Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடாபியின் கொலையும் லிபியாவின் எதிர்காலமும் உலக அரசியலும்


akootha

கடாபியின் கொலையும் லிபியாவின் எதிர்காலமும் உலக அரசியலும்   

13 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

கிட்டத்தட்ட 42 வருடங்கள் லிபியாவை ஆண்ட கடாபி இன்று மேற்குலக ஆதரவுடன் கிளர்ச்சியார்களால் கொல்லப்பட்டார். இதனுடன் எட்டு மாத மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வரலாம்.

ஆனாலும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? ஒரு தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

இதை கருத்தில் கொண்டு ஒரு கருத்துக்கணிப்பை/கருத்துக்களை பரிமாறுங்கள் - நன்றி.

லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்: http://www.yarl.com/...showtopic=93229

கடாபியின் கடைசி நாட்கள்? : http://www.yarl.com/...showtopic=90591

லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி : http://www.yarl.com/...showtopic=91691

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையில் கடாபி யார்?

* சர்வாதிகாரி

லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

* மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பார்வையில் கடாபி யார்?

*மேற்குலகால் ஏமாற்றப்பட்ட தலைவர்

லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

* மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பத்தி ஒரு வருடங்கள், இராணுவச் சீருடையுடன் பதவியில் இருந்த ஒருவரை....

என்னால் சர்வாதிகாரியாகத்தான் பார்க்க முடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபி பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி லிபிய மக்களுக்கே அதிகம் தெரியும். எங்களைப் பொறுத்தவரை.. அவர் சிங்கள எதிரியின் கூட்டாளி. இன அழிப்புக்கு ஒத்துப்போனவர். இதற்கான விடை இல்லை என்பதால்.. நான் எதனையும் தெரிவு செய்யவில்லை.

லிபியாவின் எதிர்காலம்.. மேற்குலகின் நலன்களுக்கு ஏற்ப அமையும். லிபியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மேற்குலகம் ஜனநாயக விரிவாக்கம் என்ற போர்வையில் தன்னகப்படுத்த முயலும். ஆனால் கடாபியின் கொலை இந்த விடயத்தில் மேற்குலகம் நிம்மதியாக இருந்து அதைச் செய்ய அனுமதிக்காது. ஈராக் போல இல்லாவிடிலும்.. எதிர்கால லிபியா கடாபியின் காலத்தை விட நெருக்கடிகள் நிறைந்த லிபியாவாக.. லிபிய மக்களின் நிம்மதி ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் பறிக்கப்பட்டதாக இருக்கும்..! அதேவேளை.. கடாபியின் இழப்பை எண்ணி லிபிய மக்கள் வருந்தும் நிலையும் தோன்றும். அப்போது மேற்குலகம் எண்ணிப்பாராத விளைவுகளைக் கூட அது சந்திக்க நேரலாம்.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று குத்துவெட்டுப் படுவதை ஜனநாயகத்தின் கீழ் அங்கீகரிக்கும் அமெரிக்க சன நாய் அக உலகம்.. மக்கள் விரும்பும் ஒரே தலைமையின் கீழ் அவர்கள் வாழ்வதை அங்கீகரிக்கா. காரணம்.. ஆட்சி மாற்றங்களும்.. நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையும் மேற்குலக செல்வாக்கை பிரயோகிக்க அவர்களுக்கு வெகு இலகுவாக வழிசமைத்துக் கொடுக்கும் என்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பத்தி ஒரு வருடங்கள், இராணுவச் சீருடையுடன் பதவியில் இருந்த ஒருவரை....

என்னால் சர்வாதிகாரியாகத்தான் பார்க்க முடிகின்றது.

என்னைப்பொறுத்தவரை நடப்பதெல்லாம் ஒரு நாடகம். அதன் உள்பக்கம் எமக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இத்தனை மாதங்களாக இத்தனை நாட்டுப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர் நின்றுபிடித்திருக்கின்றார் என்றால் அவருக்கு அவரது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அத்துடன் அவர் பெரும் தவறுகள் செய்ததாக நான் அறியவில்லை. சதாம் உசைனுடன் ஒப்பிடக்கூட முடியாதவர். ஒரு காலத்தில் எமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர். 41 வருடங்கள் என்பது பெரிதுதான். ஆனால் இவரிடமிருந்து இன்னொருவரிடம் போனால் இது கூட அந்த மக்களுக்கு கிடைக்காது.

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் தேசிய வீரனாக ஆட்சியைப் ஆரம்பித்து சமயம் பார்த்து மேற்குலகால் ஏமாற்றப்பட்ட ஒரு சர்வாதிகாரி.

ஒரு காலத்தில் உலகில், புரட்சியாளர்களால் மதிக்கப்பட்டவர். தடம் மாறிப் போனார்.

நீண்ட காலம் அடக்குமுறைக்குள் வாழ்ந்ததால் அமைதியான மக்களாட்சி அமைய தாமதமாகும். போதாததிற்கு கட்டுப்பாடான இராணுவ பயிற்சியற்ற புரட்சியாளர்களிடம் உள்ள ஆயுதம் எவரிற்கு எதிராகவும் திரும்பலாம். இவர்களை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது மிக முக்கியம். மீண்டும் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட சந்தர்ப்பங்கள் இருந்தாலும், மில்லியன் / பில்லியன் கணக்கில் குண்டைக் கொண்டு

கொட்டிய மேற்குலகம் இலாபம் பார்க்க முதல் உள்ளூர் சண்டைகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை.

தற்போதுள்ள அனுபவமற்ற நிருவாகம் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது.

பி.கு.

எனது தெரிவு இல்லாததால் நான் வாக்கிடவில்லை.

Link to comment
Share on other sites

கடாபி பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அவரைப் பற்றி லிபிய மக்களுக்கே அதிகம் தெரியும். எங்களைப் பொறுத்தவரை.. அவர் சிங்கள எதிரியின் கூட்டாளி. இன அழிப்புக்கு ஒத்துப்போனவர். இதற்கான விடை இல்லை என்பதால்.. நான் எதனையும் தெரிவு செய்யவில்லை.

இதை எமது கோணத்திற்குள் வைத்து பார்க்கின்றீர்கள். சரியாக இருக்கலாம்.

நான் முன்வைத்த பார்வை இன்றைய உலக அரசியலை கருவாக வைத்து.

Link to comment
Share on other sites

அரபு நாடுகளில் எங்குமே மக்களாட்சி இல்லை என்றும் மத்தியகிழக்கில் இஸ்ரேலில் மட்டுமே மக்களாட்சி நடக்கின்றது என்பதை உலக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு.

அண்மையில் ஒரு பழக்கடை வாலிபனை கொலைசெய்தது மூலம், துனிசியாவில் ஆரம்பாமனது அரபு புரட்சி. அந்த சர்வாதிகாரி தப்பியோடினார். பின்னர், எகிப்தில் அது நடந்தபொழுது மேற்குலகம் சற்று ஆடிப்போனது. முபாரக் கைதாகி விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். ஆனால், மக்களாட்சி அங்கு அரங்கேறுமா என்பது கேள்வியே.

பின்னர் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமானது லிபிய மாற்றங்கள். மேற்குலகம் நேரடியாகவே போரில் இறங்கியது.

மூன்று நாடுகள் - வெவ்வேறு உலக அணுகுமுறை.

அதேவேளை பஹ்ரேய்ன் பிரச்சனை சவூதி அரபிய ஆதரவுடன் அணைக்கப்பட்டது. ஏமனில், சிரியாவில் தொடர்கின்றது.

உலக அரசியல் இடியப்ப சிக்கல் போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை கடாபி ஒரு தேசிய வீரன்...லிபியாவின் எதிர்காலம் மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமைந்து பின்னர் மீண்டும் ஒரு இராணுவ புரட்சி ஏற்படும் என்பது என் கருத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பார்வையில் கடாபி யார்?

* சர்வாதிகாரி

லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

* மேற்குலகின் கட்டுப்பாட்டுக்குள் அமையும்

Link to comment
Share on other sites

லிபிய மக்களை பொறுத்த வரையில் கடாபி ஒரு தேசிய வீரர்.அந்நாட்டில் தொழில் புரிந்த உறவினர் கூறியதாவது கடாபியை மக்கள் தெய்வமாக தொழுதார்கள் என்று.ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு வங்கியில் கல்விக்காக பணத்தை லிபிய அரசு இடுவதாக நண்பர் ஒருவர் கூறினார்.எந்தளவில் உண்மை என தெரியவில்லை.

மேற்கு நாடுகளின் அரசுகளும் அவர்களின் மீடியாக்களும் ஒருவரை பயங்கரவாதியாக்க சிந்திக்கும் மனிதன் விடவே கூடாது.அமெரிக்கா செய்த கொலைகளை விட கடாபி பெரிய கொலைகளை செய்யவில்லை. அப்போ எப்படி கடாபி பயங்கரவாதியாக முடியும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

இத்தனை மாதங்களாக இத்தனை நாட்டுப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர் நின்றுபிடித்திருக்கின்றார் என்றால் அவருக்கு அவரது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது.

---

கடந்த மாசி மாதம் 17ம் திகதி, கடாபிக்கு எதிராக புரட்சியாளர்கள் கிளர்தெழுந்த போது...

கடாபிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா தொடக்கம் சில நாடுகள் குரல் கொடுத்தன,

அதிலும்....மகிந்த தனது நாட்டுக்கு வந்தால்... பாதுகாப்பு கொடுக்கமுடியும் என்று கூறியதாக இங்கு தான் எங்கோ வாசிதேன். காலப் போக்கில் கடாபிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் வலுவாகவே.... எல்லா நாடும் வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்குவான், என்று கடாபியை கை கழுவி விட்டதாலேயே... கடாபியால் நாட்டை விட்டு தப்பி ஓட முடியாமல்..... கழிவு தண்ணீர் ஓடும் வாய்காலுக்குள் ஒழித்திருந்து இறந்ததை, கடைசிவரை தனது நாட்டில், நின்று போராடியிருக்கிறார் என்று கடாஃபியை போராட்ட வீரானாக விசுகு சித்தரிப்பது சரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீல ஸ்ரீ பெர்சியாவுக்கு கெட்ட காலம் பிறக்குது. கெட்ட காலம் பிறக்குது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னப்பா புரட்சி படை.....மேற்குலகின் ஆதரவுடன் செயல்பட்ட கூலிப்படைக்கு புரட்சிபடை என்று மேற்குலக ஊடகங்கள் சொன்னா நாங்களும் நம்ப வேணுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் மேற்குலகால் ஏமாற்றபட்ட ஒரு மனிதன்,

லிபியாவின் எதிர்காலத்தை பொறுத்தவரையில் மேற்குலகின் ஆளுமையிலே இருக்கவேண்டிய துரதிஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாசி மாதம் 17ம் திகதி, கடாபிக்கு எதிராக புரட்சியாளர்கள் கிளர்தெழுந்த போது...

கடாபிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா தொடக்கம் சில நாடுகள் குரல் கொடுத்தன,

அதிலும்....மகிந்த தனது நாட்டுக்கு வந்தால்... பாதுகாப்பு கொடுக்கமுடியும் என்று கூறியதாக இங்கு தான் எங்கோ வாசிதேன். காலப் போக்கில் கடாபிக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் வலுவாகவே.... எல்லா நாடும் வில்லங்கத்தை ஏன் விலைக்கு வாங்குவான், என்று கடாபியை கை கழுவி விட்டதாலேயே... கடாபியால் நாட்டை விட்டு தப்பி ஓட முடியாமல்..... கழிவு தண்ணீர் ஓடும் வாய்காலுக்குள் ஒழித்திருந்து இறந்ததை, கடைசிவரை தனது நாட்டில், நின்று போராடியிருக்கிறார் என்று கடாஃபியை போராட்ட வீரானாக விசுகு சித்தரிப்பது சரியல்ல.

இதை இப்படிச்சொன்னால் நல்லது என்று நினைக்கின்றேன்.

இங்கு பரவலாக பேசப்படும் விடயம் இது இன்று.

2 வருடங்களுக்கு முன் தனது பெண் பாதுகாப்பாளர்களுடன் சிவப்பு கம்பளவரவேற்புடன் கடாபி பிரான்சுக்கு அழைக்கப்பட்டார். அதன்போது பிரெஞ்சு ஐனாதிபதி பல மில்லியன் பெறுமதியான அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றைக்கொடுத்து கையெழுத்திடக்கேட்டார்.

அதில் உள்ள குழிபறித்தல்களை உணர்ந்த கடாபி தனது நீண்டநாள் நண்பராகிய பிரான்சின் அதிபர் சார்கோசியிடமே முடியாது என்று சொல்லிவிட்டார்.

அன்று பிடித்தது சனியன் கடாபிக்கு. அந்த ஒபப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால் இன்னும் 1000 வருடத்துக்கும் மேலாக கடாபியை பிரெஞ்சுசுப்படைகள் லிபியாவில் காத்துநின்றிருக்கும். ஆனால் இன்று கடாபியை அழிக்க முன்னின்றதே பிரெஞ்சுப்படைகள் தான்.

இன்று பிரெஞ்சு மக்களிடையே ஒரு கேள்வியுண்டு.

அது லிபியாவில் ஆட்சி மாற்றத்துக்காக சார்கோசி மக்கள் பணத்தில் பல மில்லியன்களைச்செலவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அதற்கு அடுத்த வருடம் தேர்தலைச்சந்திக்கவேண்டியுள்ள சார்கோசியின் பதில் என்னவாக இருக்கும்?

லிபியா இத்தனை வருடங்கள் என் கையில் என்பதாகவே இருக்கும்.

அரசியலில் இது எல்லாம் சகசமுங்கோ.........

Link to comment
Share on other sites

என்னைப்பொறுத்தவரை நடப்பதெல்லாம் ஒரு நாடகம். அதன் உள்பக்கம் எமக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இத்தனை மாதங்களாக இத்தனை நாட்டுப்படைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர் நின்றுபிடித்திருக்கின்றார் என்றால் அவருக்கு அவரது மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. அத்துடன் அவர் பெரும் தவறுகள் செய்ததாக நான் அறியவில்லை. சதாம் உசைனுடன் ஒப்பிடக்கூட முடியாதவர். ஒரு காலத்தில் எமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தவர். 41 வருடங்கள் என்பது பெரிதுதான். ஆனால் இவரிடமிருந்து இன்னொருவரிடம் போனால் இது கூட அந்த மக்களுக்கு கிடைக்காது.

விசுகு அண்ணா,

நான் ஜோர்டான்காரரிடம் இருந்து அறிந்து கொண்டதில்.. :unsure:

பதவிக்கு வந்த புதிதில் கடாபி மிகவும் மக்களால் விரும்பப்பட்டவர். ஆனால் ஒரு பத்தாண்டுகள் கழிந்தவுடன் அவரைச் சுற்றியிருந்த புகழ்பாடிகளின் புண்ணியத்தில் அவர் தலைக்குள் போதை ஏறிவிட்டிருந்தது. :huh:

மீதி 31 ஆண்டுகளில்மக்கள் ஆதரவு என்பது ஏறக்குறைய இல்லாமலே போய்விட்டிருந்தது. ஆனால் இவர் "கடாபி" எனும் பழங்குடியில் (Tribe) இருந்து வந்தவர். கடைசியாக அவர் தங்கியிருந்த Sirte எனும் இடம் அந்தப் பழங்குடியினர் பிரதேசம். அங்கே அவருக்கு ஆதரவு ஓரளவு இருந்திருக்கிறது. :unsure:

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்கிற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது..! :unsure:

டிஸ்கி: நான் தமிழ்சிறி அண்ட் கோ மாதிரிதான் வாக்களிச்சிருக்கிறன்..! :D

Link to comment
Share on other sites

அது என்னப்பா புரட்சி படை.....மேற்குலகின் ஆதரவுடன் செயல்பட்ட கூலிப்படைக்கு புரட்சிபடை என்று மேற்குலக ஊடகங்கள் சொன்னா நாங்களும் நம்ப வேணுமோ?

கனடாவின் சிபிசியில் புரட்சிப்படை எண்டாங்கள்.. நேற்று கடாபி காலமானதும் லிபியப் படைகள் கடாபியைக் கொன்றார்கள் என்று செய்தி வாசித்தார்கள்..! :huh:

நல்லாத்தான் திருப்புறாங்கப்பா பிளேட்டை..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

----டிஸ்கி: நான் தமிழ்சிறி அண்ட் கோ மாதிரிதான் வாக்களிச்சிருக்கிறன்..!
தமிழ்சிறி & கோ, உலக அரசியலை கரைச்சுக் குடித்தவர்கள்.அவர்கள் சரியான இடத்திலே தான் வாக்குப் போடுவார்கள்.biggrin.giflaugh.gif
Link to comment
Share on other sites

தமிழ்சிறி & கோ - இதுவரை கேள்விப்பட்டது மகிந்த & கோ :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி & கோ - இதுவரை கேள்விப்பட்டது மகிந்த & கோ

மகிந்த & கோ உள்ளூராட்சி அரசியலுக்கு மட்டுமே...bye.gifbiggrin.gif
Link to comment
Share on other sites

என்னதான் சொல்லுங்கோ கடாபி தன் நாட்டு மக்களுக்கு நன்மையே செய்துள்ளார்.ஐரோப்பாவிற்கு எரிபொருள் வழங்குவதிலிருந்து ,இப்போ என்ன நடக்கப்போகின்றது, குத்தகைக்கு போட்டி போட்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அங்கே கால் வைக்கப்போகின்றது,யாரால் தடுக்கமுடியும்.உண்மை இப்படியிருக்கும்போது,ஏன் வீணாய்?

Link to comment
Share on other sites

என்னதான் சொல்லுங்கோ கடாபி தன் நாட்டு மக்களுக்கு நன்மையே செய்துள்ளார்.ஐரோப்பாவிற்கு எரிபொருள் வழங்குவதிலிருந்து ,இப்போ என்ன நடக்கப்போகின்றது, குத்தகைக்கு போட்டி போட்டு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அங்கே கால் வைக்கப்போகின்றது,யாரால் தடுக்கமுடியும்.உண்மை இப்படியிருக்கும்போது,ஏன் வீணாய்?

உலகம் முழுவதுமாக பல பில்லியன்கள் பதுக்கப்பட்டுள்ளன, 60-80 பில்லியன்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இவர் இறப்பால் சில மேற்குலக அரசுகள், நிறுவனங்கள் உட்பட பலருக்கு கொண்டாடம். இந்தப்பணத்தையும் மக்களுக்காக செலவிட்டு சில அரசியல் மாற்றங்களையும் கொண்டுவந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

மேற்குலகால் ஏமாற்றப்பட்ட தலைவர் அதுமட்டுமல்ல அவர்களால் பாவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.