Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழிப்புக்கை செய்முறை

Featured Replies

கோழிப்புக்கை என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்க

பரணீ தூயாவைக் கூப்பிடுங்க.........

பொம்மிக்குத் தெரியாத கோழிப்பொங்கலா? :rolleyes::icon_mrgreen::lol:

பரணி எனக்கு தெரியா நீங்க கேக்குற கோழிப்புக்கை இதுதானோ என்டு. எங்கட வீட்டுல ஒரு நாளும் செய்யல. நான் ஒரு நாள் எனது நண்பி வீட்டை சாப்பிட்டு இருக்கிறன். அப்ப அவட்ட கேட்ட செய்முறை. இதுதான் நீங்கள் கேட்டதோ என்டு பாருங்கோ. நான் இன்னும் செய்து பார்க்கலை. நீங்கள் செய்து பார்த்துட்டு சொல்லுங்கோ.

தேவையானப் பொருட்கள்:-

பாசுமதி அரிசி - 3 சுண்டு

சிக்கன் - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 5

இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

மல்லி இலை - சிறுதளவு பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை - சிறிதளவு

பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:-

அரிசியை கழுவி 1/2 மணித்தியாலம் ஊறவைக்கவும். சிக்கனை மிகப் சின்ன சின்னத் துண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். தச்சியில் எண்ணெய் ஊற்றி சுட்டதும் அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு கடுகு, பெருஞ்சீரம் போட்டு சிறிது நேரம் வதக்கவும் . அத்துடன் இஞ்சி,பூண்டு அரச்சதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது சிக்கனை போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். சிக்கன் நிறம் மாறும் போது உப்பு சேர்க்கவும். பின்னர் மல்லி இலை சேர்க்கவும். அதன்பிறகு தேங்காய்ப்பாலுடன் 3 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை ரைஸ் குக்கரில் போட்டு தாச்சியில் கொதிதுக் கொண்டு இருப்பதையும் ரைஸ் குக்கருக்கு மாற்றி வேக விடவும். வெந்தவுடன் வெளியே எடுத்துக் கிளறி, கறியுடன் சாப்பிடலாம்.

Edited by Rasikai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோழிப்புக்கைக்கு பசுமதி சரிவராது சிவப்புபச்சை அரிசிதான் நல்லாயிருக்கும். :lol:

அதுசரி பசுமதியை எங்கை எப்ப கண்டனீங்கள்? :rolleyes: மனுசருக்கு வருத்தத்தை கொண்டு வாறதுக்கண்டே உந்த பசுமதி இருக்குது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கோழிப்புக்கை நெல்லியடி கரவெட்டியில் உள்ளவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம்.

இது வரை சாப்பிட்டது கிடையாது.

கோழிக் கறியையும் சோத்தையும் ஒன்றாக சேர்த்து சமைத்தால் கோழிப்புக்கை என்று வெகு சுலபமாக சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோழிப்புக்கை பச்சை அரிசியில் தான் செய்வார்கள். ரைஸ் குக்கரில் பச்சை அரிசியை போட்டு சாதாரணமாக அவியும் தண்ணீரிலும் சிறிதளவு தண்ணீர் கூட விட்டு அவிய விடுங்கள். மிகுதி ரசிகை சொல்லியவற்றை ஒரு தாச்சியில் வதக்கி வைத்துக்கொள்ளவும். ஒரே ஒரு வித்தியாசம் அரிசி ஓரளவு அவிந்து வரும் தறுவாயில் வெட்டிய கோழியையும், அளவாக மிளகாய் தூளையும் (தனி தூளல்ல)சிறிதளவு பட்டரும் போட்டு கிளறிவிடவும்.( முக்கியமான பகுதி பச்சை அரிசி அவியும் நேரமும் கோழி அவியும் நேரமும் வித்தியாசமானவை) ஆகவே இவற்றை கணக்கில் எடுத்து கோழியை சரியான நேரம் பார்த்து அவிய விடுவது முக்கியமானது. கிட்ட தட்ட எல்லாம் அவிந்து வரும் தறுவாயில் நீங்கள் பொரித்து வைத்தவற்றை போட்டு கிளறி விட்டு சாப்பிட்டால் சொல்லி வேலையில்லை. ஆனால் ஈழ பிரியன் சொல்வது போல் கோழிக்கறியையும் சோற்றையும் சேர்த்து சாப்பிடுவது போல் நிச்சயமாக சுவை இருக்காது உண்மையான கோழிப்புக்கையில். ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன். நிச்சயமாக பிழைக்க வாய்ப்பே இல்லை. வடமராட்சியில் தான் கோழிப்புக்கை செய்வார்கள் என்பது 100% உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இன்னும் சாப்பிட வில்லை ஆனால் நிறைய கேள்விப்பட்டுருக்கிறேன்.கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.கோழிப்புக்கை நெல்லியடி கரவெட்டியில் உள்ளவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம்இது வரை சாப்பிட்டது கிடையாது.

கோழிக் கறியையும் சோத்தையும் ஒன்றாக சேர்த்து சமைத்தால் கோழிப்புக்கை என்று வெகு சுலபமாக சொல்வார்கள்.

அட உதே சங்கதி!!!!!!!!! கரவெட்டியார் மாட்டுவண்டிலோடை எங்கடை ஊருக்கு கோம்பை,பன்னாங்கு வாங்க வாறவை :o:lol:

அப்பப்ப கோழி காணாமல் போறது :unsure: ஆகா இப்ப விளங்குது :o:o:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட உதே சங்கதி!!!!!!!!! கரவெட்டியார் மாட்டுவண்டிலோடை எங்கடை ஊருக்கு கோம்பை,பன்னாங்கு வாங்க வாறவை :o:lol:

அப்பப்ப கோழி காணாமல் போறது :unsure: ஆகா இப்ப விளங்குது :o:o:lol::lol:

:o:o:lol:

  • தொடங்கியவர்

உதவிக்கு நன்றி ரசிகை மற்றும் நுணாவிலான்...

குமாரண்ணை என்ன இப்படி சொல்லிப்புட்டிக. . . கரவெட்டியார் கோழிதான் எடுப்பாங்கள் நீங்க கோழிப்பண்ணையை அல்லவா கொத்திட்டு போறீங்க. . . கிணறு காவினது ஞாபகம் இருக்கட்டும்...

இதற்கு நிச்சயம் பூசணிக்காய் போட வேண்டும்..

சிவப்பு அரிசியில் தான் செய்ய வேண்டும்..

பரணி எனக்கு தெரியா நீங்க கேக்குற கோழிப்புக்கை இதுதானோ என்டு. எங்கட வீட்டுல ஒரு நாளும் செய்யல. நான் ஒரு நாள் எனது நண்பி வீட்டை சாப்பிட்டு இருக்கிறன். அப்ப அவட்ட கேட்ட செய்முறை. இதுதான் நீங்கள் கேட்டதோ என்டு பாருங்கோ. நான் இன்னும் செய்து பார்க்கலை. நீங்கள் செய்து பார்த்துட்டு சொல்லுங்கோ.

தேவையானப் பொருட்கள்:-

பாசுமதி அரிசி - 3 சுண்டு

சிக்கன் - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 5

இஞ்சி பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

மல்லி இலை - சிறுதளவு பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை - சிறிதளவு

பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:-

அரிசியை கழுவி 1/2 மணித்தியாலம் ஊறவைக்கவும். சிக்கனை மிகப் சின்ன சின்னத் துண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். தச்சியில் எண்ணெய் ஊற்றி சுட்டதும் அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு கடுகு, பெருஞ்சீரம் போட்டு சிறிது நேரம் வதக்கவும் . அத்துடன் இஞ்சி,பூண்டு அரச்சதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்போது சிக்கனை போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். சிக்கன் நிறம் மாறும் போது உப்பு சேர்க்கவும். பின்னர் மல்லி இலை சேர்க்கவும். அதன்பிறகு தேங்காய்ப்பாலுடன் 3 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை ரைஸ் குக்கரில் போட்டு தாச்சியில் கொதிதுக் கொண்டு இருப்பதையும் ரைஸ் குக்கருக்கு மாற்றி வேக விடவும். வெந்தவுடன் வெளியே எடுத்துக் கிளறி, கறியுடன் சாப்பிடலாம்..

என்ன பரணி அண்னா உங்கம்மாவை கேட்டால் செய்து அனுப்பி விடுவாவே??

கரவெட்டியில் இது பிரபலம் தான். இங்கு வந்தும் எங்கு நம்ம ஆக்கள் வீடு போனாலும் இதுதானே ஸ்பெசலாக இருக்கும். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு முறையில் செய்து அசத்திடுவார்ங்க. எத சாப்பிடுறது என்று தெரியாம நான் எத்தினை தடவை திக்கு முக்காடி இருக்கேன் தெரியுமா :unsure:

...................

ரசி அக்கா உங்கள் முறை சரியே. சிவத்த அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். அத்தோடு மரக்கறிகள் போட்டல் இன்னும் சுவையாக இருக்கும். கரட்,கவ்வி,போஞ்சி தூயா சொன்னது போல பூசணி போடலாம். இங்கு மரக்கறி வெட்டியபடி கடையில் ஒரு பையில் விற்பார்களே அவசரத்துக்கு அது உதவும். ஆமா நீங்கள் தூள் போடலயா? அது என்ன மல்லி இலை?

இது நாங்கள் செய்யும் முறை:

அரிசியை கழுவி 1/2 மணித்தியாலம் ஊறவைக்கவும். சிக்கனை மிகப் சின்ன சின்னத் துண்டாக வெட்டி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். தச்சியில் எண்ணெய் ஊற்றி சுட்டதும் அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு கடுகு, பெருஞ்சீரம் போட்டு சிறிது நேரம் வதக்கவும் . இப்போது சிக்கனை போட்டு அளவான தூள் போட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். சிக்கன் நிறம் மாறும் போது உப்பு சேர்க்கவும். அத்தோடு இஞ்சி, பூண்டு போடவும். தூள் வாடை நீங்கும் வரை அவிய விட வேண்டும்.

பின்னர் அரிசியை அதற்குள் போட்டு மூடி கொஞ்சம் அவிய விடவும். இன்னொரு தாச்சியில் வேட்டிய மரக்கறிகளை போட்டு வதக்கவும். வதங்கிய பின் மரக்கறிகளையும் போட்டு அரிசி,சிக்கின்,மரக்கறி என எல்லாவற்றையும் நன்றாக கிளவி அவிய விடவும். உப்பு,தூள் அளவை பார்த்து விட்டு ஓவனில் வைக்க கூடிய பாத்திரத்தில் மாற்றி ஓவனுக்குள் 10 - 30 நிமிடம் வைக்கவும். ஓவன் யஸ்ட் போட்டு விடணுமே தவிர சூடு கூட்ட வேண்டிய அவசியமில்லை. மெல்லிய சூட்டில் வைக்க அரிசி அவிந்து இன்னும் மெதுமையான சுவையாக இருக்கும் என்பதற்காக தான் ஓவனுக்குள் வைப்பாங்க. அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு சரி.

றைஸ் குக்கரில் வைப்பதும் ஓவனில் வைப்பதும் ஒன்று தானே. என்ன மரக்கறிகள் போட்டால் நன்றாக இருக்கும். எல்லம் முடிய சலட், தக்காளி சம்பல் அல்லது தயிர் போட்ட வெங்காய சம்பலோடு சாப்பிட கரவெட்டிக்கே போன மாதிரி இருக்கும்.

என்றாலும் கு.சாமி அங்கிள் சொன்னது போல பக்கத்து ஊர் சீ பக்கத்து வீ்ட்டு கோழியின் சுவை இங்கு கடையில் படுத்திருக்கும் கோழி போல் வராது தான். என்ன சொல்றீங்க பரணி அண்ணா :lol::o

சரி, உதுக்கும், பிரியாணிக்கும் என்ன வித்தியாசம்? சிலர் பிரியாணிக்கும் ஒருசில மரக்கறி போட்டு கண்டிருக்கிறேன்.

கு.ச.தாத்தா, பசுமதி அரிசியில் மாச்சத்து குறைவு. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஊர் அரிசியில் விற்றமின்கள் அதிகம் என்றாலும் மாச்சத்து அதிகம்.

இப்படியும் ஒரு சாப்பாடு இருக்கோ..(நிசமா எனக்கு இன்னைக்கு தான் தெரியும்). :lol: .மாஸ்டர் செய்து பார்த்து போட்டு படத்தை போடுறியளே...எப்படி இருக்குது எண்டு பார்க்க.. :o

அப்ப ஆட்டு புக்கை,மாட்டு புக்கை எண்டு எல்லாம் இல்லையோ..??..இல்ல கேட்டனான் கேள்விபடாத பேரா இருக்கு அது தான்... :lol:

அப்ப நான் வரட்டா!!

இப்படியும் ஒரு சாப்பாடு இருக்கோ..(நிசமா எனக்கு இன்னைக்கு தான் தெரியும்). :wub: .மாஸ்டர் செய்து பார்த்து போட்டு படத்தை போடுறியளே...எப்படி இருக்குது எண்டு பார்க்க.. :lol:

அப்ப ஆட்டு புக்கை,மாட்டு புக்கை எண்டு எல்லாம் இல்லையோ..??..இல்ல கேட்டனான் கேள்விபடாத பேரா இருக்கு அது தான்... :huh:

அப்ப நான் வரட்டா!!

நீங்க எந்த ஊருங்க.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு சாப்பாடு இருக்கோ..(நிசமா எனக்கு இன்னைக்கு தான் தெரியும்). :huh: .மாஸ்டர் செய்து பார்த்து போட்டு படத்தை போடுறியளே...எப்படி இருக்குது எண்டு பார்க்க.. :wub:

அப்ப ஆட்டு புக்கை,மாட்டு புக்கை எண்டு எல்லாம் இல்லையோ..??..இல்ல கேட்டனான் கேள்விபடாத பேரா இருக்கு அது தான்... :huh:

அப்ப நான் வரட்டா!!

வெள்ளைப்புக்கை, சக்கரைபுக்கை போல கோழிப்புக்கை இருக்கும் :lol:

நீங்க எந்த ஊருங்க.. :huh:

என்னையோ..கேட்கிறியள்..என்னையோ.

.(என்ன தானே என்ன)..எனக்கே தெரியா... :huh: (உது எப்படி இருக்கு)..நான் பிறந்தது "வெஸ்மீட்" ஆசுபத்திரியில பாருங்கோ...சொல்ல போனா மானிபாய் எண்ட ஒரு இடத்திலையும் "வெஸ்மீட்" ஆசுபத்திரி இருக்குது பாருங்கோ.. :wub:

சாத்திரி அங்கிளிட்ட கேட்டா சொல்லுவார் மிச்சம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

வெள்ளைப்புக்கை, சக்கரைபுக்கை போல கோழிப்புக்கை இருக்கும்

அப்படியே..அது சரி கந்தப்பு தாத்தா எங்கன்ட வீட்டில உந்த சாப்பாடு சமைத்திருக்கீனமே..நான் எண்டா ஒரு நாளும் கேள்விபடவே இல்ல.. :lol:

ஆனா ஒண்டு மட்டும் விளங்குது அதுகுள்ள கோழி இருக்கு எண்டு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.