Jump to content

டொராண்டோவில் இன்று


Recommended Posts

டொராண்டோவில் இன்று

இன்று வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி (Black Friday :icon_mrgreen: )

இன்று அதிகாலை ஐந்து மணியளவில் வெப்பநிலை போச்சியத்திற்கு மேலே ஒரு பாகை

காலை எட்டுமணியளவில் பூச்சியத்திற்கு கீழே ஐந்து பாகை, பனியுடன்

விளைவு - நிமிடத்திற்கு ஒரு விபத்து :o

0cfff6b0-5ae1-4c87-baab-855e38f1e33f_500.jpg

12eb0c92-f46d-47b1-aac8-c8d2d5fd5169_500.jpg

23a55957-951d-4794-86e4-bae273bc50fc_500.jpg

Link to comment
Share on other sites

  • Replies 427
  • Created
  • Last Reply

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

Link to comment
Share on other sites

நேற்று டொராண்டோ பெரும்பாகத்தின் ஒரு பகுதியில் ஒரு தாய் கொலை செய்யப்பட்டார், அவரது பிரச்சனைப்பட்ட கணவரால், கத்தியால் குத்தப்பட்டார்.

(இப்பத்தான் கனடாவில் ஒரு கோப்பிக்கடையில் ஒரு இருபது வயது இளையவர் கடன்மட்டைகளை திருடிய நிலையில் இதுவும் தமிழராக இருக்கக்கூடாது என மனம் வேண்டியது. நடந்த இடம் Oakville என்றபடியால் அது தமிழர்களாக இருக்கமுடியாது என மனம் சொன்னது).

கொன்ற கணவர் பின்னர் காவல்துறை மீது ஆயுதத்தை காட்டியதால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகள், முறையே வயதில் 8, 11, 13.

இவர்கள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, யூத இனத்தை சார்ந்தவர்கள்!

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ.. யூத இனம் இனிமேல் அம்பேல்..! :(

நானே வெளியிட்ட புத்தகத்தில் அன்றே கூறியிருந்தேன். இதற்கு ஒரு வழி சொல்கின்றேன் கேளுங்கள் என. ஆனால் யூதர்கள் கேட்கவில்லை.

உலக நடப்புக்களைக்கவனிக்கவில்லை.

இன்று தமக்குள் அதுவும் தமது குடும்பத்துக்குள் குத்துப்பட்டு அழிகின்றனர்.

நான் அன்றே எழுதினேன்......................................தொடரும்..................

:( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி, சைக்கிள்ள ஆர் எங்கட அர்ஜுன் ரணதுங்க அண்ணையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் வேலைக்குப் போகும் வழியில் ஒரு ட்ரக் மோதி பெண்ணொருவர் அபாயநிலையில் இருந்தார் வழிகள் அடைக்கப்பட்டதால் வேலைக்கு லேட்

இன்று நேற்று நான் கண்ட விபத்திற்கு அடுத்த இரு சந்திகளில் இருவேறுவாகனவிபத்துகள் இன்று வேலைக்கு லேட்.... :(

Link to comment
Share on other sites

சமூக விரோதிகளுக்கு எம்மவர் செய்யும் இப்படியான செய்கைகளை சுட்டிக்காட்டும் போது கடுப்பு ஏறத்தான் செய்யும் .

90 களில் டொரான்டோவில் இடம் பெற்ற எம்மவரின் வன்முறைகளால் ஒரு கலைநிகழ்ச்சி வைக்க மண்டபம் எடுக்க முடியாத நிலையும் ,சில மண்டபங்கள் பொலிஸ் பாதுகாப்பு இருந்தால் மாத்திரம் என்றும் (அதற்கு இரண்டாயிரம் டொலர் வரும் )உதைபாந்தட்டம் வைக்க மைதானம் கொடுக்கமாட்டதாத நிலையும் ,எம்மவர் ஆட்டத்திற்கு நடுவர்கள் வரமாட்டம் என்ற நிலையும் இருந்தது .மைதானம் எடுக்க ,மண்டபம் எடுக்க அலைந்தவ்ர்களுக்கு தான் அதன் அருமை தெரியும்

அதைவிட பாடசாலைகளில் ,வேலைத்தளங்களில் தமிழன் என்றால் வன்முறையாளன் என்ற பெயர் கூட உருவாகி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர்கள்தான்இருக்கின்றார்கள்.

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .அதைவிட 2009 இற்கு பின் எதற்கெடுத்தாலும் நாட்டில போராட்டம்,விடுதலை ,தேசியம் என்று சுத்தி திரிந்தவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது

சர்வதேசம் நாட்டில் செய்தது ? அதை ஏன் எழுதுவான் .

Link to comment
Share on other sites

இவ்வளவும் எழுதும் அர்சுனுக்கு அமெரிக்க ஈரூந்து படை ஆப்கான மக்களின் பிணத்துக்கு மேல் என்ன நடந்தது (சரி அல்லது பிழை) என எழுத பயம் அல்லது பக்தி இருக்க வேண்டும்(அமெரிக்கர்களிடம்).

மற்றைய இனத்தின் கெட்டவைகள் இவருக்கு தெரியாதது போல் நடிப்பது இவர் எப்படியான நடிகர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Link to comment
Share on other sites

இப்படியான ஒருநிலமை யூதனுக்கோ,இத்தாலிகாரனுக்கோ, கறுப்பர்களுகோ வரவில்லை.

இல்லை வந்திருக்கின்றது, இருந்திருக்கின்றது.

கனடாவில் புலிகள் இயக்கம் மட்டுமல்லாது உலகததமிழர் அமைப்பும் தடைசெய்யப்பட்டது .நூலகம் வேறு மூடப்பட்டது .கனடாவின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட முதல் சமூகத்திற்கு என்று வேலை செய்யும் அமைப்பு உலகத்தமிழர்.பொதுமக்களை பணத்திற்காக மிரட்டி,அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு.

எல்லா இனமும் செய்கின்றது ஆகவே நாங்களும் களவு செய்வோம் என்பதுமாதிரிதான் இங்கு கருத்துக்கள் வருகின்றது.சும்மா இருந்து பொதுமக்கள் பணத்தை சுருட்டிய சமூக விரோதிகளுக்கு எமது

சமூகத்தை பற்றி என்ன அக்கறை இருக்கபப்போகின்றது.

பொறுக்கிகளும் ,ரவுடிகளும் ,சமூக விரோதிகளும் தாங்கள் தான் தமிழனின் பிரதிநிதி என்று இருந்ததாலே இவ்வளவு அவலமும் இங்கு அரங்கேறியது (நாட்டில் உள்ள புலிகளை வைத்து இங்கு ஆட்டம் காட்டினார்கள் )எமது நல்ல காலம் கொன்சவேட்டிவ் அரசு ஆட்சிக்கு வந்து உந்த சமூக விரோத கும்பலின் வாலை வெட்டியது .

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற 9/11 க்குப்பிறகான காலத்தில் உண்மையான போராட்டம் அகப்பட்டுவிட்டது. கன்சவேட்டிவ் அரசு இன்று ஓரளவுக்கு எமக்காக குரல் கொடுக்கின்றது, ஏமாந்தது சிங்களத்திடம்.

Link to comment
Share on other sites

ரொறன்றோ காவல்துறை போதைப் பொருட் தடுப்புப் பிரிவினருக்கு எதிரான வழக்கு இன்று ஆரம்பமாகிறது

main_10749.jpg

ரொறன்றோ காவல்துறையின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது.

சந்தேக நபர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தையும், போதைப் பொருட்களையும் கொள்ளையிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

காவல்துறை ஆவணங்களில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, தமது குற்றங்களை மறைத்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது வழக்கு இடம்பெறம்.

தம்மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்துள்ளார்கள்.

2004 ஆம் ஆண்டு அவர்கள் மீது முதன் முறையாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை மிகுந்த கால தாமதமாக இடம்பெறுவதாக முடிவு செய்த நீதிமன்றம், 2008 ஆம் ஆண்டு அவர்கள் மீதான வழக்கை நிறுத்தி வைத்தது.

ஆனால், அந்த முடிவை ஒன்றாரியோவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாற்றி, வழக்கு விசாரணை இடம்பெறவேண்டுமென உத்தரவிட்டது.

கனடாவில் காவல்துறையில் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்படும் ஊழல் குறித்த மிகப் பெரும் வழக்காக இது அமைந்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/...l.aspx?ID=10749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் பணமுள்ளவனும், அதிகாரத்தில் உள்ளவனும் செய்யும் ஊழல்கள் கொஞ்சமா நஞ்சமா? வெளியில் வருவதில்லை. பணமில்லாத ஏழைகள் செய்துவிட்டால் பிடித்து பெரிதாகப்போட்டுக்காட்டி தண்டனையும் வழங்கி சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என்று பறைசாற்றுகின்றார்கள். ஆதிவேகமாக வாகனம் செலுத்தி பிடிபட்டால் ஒரு சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது இது 95வீதம் தள்ளுபடியாகின்றது.. நீங்களாகச்சென்று வாதிடடால் வாதிட விடமாட்டார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த அபராதம் என்று சொல்லி குறைந்த கட்டணம் அறவிடுவார்கள். எப்படிப் பார்த்தாலும் கூண்டில் நிற்பவர் பணத்தை இழந்தாகவேண்டும் என்பது தான் நீதிமன்றத்தின் சட்டமா?

நான் நினைக்கின்றேன் சட்டவல்லுனர் ஊடாகச்செல்லும்போது சட்டவல்லுனருக்குக் கொடுத்தபணத்தில் ஒரு பங்கு அங்கும் செல்கிறது என்று. இது பற்றி ஒரு ஆராய்ச்சி செய்யவேண்டும். எங்கும் அபத்தம் எதிலும்; அபத்தம். உலகம் அழிந்து புது உலகம் உருவாகக் கடவுளை வேண்டுகின்றேன். காப்பதற்கு நல்ல மனிதரே இல்லாததால் கடவுள் ஆவதாரம் எடுக்கவில்லைப்போலும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளுக்கால் நுழையத்தெரிந்தவன் தான் கனடாவில் வாழலாம். அதற்கு பணமும் வேண்டும். முடிந்தால் பாருங்கள் ஆமலே இருக்கும் வழக்கு ஒரு வகையாக தள்ளப்பட்டுவிடும்

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

Link to comment
Share on other sites

கனடாவில் இரண்டு விடயங்கள் விரும்பப்படும் : ஒன்று பனியில் விளையாடும் ஹொக்கி மற்றையது கனேடிய கோப்பி நிறுவனம் - ரிம் ஹார்ட்டன்ஸ். அவர்கள் இன்று புதிய பெரிய அளவிலான குவளையை அறிமுகப்படுத்தி உள்ளனர் :D :D

jan2012-newcupsizes-release-en-v2.jpg

மிக முட்டாள்தனமான யோசனை.... புதிதாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு ஒரு புது பெயர் (அளவீடு சம்பந்தமான) பெயர் வைக்காமல், முன்னம் இருந்த அனைத்தின் பெயரையும் மாற்ற வேண்டிய தேவை ஏன் 'ரிம்' இற்கு வந்தது

வழக்கமான வாடிக்கையாளர்களை முற்றாக குழப்ப போகின்றது இந்த அளவீடுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கொஞ்சம் வித்தியாசமான இடமா இருக்கும் போல கிடக்கு!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கனடாவின் கடற்படை அதிகாரி ஒருவர் இரகசியங்களை வெளிநாடு ஒன்றிற்கு கொடுத்ததாக அரசால் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.

A Halifax-area Royal Canadian Navy sub-lieutenant and intelligence officer has been charged under this country’s secrets law with passing secret government information to “a foreign entity.”

Jeffrey Paul Delisle of Bedford, N.S., has been charged under the 2001 Security of Information Act with criminal breach of trust and communicating “to a foreign entity information that the government of Canada is taking measures to safeguard.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் குளம்பவே போகிறார்கள்...நான் ரிம்கொர்டனுக்கு கோப்பி வாங்க எப்போ சென்றாலும் ஏதாச்சும் ஒரு விதத்தில் அவர்களோடு முரன்பட வேண்டி வந்துடும்..கடசியில் உங்கட கோப்பி வேணாம் வைச்சு கொள்ளுங்கோ என்று சொல்லிட்டு என்ட பாட்டு வாற நிலைமையும் ஏற்படுவது வளக்கம்..காரணம் அனேகமான இடங்களில் எந்த அளவு கோப்பி வேணும் என்னும் போது சில விற்பனையாளர்கள் திரும்ப,திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டு நின்றால் குளம்பிடுவேன்..இனி இன்னும் குழப்பம் கூடப் போகிறது போல் இருக்கு போல......ம்ம்ம்.. :rolleyes::lol:

நீங்கள் உங்கள் குவளையை கொண்டு சென்றால், ஐந்து சதம் மிச்சம் + குழப்பத்தையும் குறைக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

Link to comment
Share on other sites

ரிம் ஹாட்டன்ஸ் என்பது கோப்பிக் கடையா :unsure:

ஆமாம். இங்கே மூலைக்கு மூலை இருக்கும் கடை. கோப்பி மட்டுமல்லாது, குளிர்பானங்கள், உணவுகளையும் வழங்குகின்றனர்.

இது கனேடியர்களின் அடையாள சின்னமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கனடிய துருப்புக்கள் சண்டையிட சென்ற பொழுதும் அங்கே ஒரு கடை போட்டார்கள்.

Link to comment
Share on other sites

இன்று கனடாவின் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார் ஐரோப்பாவின் தொடரும் யூரோ பிரச்சனையால் நாட்டுக்கு இந்த ஆண்டு பத்து பில்லியன்கள் (10,000,000,000 CAD ) பொருளாதார நட்டம் வரும் என்று.

http://www.theglobea...article2306524/

இன்றைய உலகமயமாக்கலில் புலம்பெயர் கனடாவாழ் மக்கள் 250,000 என வைத்தாலும் இதில் ஒவ்வொரு தமிழனின் பங்கும் / இழப்பு 40,000 CAD :o

Link to comment
Share on other sites

கடந்த வார இறுதியில் ஒரு பிரபல்ய தொடரடுக்கு வர்த்த சாவடியில் ஒருவர் சில ஆயிரம் டாலர்களுக்கு ஆப்பிள் பொருட்களை வாங்கி தனது மோட்டார்வண்டியில் வைத்துவிட்டு மீண்டும் வேறு பொருட்கள் வாங்க திரும்பியுள்ளார். பின்னால் வந்த திருடர்கள் தமது கைவரிசையை கா ட்டி விட்டனர்.

பொருட்களை தொலைத்தவர் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு போட்டுள்ளார் ( வசதியானவர் போலுள்ளது). காரணம் - ஆப்பிள் நிறுவனம் இந்தப்பொருட்களை திருடர்கள் அபகரிப்பார்கள் என எச்சரிக்கவில்லையாம் என்பதே

ஆப்பிள் நிறுவனம் அவருக்கு அவரின் பணத்தை திரும்பி தந்ததுடன் மேலதிக பணத்தையும் கொடுத்துள்ளது.

இதுவே ஒரு தமிழருக்கு நடத்திருந்தால், அம்போ தான் இப்படி வழக்கு போடலாம் என்பதும் தெரியாது, தெரிந்தாலும் பண / நேர வசதிகள் இருக்காது :wub:

Link to comment
Share on other sites

உங்க ஆசை ஓவரா தெரியல ? மோடார்வன்டி பொருட்களை திருடியது தமிழாரய் இருககூடாது என்டு ஆசைபடுங்க அஆ :unsure:

Link to comment
Share on other sites

:Dஇலவசம் இலவசம் முற்றிலும் இலவசம் :D

கனடாவில் வரும் ஒரு தேசியப்பத்திரிகையான நசனல் போஸ்ட்டை இலவசமாக மூன்று மாதங்கள் பெறலாம். இது அரசியல் ரீதியாக வலதுசார் கொள்கை உடைய பத்திரிகை, ஆனால் பொருளாதார செய்திகளை தரம் வாய்ந்ததாக தருகின்றது.

https://subscriptions.nationalpost.com/parknfly/

மூன்று மாதம் முடிய 'வேண்டாம்' என கூற மறக்காதீர்கள் :D

Link to comment
Share on other sites

கனடாவின் சனத்தொகை அண்ணளவாக 34 மில்லியன்கள். அதில் தமிழர்கள் அண்ணளவாக 250,000 - 300,000

கனடாவில் கிட்டத்தட்ட 33% பேர் வாடகை வீட்டில் வாழுகின்றனர். தமிழர்கள் எவ்வளவு பேர் வாழுகிறார்கள் வாடகை வீட்டில் எனத்தெரியவில்லை. ஆனால், எமது சமூகத்தில் அதிகளவில் வீடு முகவர்கள் உள்ளனர். அந்த வகையில் எமது மக்கள் வீடுகளில் முதலீடு அதிகளவில் செய்கிறார்கள்.

ஒரு வீடு விற்கப்போட்டு அது எவ்வளவு காலத்தில் விலைபோனது என்பதை வைத்து எந்தெந்த இடங்கள் முறையே 'கொதிப்பாக' 'சூடாக' 'குளிராக; உள்ளது என்பதை டொராண்டோ பெரும்பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.thestar.com/news/article/1119423--toronto-real-estate-watch-is-your-neighbourhood-hot-or-not?bn=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.