Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல்வர் கருணாநிதி கடும் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்திருந்தார். அவரது உடல் நலம் முழுவதுமாகத் தேறாத நிலையில், அரசை அலுவல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். இந்நிலையில் கட்சிப் பணிகளையும், தேர்தற் பணிகளையும் கருத்திற்கொண்டு, தேர்தற் பிரச்சாரத்திலும் இறங்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சலும், முதுகு வலியும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். செய்தியறிந்ததும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் உடனழைத்து நலம் விசாரித்தார். முதல்வரது உடல் நலம் குறித்து அறிந்து கொள்ள அவருது நண்பர்களும், திமுகவின் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும், ஆர்வமாகவிருந்தனர். முதல்வர் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

http://ww1.4tamilmedia.com/index.php?optio...2&Itemid=54

ஐயோ கடவுளே திரும்பவும் உண்ணாவிரதம் இருந்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் உயிரோடு இருந்ததால்தால் ஜெயலலிதா அம்மையால் ஈழம் பற்றிய அறிக்கை வெளியிட வேண்டி வந்துள்ளது

அந்த வகையில் தூண்டியாக யிருந்த கலைஞருக்கு நன்றி ஜெயாவுக்கும் நன்றி நல்ல படியாக திரும்பி வாங்கோ கலைஞரே[யாரும் சண்டைக்கு வராதீங்கோ] :unsure:

தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமிழுக்காக அர்ப்பணித்து தன்னையே உருக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் ஐயாவிற்கு உடல்நலக் குறைவு என்பதை அறிந்ததும் என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது.

அவர் அல்லல் படும் ஈழத்தமிழர்களுக்காகச் செய்த சேவைகள் கொஞ்ச நஞ்சமா? தனது முதுகுவலியையும் பொருட்படுத்தாமல் கவிதை எழுதியதைச் சொல்லவா?

ஈழுத்தமிழர்களுக்காக கழக உடன்பிறப்புகளை மழைக்குள்ளே கை கோர்த்துக் கொண்டு நிற்கச் சொன்னதைச் சொல்லவா?

தனது கண்ணிலும் இனிய மனைவிமார்களுக்குக் கூடச் சொல்லாமல் மெரீனா கடற்கரையில் காலவரையில்லாமல் உண்ணாவிரதமிருந்து உடல் மெலிந்ததைச் சொல்வதா?

யுத்த நிறுத்தத்திற்குப் பாடுபடுங்கள் என்று டெல்லிக்குத் தந்தி அடித்தே கைசோர்ந்ததைச் சொல்லவா?

இப்படி ஈழத்தமிழர்களுக்காகவே உடல் மெலிந்து கொண்டிருக்கும் உன்னத தலைவன் இன்னும் பல காலம் உயிரோடிருந்து நடக்க இருக்கும் மத்திய அரசுத் தேர்தலில் மண்கவ்வுவதையும் அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பேரம் பேசும் ஆற்றலால் மாநில அரசு கலைக்கப்படுவதையும் சில காலங்களின் பின் கட்சித் தலைமைப் பதவிக்காக மு.க ஸ்டாலினும் மு.க அழகிரியும் அடித்துக் கொள்வதையும் பார்க்க வேண்டும் என்பதே என் அவா?

முட்டாள்களே இன்னுமா இந்த கிழவனின் ஐடியா புரியவில்லை, 6 ம் தேதி சோனியா தமிழகம் வாராவு கருணாநிதியும்,சோனியாவும் ஒரே மேடையில் பேச ஏற்பாடானது ஆனால்

தமிழகத்தில் ஏற்கனவே இலங்கைத்தமிழர்விடையம் சூடுபிடித்துள்ளதால் ,ஒரேமேடையில் இருவரும் பேசுவதன் மூலம் பெரும் அரசியல் பின்னடைவு ஏற்படும் இதை தவிர்க்க

இந்த குள்ளநரி செய்த ஏற்பாடுதான் இது,ஆனால் இதை நம்ப முடியாது நாளைக்கே டிஷ்டாஜாகி அன்னை சோனியாவுடன் கைகோர்த்து ஒரேமேடையில் பேசும்,

இது நிச்சயம் நாடகம்தான்! பல்வேறு விசயங்களுக்கு இந்த நாடகம் தேவைப்படுகிறது!

எம்ஜிஆர் வைத்தியசாலையில் படுத்துக்கொண்டே தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனார்!

அப்படி தானும் படுத்துக்கொண்டால் மக்கள் அனுதாபத்தில் வோட் போடுவினம் என்ற ஐடியாவும் இருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சாரங்கள் தோற்கும் போது அனுதாப அலை வெற்றி கொடுக்கும் என்பதும், எதிர்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் என்பதும் உண்மையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்காகவே உடல் மெலிந்து கொண்டிருக்கும் உன்னத தலைவன் இன்னும் பல காலம் உயிரோடிருந்து நடக்க இருக்கும் மத்திய அரசுத் தேர்தலில் மண்கவ்வுவதையும் அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பேரம் பேசும் ஆற்றலால் மாநில அரசு கலைக்கப்படுவதையும் சில காலங்களின் பின் கட்சித் தலைமைப் பதவிக்காக மு.க ஸ்டாலினும் மு.க அழகிரியும் அடித்துக் கொள்வதையும் பார்க்க வேண்டும் என்பதே என் அவா?

Manivasahan

உங்கள் அவா நிச்சயம் நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயம் நாடகம்தான்! பல்வேறு விசயங்களுக்கு இந்த நாடகம் தேவைப்படுகிறது!

எம்ஜிஆர் வைத்தியசாலையில் படுத்துக்கொண்டே தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனார்!

அப்படி தானும் படுத்துக்கொண்டால் மக்கள் அனுதாபத்தில் வோட் போடுவினம் என்ற ஐடியாவும் இருக்கும்!

தேர்தலில் வாக்குமாறப் போவதைத் தடுக்க எடுத்திருக்கு இறுதி ஆயுதம்தான் இந்த நாடகம்.தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஏமாறாமல் இருந்து காங்கிரஸ் கூட்டணிக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும்.

இன்றோ ..நாளையோ... என்று இருக்கும் கொலைஞருக்கு ஏதுக்கு வோட்டு(vote)??

தமிழ் நாடு மக்களே விழிது எழுங்கள்..

(சில நேரம்.. வாக்குகள் பெற்ற சந்தோசத்தில் கூட சாவடையலாம்...lol )

கொலைஞருக்கு ஒரு இறுதி ஆசையாம்.. "தான் இறந்த பின் மெரினா கடல் ஓரமாக தனக்கு ஒரு சிலை இருக்க வேண்டும் என்று.." சில நேரம்.. அச்சி கவிழும் என்று தெறிந்து.. பதவியில் இருக்கும் காலத்திலேயே போய் விடுவோம் என்று எண்ணியிருப்பார்....

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டை போல் கட்டி பின் அந்த மூட்டையை இறக்கி :unsure:

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

இவரிற்கு இந்த நேரத்தில் எதுவும் பாரதூரமாக நடக்க கூடாது. அப்படி நடந்தால், அதுவே அனுதாப அலையை தோற்றுவித்து ஈழ ஆதரவு அலையை திசை திருப்பி விடும். திமுக வும் காங்கிரசும் செத்தவர்களை வைத்து வியாபாரம் செய்வதில் கைதேர்ந்தவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரிற்கு இந்த நேரத்தில் எதுவும் பாரதூரமாக நடக்க கூடாது. அப்படி நடந்தால், அதுவே அனுதாப அலையை தோற்றுவித்து ஈழ ஆதரவு அலையை திசை திருப்பி விடும். திமுக வும் காங்கிரசும் செத்தவர்களை வைத்து வியாபாரம் செய்வதில் கைதேர்ந்தவர்கள்

எழுத வந்தேன் நிழலி எழுதிவிட்டீர்கள். மே மத்தி வரை கொலைஞர் உயிருடன் இருக்க பிரார்த்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வருக்கு நடந்த சிகிச்சையில் பலகோடிகள் ஊழல் - திடுக்கிடும் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அவர்களுக்கு ஏற்கனவே செய்யப்பட்ட முதுகு அறுவைச் சிகிச்சையில் முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள் வருமாறு.

முதல்வருக்கு முதுகுத்தண்டின் வலு மிகவும் குறைந்து பாரதூரமான கூன் விழும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்தப்பிரச்சினையை நீக்கும் பொருட்டு அவருக்கு உருக்கு இரும்பினாலான செயற்கை முதுகுத்தண்டை அமெரிக்காவிலிருந்து தருவித்து அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உருக்கு இரும்பினால் செய்யப்பட்ட விலை உயர்ந்த முள்ளந்தண்டை தருவிப்பதற்குப் பதிலாக வலுகுறைந்த ரப்பரினால் ஆன தண்டு இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விட்டது. இதில் பலகோடி ஊழல்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னை போலிசார் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்வர் அவர்களுக்கு உறுதியான முள்ளந்தண்டு கிடைக்காத காரணத்தினால் அவர் தலை நிமிர்ந்து நடக்கும்காலம் இப்போதைக்கு வராது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

- தினத்தொந்தி

சோனியாவுடன் பிரச்சாரத்துக்கு போனால் பல செருப்படிகள் விழலாம் என்று உளவுத்துறை எச்சரிச்சிருக்கும் அதுதான் பேசாமல் மருத்துவமனையில் ஓய்வெடுக்க பிளான் போட்டிருப்பார்.

இவரிற்கு இந்த நேரத்தில் எதுவும் பாரதூரமாக நடக்க கூடாது. அப்படி நடந்தால், அதுவே அனுதாப அலையை தோற்றுவித்து ஈழ ஆதரவு அலையை திசை திருப்பி விடும். திமுக வும் காங்கிரசும் செத்தவர்களை வைத்து வியாபாரம் செய்வதில் கைதேர்ந்தவர்கள்

மறுக்கமுடியாத உண்மை. தேர்தல் முடியும் வரை இத்த கிழவருக்கு ஒன்றும் நடக்ககூடாது என்று கடவுளை பிராத்திக்கும் நிலையில் நாம் உள்ளோம். ஏன்ன கொடுமை இது.

உண்ணாவிரத நாடகம் பொய்த்துவிட்டதால் இப்படியாவது தமிழக மக்களின் அனுதாபத்தினை பெறலாம் என முயற்சிக்கின்றார் இந்த பழுத்த அரசியல்வாதி.தமிழினத் துரோகி!!!

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வலவு திட்டி தீர்க்கேலுமோ அவ்வளவுக்கு திட்டி தீருங்கள் :unsure:^_^

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வலவு திட்டி தீர்க்கேலுமோ அவ்வளவுக்கு திட்டி தீருங்கள் ^_^^_^

செத்த பிணத்தை திட்டித் தான் என்ன திட்டாமல் விட்டுத் தான் என்ன.. அவன் செத்து ரொம்ப நாள் ஆச்சு முனிவா.. :unsure:

இன்று காலை முதல்வர் கருணாநிதி கடும் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

:unsure: பன்றி காச்சலா இருக்குமோ ^_^

Edited by KILI TIGER

பானுமதிக்களை அனுப்புங்கள், அத்துடன் நாலு கிலோ வேப்பிலையையும் சேர்த்து, குப்பென்று எழுவார் உலக மகா நடிகன்!! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயசுபோட்டுதெல்லோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியாக தெரிய வந்த செய்தியின்படி அவருக்கு ஏற்பட்டிருப்பது பன்றிக் காய்ச்சல் எனவும், இது அண்மையில் இவர் மெக்சிக்கோ நண்பியுடன் தொலைபேசியில் கதைத்ததால் தொற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இவருடன் மேடையில் இருப்பதற்கு சோனியா தடுமாறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பன்றிக்கே பன்றிக்காச்சலா? அது மணிதர்களுக்குதானே வருமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பன்றி காச்சலா இருக்குமோ

பன்றிக்காய்ச்சல் மனிதர்களுக்குத்தான் தொற்றும். பன்றிகளுக்குத் தொற்றுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.