Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்டு என்னும் காவிய நாயகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 112
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் புலிகளிற்கு ஆதரவு கொடுத்தவரிற்கும்,புலிகளிற்கு உதவி செய்வருக்கும் புலிகளில் பிடிக்காத தளபதி என்டால் அது கிட்டுவாமே

Kiddu%202012_Swiss%20B.jpg

விடுதலை புலிகளின் மதிப்புக்கு உரிய திறமையான தலைவரின் அதி நம்பிக்கைக்கு உரிய ஒரு தளபதி பற்றி இப்பிடி பேசாதீங்க ரதி

தேசியத்திற்காக தலைவர் வழியில் உழைத்த தன்மானத்தளபதி.

அந்தக் காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் புலிகளிற்கு ஆதரவு கொடுத்தவரிற்கும்,புலிகளிற்கு உதவி செய்வருக்கும் புலிகளில் பிடிக்காத தளபதி என்டால் அது கிட்டுவாமே

சலுகையை எதிர்பார்த்து ஆதரவு கொடுப்பவருக்கும், புகழுக்காக உதவி செய்பவர்களுக்கும் புலிகளின் தளபதிகளில் பிடிக்காத ஒருவர் என்றால் அது கேணல் கிட்டு அவர்களை மட்டுமே...

கண்டிப்பிற்குப் பெயர் போனவர். விடுதலைப்புலிகளின் ஒரு முகாம் பளிச்சென்று இருக்கிறதென்றால் அன்று அங்கு கேணல் கிட்டு வந்துள்ளார் அல்லது வரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தமிழீழவிடுதலைப் புலிகளின் கட்டமைப்பு மிகச் சீரான ஒழுக்கமான கட்டுக்கோப்பான அமைப்பாக திகழ்ந்ததென்றால் அதற்கு ஆரம்ப அத்திவாரங்களாக இருந்தவர்களில் கேணல் கிட்டுவும் ஒருவர். தவறு செய்யும் வீரர்களுக்கு இவர் வழங்கும் தண்டனைகள் கடுமையானவை. அவ்வகையான வளர்ப்பு முறைகளே பின்நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தின.

Edited by ஆதிவாசி

கிட்டு: புலிகளின் வீர வரலாற்றில் பல வெற்றிகளை ஈட்டி புலிகள் இயக்கத்துக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாவீரன். அதே நேரத்தில் மிக மோசமாக மாற்று இயக்கங்களை போட்டுத் தள்ளி தமிழர் மத்தியில் பிரிவினைக்கான உறுதியான வேர்களை இட்டு நிரப்பிய ஒருவரும் இவர்தான். வெலிகடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா

இவர்தான். வெலிகடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா

சரியான உண்மைய சொன்னதாலதாலதான் கிட்டுவ விட, நிழலி .....

எங்க போராட்ட வரலாற்றில .... உசந்து நிக்குறார்! :)

அவருக்கு மட்டு பதவி மட்டும் போதாது....

வாய்ப்பு கெடைச்சா,, சைவ கடைல,, இட்லிக்கு மாவாட்டுற பதவியும் கொடுங்க! :)

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு: புலிகளின் வீர வரலாற்றில் பல வெற்றிகளை ஈட்டி புலிகள் இயக்கத்துக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாவீரன். அதே நேரத்தில் மிக மோசமாக மாற்று இயக்கங்களை போட்டுத் தள்ளி தமிழர் மத்தியில் பிரிவினைக்கான உறுதியான வேர்களை இட்டு நிரப்பிய ஒருவரும் இவர்தான். வெலிகடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா

கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா கிட்டு என்று எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. கிட்டுவிற்கு கால் போனதை அறிந்ததும் மாற்று இயக்கங்களில் சந்தேகமானவர்களை புலிகள் அமைப்பினர் கைது செய்து கந்தன் கருணை முகாமில் அடைத்து வைத்தனர் அப்பொழுது அங்கு வந்த அருணாவே காவலில் நின்றிருந்த ஒரு போராளியின் துப்பாக்கியை பறித்து அனைவரையும் சுட்டுக்கொன்றார். இச்சம்பவம் கிட்டுவிற்கே பின்னர்தான் தெரியும். அதற்கான தண்டனையாக அருணா இயக்கத்திலிருந்து விலத்திவைக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை கொடுக்கவேண்டும் என சிலர் பிரபாகரனிடம் தெரிவித்திருந்தனர். பலர் அருணாவை இயக்கத்தை விட்டு விலத்தினாலே போதும் என தெரிவித்திருந்தனர். காரணம் புலிகளின் வளர்ச்சியில் அரணாவின் பங்கு முதுகெலும்பு போன்றது.அன்றைய காலத்தில் அருணாவிற்கான ஆதரவு நிலையெடுத்தவர்களின் நானுமொருவன். பின்னர் அருணா இந்திய படைகளால் கொல்லப்பட்டார்.

இதில் கிட்டுவின் பங்கு என்ன நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு: புலிகளின் வீர வரலாற்றில் பல வெற்றிகளை ஈட்டி புலிகள் இயக்கத்துக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாவீரன். அதே நேரத்தில் மிக மோசமாக மாற்று இயக்கங்களை போட்டுத் தள்ளி தமிழர் மத்தியில் பிரிவினைக்கான உறுதியான வேர்களை இட்டு நிரப்பிய ஒருவரும் இவர்தான். வெலிகடை படுகொலைக்கு நிகரான கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா

கந்தன்கருணை படுகொலையா.. சம்பவமா...??! அதுபோக.. அதை பேரினவாத அரசு ஒன்று திட்டமிட்டு செய்த இன அழிப்பு நடவடிக்கையின் (வெலிகடை சிறைப் படுகொலை) ஒரு அடித்தளத்தில் இருந்து ஒப்பிடுவதன் நோக்கம் என்ன..??! அதற்காக காரணங்கள் என்ன..??! முகாந்தரம் என்ன..???!

கந்தன்கருணையில் நடந்தது ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே அன்றி வேறல்ல. ஒரு அமெரிக்க படைவீரன் சக படைவீரர்களை சுட்டுக் கொன்றுவிட்டு.. தானும் சாவது.. படுகொலையா.. சம்பவமா..??!

சில சம்பவங்களை காற்று வாக்கில் வாங்கின செய்திகளின் அடிப்படையில் நழலி அவிழ்த்து விட்டு வருகிறார். அப்பப்ப தான் ஒரு நடுநிலையாளன் என்ற தோறணையை ஏற்படுத்த இதனை அவர் செய்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவை தவறான நடவடிக்கைகளும் கூட. உண்மைக்குப் புறம்பான காத்து வாக்குச் செய்திகளின் அடிப்படையில்.. மாவீரர்களின் தியாகங்களை புகழ்வது முன்னுரை இகழ்வது பின்னுரை போன்ற நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. உண்மையின் பால் மாவீரர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுதல் தவறல்ல. வதந்திகளின் அடிப்படையில் மாவீரர்களை புகழ்ந்து பின் இகழ்ந்துரைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய நடுநிலையோ.. சாமர்த்தியமோ அல்ல.

கந்தன் கருணைச் சம்பவம்.. பாதிக்கப்பட்ட ஒருவரின் துப்பாக்கி பாதிப்பை உண்டு பண்ணியவர்கள் மீது.. தீர்ப்பு வழங்க முதல் வெடித்த நிகழ்வே தவிர.. அது படுகொலை அல்ல. இதனை அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரும் அறிவர்.

கிட்டு மாமா வையோ.. அல்லது ஒரு தேச விடுதலைப் போராளியையோ எனது பெற்றோர்கள் காட்டிக் கொடுத்திருந்தால்... கூட அழிக்க நினைத்திருந்தால்.. கூட அவர்களுக்கு தண்டனை கிடைப்பதை நான் தடுத்திருக்கமாட்டேன். காரணம்.. ஒரு இனத்திற்கான விடுதலைப் போராட்டம் என்பது.. பல உயிர் கொடைகளின்.. பின்னணியில் உதிப்பது. அதனை கொச்சைப்படுத்தவோ.. காட்டிக் கொடுக்கவோ.. எதிரிக்கு ஒத்துழைத்து அழிக்கவோ நினைப்பது.. சொந்த இனத்தை மரணப் புதை குழியில் புதைப்பதற்கு சமன்..! அதைச் செய்தவர்களை என்ன செய்யலாம்.. ??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு அண்ணாவுக்காக உளவு பார்த்த,புலிகளை ஆதரித்த,இன்னும் ஆதரித்துக் கொண்டு இருக்கும் சிலர் தான் சொன்னார்கள் அதைச் சொன்னதில் முக்கியமானவர்கள் பெண்கள்...கிட்டு ஒரு மிகச் சிறந்த தளபதிகளில் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் தனிப்பட்ட ரீதியில் கிட்டு ஒரு கொலைகாரர்,கருணை,இரக்கம் இல்லாத மனிதர்...தனிய மாற்றுக் இயக்கங்களை சேர்ந்தவர்களை கொண்டிருந்தால் கூட ஏதோ போனால் போகுது எல்லோரையும் ஒரு தலைமையில் இணைப்பதற்காக செய்கிறார் என நினைக்கலாம் ஆனால் அவர் தனது சொந்த இயக்கத்தில் உள்ளவரையே ஈவு,இரக்கமின்றி கொண்றிருக்கிறார்...கந்தன் கருணை படுகொலையில் இவரின் நேரடியான பங்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் மறைமுகமாக இவரும் ஒரு காரணம்

எனக்கு தெரிந்த வரையில் 91 இன் இறுதிகளில் மேஜர் அருணா மாவீரர் பட்டிசலில் இருந்து நீக்கப்பட்டார் . அவர் உருவ படம் உள்ள சில முகாம்களில் இருந்து அவை அகற்டபட்டன . சம்மபவம் நடந்த இடம் அருணா முகாம் என்றே அழைக்கபட்டது. இது யாழ் இந்து மகளிர கல்லூரிக்கு அண்மையில் அமைத்துள்ளது . இறுதியில் யாழ் மாவட்ட துணை தளபதியின் முகாமாகவும் தக்காளி அண்ணன் தலைமையிலான வேவு படையணிகளின் முகாமாகவும் இருந்தது .

கிட்டண்ணையை பொறுத்த வரையில் யாழ் குடாநாட்டை மீட்டெடுத்த பெருமைக்குரியவர். பெரிய படை கலங்களுடன் நகரும் எதிரியை , சிறிய ஆயுதங்களுடன் சில போராளிகளுடன் நின்று விரட்டியடித்த பெருமைக்குரியவர் . அவர் போர் முறைகள் பெரும்பாலும் உளவியல் சார்ததாகவே இருக்கும். மிகுந்த ஆளுமை மிக்கவர். புலிகளின் புலனாய்வு பிரிவு ஆரம்ம்பிக்கபட்ட பின்னர் பிடி படும் உளவாளிகளை விசாரிப்பதில் பாரிய தேக்க நிலை இருந்தது. 90 களுக்கு முற்பட்ட துரோகிகளை போலல்லாமல் இவர்கள் நன்கு பயிற்ருவிக்கபட்டவர்கள். அப்போது அவர்கள் பிடிபட்டவுடன் எப்படி விசாரிக்க வேண்டும் , எப்படியான கேள்விகளை கேட்க வேண்டும், எத்தனை பேர் அதில் பங்குபற்ற வேண்டும் ,விசாரணை கட்டங்கள், அதன் செயல்முறைகள் என்று அவர் லண்டனில் இருந்து சம்மந்தபட்ட தரப்புக்கு அறுவுறுதிய பின்னரே அது பாரிய அளவு வளர்ச்சியை பெற்றது . 94 இன் இறுதிகளில் தலைவரை பற்றி கிட்டண்ணா எழுதிய பதிவுகளில் இருந்து குறுந்தட்டு ஒன்றை வெளியிடபட்டது.

இதற்கும் கிட்டண்ணாவிட்கும் எந்த சம்மதமும் இல்லை. இது அருணா தான்தோன்றி தனமாக எடுத்த முடிவு. அதனாலேயே அவர் பெயர் மாவீரர் பட்டியலில் இருந்து நீக்கபட்டது.

அவர் தனது சொந்த இயக்கத்தில் உள்ளவரையே ஈவு,இரக்கமின்றி கொண்றிருக்கிறார்...

ரதியின் தகவல்கள் கவனிக்கப்படவேண்டிதான் இருக்கு,,

தகவல்களை சேகரிக்குறது, அவ்ளோ ஈஸி இல்ல....

பட் உங்களால அது முடியுது!..!

சரி அதில ஒரு ஐஞ்சு பேரோட... பெயரையாவது எடுத்து விடுங்களேன் !

நாங்களும் அறியணுமா இல்லியா? :)

முடியாது,,,

அவர் சொன்னார் இவர் சொன்னார்,,,

பெய்யும் பெய்யாமபோகும்னு மட்டும் சொல்லிட்டு.. எஸ்கேப் ஆவிடாதீங்க!

வரும் ஆனா வராதுன்னு சொல்ல,,, இது என்ன வானிலை அறிக்கையா?

உயிர்!! :)

கந்தன்கருணை படுகொலையா.. சம்பவமா...??! அதுபோக.. அதை பேரினவாத அரசு ஒன்று திட்டமிட்டு செய்த இன அழிப்பு நடவடிக்கையின் (வெலிகடை சிறைப் படுகொலை) ஒரு அடித்தளத்தில் இருந்து ஒப்பிடுவதன் நோக்கம் என்ன..??! அதற்காக காரணங்கள் என்ன..??! முகாந்தரம் என்ன..???!

கந்தன்கருணையில் நடந்தது ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே அன்றி வேறல்ல. ஒரு அமெரிக்க படைவீரன் சக படைவீரர்களை சுட்டுக் கொன்றுவிட்டு.. தானும் சாவது.. படுகொலையா.. சம்பவமா..??!

அப்பு.....கந்தன் கருணை ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமா?...அதில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எத்தனை பேர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள் என்றாவது தெரியுமா?

உங்களைப் போன்று புலிகளின் அனைத்து செயல்களையும் கண்மூடிக்கொண்டு ஆதரித்த கூட்டத்தினரின் பங்கும் எமது போராட்டத்தின் படு தோல்வியில் பெரும் பங்கு வகிக்கின்றது. தவறு என்பது தவறு தான். நீங்கள் பந்தி பந்தியாக முழங்கினாலும், கிட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிலேச்சத்தனமாக மற்ற இயக்கங்களை கொன்று குவித்தவர்களில் மிக மோசமான முன்னுதாரணம் தான்

எனக்கு தெரிந்த வரையில் 91 இன் இறுதிகளில் மேஜர் அருணா மாவீரர் பட்டிசலில் இருந்து நீக்கப்பட்டார் . அவர் உருவ படம் உள்ள சில முகாம்களில் இருந்து அவை அகற்டபட்டன . சம்மபவம் நடந்த இடம் அருணா முகாம் என்றே அழைக்கபட்டது. இது யாழ் இந்து மகளிர கல்லூரிக்கு அண்மையில் அமைத்துள்ளது . இறுதியில் யாழ் மாவட்ட துணை தளபதியின் முகாமாகவும் தக்காளி அண்ணன் தலைமையிலான வேவு படையணிகளின் முகாமாகவும் இருந்தது .

பெரும் தவறுகளை ஒருவரின் தலையில் மட்டும் சுமத்தி ஒரு தப்புவிக்கும் போக்குத்தான் இது.

கந்தன் கருணை படுகொலையின் காரணகர்த்தா கிட்டு என்று எதை வைத்து குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. கிட்டுவிற்கு கால் போனதை அறிந்ததும் மாற்று இயக்கங்களில் சந்தேகமானவர்களை புலிகள் அமைப்பினர் கைது செய்து கந்தன் கருணை முகாமில் அடைத்து வைத்தனர் அப்பொழுது அங்கு வந்த அருணாவே காவலில் நின்றிருந்த ஒரு போராளியின் துப்பாக்கியை பறித்து அனைவரையும் சுட்டுக்கொன்றார். இச்சம்பவம் கிட்டுவிற்கே பின்னர்தான் தெரியும். அதற்கான தண்டனையாக அருணா இயக்கத்திலிருந்து விலத்திவைக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை கொடுக்கவேண்டும் என சிலர் பிரபாகரனிடம் தெரிவித்திருந்தனர். பலர் அருணாவை இயக்கத்தை விட்டு விலத்தினாலே போதும் என தெரிவித்திருந்தனர். காரணம் புலிகளின் வளர்ச்சியில் அரணாவின் பங்கு முதுகெலும்பு போன்றது.அன்றைய காலத்தில் அருணாவிற்கான ஆதரவு நிலையெடுத்தவர்களின் நானுமொருவன். பின்னர் அருணா இந்திய படைகளால் கொல்லப்பட்டார்.

இதில் கிட்டுவின் பங்கு என்ன நிழலி

சாத்திரி,

காரணகர்த்தா என்றுதானே குறிப்பிட்டு உள்ளேன். துப்பாக்கி எடுத்து சுட்டது அருணா அல்ல, கிட்டு என்றா குறிப்பிட்டுள்ளேன்?

மாற்று இயக்கங்களின் கடை நிலை உறுப்பினர் வரைக்கும் அடைத்து வைத்ததும், சித்திரைவதை செய்ததற்கும் கிட்டுவும் அவரின் உத்தரவும் தானே முக்கிய பங்கு வகித்தன?

கிட்டு, ஏனைய இயக்க உறுப்பினர்களை ,போராடுவதற்க்கு என்று உங்களைப் போலவே இளமையை தொலைத்து விட்டு மக்களின் விடிவிற்காக ஆயுதம் ஏந்தி போராட போன 80 களின் மாற்று இயக்க இடைநிலை, கடைநிலை உறுப்பினர்கள் பலரின் சாவுக்கும் கிட்டு காரணகர்த்தா அல்ல என்று உங்களின் மனச்சாட்சியை தொட்டுச் செல்லுங்கள்.

அத்துடன் அருணாவை புலிகள் தொடர்ந்து விலத்தி வைக்கவில்லையே? இராணுவ பதவிகளை கொடுக்காமல் வைத்து இறுதியில் கொல்லப்பட்ட போதும் சாதாரண உறுப்பினராகவே இருந்தார். ஆனால் தொடர்ந்து விலக்கி வைக்கப்படவில்லை

கிட்டு விடயத்தில் என் நிலைப்பாடு ஒன்றுதான். கிட்டு புலிகளுக்காகவே முற்றிலும் தன்னை அர்ப்பணித்த மாவீரன். அதே நேரத்தில் தமிழர்களுக்குள் இருந்து பொது எதிரியை எதிர்த்து போராடப் போன மாற்று இயக்க உறுப்பினர்களை 80 களில் போட்டுத் தள்ளி பின் வந்தவர்களுக்கு மிக மோசமான முன்னுதாரணமாக திகழ்ந்த ஒருவர் எனும் கருத்திலும் மாற்றம் இல்லை

நன்றி வணக்கம்

Edited by நிழலி

கிட்டுவை பற்றி அய்யரின் பதிவுகளில் விளக்கமாக இருக்கு.

ஆனால் எமது இயக்க தலைமைகளுக்கு அந்தநேரம் ஒற்றைப்போக்கான தயவுதாட்சண்யமற்ற நம்பிக்கைகுரிய தளபதிகள் தான் தேவைப்பட்டார்கள். தமக்காக உயிரைக் கூடவிடகூடிய விசுவாசிகளை விட்டு, விமர்சனம் வைப்பவர்களை தலைமைகள் தள்ளித்தான் வைத்தன .

அதுவே அத்தனை தலைவர்களினதும் தலைபோவதற்கு காரணமாகவும் அமைந்தது.

இவர் போன்றவர்களை நான் எப்போதும் ஒரு பேட்டை ரவுடிகளாகவே பார்த்தேன்

"கந்தன் கருணைச் சம்பவம்.. பாதிக்கப்பட்ட ஒருவரின் துப்பாக்கி பாதிப்பை உண்டு பண்ணியவர்கள் மீது.. தீர்ப்பு வழங்க முதல் வெடித்த நிகழ்வே தவிர.. அது படுகொலை அல்ல. இதனை அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலரும் அறிவர்."

நெடுக்சின் கருத்திற்கு நூறு பச்சைகள் சிங்களவன் குத்துவான். பாதிக்கப்பட்ட சிங்கள ராணுவம் நாப்பதனாயிரம் தமிழர்களையும் போட்டதேன்று பைலை மூட வேண்டியதுதான்.

Edited by arjun

நானும் ரதி குறிப்பிட்டது போலக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் உண்மை இருப்பதாகவே நானும் நம்புகிறேன். ஆனால், வெளிநாட்டிற்கு வந்த பின்புதான் அவருக்கு நிறைய விடயங்கள் விளங்கியிருந்தது. அவர் மட்டும் திரும்பிச் சென்றிருந்தால் எமக்கு எப்போதோ விடிவு வந்திருக்கும்.

நிழலி குறிப்பிட்டதுபோல, கண்ணை மூடிக் கொண்டு நம்பியதும் நம்புவதும் தவறுதான். இனிமேலாவது அந்தத் தவறைச் செய்யாமல் இருப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு அண்ணாதான் யாழ் கட்டளை தளபதியாக இருந்தபோது முதல்முதலாக யாழ் மாவட்டத்தில் உள்ள இராணுவத்தினரை இரானுவமுகாம்களுக்குள் முடக்கியவர், அதுமட்டுமின்றி அவர் போராளிகளின் மீது அன்பாகவும் இருப்பார் அதேசமயம் மிகவும் கட்டுப்பாடகவும் வைத்திருந்தார்.

ஓய்வில்லாத புயலாக வீசிய எங்கள் கிட்டு அண்ணா!

கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர்அதனால்தான், தமிழீழத் தேசியத் தலைவர் “கிட்டுவை ஆழமாக நேசித்தேன், தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன்.

இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்து, போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்த்த நேயம் அது” என கேணல் கிட்டுவிற்கும் தமக்கும் இடையே இருந்த பாசப் பிணைப்பினை வெளிப்படுத்துகிறார். கிட்டு எந்தளவிற்கு தலைவரின் மனதில் இடம்பிடித்தாரோ அதேயளவு தமிழீழ மக்களின் மனங்களிலும் நிறைந்திருக்கின்றார். எந்தக் காலத்திலும் மறக்கமுடியாத அவரின் நினைவுகளோடு இன்று தமிழீழம் நிமிர்ந்து நிற்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆழப்பதிக்கப்பட்ட கிட்டுவின் வரலாற்றுத் தடங்கள் அழிக்க முடியாத பெரும் பதிவாக பரிணமித்து, தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும் வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர் தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது.

வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில் துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவர பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாகனத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார்.

அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார்.

யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார்.

இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொண்டுவர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார்.

சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார்.

களத்தில், எரிமலை’ எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்.

யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள்.

கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். “கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார்.இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும்.

அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன.கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது.

போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம்.ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும்.

இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம்.சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

காரணகர்த்தா என்றுதானே குறிப்பிட்டு உள்ளேன். துப்பாக்கி எடுத்து சுட்டது அருணா அல்ல, கிட்டு என்றா குறிப்பிட்டுள்ளேன்?

மாற்று இயக்கங்களின் கடை நிலை உறுப்பினர் வரைக்கும் அடைத்து வைத்ததும், சித்திரைவதை செய்ததற்கும் கிட்டுவும் அவரின் உத்தரவும் தானே முக்கிய பங்கு வகித்தன?

கிட்டு, ஏனைய இயக்க உறுப்பினர்களை ,போராடுவதற்க்கு என்று உங்களைப் போலவே இளமையை தொலைத்து விட்டு மக்களின் விடிவிற்காக ஆயுதம் ஏந்தி போராட போன 80 களின் மாற்று இயக்க இடைநிலை, கடைநிலை உறுப்பினர்கள் பலரின் சாவுக்கும் கிட்டு காரணகர்த்தா அல்ல என்று உங்களின் மனச்சாட்சியை தொட்டுச் செல்லுங்கள்.

அத்துடன் அருணாவை புலிகள் தொடர்ந்து விலத்தி வைக்கவில்லையே? இராணுவ பதவிகளை கொடுக்காமல் வைத்து இறுதியில் கொல்லப்பட்ட போதும் சாதாரண உறுப்பினராகவே இருந்தார். ஆனால் தொடர்ந்து விலக்கி வைக்கப்படவில்லை

கிட்டு விடயத்தில் என் நிலைப்பாடு ஒன்றுதான். கிட்டு புலிகளுக்காகவே முற்றிலும் தன்னை அர்ப்பணித்த மாவீரன். அதே நேரத்தில் தமிழர்களுக்குள் இருந்து பொது எதிரியை எதிர்த்து போராடப் போன மாற்று இயக்க உறுப்பினர்களை 80 களில் போட்டுத் தள்ளி பின் வந்தவர்களுக்கு மிக மோசமான முன்னுதாரணமாக திகழ்ந்த ஒருவர் எனும் கருத்திலும் மாற்றம் இல்லை

நன்றி வணக்கம்

நிழலி அந்த சம்பவத்தை மட்டுமே விபரமாக எழுதியிருந்தேன் மற்றும்படி போராடப்போயிருந்த மற்றைய இயக்கப் போராளிகளையும் கிட்டுவின் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட கொலைகளை நான் நியாயப்படுத்தவும் இல்லை .அதே நேரம் அந்த முகாமில் புலிகளின் அரசியல் துறை காந்தி என்பவரால் பணத்திற்காக பணயம் வைக்கப்பட்டிருந்த யாழின் ஒரு நகைக்கடை முதலாளியும் அனியாயமாக கொல்லப்பட்டிருந்தார். பின்னர் காந்தியை கொல்லும்வரை தாங்கள் தாடி எடுப்பதில்லையென்று அவரது இரண்டு சகோதரர்கள் சபதமெடுத்து திரிந்திருந்தனர்.

இறந்தவர்கள் அவர்கள்து குடும்பநிலையில் இருந்து பார்த்தால் தவறானதும் வேதனையான வியமும்தான். குறிப்பாக ரெலோ அழிக்கப்பட்டபொழுது கைது செய்யப்பட்ட ரொலோ போராளிகளில் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்களை அவர்களது உறவினர்கள் தங்களிற்கு தெரிந்த புலி உறுப்பினர்களிடம் கதைத்து அவர்களின் சிபாரிசுகளுடன் வெளியில் எடுத்துவிட்டிருந்தனர். எனக்கு தெரிந்த பலரை ஊரை சேர்ந்தவர்களை நானே வெளியில் அனுப்பியிருந்தேன். ஆனால் யாருமற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அதை நியாயப்படுத்தவும் முடியாது. அன்றைய இயக்கங்களை வழிநடாத்தியவர்களின் தவறு அது ஆனால் ஆயுதக் குழு என்ற நிலையில் இருவர் ஆயுதங்களுடன் நிற்கும் பொழுது கொல் அல்லது கொல்லப்படுவாய். இதுதான் சித்தாந்தம்.

அடுத்ததாக அருணாவை புலிகள் இயக்கத்திலிருந்து முழுதாகவே நிறுத்திவைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவர் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக முகாமிற்கு வந்து போய்கொண்டிருப்பார் அவரது இரண்டு சகொதரர்களும் இயக்கத்திலேயே இருந்தனர். அவர்களும் இறந்து விட்டனர். இந்திய இராணுவத்துடன் சண்டை தொடங்கியபொழுது தானாகவே மீண்டும் இயக்கத்தோடு சேர்ந்து திரிந்தார். ஒரு புலி ஆதரவாளனைப்போல். அதன்போதுதான் கொல்லப்பட்டார்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு அண்ணாவிடமிருந்த படைநடாத்தும் தகுதிக்கு முன்னால் மற்றவை எல்லாம் தோற்றுவிடும்.

அவரது வாழ்க்கையில் சில கறைபடிந்த சம்பவங்கள் நடப்பதற்கு அவருக்கிருந்த இந்த படை நகர்த்தல் என்னும் குறியே காரணம்.

மற்றும்படி பழகுவதற்கு மிகவும்எழிமையான நண்பர்.

அவர் தான் அதைச் செயதார், இவர் தான் இதைச் செய்தார் என்று சண்டை போடுவதை விட்டு உருப்படியாய் ஏதாவதை செய்யுங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் அதைச் செயதார், இவர் தான் இதைச் செய்தார் என்று சண்டை போடுவதை விட்டு உருப்படியாய் ஏதாவதை செய்யுங்கோ!

நானும் இதைக் கேட்கலாம் என்று நினைத்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அலை.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு.....கந்தன் கருணை ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமா?...அதில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எத்தனை பேர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள் என்றாவது தெரியுமா?

உங்களைப் போன்று புலிகளின் அனைத்து செயல்களையும் கண்மூடிக்கொண்டு ஆதரித்த கூட்டத்தினரின் பங்கும் எமது போராட்டத்தின் படு தோல்வியில் பெரும் பங்கு வகிக்கின்றது. தவறு என்பது தவறு தான். நீங்கள் பந்தி பந்தியாக முழங்கினாலும், கிட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிலேச்சத்தனமாக மற்ற இயக்கங்களை கொன்று குவித்தவர்களில் மிக மோசமான முன்னுதாரணம் தான்.

பெரும் தவறுகளை ஒருவரின் தலையில் மட்டும் சுமத்தி ஒரு தப்புவிக்கும் போக்குத்தான் இது.

சரி நீங்களும் சரி.. இந்தியாவும் சரி.. சிறீலங்காவும் சரி.. சர்வதேசமும் சரி.. மாற்று ஆயுதக் கும்பல்களும் சரி.. புலிகளில் பிழைபிடித்து சாதித்தை முதலில் பட்டியல் செய்யுங்கோ..??!

விடுதலைப்புலிகள் தேசத் துரோகக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவில்லை என்பதோ.. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை விட்டு.. விடுதலைப் பாதை விட்டு நகர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்க வில்லை என்பதோ அல்ல.. எமது பேச்சு. கந்தன் கருணை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நீங்கள் பேரினவாதத்தின் படுகொலை நிகழ்வோடு.. ஒப்பிட இருந்த முகாந்தரம் என்ன.. என்பதே கேள்வி..???!

சிங்களப் படைகள் கூட பல நூறு பேரை சுட்டுக் கொன்று புதைத்த செம்மணிப் படுகொலையையே ஒரு சம்பவமாக்கி.. கிருசாந்தி குமாரசாமி வழக்கோடு அதற்கு மூடுவிழாச் செய்து விட.. சர்வதேசமும் கேட்டு அடங்கிவிட்டது.

விடுதலைப்புலிகளின் தவறுகளை கண்டுபிடிச்சு.. என்னத்தை வெட்டி விழுத்தி இருக்கிறார்கள்.. இவ்வளவு காலமும். அமெரிக்கப் படைகள் வியட்நாமில் செய்த படுகொலைகள் தொடர்பில் குற்றம் சுமத்தியதற்காக.. அமெரிக்கா.. அதன் பின்னான படை நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளை மீறாமல் நடந்து கொண்டுள்ளதா..??! அமெரிக்கா மீதான குறைபிடித்தல்கள் மூலம்.. உலகம் எதைச் சாதித்தது. விடுதலைப்புலிகள் மீது குறை கண்டு இல்லாத பொல்லாத பழிகளை எல்லாம் அவர்கள் மீது போட்டு அவர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து.. தமிழ் மக்களின் போராட்டத்தை பெரும் படுகொலைக்குள் தள்ளி அளித்ததை விட வேறு எதைச் செய்திருக்கிறீர்கள்..???!

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதன் மூலம்.. எப்படி.. தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு நாம் உறுதுணையாக இருந்தோம் என்று சொல்ல முடியுமா..??! விடுதலைப்புலிகள் தோன்றிய காலம் தொட்டு அவர்கள் மீது விமர்சனங்கள் வந்து கொண்டு தான் உள்ளன. அமெரிக்கா 1981 இல் இருந்து தமிழர்களின் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் இயக்கங்களை பயங்கரமாக வகுந்து கொண்டு.. ஜே ஆர் அரசிற்கு உதவிய காலத்தில் இருந்து புலிகள் மீது குறைபிடிப்பது குற்றம் காண்பது நடந்தே வருகிறது..??! இதன் மூலம்.. தமிழர்கள் நீங்கள் வெட்டி வீழ்த்தியது எதனை..???! துரோகிகளையும்.. தேசத்தைக் காட்டிக் கொடுத்தோரையும்.. உண்மையான போராளிகளை அழித்தோரையும் காப்பாற்றி விட்டதைத் தவிர.. வேறு எதைச் செய்தீர்கள்..???! :icon_idea::o:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.