Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

Featured Replies

1987

அதுவும் ஒரு மே மாதத்தின் திகதி தெரிந்திராத,

அன்றைய நாளின் ஒரு காலைப்பொழுது....!

ஏன் வந்தது என தெரியாத ஐந்தே வயசு,

எனக்கு... எதுவும் புரியாத பிஞ்சு மனசு!

ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் கைகளுக்குள்,

பதகளிப்போடு என் பயணத்தினை ஆரம்பித்தேன்!

அப்பாவின் கைகளுக்குள் என் தங்கை,

என் அழகான கூடு முதன்முதலாய்க் கலைகின்றது!!!

மந்திகை ஆஸ்பத்திரிக்கான ஊரோடு ஒத்த

அவர்களின் பயணத்தில்... ஐந்து வயதிலேயே,

"அகதி" என்று பெயரெடுத்தேன்!!! - எங்கே போகின்றோம்? என்று,

இன்றுவரை தெரியாத அதே கேள்விகளும் என்னோடு கூடவே பயணிக்கின்றன!!!!

பாதி வழி தாண்டும்போது... யாரோ சொன்ன வார்த்தைகள்...

எனக்குப் புதிதாய்... புரியாத வார்த்தைகளாய்....

"ஒபரேஷன் லிபரேஷன்" என காதில் விழுந்தபோது, தெளிவாய்க் கேட்டது...

அந்த வார்த்தைகள் மட்டுமல்ல... குண்டுச் சத்தங்களுந்தான்!

வெண்முகில் படர்ந்த நீல வானத்தில்,

இரைச்சலுடன் சில விசித்திரப் பறவைகள்!

என் அப்பாவும் அம்மாவும், என் ஊரும் பயந்தது, அவற்றிற்குத் தானா? என்ற,

ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் அப்போது!?

எம் கூடும், எம் வாழ்வும்...

எம் நிலமும், எம் வானமும்... என

இத்தனை நாளும் களிப்போடு வாழ்ந்தோமே!

அதற்கும்.... வந்தது ஒரு கலிகாலம் !!

இவையெல்லாம்... ஏன்? எதற்கு? எனத் தெரியாத எனக்கு,

அப்போதைய என்னுடைய கவலையெல்லாம்...

என் செல்ல நாய்க்குட்டியும்... என்னோடு

விளையாடும் நண்பர்களும் எங்கே என்பது மட்டுந்தான்!

காலங்காட்டி முட்களின் எதிர்த்திசைப் பயணங்கள்

தொடரும்...

post-8737-0-46397500-1320260734_thumb.jp

Edited by கவிதை

ம் ............... என்னத்தை சொல்ல ஐந்து வயதில் நல்ல பட்டம் எடுத்திருக்கிறியள் .தொடருங்கோ. நான் ஒரு விதம் எண்டால் நீங்கள் ஒருவிதம் :) :) :) .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை என்னுடையது

தங்களது பட்டத்துக்காக அல்ல

பயணத்துக்காகவும் அல்ல

பதிவுக்காக

தொடர்ந்து பகிர்வதற்காக

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

பல ஒத்திகைகளிற்கு பின்னர் டென்சில் கொப்பே கடுவாவினால் வழிநடத்தப்பட்ட தாக்குதல் நேரடியாக பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத் முதலி பருத்தித் துறை யில் வந்திறங்கிருத்து பார்லையிட்டு நேரடியாக வழிநடத்திய தாக்குதல். அதற்கு அன்று இஸ்ரவேலின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் பெரும் பங்கு வகித்தனர். அந்த தாக்குதலை வழிநடத்திய கொப்பே கடுவ இரண்டாம் உலக யுத்தத்தில் Nர்மனிய படைகளிற்கொதிராக இரஸ்யா படை நடத்தியதை போன்றதொரு கட்டளையை கொடுத்தார் முதலாவது அணி தாக்கு பிடிக்க முடியாமல் பின்வாங்கினால் அடுத்த அணி திரும்பி ஓடிவரும் அணியினை சுட்டுத்தள்ளியவாறு முன்னேவேண்டும் என்பதே. அன்றைய காலத்தில் திறைமையாக படை நடத்தியவர் அதுவும் கிட்டுவிற்கு நிகராக கொப்பேகடுவமட்மே.

  • தொடங்கியவர்

ம் ............... என்னத்தை சொல்ல ஐந்து வயதில் நல்ல பட்டம் எடுத்திருக்கிறியள் .தொடருங்கோ. நன் ஒரு விதம் எண்டால் நீங்கள் ஒருவிதம் :) :) :) .

"அகதி" என்கின்ற ஒரு அவதி நிலைமையை.... அதை அனுபவிக்கும்போதுதான் உணர்ந்துகொள்ள முடியும்! நிரந்தரமில்லாத அந்தரத்தில் தொங்கிக்கொண்டே வாழுற வாழ்க்கை எப்படியான வலிகளையும் பின்னடைவுகளையும் கொடுக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.

தாங்களும் அதை அனுபவித்திருப்பீர்கள் என நம்புகின்றேன் கோ! சொந்த மண்ணில் உள்ள உரிமையும் சந்தோசமும் ஆறுதலும் வேறெங்கும் கிடைக்காது!

ஐந்து வயதில்.... வெறும் 2மைல் தூரம் இடம்பெயர்ந்தபோதே எவ்வளவு மனவலிகள் அந்த பிஞ்சுமனதில் வந்தது என்றறிவேன்! இப்போது பல்லாயிரம் மைல் தொலைவில் வேறொரு நாட்டில்... அந்நியனாய் இன்னும்! :(

மிக்க நன்றி கோ! :)

  • தொடங்கியவர்

ஒரு பச்சை என்னுடையது

தங்களது பட்டத்துக்காக அல்ல

பயணத்துக்காகவும் அல்ல

பதிவுக்காக

தொடர்ந்து பகிர்வதற்காக

மிகவும் நன்றி விசுகு அண்ணா!

தங்களின் பின்னூட்டம் வந்தாலே அதற்குரிய கருத்து ஓரளவேனும் நன்றானதாகவே இருக்கும் என்பது பொதுக் கருத்து. அந்தவகையில், தங்களின் பின்னூட்டத்துக்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்! நிச்சயமாக தொடர்ந்து பதிவேன்! நன்றி அண்ணா! :)

  • தொடங்கியவர்

ஒரு பச்சை.

மிகவும் நன்றி நுணா!

எனக்கும் ஊருக்குப் போகத்தான் ஆசை! ஆனால்... சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை இன்னும்! பார்க்கலாம்...! :)

  • தொடங்கியவர்

பல ஒத்திகைகளிற்கு பின்னர் டென்சில் கொப்பே கடுவாவினால் வழிநடத்தப்பட்ட தாக்குதல் நேரடியாக பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத் முதலி பருத்தித் துறை யில் வந்திறங்கிருத்து பார்லையிட்டு நேரடியாக வழிநடத்திய தாக்குதல். அதற்கு அன்று இஸ்ரவேலின் சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோ படையினர் பெரும் பங்கு வகித்தனர். அந்த தாக்குதலை வழிநடத்திய கொப்பே கடுவ இரண்டாம் உலக யுத்தத்தில் Nர்மனிய படைகளிற்கொதிராக இரஸ்யா படை நடத்தியதை போன்றதொரு கட்டளையை கொடுத்தார் முதலாவது அணி தாக்கு பிடிக்க முடியாமல் பின்வாங்கினால் அடுத்த அணி திரும்பி ஓடிவரும் அணியினை சுட்டுத்தள்ளியவாறு முன்னேவேண்டும் என்பதே. அன்றைய காலத்தில் திறைமையாக படை நடத்தியவர் அதுவும் கிட்டுவிற்கு நிகராக கொப்பேகடுவமட்மே.

அந்த நேரத்தில் களத்தில் நின்ற போராளிகளுக்கு கொப்பேகடுவ பற்றி நிறைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன! அப்ப நீங்கள் எங்கே சாத்ஸ் அண்ணை? அங்கைதானே...??? :D எதிரியின் பலத்தினை எப்போதும் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்த்திருந்தார்கள்! ஆனால்... அந்த மண்ணில் இறங்கிய சிறிலங்காப் படைத்தளபதிகளின் துரதிஷ்டமோ என்னவோ தெரியாது.... ஆயுள் குறைவாகவே இருந்தது அவர்களுக்கு! :) கொப்பேகடுவ, லலித் அத்துலத் முதலி... வரிசையில் இறுதியாக பிரிகேடியர்.விஜயரட்ண! (வடமராட்சி மக்களின் மனங்கவர்ந்த :unsure: :D இராணுவத் தளபதியாக 1996.97,98 காலப் பகுதிகளில் இருந்தவர் )

என்னுடைய பதிவுகளுக்கு அத்தி பூத்தாற்போல் கிடைத்திருக்கும் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சாத்ஸ் அண்ணை! (தங்களுக்கு கதை பிடிக்கிற அளவுக்கு கவிதைகள் அவ்வளவாகப் பிடிக்காது என்று தெரியும்.... Its ok! ) :D :D :D

Edited by கவிதை

நல்லதொரு நிஜகவிக்கு நன்றிகள் கவிதை. தமிழராய் பிறந்து அகதிப்பட்டம் கிடைக்காமல் இருந்தோர் மிகச்சிலரே. என்ன ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வயதில் கிடைத்திருக்கும். உங்களுக்கு 5ல் கிடைத்தது எனக்கு 11ல் கிடைத்துள்ளது. அந்த நாட்களை மீண்டு்ம் அழைத்துவந்தமைக்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அனுபவித்த வலிகளை மீண்டும் கவியில் கொண்டு வருகின்றீர்கள், தொடருங்க

முதல் பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93656

ஹெலி போடும் துண்டுப்பிரசுரத்தொடு

புலர்ந்த பொழுதுதில்

எல்லாமிழந்து வெளியேறி

அம்மாவின் முந்தானைபற்றிய துணிவில்

வளர்த்த நாயை வரும் வழிகளில்

மற்ற நாய்களிடமிருந்து காப்பாற்றுவதை மட்டும்

இலக்கென எண்ணிய ஏதுமறியா வயது அன்று எனக்கு .

வீடு திரும்புகையில் அங்காங்கே எரிந்த பெரு நெருப்பிலிருந்த தீய வாடை படாது அம்மா வேறு பாதை மாற்றி நடந்ததும் நினைவில் இன்னும் .பின்னொரு பொழுதில் தான் அந்த நெருப்புக்களில் என் பல உறவுகள் எரிந்து போயினர் என்ற உண்மை புரிந்தது .

என்னசெய்வது .....உங்களின் கவிதைப்பயணத்தில் எனை கலங்கவைக்கிறது...தொடருங்கள் நனைய காத்திருக்கிறேன்

தாங்கள் வடமராட்சியின் எந்த பகுதி அறியலாமா நான்

Edited by நேற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை!அருமையான பதிவு...பாராட்டுக்கள்...தனித்தனி திரியாக இணைக்காமல் ஒரே திரியின் கீழ் இணையுங்கள்...வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கும்...மீண்டும் என் பாராட்டுகள் நல்ல ஒரு பதிவு...

  • தொடங்கியவர்

நல்லதொரு நிஜகவிக்கு நன்றிகள் கவிதை. தமிழராய் பிறந்து அகதிப்பட்டம் கிடைக்காமல் இருந்தோர் மிகச்சிலரே. என்ன ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வயதில் கிடைத்திருக்கும். உங்களுக்கு 5ல் கிடைத்தது எனக்கு 11ல் கிடைத்துள்ளது. அந்த நாட்களை மீண்டு்ம் அழைத்துவந்தமைக்கு நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

உண்மைதான் தமிழினி! ஈழத் தமிழனாய் பிறந்ததால் ... இலவசமாய்க் கிடைத்த இணைப்புப் பெயர் அது "அகதி"! நாதியற்றவனாய் இன்றும் நிற்கின்றோம்! எப்போதுதான் அப்பெயர் எமைவிட்டு அகலுமோ?????? ஏக்கங்கள் மட்டுமே தொடர்கதையாக............ :(

கருத்துக்கு நன்றி தமிழினி! :)

கவிதை அனுபவித்த வலிகளை மீண்டும் கவியில் கொண்டு வருகின்றீர்கள், தொடருங்க

முதல் பதிவு

http://www.yarl.com/...showtopic=93656

அனுபவித்த வலிகள் மறக்கமுடியாதவை உடையார்!

அதை மறக்கவும் கூடாது... மறைக்கவும் கூடாது!!!

இனி வரும் தொடர்களில் என் பழைய இணைப்புக்களையும் இணைக்கின்றேன்!

நன்றி உடையார்! :)

  • தொடங்கியவர்

ஹெலி போடும் துண்டுப்பிரசுரத்தொடு

புலர்ந்த பொழுதுதில்

எல்லாமிழந்து வெளியேறி

அம்மாவின் முந்தானைபற்றிய துணிவில்

வளர்த்த நாயை வரும் வழிகளில்

மற்ற நாய்களிடமிருந்து காப்பாற்றுவதை மட்டும்

இலக்கென எண்ணிய ஏதுமறியா வயது அன்று எனக்கு .

வீடு திரும்புகையில் அங்காங்கே எரிந்த பெரு நெருப்பிலிருந்த தீய வாடை படாது அம்மா வேறு பாதை மாற்றி நடந்ததும் நினைவில் இன்னும் .பின்னொரு பொழுதில் தான் அந்த நெருப்புக்களில் என் பல உறவுகள் எரிந்து போயினர் என்ற உண்மை புரிந்தது .

என்னசெய்வது .....உங்களின் கவிதைப்பயணத்தில் எனை கலங்கவைக்கிறது...தொடருங்கள் நனைய காத்திருக்கிறேன்

தாங்கள் வடமராட்சியின் எந்த பகுதி அறியலாமா நான்

என் ஐந்து வயதில் அது எனக்கு ஒரு பயங்கரமான அனுபவத்தினைக் கொடுத்திருந்தது.

ஆனாலும், ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது.... உள்மனதில்!

இனிவரும் வரிகளில் அதை சொல்கின்றேன்!

நன்றி தாஸ்! :)

  • தொடங்கியவர்

கவிதை!அருமையான பதிவு...பாராட்டுக்கள்...தனித்தனி திரியாக இணைக்காமல் ஒரே திரியின் கீழ் இணையுங்கள்...வாசிப்பதற்க்கு இலகுவாக இருக்கும்...மீண்டும் என் பாராட்டுகள் நல்ல ஒரு பதிவு...

நன்றி சுபேஸ்!

நானும் அப்படித்தான் முதலில் யோசித்திருந்தேன். ஆனால்... சில தொடர் பதிவுகள் பதியப்பட்டும் அதனை அறியாமல் நான் பார்ப்பதற்கு தவற விடுவதுண்டு! அத்தோடு, எனது இக்கவித்தொடர்... ஒரு பெயரில் வந்தாலும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விடயத்தினை தொட்டுச்செல்லும் வகையில் உப தலைப்புடன் அமையவிருப்பதால்... தனியாக இணைப்பது பொருத்தமாக இருக்கும் என நம்பினேன்!

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சுபேஸ்! :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ கவிதை உங்கள் கவிதையினை நானும் ஆவலுடன் படித்து வருகிறேன்

பலர் உணர்ந்த வலி,யுத்த வடு ஒரு போதும் அறிந்தவனில்லை,அதனால் தான் சிலர் இங்கு உணர்சிவசப்படும் அளவிற்கு எனக்கு கோவம் வருவதில்லையோ தெரியாது

ஆனால் எனக்கு சிறு வயதில் இருந்தே கொழும்பில் போய் நிற்கவே விருப்பமில்லை ,போனாலும் இரண்டு மூன்று நாட்களில் திரும்பி விடுவேன்.

உங்கள் போன்றோர் கவிதைகள் தான் எனக்கு அந்த வலியை உணரவைக்கின்றன.

கவிதையே ,, ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! :)

சகோதரம்... மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்படவேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா (வரிகளா)பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,, உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா? :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இங்கு ஒபரேசன் லிபரேசன்காலத்தை மனதில் வைத்து எழுதிய சில "வேங்கையன் பூங்கொடி"யில் உள்ளது அவற்றில் சில

அந்தரவான் கந்தக முட்டை

சிங்கள இனவாதம் பெரும் சினம் கொண்ட ஒருபாகம்

யாழ் குடாவின் வடகரையோரம்.

மனவலிமை மிகுபுலியர் அணித் தலைவனோடு

செயலாற்று வீரர் பலர் செகம் கண்டதும்,

முப்படைகள் கக்கு குண்டில் முகம் கொடுக்கையில்

உப்புடைக் காற்றுரசி உரம் பெற்றதும்,

வடமராட்சிக் கரைகளுக்கே உரித்தானது - இது

வரலாற்றுச் சுவட்டுள்ளும் குறிப்பானது.

கடலோடு விளையாடிக் காயத்தில் உரமேறி

மிடுக்காக வாழும் இம்மக்கள்

விடுதலை வேங்கையரின் அத்திவாரக் கற்கள்.

ஆதலால்;

வடமராட்சி என்பது ஆளும் வர்க்கம்

வெறுக்கும் வைரியாகி வளர்ந்தது.

இவ்வுரம் ஊறும் ஊர்கள் அழிக்க, உலகெலாம் கையேந்தி

ஆளும் வர்க்கம் அருந்திட்டங்கள் வகுத்தது.

ஓரிரு வாரங்களில்..

இராணுவ ஒத்திகைகள் முன்னேறு முனைப்புகள்

கரையோரம் எங்கெங்கும் அரங்கேறின.

பயங்கர வாதம் அழிப்பதாய் பகல் வேசம் போட்டு

பாரெங்கும் அரசு பல்லிளித்து நடித்தது.

ஓர்மம் மிக்க ஒப்பில்லா மக்களை

ஒழித்துக் கட்ட அரச பயங்கரத்தின்

ஆயுதமுனைகள் கூர்மை மிகுந்தன.

இராட்சத அவ்ரோக்களில் பெற்றோல் பீப்பாக்கள்

அத்தோடு அமிலங்கள் கலந்த அழுக்குத் திராவகம்.

குறியின்றி ஏகும் கனரகக் குண்டுகள்,

உறுமி உறுமி உருக்குப் பறவைகள் எறியும்

கந்தகக் கணைகளும் தத்தம் பலம் காட்ட,

எங்கே எதுவென்று குறிக்க முடியாது

நாற்புறமும் கந்தகப் புகையோடு

கட்டிடப் புழுதியும் எழுந்து விரிந்தது.

தரைப்படை , கடற்படை, மேவிய வான்படை

மூர்க்கர் ஆணைக்குள் முழுமூச்சானது.

போரியல் என்பது தமிழர் வாழ்வியல் பாடம்.

பின் வாங்கல் என்பது

அவதந்திரத்தை வெல்லும் போரின் உபாயம்.

மக்களை மனதிடை சுமந்த மறவர்

அழிவகள் தவிர்க்க விழைந்தனர்.

தமிழ் உயிர்களை நினைத்து எதிரியைப் பொருதும்

உலைக்கள நிலையைத் துறந்தனர்.

பல் உயிர்களைக் காக்கும் உன்னத பணிக்கு

தங்களை மாற்றிக் கொண்டனர்.

எதிர்ப்புகள் இன்றி காவலரன் கடந்து

இராணுவம் ஊருக்குள் நுழைய

இராட்சதப் பறவைகள் அந்தர வானில்

கந்தக முட்டைகள் இட்டன.

அங்குல நகர்விற்கும் ஆயிரம் எறிகணைகள்

வாரணமிருந்து ஏகின.

மனவலு இழந்த மோடையக் கிலியரால்

பல்குழல் சுழல்கள் சிவந்தன.

அதை உறுதிப் படுத்திச் செல்லக் கெலிகள்

உயரிய கலிபரை முடுக்கின.

இதன்பால் எழுந்த கந்தகப் புயலொடும்,

இரும்புத் துகளொடும்

அந்தரித்துத் தமிழினம் அவதியுற்றது.

குண்டுகள் வீழ்ந்து குதறிப் பிய்த்தது

குவலயப் பரப்பை மட்டுமா?

அன்னை வயிற்றுச் சின்ன உயிரிருந்து

அந்திமகால சருகுகள் வரைக்கும்

தேடித்தின்று செங்களப் பேயானது.

பதுங்கு குழிகள்

மிஞ்சிய மக்களைக் காத்தன.

http://venkaiyan.blogspot.com/2009/10/20.html

எழில் மிகு கரைமகள் கலிகளைச் சுமந்தாள்.

அங்கு இங்கென உடல் நலமிழந்தாள்.

பொழில்கள் பொசுங்கின. அலைகள் அழுதன.

கந்தகம் சுமந்து காற்று நொந்தது.

பட்சிகள் சிதறின, வீட்டுநாய்களெல்லாம்

வேட்டோசை கேட்டு வீதிவழி ஓடின.

ஆரியத்தால் உட்புகுந்த கூரிய இழிவுகள்

குலை தெறிக்க ஓடின. சாதியம் மறைந்தது.

உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதங்கள் ஒழிந்தது.

தமிழர் மட்டும் தனித்து நின்றனர்.

மதங்கள் ஆண்ட மனங்கள் அழிந்தன.

மனிதம் பூண்ட சிந்தைகள் நிறைந்தன.

முன்னே வீழும் எறிகணைகள்

பின்னே விரட்டும் வேட்டொலிகள்

இதற்குள்

காயம் பட்டும், கதறித் துடித்தும்

உயிரைக் காக்க மக்கள் விரைந்தனர்

கோயில்கள், பள்ளிகள் முகாம்களாகி

அகதிகள் கதைக்கு கருக்களம் கொடுத்தன.

இராணுவ அணிகள் தரைவழி நகர்ந்தன.

அகப்பட்ட உயிர்களை தத்தம் கவசமாய் ஆக்கின.

உலைக்கள வீரர்கள் உண்மையை அறிந்ததால்

தங்களை மறைத்தர்.

எதிர்ப்பின்றி நகர்ந்த எதிரிப் படையதால்

எல்லா இடத்திலும் இழவுகள் நிறைந்தன.

http://venkaiyan.blogspot.com/2009/10/21.html

  • கருத்துக்கள உறவுகள்

இது அறிவிலியின் கவிதை..! ஏற்ற இறக்கத்துடன் வைரமுத்துவைப் போல் படிக்கவும்..! :wub:

கவிதையே ஒரு கவிதை எழுதுமா..

கவிதையே ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! சகோதரம்...

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்பட

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,,

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா?

கோவம் வேணாம் ஓகே-வா?

:lol:

டிஸ்கி: கவிதை நீங்கள் ரென்சன் ஆகவேண்டாம்.. சும்மா பகிடிக்குத்தான்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol: :lol:

முடியல இசை

இது அறிவிலியின் கவிதை..! ஏற்ற இறக்கத்துடன் வைரமுத்துவைப் போல் படிக்கவும்..! :wub:

கவிதையே ஒரு கவிதை எழுதுமா..

கவிதையே ஒரு கவிதை எழுதுமா?

அது நீங்கதானே! சகோதரம்...

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

மனசெல்லாம் வலிக்குதா உங்களுக்கு,,,

போன காலங்கள நெனைக்கைல!?

நீங்களூம் யாழ்களத்துல .......

எல்லாராலயும் கவனிக்கப்பட

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

வேண்டிய ,, கவிஞன் ஆயிட்டிங்க!

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

பைத-வே......... கவிதை வரிகளை ,,,

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

மூணு மூணா பிரிச்சுத்தானே போடணும்.....

அப்போதானே அது,,

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

உங்க கவிதைபோல ..அழகா இருக்கும்!

இது என்னோட யூஸ்லெஸ் கருத்து மட்டும்தான்!!

கோவம் வேணாம் ஓகே-வா?

கோவம் வேணாம் ஓகே-வா?

:lol:

டிஸ்கி: கவிதை நீங்கள் ரென்சன் ஆகவேண்டாம்.. சும்மா பகிடிக்குத்தான்..! :icon_mrgreen:

இப்பவேபோயி நானு தூக்கு மாட்டிக்கப்போறேன்!

பைதவே- ஹாவ் எ நைஸ் டே இசை! நன்னா இருங்க! <_<

  • தொடங்கியவர்

தொடர்ந்து எழுதுங்கோ கவிதை உங்கள் கவிதையினை நானும் ஆவலுடன் படித்து வருகிறேன்

நன்றி ரதி அக்கா! தங்கள் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன்! :)

  • தொடங்கியவர்

பலர் உணர்ந்த வலி,யுத்த வடு ஒரு போதும் அறிந்தவனில்லை,அதனால் தான் சிலர் இங்கு உணர்சிவசப்படும் அளவிற்கு எனக்கு கோவம் வருவதில்லையோ தெரியாது

ஆனால் எனக்கு சிறு வயதில் இருந்தே கொழும்பில் போய் நிற்கவே விருப்பமில்லை ,போனாலும் இரண்டு மூன்று நாட்களில் திரும்பி விடுவேன்.

உங்கள் போன்றோர் கவிதைகள் தான் எனக்கு அந்த வலியை உணரவைக்கின்றன.

அர்ஜூன்! தானாடாவிட்டாலும் தசையாடும் என்று சொல்வார்கள்!

எங்கள் இனம் அடிபடும் போதெல்லாம் உள்ளுக்குள்ளே வலிக்கும்.

ஒரு மனிதனாய் அது மனிதத்தன்மை!

தன் இனமென்று வரும்போது... அது இயல்பு!

இயல்பு மாறாத மானிடராய் இருப்பது எப்போதுமே தவிர்க்க முடியாத அவசியம்!

நன்றி அர்ஜூன்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.