Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் லிஸ்ட் வந்துதா வரலியா ?

  • Replies 108
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அ

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு கேடு கெட்ட தனமாக நம் ஈழ தமிழரசியல் போகின்றது?

எதற்காக போராடினார்களோ/போராடினமோ அதையெல்லாம் கடந்து போதை விற்பனைக்கு போட்டி போடும் அரசியலுக்குள் நமது உண்மையான அரசியல் மூழ்கிப்போகின்றது.

இனி வரும் காலங்களில் போலி அரசியல்வாதிகளை ஒழிக்க/அழிக்க  புதிய இயக்கம் உருவாக வேண்டும் போலிருக்கின்றது.:cool:
 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இன்னும் லிஸ்ட் வந்துதா வரலியா ?

வரும் ஆனா வராது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எவ்வளவு கேடு கெட்ட தனமாக நம் ஈழ தமிழரசியல் போகின்றது?

எதற்காக போராடினார்களோ/போராடினமோ அதையெல்லாம் கடந்து போதை விற்பனைக்கு போட்டி போடும் அரசியலுக்குள் நமது உண்மையான அரசியல் மூழ்கிப்போகின்றது.

இனி வரும் காலங்களில் போலி அரசியல்வாதிகளை ஒழிக்க/அழிக்க  புதிய இயக்கம் உருவாக வேண்டும் போலிருக்கின்றது.:cool:
 

பார் லைசன்ஸ் கிடைக்ககாது...வரியில்லா வாகனம் கிடைக்காது...கன்ரீனில் விலகுறைவா ,சாப்பாடு கிடைக்கது..வேலைவாய்ப்பு கோட்ட கிடைக்காது...கொன்ராக்ட்  வேலை கிடைக்காது ..என்று முன்னமே தெரிந்திருந்தால் நம்ம நடிப்பு தேசியம் பேசும் அரசியல் வியாதிகள் ... தேர்தலில் நிற்காமலே பின் வாங்கி யிருப்பினம் .. இளம்  சமுதாயம் தேர்தலில் நின்று வென்றிருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2024 at 02:56, Kapithan said:

டாங்ஸ்  உங்களுக்கும் உங்களுக்கு லைக் போட்டவருக்கும். 

குமிறிப் பாயுறீங்கள்,...  .🤣

சிறீயருக்குத் தெரியாமல் அவருடைய தேர்தல் தொகுதியில் சாராய அனுமதிப் பத்திரம் கொடுக்கப்படுகிறதென்றால் இவர் எப்படி தமிழருக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் கொண்டிருக்க  முடியும்? 

அல்லது 

சிறீயருக்கு எதுவுமே தெரியாது என்று நம்பும் மக்கள் மிகவும் மோசமான  முட்டாள்களாக இருக்க வேண்டும். 

இதில் எது சரி? 

🤣

ஏன் இந்த பொல்லாப்பு ...சுத்துமாத்தாருக்கு கொடி பிடிக்கின்றமாதிரி இருக்கு .....ஒன்றும் வேலைக்கு ஆகாது பாருங்கோ ....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம்.

ரணில் அரசை மகிந்தவின் ஆட்கள் கவிழ்க்க முயன்றாலும், கவிழாதபடி ஏந்தி பிடிக்க என கடந்த பாராளுமன்றத்தில் எதிர் கட்சி வரிசையில் இருந்த எம்பிகளுக்கு ஒரு அட்வான்ஸ் இலஞ்சம் வழங்கப்பட்டதாம்.

இதற்கு கடிதமோ வேறு எந்த ஆதாரபூர்வ சிபாரிசுமோ தேவை இல்லையாம்.

குறித்த எம்பிகள் கைகாட்டும் ஆள், வழமை போல் அனுமதியை கோர வேண்டும், அவருக்கு தடங்கல் இன்றி அனுமதி கிடைக்கும்.

அனுமதிக்கான இலஞ்சத்தை பார் உரிமையாளர் எம்பிக்கு செட்டில் செய்வார்.

எம்பி ரணிலுக்கு விசுவாசமாக இருப்பார்.

Spot on....
எங்கிருந்து உங்களுக்கு இப்படி உண்மையான தகவல்கள் கிடைக்கிறது என்று தெரியவில்லை.
எனக்கும் புள்ளையின் வால்மூலமாக ஒரு தூண்டில் போடப்பட்டது.
எம்பி செட்டில்மென்ட் 1.5 கோடி, இடம் நாம் காட்ட வேண்டும். அனுமதி தரத்திற்கேற்ப இதர கட்டணம் (FL 3 இலிருந்து FL22 B வரை ) 
கலால் துறையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டி வரும். தொழில் துறையில் முதலீடு செய்வோம் என்று போனேன் கடைசியில் ஒரு வளவினை வாங்கி போட்டுவிட்டு வந்துவிட்டேன்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு வார இறுதியில் பதில்; ரணில் தரப்பு அறிவிப்பு

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/313245

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of barrel and text

 

May be a doodle of drink and text

 

 

May be a graphic of text

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு வார இறுதியில் பதில்; ரணில் தரப்பு அறிவிப்பு

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

https://thinakkural.lk/article/313245

எதுவாக இருந்தாலும் உண்மை வெளிவரட்டும். தமிழ் தலைவர்கள் அநேகமாக அனைவர் மீதும் போடப்பட்ட இந்த கறுத்த சாக்கில் இருந்து தமிழர்கள் மீள் வேண்டும். இல்லையெனில் அனைத்து பிரதிநிதிகளையும் சிங்கத்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இறுதியில் உண்மை தெரியவர கச்சையும் இன்றி புலம்பவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பார் அனுமதிக்கு சிபார்சு செய்தது பிழையில்லை - வாழ்வாதரத்திற்கான உதவி - ஆனால் அதை ஒத்துக்கொள்ள மறத்தது தான் தவறு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழன்பன் said:

ஏன் இந்த பொல்லாப்பு ...சுத்துமாத்தாருக்கு கொடி பிடிக்கின்றமாதிரி இருக்கு .....ஒன்றும் வேலைக்கு ஆகாது பாருங்கோ ....

தம்பி ராசா,....

அடியும் தெரியாமல் நுனியும் புரியாமல் மூக்கை நுழைத்து வம்பில் மாட்டாதேயுங்கோ.....பேசாமல் போய்ப் படுங்கோ புண்ணியமாப் போகும்,...😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

தம்பி ராசா,....

அடியும் தெரியாமல் நுனியும் புரியாமல் மூக்கை நுழைத்து வம்பில் மாட்டாதேயுங்கோ.....பேசாமல் போய்ப் படுங்கோ புண்ணியமாப் போகும்,...😁

யாழ் களத்துக்கு வருவது அடியையும். துனியையும்  தெரிந்து கொள்ள தான்   மாறாக போய்  படுப்பதற்க்கு இல்லை    

உங்களுக்கு அடியும் துனியும் தெரியும் என்றால்  தயவுசெய்து எழுதுங்கள் 🙏.   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

Spot on....
எங்கிருந்து உங்களுக்கு இப்படி உண்மையான தகவல்கள் கிடைக்கிறது என்று தெரியவில்லை.
எனக்கும் புள்ளையின் வால்மூலமாக ஒரு தூண்டில் போடப்பட்டது.
எம்பி செட்டில்மென்ட் 1.5 கோடி, இடம் நாம் காட்ட வேண்டும். அனுமதி தரத்திற்கேற்ப இதர கட்டணம் (FL 3 இலிருந்து FL22 B வரை ) 
கலால் துறையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டி வரும். தொழில் துறையில் முதலீடு செய்வோம் என்று போனேன் கடைசியில் ஒரு வளவினை வாங்கி போட்டுவிட்டு வந்துவிட்டேன்  

இது இப்போ வெடித்து கிளம்பி இருந்தாலும் - பலகாலமாக நடப்பதுதான்.

சந்திரிகா காலத்தில் சுரேஷ் மட்டகளப்பில் ஒரு பார் அனுமதியை வாங்கி கொடுத்தார்.

அதே போல் எரி பொருள் நிலைய அனுமதிகளிலும் இது நடக்கும்.

உங்களை போலவே நானும் சிவாஜி ரஜனிகாந்த் போல சில “முதலாளிதுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு சிலரின் வாழ்வையாவது உயர்த்தலாம் என நம்பி போய், பின் நொந்த ஆள்தான்”. 

எனது முயற்சிக்கு பார் லைசன்ஸ் தேவைப்படவில்லை, ஆனால் பிரதேச சபை அனுமதி தேவைப்பட்டது. அதை எடுக்கும் சமயம் - குடிவைகளை குடிக்க (எடுத்துப்போக அல்ல) உள்ள லைசன்ஸ் எடுத்து தரலாம் என சிலர் அணுகினர். ஆர்வம் காட்டவில்லை ஆனால் விடயங்களை கேட்டறிந்து கொண்டேன்.

7 hours ago, RishiK said:

பார் அனுமதிக்கு சிபார்சு செய்தது பிழையில்லை - வாழ்வாதரத்திற்கான உதவி - ஆனால் அதை ஒத்துக்கொள்ள மறத்தது தான் தவறு. 

இதைத்தான் விக்கி தன் நியாயமாக சொல்கிறார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக.

ஆனால் இதில் ஒத்துகொள்ள மறுத்ததை விட பாரிய பிழைகள் உள்ளன.

குறிப்பாக வலிந்து எமது சமூகத்தை போதைக்குள் தள்ளும் சூழலில்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

இது இப்போ வெடித்து கிளம்பி இருந்தாலும் - பலகாலமாக நடப்பதுதான்.

சந்திரிகா காலத்தில் சுரேஷ் மட்டகளப்பில் ஒரு பார் அனுமதியை வாங்கி கொடுத்தார்.

அதே போல் எரி பொருள் நிலைய அனுமதிகளிலும் இது நடக்கும்.

உங்களை போலவே நானும் சிவாஜி ரஜனிகாந்த் போல சில “முதலாளிதுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு சிலரின் வாழ்வையாவது உயர்த்தலாம் என நம்பி போய், பின் நொந்த ஆள்தான்”. 

எனது முயற்சிக்கு பார் லைசன்ஸ் தேவைப்படவில்லை, ஆனால் பிரதேச சபை அனுமதி தேவைப்பட்டது. அதை எடுக்கும் சமயம் - குடிவைகளை குடிக்க (எடுத்துப்போக) உள்ள லைசன்ஸ் எடுத்து தரலாம் என சிலர் அணுகினர். ஆர்வம் காட்டவில்லை ஆனால் விடயங்களை கேட்டறிந்து கொண்டேன்.

இதைத்தான் விக்கி தன் நியாயமாக சொல்கிறார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக.

ஆனால் இதில் ஒத்துகொள்ள மறுத்ததை விட பாரிய பிழைகள் உள்ளன.

குறிப்பாக வலிந்து எமது சமூகத்தை போதைக்குள் தள்ளும் சூழலில்.

பாரில் வாங்கினால் சுத்தமான சரக்கு, இல்லையென்றால் கசிப்பு , அதில் என்னவெல்லாம் போடுவாங்களோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உங்களை போலவே நானும் சிவாஜி ரஜனிகாந்த் போல சில “முதலாளிதுவ நடவடிக்கைகள் மூலம் ஒரு சிலரின் வாழ்வையாவது உயர்த்தலாம் என நம்பி போய், பின் நொந்த ஆள்தான்”. 

இதைத்தான் விக்கி தன் நியாயமாக சொல்கிறார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொடுத்ததாக.

🤣.............

ஆனால் விக்கி ஐயா உரிமம் எடுத்துக் கொடுத்தது பிரபல வியாபாரி ஒருவரின் மகள் என்றும், அபலைப் பெண் அல்ல என்றும் ஒரு தகவல் யாழில் பகிரப்பட்டிருந்தது..................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

🤣.............

ஆனால் விக்கி ஐயா உரிமம் எடுத்துக் கொடுத்தது பிரபல வியாபாரி ஒருவரின் மகள் என்றும், அபலைப் பெண் அல்ல என்றும் ஒரு தகவல் யாழில் பகிரப்பட்டிருந்தது..................

🤣 இந்தியாவில் அரிய வகை ஏழைகள், போல் இலங்கையில் அரிய வகை அபலைகள் உள்ளார்கள் போலும்🤣.

அபலைகளை முன்னேற்ற ஆயிரம் வழிகளுண்டு…இன்னொரு பெண்ணின் தாலி அறுக்கும் பார்தான் தேவை எண்டில்லை.

50 minutes ago, RishiK said:

பாரில் வாங்கினால் சுத்தமான சரக்கு, இல்லையென்றால் கசிப்பு , அதில் என்னவெல்லாம் போடுவாங்களோ

இதை பற்றிய என் பார்வையை விரிவாக இரவு எழுதுகிறேன்.

உங்கள் கருத்தில் உடன்பாடுதான்…ஆனால் வட கிழக்கு சூழமைவு வேற என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

"நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை.

பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஒரு பாரிய மருத்துவ காப்புறுதிக் கம்பனியின் தலைமை நிர்வாகியை குறி வைத்துச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பயன்படுத்திய ரவையின் கோதுகளில், deny, defend, depose என்ற சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன. இவை, அமெரிக்காவின் இலாப நோக்கம் கொண்ட மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள், premium பணத்தை வாங்கிக் கொண்டு, நோயாளியின் மருத்துவத் தேவைக்கு உதவாமல் இலாபமீட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு தொழில் தந்திரம்.

இப்படி நோயாளிகளுக்கு சேவைகள் (claims) மறுக்கப் படுவதால் வரும் இலாபத்தில் பெரும்பகுதி, கொல்லப் பட்டவர் போன்ற நிறைவேற்று அதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கான போனசாக வழங்கப் படும். பாதிக்கப் பட்ட நோயாளிகளின் சார்பில் யாரோ சுட்டிருக்கிறார்கள். இனி அந்த மில்லியன் டொலர் போனசை என்ன செய்வது? தங்கத்தால் இழைத்த சவப்பெட்டி செய்வதா?

எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Justin said:

எனவே, இளையோர் கவனிக்க வேண்டியது: வருமானம் எவ்வளவு வருகிறது என்பதை விட, வருமானம் ஈட்டிக் கொண்டே இரவில் நிம்மதியாக உறக்கம் வரும் வகையான தொழில்களைத் தேடிக் கொள்ளுங்கள்

❤️❤️❤️🙏

அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 07:38, ஏராளன் said:

சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டா

அப்போ சட்டரீதியாக அனுமதி வாங்கினால் பிரச்சனை இல்லையா?  குடும்பத்தையும் தனிமனித வாழ்வையும் அழிக்கும்  மதுவிற்கு சட்டரீதியாக அனுமதி வாங்கினால் தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்கிறார்களா?

ஒருவேளை சட்டவிரோதமாக அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வெளியானால் அவர்களின் உரிமம் ரத்தாவதை தவிர வேறு என்ன தண்டனை தரபோகிறார்கள்?

ஏற்கனவே பகிரங்கமாக , ஆம் நான் மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசு செய்தேன் என்று பகிரங்கமாக சொன்ன விக்னேஸ்வரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது?

தண்டனை தந்தாலும் உரிமம் பெற்றவர்கள் இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் அவர்களை பாராளுமன்றத்தை விட்டு வெளியே அனுப்ப அரசினாலோ அல்லது அவர்களுக்கு வாக்களித்த மக்களாலோ முடியுமா?

ஒருவேளை அவர்கள் சிக்கி கொண்டாலும் கள்ள லைசன்ஸ் பார்ட்டி எண்டு கடைசிவரை கத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான்.

இது ஒரு பாமரனின் சந்தேகங்கள்தான், முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வக்காலத்து வாங்கும் செயல் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, RishiK said:

பார் அனுமதிக்கு சிபார்சு செய்தது பிழையில்லை - வாழ்வாதரத்திற்கான உதவி - ஆனால் அதை ஒத்துக்கொள்ள மறத்தது தான் தவறு. 

1. மேற்கு நாடுகளில் வீதியோர சாராய கடைகள் ரொம்ப சாதாரணம் என்பது உண்மைதான். 

யூகேயில் தமிழ் வியாபாரிகளில், 90% க்கு மேல் கடை வைத்திருப்போர்தான்.

இந்த கடைகளில் 90% க்குமேல் off licence எனும் சாராயக்கடைகாரார்தான். அதாவது வாங்கி வீட்டில் போய் குடிப்பவருக்கு விற்பவர்கள். கடையில் வைத்து குடிக்க அனுமதிக்க கூடாது.

சாராயத்தை விட கெடுதலான சிகெரெட்டையும் கிட்டதட்ட 100% தமிழர் கடைகளில் விற்பார்கள்.

2. நீங்கள் சொன்னது போல் கசிப்பு என்று பாம்பு பல்லி பட்டரியை காய்சி குடிச்சு சாகாமல் - இதை குடிச்சு கொஞ்சம் லேட்டாக சாகலாம்தான்.

3. மேலே உள்ள காரணங்கள் ஊரிலும் பார் வைப்பது ஏன் கூடாது என சிந்திக்க வைக்கலாம்.

ஆனால்…

4. ஊரில் இங்கே போல் அளவாக குடிக்கும் கலாச்சாரம் இல்லை (இதிலும் யூகே, ஐரோப்பிய நாடுகளை விட மோசம்). ஊரில் குடி என்றால், வெறிக்க வெறிக்க குடித்து விட்டு, மனுசியை போட்டு அடிப்பது, குடிக்கு அடிமையாகி பிள்ளைகளை நடுத்தெருவில் விடுவது என்பதே குடிமக்கள் கலாச்சாரம் (அநேகர்). ஆகவே டீச்ச்ண்டாக குடியை அணுகாத ஒரு இடத்தில் கண்டமாதிரி கடையை திறப்பது ஆபத்தே.

5. போதைக்கு தமிழ் இளஞர்களை அடிமைபடுத்தும் ஒரு நூதன யுத்தம் எம்மேல் திணிக்கப்படுவதாக பலர் உணர்கிறனர். இதற்கு குறைந்தது சந்தர்ப சாட்சியமாவது உள்ளது, இந்நிலையில் - போதையை எதிர்த்து வேலை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே பார் திறக்க உதவி செய்வது - மிக மோசமான வேலை.

6. தலைவரின் படத்தை பேஸ்புக்கில் போட்டாலே கதவை தட்டும் பொலிஸ், நிச்சயம் கசிப்பை கட்டுப்படுத்த முடியும்.

7. நான் மது ஒழிப்பு ஆதரவாளன் அல்ல. அது முடியாதவிடயம். ஆனால் தேவையில்லாமல் மது பாவனையை கூட்டும் வேலைகளை அரசியல் தலைவர்கள் செய்ய கூடாது. அது வியாபாரிகளின் வேலை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, valavan said:

அப்போ சட்டரீதியாக அனுமதி வாங்கினால் பிரச்சனை இல்லையா?  குடும்பத்தையும் தனிமனித வாழ்வையும் அழிக்கும்  மதுவிற்கு சட்டரீதியாக அனுமதி வாங்கினால் தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்கிறார்களா?

 

சட்டரீதியாக, முறையாக அனுமதி பெற்றிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல, வளவன், அது ஒரு குற்றமே அல்ல. ஆனால் இது அறமா, ஒழுக்கமா, விழுமியா என்று எழுதப்பட்ட சட்டங்கள் அல்லாத வேறு அளவீடுகளை வைத்துப் பார்த்தால், இவை தகாத செயல்களே.

சட்டத்தின் ஊடாகவோ அல்லது சட்டத்தை வளைத்தோ, ஆனால் இலஞ்சமோ அல்லது வேறு ஏதாவது பிரதிபலன்களோ கருதி, இந்த அனுமதிப் பத்திரங்களை தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி எவராவது பெற்றிருந்தாலோ அல்லது இன்னொருவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமே.

எங்களின் பிரதிநிதிகளின் கதையின் உள்ளே இன்னும் ஒரு அடுக்கும் இருக்கின்றது. வெளியில் ஒன்றும், உள்ளே வேறு ஒன்றுமாக அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றே இது முடியும். நீங்கள் சொல்வது சரியே, 'கள்வர்கள்..................' என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை...........

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

சட்டத்தின் ஊடாகவோ அல்லது சட்டத்தை வளைத்தோ, ஆனால் இலஞ்சமோ அல்லது வேறு ஏதாவது பிரதிபலன்களோ கருதி, இந்த அனுமதிப் பத்திரங்களை தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி எவராவது பெற்றிருந்தாலோ அல்லது இன்னொருவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமே.

என் கேள்வியெல்லாம் ரசோதரன்,

என்ன ரீதியான தண்டனை இவர்களுக்கு தரப்பட போகிறது, எப்படி இவர்களின் எதிர்காலம் அஸ்தமனபடுத்தப்படும், எவ்வளவு விரைவில் தரப்படும் என்பதே

2 minutes ago, ரசோதரன் said:

சட்டரீதியாக, முறையாக அனுமதி பெற்றிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல

. சட்டரீதியாக பலநூறு மதுபானசாலகளை திறந்தால் அது சமுதாயத்துக்கு கேடு இல்லையா? சட்டவிரோதமாக மதுபான சாலை அனுமதி பெற்றவர்கள் எப்படி சமுதாயத்துக்கு விரோதமானவர்களோ, அதேபோலதான் சட்டரீதியா சாராய கடைகளை திறப்பவர்களும், இருபகுதிக்குமிடையில் அதிக வித்தியாசம் இல்லையென்பதே என்னோட ஒண்ணரையணா அறிவுக்கெட்டின வாதம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

என் கேள்வியெல்லாம் ரசோதரன்,

என்ன ரீதியான தண்டனை இவர்களுக்கு தரப்பட போகிறது, எப்படி இவர்களின் எதிர்காலம் அஸ்தமனபடுத்தப்படும், எவ்வளவு விரைவில் தரப்படும் என்பதே

. சட்டரீதியாக பலநூறு மதுபானசாலகளை திறந்தால் அது சமுதாயத்துக்கு கேடு இல்லையா? சட்டவிரோதமாக மதுபான சாலை அனுமதி பெற்றவர்கள் எப்படி சமுதாயத்துக்கு விரோதமானவர்களோ, அதேபோலதான் சட்டரீதியா சாராய கடைகளை திறப்பவர்களும், இருபகுதிக்குமிடையில் அதிக வித்தியாசம் இல்லையென்பதே என்னோட ஒண்ணரையணா அறிவுக்கெட்டின வாதம். 

இலஞ்சம் பெற்றார், போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் அல்லது உடந்தையாக இருந்தார் என்ற வகையில் அதிகூடிய தண்டனைகள் எங்கள் நாட்டுச் சட்டத்திலும் இருக்கும், ஆனால் இதுவரை அப்படி ஒரு தீர்ப்பும் வந்ததாக நான் அறியவில்லை. இங்கேயும் அந்த தீர்ப்புகள் வராது என்றே நான் நினைக்கின்றேன்.

ஆனால், இதில் எந்த தமிழ் பிரதிநிதிகளாவது ஈடுபட்டிருப்பது ஓரளவிற்கேனும் நிரூபிக்கப்பட்டால், இவர்களின் அரசியல் எதிர்காலம் அன்றுடன் முடிந்தது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக்ஸ் கடைகளுக்கு மது வழங்கும் மிகப் பெரும் நிறுவனம் வைத்திருப்பது.................. டி ஆர் பாலு என்ற தகவலை பார்த்திருக்கின்றேன். திமுகவின் தூண்களில் அவர் ஒருவர். சமுதாயத்திற்கு விரோதி என்று நீங்கள் சொல்கிறீர்கள், நானும் அதையே சொல்கின்றேன், ஆனால் இதை ஒரு சட்டரீதியான வியாபாரம் என்று இலகுவாகக் கடந்து போகின்றவர்கள் தான் பெரும்பான்மையானவர்கள்..............😌.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, valavan said:

சட்டரீதியாக பலநூறு மதுபானசாலகளை திறந்தால் அது சமுதாயத்துக்கு கேடு இல்லையா? சட்டவிரோதமாக மதுபான சாலை அனுமதி பெற்றவர்கள் எப்படி சமுதாயத்துக்கு விரோதமானவர்களோ, அதேபோலதான் சட்டரீதியா சாராய கடைகளை திறப்பவர்களும், இருபகுதிக்குமிடையில் அதிக வித்தியாசம் இல்லையென்பதே என்னோட ஒண்ணரையணா அறிவுக்கெட்டின வாதம். 

ரசோதரன் சொன்னது போல இது அறம் சம்பந்தப் பட்ட விடயம், சட்டப் படி முறையாக சாராயக் கடை வைத்திருப்போரை எதுவும் செய்ய இயலாது. சாராயக் கடை திறப்பதை சட்ட விரோதமாக்க வேண்டுமானால் சாராயப் பாவனையை சட்ட விரோதமாக்க வேண்டும். இதை யாராவது செய்திருக்கிறார்களா?

ஆம், அமெரிக்காவில் 1920 களில் மதுத் தடை (prohibition) முழுநாட்டிற்குமாக அரசியலைப்பு மாற்றம் மூலம் வந்தது. அடுத்து நடந்த சம்பவங்கள் பற்றி இன்றும் புத்தகங்களும், திரைப் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. Moonshine எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் நபர்கள் பெருகினார்கள். இன்றும் கூட மலைவாழ் மக்கள் காய்ச்சுகிறார்கள். இன்னொரு பக்கம், மதுத் தடை இல்லாத கனடாவில் இருந்து கள்ளமாக கனேடிய விஸ்கியைக் கடத்தி வரும் bootlegging முதலாளிகள் பெருகினார்கள். சிலர் கனடாவில் இருந்து molasses எனப்படும் கால்னடைத் தீவனப் பொருளைக் கடத்தி வந்து உள்நாட்டில் கள்ளச சாராயம் காய்ச்சினார்கள்.

இவ்வளவு ஏன்? புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த வன்னியில் கூட உள்ளூர் சாராயம் உற்பத்தி செய்யப் பட்டது. தடை சாத்தியமில்லையென்ற காரணத்தால். அந்த உள்ளூர் சாராயம் கிடைத்த போதே, கசிப்புக் காய்ச்சும் ஆட்களும் அங்கே இருந்தார்கள்.

எனவே, முழுத்தடை சாத்தியமில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது விபரங்கள் வெளி வராது ...அரசு இந்த விபரங்களை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளை ஏதோ ஒரு விடயத்தில் அடி பணிய வைக்க பயன்படுத்தும் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.