Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் - பிரதீபன்

யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Jaffna Chavakachcheri Ads Thamilini Passes Away

யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய சொந்தக்கார பெடியனின் மனைவி . அநியாய சாவு. ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வாதவூரான் said:

என்னுடைய சொந்தக்கார பெடியனின் மனைவி . அநியாய சாவு. ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

என்னுடைய சொந்தக்கார பெடியனின் மனைவி . அநியாய சாவு. ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..🙏

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பெயருடன் (தமிழினி) வாழ கொடுத்து வைக்கவில்லை.

எமது பகுதிகளில் தீக்காயங்கள் வெளிநாடுகள் போல வருவதில்லை.

தாங்களாகவே ஏதாவது வகையில் ஏற்படுத்தினால்த் தான் உண்டு.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த காலத்தில் இந்த பெண் அடைந்த உச்சங்கள் நிறைய என்று இவரது பல்கலைக்கழக சக நட்புக்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

May be an image of 1 person and text



  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல பெயருடன் (தமிழினி) வாழ கொடுத்து வைக்கவில்லை.

எமது பகுதிகளில் தீக்காயங்கள் வெளிநாடுகள் போல வருவதில்லை.

தாங்களாகவே ஏதாவது வகையில் ஏற்படுத்தினால்த் தான் உண்டு.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

விளங்காத மரணங்கள்...எத்தனையோ விதமாக எமது இளைய சமுதாயத்தை இழந்துகொண்டிருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

உதவி பிரதேச செயலாளர், படுக்கை அறையில் மெழுகுதிரியினால் உயிரிழப்பு

Sunday, February 16, 2025 செய்திகள்

25-67b1ddf38ba30.jpg

யாழ்ப்பாணம்  சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகப் பணிபுரிந்து வந்த பெண் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


மேற்படி பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று (16) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


படுக்கை அறையில் மெழுகுதிரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டது என்று உயிழப்பதற்கு முன் வைத்தியசாலை முறைப்பாட்டில் மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவத்தில் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் (வயது 35) என்ற உதவி பிரதேச செயலாளரே உயிரிழந்துள்ளார்.


அவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.


இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

girl-628x375.jpg

தீ விபத்தில் தென்மராட்சி உதவி பிரதேச செயலாளர் உயிரிழப்பு!

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி  உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை படுக்கையறையில்  வைக்கப்பட்ட நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால், தீக்காயங்களுக்கு உள்ளான இவர், சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை இவரை காப்பாற்ற முற்பட்ட கணவரும் சிறு தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1421809

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.