Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் பிறந்தோம் ...யாழில் இணைந்தோம்...நண்பர்களாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் மனதுக்கு பிடித்திருந்துச்சு, இணைத்துவிட்டேன்

எங்கோ பிறந்தோம்!

எங்கோ வளர்ந்தோம்!

அனைவரும் இங்கே!

சந்தித்துக் கொண்டோம்!

இதயத்தை நட்பால

சிந்தித்துக கொண்டோம்!

முகங்களைப் பற்றி

யோசித்ததுமில்லை!

இனம் பணம் பார்த்து

நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்

எதுவுமில்லை!

ஏமாற்றங்கள்

சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை

இடம் மாற்றிக்க கொள்வோம்!

பாரட்டுக்களை

பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌

ச‌ண்டைக‌ள் இடுவோம்

சீக்கிர‌த்திலேயே

ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளை

கிள்ளி எறிவோம்!

இலட்சியஙகளை

சொல்லி மகிழ்வோம்!

நன்மைகள் வளர

முயற்சிப்போம்!

நட்பால் உயர்ந்து

சாதிப்போம்!

நன்றி - adhikesan.blogspot.com

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் உண்மை....பகிர்வுக்கு மிக்க நன்றிகள்..:)

"யாழ் களம்" என்பதனை ... எனக்குள் கொண்டுவந்த நபர் "சுப்பண்ணை" தான்! நான் அதற்குள் வந்த சில காலத்தில் அவர் யாழிற்கு வருவதில்லை. யாழினை எனக்கு அறிமுகப்படுத்திய என் நண்பனை நினைவு கூர்ந்து .....அவனுக்கு என் நன்றிகள்!

யாழுக்குள் இருப்பவர்கள் எவ்வளவு கருத்துச் சண்டை போட்டாலும் சமாதானமாகி புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வார்கள்!

உறவுகளே !... என உரிமையோடு அழைப்பதற்கு உரித்தான உறவுகளாய் ....... என்றும் பண்போடும் , அன்போடும் இருந்து , என்னையும் தங்களின் உறவாய் மனமுவந்து ஏற்றுக்கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் அன்புக்கு பாத்திரமானவனாய் என்றைக்கும் நான் இருப்பேன்! நன்றிகள் !

பகிர்வுக்கு நன்றி உடையார்!:)

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் எழுதி இருக்கிறார். உடையாருக்கு நன்றி ............ஒரு பச்சை ..........

  • கருத்துக்கள உறவுகள்

பணம் இருந்தாலும்,

பதவி இருந்தாலும்,

எங்கோ ஒரு இனம்புரியாத ஏக்கம்!

அடையாளம் தேடும் தவிப்பாக!

அந்த அடையாளத்தை,

அந்த அரவணைப்பை,

அளித்து நிற்கும் களமாக,

அன்போடு அணைப்பது தான்,

யாழ் களம் !!!

காலத்திற்கேற்ற இணைப்பு உடையார்!

நன்றிகள்!!!

கீழே உள்ள வரிகள் என்னைப்பொறுத்தவரையில் உண்மை. பல கருத்தாடல்கள் என்னில் இருந்த பல குற்றங்களை / குறைகளை சிந்திக்க வைத்தன. அவை என்னை மேலும் சிறப்படையச்செய்துள்ளன என எண்ணுகிறேன்.

அவரவர் கருத்துக்களை

இடம் மாற்றிக்க கொள்வோம்!

பாரட்டுக்களை

பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌

ச‌ண்டைக‌ள் இடுவோம்

சீக்கிர‌த்திலேயே

ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

எனக்கெல்லாம் யாழ் வெறும் கருத்துக் களம் மட்டுமல்ல யாதுமாகி நிற்கும் ஒரு ஊடகம். விவாதிப்பதற்கு, விமர்சிப்பதற்கு, சண்டை பிடிப்பதற்கு, வாசிப்பதற்கு, இசையை ரசிப்பதற்கு, நையாண்டி செய்வதற்கு, சிரிப்பதற்கு என எல்லாவற்றுக்கும் களம் தரும் இடம் யாழ். யாழ் இல்லையெனில் 2009 மே மாதத்தில் முழு விசரனாகி தெருவில் சுற்றிக் கொண்டு இருந்து இருப்பேன்.

யாழால் வீட்டை வரைக்கும் வந்து பழகும் நண்பர்களைக் கூட நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என்பதும் ஒரு சிறப்பான ஒரு அனுபவம்

இந்தக் கவிதைக்கு நன்றி உடையார்,

  • கருத்துக்கள உறவுகள்

யாவரையும் நண்பர்களாக்கி வைத்திருக்கும் யாழை

என்றென்றும் பாதுகாப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணைந்த, கடந்த மூன்று வருடத்தில்... யாழில் தினமும் ஒரு கருத்தாவது எழுதாமல் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவிற்க்கு எனது வாழ்வின் முக்கிய அம்சமாகிப் போனது யாழ் களம். எத்தனையோ மனச்சுமைகளை இறக்கி வைக்கும் சுமைதாங்கியாக உள்ள யாழ்களம், மற்றைய களங்களை விட நண்பர்கள் விடயத்தில் வித்தியாசமான உறுப்பினர்களைப் பெற்றுள்ளதில் பெருமையடைகின்றேன். இணைப்பிற்கு நன்றி உடையார்.OFCOComputing.gif

:) :) :) :)
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் ஒரு தமிழ் சோலை. எனக்கு அதிகமாக எழுத தெரியாது,

ஆனால் மற்றவர்களின் ஆக்கங்களை தினமும் வாசிப்பேன். அந்தி நேரங்களில்

இளைப்பாற நல்ல இடம். இந்த சோலைக்கு மரமாக நிக்கும் ஒவ்வொரு நண்பர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

2006 வெய்யில் காலப்பகுதியில்தான் நான்இங்கு இணைந்தேன்

அறிமுகம் எவரும் தரவில்லை.

போரில்லாதநிலையிலும் ஏமாற்றப்பட்டும் இழப்புக்களை சந்தித்தும் வஞ்சகங்களில் வீழ்ந்தபடியும் இருந்தநேரம்.

தேடத்தொடங்கினேன்

என் உறவுகளை எவருடனாவது பகிர்ந்து கொள்ளணும். அழணும். ஆறுதல் பெறணும். அரவணைக்கணும் என்று.

அப்பொழுது கண்ணில் பட்டதுதான் யாழ் என்னும் இந்த நதி.

நீந்துவதும் ஆளையாள் தாழ்ப்பதும் உடற்பயிற்சியிலுருந்து காமவிளையாட்டுவரை இங்கு எல்லாமே பயின்றோம். தெரிந்ததை மற்றவருக்கும் தெரியாததை மற்றவரிடமிருந்தும் பெற்றோம். அதிகம் பேசாத எழுதாத என்னை கூடப்பேசுகிறான் என்றநிலைக்கு வரவைத்ததும் யாழே.

அதனைத்தொடர்ந்து போர் உக்கிரமடையந்த வேளையில் கொத்துக்கொத்தாக போராளிகளும் தலைமை தாங்கிய பெரும் தளபதிகளும் வீழ்ந்தபோதும் ஏன் தலைவர் கூட இருக்கிறாரா இல்லையா என்றநிலை வந்தபோதும் இன்று உயிருடன் நான் நடமாட முக்கிய காரணம் யாழ். அதனால் கிடைத்த என் உறவுகள்.

நிழலி எழுதியதுபோல் வீடுவரை செல்லும் உறவுகளை நானும் பெற்றுள்ளேன். அந்தவகையில் நன்றி என்ற சொல் மோகன் அண்ணாவுக்கு சொல்வது நன்றன்று. அவரை நான் அதற்கு அப்பாலும் மதிக்கின்றேன். நிச்சயம் ஒரு நாள் அவரையும் நான் சந்திப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006 வெய்யில் காலப்பகுதியில்தான் நான்இங்கு இணைந்தேன்

அறிமுகம் எவரும் தரவில்லை.

போரில்லாதநிலையிலும் ஏமாற்றப்பட்டும் இழப்புக்களை சந்தித்தும் வஞ்சகங்களில் வீழ்ந்தபடியும் இருந்தநேரம்.

தேடத்தொடங்கினேன்

என் உறவுகளை எவருடனாவது பகிர்ந்து கொள்ளணும். அழணும். ஆறுதல் பெறணும். அரவணைக்கணும் என்று.

அப்பொழுது கண்ணில் பட்டதுதான் யாழ் என்னும் இந்த நதி.

நீந்துவதும் ஆளையாள் தாழ்ப்பதும் உடற்பயிற்சியிலுருந்து காமவிளையாட்டுவரை இங்கு எல்லாமே பயின்றோம். தெரிந்ததை மற்றவருக்கும் தெரியாததை மற்றவரிடமிருந்தும் பெற்றோம். அதிகம் பேசாத எழுதாத என்னை கூடப்பேசுகிறான் என்றநிலைக்கு வரவைத்ததும் யாழே.

அதனைத்தொடர்ந்து போர் உக்கிரமடையந்த வேளையில் கொத்துக்கொத்தாக போராளிகளும் தலைமை தாங்கிய பெரும் தளபதிகளும் வீழ்ந்தபோதும் ஏன் தலைவர் கூட இருக்கிறாரா இல்லையா என்றநிலை வந்தபோதும் இன்று உயிருடன் நான் நடமாட முக்கிய காரணம் யாழ். அதனால் கிடைத்த என் உறவுகள்.

நிழலி எழுதியதுபோல் வீடுவரை செல்லும் உறவுகளை நானும் பெற்றுள்ளேன். அந்தவகையில் நன்றி என்ற சொல் மோகன் அண்ணாவுக்கு சொல்வது நன்றன்று. அவரை நான் அதற்கு அப்பாலும் மதிக்கின்றேன். நிச்சயம் ஒரு நாள் அவரையும் நான் சந்திப்பேன்.

கவிதை, நிலாமதியக்கா, யாயினி, நிழலி, விசுகு, அகத்தியன், தமிழ் சிறி, ஈழபிரியன், அகூதா & புங்கையூரன், உங்கள் எல்லோரையும் போல், யாழ் களம் தான் எனக்கு ஆறுதலாக இருந்தது 2006 இல் இருந்து இன்று வரை, மோகண்ணாவிற்குதான் நன்றி. நான் கூட பார்த்த தளங்கள் என்றால், யாழ், புதினம் & தமிழ்நெட். இப்ப யாழ்தான், யாழில் முன்னம் வாசித்துவிட்டு போய்விடுவேன், இப்ப இணைந்த பின் எதோ ஒரு உணர்வு மனதில், தண்ணி விடாய் மாதிரி..., என்ன என்று சொல்வது...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்...எழுத வார்தையில்லை...சில இணையங்களில் எழுதினால் கண்டு கொள்வதில்லை ஆனால் யாழில் உள்ளவர்கள் என்னுடைய கிறுக்களையும் ஊக்கப்படுத்தி மீண்டும் மீண்டும் கிறுக்க வைத்தவர்கள்

என்னைய பொறுத்தவரை , யாழ் ஒரு போதை!

கிட்டத்தட்ட ஒரு கஞ்சா பாவனையாளனுக்கு ஒத்தது!

இதுள்ள வந்தவன்... கோவிச்சிட்டு உறுப்பினரா வெளில போனாலும்...

வாசகனா எப்பவும் உள்ளேயே இருப்பான்!

என்னதான், எழுத்து சண்டை போட்டாலும்,,

நேரே .. சந்திக்க அவங்கள வச்சி ...

மிக நாகரிகமான நண்பர்கள் வட்டத்தை உருவாக்கியது.. யாழின் டாலன்ற்!

மத்த கம்முனாட்டி இணைய தளங்களுக்கும், யாழுக்கும் உள்ள ஒரே ஒரு வித்யாசம்...

அவர்கள் நண்பர்களை கூட எதிரியாக்கி ,, பிரிச்சு வைப்பாங்க..!

இவர்கள்..

எதிரிகளை கூட நண்பர்களாய் எம்மோட சேர்த்து வைப்பாங்க!

({பிரிச்சு சேர்த்து??.}....அடடே அறிவிலிக்கும் ,, கவிதை பிக்-அப் ஆவுதே) <_<

இந்த கவிதைய இணைச்ச , உடையாரண்ணாக்கு எந்த நன்றியும் சொல்லமாட்டேன்.. அப்டியே... ஓடிபோங்க!! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.