Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

empty.gifஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்

தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக்

கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு

ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா

ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர்.

இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யாவீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான முறையில் கழித்துவருகிறார். குடும்பத்தார் அவரை அன்பு மழையில் நனைத்து வருகின்றனர். பிரசவ தேதி நெருங்குவதால் அவர் பதற்றமாக இல்லை மாறாக சந்தோஷமாக உள்ளார் என்று அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்தார்.

ஐஸ்வர்யாவுக்கு இந்த மாதத்தின் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால்,இன்றைக்கே குழந்தை பிறந்துவிட்டால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே பிறந்த நாளாக இருக்குமே என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.

அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு...!

நன்றி தட்ஸ் தமிழ்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யாவுக்கு வயது 38 என்றாலும் இன்னமும் 16 ஆகத்தான் இருக்கின்றார்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்வர்யா ராய் நமக்கு எந்த வகையில உறவு.. ஓ.. தமிழ் சினிமால நடிச்சிருக்கால்ல..!

ஐஸ் அக்காக்கு வாழ்த்துக்கள். :):lol::icon_idea:

அக்காச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸூ, இன்று போல்... என்றும் அழகாக இருக்க, வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் வேறோரு திரியில் சுஜி அழகான பெண்கள் எத்தனை பேரோடு படுத்தாலும் அவர்களை திருமணம் செய்ய ஆண்கள் தயராக இருப்பார்கள் என்று பொருள் பட எழுத சிலர் வந்து ஆண்கள் அப்படி இல்லை சுஜி எப்படி தப்பாக எழுதலாம் என விவாதித்து விட்டு வேறோரு திரியில் வந்து ஜஸ்வர்யா அழகாக இருக்கிறார் என்னும் ஒரு காரணத்தால் எப்படி உங்களால் வாழ்த்து சொல்ல முடிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு ஒரு பச்சை

நெத்தியடி

கருத்துக்களத்தில் வேறோரு திரியில் சுஜி அழகான பெண்கள் எத்தனை பேரோடு படுத்தாலும் அவர்களை திருமணம் செய்ய ஆண்கள் தயராக இருப்பார்கள் என்று பொருள் பட எழுத சிலர் வந்து ஆண்கள் அப்படி இல்லை சுஜி எப்படி தப்பாக எழுதலாம் என விவாதித்து விட்டு வேறோரு திரியில் வந்து ஜஸ்வர்யா அழகாக இருக்கிறார் என்னும் ஒரு காரணத்தால் எப்படி உங்களால் வாழ்த்து சொல்ல முடிகிறது?

நீங்க ஒரு நக்கீரி...... நக்கீரனுக்கு , பெண்பால் அதுதானுங்களே!

ஆனாலும் யுவரானர்... உங்க தரப்பு தீர்ப்பு வலுவா இல்ல!

வாழ்த்துதானே சொல்றாங்க?!

செமத்தியா வாங்கிகட்டிக்கபோறீங்க & இன்னும்,, நாலுபக்கம் இந்த திரி

இழுபடத்தாண்டா போகுது!!

பைத-வே இரண்டாவது பச்சை என்னோடது,, உங்க துணிச்சலுக்கு அது!!

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் வேறோரு திரியில் சுஜி அழகான பெண்கள் எத்தனை பேரோடு படுத்தாலும் அவர்களை திருமணம் செய்ய ஆண்கள் தயராக இருப்பார்கள் என்று பொருள் பட எழுத சிலர் வந்து ஆண்கள் அப்படி இல்லை சுஜி எப்படி தப்பாக எழுதலாம் என விவாதித்து விட்டு வேறோரு திரியில் வந்து ஜஸ்வர்யா அழகாக இருக்கிறார் என்னும் ஒரு காரணத்தால் எப்படி உங்களால் வாழ்த்து சொல்ல முடிகிறது?

உங்களுடைய புரிதலுக்கு இன்னமும் நிறைய தூரம்..............

காலபோக்கில் கைகூட எனது வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் வேறோரு திரியில் சுஜி அழகான பெண்கள் எத்தனை பேரோடு படுத்தாலும் அவர்களை திருமணம் செய்ய ஆண்கள் தயராக இருப்பார்கள் என்று பொருள் பட எழுத சிலர் வந்து ஆண்கள் அப்படி இல்லை சுஜி எப்படி தப்பாக எழுதலாம் என விவாதித்து விட்டு வேறோரு திரியில் வந்து ஜஸ்வர்யா அழகாக இருக்கிறார் என்னும் ஒரு காரணத்தால் எப்படி உங்களால் வாழ்த்து சொல்ல முடிகிறது?

நெடுக்ஸ் எழுதிய கருத்து எனக்கே விளங்கிவிட்டது.உங்களுக்கு விளங்கவில்லையா?பச்சை வேறை..இன்னொரு திரியில் விசுகு அண்ணா மக்கள் என்று பன்மையில் எழுதியிருந்தும் ஒருமையில் மகன் என்று விழித்து அறிவிலி எழுதியதற்கும் பச்சை...முதலில் முழுமையாக விளக்கத்துடன் வாசியுங்கள் அதன் பின்னர்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எழுதிய கருத்து எனக்கே விளங்கிவிட்டது.உங்களுக்கு விளங்கவில்லையா?பச்சை வேறை..இன்னொரு திரியில் விசுகு அண்ணா மக்கள் என்று பன்மையில் எழுதியிருந்தும் ஒருமையில் மகன் என்று விழித்து அறிவிலி எழுதியதற்கும் பச்சை...முதலில் முழுமையாக விளக்கத்துடன் வாசியுங்கள் அதன் பின்னர்...

எனக்கு எப்படி விளங்கும் நீங்கள் தானே வாத்தியார் நீங்கள் விளக்கமாய் சொல்லுங்கோ நெடுக்ஸ் என்ன எழுதி இருக்கார் என?...சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் பிழை விடுவினம் தான் அந்த சந்தர்ப்பம் பல பேருக்கு கிடைப்பதில்லை,பல பேர்[90%] இந்த சமுதாயத்திற்கு பயந்து தாங்கள நல்லவர்கள் மாதிரி நடிக்கிறார்கள்...நெடுக்சே பேசாமல் இருக்கிறார் நீங்கள் இருவரும் ஏன் குத்தி முறீகிறீர்கள்?...யாழில் எத்தனை பேருடைய பிறந்த நாள் வருகிறது யாருக்காவது அவர் வாழ்த்து சொல்லி இருக்கிறாரா?...ஜஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொல்ல அவர் அழகி என்பதைத் தவிர வேற என்ன காரணம் இருக்கு என சொல்லுங்கள் பார்ப்போம்?...சுஜி சொன்ன கருத்தும்,நான் சொல்கிற கருத்தும் ஒன்டு தான் பெண்களூக்கு அழகு இருந்தால் எதுவும் சாதிக்கலாம் ஆண்களூக்கு அது தான் தேவை...மற்றவர்களூக்கு படிப்பிக்க முன் நீங்கள் சமுதாயத்தை படியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அழகை ரசிப்பதில் தப்பு இல்லை அதை இங்கே யாரும் பிழை சொல்லவில்லை வாழ்க்கை என வரும் போது ஆண்களூக்கு அழகு மட்டுமே முக்கியமாகப்படுகிறது...ஒரு அழகான பெண் எவ்வளவு கீழ்த் தரமான நடத்தை கொண்டவளாக இருந்தாலும் அவரைத் திருமணம் செய்ய பல ஆண்கள் வரிசை கட்டி நிற்பினம் இதை நான் எத்தனையோ தரம் கண்டு இருக்கிறன்...நான் சொல்ல வந்தது அழகு முக்கியம் என்டு இல்லை என கொஞ்சப் பேர் வாதடிச்சினம் ஆனால் அழகை ரசிக்கினமாம் அப்படி எனடால் வாழ்க்கைக்கோ சரி,ரசிப்பதற்கோ சரி அழகு முக்கியம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா அநியாயமா இருக்குது.. தமிழ் சினிமாவிலும் நடித்த.. நடிக்கும்.. ஐஸ் அக்காவின் விசிறிகளில் நானும் ஒருவன். இதற்கு அப்பால் உலக அழகியாவும் அவாவை தெரியும். அந்த வகையில் தான் அவாக்கும் நமக்கும் என்ன உறவு என்று கேட்டுவிட்டு.. பதிலும் சொல்லி வாழ்த்தும் சொல்லி இருக்கிறன். இதென்னவோ.. நான் அவாண்ட கையைப் பிடிச்சு இழுத்த கணக்கா எல்லோ விவாதம் போய்க்கிட்டு இருக்குது. அதுக்கு பச்சை வேற குத்தி ஆசுவாசம் வேற..! யாழ் எங்கே போய்க்கிட்டு இருக்கு.. ரதி அக்கா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கிறா.. அது ஒட்டல்ல..! கொடுமை சரவணா. :lol:

ஒரு விசிறி.. வாழ்த்துச் சொல்லவும் இத்தனை விசயங்களை தலைக்க வைச்சு யோசிக்கனுமா.. போங்கம்மா.. நீங்களும் உங்க படுக்கைகளும்.. சும்மா ஊத்தக் கதையும் ஊத்தச் சிந்தனையும் தான் எப்ப பாரு....???! நாங்க ஆண்கள் அப்படியல்ல. ஒரு மனிசனுக்கு மனசில தெளிவிருந்தாச் சரி... 1000 பொண்ணுங்கள நிர்வாணமா நிறுத்தினாலும் செய்த வேண்டிய காரியத்தை செய்து முடிப்பான். உதுக்கெல்லாம் அசருற வர்க்கம் அல்ல.. நாங்க..! :):lol::icon_idea:

http://www.youtube.com/watch?v=SRzoLVNgHoI&feature=relmfu

இந்தப் பாட்டை இதில் ஐஸ்வரியாவின் நடிப்பை ரசிக்காதவை.. ஒருக்கா வந்து உண்மையை சொல்லட்டும் பார்க்கலாம். மற்றவர்களின் கருத்துக்குப் பின்னால் ஒளிஞ்சிருக்கிறது... பேடித்தனம். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,

பிபா விழாவிற்கு சொறிலங்காக்கு போகமல் தோல்வியடைய செய்ததில் இவரின் குடும்பத்திற்கு பங்கிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பிபா விழாவிற்கு சொறிலங்காக்கு போகமல் தோல்வியடைய செய்ததில் இவரின் குடும்பத்திற்கு பங்கிருக்கு

அதையெல்லாம் அப்பவே மறந்திடுவம். நன்றிக்கடன்.. என்ன நாய் உணவா என்று கேட்கிற கூட்டம் நாங்கள். எங்கட சொறிக் கருத்தை நியாயப்படுத்த.. ஐஸ் அக்காவை படுக்கை வர கூட கொண்டு வர தயங்கமாட்டம் என்பதற்கு ரதியக்காவின் கருத்து நல்ல சாட்சியம்..!

அதை எழுத.. துணிச்சல்..வேற இருக்காம்.. எல்ல. கடவுளே.. எதில் எதில் எல்லாம் எம்மவர்கள் துணிச்சலை எதிர்பார்க்கினம்.. பாருங்க.. ஒரு ஆக்கபூர்வமான விடயத்தை செய்வதற்கு வராத துணிச்சல்.. உதுகளில வந்திடும்..! :):icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா அநியாயமா இருக்குது.. தமிழ் சினிமாவிலும் நடித்த.. நடிக்கும்.. ஐஸ் அக்காவின் விசிறிகளில் நானும் ஒருவன். இதற்கு அப்பால் உலக அழகியாவும் அவாவை தெரியும். அந்த வகையில் தான் அவாக்கும் நமக்கும் என்ன உறவு என்று கேட்டுவிட்டு.. பதிலும் சொல்லி வாழ்த்தும் சொல்லி இருக்கிறன். இதென்னவோ.. நான் அவாண்ட கையைப் பிடிச்சு இழுத்த கணக்கா எல்லோ விவாதம் போய்க்கிட்டு இருக்குது. அதுக்கு பச்சை வேற குத்தி ஆசுவாசம் வேற..! யாழ் எங்கே போய்க்கிட்டு இருக்கு.. ரதி அக்கா மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கிறா.. அது ஒட்டல்ல..! கொடுமை சரவணா. :lol:

ஒரு விசிறி.. வாழ்த்துச் சொல்லவும் இத்தனை விசயங்களை தலைக்க வைச்சு யோசிக்கனுமா.. போங்கம்மா.. நீங்களும் உங்க படுக்கைகளும்.. சும்மா ஊத்தக் கதையும் ஊத்தச் சிந்தனையும் தான் எப்ப பாரு....???! நாங்க ஆண்கள் அப்படியல்ல. ஒரு மனிசனுக்கு மனசில தெளிவிருந்தாச் சரி... 1000 பொண்ணுங்கள நிர்வாணமா நிறுத்தினாலும் செய்த வேண்டிய காரியத்தை செய்து முடிப்பான். உதுக்கெல்லாம் அசருற வர்க்கம் அல்ல.. நாங்க..! :):lol::icon_idea:

http://www.youtube.com/watch?v=SRzoLVNgHoI&feature=relmfu

இந்தப் பாட்டை இதில் ஐஸ்வரியாவின் நடிப்பை ரசிக்காதவை.. ஒருக்கா வந்து உண்மையை சொல்லட்டும் பார்க்கலாம். மற்றவர்களின் கருத்துக்குப் பின்னால் ஒளிஞ்சிருக்கிறது... பேடித்தனம். :lol:

நான் கேட்டதிற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் அழகு முக்கியமா? இல்லையா?...முக்கியம் என்டால் ஆம் என சொல்லுங்கள் இல்லை என்டால் எதற்காக அவரை ரசிக்கிறீர்கள்?

ஜஸு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,

பிபா விழாவிற்கு சொறிலங்காக்கு போகமல் தோல்வியடைய செய்ததில் இவரின் குடும்பத்திற்கு பங்கிருக்கு

கருணா அம்மான் புலியோடு இருக்கும் போது நல்லது தான் செய்தார் அதற்காக இப்ப அவரை ஏற்றுக் கொள்கிறோமா?...மேலும் பிபா விழாவிற்கு இவர்கள் குடும்பம் போகாதற்கு முக்கிய காரணம் ரஜனி அத்தோடு குடும்ப தலைவன் அமிதாப் எடுத்த முடிவு இதில் எந்த விதத்தில் ஜஸ்சுக்கு நன்றி சொல்ல வேண்டும்?...நாளைக்கே மகிந்தாவின் அழைப்பை ஏற்று அவர்கள் இலங்கை போனால் அவர்கள் துரோகியா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்டதிற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் அழகு முக்கியமா? இல்லையா?...முக்கியம் என்டால் ஆம் என சொல்லுங்கள் இல்லை என்டால் எதற்காக அவரை ரசிக்கிறீர்கள்?

நீங்கள் இப்படி ஒரு கேள்வியையா கேட்டிருக்கீங்க.. இல்லையே. அழகிகளைக் கண்டால் நெடுக்காலபோவன்.. படுக்கைக்கு அழைப்பார் என்ற மாதிரி எல்லோ இருக்குது..??!

ஐஸ் அக்காக்கு நான் விசிறி. அதில் அவரின் அழகு.. நடிப்பு.. சமூக அக்கறை.. நடத்தை என்று பல காரணிகள் அடங்கி இருக்குது.

நான் அன்னை தெராசாவின் மிகப் பெரிய விசிறியும் கூட. அங்கு அவரின் அர்ப்பணிப்பு.. சமூக அக்கறை.. எனக்கு உதாரணமா இருக்குது.

மேடம் மேரி கியூரி ட விசிறியும் கூட. அவாட விடாமுயற்சி.. அறிவியலில் அவா செய்த சாதனைகள்... கணவனின் உழைப்பை மதித்து தானும் அதற்காக உழைத்து அதை அறிவியலில் கண்டுபிடிப்பாக்கியமை என்று எத்தனையோ விடயங்கள்.

சினிமால.. மனோரமா ஆச்சி.. கோவை சரளா இப்படியான காமடியன்களின் நடிப்பும் பிடிக்கும்... அதனால அவங்களையும் பிடிக்கும். அதற்கா அவையின்ர அழகா அங்கு முன்னிலைல நிற்குது. இல்லையே..!!!

நடிக்கைங்கன்னா.. அழகா இருப்பாங்க.. மேக்கப் போட்டாவது.. அழகா காட்டுவாங்க.. அது அவங்க தொழில். நாங்க.. அந்த அழகை விட.. (இதற்கு.. அழகை ரசிக்கல்ல என்பது அர்த்தமல்ல.. அழகை ரசிக்கக் கூடாது என்பதும்.. தவறு.) அவங்க கொண்டுள்ள திறமையை.. மனிதத்தை அதிகம் ரசிக்கிறம்.

பெண்களின் அழகை கண்டவுடன் படுக்கைக்கு அழைக்கிறது தான் ஆண்களின் குணம் என்பது மகா தப்பான.. மட்டமான சிந்தனை... இதனை எனியாவது பெண்கள்.. கைவிடுங்கோ..! உண்மையில் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கூட மனிதாபிமான ரீதியில் கூட எங்களால் முடிந்தால் நிச்சயம் உதவுவோம். காரணங்கள்.. நீங்கள்.. நாங்கள் எல்லோரும் மனிதர்கள். மனித சமூகத்தைச் சேர்ந்தவர்கள். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான்

கருணா அம்மான் இல்லை, நாக்கை வெளியில் தொங்கவிட்டு எச்சில் எலும்புத்துண்டிற்கு அலையும் கரு நாய்,

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,

பிபா விழாவிற்கு சொறிலங்காக்கு போகமல் தோல்வியடைய செய்ததில் இவரின் குடும்பத்திற்கு பங்கிருக்கு

உடையார் காலையில் வேலைக்கு போற அவச‌ர‌த்தில் நின்ட‌தால் சரியாக பதில் அளிக்கவில்லை இங்கே நான் ஜஸ்வர்யா அழகில்லை என்டோ,அவவின் அழகை ர‌சிக்க கூடாது எனவோ சொல்லவில்லை வெறோரு திரியில் அழகு முக்கியமில்லை,ஆண்கள் அழகைப் பார்த்து மயங்குவதில்லை என கொஞ்ச‌ப் பேர் வாதடிச்சினம் அவர்கள் எப்படி இவவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இவவின் அழகை ர‌சிக்கலாம் என்பது தான் எனது கேள்வி?...மற்றது இத் திரியில் ஒருத்தரும் கருணா நல்லவன் என வாதிட‌வில்லை அவர் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்...நீங்கள் கூட‌ நான் கேட்ட கேள்விக்குநேர‌டியாக பதில் சொல்லாமல் நாக்கை சுத்தி மூக்கை தொடுறீங்கள்

நீங்கள் இப்படி ஒரு கேள்வியையா கேட்டிருக்கீங்க.. இல்லையே. அழகிகளைக் கண்டால் நெடுக்காலபோவன்.. படுக்கைக்கு அழைப்பார் என்ற மாதிரி எல்லோ இருக்குது..??!

ஐஸ் அக்காக்கு நான் விசிறி. அதில் அவரின் அழகு.. நடிப்பு.. சமூக அக்கறை.. நடத்தை என்று பல காரணிகள் அடங்கி இருக்குது.

நான் அன்னை தெராசாவின் மிகப் பெரிய விசிறியும் கூட. அங்கு அவரின் அர்ப்பணிப்பு.. சமூக அக்கறை.. எனக்கு உதாரணமா இருக்குது.

மேடம் மேரி கியூரி ட விசிறியும் கூட. அவாட விடாமுயற்சி.. அறிவியலில் அவா செய்த சாதனைகள்... கணவனின் உழைப்பை மதித்து தானும் அதற்காக உழைத்து அதை அறிவியலில் கண்டுபிடிப்பாக்கியமை என்று எத்தனையோ விடயங்கள்.

சினிமால.. மனோரமா ஆச்சி.. கோவை சரளா இப்படியான காமடியன்களின் நடிப்பும் பிடிக்கும்... அதனால அவங்களையும் பிடிக்கும். அதற்கா அவையின்ர அழகா அங்கு முன்னிலைல நிற்குது. இல்லையே..!!!

நடிக்கைங்கன்னா.. அழகா இருப்பாங்க.. மேக்கப் போட்டாவது.. அழகா காட்டுவாங்க.. அது அவங்க தொழில். நாங்க.. அந்த அழகை விட.. (இதற்கு.. அழகை ரசிக்கல்ல என்பது அர்த்தமல்ல.. அழகை ரசிக்கக் கூடாது என்பதும்.. தவறு.) அவங்க கொண்டுள்ள திறமையை.. மனிதத்தை அதிகம் ரசிக்கிறம்.

பெண்களின் அழகை கண்டவுடன் படுக்கைக்கு அழைக்கிறது தான் ஆண்களின் குணம் என்பது மகா தப்பான.. மட்டமான சிந்தனை... இதனை எனியாவது பெண்கள்.. கைவிடுங்கோ..! உண்மையில் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கூட மனிதாபிமான ரீதியில் கூட எங்களால் முடிந்தால் நிச்சயம் உதவுவோம். காரணங்கள்.. நீங்கள்.. நாங்கள் எல்லோரும் மனிதர்கள். மனித சமூகத்தைச் சேர்ந்தவர்கள். :):icon_idea:

நான் கேட்க கேள்விக்கு உங்களால் நேர‌டியாக பதில் சொல்ல முடியவில்லை.நன்றி...நீங்கள் என குறிப்பிட்டது உங்களை இல்லை அப்படி உங்களைத் தான் என நீங்கள் நினைத்தீங்கள் என்டால் நீங்கள் ஏதோ பிழை செய்த படியால் தான் உங்கள் மனம் குறுகுறுக்கிறது...ஆண்கள் பொதுவான அழகான பெண்களுக்கு மயங்குவார்கள்[அப்படி இல்லாதவர்களும் இருக்கிறார்கள்] அதை நீங்கள் அப்படி இல்லை என வாதிட்டு விட்டு இந்த திரியில் வந்து அழகை ர‌சிக்கலாம் என்பீர்கள் பிறகு என்னுமொரு திரியில் வந்து "ஆண்கள் திருமணம் செய்யும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது சரியா/பிழையா?" என கேட்டால் சரி என்பீர்கள் அப்படியாயின் வேற திரியில் நீங்கள் சொன்ன ஆண்கள் அழகுக்கு மயங்குவதில்லை என்ட‌ கருத்து அடிபட்டு போய் விட்டது என அர்த்தம்.

ஆண்கள் அழகான பெண்களை கண்டால் படுக்கைக்கு கூப்பிட மாட்டார்கள் என உங்களை வைத்துக் கொண்டு சொல்ல வேண்டாம்...கண் முன்னே எத்தனை உ+ம் இருக்கு.நடிகை ர‌ம்பாவை கட்டினது யார்? கட்டினதிற்கு என்ன கார‌ணம்?...ஆண்களுக்கு வக்காலத்து வாங்க முன் கொஞ்ச‌ யோசியுங்கள்...ஆண்கள் எல்லோரும் உத்தமர்கள் இல்லை அதே போல பெண்கள் எல்லோரும் சீதை இல்லை.

மேல் உள்ள பதிவில் பச்சை குத்திறதை பத்தி எழுதி இருந்தீங்கள்...ஒரு நாள் மோகன் அண்ணா யார்,யாருக்கு பச்சை குத்தினது என பார்க்கிறதிற்காக திறந்து விட்டார் நான் எனக்கு யார் பச்சை குத்தினது என பார்த்ததை விட‌ உங்கள மாதிரி முக்கியமானவர்களுக்கு யார் பச்சை குத்தினது என்று தான் பார்த்தன்.ஒரு பெயரில் கருத்து எழுதிப் போட்டு மற்ற பெயரில் வந்து பச்சை குத்திற ஆள் நான் இல்லை.

நீங்கள் ஜஸ்சை ர‌சியுங்கள்,இல்லா விட்டால் விடுங்கள் அது பிர‌ச்ச‌னை இல்லை பிர‌ச்ச‌னை இதற்கு முதல் திரியில் நீங்கள் சொன்னது தான்.இனி மேலாவது ஒரு திரியில் கருத்து எழுதி விட்டு அதை மாற்றி வேறோரு திரியில் எழுத வேண்டாம்...எனக்கு எதாவது பிர‌ச்ச‌னை உண்மையான மனிதனிட‌ம் தான் போவேன் உங்களை மாதிரி நேர‌த்திற்கு,நேர‌ம் கதைப்பவர்களிட‌ம் தான் போக மாட்டேன்...உண்மையில் உங்களுக்கு தான் ஏதோ பிர‌ச்ச‌னை இருக்கிறது யாழில் எழுதி கேளுங்கள் உண்மையான அன்புட‌ன் பதில் சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் காலையில் வேலைக்கு போற அவச‌ர‌த்தில் நின்ட‌தால் சரியாக பதில் அளிக்கவில்லை இங்கே நான் ஜஸ்வர்யா அழகில்லை என்டோ,அவவின் அழகை ர‌சிக்க கூடாது எனவோ சொல்லவில்லை வெறோரு திரியில் அழகு முக்கியமில்லை,ஆண்கள் அழகைப் பார்த்து மயங்குவதில்லை என கொஞ்ச‌ப் பேர் வாதடிச்சினம் அவர்கள் எப்படி இவவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இவவின் அழகை ர‌சிக்கலாம் என்பது தான் எனது கேள்வி?...மற்றது இத் திரியில் ஒருத்தரும் கருணா நல்லவன் என வாதிட‌வில்லை அவர் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்...நீங்கள் கூட‌ நான் கேட்ட கேள்விக்குநேர‌டியாக பதில் சொல்லாமல் நாக்கை சுத்தி மூக்கை தொடுறீங்கள்

நான் கேட்க கேள்விக்கு உங்களால் நேர‌டியாக பதில் சொல்ல முடியவில்லை.நன்றி...நீங்கள் என குறிப்பிட்டது உங்களை இல்லை அப்படி உங்களைத் தான் என நீங்கள் நினைத்தீங்கள் என்டால் நீங்கள் ஏதோ பிழை செய்த படியால் தான் உங்கள் மனம் குறுகுறுக்கிறது...ஆண்கள் பொதுவான அழகான பெண்களுக்கு மயங்குவார்கள்[அப்படி இல்லாதவர்களும் இருக்கிறார்கள்] அதை நீங்கள் அப்படி இல்லை என வாதிட்டு விட்டு இந்த திரியில் வந்து அழகை ர‌சிக்கலாம் என்பீர்கள் பிறகு என்னுமொரு திரியில் வந்து "ஆண்கள் திருமணம் செய்யும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது சரியா/பிழையா?" என கேட்டால் சரி என்பீர்கள் அப்படியாயின் வேற திரியில் நீங்கள் சொன்ன ஆண்கள் அழகுக்கு மயங்குவதில்லை என்ட‌ கருத்து அடிபட்டு போய் விட்டது என அர்த்தம்.

ஆண்கள் அழகான பெண்களை கண்டால் படுக்கைக்கு கூப்பிட மாட்டார்கள் என உங்களை வைத்துக் கொண்டு சொல்ல வேண்டாம்...கண் முன்னே எத்தனை உ+ம் இருக்கு.நடிகை ர‌ம்பாவை கட்டினது யார்? கட்டினதிற்கு என்ன கார‌ணம்?...ஆண்களுக்கு வக்காலத்து வாங்க முன் கொஞ்ச‌ யோசியுங்கள்...ஆண்கள் எல்லோரும் உத்தமர்கள் இல்லை அதே போல பெண்கள் எல்லோரும் சீதை இல்லை.

மேல் உள்ள பதிவில் பச்சை குத்திறதை பத்தி எழுதி இருந்தீங்கள்...ஒரு நாள் மோகன் அண்ணா யார்,யாருக்கு பச்சை குத்தினது என பார்க்கிறதிற்காக திறந்து விட்டார் நான் எனக்கு யார் பச்சை குத்தினது என பார்த்ததை விட‌ உங்கள மாதிரி முக்கியமானவர்களுக்கு யார் பச்சை குத்தினது என்று தான் பார்த்தன்.ஒரு பெயரில் கருத்து எழுதிப் போட்டு மற்ற பெயரில் வந்து பச்சை குத்திற ஆள் நான் இல்லை.

நீங்கள் ஜஸ்சை ர‌சியுங்கள்,இல்லா விட்டால் விடுங்கள் அது பிர‌ச்ச‌னை இல்லை பிர‌ச்ச‌னை இதற்கு முதல் திரியில் நீங்கள் சொன்னது தான்.இனி மேலாவது ஒரு திரியில் கருத்து எழுதி விட்டு அதை மாற்றி வேறோரு திரியில் எழுத வேண்டாம்...எனக்கு எதாவது பிர‌ச்ச‌னை உண்மையான மனிதனிட‌ம் தான் போவேன் உங்களை மாதிரி நேர‌த்திற்கு,நேர‌ம் கதைப்பவர்களிட‌ம் தான் போக மாட்டேன்...உண்மையில் உங்களுக்கு தான் ஏதோ பிர‌ச்ச‌னை இருக்கிறது யாழில் எழுதி கேளுங்கள் உண்மையான அன்புட‌ன் பதில் சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள் :)

நீங்களும் குழம்பி வாசகர்களையும் குழப்புகின்றீர்கள் ரதி :lol: :lol:   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்க கேள்விக்கு உங்களால் நேர‌டியாக பதில் சொல்ல முடியவில்லை.நன்றி...நீங்கள் என குறிப்பிட்டது உங்களை இல்லை அப்படி உங்களைத் தான் என நீங்கள் நினைத்தீங்கள் என்டால் நீங்கள் ஏதோ பிழை செய்த படியால் தான் உங்கள் மனம் குறுகுறுக்கிறது...ஆண்கள் பொதுவான அழகான பெண்களுக்கு மயங்குவார்கள்[அப்படி இல்லாதவர்களும் இருக்கிறார்கள்] அதை நீங்கள் அப்படி இல்லை என வாதிட்டு விட்டு இந்த திரியில் வந்து அழகை ர‌சிக்கலாம் என்பீர்கள் பிறகு என்னுமொரு திரியில் வந்து "ஆண்கள் திருமணம் செய்யும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பது சரியா/பிழையா?" என கேட்டால் சரி என்பீர்கள் அப்படியாயின் வேற திரியில் நீங்கள் சொன்ன ஆண்கள் அழகுக்கு மயங்குவதில்லை என்ட‌ கருத்து அடிபட்டு போய் விட்டது என அர்த்தம்.

மேல் உள்ள பதிவில் பச்சை குத்திறதை பத்தி எழுதி இருந்தீங்கள்...ஒரு நாள் மோகன் அண்ணா யார்,யாருக்கு பச்சை குத்தினது என பார்க்கிறதிற்காக திறந்து விட்டார் நான் எனக்கு யார் பச்சை குத்தினது என பார்த்ததை விட‌ உங்கள மாதிரி முக்கியமானவர்களுக்கு யார் பச்சை குத்தினது என்று தான் பார்த்தன்.ஒரு பெயரில் கருத்து எழுதிப் போட்டு மற்ற பெயரில் வந்து பச்சை குத்திற ஆள் நான் இல்லை.

நீங்கள் ஜஸ்சை ர‌சியுங்கள்,இல்லா விட்டால் விடுங்கள் அது பிர‌ச்ச‌னை இல்லை பிர‌ச்ச‌னை இதற்கு முதல் திரியில் நீங்கள் சொன்னது தான்.இனி மேலாவது ஒரு திரியில் கருத்து எழுதி விட்டு அதை மாற்றி வேறோரு திரியில் எழுத வேண்டாம்...எனக்கு எதாவது பிர‌ச்ச‌னை உண்மையான மனிதனிட‌ம் தான் போவேன் உங்களை மாதிரி நேர‌த்திற்கு,நேர‌ம் கதைப்பவர்களிட‌ம் தான் போக மாட்டேன்...உண்மையில் உங்களுக்கு தான் ஏதோ பிர‌ச்ச‌னை இருக்கிறது யாழில் எழுதி கேளுங்கள் உண்மையான அன்புட‌ன் பதில் சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள் :)

இத்திரி.. ஐஸ் அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுறதில இருந்து.. நெடுக்காலபோவனை வசைபாடும் நிலைக்கு திசை திரும்பிக் கொண்டிருக்கிறது.

இப்பவும் எப்பவும் சொல்வேன்.. சுஜி மற்றும் நீங்கள் பாவிக்கும் ஆண்களைப் பற்றிய சில சொல்லாடல்கள் மகா மட்டமானவை. அவை எப்போதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. நான் பழகிய வரையில் பல இடங்களிலும்.. தீய ஆண்களை காணேல்ல. ஆனால் பெண்களைக் கண்டிருக்கிறன்.

நான் எனக்குள் உள்ள உண்மைகளைத் தான் எழுத முடியும். மற்றவர்கள் விரும்பிற அல்லது நினைக்கிற மாதிரிக்கு நான் எழுத முடியாது தானே அக்கா. ஐஸ் அக்கா தொடர்பிலும்.. எனது பதில் அதுவே. அது நீங்கள் விரும்பும் வடிவில் இல்லாமை உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். அதற்காக நான் எனது எண்ணங்களை மாற்றி அமைக்க முடியாது அக்கா.

மேலும்.. பச்சை குத்திறதில்.. நீங்கள் நான் வேறு என்னென்ன பெயரில் வந்து எங்கெங்க பச்சை குத்தினன் என்று சொன்னீர்கள் என்றால்.. அதை கொஞ்சம் தெளிவு படுத்த உதவியாக இருக்கும். இப்படி.. திரைமறைப்பு கருத்தெழுதுவது.. ஏதோ நாங்கள் வேலை மிணக்கட்டு.. வேறு பெயரில் வந்து பச்சை குத்திக்கிட்டு திரியுறம் என்ற கணக்கா ஆகிடும்..! அது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல..!

யாழில் எழுதிக் கேட்கும் அளவிற்கு எனக்குப் பிரச்சனைகளும் கிடையா.. எனது பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய இடமும் யாழ் அல்ல. அது ஒரு கருத்துக்களம்.. அதற்கு மேல்.. அது எம்மை தமிழால் ஒருங்கிணைக்கும் இடம். அவ்வளவே..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரி.. ஐஸ் அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுறதில இருந்து.. நெடுக்காலபோவனை வசைபாடும் நிலைக்கு திசை திரும்பிக் கொண்டிருக்கிறது.

இப்பவும் எப்பவும் சொல்வேன்.. சுஜி மற்றும் நீங்கள் பாவிக்கும் ஆண்களைப் பற்றிய சில சொல்லாடல்கள் மகா மட்டமானவை. அவை எப்போதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. நான் பழகிய வரையில் பல இடங்களிலும்.. தீய ஆண்களை காணேல்ல. ஆனால் பெண்களைக் கண்டிருக்கிறன்.

நெடுக்ஸை வசைபாடாமல் வாதத்தை வைத்தால் நல்லதுதான்..

நெடுக்ஸ் "சோ" ராமசாமி போன்று பெண்கள் குடும்பப் பாங்காகவும், அடக்க ஒடுக்கமாகவும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதில் ஒரு தப்பும் கிடையாது. ஆனால் பத்தாம் பசலித்தனமாக காலம் மலையேறிவிட்டது..

தீயவர்கள் ஆண், பெண், நாடு, இனம் எல்லாவற்றிலும் இருப்பர். நீங்கள் காணவில்லை என்றால் தேடும் வீச்சைக் கூட்டுங்கள். கட்டாயம் தென்படுவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸை வசைபாடாமல் வாதத்தை வைத்தால் நல்லதுதான்..

நெடுக்ஸ் "சோ" ராமசாமி போன்று பெண்கள் குடும்பப் பாங்காகவும், அடக்க ஒடுக்கமாகவும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதில் ஒரு தப்பும் கிடையாது. ஆனால் பத்தாம் பசலித்தனமாக காலம் மலையேறிவிட்டது..

தீயவர்கள் ஆண், பெண், நாடு, இனம் எல்லாவற்றிலும் இருப்பர். நீங்கள் காணவில்லை என்றால் தேடும் வீச்சைக் கூட்டுங்கள். கட்டாயம் தென்படுவார்கள்..

எதோ ஒன்றிரண்டு பெண்கள் தப்பு செய்வதற்காக பெண் இனமே தீயவர் என்பதை கடுமையாக கண்டிக்கிறேன். ( சிலர் இதை வாசித்து இப்படிதான் புரிவார்கள்...... நான் கருத்து நீளாமல் இருக்க முந்திகொள்கிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் "சோ" ராமசாமி போன்று பெண்கள் குடும்பப் பாங்காகவும், அடக்க ஒடுக்கமாகவும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவதில் ஒரு தப்பும் கிடையாது. ஆனால் பத்தாம் பசலித்தனமாக காலம் மலையேறிவிட்டது..

தீயவர்கள் ஆண், பெண், நாடு, இனம் எல்லாவற்றிலும் இருப்பர். நீங்கள் காணவில்லை என்றால் தேடும் வீச்சைக் கூட்டுங்கள். கட்டாயம் தென்படுவார்கள்..

நானே என்னை அடக்க ஒடுக்கமா வைச்சிருக்கேல்ல.. இதில போய் பெண்களை அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்வதாகவும்... நானே குடும்பமே வேணான்னு இருக்கிறன்.. நான் போய் குடும்பப் பாங்கா பெண்களை இருக்கச் சொல்வதாகவும் நீங்கள் நினைப்பது.. உங்களின் கற்பனையே தவிர.. எனது நிலைப்பாடு அல்ல..!

நான் தவறென்பது.. ஆண்கள் மீதான அநாவசிய மட்டமான சொல்லாடல்களும்.. கேவலமான இழித்துரைப்புக்களும்..! எந்த சமூகத்திலும் அவை ஆரோக்கியமான மாற்றத்துக்கு உதவாது என்பதைத் தான்.

நான் வெறுக்கும் முக்கியமான மனிதர்களில்.. சோ.. ராமசாமியும் ஒருவர். நான் சோ ராமசாமியை மட்டுமல்ல.. பெரியார் ராமசாமியையும் அவரின் நிலையற்ற கருத்துக்கள் தொடர்பில்.. திராவிடக் கொள்கையின் மூலம்.. தமிழை.. தமிழர்களைக் கீழ் நிலைப்படுத்தியதன் வாயிலாகவும் மிகவும் வெறுக்கிறேன்.

ஒரு காலத்தில் தீவிர ராமசாமி கொள்கைப் பிடிப்பாளராக இருந்த சீமான் அண்ணாவே இன்று திராவிடம் கடந்து நாம் தமிழர்கள் என்ற கொள்கை வடிவத்தை எடுத்திருக்கிறார்.இது தொடர்பில் நாங்கள் 2006/7ம் ஆண்டுகளில் நீண்ட விவாதங்களை செய்த போது.. நீங்களும்.. ராமசாமி கொள்கையின் கீழ் நின்று வாதாடியவர் என்பதை நான் மறக்க மாட்டேன். நாம் தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.. எமது தமிழ் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.. மூடநம்பிக்கைகள் என்று நாம் தூக்கி எறிந்தவற்றுக்குள் இருக்கும் அறிவியலை தேட வேண்டும் என்று சொல்ல.. அன்று எள்ளி நகையாடியோரில் நீங்களும் ஒருவர். இந்து சமயத்திலும் அறிவியல் பற்றி எழுதிய போது.. இலக்கியங்களில் அறிவியல் என்று எழுதிய போது.. அவை ஆராய்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சொன்ன போது.. அதையும் வசைபாடினீர்கள். இன்று அதையே 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் சொல்ல... மூடிக்கிட்டு ரசிக்கிறார்கள்..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.