Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை மன்னித்துவிடு அண்ணா.

Featured Replies

:( :( :(
  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா.. என்னத்தை சொல்ல முடியும் உங்கள் கதைக்கு... ஆறுதலைத்தவிர.. நிறைய இழந்திருக்கிறீர்கள் மக்களுக்காக... உங்களை என்றைக்கும் மறவோம்...

  • கருத்துக்கள உறவுகள்

I am sorry sathry. And i unabl to write in tamil. Pls.. give idia to write in tamil.

உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம் சாத்திரி.

+++

சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது. இயக்கங்கள், அவற்றிடையான பிடிபாடுகள் சம்பந்தப்பட்ட கதைகளை வாசிக்கும்போது, அறியும்போது இந்தப்பழமொழியே நினைவில் வந்து தொலைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி அண்ணா உங்கள் துயர‌த்தை காலம் தான் ஆற்ற வேண்டும்...அண்ணா இறந்து விட்டார் என உடைந்து போகாமல் இனிமேலாவது அண்ணியையும்,குழந்தைகளையும் கவனமாக பார்க்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஊடாகவும் தொலைபேசியிலும்.ஸ்கைப். முகப்புத்தகம்..மின்னஞ்சல் ஊடாக துயரத்தினை பகிர்ந்துகொண்ட அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள். இன்று காலை யாழ்களத்தில் எழுதிய கருத்தக்களை படித்தபொழுது மன அழுத்தம் குறைந்து மனசிற்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.நிச்சயம் அண்ணன் என்னை மன்னித்திருப்பான்.அவனது ஆத்மா சாந்தியடைந்திருக்கும். அவற்றை படித்துவிட்டு இறுதிச்செலவுகளிற்கு கொஞ்சம் பணம் அனுப்பிவிட்டு வந்திருந்தேன் இதைத்தான் இங்கிருந்து என்னால் செய்யமுடிந்தது.கருத்து வேறுபாடுகளையெல்லாம் மறந்து துயரத்தில் பங்கெடுத்த அனைவரிற்கும் மீண்டும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் தான் பல ரணங்களை ஆற்றுகின்றது.நினைத்தது என்னவோ ஆனால் எப்படியெல்லாம் சிதைவுண்டு போனது எமது உறவுகள்.

பரத் என்ற பெயர் பார்த்தவுடன் தான் ஞாபகம் வருகின்றது.எனது மனைவியின் தம்பி புளோட்டில் இருந்து தப்பி ஓடி மீண்டும் யாழ் கம்பஸ் தொடர்ந்த நேரம் பரத் தான் வந்து முகாமுக்கு அழைத்ததாகவும் "விட்டு ஓடி வந்த நான் வந்து கையெழுத்து இட்டால் இப்போதும் இருப்பதுபோலாகிவிடும்" எனவே முடியாது என்றுவிட்டார்.அடுத்த நாள் வருவதாக போய்விட்டார்.அதற்கிடையில் தாயார் போய் அன்ரன் வீட்டில் சொல்ல அவர்கள் அன்ரனை தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல விடயம் அத்துடன் முடிந்துவிட்டது,மனைவியின் வீடு குளப்பிட்டி சந்தியில் சாத்திரிக்கு தெரிந்திருக்கலாம்.அது ஒரு சின்ன எக்ஸ் புளொட் முகாம்.போல.

அர்ஜுன் நீங்கள் சொன்ன அதே பாரத்தான்.பின்னர் இந்தியனாமியுடனான மோதலில் இறந்து போனான் நல்லபெடியன்.நீங்கள் சொன்ன அந்த குளப்பிட்டி வீடும் தெரியும்.ஆட்களை மறந்துவிட்டது.அங்கு பக்கத்தில் ஒரு பேக்கறி இருந்ததுதானே.அன்ரன் கனடாவில்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்னாட்களில் ஜெகனை மாவீரர் பட்டியலில் இணைத்து - தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு என இயக்கம் அறிவித்திருந்தது. போன உயிர் போனதுதானே..

சாத்திரி.. நிறையக் கதைகளின் சொந்தக்காரர் நீங்கள். 2..3 வரும் இயக்கத்தில் இருந்தவர்கள் தங்கட கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு பெரும் பெரும் எழுத்தாளர்களாக கோலோச்சும் போது உங்களுக்குள் அத்தனை கதைகளும் அமைதியாகக் கிடக்கின்றன.

ஜெகன் மிக திறைமையானவன்.ஒரு ஆறுமாதங்கள் யாழில் எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் ஜெகனைப்பற்றிய பேச்சுத்தான்.அவனுடன் இருபதிற்கு குறைவானவர்களே இருந்தனர்.இலங்கை இராணுவத்திற்கும் போலிசுக்கும் தண்ணிகாட்டிய ஒருத்தன்.புலிகளுடன் நெருக்கமாக இருந்தான்.அவன் கொல்லப்பட்டது புலிகள் அமைப்பில் இருந்த பலரிற்கும் நான் உட்பட மனதில் ஒரு உறுத்தலாகவே இருந்தது.அதனால்தான் புலிகள் அமைப்பு பின்னாளில் மாவீரர் பட்டியலில் இணைத்திருந்தனர். அடுத்ததாக கதைஎழுதி புத்தகமடிச்சு வெளியீடு செய்யவேண்டும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது.அதே நேரம் அத்தனை உண்மைகளையும் எழுதிவிடவும் முடியாது அது நாங்களே உருவாக்கிய பல விம்பங்களை தகர்த்துவிடும்.

I am sorry sathry. And i unabl to write in tamil. Pls.. give idia to write in tamil.

ஈ கலப்பையை தரவிறக்கி முயற்சி பண்ணி பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரானது. மனது கனக்கிறது. கண்ணீர் விடையாகிறது. :(

சாத்திரி

அண்ணன் மனைவி பிள்ளைகளை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .

இதுவே நீங்கள் அண்ணனுக்கு செய்யும் உதவி.

தகவல் பரிவர்த்தனை குறைவான அந்த நேரத்தில் கூட, கிழக்கில் ஜெகனின் தாக்குதல்கள் பிரபல்யமாக இருந்தன. 84 ஏப்ரல் அல்லது ஆவணி மாதங்களில் ஜெகனின் தாக்குதல் பற்றிய செய்திகள்தான் வானொலியில். அவைதான் இராணுவத்தை முகாமுக்குள் அடங்க வைத்திருக்க வேண்டும். அத்துடன் இராகவனின் தலைமையிலும் சில தாக்குதல் நடந்திருக்க வேண்டும். இராணுவம் முகாமுக்குள் அடங்கிய பின், இந்த அடிப்படைகளை வைத்தே சிலர் பின்பு கீரோ ஆனார்களோ தெரியாது.

சாத்திரி, நடந்தது நடந்து விட்டது. கவலைதான். என்ன செய்வது?

இனி அண்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, இயலுமானதை செய்யவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவல் பரிவர்த்தனை குறைவான அந்த நேரத்தில் கூட, கிழக்கில் ஜெகனின் தாக்குதல்கள் பிரபல்யமாக இருந்தன. 84 ஏப்ரல் அல்லது ஆவணி மாதங்களில் ஜெகனின் தாக்குதல் பற்றிய செய்திகள்தான் வானொலியில். அவைதான் இராணுவத்தை முகாமுக்குள் அடங்க வைத்திருக்க வேண்டும். அத்துடன் இராகவனின் தலைமையிலும் சில தாக்குதல் நடந்திருக்க வேண்டும். இராணுவம் முகாமுக்குள் அடங்கிய பின், இந்த அடிப்படைகளை வைத்தே சிலர் பின்பு கீரோ ஆனார்களோ தெரியாது.

சாத்திரி, நடந்தது நடந்து விட்டது. கவலைதான். என்ன செய்வது?

இனி அண்ணனின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, இயலுமானதை செய்யவும்.

உண்மைதான் தப்பிலி ஜெகன் பற்றிய நினைவுகளை அண்ணனின் மறைவோடு மீட்டுப்பார்த்தேன்.அன்றைய காலங்களில் அனைத்து இயக்கத் தலைவர்களையும் விட பல சாகசங்களை செய்த ஒருவன் அத்தனையும் 24 வயதிற்குள்ளேதான். சில நாட்கள் கழியட்டும் நிச்சயமாக அவனைப்பற்றிய விபரங்களை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதற்காகவேனும் எழுத வேண்டும்..அந்த இயக்கத்தை ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை அண்ணன் அவனோடுதான் இருந்தான்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா நீங்கள் உங்கள் குருவண்ணாவுடன் 25 வருடங்கள் பேச்சுவார்த்தையின்றி இருந்தாலும் உங்கள் மனமும் அவர் மனமும் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் நினைத்தபடியே இருந்திருக்கும்.

சகோதரபாசம் என்றால் இதுதான்

உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.காலையில் வாசித்ததிலிருந்து நான் இழந்த என் இரு சகோதரர்களுடைய நினைவாகவே என்மனம் அலைகின்றது.

அவருடைய ஆத்மா உங்களை மன்னிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் சாத்திரி அண்ணா. நீங்கள் இறுதி நிமிடங்களில் பேசியதை நிச்சயம் அவர் கேட்டிருப்பார், அதோட உங்களையும் மன்னித்திருப்பர். ஒரே குடும்ப அண்ணன் தம்பி மார் வேற வேற இயக்கங்களில் இருந்த காரணங்களால சுடுபட்டு செத்த கதைகள் கேட்டிருக்கிறேன். மிகவும் வேதனையான விடயம் :(

என்னத்தைச் சொல்லுவது என்று தெரியவில்லை, அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

இழப்புக்களை எப்போதுமே ஈடுசெய்ய முடிவதில்லை..... சாத்திரி அண்ணை முதல் தெரிந்து இருந்தால் நான் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் இன்று காலைதான் வடக்கில் இருந்து வந்திருந்தேன்...........

என்னதான் மீண்டும் உங்களுடன் பேசாமலே , அவர் உயிர் பிரிந்திருந்தாலும், ஒரு உன்னத கொள்கைக்கான தடத்திலேயே , இருவரும் முரண்பட்டிருந்தீர்கள்!

இதில் மன்னிப்புக்கேட்டு மனசு உடைய ஏதுமில்லை!

இத்தனைகாலம் உருண்டோடிய பின்னரும் , கூடப்பிறந்தவனை கூடவெறுத்து.....

தான் கொண்ட கொள்கை, தோழர்கள், இவர்களின் நினைவுகளை மாறாதவடுவாய் சுமந்து திரிந்த குருவண்ணனை என்ன சொல்லலாம்?!

தோற்றுப்போகாத போராளிகளை கொண்டிருந்தும், தோற்றுப்போனது எமது தேசம்!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வென்று உங்களுக்கு ஆறுதல் சொல்ல தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.