Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் பொன்னாடை போர்த்திட்டாங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர்.

இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்புகளை தொடர்ந்து செய்து சொந்த பணத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படைப்புகளை புலம்பெயர் இளைஞர்கள் தங்களது டாக்டர் பட்ட ஆராச்சிக்கு எடுத்து ஆராச்சி செய்ய வேண்டும் இது தான் எனது ஆசை என்று பிரபல எழுத்தாளர் தனது பேச்சை முடித்து கொண்டார்.

அடுத்து சிட்னி கவிபேரசு முனியான்டி கவிமழை பொழிவார் என்றவுடன் அரங்கே ஒரே ஆரவாரம்.

சுத்த தமிழில்

சுய ஆக்கங்களை

சுயமாக எழுதி

சுய தம்பட்டம் இல்லாமல்

சூப்பராக வெளியிடும்

சுரேசிற்கு எனது வாழ்த்துக்கள்.

என்றவுடன் நித்திரை கொண்டிருந்த எல்லாரும் கையை தட்ட தொடங்கினார்கள் அதில் யாழ்கள வயபோதிபர் ஒருவரும் அடக்கம்.தொடர்ந்து நீங்கள் படைப்புகளை படைக்க வேண்டும் அதற்கு என்னையும் அழைக்க வேண்டும் நான் இங்கு வந்து கவி வடிக்க வேண்டும்.எனக்கு தொடர்ந்து சுரேஷை பற்றி கவி வடிக்க ஆசை இருந்தாலும் நேரமின்மையால் இத்துடன் எனது கவிபுலம்பலை நிறுத்து கொள்கிறேன்.மீண்டும் மேடையில் ஆரவாரம்.

அடுத்து புத்தகத்தை வெளியிடுவதிற்காக சிட்னி பிரபல எழுத்தாளர் புத்தனையும் அதை பெற்று கொள்வதிற்கு சிட்னியில் பிரபல தொழிலதிபர்..(கடலை அதிபர்) சுண்டலராஜா அவர்களையும் அழைக்கின்றோம்.சுண்டல ராஜா இப்போது மேடையில் சுரேஷை பற்றி பேசுவார் இந்த எழுத்தாளரின் படைப்புகளுக்கு எனது சொத்து யாவற்றையும் விற்றாலும் ஈடாகாது எண்டு கூறி முடிபதிற்குள் அரங்கில் இருந்து யாரோ "ரீல்" என்று கத்தும் சத்தம் கேட்டது.

எழுத்தாளர் சுரேஷ் அவர்களை நன்றியுரை வழங்குமாறு மேடைக்கு அழைக்கின்றோம் என்றவுடன் சுரேஷ் தனது பட்டு வேட்டியின் அகலகரை தெரியுமாறும் சால்வையை படையப்பா ஸ்டைலில் போட்ட வண்ணம் மைக்கிற்கு முன்னால் வந்து மேடையில் கூடி நிற்கும் மக்களை பார்த்து இந்த நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திய சகலருக்கும் நன்றி நன்றி நன்றி..நன்றி.

என்ற கூற தொடங்க பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த மனிசி என்னப்பா நித்திரையில் கத்துறியள் விடிந்து போச்சு எழும்பி வேலைக்கு போற அலுவலை பாருங்கோ அதை விட்டிட்டு சும்மா கனவில மிதக்க வேண்டாம் அது சரி இப்ப கனவில் எவள் வந்தவள் அவளுக்கு என்னதிற்கு நன்றி சொன்னீங்கள் என்று சுரேஷின் உயிரை எடுக்காத குறை.

அவனோ நித்திரை மயக்கத்தில் படுக்கும் போர்வையை பொன்னாடையாக நினைத்து போர்த்தி கொண்டு ராஜ நடை மலசலகூடத்தை நோக்கி நடந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்து மாமா .........

.கதை சூப்பரோ சுப்பர் . ...விழுந்த விழுந்து சிரித்தேன் .கனவு கண்டு சிரிச்சாலும் ,யாரவள் என்ற சந்தேக கேள்வி . பொன்னாடை கனவில் படுத்து இருகிறீங்க . சரி சரி ...நான் போர்த்தி விடுகிறேன் . மகிழ்ச்சி எனும் பொன்னாடை .நன்றியுடன் நிலாமதி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புத்தனின் கனவு போல் விளங்குகிறது <_<

மனைவி அடிக்கவில்லை தானே புத்தன்? அது வரைக்கும் சந்தோசம் :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இந்தக் கனவுக்குப் பிறகு வேலையாவது ஒண்ணாவது!!! நன்றி புத்ஸ்!!!

அது சரி இப்ப கனவில் எவள் வந்தவள் அவளுக்கு என்னதிற்கு நன்றி சொன்னீங்கள் என்று சுரேஷின் உயிரை எடுக்காத குறை.

மனிசனுக்கு ஏற்கெனவே இருக்கிற எரிச்சலுக்கு..... இந்த கேள்வி வேறையா?

  • கருத்துக்கள உறவுகள்

அட கனவில கூட சந்தோசமாய் இருந்துடக்கூடாதென்ற ஒரு நல்லெண்ணம்தான் <_<

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கூற தொடங்க பக்கத்தில் உறங்கி கொண்டிருந்த மனிசி என்னப்பா நித்திரையில் கத்துறியள் விடிந்து போச்சு எழும்பி வேலைக்கு போற அலுவலை பாருங்கோ அதை விட்டிட்டு சும்மா கனவில மிதக்க வேண்டாம் அது சரி இப்ப கனவில் எவள் வந்தவள் அவளுக்கு என்னதிற்கு நன்றி சொன்னீங்கள் என்று சுரேஷின் உயிரை எடுக்காத குறை.

சிரித்தேன் . ரசித்தேன் புத்தன் . <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கனவு விசயம் உவன் யமுனனுக்கும் கந்தப்புவுக்கும் தெரியுமோ புத்தன்? :o

மாம்ஸ்..வடிவா தான் கனவு கண்டனியளே..இந்த மேடையில நான் இருகலையோ..??.இல்லாட்டி நான் இருந்ததை மறைச்சிட்டியளோ..??.. :(

எனக்கு இந்த உண்மை தெரிந்தாகனும்..ம்..!! :wub:

இல்லாட்டி மறுபடி அந்த கனவை இன்னைக்கு இராத்திரிக்கு பார்த்திடு சொல்ல வேண்டும் சொல்லிட்டன்..ன்.அப்படி அந்த மேடையில நான் இல்லாட்டிக்கு..கு.. :o

பெரிய பிரச்சினை ஒண்டு கிளம்பும் சிட்னியில சொல்லிட்டன்..ன்.. :lol:

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா நீ போட்டிருக்கிற ஆடை தான் உனக்கு வாழ்க்கையில பொன்னாடை" :wub:

அப்ப நான் வரட்டா!!

உந்த கனவு விசயம் உவன் யமுனனுக்கும் கந்தப்புவுக்கும் தெரியுமோ புத்தன்? :wub:

இல்ல கு.சா தாத்தா..தா மறைச்சிச்சிட்டாங்களே..ளே..அது தான் கனவை சொன்னான்..ன் சரி நானும் இன்னைக்கு ஒரு கனவு காணுறன்..ன்.. :wub:

அதில எனக்கு பொன்னாடை போர்க்கிற மாதிரி எல்லாம் இல்ல..நமீதா அக்கா என்ன போர்கிற மாதிரி..என்ன உங்களாள முடியலையா..யா.. :lol:

எனக்கும் தான் மூச்சு திணறபோது தாத்தா..தா..!! :o

அப்ப நான் வரட்டா!!

பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, பாராட்டுக்கள் புத்தன். :o

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்தில புகழ் தேடி.. இப்ப எல்லாம்.. குஞ்சு குருமனும்.. கவிதை.. கதை (முந்தி ஊரில திண்ணையில குந்தி இருந்து அளக்கிறதுகள.. கதைக்கிறதுகள.. வெறியில பாடுறதுகள) இப்ப புத்தமாக்கி வெளியிடுகுதுகள்..! :o:wub:

அதுக்கு பாராட்டுத் தெரிவிக்க.. தங்களுக்க தாங்களே வகுத்துக்குக் கொள்ளும்.. பெரியவன் சிறியவன் என்ற கணக்கின் படிக்கு.. குளிருக்கு ஜக்கட்டுக்குப் பதிலா.. பட்டுப் போர்வை. அதுவும் நல்ல ஜக்கட் தானே..போர்த்திக்குதுகள்.

கதை சிரிக்கவும் கடிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது.. புத்து. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கனவு கதை புத்தன், கனவு நிஜமாக வாழ்த்துக்கள் :o

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது படைப்புகளை புத்தகமாக வெளியிடலாம் என்று பார்த்தால் புத்தன் யாழில எழுதி என்னைக் கவிழ்த்து விடுவான் போல கிடக்கிறதே.

நானும் எனது படைப்புகளை புத்தகமாக வெளியிடலாம் என்று பார்த்தால் புத்தன் யாழில எழுதி என்னைக் கவிழ்த்து விடுவான் போல கிடக்கிறதே.

ஓ..அப்படியோ கந்தப்பு தாத்தா..தா..!!.. :)

நீங்க பொத்தகம் எழுதி முடித்து வெளியிடுறதிற்குள்ள..ள் நான் எழுதி ஒரு பொத்தகம் வெளியிட்டிட மாட்டன்..அது சரி வெட்டி ஒட்டுறதை எல்லாத்தையும் சேர்த்தும் பொத்தகம் எழுதலாமோ.. :wub:

கந்தப்பு தாத்தா..தா..!! :)

அப்ப நான் வரட்டா!!

நித்திரை மயக்கத்தில் படுக்கும் போர்வையை பொன்னாடையாக நினைத்து போர்த்தி கொண்டு ராஜ நடை மலசலகூடத்தை நோக்கி நடந்தான்.

:lol: நான் நினைச்சேன் புத்துமாமாவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிச்சிருக்கிறாங்க என்று வாழ்த்து சொல்ல வந்தால்................................. :lol::lol::(:(

நல்லாக போர்த்தி இருக்காங்க. பாவம் சுரேஷ் கனவு கூட காண சுதந்திரம் இல்லாமல்...

அதுசரி பொன்னாடை சீ போர்வை போத்திக்கொண்டு தான் மலசல கூடம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.