவுகளை அனுபவிப்பர்கள் அவர்கள். புலம் பெயர் தேசிக்காய்களுக்கு இது மனமகிழ்வூட்டும் நகைச்சுவை செய்தியாக இருப்பதில் வியப்பு இல்லை. 

அரசாங்கம் ,அரசுகள் இது வரை காலமும் இனவாதம் பேசி ஏனைய‌ இனிய இளைய இன்னுயிர்களை பலி எடுத்தன் விலைவு......சர்வதேச ஆட்டத்தில் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும்....எல்லாம் அவன் செயல்
 

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-8-15.jpg?resize=750,375&ssl=

தாக்குதல் அச்சம்; இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த பிரட்டன்!

அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவித்தல் வரும் வரை அறுகம் வளைகுடா பகுதிக்கு செல்வத‍ை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் எடுத்துள்ளனர்.

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வு அமைப்புகளும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அறுகம்பை வளைகுடா மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்யும் பிரபலமான இடங்கள் காரணமாக இஸ்ரேலியர்கள் அடிக்கடி அங்கு செல்வதாகவும், அண்மைக்காலமாக கிடைத்த தகவல்கள் அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார்.

கொழும்பில் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே பொதுமக்கள் எத்தகைய அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2024/1405367

  • கருத்துக்கள உறவுகள்

அறுகம்குடாவில் அதிகளவில் இஸ்ரேலியர்கள் - கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் - பொலிஸ் பேச்சாளர்

image

இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அவர்கள் அறுகம்குடாவில் ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகவும்  அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலியர்கள் அதிகளவில் அறுகம்குடாவிற்கே செல்கின்றனர். அந்த பகுதியே அவர்களின் அதிக விருப்பத்திற்குரிய பகுதியாக காணப்படுகின்றது, அவர்கள் அங்கு நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

அங்கு சென்றுள்ள  சுற்றுலாப்பயணிகள் அங்கு கட்டிடமொன்றை ஆக்கிரமித்துள்ளனர், இந்த பகுதியில்  இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது என சமீபத்தில் எங்களிற்கும் தகவல்கள் கிடைத்தன.

ஆரம்பகட்ட நடவடிக்கையாக நாங்கள் ஏற்கனவே வீதிதடைகளை அமைத்துள்ளோம், வாகனங்களையும் பொதுமக்களையும் சோதனையிடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம்.

பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் இராணுவத்தினர் அரசபுலனாய்வு திணைக்களத்தினர்  இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/196901

  • கருத்துக்கள உறவுகள்

"உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது" அருகம்குடாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலியர்களிற்கு ரெஹான் எச்சரிக்கை

image

இலங்கையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெலிகமவின் முன்னாள் மேயரும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான ரெஹான் ஜெயவிக்கிரம  இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அருகம்குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போது கடும் பாதுகாப்பு  அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை மீட்சிக்கான நாட்டின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இஸ்ரேலின் சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இதற்கு தீர்வை காணவேண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கவேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு அவசர தீர்வை காணுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ள அவர் எச்சரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் எதிர்விளைவுகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட மோசமானதாக அமையலாம் என தெரிவித்துள்ளார்..

'ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்து கொள்ளவிரும்புகின்றேன், உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களிள் வாய்ப்புகளை அழிக்க முடியாது, நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்க வேண்டும்"என ரெஹான் ஜெயவிக்கிரம  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/196914

  • கருத்துக்கள உறவுகள்

What,....🤨

என்ன நடக்கிறது அறுகம்குடாவில்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஸ்திரமின்மையை குழப்பத்தை ஏற்படுத்தும் இஸ்ரேலியர்களிற்கு ஒன்றை தெரிவித்து கொள்ளவிரும்புகின்றேன், உலகின் ஏனைய பகுதிகளில் செய்ததை போன்று எங்கள் மண்ணை நீங்கள் சட்டவிரோதமாக பலவந்தமாக ஆக்கிரமிக்க முடியாது, நீங்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது, ஏனையவர்களிள் வாய்ப்புகளை அழிக்க முடியாது, நாங்கள் உங்களை இந்த அழகான தேசத்திற்கு வரவேற்றுள்ள போதிலும், இது உங்களுடைய நாடில்லை இந்த நாட்டின் சட்டங்களை நீங்கள் மதிக்க வேண்டும்"என ரெஹான் ஜெயவிக்கிரம  தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி யாருக்காவது தெளிவான பதில் இருக்கிறதா?

சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எப்படி ஆக்கிரமிக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, putthan said:

என்னப்பா ஆட்சி மாற்றத்துக்கு பிள்ளையார் சுழி போடுறாங்களோ?..அது சரி யார் தாக்குதல் நடத்துவார்கள்...இந்தியா ரோ,சகரான் குழு.புதிய புலிகள் ,பழைய புலிகள்,ஈரான்,இஸ்ரேல்.சீனா...
சொல்லுங்கோ....ஒரு யூடியுப் போடப் போறன்

ஊரில் இருந்து எனக்கு தெரிந்தவர்கள்  இடதுசாரி ஆட்சியை தொடர விடமாட்டார்கள் என கூறியிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் வரும் இடமாம். அதற்கான ஒரு முற்பாதுகாப்பு நடவடிக்கையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அறுகம்குடாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேலியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது கொழும்பு செல்லவேண்டும் - இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை.

image

இலங்கையின் அறுகம் குடா உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகளை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ள இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை அவ்வாறு வெளியேறியவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது தலைநகருக்கு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் தலைநகரில் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகளவு காணப்படுவதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் ஏனைய பகுதிகளிற்கு செல்வதை இஸ்ரேலியர்கள் பிற்போடவேண்டும்,என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு பேரவை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் டைம்ஸ் நீங்கள் இஸ்ரேலியர்கள் என்பதை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அறுகம்குடாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேலியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது கொழும்பு செல்லவேண்டும் - இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை. | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் - இலங்கையை எச்சரித்த இந்திய புலனாய்வு பிரிவினர்

image

அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வுபிரிவுகள் இலங்கை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளன.

இந்திய புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இரண்டு இலங்கையர்கள் இந்த தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் இவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களிற்கு ஐந்து மில்லியன் வழங்கப்பட்டிருந்ததாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/196962

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் திட்டம் - இருவர் கைது

image
 

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படும் சந்தேகத்தில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/196963

  • கருத்துக்கள உறவுகள்

464377306_955373686627604_77629225341687

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது, அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் காணப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.

இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லாஹ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை அவதானிக்க முடிந்தது.

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அறுகம்பே மற்றும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்களை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் இன்று அறிவித்தது.

இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.

அத்தோடு, பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.samakalam.com/இஸ்ரேலிய-பிரஜைகள்-மீதான/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் – யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது

adminOctober 24, 2024

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரை , சுன்னாகத்தில் அவரின் வீட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதுடன் மற்றையவர் கொழும்பில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், குற்றச்செயல் ஒன்றிற்காக இலங்கை சிறையில் தண்டனை அனுபவித்த கால பகுதியில் சிறையில் பாகிஸ்தான் மற்றும் ஈரான் கைதிகளுடன் தொடர்புகளை பெற்று ,  நாசகார செயலில் ஈடுபட முனைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பே பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்றைய தினம் புதன்கிழமை அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2024/207778/

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

இதைப்பற்றி யாருக்காவது தெளிவான பதில் இருக்கிறதா?

சுற்றுலாவுக்கு வந்தவர்கள் எப்படி ஆக்கிரமிக்கிறார்கள்?

அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை சொத்துக்களை வாங்குவதன்மூலம் பிரதேசத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.

வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் காணிகளை வாங்குவதோ தம் பெயருக்கு மாற்றுவதோ முடியாது ஆனால் குத்தகையின் அடிப்படையில் 99 வருஷங்கள் பெற முடியும். வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீட்டு நிறுவனங்களில் 50%மான பங்குகளை கொண்டிருந்தால் அப்பார்ட்மெண்ட் ஹோட்டல் போன்ற சொத்துக்களை வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அந்த சிங்களவர் முஸ்லீம் வாக்குகளுக்காக பொங்குகிறார் என்று நினைக்கிறேன், இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டவர்கள் சகலவிதமான இலங்கை அரச அனுமதியுடனேயே சட்டரீதியாக உள் நுழைகிறார்கள் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். சுற்றுலாதலங்களை அண்டிய பகுதிகளில் அப்பாட்மெண்ட், ஹோட்டல்களை வாங்கி தமது பிரஜைகளுக்கு மட்டுமானதாக படிப்படியாக ஆக்குகிறார்கள்.

இலங்கை மட்டுமல்ல மேற்கத்தையநாடுகள் அனைத்திலுமே பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் யூதர்கள், அவர்களுக்கு இலங்கையில் சொத்து வாங்குவது தேத்தண்ணி குடிக்குற காசு.

இதை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தினாலன்றி வேறு எந்த அரசாங்கத்தினால் எந்த வழியில் தடுக்க முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

விரிவான தகவல்கள் இங்கே: 

https://www.lankapropertyweb.com/features/property-buying-for-foreigners.php?__cf_chl_tk=MmJCunvYVOIovCM289Vxd4I8sRSt2VJV8ow6yet1vb4-1729761863-1.0.1.1-v2leVM.RZqcpHHjiGHMYm_tJT9Si.yD2lJBGH.TUgK4

இலங்கையில் இஸ்ரேலியர்களின் பரம்பல் எவ்வாறுள்ளது என்பது பற்றி சந்துரு காட்சிபடுத்தியுள்ளார்

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் இது தான் நடைமுறை. யூதர்கள் அனைத்து நாடுகளிலும் பிரத்தியேக பாதுகாப்புடன் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் அமெரிக்கா என்ன உலகமே கதறி அழும்.. அறிவியல் மற்றும் பொருளாதார ஆட்சி இது. வாழ்ந்தால் அப்படி வாழணும். நாடு என்றால் அப்படி இருக்கணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.