Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும்.

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது.

வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் பல வருடங்களாக அயராது விடை தேடி வரும் இந்த தாய்மார்கள், ஹரீஸ் இலகுவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 5, 2024 செவ்வாய்  அன்று கமலா ஹரிசுக்கு ஆதரவாக வாக்களிக்க, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை, தாய்மார்களாகிய   நாங்கள், எமது காணாமலாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரால் வேண்டி கொள்கிறோம்.

நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாற்றுப் பின்னணியில், நாம்  கமலா ஹரிஸிற்கான ஆதரவு தெரிவிக்கிறோம்.

இங்கே வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாறு: முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி: தமிழ் இளைஞர்கள் இறையாண்மையுள்ள தமிழ் தேசத்தை அடைவதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார் மற்றும் முக்கிய உதவிகளையும் செய்தார்.

செயலாளர் ஹிலாரி கிளிண்டன்: சுதந்திரம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர் ஆயுதப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர் ஒப்புக்கொண்டார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: இறையாண்மை மீதான தமிழர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார்,  இலங்கை ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார்.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்த மிசெல் பாச்சிலெ, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தார்.

லூயிஸ் ஆர்பர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற முறையில், தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோரி, போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மற்றொரு ஐ.நா மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை, போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானங்களை முன்வைத்தார்.

தமிழ் மக்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸிடம் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலிமை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழர்களின் படுகொலைகள் தொடர அனுமதித்த உலகளாவிய செயலற்ற தன்மை குறித்து அவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/311114

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர்.

 

அடடா, அப்படியா! 😲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர்.

கிளிஞ்சுது போ....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர்.

இது என்ன… புது புரளியாய் இருக்கு. 😁
கமலாவுக்கு… இந்த விசயம் தெரியுமா. 🤣

உரும்பிராயை… பூர்வீகமாக கொண்ட கமலா,  
நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

இது என்ன… புது புரளியாய் இருக்கு. 😁
கமலாவுக்கு… இந்த விசயம் தெரியுமா. 🤣

உரும்பிராயை… பூர்வீகமாக கொண்ட கமலா,  
நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டும். 

இல்லை, அவாவின் சொந்த இடம் மூளாய் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கமலா ஹரிஸ்

இந்திரா காந்தி

ஹிலாரி கிளிண்டன்

ஜெயலலிதா

மிசெல் பாச்சிலெ

லூயிஸ் ஆர்பர்

 நவநீதம்பிள்ளை

கம்பன் எப்பவோ ஏமாந்தான்............... 

இப்ப கனகாவும் ஏமாந்தார்..............

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர்  நகை சுவை ஆட்களாக மாறுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக  வழமையாக குடியரசுகட்சி பலமாக உள்ள ரெக்ராஸ், புளோறிடா, அலபாமா, மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் ரம்ப்ஃ  செல்வாக்கு பாரியளவில்  சரிந்து கமலா ஹரிஸுக்கான ஆதரவு  அலை வீசிவருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

கமலாவுக்கு வாக்களிக்க பல காரணங்கள் அமெரிக்கத் தமிழர்களுக்கு இருக்கின்றன. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு தீர்வு, இறையாண்மை தருவார் என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாக இல்லை.

ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்க ஈழவழி வந்த தமிழர்கள், ட்ரம்ப் நோக்கிக் கவரப் பட்டிருப்பதை அவதானிக்கிறேன். குடியேறிகள் மீதான வெறுப்பு (நாம தான் உள்ள வந்திட்டமே, பூட்டு கேற்றை மென்ராலிரி😂!), வரி கட்ட வெறுப்பு, கறுப்பின மக்கள் மீது வெறுப்பு, தற்போது புதிதாக இஸ்ரேல்/யூதர் மீது காண்டு எனப் பல காரணங்கள்.

1 hour ago, Justin said:

தற்போது புதிதாக இஸ்ரேல்/யூதர் மீது காண்டு எனப் பல காரணங்கள்.

புரியவில்லை..

ரம்ப் யூத எதிர்ப்பாளரா?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, 

வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது,

எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல  என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது.

புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது  கனடா மட்டுமே,  அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். 

இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே  அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் ,  ஆனால் இன்றுவரை வாழ்க்கையை   15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத  கொடூரம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, 

வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது,

எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல  என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது.

புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது  கனடா மட்டுமே,  அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். 

இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே  அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் ,  ஆனால் இன்றுவரை வாழ்க்கையை   15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத  கொடூரம்தான்.

பொருத்தமில்லாத ஆடையை அணிந்தால் பிறரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நேரிடும் என்பது வாழ்வியல் சார் நடைமுறை அனுபவம். 

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர்  நகை சுவை ஆட்களாக மாறுகின்றனர்

உபயம் - புலம்பெயர்ஸ் ...😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

புரியவில்லை..

ரம்ப் யூத எதிர்ப்பாளரா?

கொஞ்சம் சிக்கலான நிலை ட்ரம்பினுடையது. ட்ரம்பும் அவரது சிவப்புக் கட்சியும் தீவிர இஸ்ரேல் ஆதரவாளர்கள். ட்ரம்பின் மருமகனும், மகளும் (திருமணத்தின் பின்) யூத மதத்தவர்கள். ஆனால், ட்ரம்பின் வெள்ளையின மேலாண்மைப் பேச்சுக்கள் சில சமயங்களில் யூதர்களையும் தாக்கியிருக்கிறது. "ஹிற்லர் சில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார்" என்று ட்ரம்ப் தன் உள்வட்டத்தில் கூறியது போன வாரம் ஒரு கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. இது தான் ட்ரம்பின் நிலை.

ஆனால்,சில குடியேறி அமெரிக்கர்களும், முஸ்லிம் அமெரிக்கர்களும் "பைடனும் கமலாவும் இஸ்ரேலைக் கட்டுப் படுத்தவில்லை" என்ற கோபத்தில் ட்ரம்பை நோக்கிப் பழிவாங்கல் வாக்களிப்பாக செயல்படவும் முயல்கிறார்கள். ஆனால், ட்ரம்ப் வந்தால் நெரன்யாஹு அவிழ்த்து விட்ட வேட்டை நாய் போல ஆகி விடுவர் என்பதை உதாசீனம் செய்து விடுகிறார்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

இல்லை, அவாவின் சொந்த இடம் மூளாய் 

சொந்த இட்ம் மானிப்பாய் ஆதரம் வேணுமென்றால் டி.என்.ஏ பரிசோதனை செய்ய தயார்😅

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர்  நகை சுவை ஆட்களாக மாறுகின்றனர்

காணமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் என்ற அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற விடயத்தில் தீவிரமாக ஈடுபடும் போதும் அதனை திறம்பட உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது மட்டுமே அது சர்வதேச மட்டத்தில் தாக்கங்களை உண்டு பண்ணி இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொண்டுவர வாய்புள்ளது. அதை விடுத்து காணாமல் போன உறவுகளை தேடும் அமைப்புகள் தன்னாட்சி சுயநிர்ணயம், தமிழரின் இறையாண்மையை மீட்டல் போன்ற அவர்களுடைய அமைப்புக்கு பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தும் போது அவர்களின் கோரிக்கை உலக மட்டதில் அனுதாபத்துடன் பார்க்கப்படமாட்டாது.  மாறாக அவர்கள் அரசியல் கட்சிகளின் கையாட்களாக செயர்படுகிறார்கள் என்ற பார்வையையே உலக மட்டத்தில் ஏற்படுத்தும். (இதில் உண்மையும் இருக்கிறது)

 ஆகவே காணாமல் போனோரின் உறவினர்கள் அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற நியாயமான கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்து உறுதியுடன் தன்னிச்சையாக போராடவேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சிகளினதும் புலம்பெயர்ந்த அமைப்புகளினதும் தேவைகளுக்காக அவர்களது கைப்பாவையாக செயற்பட்டு  இவ்வாறான பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்தால் அவர்கள் நகைச்சுவையாளர்களாகவே பார்ககப்படுவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உலகின் கவனத்தை பெறாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

வவுனியாவில் இவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக  வழமையாக குடியரசுகட்சி பலமாக உள்ள ரெக்ராஸ், புளோறிடா, அலபாமா, மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் ரம்ப்ஃ  செல்வாக்கு பாரியளவில்  சரிந்து கமலா ஹரிஸுக்கான ஆதரவு  அலை வீசிவருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 

ஆதரவற்ற ஒரு மக்கள் கூட்டம் 

சொத்து சுகம் சொந்த பந்தம் அனைத்தையும் இழந்து அநாதரவான நிலையில் எழுப்பும் அழுகுரல் அல்லது ஒப்பாரி உங்களுக்கு நக்கல் நையாண்டி... உருப்படமாட்டீர்கள்.... தூ ..

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் வராது எனவே  நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அமெரிக்காவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றம் வராது எனவே  நினைக்கிறேன்.

 

மேற்கு நாடுகளின் வெளிநாட்டு/வெளியுறவுக் கொள்கைகளில் கட்சிகளின் செல்வாக்கு பூச்சியத்திற்கும் கீழே என்பது எனது கருத்து.

@விசுகு அவர்களுக்கு தான் ஏன்  -1 போடுகிறேன் என்பதே தெரியாது என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:
9 hours ago, Justin said:

தற்போது புதிதாக இஸ்ரேல்/யூதர் மீது காண்டு எனப் பல காரணங்கள்.

புரியவில்லை..

ரம்ப் யூத எதிர்ப்பாளரா?

ஜெருசலத்தில் போய் பத்தவைத்ததே அவர் தான்.

யூத மருமகனுக்கு சேவை செய்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ‘சித்தி’ பிரிகேட்: US Election-ல் Kamala Harris-க்காக இவர்கள் களமிறங்கியது ஏன்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 'சித்தி பிரிகேட்' என்று அழைக்கப்படும் தமிழ் வம்சாவளி மகளிரணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அவர்களை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.