Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கொதிரான இறுதி யுத்தத்தில் கருணாவின் படைகள். காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் பொழுது கருணா குழுவினர் வெறும் மனிதாபிமான நடவடிக்கைகளில் மாத்திரம் தான் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று கருணா என்று அழைக்கப்படும் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கைகளில் கருணா குழவினர் நேரடியாக இராணுவ ரீதியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்காக இந்த காணொளியை இங்கு இணைத்திருக்கிறோம்.

  • Replies 134
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்புலிகளை அழித்து கிழக்கு மாகாணத்தை மீட்டு சிங்களவர்களிடமும் முஸ்லீம்களிடம் கையளித்துள்ள கருணா கும்மான்.. பிள்ளையான் யுண்ணன்.. வாழ்க..!

இன்றைக்கு பிள்ளையான் யுண்ணன்.. ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் பாருங்கோ.. தமிழ் மக்களின் இலட்சியம் என்றால் என்ன என்று..! கிழக்கு விடிஞ்ச மாதிரித்தான்..!

இது எமக்கு ஒன்றும் புதிதல்ல.. இந்தியப் படைகள் தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில்.. உதிரி ஆயுதக் குழுக்களையும்.. கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்த இளைஞர்களையும் கொலைக்களத்துக்குள் தள்ளி அரசியல் செய்தனர். சிங்களப் படைகள் கருணாவை.. பிள்ளையானை வைத்து அதைச் செய்தனர். அவ்வளவே...!

இவர்களின் சுயநல.. அரசியல் இலாபங்களுக்காக உயரிய இலட்சியத்துக்காக நின்று போராடி வீழ்ந்த தெந்தமிழீழ மற்றும் வட தமிழீழ மாவீரர்கள் எப்போதும் நினைவு கூறப்பட வேண்டியவர்களே.

துரோகங்களும்.. துரோகிகளும் என்றே ஒரு நாள் அவர்களாகவே அழிந்து கொள்வார்கள். அப்போதும் எதிரிதான் பயனடைவான்.. எமக்கோ.. அடிமை நிரந்தரமாக்கப்படும். அவ்வளவே.

வன்னிப்புலிகளை அழித்து கிழக்கு மாகாணத்தை மீட்டு சிங்களவர்களிடமும் முஸ்லீம்களிடம் கையளித்துள்ள கருணா கும்மான்.. பிள்ளையான் யுண்ணன்.. வாழ்க..!

இன்றைக்கு பிள்ளையான் யுண்ணன்.. ஒரு கேள்வி கேட்டிருக்கிறார் பாருங்கோ.. தமிழ் மக்களின் இலட்சியம் என்றால் என்ன என்று..! கிழக்கு விடிஞ்ச மாதிரித்தான்..!

இது எமக்கு ஒன்றும் புதிதல்ல.. இந்தியப் படைகள் தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில்.. உதிரி ஆயுதக் குழுக்களையும்.. கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்த இளைஞர்களையும் கொலைக்களத்துக்குள் தள்ளி அரசியல் செய்தனர். சிங்களப் படைகள் கருணாவை.. பிள்ளையானை வைத்து அதைச் செய்தனர். அவ்வளவே...!

இவர்களின் சுயநல.. அரசியல் இலாபங்களுக்காக உயரிய இலட்சியத்துக்காக நின்று போராடி வீழ்ந்த தெந்தமிழீழ மற்றும் வட தமிழீழ மாவீரர்கள் எப்போதும் நினைவு கூறப்பட வேண்டியவர்களே.

துரோகங்களும்.. துரோகிகளும் என்றே ஒரு நாள் அவர்களாகவே அழிந்து கொள்வார்கள். அப்போதும் எதிரிதான் பயனடைவான்.. எமக்கோ.. அடிமை நிரந்தரமாக்கப்படும். அவ்வளவே.

இவர்களின் வாழ்வும் சிங்கள அரசின் கையில்தான். தேவை முடிந்த பின் தூக்கி எறியப்படுவார்கள். சிங்கள அரசிற்கு இவர்களின் தேவை இனி அதிகம் தேவையில்லை. தற்சமயம் வெளி நாட்டிற்குப் படம் காட்டத் தேவைப்படுகிறார்கள்.

Edited by தப்பிலி

ஏதோ பழமொழி நினைவு வருகுது,முற்பகல் செய்யின்---------------

  • கருத்துக்கள உறவுகள்

களதோழர் மருதங்கேணி வந்தால்தான் நிலமைய சமாளிக்க இயலும் . . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ பழமொழி நினைவு வருகுது,முற்பகல் செய்யின்---------------

அதே பழமொழி உங்களுக்கும் பொருந்தும்.. உமாமகேஸ்வரன்.. செய்ததுகளுக்கும்.. மாணிக்கதாசன் செய்ததுகளுக்கும்... சித்தார்த்தன் செய்ததுகளுக்கும்.....????! அதுகும்... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.... பழமொழிக்க அடங்கினால் சரி.

உங்க எவரும் சுத்தமான ஆக்களில்லைப் பாருங்கோ.. நீங்கள் உட்பட. உள்ள அசிங்கங்களோட ஒப்பிடேக்க.. பிரபாகரன்.. எவ்வளவோ சுத்தம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் இனத்தைக் கருவறுத்து விட்டு மகிந்தவின் காலைக் கழுவும் அடிமை நாய்கள.; தூ!

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ பழமொழி நினைவு வருகுது,முற்பகல் செய்யின்---------------

அது தான் சொல்கிறது "முற்பகல் சோத்துப்பாசல் கிடைப்பினும் பிற்பகல் கிடைக்குமென சொல்ல முடியாது. இதை தானே அண்ணே சொல்ல வாறீங்கள்?? :lol: :lol:

Edited by nunavilan

ஏதோ பழமொழி நினைவு வருகுது,முற்பகல் செய்யின்---------------

நன்றி அர்ஜூன் அண்ணா,

வழமைபோல தகுந்த நேரத்தில் உங்களுக்கே உரித்தான பாணியில், இம்முறை பழமொழியில் கூறியமைக்கு. ' முற்பகல் செய்யின் போர்க்குற்றம் பின்தொடரும்'

என்பதற்கு அமைய இந்த ஒளிப்படம் போர்குற்ற ஆதாரங்களை பலப்படுத்துவதாக அமையும். உரியர்வர்களிடம் நீங்களும் சேர்ப்பியுங்கள், நாங்களும் செய்கிறோம்.

Edited by akootha

யார் யாரெல்லாம் தமிழ் தேசியத்தை மறந்து விலை போகிறானோ அவனெல்லாம் துரோகிதான்

அப்பா,அம்மா ,குடும்பம்.உற்றார்,உறவினர்,படிப்பு,அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து தனது இனத்திற்காக போராட போனவர்கள் யார் இறந்தாலும்,கொல்லப்பட்டாலும் அது மதிக்கப்பட வேண்டிய மரணமே.

அதைவிட்டு சொந்த இனத்தையே கூறு போட்டு எம்மவர் இறப்பில்லேயே இன்பம் காண எனக்கு தெரியாது.

கிழக்கை கருணா பிரிந்து சிங்களத்திடம் பறிகொடுத்தான் என்றால் வடக்கை மாற்று இயக்கங்களை அழித்து சிங்களத்திடம் பற்றி கொடுத்ததுதான் உண்மை.

ஒன்றுமே அறியாத டெலோ கிழக்கு போராளிகளை தின்னவேலியில் டயர் போட்டு கொழுத்தியதுதான் எமது போராட்டத்தின் முதல் போராளிகளுக்ககுள்ளான படு கொலைகள் ,அதன் தொடர்சியில் ஒன்றுதான் உந்த காணொளியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அர்ஜீன் அண்ணா சைக்கிள் ஒடுறீங்கள் லைசன்ஸ் மாமா பறிச்சிட்டான் போல?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா,அம்மா ,குடும்பம்.உற்றார்,உறவினர்,படிப்பு,அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து தனது இனத்திற்காக போராட போனவர்கள் யார் இறந்தாலும்,கொல்லப்பட்டாலும் அது மதிக்கப்பட வேண்டிய மரணமே.

அதைவிட்டு சொந்த இனத்தையே கூறு போட்டு எம்மவர் இறப்பில்லேயே இன்பம் காண எனக்கு தெரியாது.

கிழக்கை கருணா பிரிந்து சிங்களத்திடம் பறிகொடுத்தான் என்றால் வடக்கை மாற்று இயக்கங்களை அழித்து சிங்களத்திடம் பற்றி கொடுத்ததுதான் உண்மை.

ஒன்றுமே அறியாத டெலோ கிழக்கு போராளிகளை தின்னவேலியில் டயர் போட்டு கொழுத்தியதுதான் எமது போராட்டத்தின் முதல் போராளிகளுக்ககுள்ளான படு கொலைகள் ,அதன் தொடர்சியில் ஒன்றுதான் உந்த காணொளியும்.

ஏன் சுழிபுர கொலைகளை இலகுவாக மறந்து விட்டீர்கள்??

ஓ அது உங்களின் இயக்கம் செய்தபடியாலாக்கும்???

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா,அம்மா ,குடும்பம்.உற்றார்,உறவினர்,படிப்பு,அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து தனது இனத்திற்காக போராட போனவர்கள் யார் இறந்தாலும்,கொல்லப்பட்டாலும் அது மதிக்கப்பட வேண்டிய மரணமே.

அதைவிட்டு சொந்த இனத்தையே கூறு போட்டு எம்மவர் இறப்பில்லேயே இன்பம் காண எனக்கு தெரியாது.

கிழக்கை கருணா பிரிந்து சிங்களத்திடம் பறிகொடுத்தான் என்றால் வடக்கை மாற்று இயக்கங்களை அழித்து சிங்களத்திடம் பற்றி கொடுத்ததுதான் உண்மை.

ஒன்றுமே அறியாத டெலோ கிழக்கு போராளிகளை தின்னவேலியில் டயர் போட்டு கொழுத்தியதுதான் எமது போராட்டத்தின் முதல் போராளிகளுக்ககுள்ளான படு கொலைகள் ,அதன் தொடர்சியில் ஒன்றுதான் உந்த காணொளியும்.

மாற்று இயக்கங்களை யாரும் அழிக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயற்படவில்லை. மாற்று இயக்கங்கள் என்ற இருப்பு.. தமிழீழம் என்ற ஒரே ஒரு இலட்சியத்தை அடைவதற்கு அவசியம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை விடுதலையை விரும்பிய மக்கள் விரும்பி நின்றனர்.

அதனடிப்படையில் தமிழீழம் என்ற இலட்சியத்தை அடைவதாக சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கியவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர செய்யப்பட்ட முயற்சிகளை முறியடித்து.. தமது சுய சுபபோக வாழ்க்கைக்காக எதிரிகளோடு சேர்ந்து நின்று கொண்டு.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மக்கள் ஆதரவையும் பாவிக்க முற்பட்ட வேளையில் தான்.. அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் அல்லது ஒதுங்கி இருக்கச் செய்யும் பணிகளை தொடங்கப்பட வேண்டி வந்தது.

ரெலோ மீதான நடவடிக்கைக்கு முன்னர் ரெலோ.. சமரசம் செய்யப் போன.. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை போட்டுத்தள்ளியதை அப்படியே மறைப்பதன் நோக்கம் என்ன. அதேபோல்.. புளொட் செய்தவற்றை மறைப்பதன் மறப்பதன் நோக்கம் என்ன..???!

அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் புலிகள் தாங்களாக எடுத்ததில்லை. அவர்கள் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். கருணா விடயத்தில் கூட கருணா.. தான் 6,000 போராளிகளோடு பிரியப் போறன் என்று அறிவிக்கும் வரை.. பல சமரச முயற்சிகளை விடுதலைப்புலிகளின் தலைமை மேற்கொண்டிருந்தது. அத்தனையும் பொய்த்துப் போன நிலையில் தான்.. அப்பாவிப் போராளிகளை கருணாவும் அவருடன் இணைந்திருந்த வேறு சிலரும் பாவிக்க முற்பட்டதை தடுத்து நிறுத்தும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் காணொளி கூட.. பிள்ளையான்.. கருணா தமக்கிடையே பிளவு பட முந்தைய ஒன்றாக இருக்கக் காணப்படுகிறது. இன்று இந்தக் கும்பல்.. தென் தமிழீழ மக்களால் ஜனநாயக ரீதியிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு.. தமிழீழ தேசிய தலைவரின் வார்ப்பில் உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் தெரிவு செய்துள்ளனர்.

அந்த வகையில்.. வட தமிழீழ மக்களும் சரி.. தென் தமிழீழ மக்களும் சரி.. தமிழீழம்.. என்ற அந்தக் கொள்கைக்காக தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்த பெற்றோர்களும் சரி எல்லோரும்.. இந்தக் கொலைக் களக் காட்சிகளை பார்க்கும் நிலையில் இன்றில்லை. இன்று தென் தமிழீழத்திலும்.. வட தமிழீழத்திலும்.. பறிபோகும் காணிகளை சொந்த நிலங்களை எண்ணி மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனரே தவிர.. கருணாவின் நடவடிக்கைகளால்.. கிழக்கு விடிந்துவிட்டதாக அல்லது கிழக்கு மக்கள் மேன்மை பெற்றுவிட்டதாக எதுவும் நடந்துவிடவில்லை. கருணா மட்டும்.. ஜனநாயக வழியில் தேர்தலைச் சந்திக்காது.. அமைச்சர்.. பிரதி அமைச்சர் பதவிகளையும்.. பிள்ளையான் அடவாடித் தேர்தல் மூலம்.. முதலமைச்சர் பதவியையும் அலங்கரித்ததைத் தவிர..!

கருணாவுடனான.. மோதல்கள் பற்றிய எந்த ஒளிப்படங்களையும் விடுதலைப் புலிகள் தயாரித்து அதில் வீரம் காட்டியதாக அறிய முடியவில்லை. கருணாவுடனான மோதலை புலிகள் துரதிஸ்டவசமான ஒன்றாகவே பார்த்தனர்.. கணித்தனர்.

விடுதலைப்புலிகளின் எந்தக் காணொளிகளிலும்.. அரசு சார்பு.. இந்திய சார்பு.. தமிழ் ஆயுததாரிகளின் தாக்குதல் முறியடிப்புக்களை மையப்படுத்திய காணொளிகளில்.. வீரம் தொனிக்க.. இசை அமைத்துப் பாடியதில்லை. மாறாக.. செய்த துரோகங்களை எண்ணி திருந்தச் சொல்லி அமைந்த பாடல்களே அமைந்திருந்தன.

இதில் தான் பிற ஆயுததாரிகளும்.. விடுதலைப் போராளிகளான விடுதலைப் புலிகளும் மாறுபட்டு நிற்கிறார்கள். புலிகளின் உண்மை நோக்கம் அதில் தெளிவாக மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில்.. விடுதலைப்புலிகள் பல தடவைகளில்... தம்மை பலியிட்டு.. அரச.. மற்றும் இந்தியப் படைகளுடனான ஆயுதக் குழுக்களுடனான மோதலை தவிர்த்த பல சம்பவங்களைக் காட்ட முடியும். ஆனால்.. அப்பாவி தமிழ் இளைஞர்களைக் கூட புலிகள் என்று கூறி எதிரிகளோடு நின்று காட்டிக் கொடுத்தும்.. சுட்டுக் கொன்றும்.. ஒரு 35 வருட கால இனத்துரோகச் செயலை செய்த புளொட் உட்பட்ட பிற ஆயுத தாரிகளின் தமிழீழக் கொள்கைக்கான போராட்டம் பற்றி மக்கள் இன்று நன்கே உணர்ந்துள்ளனர்.

அந்த வகையில்.. கருணாவும் பிள்ளையானும் பற்றியும் மக்கள் உணர்ந்துள்ளனர். இன்று ராஜபக்சவின் வேட்டியை விட்டால்.. வாழ்வில்லை என்ற நிலையில்.. இருக்கும் இவர்கள்.. மக்கள் முன் ஆயுத மற்ற நிலையில் போக முடியாதவர்களாகவே உள்ளனர். இதனை சர்வதேசமே உணர்ந்துள்ளது. இவர்களினதும்.. வடக்கில் இதர தமிழ் துரோகக் கும்பல்களினதும்.. ஆயுத அராஜக ஜனநாயகம் பற்றி உலகம் நன்கு அறிந்தே வைத்துள்ளது.

எத்தனையோ வெளிநாட்டுத் தலைமைகள்.. வடக்குக் கிழக்கிற்கு விஜயம் செய்துள்ள போதும்.. இந்தக் கும்பல்களை சந்திக்க மறுப்பதன் நோக்கம் தான் என்ன. இவர்களின் ஜனநாயகத்தை நம்ப அவர்களே தயார் இல்லை. இதில் மாற்றுக் கருத்து.. குழு என்ற பதங்கள் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. தமிழ் மக்களின் ஒரே அபிலாசை 1977 தேர்தலில் சொல்லப்பட்டாயிற்று. தமிழீழ தனியரசு என்று. அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அந்த வகையில்.. தமிழீழக் கொள்கையை கைவிட்டவர்கள்.. மாற்றுக் குழுவினராக தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இருக்கப் போவதும் இல்லை. அவர்கள் என்றும்.. தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் என்பதை மாற்றி அமைக்க முடியாது. புலிகள் மட்டுமே அன்று தொட்டு சாகும் வரை தமிழீழத்தை உச்சரித்து அதற்காகவே போராடி வீழ்ந்தவர்கள். அவர்கள் எப்போதும் மக்களால் நினைவில் இருத்தப்பட மற்றவர்கள் காலப்போக்கில் மறக்கப்பட வேண்டியவர்களாவது துரதிஸ்டம் என்றாலும்.. அதுவே அவர்களின் தவறுகளை அவர்களுக்கே உணர்த்தும் என்றால்.. அதையே தான் செய்தாக வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா,அம்மா ,குடும்பம்.உற்றார்,உறவினர்,படிப்பு,அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து தனது இனத்திற்காக போராட போனவர்கள் யார் இறந்தாலும்,கொல்லப்பட்டாலும் அது மதிக்கப்பட வேண்டிய மரணமே.

அதைவிட்டு சொந்த இனத்தையே கூறு போட்டு எம்மவர் இறப்பில்லேயே இன்பம் காண எனக்கு தெரியாது.

கிழக்கை கருணா பிரிந்து சிங்களத்திடம் பறிகொடுத்தான் என்றால் வடக்கை மாற்று இயக்கங்களை அழித்து சிங்களத்திடம் பற்றி கொடுத்ததுதான் உண்மை.

ஒன்றுமே அறியாத டெலோ கிழக்கு போராளிகளை தின்னவேலியில் டயர் போட்டு கொழுத்தியதுதான் எமது போராட்டத்தின் முதல் போராளிகளுக்ககுள்ளான படு கொலைகள் ,அதன் தொடர்சியில் ஒன்றுதான் உந்த காணொளியும்.

அப்ப ஒரத்தநாட்டில் நடந்த உள்வீட்டு வெட்டு கொத்து கொலைகளை எப்படி சொல்வது அதுவும் உங்களின் பிளட் இயக்கம்தான் செய்தது

அப்பா,அம்மா ,குடும்பம்.உற்றார்,உறவினர்,படிப்பு,அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து தனது இனத்திற்காக போராட போனவர்கள் யார் இறந்தாலும்,கொல்லப்பட்டாலும் அது மதிக்கப்பட வேண்டிய மரணமே.

பொன்னான வரிகள். இதை நூறுவீதம் ஏற்று வழிமொழிகிறேன்.

கனடாவில் நடக்கும் மாவீரர் தினத்தில் சந்திக்கலாம் அண்ணா !

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று இயக்கங்களை யாரும் அழிக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயற்படவில்லை. மாற்று இயக்கங்கள் என்ற இருப்பு.. தமிழீழம் என்ற ஒரே ஒரு இலட்சியத்தை அடைவதற்கு அவசியம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை விடுதலையை விரும்பிய மக்கள் விரும்பி நின்றனர்.

அதனடிப்படையில் தமிழீழம் என்ற இலட்சியத்தை அடைவதாக சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கியவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர செய்யப்பட்ட முயற்சிகளை முறியடித்து.. தமது சுய சுபபோக வாழ்க்கைக்காக எதிரிகளோடு சேர்ந்து நின்று கொண்டு.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மக்கள் ஆதரவையும் பாவிக்க முற்பட்ட வேளையில் தான்.. அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் அல்லது ஒதுங்கி இருக்கச் செய்யும் பணிகளை தொடங்கப்பட வேண்டி வந்தது.

ரெலோ மீதான நடவடிக்கைக்கு முன்னர் ரெலோ.. சமரசம் செய்யப் போன.. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை போட்டுத்தள்ளியதை அப்படியே மறைப்பதன் நோக்கம் என்ன. அதேபோல்.. புளொட் செய்தவற்றை மறைப்பதன் மறப்பதன் நோக்கம் என்ன..???!

அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையையும் புலிகள் தாங்களாக எடுத்ததில்லை. அவர்கள் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். கருணா விடயத்தில் கூட கருணா.. தான் 6,000 போராளிகளோடு பிரியப் போறன் என்று அறிவிக்கும் வரை.. பல சமரச முயற்சிகளை விடுதலைப்புலிகளின் தலைமை மேற்கொண்டிருந்தது. அத்தனையும் பொய்த்துப் போன நிலையில் தான்.. அப்பாவிப் போராளிகளை கருணாவும் அவருடன் இணைந்திருந்த வேறு சிலரும் பாவிக்க முற்பட்டதை தடுத்து நிறுத்தும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் காணொளி கூட.. பிள்ளையான்.. கருணா தமக்கிடையே பிளவு பட முந்தைய ஒன்றாக இருக்கக் காணப்படுகிறது. இன்று இந்தக் கும்பல்.. தென் தமிழீழ மக்களால் ஜனநாயக ரீதியிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு.. தமிழீழ தேசிய தலைவரின் வார்ப்பில் உருவான தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் தெரிவு செய்துள்ளனர்.

அந்த வகையில்.. வட தமிழீழ மக்களும் சரி.. தென் தமிழீழ மக்களும் சரி.. தமிழீழம்.. என்ற அந்தக் கொள்கைக்காக தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்த பெற்றோர்களும் சரி எல்லோரும்.. இந்தக் கொலைக் களக் காட்சிகளை பார்க்கும் நிலையில் இன்றில்லை. இன்று தென் தமிழீழத்திலும்.. வட தமிழீழத்திலும்.. பறிபோகும் காணிகளை சொந்த நிலங்களை எண்ணி மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனரே தவிர.. கருணாவின் நடவடிக்கைகளால்.. கிழக்கு விடிந்துவிட்டதாக அல்லது கிழக்கு மக்கள் மேன்மை பெற்றுவிட்டதாக எதுவும் நடந்துவிடவில்லை. கருணா மட்டும்.. ஜனநாயக வழியில் தேர்தலைச் சந்திக்காது.. அமைச்சர்.. பிரதி அமைச்சர் பதவிகளையும்.. பிள்ளையான் அடவாடித் தேர்தல் மூலம்.. முதலமைச்சர் பதவியையும் அலங்கரித்ததைத் தவிர..!

கருணாவுடனான.. மோதல்கள் பற்றிய எந்த ஒளிப்படங்களையும் விடுதலைப் புலிகள் தயாரித்து அதில் வீரம் காட்டியதாக அறிய முடியவில்லை. கருணாவுடனான மோதலை புலிகள் துரதிஸ்டவசமான ஒன்றாகவே பார்த்தனர்.. கணித்தனர்.

விடுதலைப்புலிகளின் எந்தக் காணொளிகளிலும்.. அரசு சார்பு.. இந்திய சார்பு.. தமிழ் ஆயுததாரிகளின் தாக்குதல் முறியடிப்புக்களை மையப்படுத்திய காணொளிகளில்.. வீரம் தொனிக்க.. இசை அமைத்துப் பாடியதில்லை. மாறாக.. செய்த துரோகங்களை எண்ணி திருந்தச் சொல்லி அமைந்த பாடல்களே அமைந்திருந்தன.

இதில் தான் பிற ஆயுததாரிகளும்.. விடுதலைப் போராளிகளான விடுதலைப் புலிகளும் மாறுபட்டு நிற்கிறார்கள். புலிகளின் உண்மை நோக்கம் அதில் தெளிவாக மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில்.. விடுதலைப்புலிகள் பல தடவைகளில்... தம்மை பலியிட்டு.. அரச.. மற்றும் இந்தியப் படைகளுடனான ஆயுதக் குழுக்களுடனான மோதலை தவிர்த்த பல சம்பவங்களைக் காட்ட முடியும். ஆனால்.. அப்பாவி தமிழ் இளைஞர்களைக் கூட புலிகள் என்று கூறி எதிரிகளோடு நின்று காட்டிக் கொடுத்தும்.. சுட்டுக் கொன்றும்.. ஒரு 35 வருட கால இனத்துரோகச் செயலை செய்த புளொட் உட்பட்ட பிற ஆயுத தாரிகளின் தமிழீழக் கொள்கைக்கான போராட்டம் பற்றி மக்கள் இன்று நன்கே உணர்ந்துள்ளனர்.

அந்த வகையில்.. கருணாவும் பிள்ளையானும் பற்றியும் மக்கள் உணர்ந்துள்ளனர். இன்று ராஜபக்சவின் வேட்டியை விட்டால்.. வாழ்வில்லை என்ற நிலையில்.. இருக்கும் இவர்கள்.. மக்கள் முன் ஆயுத மற்ற நிலையில் போக முடியாதவர்களாகவே உள்ளனர். இதனை சர்வதேசமே உணர்ந்துள்ளது. இவர்களினதும்.. வடக்கில் இதர தமிழ் துரோகக் கும்பல்களினதும்.. ஆயுத அராஜக ஜனநாயகம் பற்றி உலகம் நன்கு அறிந்தே வைத்துள்ளது.

எத்தனையோ வெளிநாட்டுத் தலைமைகள்.. வடக்குக் கிழக்கிற்கு விஜயம் செய்துள்ள போதும்.. இந்தக் கும்பல்களை சந்திக்க மறுப்பதன் நோக்கம் தான் என்ன. இவர்களின் ஜனநாயகத்தை நம்ப அவர்களே தயார் இல்லை. இதில் மாற்றுக் கருத்து.. குழு என்ற பதங்கள் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. தமிழ் மக்களின் ஒரே அபிலாசை 1977 தேர்தலில் சொல்லப்பட்டாயிற்று. தமிழீழ தனியரசு என்று. அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. அந்த வகையில்.. தமிழீழக் கொள்கையை கைவிட்டவர்கள்.. மாற்றுக் குழுவினராக தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. இருக்கப் போவதும் இல்லை. அவர்கள் என்றும்.. தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் என்பதை மாற்றி அமைக்க முடியாது. புலிகள் மட்டுமே அன்று தொட்டு சாகும் வரை தமிழீழத்தை உச்சரித்து அதற்காகவே போராடி வீழ்ந்தவர்கள். அவர்கள் எப்போதும் மக்களால் நினைவில் இருத்தப்பட மற்றவர்கள் காலப்போக்கில் மறக்கப்பட வேண்டியவர்களாவது துரதிஸ்டம் என்றாலும்.. அதுவே அவர்களின் தவறுகளை அவர்களுக்கே உணர்த்தும் என்றால்.. அதையே தான் செய்தாக வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

நெடுக்ஸ் கிளிப்பிள்ளை போல் அப்படியே ஒப்பிவிக்கின்றிர்கள்.உமது இசையும் கதையும் வாசிக்கும் போது அதை முற்றுமாக உணர்ந்துகொண்டேன் .நீர் கொஞ்சமும் வெளியில் வர முயலவில்லை.புலிகள் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பியதன் தாக்கம் தான் அது.

இன்று கூட பல ஊடகங்கள் அதைத்தான் செய்துவருகின்றன.அவர்களுக்கு விடுதலையை விட வியாபாரம் தான் முக்கியம்.அதை நம்ப ஒரு கூட்டம் இருக்கென்று அவர்களுக்கு நன்கு தெரியும்.இவர்கள் 2009 முன்பு சொன்னவற்றை மீண்டும் ஒளிபரப்பினால் தெரியும் இவர்கள் வண்டவாளம் .

உதாரணமாக அரசாங்கம் நவீன ஆயுதங்கள் இறக்குமதி செய்கின்றதேன்று செய்தி வந்தால் இவர்கள் சிரித்துக்கொண்டு சொல்வார்கள் இறக்கட்டும் இறக்கட்டும் எல்லாம் எங்களுக்குதானே வரப்போகின்றதேன்று ,கேட்பவர்களும் பூரிப்பில் இருந்தார்கள்,கடைசியில் என்ன நடந்தது காலம் காலமாக காசு சேர்த்து வாங்கிய ஆயுதங்களும்,அவ்வளவு பவுணும் அவங்கள் கையில்.

அதே போல் அந்த அந்த நேரத்தில் அவர்கள் சொன்னதை நீங்கள் இன்னமும் நம்பிக்கொண்டு?

புலியில் இருந்த பெரும் தலைகளே தாங்கள் செய்த சில பிழைகளை ஒப்புக்கொள்ளும் போது சிலர் இன்னமும் அதே பிழைகளுக்கு நியாயம் கற்பிப்பதுதான் நகைப்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா,அம்மா ,குடும்பம்.உற்றார்,உறவினர்,படிப்பு,அந்த வயதிற்கே உரிய சந்தோஷங்கள் அனைத்தையும் துறந்து தனது இனத்திற்காக போராட போனவர்கள் யார் இறந்தாலும்,கொல்லப்பட்டாலும் அது மதிக்கப்பட வேண்டிய மரணமே.

அர்யூன் உங்களிடம் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது, ஆனால் அதனை வெளிப்டுத்தும் சந்தர்ப்பங்களில் வார்த்தைப் பிரயோகங்கள் சர்ச்சைகளை உருவாக்குவதை அவதானிக்க முடிகிறது. புலிகளைக் கொச்சைப்படுத்தும் அல்லது அவர்கள் மீது அவதூறு கூறும் உங்கள் பாணியை மாற்றிக் கொண்டு உங்கள் கருத்தை எடுத்து வாருங்கள். இந்தக்கருத்துக்களத்தில் நீங்கள் எங்கு எழுதினாலும் புலிகள் மேல் மிகுந்த காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாகவே உங்கள் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்தக் காழ்ப்புணர்ச்சியை அதிகமாக நீங்கள் வெளிப்படுத்துவதாலேயே நீங்கள் கூற எத்தனிக்கும் நல்ல விடயங்கள் கூட அடிபட்டுப்போகிறது...... இங்குள்ளவர்கள் உங்களைச் சீண்டுவதாக நீங்கள் கூறலாம்... அந்தச்சீண்டலில் அள்ளுண்டுபோய் சர்ச்சைப்படுகிறீர்கள் என்றால் எப்படி நீங்கள் மற்றவர்களைக் குறை குற்றம் சொல்ல முடியும்? நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் பல சந்தர்ப்பங்களில் உங்களுடைய எழுத்துக்களே உங்களுக்கு எதிரியாகி இக்கருத்துக்களத்தில் நல்ல புரிந்துணர்வுள்ள கருத்தாளர்களைக்கூட உங்கள் மேல் நல்ல எண்ணத்தை வைக்கவிடாது செய்துவிடுகின்றன. புலிகள் மேல் உங்களுக்குக் கோபம் இருக்கட்டும் நியாயமானதாக இருந்தால் நாங்கள் வரவேற்போம். ஆனால் உங்களை வரவேற்க முடியவில்லை. உங்கள் கருத்தை வாசித்தவரைக்கும் நையாண்டித்தனமே அதீதமாக வெளிப்படுகிறது. சில சர்ச்சைக்குரிய கருத்துப்பகிர்வை எழுதி எப்போதுமே சர்ச்சைகளை தோற்றுவித்து அதில் பிரபலமடைதல் என்று ஏதாவது குறிக்கோள் வைத்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ பழமொழி நினைவு வருகுது,முற்பகல் செய்யின்---------------

எனக்கு தெரிந்த பலர் PLOT. அவர்கள் பன்னாகம் & சுழிபுரம் இடங்களில் செய்த அட்டகாசங்களை எழுதினால் மிகவும் கீழ் தரமா இருக்கும், வேணுமா அர்ஜூன், உச்ச கட்டம் குடி வெறியில் ஆறு அண்ணாக்களின் உயிரை அடித்தே பறித்தீர்களே.................வேண்டாம் அர்ஜூன் முதுகில் உள்ள ஊத்தையை வடிவா பாருங்கோ

நீங்கள் சொல்லும் குற்றசாட்டை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

எனது இந்தநிலைப்பாட்டால் என்னை பாட்டிக்கு கூப்பிடாதவர்களும்,அல்லது கூப்பிட்டு அரசியல் வேண்டாம் என்பவர்களும் கூட இருக்கின்றார்கள்.ஒரு முறை எனது சேட்டைக்கூட ஒரு நண்பன் பிடித்தான்.

ஆனால் இவர்களெல்லாம் அந்தநேரம் அரசியல் கதைத்துவிட்டு அப்படியே போய் விடுவார்கள்.அவங்கள் என்னவாது செய்யட்டும் உனக்கென்ன என்பார்கள் .இதுதான் பலரதுமுகம்.

இது எமது மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்டது,இனத்தின் விடுதலையுடன் சம்பந்தப்பட்டது என்றெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை.

என்னை இப்படி எழுதவைப்பது ,

நீங்கள் யாரையும் (சோனியா,கருணாநிதி,ஜெயலலிதா,மாற்று இயக்கத்தவர்,கூட்டமைப்பு அல்லது யாரும் தனிநபர் ) எப்படியும் எவ்வளவு கீழ்த்தரமாகவும் விமர்சிக்கலாம் யாரும் தங்களை விமர்சித்தால் இவர்களால் தாங்க முடியாது அது ஏன்? யாழிலேயே எத்தனை எத்தனை உதாரணம் காட்டலாம்.

நீங்கள் நம்புவதும்,செய்வதும் மட்டும் சரி என ஏன் நினைகின்றீர்கள்,ஏன் அதை சாதிக்கவும் முனைகின்றீர்கள்.(ராஜபக்சாவும் அதுதானே செய்கின்றான்).

குழந்தைபிள்ளைகள் மாதிரி அவன் விசத்தை விதைக்கின்றான் என கருத்து சொல்ல முதல் கத்துகின்றிர்கள்.உங்களுக்கு உங்கள் கருத்தின் மீதே சந்தேகம்.

ஒன்றை மட்டும் தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்,எங்கேயோ ஒன்றிரண்டு தமிழன் அரசாங்கத்துடன் நிற்கின்றான் அதைவிட்டு மாற்று கருத்து சொல்பவன் எல்லாம் அரசாங்கத்துடன் நிற்கின்றான் என்று நீங்கள் நினைப்பதை சாதிக்க முயலாதீர்கள்.எனக்கு தனிப்பட அனைத்து இயக்கத்திலிருந்தவர்களும் நண்பர்களாக புரிந்துணர்வுடன இருக்கின்றார்கள் .அந்த புரிந்துணர்வு எல்லோர் மத்தியில் வரும் மட்டும் கஷ்டம் தான் .

நானும் என்னை மாற்றிக்கொள்ள முயலுகின்றேன் .

எதிரியை ஒரு கடியும் கூட நின்றவனை இரண்டு கடியும் கடித்தவாறே தான் போராட்டம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்து போராட்டம் முடியும் இறுதிக்கணம் வரை தன்னினத்தை இரையாக்குதல் நடந்தேறியது. ஆரம்பம் முதல் முடிவுவரை தன்னினத்தை இரையாக்குதல் என்பது தொடர்ந்தது. இதற்குள் எந்த இயக்கமும் தலமையும் விதிவிலக்கல்ல. எல்லாம் தமிழன் என்ற குட்டையில் ஊறின மட்டைகளே ! இனம் என்ற வரையறையை வகுக்கும் குறுந்தேசிய சிந்தனைமுறையையும் அதை வழிநடத்திய தலமைகளையும் கடந்து பல்லாயிரம் மக்கள் இன விடுதலை என்ற குறிக்கோளுக்காக புறப்பட்டு தன்னித்தாலும் எதிரியினத்தாலும் கொல்லப்பட்டு மாண்டுபோனார்கள். தமிழன் தியாகியாகச் செத்தாலும் துரோகியாகச் செத்தாலும் பயங்கரவாதியாக இஸ்லாமியனாக இந்துவாக வன்னிப்புலியாக கிழக்கு புலியாக எப்படி எத்தனைபெயரியல் மாண்டாலும் மாண்டவன் எல்லாம் தமிழனே ! மாண்டுபோனவர்களையும் ஆழுக்கு நாலு பேராக பிரித்து இழுத்துக்கொண்டுபோய் விலாசத்துக்கு திவசம் செய்யும் குணமுடையவனே இந்தத் தமிழன். எத்தனைபேர் வந்து எத்தனை அரசனாக வேசம் போட்டு விதவிதமான மேடையில் நடித்தாலும் தமிழன் என்ற கதையில் கூட இருப்பவனின் தலையை சீவத்தான் வேண்டும் குனிந்து மண்டியிடத்தான் வேண்டும். நாம் தமிழன் என்ற புராணக்கதையை தொடர்ந்து புலம்பெயர் தேசத்தில் இருந்து படித்துக்கொண்டிருப்போம். அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறை நீங்கள் சொல்லுற கதையள எல்லாம் கேக்கவா போது?

அடுத்த தலைமுறை நீங்கள் சொல்லுற கதையள எல்லாம் கேக்கவா போது?

இந்தத் தலைமுறை திருந்துவதற்கான அறிகுறி ஏதாவது தென்படுகின்றதா?

எதிரியை ஒரு கடியும் கூட நின்றவனை இரண்டு கடியும் கடித்தவாறே தான் போராட்டம் ஆரம்பித்து முப்பது வருடங்கள் கடந்து போராட்டம் முடியும் இறுதிக்கணம் வரை தன்னினத்தை இரையாக்குதல் நடந்தேறியது. ஆரம்பம் முதல் முடிவுவரை தன்னினத்தை இரையாக்குதல் என்பது தொடர்ந்தது. இதற்குள் எந்த இயக்கமும் தலமையும் விதிவிலக்கல்ல. எல்லாம் தமிழன் என்ற குட்டையில் ஊறின மட்டைகளே ! இனம் என்ற வரையறையை வகுக்கும் குறுந்தேசிய சிந்தனைமுறையையும் அதை வழிநடத்திய தலமைகளையும் கடந்து பல்லாயிரம் மக்கள் இன விடுதலை என்ற குறிக்கோளுக்காக புறப்பட்டு தன்னித்தாலும் எதிரியினத்தாலும் கொல்லப்பட்டு மாண்டுபோனார்கள். தமிழன் தியாகியாகச் செத்தாலும் துரோகியாகச் செத்தாலும் பயங்கரவாதியாக இஸ்லாமியனாக இந்துவாக வன்னிப்புலியாக கிழக்கு புலியாக எப்படி எத்தனைபெயரியல் மாண்டாலும் மாண்டவன் எல்லாம் தமிழனே ! மாண்டுபோனவர்களையும் ஆழுக்கு நாலு பேராக பிரித்து இழுத்துக்கொண்டுபோய் விலாசத்துக்கு திவசம் செய்யும் குணமுடையவனே இந்தத் தமிழன். எத்தனைபேர் வந்து எத்தனை அரசனாக வேசம் போட்டு விதவிதமான மேடையில் நடித்தாலும் தமிழன் என்ற கதையில் கூட இருப்பவனின் தலையை சீவத்தான் வேண்டும் குனிந்து மண்டியிடத்தான் வேண்டும். நாம் தமிழன் என்ற புராணக்கதையை தொடர்ந்து புலம்பெயர் தேசத்தில் இருந்து படித்துக்கொண்டிருப்போம். அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருப்போம்.

இந்த அப்பட்டமான மனச்சாட்சியின் குரலை ஏற்றுக்கொள்ள கருத்துக்கள உறவுகள் தயாராக இருக்கின்றார்களா????????????? தேசியப்போராட்டத்தில் யாருமே புனிதர்கள் இல்லை . வேண்டுமானால் விகிதாசாரத்தில் வேறுபடலாம் . ஒருவரை ஒருவர் உயர்த்திக்காட்டுகின்ற அரிவரி சண்டைகளை நிறுத்திவிட்டு , இனி எல்லோரும் என்ன செய்யப்போகின்றோம் என்பது தான் இப்போது உள்ள கேள்வி . அதை செய்யாவிடில் யாருமே எம்மை மன்னிக்கப் போவதில்லை !!!!!!!!!!!!!!.

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.