Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

200px-Elder.jpg

கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,

மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!

காலம் தான் எவ்வளவு குறுகியது!

கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,

காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,

ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!

முதுமை என்பது, முந்திய அனுபவங்களின்

இரை மீட்புக் காலம் போலும்!

பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன!

இழந்து போன சந்தர்ப்பங்கள்,

எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை!

இமை வெட்டும் நேரத்திற்குள்

வாழ்வு முடிந்து போய் விடுகின்றது!

விளக்கோடு விளையாடும், விட்டில் பூச்சிகள்,

வாழும் காலத்தைக் கணக்கெடுப்பதில்லை !

இளமை இருக்கும் போதே வினாடிகளை,

வீணாக்காது வாழ்ந்து விட வேண்டும்!

வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,

வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது!

இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி,

காலமெனும் தரையில் உருண்டோடி,

கடற்கரையில் கடலுடன் சங்கமமாகும்,

நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து.

மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு!

விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன!

வெந்து போன நெருப்புக்குள், தணலாக,

வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன!

இளமைக் காலத்தின் வெறித்திமிரில்

உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது!

தேவைகளை மதிக்கும் உலகத்தில்,

தேவையே இல்லாத ஒரு பொருளாகி,

தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,,

தயாராவது தான் முதுமை போலும்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, புங்கையூரன் முதுமையை பற்றி அருமையா கவி படைத்துள்ளீர்கள், வாழ்த்துகள், நன்றி பகிர்வுக்கு. ஒவ்வொரு வரியும் மனதை தொட்டு செல்கின்றது. கவிதைக்கு ஏற்ற படம், யார் இது?

புங்கை இவர் உங்கள் உறவினர் என்றால், ஏன் காலில் சலங்கை கட்டியுள்ளார் என அறியத் தரமுடியுமா?

வாழ்த்துக்கள் புங்கை . இது உங்கள் முதற் படைப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்

கட்டினதுகளே கிழடு என்று சொல்லுதுகள்...கி...கி...

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது

அழகான வரிகள்...தொடரட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை!

முதுமையை மற்றவர்கள் சொல்லித்தான் முதியவர்கள் உணர்கின்றார்கள். காலச்சக்கரம் சுழல்வது தெரியாமல் வாழ்வதும் ஒரு வகையில் நன்மைதான்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா, புங்கையூரன் முதுமையை பற்றி அருமையா கவி படைத்துள்ளீர்கள், வாழ்த்துகள், நன்றி பகிர்வுக்கு. ஒவ்வொரு வரியும் மனதை தொட்டு செல்கின்றது. கவிதைக்கு ஏற்ற படம், யார் இது?

புங்கை இவர் உங்கள் உறவினர் என்றால், ஏன் காலில் சலங்கை கட்டியுள்ளார் என அறியத் தரமுடியுமா?

பதிவுக்கு நன்றிகள், உடையார்!

இந்தப் படத்தில் இருப்பவர் ஒரு ஓய்வு பெற்ற உடையார்!

வயது போய் விட்டதால், இடுப்புச் சங்கிலிக்குத் தேவை இல்லாமல் போய் விட்டது!

அது தான் காலில் கட்டியிருக்கின்றார் போலும்!!! :lol::icon_idea:

உடையார், இந்தப் படத்தைக் கூகிளில் இருந்து சுட்டேன்!

காக்கை வலிப்பு வாற ஆக்கள், பொதுவாக உலோகத்தால் ஆன ஒரு காப்பை அல்லது சங்கிலியை அணிவது வழக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புங்கை . இது உங்கள் முதற் படைப்பா?

இல்லை, கறுவல்! உங்கள் கருத்துக்கு நன்றிகளநேரம் கிடைக்கும் போது கிறுக்குவதுண்டு!

உங்கள் 'தோசை சுட்ட முதல் அனுபவம்' மிகவும் அருமை!

எனது வலைப் பூ www.punkayooran.com

ஆரம்ப நிலையில் உள்ளது!

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

கட்டினதுகளே கிழடு என்று சொல்லுதுகள்...கி...கி...

அழகான வரிகள்...தொடரட்டும்..

கருத்துக்களுக்கு நன்றிகள், புத்தன்!

இரண்டு பேருக்குமே, கிறுக்கிற வயசு போல் உள்ளது!

200px-Elder.jpg

கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

இந்த மூணுவரியே ,, போதுமே.......

நீங்களும் உங்க படமும் ,, சொல்லுது... கவிதை!

சில இடங்களில் வசனம்போல போகுதே ,, கவனிச்சுகுங்க , புங்கை அண்ணா!

வாழ்த்தினா மட்டும் தானா ,,, நான் உங்க சகோதரம்?

குறைய சுட்டிகாட்டினாலும்தானே! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை!

முதுமையை மற்றவர்கள் சொல்லித்தான் முதியவர்கள் உணர்கின்றார்கள். காலச்சக்கரம் சுழல்வது தெரியாமல் வாழ்வதும் ஒரு வகையில் நன்மைதான்!

கருத்துக்கு நன்றிகள், கிருபன்!

வாழ்வின் இரகசியத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் போல!

நல்லதொரு கவிதை புங்கையூரான்

நன்றிகள், ரதி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூணுவரியே ,, போதுமே.......

நீங்களும் உங்க படமும் ,, சொல்லுது... கவிதை!

சில இடங்களில் வசனம்போல போகுதே ,, கவனிச்சுகுங்க , புங்கை அண்ணா!

வாழ்த்தினா மட்டும் தானா ,,, நான் உங்க சகோதரம்?

குறைய சுட்டிகாட்டினாலும்தானே! :)

நன்றிகள் ! அறிவிலி!

நீங்கள் என்ன கருத்தை எழுதினாலும், நீங்கள் எனக்கு எப்போதுமே சகோதரம் தான்!

வளரும் குழந்தை, வழுக்கி விழும்போது, தாய் தூக்கி விடுகிறாள்!

அதற்காகக் குழந்தை, மீண்டும் நடக்காமலா போய் விடப் போகின்றது?

இது தானே இயற்கையின் நியதி!!!

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புங்கையூரான்.............நன்றாக வாழ்வின் நிலை களை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். பொருத்தமான படம் . மொத்ததிலுங்களிடம் திறமை இருக்கிறது, நேரம் ஒதுக்கி வெளிக் கொண்டு வாருங்கள்.

மேலும் தொடர்க........

  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாற்போல் வரும் உங்கள் ஆக்கங்களுக்கிடையில் துள்ளும் தமிழை பலமுறை மனம் விட்டு இரசித்திருக்கிறேன் புங்கையூரான்...அருமையான எழுத்து வளம் உங்களுக்கிருக்கிறது..தொடர்ச்சியாக எழுதுங்கள்...இந்தக் கவிதை இப்பொழுதே எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது முதுமைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்று...

உங்கள் கவிவரிகளின் செழுமையில்

என்னையும் ஒரு நாள் தொட்டுச் செல்லக் காத்திருக்கும்...

முதுமையையும் உணர்ந்தேன் முழுமையாக!

ஆழமாக தொட்டுச் சென்ற வரிகள்

விட்டுச் சென்ற எண்ணங்களில்...

முதியவரை கண்ணியத்தோடு தேடுகின்றது,

கடமையுணர்ந்த கண்கள் ... மனத்தின்

தேவையற்ற கட்டுப்பாடுகளையும் மீறி!

இதைவிட ஒரு எழுத்தின் வன்மைக்கு வேறெதுவும் தேவையில்லை!

நன்றி புங்கையூரன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

200px-Elder.jpg

கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன்.

கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு!

கால்கள் மூன்றாகி நடக்கையில்,

மனம் மட்டும், அங்கும் இங்குமாய்,

மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது!

காலம் தான் எவ்வளவு குறுகியது!

கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில்,

யாரோ பந்து விளையாடுகின்றார்கள்!

களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள்,

காதுக்கு இனிமையாய் இருக்கின்றன!

கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது!

அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில்,

ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது!

முதுமை என்பது, முந்திய அனுபவங்களின்

இரை மீட்புக் காலம் போலும்!

பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன!

இழந்து போன சந்தர்ப்பங்கள்,

எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை!

இமை வெட்டும் நேரத்திற்குள்

வாழ்வு முடிந்து போய் விடுகின்றது!

விளக்கோடு விளையாடும், விட்டில் பூச்சிகள்,

வாழும் காலத்தைக் கணக்கெடுப்பதில்லை !

இளமை இருக்கும் போதே வினாடிகளை,

வீணாக்காது வாழ்ந்து விட வேண்டும்!

வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,

வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது!

இளமையெனும் நதியில் மிதக்கும் படகாகி,

காலமெனும் தரையில் உருண்டோடி,

கடற்கரையில் கடலுடன் சங்கமமாகும்,

நதியொன்றின் நிலையில், மிடுக்கிழந்து.

மெல்லிய ஒரு கீற்றாகி ஓடுகிறது, வாழ்வு!

விடியும் பொழுதுகள், வேதனை தருகின்றன!

வெந்து போன நெருப்புக்குள், தணலாக,

வேதனைகள் உள்ளேயே குமுறுகின்றன!

இளமைக் காலத்தின் வெறித்திமிரில்

உலகம் கூட சிறிதாகத் தெரிந்தது!

தேவைகளை மதிக்கும் உலகத்தில்,

தேவையே இல்லாத ஒரு பொருளாகி,

தவிர்க்க முடியாத, அந்த விடுதலைக்காகத்,,

தயாராவது தான் முதுமை போலும்!

முதுமையில் தனித்திருக்கும்போதுதான் இவற்றையெல்லாம் மீளப்பார்த்து பரிசீலனை செய்கிறது மனம்.. இளமையில் தோன்றாத பக்குவமும் பண்பும் முழுமையாக ஆட்கொள்ளும் பொழுதில் தத்துவங்கள் தன்னால் பிறக்கும் அவற்றை உதிர்க்கும்போது கேட்பதற்கு எவரும் அருகிருக்க மாட்டார்கள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்.

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது....அருமை.. :) 

Edited by வீணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் புங்கையூரான்.............நன்றாக வாழ்வின் நிலை களை அலசி ஆராய்ந்து இருக்கிறீர்கள். பொருத்தமான படம் . மொத்ததிலுங்களிடம் திறமை இருக்கிறது, நேரம் ஒதுக்கி வெளிக் கொண்டு வாருங்கள்.

மேலும் தொடர்க........

நன்றிகள், நிலாமதி அக்கா!

உதிக்கும் உணர்வுகளையும்,மனதில் ,

பதிந்து விட்ட அனுபவங்களையும்,

பதிவிட முயல்கின்றேன்!

தாய் மொழியை இழந்துவிட்ட,

தவிப்பு மட்டும்,

தாகமாய் மனதை வரட்டுகின்றது!

தடவிப் பார்க்கும் பதிவுகள் தான் இவை!

நன்றிகள், உங்கள் தளராத ஊக்குவிப்புக்கு!

கவி அழகனின் தளம் பார்த்தேன்!

வளரும் தவலைகளுக்குத் தங்கள் வழிகாட்டலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்!

கவிதை நன்றாக இருக்கிறது புங்கையூரன்

இளமை இருக்கும் போதே வினாடிகளை,

வீணாக்காது வாழ்ந்து விட வேண்டும்!

வரட்டுக் கவுரவங்களின் பிடியில்,

வாழ்க்கை நசுங்கிப் போய் விடுகின்றது!

அது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத்தி பூத்தாற்போல் வரும் உங்கள் ஆக்கங்களுக்கிடையில் துள்ளும் தமிழை பலமுறை மனம் விட்டு இரசித்திருக்கிறேன் புங்கையூரான்...அருமையான எழுத்து வளம் உங்களுக்கிருக்கிறது..தொடர்ச்சியாக எழுதுங்கள்...இந்தக் கவிதை இப்பொழுதே எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது முதுமைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்று...

நன்றிகள், சுபேஸ்!

குருத்தோலைகள் அழுவதில்லை,

காவோலைகளாகிக் காய்ந்து போனாலும்,

கலகலப்புக் குறைவதில்லை! :D

உங்கள் கவிவரிகளின் செழுமையில்

என்னையும் ஒரு நாள் தொட்டுச் செல்லக் காத்திருக்கும்...

முதுமையையும் உணர்ந்தேன் முழுமையாக!

ஆழமாக தொட்டுச் சென்ற வரிகள்

விட்டுச் சென்ற எண்ணங்களில்...

முதியவரை கண்ணியத்தோடு தேடுகின்றது,

கடமையுணர்ந்த கண்கள் ... மனத்தின்

தேவையற்ற கட்டுப்பாடுகளையும் மீறி!

இதைவிட ஒரு எழுத்தின் வன்மைக்கு வேறெதுவும் தேவையில்லை!

நன்றி புங்கையூரன்! :)

கவிதை!

நீங்களே ஒரு கவிதை!

கிட்டு அண்ணாவின் தளம் பார்த்தேன்!

உங்கள் கவிதையின் அழகைக் கண்டேன்!

நன்றிகளுடன் வாழ்த்துக்கள், உங்களுக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதுமையில் தனித்திருக்கும்போதுதான் இவற்றையெல்லாம் மீளப்பார்த்து பரிசீலனை செய்கிறது மனம்.. இளமையில் தோன்றாத பக்குவமும் பண்பும் முழுமையாக ஆட்கொள்ளும் பொழுதில் தத்துவங்கள் தன்னால் பிறக்கும் அவற்றை உதிர்க்கும்போது கேட்பதற்கு எவரும் அருகிருக்க மாட்டார்கள்

நல்லதொரு கவிதை புங்கையூரான்.

நன்றிகள், சகோதரி!

உங்கள் ஏக்கங்களைத் திண்ணையில் பார்த்தேன்!

உங்களைப் போன்றே, புதுவையை மானசீகமாக மனத்தில் வரித்திருந்தவர்களில் நானும் ஒருவன்!

அவரைப் பற்றிய செய்திகள் எல்லாமே பொய்யாக இருக்கும் என்ற நினைவில் வாழ்ந்திருந்தவன்!

ஆனால் ஜெயபாலன் சொன்ன போது, அங்கே மறு கருத்துக்கு இடமில்லை!

உங்கள் துயரைப் புரிந்து கொண்டேன்!

ஒரே ஒரு ஆறுதல் மட்டும்!

போகும் போதும் அவர் புதுவையாகவே போனார்!

உயிர் வாழ வைக்கும் மருந்துக்காக, வரித்து விட்ட வரித்து விட்ட கொள்கையில் இருந்து கடைசி வரை விலகவேயில்லை!

அது தான் புதுவை!!!

post-8395-0-48635900-1320618106_thumb.gi

இளமை என்பது யாரை கும்பிட்டாலும்திரும்ப கிடைக்காத அனுபவம் ,முதுமையில் தான் அதன் அருமை விளங்கும் .

கவிதைக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளமையின் முறுக்கு ஏற்றிய துடிப்பில்,

எடுத்தெறிந்தவர்களை நினைக்கின்றேன்,

இனிமையான ஒரு வாழ்வைத் தேடி,

இணையத் துடித்தவர்களை நினைக்கின்றேன்!

உளுத்துப் போன ஒரு சமுதாயத்தின்.

அழுங்குப் பிடியான நம்பிக்கைகளால்,

அழகான வாழ்வுகள் அழிந்து போகின்றன!

இருக்கும் போதே வாழ்வதை விட்டு,

எதிர்காலச் சோதிடம் பார்க்கும் ஏமாளியாய்,

சூனிய வெளியை வெறித்தபடி பார்க்கும்,

வேதனை மட்டும் முதுமையாகின்றது....அருமை.. :)

கருத்துக்கு நன்றிகள், வீணா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது புங்கையூரன்

அது

நன்றிகள், தப்பிலி!

இளமை என்பது யாரை கும்பிட்டாலும்திரும்ப கிடைக்காத அனுபவம் ,முதுமையில் தான் அதன் அருமை விளங்கும் .

கவிதைக்கு நன்றி

உண்மை தான், அர்ஜுன்!

கும்பிட்டு இளமை திரும்புமெனில், கோவில்களிலேயே எம்மவர்கள் குடியிருப்பார்!

நன்றிகள், உங்கள் கருத்துக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

முதுமை என்பதை முழுமையாகக் கவிதையாக்கியதற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

முதுமை என்பதை முழுமையாகக் கவிதையாக்கியதற்கு

கருத்துக்கு நன்றிகள், வாத்தியார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.