Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

            பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..

இந்த  பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி..

அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...?

உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு.  இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது என்று தெரிந்துதான் நம்மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்து நாட்டைப் பிடித்தார்கள்.  

தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது.

உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.  இந்த மிளகு இந்தியாவிற்கு மிகுந்த அன்னிய செலாவணி ஈட்டித் தருகிறது.

மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  

மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும். வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.  வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.  வயிற்றில்   சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.  மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது.  இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.  

உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது.  மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.  இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.

இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.  வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=11602</p>

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மிளகின் மகிமை அருமையானது

இணைப்பிற்கு நன்றி புலவர்

இணைப்பிற்கு நன்றி புலவர்!

எமது தாயகத்தில் மிளகு விளைவிக்கப்படுகின்றதா? இதற்கு நல்ல சந்தைவாய்ப்பு இருந்தால் அங்கும் ஊக்குவிக்கலாம்.

இணைப்பிற்கு நன்றி புலவர்!

எமது தாயகத்தில் மிளகு விளைவிக்கப்படுகின்றதா? இதற்கு நல்ல சந்தைவாய்ப்பு இருந்தால் அங்கும் ஊக்குவிக்கலாம்.

நானறிய மிளகு, மல்லி, உள்ளி போன்றவைகள் அங்கு முன்பு பயிரிடப்படவில்லை. இவற்றிற்கு விலையும் கூடியுள்ளது. பாரம்பரிய பயிர்களையே மாத்திரம் பயிரிடாமல் மற்றைய, பணம் ஈட்டக் கூடிய பயிர்களையும் முயற்சித்துப் பார்த்தால் நல்லது. பணக் கஷ்டத்தில் உள்ள விவசாயிகள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கிறார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்தில், சிறிமா அரசு காலத்தில்தான் உருளைக் கிழங்கு பயிரிட்டு நல்ல இலாபம் ஈட்டினார்கள் என நினைக்கிறேன்.

முக்கியமாக விலை கூடிய 'குங்குமப் பூ' போன்ற பயிர்களை தரிசாகக் கிடக்கும் நிலத்தில் பயிரிட்டுப் பார்க்கலாம். இணைய வசதி உள்ளபடியால், பயிர் வளர்ப்புக்கான தகவல்களைப் பெறுவது இலகுவானது.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயகத்தில் மிளகு விளைவிக்கப்படுகின்றதா? இதற்கு நல்ல சந்தைவாய்ப்பு இருந்தால் அங்கும் ஊக்குவிக்கலாம்.

மிளகுப் பயிருக்கு, அடிக்கடி மழைபெய்யும் குளிர்ச்சியான காலநிலை தேவை என நினைக்கின்றேன்.

உ+ம்: மலைப்பாங்கான பிரதேசம்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்தில், சிறிமா அரசு காலத்தில்தான் உருளைக் கிழங்கு பயிரிட்டு நல்ல இலாபம் ஈட்டினார்கள் என நினைக்கிறேன்.

முக்கியமாக விலை கூடிய 'குங்குமப் பூ' போன்ற பயிர்களை தரிசாகக் கிடக்கும் நிலத்தில் பயிரிட்டுப் பார்க்கலாம். இணைய வசதி உள்ளபடியால், பயிர் வளர்ப்புக்கான தகவல்களைப் பெறுவது இலகுவானது.

உருளைக்கிழங்கை விட செத்தல் மிளகாயும், சின்ன வெங்காயமும் பெரிய வருமானத்தை தந்தது.

இப்ப சிங்களவன் அந்தக்காணிகளை ஆக்கிரமித்து, அவனே... யாழ்ப்பாண செத்தல் மிளகாய் விற்கத் தொடங்கி விட்டான்.

குங்குமப் பூ மரத்துக்கும், எமது நாட்டு கால நிலை சரிவராது.

"குங்குமப் பூவை" பாலில் கரைத்துக் குடித்தால்... ஆக்கள் வெள்ளையாய் வருவினமாம்... என்று கேள்விப்பட்டேன். உண்மையா, தப்பிலி.

Edited by தமிழ் சிறி

"குங்குமப் பூவை" பாலில் கரைத்துக் குடித்தால்... ஆக்கள் வெள்ளையாய் வருவினமாம்... என்று கேள்விப்பட்டேன். உண்மையா, தப்பிலி.

பிள்ளை வயிற்றில் இருக்கும் பொழுது, குங்குமப் பூவை பாலில் கரைத்துக் குடித்தால் குழந்தை வெள்ளையாய் பிறக்கும் என்று ஊரில் சொல்வார்கள். இந்தக் கலவையில் உள்ள மருத்துவ குணங்களால் தாய்க்கும் சேய்க்கும் வரும் நன்மைகளை பிழையாக விளங்கி அப்படிச் சொன்னார்களோ தெரியாது.

இதே போல தங்க பஸ்பம் சாப்பிட்டால் பொன்னிறமாக வரலாம் என்றும், எம்ஜீஆர் சாப்பிடுவார் என்றும் சொல்வார்கள். எல்லாம் ஒரு குத்துமதிப்பான நம்பிக்கை.

மிளகுப் பயிருக்கு, அடிக்கடி மழைபெய்யும் குளிர்ச்சியான காலநிலை தேவை என நினைக்கின்றேன்.

உ+ம்: மலைப்பாங்கான பிரதேசம்.

மாரிகாலத்தில் செய்யலாம். இல்லை அதற்கேற்ற நிலங்கள், குறிப்பாக கடல்கரையை அண்டியதாக இருக்கக்கூடும். அதேவேளை தமிழகத்தில் விளையும் நிலங்களின் காலநிலையுடன் ஒப்பிட்டு கண்டுபிடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து அடுத்த நாள் காலை சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதாமே இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

கமுகு இருக்கும் தோட்டங்களில் ஊடு பயிராக பயிரிட்டுப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி புலவர், ரேமார்கள் இதை அதிகம் பயன்படுத்தி, இதய நோயின்றி வாழ்ந்ததாக படித்த ஞாபகம்.

http://siththarkal.blogspot.com/2011/11/blog-post_28.html

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், புலவர்!

மிளகைத் தேடித் போன பயணமே, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் காரணமாக அமைந்தது!

வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து அடுத்த நாள் காலை சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதாமே இது உண்மையா?

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை. கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

"குங்குமப் பூவை" பாலில் கரைத்துக் குடித்தால்... ஆக்கள் வெள்ளையாய் வருவினமாம்... என்று கேள்விப்பட்டேன். உண்மையா, தப்பிலி.

நீங்கள் உருண்டு புரண்டாலும் வெள்ளையாய் வரமுடியாது. உங்கள் மூதாதையர் எம்மை ஆண்ட ஐரோப்பியரோடோ அல்லது, இந்திய /பெர்சிய மனிதர்கலோடோ கலந்திருந்தால் (!) மட்டுமே சாத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உருண்டு புரண்டாலும் வெள்ளையாய் வரமுடியாது. உங்கள் மூதாதையர் எம்மை ஆண்ட ஐரோப்பியரோடோ அல்லது, இந்திய /பெர்சிய மனிதர்கலோடோ கலந்திருந்தால் (!) மட்டுமே சாத்தியம்.

காசைக்,காசு எண்டு பார்க்காமல்... இவ்வளவு நாளும், குங்குமப் பூ வாங்கி சாப்பிட்டது எல்லாம் வீணாய்ப்போச்சே.... :lol:

என்னுடைய மூதாதையர், வெள்ளைக்காரனுடன் கலந்திருந்தால்.... அவர்களுடைய மூதாதையர் தலைக்கு தண்ணி தெளித்து, திவசம் செய்து இருப்பார்கள். நான் பிறந்திருக்க சந்தர்ப்பமே.... இருந்திருக்காது. நான் இனி மாநிறமாக இருப்பதே... நல்லது போல் உள்ளது :D.

பிற்குறிப்பு அகராதி; மாநிறம் (கோதுமை மா அல்ல) - பிரவுண் நிறம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவாக மிளகு அதிகமாக சேர்த்துக்கொள்வேன் நான் உண்ணும் உணவுகளுடன் எனக்கு மிகவும் புடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

<p>

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை.  கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

ஓஅப்படியா! நன்றீ நிழலி தகவலுக்கு

காசைக்,காசு எண்டு பார்க்காமல்... இவ்வளவு நாளும், குங்குமப் பூ வாங்கி சாப்பிட்டது எல்லாம் வீணாய்ப்போச்சே.... :lol:

என்னுடைய மூதாதையர், வெள்ளைக்காரனுடன் கலந்திருந்தால்.... அவர்களுடைய மூதாதையர் தலைக்கு தண்ணி தெளித்து, திவசம் செய்து இருப்பார்கள். நான் பிறந்திருக்க சந்தர்ப்பமே.... இருந்திருக்காது. நான் இனி மாநிறமாக இருப்பதே... நல்லது போல் உள்ளது :D.

பிற்குறிப்பு அகராதி; மாநிறம் (கோதுமை மா அல்ல) - பிரவுண் நிறம். :icon_mrgreen:

எகிப்திய இளவரசி கிளியோபட்ரா, இளமையாக இருக்கவும் உடலை மினுமினுப்பாக வைத்திருக்கவும் கழுதைப் பாலில் குளிப்பாராம். அதனை முயற்சித்துப் பார்த்தீர்களா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய இளவரசி கிளியோபட்ரா, இளமையாக இருக்கவும் உடலை மினுமினுப்பாக வைத்திருக்கவும் கழுதைப் பாலில் குளிப்பாராம். அதனை முயற்சித்துப் பார்த்தீர்களா? :blink:

கழுதைக்கு கிட்டப் போய்... பாலை கறக்க முயற்சிக்க.. பின்னங்காலை தூக்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை.  கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

:D :D எப்பா சாமி முடியல....

ஆண்களுக்கு மிகக் கூடாது..

.தமிழ் மருத்துவத்தில் உடம்பில் வாதம், பித்தம், கபம் போன்ற 3 விடயங்களின் மூலமே நோய் உருவாகின்றன எனபதே அதன் அடிப்படை. கிருமிகள், ஹோர்மோன்கள், மூளையின் செயல்பாடுகள் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாது இந்த 3 ஆல் தான் மனுசருக்கு வியாதி வருகின்றது என்கின்றது தமிழ்/சித்த/ ஆயுர்வேத மருத்துவம்

இதை நம்பவேண்டாம்

சித்த மருத்துவம் நோயை விபரிக்கும் முறை நீங்கள் சொன்னது போல் இருந்தாலும், உணவில், அல்லது சில தாவர மூலிகைகளுக்கு நோய் தீர்க்கும் வல்லமை இருப்பதை மறுக்க முடியாது. அவற்றுக்கு கிருமிகளை இறக்க செய்யும் ஆற்றல் உண்டு. நான் சித்த வைத்தியம் படித்தவன் அல்ல, ஆனால் சித்த வைத்தியம் நோயை விபரிக்கும் முறை வேறாக இருக்கலாம். அதற்காக அதை முற்று முழுதாக தகுந்த ஆராய்ச்சி இன்றி போய் என்று சொல்ல முடியாது. மேற்கத்தேய மருத்துவம் கீழை தேய மருத்துவம் முலிகை போன்றவற்றை முன்னர் போய் என்று சொல்லி, இப்போ அவற்றிற்கு மருத்துவ குணம் , நோயாக்கி கிருமிகளை இறக்க செய்யும் ஆற்றல் இருக்கிறது என்று சொல்லி ஆராய்ச்சி செய்யவதில் முனைப்பாக இருக்கிறது.

வெந்தயத்தின், இஞ்சி மருத்துவ குணம்

1. Effect of fenugreek seeds on blood glucose and serum lipids in type I diabetes.

European Journal of Clinical Nutrition [1990, 44(4):301-6]

2. Effect of ginger (Zingiber officinale Rosc.) and fenugreek (Trigonella foenumgraecum L.) on blood lipids, blood sugar and platelet aggregation in patients with

3. Antidiabetic Effects of Subtractions from Fenugreek Seeds in Diabetic Dogs, ENDOCRINOLOGY/METABOLISM, June 1986 vol. 182 no. 2

மஞ்சள் மருத்துவ குணம்

1. Potential anticancer activity of turmeric (Curcuma longa)

2. Curcumin, a Major Constituent of Turmeric, Corrects Cystic Fibrosis Defects, Science 23 April 2004:

Vol. 304 no. 5670 pp. 600-602

3. Antibacterial Activity of Turmeric Oil:  A Byproduct from Curcumin Manufacture. J. Agric. Food Chem., 1999, 47 (10), pp 4297–4300

கடுகு,

1 Effects of spices on growth and survival of Escherichia coli 0157 and Salmonella enterica serovar Enteritidis in broth model systems and mayonnaise

2. Use of mustard flour to inactivate Escherichia coli O157: H7 in ground beef under nitrogen flushed பச்ககிங்

3. Inhibition of Escherichia coli O157: H7 in ripening dry fermented sausage by ground yellow mustard

மேலே சொன்னவை சில உதாரணங்கள்

இணைப்புக்கு நன்றிகள், புலவர்!

மிளகைத் தேடித் போன பயணமே, கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் காரணமாக அமைந்தது!

கொலம்பச் ஊரில பெண்ணுகளுகு மிளகு என்டு தமிழ் பெயராய் வச்சார்களோ

ஆசரியம் தான்

இது பல உடல் உபாதைகளுக்கு மிளகு நல்லது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.