Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமை இனிமையான‌தா அல்லது கொடுமையானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கோயிலில் ஒரு வயோதிபரை சந்தித்தேன்.அவருக்கு சுமார் 50லிருந்து 60ற்குள் இருக்கலாம் என நினைக்கிறேன்.அவர் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் நான் பதிலுக்கு அவருடன் தமிழில் கதைக்கும் போது அவர் சொன்னார் தான் தமிழன் எனவும்,தான் யாழை சேர்ந்தவர் எனவும் சின்ன வயதில் 58ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது தனது பெற்றோர் கொல்லப்பட தான் நாட்டை விட்டு வெளியேறிதாகவும் தன்னோடு தமிழில் கதைப்பதற்கு ஒருவரும் இல்லாத படியால் தன்னால் தமிழில் கதைக்க முடியாது எனவும் ஆனால் கொஞ்சம்,கொஞ்சம் விளங்கிக் கொள்ள முடியும் எனவும் சொன்னார்.தனக்கு தமிழ் கதைக்கவும்,தமிழரோடு பழகவும் ஆசையாய் உள்ளதாக சொன்னார்.

எனது நண்பி சொன்னார் அவர் லண்டனில் இருந்து தூரத்தில் இருக்கிறார்.அவவுக்கு தெரிந்த தாத்தாவும்,பாட்டியும் 70களில் லண்டனில் குடியேறியவர்கள்.படித்தவர்கள்.ஆங்கில மொழியில் மட்டும் தங்கள் குழந்தைகளோடு உரையாடியவர்கள்.பிள்ளைகள் வீட்டை விட்டு சென்றதும்,அவர்கள் தங்கள் வேலையில் இருந்து இளைப்பாறிய பிறகு தான் அவர்களுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய தப்பு செய்து இருக்கிறோம் என புரிந்தது...பிள்ளைகளை தமிழ் முறைப்படி வளர்க்காததும்,தமிழை வீட்டில் சொல்லி கொடுக்காததாலும் அவர்கள் தாங்கள் யாருடனாவது தாங்கள் தமிழில் பேச மாட்டோமா என ஏங்குகிறார்களாம்.

என்க்கு தெரிஞ்ச ஒரு அண்ணா வெள்ளை இனப் பெண்ணை மணம் முடித்திருக்கிறார்.அவருக்கு தற்போது பதின்ம வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஆனாலும் அந்த அண்ணா வேற்று நாட்டுப் பெண்ணை மணம் முடித்ததால் அவளால் என்னை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடியவில்லை,தமிழில் மனைவியோடு கதைக்க முடியவில்லை[முக்கியமாய் திட்ட முடியவில்லை]இப்பவும் கவலைப்படுவார்.

நான் முக்கியமாய் இதில் எழுத வந்தது தனிமை அவ்வளவு கொடுமையானதா?இளமையாய் இருக்கும் போது படிப்பு,வேலை,நண்பர்களுடன் சுற்றுதல் போன்றவற்றால் அவ்வளவு தெரிவதில்லை.ஆனால் முதிய பிராயம் வந்த உடன் எல்லோரும் உணரத் தொடங்குறார்கள் என நினைக்கிறேன்.இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ரதி உங்களிட்டை ஒரு கேள்வி ஐம்பதுக்கும் அறுபதுக்கும் இடைப்பட்ட வயதில் ஒரு "வயோதிபரை" சந்தித்ததாக கருத்திட்டுள்ளீர்கள் வயோதிக வயதெண்டால் ஐம்பது தாண்டியதும் கணக்கில் கொள்வீர்களா அது எங்கத்தை வழக்கம். அப்ப நான்........? ஐயோ கடவுளே!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை இருந்தாலும் தன நாளை முழு ஈடுபாட்டுடன் வாழ்ந்தால் தனிமை தெரியாது. நாளை திட்ட் மிட்டு சில சமூக உறவுகளுடன் கலந்து பேசி ஈடுபடால் தனிமை தெரியாது. ஆனால் நெருங்கிய நட்பு இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் தேடும் அக்கறை இருக்கவேண்டும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் . ஆபத்தில் உதவும் கரங்கள் தேவை. பிரச்சனைகளை கலந்தாலோசிக்க் உறவு தேவை. அது நட்பாகவும் இருக்கலாம். தனிமை கொடியது அதை கவனமாக் கையாள தெரியாவிடால். எல்லோரும் தனித்தனியே இருக்க நினைத்தால் ....? மனிதன் ஒரு சமுதாய பிராணி .ஆசை பாசம் நேசம் தேவை. .மிருகங்கள் கூட கூட்டமாக் தான் வாழ்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில், தனிமை மிகவும் கொடியது. :D

எனக்கு எப்போதும் வீட்டில் ஒருவராவது இருக்கவேண்டும் என்றே... விரும்புவேன்.

தற்செயலாக எல்லோரும் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே சென்று இருக்கும் போது....

என்னால் ஒரு இடத்தில் இருக்க மனம் பிடிக்காமல், ஜன்னலுக்கு வெளியே, பார்ப்பதும், நேரத்தை பார்பதுமாக இருப்பேன்.

நாங்கள் தாய், தகப்பனை பிரிந்து வெளிநாடு வந்த போது.... பெற்றோர் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்று நினைக்க வேதனையாக உள்ளது.

எதிர் காலத்தில் பிள்ளைகளை பிரிந்து இருப்பதில்லை என்று.... நானும், மனைவியும் இப்போதே... முடிவு எடுத்துள்ளோம்.

அப்படியும்.... படிப்பு, வேலை, திருமணம் என்று பிரிய நேரிட்டால்.... அதை தாங்கும் சக்தி, எமக்கு உள்ளதா என்பது கேள்விக்குறி. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி தனிமை இனிமையானது என்று நினைக்கமுடியும்?

எனவே கேள்வியின் ஆரம்பமே தப்பாக ஆரம்பிக்கிறது

எனவே...........???

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால் தனிமை அலுப்பின்றி இருக்கும் என்று நினைக்கின்றேன். அல்லது ஒரு சீட்டுப் பிடித்துப் பாருங்களேன். 7 / 7 போனும், வீடும் கல கலவென்றிருக்கும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை கொடுமையானது என்பது உண்மை தான் ஆனால் சில நேரங்களில் நான் தனிமையாக இருக்க விரும்புவதுண்டு. ஏதாவது பிரச்சனையில் இருக்கும் போது யாராவது தொண தொண என்று பக்கத்தில் இருப்பது பிடிக்காது. மற்றையது தனிமையிலே புத்தகம் வாசித்தல் இசையை கேட்டல் என்பது மிகவும் பிடிக்கும் :D . கலியாணம் கட்டமுன்னர் தனிமையின் ருசி தெரியாது எண்டு பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் :D .

முடிவு - இளவயதிலே தனிமை இனிமை, முதிர்வயதிலே தனிமை கொடுமை :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் ஒருவருக்கும் தனிமை விருப்பம் இல்லை.

அதுசரி ரதி உங்களிட்டை ஒரு கேள்வி ஐம்பதுக்கும் அறுபதுக்கும் இடைப்பட்ட வயதில் ஒரு "வயோதிபரை" சந்தித்ததாக கருத்திட்டுள்ளீர்கள் வயோதிக வயதெண்டால் ஐம்பது தாண்டியதும் கணக்கில் கொள்வீர்களா அது எங்கத்தை வழக்கம். அப்ப நான்........? ஐயோ கடவுளே!!!!

50ற்கும் 60ற்கும் இடைப்பட்டோர் முதியோர் இல்லையா? ...மன்னித்து கொள்ளுங்கோ தெரியாமல் எழுதிப் போட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை இனிமையாவது அதனை நீங்கள் எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. ஒருவர் தனிமையில் இருக்கிறார் என்றால் அவர் சமூகத்தை விட்டு தனித்து தனி உலகில் வாழ்கிறார் என்பதல்ல அர்த்தம்.

அவரும் இதே சமூகத்தோடு தான் ஆனால் வேறுபட்ட வடிவில் வாழ்கிறார். அந்த வடிவத்தை அவர் தனக்கு மகிழ்ச்சிக்குரிய வழியில் வடிவமைத்துக் கொண்டால் தனிமை.. குடும்ப வாழ்வை விட சுவாரசியம் கூடியது.. மன அழுத்தங்கள் தரவல்ல பிரச்சனைகள் குறைந்தது எனக் கொள்ளலாம்.

ஆனால் குடும்ப வாழ்வை முன்னிறுத்தும் சமூகக் கட்டமைப்பில் தனிமையில் வாழ்பவர்களை இழக்காரப்படுத்தும் நிகழ்வுகள் நடப்பதை கண்டிருக்கிறேன். இதை மாற்றனும் என்பதற்காகவே நான் தனிய வாழ்ந்து பார்க்கப் போகிறேன்.

சவாலை எதிர்கொள்ள ஒரு துணிச்சலும் தியாகமும் அவசியம்... என்பதையெல்லாம் கடந்து மனதில் உறுதி வேண்டும்.. தனிமையை மகிழ்ச்சி ஆக்குவது அவரவர் மனநிலையில் உள்ளதே அன்றி.. குடும்பமாய் சீரழிஞ்சாலும்.. தனிய இருந்து கஸ்டப்பட்டாலும்.. சமூகம்.. ஒன்றும் வெட்டி விழுத்தப் போறதில்லை... இதுதான் உண்மை. சமூகம் அடுத்தவரின் வாழ்க்கையை தீர்மானிக்க அனுமதிப்பதிலும் அவரே தனது வாழ்க்கையை தீர்மானிப்பதுதான் அழகும்.. பயனும் ஆகும்.

எனவே வாழும் வாழ்க்கை எந்த வகையில் அதிகம் மகிழ்வைத் தருகிறதோ அந்த வகையில்.. தனிமை என்றால் அதிலேயே வாழ்ந்தும் பார்க்கலாம். அது தவறல்ல. :unsure::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு - இளவயதிலே தனிமை இனிமை, முதிர்வயதிலே தனிமை கொடுமை :lol:

ஆமென்..! ரைட்டு..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு - இளவயதிலே தனிமை இனிமை, முதிர்வயதிலே தனிமை கொடுமை :lol:

அப்படிச் சொல்ல முடியாது. தற்போதைய மனித சமூகக் கட்டமைப்பில் இளமைக்கு அளிக்கும் முக்கியத்துவம் முதுமைக்கு அளிக்கப்படுவதில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்க முடியாது. காரணம்.. உலக சனத்தொகைப் பெருக்கம்.. இயற்கை வளக் குறைவு.. பிறப்பு வீதத்தை குறைக்க வைத்துள்ளது. இது முதியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு முதுமையை இனிமையாக்கி வைத்திருக்க வேண்டிய நிலைக்கு மனிதனை இட்டுச் செல்லும். அப்போது இன்று இளமையை இனிமையாகக் கழிக்க உள்ளது போன்று முதுமையை இனிமையாகக் கழிக்க வழிகள் உருவாக்கப்படும்.

இன்று கம்பியூட்டர் கேம் உலகில் இளையவர்கள் அதிகம் உள்ள நிலை அவர்கள் நாளை முதியோர் ஆகும் போது அது முதுமைக்குள்ளும் புகுத்தப்படும். இனிமை மாற்றங்கள் காணும்.. இன்னும் இன்னும் புதிய வழிமுறைகள் முதுமையை இனிமையாக்க வரும்.

அப்போது.. முதுமை.. இன்னும் இனிமையாகும்.. அல்லது நாம் அதை ஆக்க இன்றே இளமையில் உள்ளபோதே திட்டமிட்டு செயற்படனும்.

குடும்ப வாழ்க்கை முதுமையில் இனிமை தரும் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. ஏனெனில் குடும்ப வாழ்க்கையில் இளமைக் காலத்தை குழந்தைகளோடு கழிக்கும் பலர்.. முதுமையில் தனிமையில் கிடந்து உழல்வதை கண்டிருக்கிறோம். அதைவிட அவர்களே இளமையிலும் தனிமைக்கு பண்பட்டுவிட்டால்.. முதுமையிலும் அதை இனிமையாக்கிக் கொள்ள முடியும். வாழ்க்கை சாகும் வரை சுவாரசியமா இருக்கும். குடும்ப வாழ்க்கை இதற்குப் பெரிய தடை. :blink::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை வெறுமை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் மிக விரும்புவது தனிமையை மாத்திரமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால் தனிமை அலுப்பின்றி இருக்கும் என்று நினைக்கின்றேன். அல்லது ஒரு சீட்டுப் பிடித்துப் பாருங்களேன். 7 / 7 போனும், வீடும் கல கலவென்றிருக்கும்! :lol:

அது என்ன.... சுவி, 7/7 ......?

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை வெறுமை என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் மிக விரும்புவது தனிமையை மாத்திரமே.

எனக்கு கூட்டத்தில் தனிமையாக இருக்கப் பிடிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூட்டத்தில் தனிமையாக இருக்கப் பிடிக்கும்!

மற்றவர்களை அவதானிக்கும் சக்தி, என்று நினைக்கின்றேன் கிருபன். :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை அவதானிக்கும் சக்தி, என்று நினைக்கின்றேன் கிருபன். :unsure::blink:

கோடை காலத்தில் பரபரப்பான லண்டன் நகரின் "பிக்காடில்லி" பகுதி அல்லது புறாக்கள் பறக்கும் "ரவல்கர்" சதுக்கத்தில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். இதைப் பேச்சுவாக்கில் வேலைசெய்யும் இடத்தில் ஒருவனுக்குச் சொல்லப் போக,அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து இப்படியான செயல் "stalking" (பிறரை அவர்கள் அசூசை கொள்ளுத்தக்க மாதிரிப் பின்தொடர்தல்) அல்லது "voyeurism" (மற்றையோரின் அந்தரங்கச் செயற்பாடுகளை மறைந்திருந்து பார்த்தல்) என்பவற்றுக்குள் அடங்கும் என்றான். நானோ பிறரைத் பின்தொடராமல் ஓரிடத்தில் இருந்தபடியே வேடிக்கை பார்ப்பது "stalking" ஆகாது என்றும், பொது இடத்தில் அந்தரங்கமான செயற்பாடுகள் இல்லாதபடியால் "voyeurism" இல்லை என்றும் வாதிட்டேன். ஆனால் கொஞ்சம் சந்தேகம் வந்துதான் விட்டது! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முக்கியமாக தனிமை என குறிப்பிட்டது ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்யாமல் தனித்து வாழ்வது பற்றி தான்.அந்த வாழ்க்கை இளமையில் இன்பமாக இருந்தாலும் முதுமையில் கஸ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்.ஆண்களுக்குப் பிரச்சனை இல்லை அவர்கள் மணம் முடிக்கா விட்டாலும் இச் சமூதாயத்தில் தனித்து வாழ முடியும் ஆனால் பெண்களால் அப்படி இருக்க முடியுமா என்பது தான் எனது கேள்வி?

எனக்கு கூட்டத்தில் தனிமையாக இருக்கப் பிடிக்கும்!

எனக்கும் மற்றவர் பேசுவதைக் கேட்கவும்,அவதானிக்கவும் பிடிக்கும்[அவர்கள் என்னை கதைக்க விடுறதில்லை என்பது வேற விசயம்.]அதுவும் ஒரு விசயமும் தெரியாத மாதிரி மற்றவர் சொல்கையில் நான் கேட்க ரொம்ப பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தமிழ் கதைக்கவும்,தமிழரோடு பழகவும் ஆசையாய் உள்ளதாக சொன்னார்.

தமிழர்கள் அருகில் வசிக்கக்கூடாது என்றே விலகி விலகி போய் வாழத்தலைப்பட்ட பல குடும்பங்கள் சிந்திக்க தொடங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கோடை காலத்தில் பரபரப்பான லண்டன் நகரின் "பிக்காடில்லி" பகுதி அல்லது புறாக்கள் பறக்கும் "ரவல்கர்" சதுக்கத்தில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். இதைப் பேச்சுவாக்கில் வேலைசெய்யும் இடத்தில் ஒருவனுக்குச் சொல்லப் போக,அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து இப்படியான செயல் "stalking" (பிறரை அவர்கள் அசூசை கொள்ளுத்தக்க மாதிரிப் பின்தொடர்தல்) அல்லது "voyeurism" (மற்றையோரின் அந்தரங்கச் செயற்பாடுகளை மறைந்திருந்து பார்த்தல்) என்பவற்றுக்குள் அடங்கும் என்றான். நானோ பிறரைத் பின்தொடராமல் ஓரிடத்தில் இருந்தபடியே வேடிக்கை பார்ப்பது "stalking" ஆகாது என்றும், பொது இடத்தில் அந்தரங்கமான செயற்பாடுகள் இல்லாதபடியால் "voyeurism" இல்லை என்றும் வாதிட்டேன். ஆனால் கொஞ்சம் சந்தேகம் வந்துதான் விட்டது! :lol:

"லண்டன் பிகாடில்லையிலை நானும் புறாவுக்கு சோளப் பொரி போட்டனான்"

அந்த... நாலு சிங்கம் வாயை பிளந்து கொண்டு நிற்கிற இடம் தானே.

பொது இடத்தில் யாரும், யாரையும் பார்க்கலாம். அதற்காக..... உற்றுப் பார்க்கக் கூடாது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"லண்டன் பிகாடில்லையிலை நானும் புறாவுக்கு சோளப் பொரி போட்டனான்"

அந்த... நாலு சிங்கம் வாயை பிளந்து கொண்டு நிற்கிற இடம் தானே.

பொது இடத்தில் யாரும், யாரையும் பார்க்கலாம். அதற்காக..... உற்றுப் பார்க்கக் கூடாது. :unsure:

கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு குந்தியிருக்கலாம்..! :lol::blink:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு குந்தியிருக்கலாம்..! :lol::blink:

கறுப்புக் கண்ணாடி இல்லாமல் கோடையில் வெளியே போகமுடியுமா என்ன! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நான் முக்கியமாக தனிமை என குறிப்பிட்டது ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்யாமல் தனித்து வாழ்வது பற்றி தான்.அந்த வாழ்க்கை இளமையில் இன்பமாக இருந்தாலும் முதுமையில் கஸ்டமாய் இருக்கும் என நினைக்கிறேன்.ஆண்களுக்குப் பிரச்சனை இல்லை அவர்கள் மணம் முடிக்கா விட்டாலும் இச் சமூதாயத்தில் தனித்து வாழ முடியும் ஆனால் பெண்களால் அப்படி இருக்க முடியுமா என்பது தான் எனது கேள்வி?

தனிமையில் வாழ்பவர் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் தனக்குள்ளேயே உரையாட ஆரம்பித்து பின்னர் வெளிப்படவே "தன்னுடன் பேச" ஆரம்பிப்பார். எனவே திருமணமாகாமல் இருந்தால்கூட மனம்விட்டு பேசுவதற்கு ஒருவரின் நட்பு தேவைப்படும். ஆனாலும் தினம் தினம் உரையாட நண்பர்களும் கிடைப்பது அரிது. இப்படியான சந்தர்ப்பத்தில்தான் குடிக்கு போதைக்கு அடிமையாகச் சந்தர்ப்பங்கள் தோன்றும். இதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமில்லை.

தனிமை என்பது ஒரு உளரீதியான மனத்தாக்கம். ஆயிரம் பேருக்குள் இருந்தபடியே தனிமையாக ஒருவர் தன்னை உணரலாம்.

மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது ஒரு முக்கிய மருந்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு குந்தியிருக்கலாம்..! :unsure::lol:

கறுப்புக் கண்ணாடி போட்ட, கலைஞர் கருணாநிநி மாதிரி.... நான் மூன்று கலியாணம் கட்டப் போவதில்லை. :lol:

சும்மா....... பார்ப்பதோடு திருப்திபட்டுக் கொள்ள வேண்டும். :blink:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை எப்போதுமே கொடுமையானது.ஒரு வேளை சில மணி நேரம் தனிமையில் இருப்பது (பலர் தம்முடன் தாமே பேசுவதற்கு selftalk ) தாம் என்ன பிழை விட்டோம்,எந்த வழியில் தமது வாழ்க்கை செல்ல வேண்டும் போன்ற காரணங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.ஆனால் அன்பான ஒருவர்/பலருடன்(love ones) பேசாது இருப்பது மண்டையே வெடிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.குறிப்பாக வயோதிபர்கள் வேலை ஓய்வு எடுத்தவுடன் நிறைய நேரம் அவர்களுக்கு இருக்கும்.அந்நேரத்தை இனிதாக்க தனிமை பயன்படும் என நான் நினைக்கவில்லை. பலர் தனிமையால் தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்(வயோதிபர்கள்).

இன்னும் சிலருக்கு தமது அன்பானவர்கள்(கணவன்/மனைவி/காதலன்/காதலி/நண்பன்/நண்பி)வதையாக இருக்கும் போது :lol::unsure: தனிமையே பறவாயில்லை என தோன்றும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.