Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2

Featured Replies

கைசேர்ப்போம் வெற்றிக்கொடி நாட்ட அவர் வருவார்.

நம்புங்கள் தமிழீழம் பிறக்கும் தலைவனும் வருவார்

கண்டிப்பாக கிடைக்கும். இப்பவும் எங்கள் எல்லாவிதமான கட்டுமானங்களும் அப்படியே இருக்கின்றன, ஒன்றுக்கும் எதுவும் நிகழவில்லை, களம் பல வழி நடத்திய தளபதிகள் அனைவரும் இருக்கிறார்கள், எங்கள் போராளிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள், நாங்கள் சிறுக சிறுக சேர்த்த ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, எங்களை வழி நடத்த தலைவன் இருக்கிறான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா எந்த வல்லரசுக்கும் அடிப்போம், நாங்கள் யார்??? கிடைக்கும் கண்டிப்பாக!

  • Replies 100
  • Views 10.8k
  • Created
  • Last Reply

நாரதர் கருத்தைப் போல், இலங்கையிடமிருந்து, எப்படியான தீர்வை, யார் மூலம,; எப்படிப் பெறலாம் என வழுதி எழுதட்டும்.

கண்டிப்பாக கிடைக்கும். இப்பவும் எங்கள் எல்லாவிதமான கட்டுமானங்களும் அப்படியே இருக்கின்றன, ஒன்றுக்கும் எதுவும் நிகழவில்லை, களம் பல வழி நடத்திய தளபதிகள் அனைவரும் இருக்கிறார்கள், எங்கள் போராளிகள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள், நாங்கள் சிறுக சிறுக சேர்த்த ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன, எங்களை வழி நடத்த தலைவன் இருக்கிறான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா எந்த வல்லரசுக்கும் அடிப்போம், நாங்கள் யார்??? கிடைக்கும் கண்டிப்பாக!

அடம் பிடிக்கிறாங்களோ?

நாரதர் கருத்தைப் போல், இலங்கையிடமிருந்து, எப்படியான தீர்வை, யார் மூலம,; எப்படிப் பெறலாம் என வழுதி எழுதட்டும்.

இப்ப புலிகளைப்பற்றி தான் பந்தி எழுத எல்லோராளும் முடியும்.சிறிலங்காவப்பற்றி எந்த புழுதியாலும் பந்தி எழுதமுடியாது

பொட்டம்மான் அருகில் இருக்கும்வரை அவரை யாராலும் அசைக்க முடியாது.

:rolleyes::rolleyes:^_^

முதல் முதல்ல யாழ்களத்தில் முகக் குறியை பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ! அய்யயோ!! ....... ஒருதரும் உங்களை சொல்லேலைங்கோ!! நேங்கள் தானுங்கோ உந்த து..து....வைத் தொடங்கினீர்கள் .......

உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய், இறுதியில் உள்ளுக்குள், வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனா, வியட்னாம், அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாது, அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!!

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிழையான வழியில் சென்றால், நிச்சயம் குடும்பத்தலைவனோ, தலைவியோ மிகப்பெரிய பங்காளிகள்!!

இன்று இவ்வளவு கேவலத்துக்கு எம்மக்கள் சென்றதற்கு யார் பொறுப்பு???????????????

மக்கள் சென்றதிற்கு..... தெளிவாக எழுதிவிட்டும் கேள்வி வருகிறது. ஏனேனில் உண்மை எது எப்படி இருப்பினும் சந்தடிநாக்கில் சேறை வாரி பூசவேண்டும் என்ற எண்ணம் தெளிவாக மூளைக்குள் இருந்தால் கேள்வியென்ன கேள்வி? வேறுபலவும் வரும்போல. மக்கள் சென்றதற்கு ஊர் மாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் இதைதான் இப்போதைக்கு நான் சொல்வேன்

இதை இங்கு இணைப்பதற்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் இன்று நாம் எழுந்திருக்க வேண்டியதன் தேவை ஒன்றே.

புரிந்தவர்கள் இதை இதன் முடிவு வரை பாருங்கள்.

http://www.maniacworld.com/are-you-going-t...ish-strong.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு தேவைகள் கருதி முண்டு கொடுக்கும் நாடுகளின் போட்டி நிலை ஒரு சந்தர்ப்பத்தில் முறண்படும். அந்த வேளை தமிழர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். தமிழர்களுக்கான ஒரு சந்தர்ப்பம் உருவாகும். ஆனால் அதையும் தமிழர்களால் நிச்சயம் பயன்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். இதற்கான காரணங்களே ஆராயப்பட்டு நிவர்த்தி செய்யப்பட வேண்டிய காலமிது தவிர எந்த ஒரு வடிவத்திலான போராட்டத்துக்குமான காலமில்லை இது என்பதை புரிந்து கொள்தல் அவசியமானது.

தமிழர்களை எதிர்கொண்டது உள்ளகமான சமூகப் பிரச்சனை மற்றும் வெளியே இனப்பிரச்சனை. இன்று இனப்பிரச்சனைக்குரிய தீர்வு காணப்படாமல் போனதற்கு உள்ளகமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமையே காரணமாகின்றது. தமிழர் எப்படி சிதைந்து சீரளிந்து கிடக்கின்றானர் என்பதை யாரும் முதன்மைப்படுத்துவதில்லை. சாதியாக மதமாக வர்க்கமாக இவைகளின் பல கூறுகளாக தமிழர்கள் முரண்பட்டு பிளவுபட்டு சீரளிந்து போயுள்ளனர். இதன் காரணமாக ஒரு வலுவான இனமாக ஒன்றுபட்டு எழுச்சி கொள்ள முடியாது.

இவ்வாறான பிரச்சனைகள் அடிப்படையில் ஒன்றுபடுதல் என்ற புள்ளியில் மட்டும் இல்லாமல் சக மனிதனை நேசிக்கும் தன்மையையே அடிப்படையில் இல்லாதொழித்துள்ளது. சிங்களவர்கள் மட்டும் தமிழர்களை கொல்வதில்லை தமிழரின் முரண்பாடுகளால் எழுந்த வேற்றுமை உணர்வுகள் சக மனிதனை கொன்றொழிப்பதற்கு அதிகம் தயங்குவதில்லை. சமூகத்தினுள்ளான போட்டி நிலைக்காக வாழ்ந்த பிரதேசங்களை துறந்து வெளியேறத் தயங்குவதில்லை. மதப்பிளவுகளுக்காக கொல்லத் தயங்குவதில்லை. பிரதேசவாதப் பிளவுகள். மேலாண்மை. புத்திஜீவிதக் கர்வம். இவ்வாறு பலவுமான முரண்பாடுகளை கடந்து இனமாக ஒருவரை ஒருவர் நேசித்து ஒன்றுபடும் அடிப்படை மனப்பான்மையை இழந்து நிற்கின்றது தமிழினம். இந்த முரண்பாடுகளில் இருந்து புலிகள் உட்பட எந்த இயக்கமும் அமைப்பும் தனிமனிதனும் இன்னும் வெளியில் வரவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா? எதுவும் இல்லை. நாம் ஒருவன் சட்டையை மற்றவன் பிடித்து கடிபட்டு குத்துப்படுகின்றோம் ஆனால் தமிழில் பேசிக் குத்துப்படுகின்றோம் கடிபடுகின்றோம். அதற்காக தமிழர் என்கின்றோம்.

நாளைக்கே சர்வதேச நாடுகளுக்கும் இலங்கைக்கும் முரண்பாடு வந்து தமிழர்களிடம் வாக்கெடுத்து அவர்கள் பிரிந்து போக விரும்பின் போகட்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதில் தமிழன் படுதோல்வி அடைவது நிச்சயமானது. இஸ்லாமிய தமிழர்கள் மலையக தமிழர்கள் பிரதேசவதத்தை முன்நிறுத்தும் தமிழர்கள் மாற்றுச் சிந்தனை உள்ள தமிழர்கள் தென்னிலங்கை வாழ் தமிழர்கள் எவரும் பிரிவினை கோரி வாக்களிக்;கப்போவதில்லை.

எமக்குள்ளான முரண்பாடுகள் தீர்க்கப்படுதல். எமது பிரதேசங்களில் நாம் வாழும் எண்ணம் பெறுதல். ஒருவரை ஒருவர் நேசித்தல் போன்ற பல நிலைகளை ஏற்படுத்த போராடுதலே இன்றய காலம். பம்மாத்தின்றி இனமாக உருவமதலே நாளை ஒரு சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் இல்லையேல் அதுவும் நடக்காது.

இதன் நோக்கம் மிகவும் மாறுபட்டது என்பதை வாசிப்பவர்களால் புரிந்துகொள்ள கூடிய மாதிரியே என்னாலும் புரியபடுகின்றது. ஒன்று சேர்வதென்பது ஒவ்வுதல் ஒவ்வாமை போன்றவற்றால் நிர்ணயிக்க படுகின்றது அதற்கு இயற்கையான அனைத்துமே விதிவிலக்கல்ல. காந்தத்தின் இரு எதிர்முனைகளையும் ஒட்ட வைக்க முடியாது போன்று இயற்கையில் பல ஒவ்வுதல்களும் ஒள்ளன. மனிதனை தாண்டி .... மிருகத்தையும் தாண்டி.... பறவைகளிடம் போனால் ஆண்மயிலுக்கு நல்ல அழகான தோகை என்று எம்மால் கூற முடிகின்றது ஆனாலும் எந்த ஆண்மயிலின் தோகை நீளமானது என்று பெண்மயிலால் ஆய்வுக்கு ஒட்படுத்தபட்டே அது தனது சோடியை தெரிவு செய்கின்றது. ஆகவே இயற்கைக்கு புறம்பாக தமிழர்கள் மாறவேண்டும் என்பது வெறும் கற்னையாகவும் கடலில் வரையும் சித்திரமாகவும்தான் இருக்கும். தமிழ் பேசுவதால் தமிழரா? என்றால் இப்போதைக்கு என்ன சொல்வது என்பது எனது அறிவுக்குபடவில்லை என்றாலும். தமிழ் பேசுவதால்தான் சிங்களவன் அடிக்கிறான் ஆகவே அடிவேண்டுபவர்கள் எனும் ஒரே குடைக்குள் தமிழ் பேசுபவர்கள் வந்துதான் ஆகவேண்டும். ஆனாலும் காட்டி கொடுப்பவர்கள் என்பவர்கள் சலுகைகளால் கவரபட்டு சிங்களவனால் ஈர்ப்பானபோது அவர்கள். அடிவாங்குபவர்கள் எனும் குடைக்குள் நிற்க வேண்டிய அவசியம் அவாக்ளுக்கு இல்லாது போனது. இப்போது அடிவாங்குவர்கள் எனும் குடைக்குள் நின்றவர்கள் ஏற்கனவே குடைக்குள் நின்றவர்களாலும் அடிகளை வேண்ட வேண்டியதாகிற்று. ஆனால் காட்டி கொடுப்பு வாழ்கை காணமல் போகும் போது தேடபடுபவர்களே இல்லாது போனால் தேடவேண்வேண்டிய அவசியம் எஜமான்களுக்கு இல்லாது போனபோது. வெறும் வலிகளுடனும் அடிகளின் காயங்களுடனும் நிற்கும் எமது குடைக்குள் கூடிநின்று அடித்தவரும் வரவேண்டிய கட்டயாம் வந்துவிடுகின்றது. காரணம் தமிழ் பேசுகிறார்கள். ஆகவே நாம் அவர்களை கூட்டியாக வேண்டும் என்றே நீங்கள் சொல்கின்றீர்கள். அதனால் என்ன லாபம் என்பதே என்னை போன்றவர்களின் கேள்வி? கூடிவாழ்ந்து குழிபறிப்பவருக்கு இடையிடையே கூடி வாழவேண்டிய தேவை இருக்கின்றது குழிக்குள் வீழ்ந்துபோயிருக்கும் எமக்கு என்ன வில்லங்கம் வேண்டியிருக்கின்றது என்பதே எமது கேள்வி? தவிர பல காலங்களின் முன்னால் எழுத வேண்ணவைகளை இப்பொது நீங்கள் எழுதியிருப்பதாக எனக்கு படுகின்றது. முன்மு அறியாமை இருந்ததால் பல பிளவுகள் இருந்ததுதான் இப்போது உயிர்வாழ்வே கேள்வி குறியானபோ அவையில்லாது பொய்விட்டது என்றே எனக்கு படுகின்றது அதற்காக அடியோடு அழிந்தாயிற்று என்று நான் சொல்லவில்லை. அங்கங்கே சில அறியாமைவாதிகளில் வாழ்கின்றது அது அறியாமை என்பது அவர்களால் அறியப்படும் இடத்து இல்லாது போய்விடும் தவிர கூடியமர்ந்து கூட்டம் வைத்தால் அதை வளர்ப்தற்கு வழிகோலுமே தவிர வேறொன்றும் ஆகாது.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ! அய்யயோ!! ....... ஒருதரும் உங்களை சொல்லேலைங்கோ!! நேங்கள் தானுங்கோ உந்த து..து....வைத் தொடங்கினீர்கள் .......

உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய், இறுதியில் உள்ளுக்குள், வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனா, வியட்னாம், அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாது, அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!!

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் பிழையான வழியில் சென்றால், நிச்சயம் குடும்பத்தலைவனோ, தலைவியோ மிகப்பெரிய பங்காளிகள்!!

இன்று இவ்வளவு கேவலத்துக்கு எம்மக்கள் சென்றதற்கு யார் பொறுப்பு???????????????

நெல்லையான்!

ரொம்பத்தான் துள்ளுகிறீங்க, உது எத்தனை நாளைக்கென்று தான் பார்ப்போம். இதுவரைகாலமும் வெளியிலைதான் துள்ளினீங்க இப்போ இங்கும் துணிவு வந்திட்டிது, நீங்க நினைப்பதெல்லாம் அதாவது எதிர்பார்ப்பதெல்லாம் கனவு என்று விரைவில் புரிந்து கொள்வீங்க, அப்போ இருந்த இடமே தெரியாமல்........

Edited by Valvai Mainthan

இதன் நோக்கம் மிகவும் மாறுபட்டது என்பதை வாசிப்பவர்களால் புரிந்துகொள்ள கூடிய மாதிரியே என்னாலும் புரியபடுகின்றது.

இதன் நோக்கம் மாறுப்பட்டது என்று இவ்வளவுநேரமும் வாசிச்ச என்னால் உங்களால் புரிந்துகொண்டதுபோல் புரிந்துகொள்ள முடியவில்லை.

சுகன் சொன்னதை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று நினைக்கின்றேன். சுகன் சொன்ன இந்தக்கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா?

நானும் இந்தக்கருத்தை மையப்படுத்தி பலருடன் உரையாடி இருக்கின்றேன். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் முதலில் புறநிலை அரசு அமைக்கமுன்னம் - தங்கள் உள்ளங்களில் அகநிலை அரசு அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அகம் சுத்தமாக இல்லாதவரை புறநிலை அரசால் ஒரு மண்ணாங்கட்டி பயனும் இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர் நாங்கள் தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் பார்த்து ஆசைப்படும்படியாக முன்னோடிகளாக வாழ்ந்து காட்டவேண்டும்.

ஆயிரம் ஆயிரம் போராளிகள் ஓர் வெற்று நிலத்துக்காக தங்கள் உயிர்களை மாய்க்கவில்லை.

சாதிகளால், சமயங்களால் பிரிந்து நிற்காத, பெண் அடக்குமுறைகள் இல்லாத, தமிழ் மொழியைப் போற்றுகின்ற, ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருக்கின்ற - உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட, சுயசிந்தனை உள்ள, ஆற்றல்மிக்க மனித சமூகம் ஒன்றை தாய்நிலத்தில் வாழவைப்பதற்காகவே மாய்ந்தார்கள். நாங்கள் அகம் சுத்தம் அடையும்வரை அவர்களின் கனவுகள் நிறைவேறப்போவது இல்லை.

தமிழீழத்தை - தமிழீழ தனியரசை முதலில் எங்கள் நெஞ்சங்களில் அமைப்போம். அதன்பிறகு புறநிலை நடவடிக்கைகளில் இறங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் நோக்கம் மாறுப்பட்டது என்று இவ்வளவுநேரமும் வாசிச்ச என்னால் உங்களால் புரிந்துகொண்டதுபோல் புரிந்துகொள்ள முடியவில்லை.

சுகன் சொன்னதை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று நினைக்கின்றேன். சுகன் சொன்ன இந்தக்கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

நானும் இந்தக்கருத்தை மையப்படுத்தி பலருடன் உரையாடி இருக்கின்றேன். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் முதலில் புறநிலை அரசு அமைக்கமுன்னம் - தங்கள் உள்ளங்களில் அகநிலை அரசு அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. அகம் சுத்தமாக இல்லாதவரை புறநிலை அரசால் ஒரு மண்ணாங்கட்டி பயனும் இல்லை.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர் நாங்கள் தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் பார்த்து ஆசைப்படும்படியாக முன்னோடிகளாக வாழ்ந்து காட்டவேண்டும்.

ஆயிரம் ஆயிரம் போராளிகள் ஓர் வெற்று நிலத்துக்காக தங்கள் உயிர்களை மாய்க்கவில்லை.

சாதிகளால், சமயங்களால் பிரிந்து நிற்காத, பெண் அடக்குமுறைகள் இல்லாத, தமிழ் மொழியைப் போற்றுகின்ற, ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருக்கின்ற - உயர்ந்த உள்ளங்களைக் கொண்ட, சுயசிந்தனை உள்ள, ஆற்றல்மிக்க மனித சமூகம் ஒன்றை தாய்நிலத்தில் வாழவைப்பதற்காகவே மாய்ந்தார்கள். நாங்கள் அகம் சுத்தம் அடையும்வரை அவர்களின் கனவுகள் நிறைவேறப்போவது இல்லை.

தமிழீழத்தை - தமிழீழ தனியரசை முதலில் எங்கள் நெஞ்சங்களில் அமைப்போம். அதன்பிறகு புறநிலை நடவடிக்கைகளில் இறங்கலாம்.

இது மிகவும் நுட்பமாக கையாள வேண்டிய கருத்தாடல்..... காரணம் காலநிலை. ஒரு மாதிரியாக இனப்போர் எனும் பெரும் பூதம் குளம் தோண்ட வெளிக்கிட்டவுடன். பல உள்ளுர் பூதங்கள் எங்கையோ போய் பதுங்கிவிட்ன நாம் மீண்டும் அதை தட்டியெழுப்பாமல் பார்க்கவேண்டும். இல்லாது அதை தட்டியெழுப்புவோமாக இருந்தால் இதுகளுக்கு குளம்கிண்ட இது நல்ல சுபவேளை என்பதையே நான் வலியுறுத்துகின்றேன். ஒற்றுமை இன்மை என்பது எல்லா இனங்களுக்கும் உண்டு காரணம் மனிதவடிவில் இருப்பதால் நாம் எல்லோரையும் மனிதர்கள் என்று நினைகின்றோம். ஆனால் மனிதர்ளுக்குள் பன்றிகள் நாய்கள் நரிகள் புலிகள் என்று எல்லாமே உண்டு. பூனைகள் சில விட்டுகொடுப்புகளுக்கு முன்வந்து மனிதன் இடும் சோற்றை உண்டு சோம்பேறிதனத்தை வளர்த்ததால் தமது சுயகௌரவத்தை இழந்தது. ஆனால் புலிகள் தமது சுய கௌரவத்தை விட மறுத்ததால் வளப்புபிராணிகள் பட்டியலில் புலி தடைசெய்யபட்து. ஆனால் கௌரவமாக வேட்டையாடி வீறப்புடன் புலி இன்றும் வாழ்கின்றது. பூனையும் புலியும் ஓரே இனத்தை சேர்ந்தவை என்பதாலேயே இந்த உதாரணம் பல உண்மைகளை வெளிகொணர கூடியது. ஆகவே விலங்குகளுக்குள்ளும் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதே எனது சுற்றிவளைப்பின் இறுதியிடம். ஒற்றுமையில்லாதவர்களை பற்றி நாம் சிந்தித்துகொண்டிருக்க முடியாது நீங்கள் செயற்பாடுபற்றி சிந்திப்பவர்களாக இருந்தால். ஆகவே இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று அடிமைவாழ்வு மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர். போராட்ட வடிவங்களை மாற்றலாம் ஆனால் இலட்சியங்களை மாற்றுவது என்பது பன்றிகளுக்கும் அப்பாற்பட்டது. எனது தெரிவு இராண்டாவது உங்களின் தெரிவு என்ன? புறநிலை அரசை நிறுவி அதனுடாக எமது போரை நாம் முன்னெடுப்பதே அனைத்து கட்ந்தகால தோல்விகளையும் விட்டுகொடுப்புகளையும் ஈடுசெய்யும் என்று நான் முழுமனதுடன் நம்புகிறேன். ஆகவே அதற்கான பணிகளில் எமை முழுமனதுடன் ஈ:படுத்துவோம். தவிர மதம் சாதி என்பன நொடியில் அழிய கூடியவை அல்ல அறிவால்தான் அறிவீனங்களை அழிக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் அடி போல அண்ணன் தம்பி உதவாது எண்டாங்கள் (யாழ் கள உறவுகளத் தான் சொல்றன்!). புலி வெற்றிகரமா அடிக்கேக்க விசிலசிடிச்சாங்கள். இப்ப தோத்த உடன "அவையள் ஆயுதத்த கூட நம்பி விட்டினம், இனி அத விட்டுட்டு மனிதாபிமானப் பிரச்சினயைப் பாப்பம். அப்பிடிப் பாக்காதவையெல்லாம் கனவுலகில இருக்கிறீனம்" எண்டாங்கள். இப்ப வந்து "கிடைச்சாலும் நாங்க வெல்ல மாட்டாம். ஏனெண்டா பல மாதிரிப் பிரிஞ்சு நிக்கிறம். அதால முதல் சொன்ன எல்லாத்தயும் விட்டுப் போட்டு உள்நோக்கித் தியானம் செய்வம் எண்டாங்கள். சும்மா சொல்லக் கூடாது நல்ல வெவ்வேறான flavors ஓட வகை வகையாத் தான் வாறங்கள் (ஆனா கொஞ்சம் போர்வைய நல்லா இழுத்து மூடுங்கோ, பின்னால வால் தெரியுது!).

மருதங்கேணி, நுட்பமாக கையாள்வதற்கு என்ன இருக்கிது? நீங்கள்தான் கவரிமான் பரம்பரை எண்டு சொல்லி சாகப்போறம் எண்டு சொல்லுறீங்கள். ஆத்திரக்காரனுக்கு புத்திமத்திமம் என்று யாரோ சொல்லிச்சீனம். ஆத்திரத்தை தீர்ப்பதுதான் முடிவு என்றால் எல்லாரும் ஆளாளுக்கு குண்டைக்கட்டிக்கொண்டு களத்தில இறங்குங்கோ. ஜஸ்டின் எங்கட வால் வேற தெரியுது எண்டு சொல்லுறார். நாங்கள் வாலைச் சுருட்டி வச்சுக்கொண்டு களத்தில இறங்குவம். இல்லாட்டிக்கு வாலைவச்சு ஆளைக்கண்டுபிடிச்சு போடுவாங்கள். அல்லது வாலில் குண்டை கட்டிவிட்டுடுவாங்கள்.

பலருக்கு தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் இப்போது இருக்கிற குழப்பத்திற்கு காரணம். முதலில தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கோ. சிங்களவனுக்கு உனக்கு பாடை கட்டுவன் என்று மார்தட்டி சொன்னவர்களை தனது காலை நக்கும்படியான நிலையில கொண்டுவந்து விட்டு இருக்கிறான் சிங்களவன். ஆனால் எங்கடை ஆக்கள் இனித்தான் அடி இருக்கிது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீனம்.

நாங்கள் கடைசிவரை களத்தில இறங்கப்போவது இல்லை. சாகப்போவது யாரோ. தொடர்ந்து விசிலடிக்க ஆயத்தமாய் இருக்கிறம். நீங்கள் குண்டுகளோட இறங்குங்கோ. நீ முன்னால போ தம்பி, நாம் பின்னால நடக்கிறதுகளைப்பற்றி வரலாற்றில பதிஞ்சுவிடுறம். யாராவது ஒருசிலராவது உயிர்தப்பினால்தானே செத்த ஆக்கள் செய்த தியாகங்களைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு (அப்படி ஏதாவது மிஞ்சினால்) சொல்லமுடியும். நாங்கள் அந்த உயிர்தப்பிற தியாகிகள் குழுவில இருந்து உங்கடை இறுதிக்கடமைகளை செய்யுறம்.

Edited by கலைஞன்

பாலா அண்ணாவை பற்றி இதில் இருப்பவைகளை மீண்டும் வாசிக்க ........... சில நினைவில் ..... என்னைப் பொறுத்தவரை பாலா அண்ணாவை புலிகளின் அரசியல் மதியுரைஞர் என்று அழைக்கிறோம், ஆனால் இம்மாமனிதன் எம்மை செப்பனிட எடுத்த பல முயற்சிகள் பயனற்றுப் போயின, ......... 1984ம் ஆண்டுகளில் புலிகளின் இயக்கத்துக்கு ஒரு பலமான மத்தியகுழு வேண்டும் என் விரும்பினார், புலிகள் இயக்கத்துக்கு ஒரு உறுதியான அரசியல் பிரிவு வேண்டும் என விரும்பினார் ............ அவரால் முடியாமல் போய் விட்டது!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும், பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும், கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும், ஈஸ்தீமோர் ,....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும், அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

ஆனால் எமக்கோ, பெரிய இராணுவ அமைப்பு, அரசியல் பிரிவு இல்லை என்றே கூறலாம். அதனால் எம்மால் உலக ஓட்டத்தை புரியக்கூடிய அளவுக்கு அறிவிருக்கவில்லை. கால ஓட்டத்துக்கு எம்மை மாற்ற முடியவில்லை. இறுதியில் ...........

சில தினங்களுக்கு முன்னம் எனது நண்பனுடன் வேலை செய்யும் ஓர் கறுப்பினத்தவன் கூறினானாம் ........

............"உங்களின் அழிவு, உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவை பற்றி இதில் இருப்பவைகளை மீண்டும் வாசிக்க ........... சில நினைவில் ..... என்னைப் பொறுத்தவரை பாலா அண்ணாவை புலிகளின் அரசியல் மதியுரைஞர் என்று அழைக்கிறோம், ஆனால் இம்மாமனிதன் எம்மை செப்பனிட எடுத்த பல முயற்சிகள் பயனற்றுப் போயின, ......... 1984ம் ஆண்டுகளில் புலிகளின் இயக்கத்துக்கு ஒரு பலமான மத்தியகுழு வேண்டும் என் விரும்பினார், புலிகள் இயக்கத்துக்கு ஒரு உறுதியான அரசியல் பிரிவு வேண்டும் என விரும்பினார் ............ அவரால் முடியாமல் போய் விட்டது!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும், பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும், கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும், ஈஸ்தீமோர் ,....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும், அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

ஆனால் எமக்கோ, பெரிய இராணுவ அமைப்பு, அரசியல் பிரிவு இல்லை என்றே கூறலாம். அதனால் எம்மால் உலக ஓட்டத்தை புரியக்கூடிய அளவுக்கு அறிவிருக்கவில்லை. கால ஓட்டத்துக்கு எம்மை மாற்ற முடியவில்லை. இறுதியில் ...........

நெல்லையன்,

இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்பதை, எல்லாம் நன்றாக இருக்கும்போது யாராவது வெளிக்காட்டினார்களா, (நீங்கள் உட்பட)? காலம் கடந்தபின்பு விரல்களை நீட்டுவதால் என்ன பயன்? :rolleyes:

இங்கு ஒருவரும் சேறை வாரி எறியும் நோக்கில் எழுதவில்லை. நாம் இதுவரை விட்ட மிகப்பெரிய தவறே விமர்சனங்களை இல்லாதொழித்தது!! எமக்கு சரி, பிழை தெரியவில்லை! உலக ஓட்டம் புரியவில்லை!! ......... முடிபு ....??????

இப்போது ஏற்கிறோமோ, இல்லையோ எமது போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது! இக்காலத்தில் எம் பிழைகளை மீளாய்வு செய்ய தவறுவோமாயின் அழிவு முழுமை பெற்று விடும்!!!

கடந்த காலங்களில் சரியோ பிழையோ ............. எல்லாம் நேராக செல்லும் என்றார்கள்! வேறு கருத்துக்கள் இருந்தாலும் எல்லோரும் ஆதரித்தோம்!! தலைமை விழுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மீளுவோம் என்றார்கள், நம்பிக்கை இல்லா விடினும் அள்ளிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!!! .............. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி, நுட்பமாக கையாள்வதற்கு என்ன இருக்கிது? நீங்கள்தான் கவரிமான் பரம்பரை எண்டு சொல்லி சாகப்போறம் எண்டு சொல்லுறீங்கள். ஆத்திரக்காரனுக்கு புத்திமத்திமம் என்று யாரோ சொல்லிச்சீனம். ஆத்திரத்தை தீர்ப்பதுதான் முடிவு என்றால் எல்லாரும் ஆளாளுக்கு குண்டைக்கட்டிக்கொண்டு களத்தில இறங்குங்கோ. ஜஸ்டின் எங்கட வால் வேற தெரியுது எண்டு சொல்லுறார். நாங்கள் வாலைச் சுருட்டி வச்சுக்கொண்டு களத்தில இறங்குவம். இல்லாட்டிக்கு வாலைவச்சு ஆளைக்கண்டுபிடிச்சு போடுவாங்கள். அல்லது வாலில் குண்டை கட்டிவிட்டுடுவாங்கள்.

பலருக்கு தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் இருப்பதுதான் இப்போது இருக்கிற குழப்பத்திற்கு காரணம். முதலில தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கோ. சிங்களவனுக்கு உனக்கு பாடை கட்டுவன் என்று மார்தட்டி சொன்னவர்களை தனது காலை நக்கும்படியான நிலையில கொண்டுவந்து விட்டு இருக்கிறான் சிங்களவன். ஆனால் எங்கடை ஆக்கள் இனித்தான் அடி இருக்கிது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீனம்.

நாங்கள் கடைசிவரை களத்தில இறங்கப்போவது இல்லை. சாகப்போவது யாரோ. தொடர்ந்து விசிலடிக்க ஆயத்தமாய் இருக்கிறம். நீங்கள் குண்டுகளோட இறங்குங்கோ. நீ முன்னால போ தம்பி, நாம் பின்னால நடக்கிறதுகளைப்பற்றி வரலாற்றில பதிஞ்சுவிடுறம். யாராவது ஒருசிலராவது உயிர்தப்பினால்தானே செத்த ஆக்கள் செய்த தியாகங்களைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு (அப்படி ஏதாவது மிஞ்சினால்) சொல்லமுடியும். நாங்கள் அந்த உயிர்தப்பிற தியாகிகள் குழுவில இருந்து உங்கடை இறுதிக்கடமைகளை செய்யுறம்.

நாம் தொடங்கதியது எங்ககேயோ இப்போது இங்கே என்னை கூட்டிவந்து விட்டீர்கள். நாம் விவாதத்தில் தடம் மாறுகிறோம். அல்லது எனது கருத்துக்கள் உங்களால் சரியா புரியபடாது உள்ளது. போராட்டத்தை புறஅரசை நிறுவி புலத்தில் தீவிரமாக முன்னெடுப்பது பற்றி நான் பேசினேன்....... நீங்கள் குண்ணொடு வெடிப்பது நீங்கள் இல்லைதானே என்கின்றீர்கள். குண்டொடு யாரும் வெடிக்க வேண்டாம் என்பதானலேயே நாம் அரசியல் தளம் அமைப்பது பற்றி பேசுகிறோம். உரிமைபோர் என்பது இடைவிடாத போராட்டம் அதில் வெற்றி தோல்வியெல்லாம் கிடையாது. காலத்திற்கு ஏற்ப நாம் வடிவங்களை மாற்றுவோம். நாம் நடந்துவந்த கரடுமுரடான பாதைகளில் பெற்ற அனுபவங்களை முன்நிறுத்தி போரைதொடருவோம் இதுவே எனது கருத்து. நீங்கள் இதை எவ்வாறு விளங்குவீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாது உள்ளது.

இங்கு ஒருவரும் சேறை வாரி எறியும் நோக்கில் எழுதவில்லை. நாம் இதுவரை விட்ட மிகப்பெரிய தவறே விமர்சனங்களை இல்லாதொழித்தது!! எமக்கு சரி, பிழை தெரியவில்லை! உலக ஓட்டம் புரியவில்லை!! ......... முடிபு ....??????

இப்போது ஏற்கிறோமோ, இல்லையோ எமது போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது! இக்காலத்தில் எம் பிழைகளை மீளாய்வு செய்ய தவறுவோமாயின் அழிவு முழுமை பெற்று விடும்!!!

கடந்த காலங்களில் சரியோ பிழையோ ............. எல்லாம் நேராக செல்லும் என்றார்கள்! வேறு கருத்துக்கள் இருந்தாலும் எல்லோரும் ஆதரித்தோம்!! தலைமை விழுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மீளுவோம் என்றார்கள், நம்பிக்கை இல்லா விடினும் அள்ளிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!!! .............. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்!!!!!!!!!!!!!!!!!

நீங்கள் கொஞ்சம் குழம்பிபோய் இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இல்லாவிடில் அடுத்த வரியிலேயே இப்படி தொடராது....

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவை பற்றி இதில் இருப்பவைகளை மீண்டும் வாசிக்க ........... சில நினைவில் ..... என்னைப் பொறுத்தவரை பாலா அண்ணாவை புலிகளின் அரசியல் மதியுரைஞர் என்று அழைக்கிறோம், ஆனால் இம்மாமனிதன் எம்மை செப்பனிட எடுத்த பல முயற்சிகள் பயனற்றுப் போயின, ......... 1984ம் ஆண்டுகளில் புலிகளின் இயக்கத்துக்கு ஒரு பலமான மத்தியகுழு வேண்டும் என் விரும்பினார், புலிகள் இயக்கத்துக்கு ஒரு உறுதியான அரசியல் பிரிவு வேண்டும் என விரும்பினார் ............ அவரால் முடியாமல் போய் விட்டது!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும், பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும், கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும், ஈஸ்தீமோர் ,....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும், அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

ஆனால் எமக்கோ, பெரிய இராணுவ அமைப்பு, அரசியல் பிரிவு இல்லை என்றே கூறலாம். அதனால் எம்மால் உலக ஓட்டத்தை புரியக்கூடிய அளவுக்கு அறிவிருக்கவில்லை. கால ஓட்டத்துக்கு எம்மை மாற்ற முடியவில்லை. இறுதியில் ...........

சில தினங்களுக்கு முன்னம் எனது நண்பனுடன் வேலை செய்யும் ஓர் கறுப்பினத்தவன் கூறினானாம் ........

............"உங்களின் அழிவு, உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

உங்களின் உலக அறிவு இதுதான் என்றால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். கோசோவா கிழக்கு தீமோர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள நிறை உண்டு என்றாலும். றுவாண்டா இனபடுகொலைபற்றி நீங்கள் தெரிந்துகொள் முயற்சி செய்தால் பல விடயங்களை தெரிந்துகொள்ளலாம்.

தற்போதைய அமெரிக்க அரசுகளால் ஈராக்கியாலும்விட பாதிக்கபடுபவர்கள் அமெரிக்கநாட்டவர்களே என்று சொன்னால் உங்களால் எளிதாக புரிய முடியாது. அதற்காக உண்மை அதுவன்றி ஆகாது. தற்கால உலக அரசியலை உற்றுபார்த்தால்தான் நாம் தோற்றோமா வென்றோமா என்பது தெரியும். உலகை யார் ஆட்டுகிறார்கள் யார் ஆளுகிறார்கள் என்ற பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு தேவை.

மிகவும் ஆழமான உண்மை.

............"உங்களின் அழிவு, உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

சிங்களவர்கள் மட்டும் தமிழர்களை கொல்வதில்லை தமிழரின் முரண்பாடுகளால் எழுந்த வேற்றுமை உணர்வுகள் சக மனிதனை கொன்றொழிப்பதற்கு அதிகம் தயங்குவதில்லை. சமூகத்தினுள்ளான போட்டி நிலைக்காக வாழ்ந்த பிரதேசங்களை துறந்து வெளியேறத் தயங்குவதில்லை. மதப்பிளவுகளுக்காக கொல்லத் தயங்குவதில்லை. பிரதேசவாதப் பிளவுகள். மேலாண்மை. புத்திஜீவிதக் கர்வம். இவ்வாறு பலவுமான முரண்பாடுகளை கடந்து இனமாக ஒருவரை ஒருவர் நேசித்து ஒன்றுபடும் அடிப்படை மனப்பான்மையை இழந்து நிற்கின்றது தமிழினம். இந்த முரண்பாடுகளில் இருந்து புலிகள் உட்பட எந்த இயக்கமும் அமைப்பும் தனிமனிதனும் இன்னும் வெளியில் வரவில்லை.

தமிழை பேசுவதால் நாம் ஒரு இனமாக பீத்திக் கொள்ள முடியாது. நாம் ஒரு இனம் என்பது ஒரு பம்மாத்து தவிர ஆத்மார்த்தமான உண்மை கிடையாது. தமிழன் என்ற காரணத்துக்காக பள்ளனும் வெள்ளாளனும் சம்மந்தியாகப் போகின்றார்களா? இஸ்லாமியனும் இந்துவும் சம்மந்தியாகப்போகின்றார்களா? மாற்றியக்கமும் புலியும் ஒன்றாப்போகின்றார்களா? குதர்க்கம் பேசும் புத்திஜீவிகள் அனுசரித்து நடந்து கொள்ளப்போகின்றார்களா? எதுவும் இல்லை. நாம் ஒருவன் சட்டையை மற்றவன் பிடித்து கடிபட்டு குத்துப்படுகின்றோம் ஆனால் தமிழில் பேசிக் குத்துப்படுகின்றோம் கடிபடுகின்றோம். அதற்காக தமிழர் என்கின்றோம்.

நாளைக்கே சர்வதேச நாடுகளுக்கும் இலங்கைக்கும் முரண்பாடு வந்து தமிழர்களிடம் வாக்கெடுத்து அவர்கள் பிரிந்து போக விரும்பின் போகட்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதில் தமிழன் படுதோல்வி அடைவது நிச்சயமானது. இஸ்லாமிய தமிழர்கள் மலையக தமிழர்கள் பிரதேசவதத்தை முன்நிறுத்தும் தமிழர்கள் மாற்றுச் சிந்தனை உள்ள தமிழர்கள் தென்னிலங்கை வாழ் தமிழர்கள் எவரும் பிரிவினை கோரி வாக்களிக்;கப்போவதில்லை.

எமக்குள்ளான முரண்பாடுகள் தீர்க்கப்படுதல். எமது பிரதேசங்களில் நாம் வாழும் எண்ணம் பெறுதல். ஒருவரை ஒருவர் நேசித்தல் போன்ற பல நிலைகளை ஏற்படுத்த போராடுதலே இன்றய காலம். பம்மாத்தின்றி இனமாக உருவமதலே நாளை ஒரு சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் இல்லையேல் அதுவும் நடக்காது.

மிகவும் நிதர்சனமான உண்மை

ஆகக் குறைந்தது சக கருத்தாளரை கூட மதிக்கத் தெரியாமல் பன்றி என்றும் சாக்கடை என்றும், சரணடைந்த போராளிகளை விபச்சாரிகள் என்றும் சொல்லித் திரிகின்ற மக்களை கொண்ட எம் ஈனச் சமூகத்திற்கு என்ன இழவுக்கு தேசம் என்ற ஒன்று தேவை?

என்னைக் கேட்டால், பிரபாகரன் செய்த மாபெரும் தவறு...இந்த கேடு கெட்ட சமூகத்திற்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து போராட வெளிக்கிட்டது

தமிழனாய் பிறந்ததிற்காய் வெட்கித் தலை குனிகின்றேன்

... தற்போதைய அமெரிக்க அரசுகளால் ஈராக்கியாலும்விட பாதிக்கபடுபவர்கள் அமெரிக்கநாட்டவர்களே என்று சொன்னால் உங்களால் எளிதாக புரிய முடியாது. அதற்காக உண்மை அதுவன்றி ஆகாது. தற்கால உலக அரசியலை உற்றுபார்த்தால்தான் நாம் தோற்றோமா வென்றோமா என்பது தெரியும்.

300,000 பேர் சிறைக்குள்ளே இதை விட உயிர், நிலம் மற்றும் பொருள் இழப்புகள் கணக்கே எடுக்க முடியாத நிலை. இதுக்குள்ளை உத்துப் பாத்து என்ன தெரியப் போகுது.

நீங்கள்தான் இப்படி சொல்லி இருந்தீங்கள் மருதங்கேணி:

"இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று அடிமைவாழ்வு மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர்."

இதன் அடிப்படையில் என்னால் மேற்கூறிய பதில்கருத்தையே கூறமுடிந்தது. வெறுமையிலும் மானத்திற்கான போர் என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அங்கே தாயகத்தில் எமது உறவுகள் தயாராக இருக்கின்றார்களா? அப்படியாயின் ஆயிரக்கணக்கில் போராளிகளும், மக்களும் ஏன் சரண் அடைந்தார்கள்? மானத்துடன் இறந்து மடிந்து இருக்கலாமே? எல்லாம் வெறுமையாகி போயிருக்கலாமே? ஏன் கடைசியில் கையைத் தூக்கினார்கள்? வெறுமை வந்தாலும் மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் இப்படி செய்யமாட்டானே?

அப்படியாயின், இதன்மூலம் நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டியது என்ன? மானம் மண்ணாங்கட்டி என்று ஒருதரம் கத்துவதும், பின்னர் தோல்விவரும்நிலையில் கையைத்தூக்கும்போது ராஜதந்திரம் என்று சொல்வதும் எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொள்ளவே உதவும். உயர்ந்த மானத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவன் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு எதிரியின் கால்களில்போய் விழுந்து கெஞ்சுவானா?

ஆனால்... தாயகத்தில் நடந்தது என்ன? மானம் என்பதற்கு மேலாக - உணவு, உடை, உறையுள்: உயிர் வாழ்வு, மனிதம், நிம்மதி என பல தேவைகள் இருந்து இருக்கின்றது. இனியாவது இந்த தேவைகளின் அடிப்படையில், இந்த தேவைகளை பூர்த்திசெய்யும்வகையில் சிந்தனைகளை முன்னெடுப்போம்.

Edited by கலைஞன்

மருதங்கேணி !!

எமது உள்ளகத்தில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் எமது இனத்திற்க்கு விடுதலை இல்லை என்பதே உண்மை. உள்ளகப் பிரச்சனையே இனத்தை சிதைத்து சீரளித்து உருவமற்றதாக்கி விட்டுள்ளது. இவைகள் உங்களுக்கு சாதராணமாக தெரியலாம் ஆனால் இவைகள் சிங்கள இனவாதத்துக்கு ஒப்பானது அல்லது அதை விட அதிகப்படியானது.

கருணா என்ற தனிமனிதனின் தவறுக்காக தண்டனை கொடுக்க முனைந்த போது எவ்வாறு பிரதேசவாதம் கிழம்பியது? அதற்கு முன்னர் கருணா வன்னியில் சண்டைகள் பல பிடித்து வன்னி மக்கள் கருணாவை தோழில் தூக்கி ஊர்வலம் போனார்கள். அப்போதெல்லாம் வடக்கென்ன கிழக்கென்ன எல்லாம் தமிழீழம் எல்லோரும் தமிழர்கள் என்றுதான் இருந்தது. அது உண்மையல்ல. பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பூசி மொழுகிய நிலையே ஆகும். உரிய நேரத்தில் பிரதேசவாதப்பூதம் கிழம்பியது.

இஸ்லாமியத் தமிழர்கள் பெருந்தொகையானோர் என்று கருதாமல் எடுத்தேன் கவுத்தேன் என்று கையாண்டது இனம் மதமாக பிளந்தது.

எம்மில் எவ்வளவு தூரம் ஓற்றுமை? ஒரு இஸ்லாமியத் தமிழன் இந்துத் தமிழனை கொல்வான் அல்லது இந்து இஸ்லாமியத் தமிழனை கொல்வான். இதைச் செய்வதற்க்கு மதம் போதுமானது. இதை தடுப்பதற்கு இன உணர்வு வக்கற்றது. இதே தான் யாழ்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற உணர்வும் ஆகும்.

கனடாவின் சி ரி அர் வானொலியில் எத்தனை இஸ்லாமியத் தமிழர்கள் கிழக்கு தமிழர்கள் பணியாற்றுகின்றார்கள் எத்தனை பேர் நேயர்கள்? யாழ்க்களத்தில் எத்தனை பேர்?

நாம் எந்த நிலையில் உள்ளோம்? இனம் எந்த நிலையில் உள்ளது? புறநிலை அரசு என்பது சாதி மதம் வர்க்கம் புத்திஜீவித மேலாண்மை கடந்த ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசையாக உருவாக எந்த அடிப்படையும் இல்லை. இந்த அடிப்படை இல்லாமல் ஒரு சாராரின் மேலாண்மை எண்ணத்தின் விருப்பாக உருவாகும் புறநிலை அரசால் எந்த பிரயோசனமும் இல்லை. அதை சிதைக்க சிங்களவன் மினைக்கடத் தேவை இல்லை. நாமே சிதைப்போம். ஏனெனில் இது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பாக இல்லை. தமிழன் ஒன்றாக இல்லை.

தாய் நாடு மீதான பற்று என்பது தேவை சார்ந்தது. எமக்கு நிலம் வேணும் விவசாயம் செய்ய கடல் வேணும் மீன்பிடித் தொழில் செய்ய. இதனை விட வெளிநாடு போனால் அதிகமாக உழைக்கலாம் என்னும் போது நிலமும் கடலும் முக்கியத்துவம் அற்றதாகின்றது. தேவைகளை நிவர்த்தி செய்ய என்னுமொரு மொழி தேவைப்படுகின்றது. எமக்கு வெளிநாடு முக்கியம். எம்மைப்பார்த்து நாட்டில் உள்ள சனங்களுக்கு முக்கியமாகின்றது. பற்று என்பது தேவைசார்ந்தது. அப்படி இல்லை எனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கொஞ்சமாவது தாயகம் சென்று ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்திருப்பார்கள். யதார்த்தம் தேவை சார்நத அசைவில் இருந்து விலக முடியாது உள்ளது. தமிழீழம் என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு விருப்பமானது தவிர தேவையானது என்பது இரண்டாம் படச்சமானது. எனவே தமிழீழத்துக்கான செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைகின்றது.

இனத்துக்குள் இருக்கும் பிரதேசவாதம் சாதி மத வர்க்கப் பிளவுகள் மேலாண்மைநிலை போன்றனவும் அவை வளர்த்து விட்ட மனோபாவமும் என்றைக்கும் ஒன்றுபட முடியாதது. தேவைகளை தீர்ப்பது என்ற இலக்கு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுதல் என்ற திசையை நாடி நிற்கின்றது. எந்த ஒரு இனவாத வன்முறைக்கு ஊடகவேனும் படித்து பட்டம்பெற்று உத்தியோகம் நாடி நிற்கின்றது. இவ்வாறான சிக்கல்கள் சிங்களவனுக்கு அடிமையாதலை ஒரு பொருட்டாக காட்ட மாட்டாது. சாதி மத வர்க்க மேலாண்மைகளால் சிதைந்த தமிழ்த்தேசியவாதம் தேவை சார்ந்த வெளியேற்றங்களால் மேலும் சிதைகின்றது.

நான் மேலே குறிப்பிடும் மனோபாவம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதுகின்றேன். 32 க்கும் மேற்பட்ட இயக்கங்களின் உருவாக்கமும் அது ஒன்றுபட முடியாமல் போனதும் இந்த மனோபாவத்தினை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

பானையில் உள்ளதே அகப்பையில் வரும் என்றதுபோல் இந்த மனோபாவம் முரண்பாடுகளில் இருந்து புலிகள் இயக்கமும் மீளவில்லை. இது புலிகளின் குற்றம் என்பதை விட இனத்தின் இயல்பு என்பதே பொருத்தமானது.

உன்னத தலைவனை கொண்ட தியாகத்தின் எல்லை கடந்து சென்ற போராட்டம் சிலரின் மேலாண்மைக் கனவுகளால் அழிந்தது என்பதே உண்மையானது. ஒருகாலத்தில் சிறந்த படையணிகளை கொண்ட மன்னார் மாவட்டம் ஓரிரு நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போனது. தளபதிகள் சிறைக்குச் சென்றனர் காசுப்பிரச்சனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு மன்னார் மாவட்டமே ஒத்திசைந்து துடித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்து விலகிப்போனது. இவ்வாறுதான் பின்னாளில் கிழக்கிலும் நடந்தது. இன்று காவியமாகிப்போன பல்வேறு தளபதில் நேற்று ஒரு நாள் அல்லது பல நாள் பல மாதங்கள் சிறையில் இருந்தது உண்மை. அப்போதும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது. நேற்றும் தீபன் நீட்டிய கைகளை தொட மறுத்த கணங்கள் உண்டு.றி

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று அறிவதற்கு அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப்பார் என்பார்கள். தலைவன் அறிந்து கொள்ள சந்தர்ப்பமே இருக்கவில்லை. தலைவன் அகவிளக்கேற்றி அழுத முகத்தோடு நின்ற காட்சிகள் அவனின் மனட்சாட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இனம் குறித்தது என்பதை புரிந்து கொள்ள போதுமானது. சுழல் நாற்காலியில் சுழன்றபடி காவியமான வீரர்களைப்பற்றி கதைத்தவன் மேலாண்மையின் அடையாளம்.

இயக்கத்திலும் சரி மக்களிலும் சரி மேல்வர்க்கம் நழுவிக்கொள்ளும். இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது வறிய உழைக்கும் மக்களே. எல்லாமிழந்த நலிந்த வன்னி மக்களே. இந்த நிகழ்வுகளின் ஊடே கொழும்பில் பரத நாட்டியமும் யாழில் தேரிழுப்பும் கிரிக்கெட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. எவன் நழுவினும்; வேலியே பயிரை மேயினும் மக்களுக்கான தலைவன் மக்கள் மடிந்த இடத்திலே மடிந்து கிடந்தான்.

மக்கள் ஒன்றுபட முயற்ச்சிக்காமல் மேலாண்மையின் விருப்பாக உருவாக்கப்படும் எந்த ஒரு அமைப்பையும் பணிகளையும் எதிர்ப்பது பேதங்களுக்கு அப்பால் மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. அது புறநிலை அரசாகினும் எந்த அரசாகினும் மீண்டும் ஒரு ஆயுதப்போராகினும் எதிர்ப்பது கடமை. அதற்காக மேலாண்மை வாதிகளிடம் துரோகிப்பட்ம் பெறுவது ஒரு பொருட்டல்ல. உழைக்கும் மக்களை அழிக்க முனைந்தவர்களே துரோகிகள் ஆக முடியும் என்பதை காலம் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னத தலைவனை கொண்ட தியாகத்தின் எல்லை கடந்து சென்ற போராட்டம் சிலரின் மேலாண்மைக் கனவுகளால் அழிந்தது என்பதே உண்மையானது. ஒருகாலத்தில் சிறந்த படையணிகளை கொண்ட மன்னார் மாவட்டம் ஓரிரு நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போனது. தளபதிகள் சிறைக்குச் சென்றனர் காசுப்பிரச்சனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு மன்னார் மாவட்டமே ஒத்திசைந்து துடித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்து விலகிப்போனது. இவ்வாறுதான் பின்னாளில் கிழக்கிலும் நடந்தது. இன்று காவியமாகிப்போன பல்வேறு தளபதில் நேற்று ஒரு நாள் அல்லது பல நாள் பல மாதங்கள் சிறையில் இருந்தது உண்மை. அப்போதும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது. நேற்றும் தீபன் நீட்டிய கைகளை தொட மறுத்த கணங்கள் உண்டு.றி

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று அறிவதற்கு அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப்பார் என்பார்கள். தலைவன் அறிந்து கொள்ள சந்தர்ப்பமே இருக்கவில்லை. தலைவன் அகவிளக்கேற்றி அழுத முகத்தோடு நின்ற காட்சிகள் அவனின் மனட்சாட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இனம் குறித்தது என்பதை புரிந்து கொள்ள போதுமானது. சுழல் நாற்காலியில் சுழன்றபடி காவியமான வீரர்களைப்பற்றி கதைத்தவன் மேலாண்மையின் அடையாளம்.

இயக்கத்திலும் சரி மக்களிலும் சரி மேல்வர்க்கம் நழுவிக்கொள்ளும். இறுதியில் சிலுவையில் அறையப்பட்டது வறிய உழைக்கும் மக்களே. எல்லாமிழந்த நலிந்த வன்னி மக்களே. இந்த நிகழ்வுகளின் ஊடே கொழும்பில் பரத நாட்டியமும் யாழில் தேரிழுப்பும் கிரிக்கெட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. எவன் நழுவினும்; வேலியே பயிரை மேயினும் மக்களுக்கான தலைவன் மக்கள் மடிந்த இடத்திலே மடிந்து கிடந்தான்.

உண்மையான வார்த்தைகள் .. விடுதலைக்கான போரை அழித்தது எதிரியல்ல சில மேலாதிக்க தமிழர்களின் தவறான வழிநடத்தல்கள்தான் அதற்கு அரிதாய் கிடைத்த ஒரு தலைவனும் பலியாக்கப்பட்டுவிட்டான்..

நீங்கள்தான் இப்படி சொல்லி இருந்தீங்கள் மருதங்கேணி:

"இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று அடிமைவாழ்வு மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர்."

இதன் அடிப்படையில் என்னால் மேற்கூறிய பதில்கருத்தையே கூறமுடிந்தது. வெறுமையிலும் மானத்திற்கான போர் என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அங்கே தாயகத்தில் எமது உறவுகள் தயாராக இருக்கின்றார்களா? அப்படியாயின் ஆயிரக்கணக்கில் போராளிகளும், மக்களும் ஏன் சரண் அடைந்தார்கள்? மானத்துடன் இறந்து மடிந்து இருக்கலாமே? எல்லாம் வெறுமையாகி போயிருக்கலாமே? ஏன் கடைசியில் கையைத் தூக்கினார்கள்? வெறுமை வந்தாலும் மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் இப்படி செய்யமாட்டானே?

அப்படியாயின், இதன்மூலம் நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டியது என்ன? மானம் மண்ணாங்கட்டி என்று ஒருதரம் கத்துவதும், பின்னர் தோல்விவரும்நிலையில் கையைத்தூக்கும்போது ராஜதந்திரம் என்று சொல்வதும் எங்களையே நாங்கள் ஏமாற்றிக்கொள்ளவே உதவும். உயர்ந்த மானத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவன் ராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு எதிரியின் கால்களில்போய் விழுந்து கெஞ்சுவானா?

ஆனால்... தாயகத்தில் நடந்தது என்ன? மானம் என்பதற்கு மேலாக - உணவு, உடை, உறையுள்: உயிர் வாழ்வு, மனிதம், நிம்மதி என பல தேவைகள் இருந்து இருக்கின்றது. இனியாவது இந்த தேவைகளின் அடிப்படையில், இந்த தேவைகளை பூர்த்திசெய்யும்வகையில் சிந்தனைகளை முன்னெடுப்போம்.

"இப்போது எம்மிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன ஒன்று ....... மற்றது வெறுமையிலும் மானத்திற்கான போர்."

இதனை அங்குள்ள மக்கள் விரும்புகிறார்களா??????????

இல்லவே இல்லை!!!

நாங்கள் புலத்தில் போலியான கற்பனையில் உதை தொடருவோம்!!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.