Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லடை ( சொலவடை )

Featured Replies

வீட்டுக்கு வீடு வாசல் படி ( இது சரியோ தெரியாது, தமிழ் படித்து எந்தக்காலமப்பா)

சேறு கண்ட இடத்தில் மிதிச்சு தண்ணி கண்ட இடத்தில் கால் கழுவுவது

எலி வளையாயினும் தனி வளை வேண்டும்

  • Replies 231
  • Views 43k
  • Created
  • Last Reply

சிதம்பர சக்கரத்தைப்

பேய் பார்த்த மாதிரி.

விளக்கம்: எந்த விளக்கமும் இல்லாத நிலை.

கண்கெட்ட பின்

சூரிய நமஸ்காரம் செய்தமாதிரி

விளக்கம்: எதையும் உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தோடை, கோவிச்சுக் கொண்டு.. கு-டி கழுவாமல் இருக்கப் படாது.

எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் என்ற படியால்... இதுக்கு, விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளத்தோடை, கோவிச்சுக் கொண்டு.. கு-டி கழுவாமல் இருக்கப் படாது.

எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் என்ற படியால்... இதுக்கு, விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன். :lol:

பேப்பர் மட்டும் பாவிக்கிற ஆக்களுக்கு விளக்கம் கட்டாயம் தேவையெண்டு நினைக்கிறன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேப்பர் மட்டும் பாவிக்கிற ஆக்களுக்கு விளக்கம் கட்டாயம் தேவையெண்டு நினைக்கிறன். :lol:

பேப்பரோட கோவிச்சு கொண்டு கு --டி துடைக்காமல் இருக்கக்கூடாது :lol:

குமரி தனி வளி போனாலும் கொட்டாவி தனி வளி போகாது.(இப்ப இது சரி வராது)

  • கருத்துக்கள உறவுகள்

எளியவனாப்பறந்தாலும்

இளையவனாப்பிறக்கக்கூடாது

விளக்கம்: தாழ்ந்த சமூகத்தில் பிறப்பதனால் வரும் அடக்குமுறையைவிட

வீட்டில் கடைசிப்பிள்ளையாகப்பிறப்பதால் வரும் அடக்குமுறை அதிகம்.

இதை என் தம்பி அடிக்கடி சொல்வான்.

இப்பவும் முழிந்து பார்த்தால் பிப்பி போகுமில்ல.... :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

எளியவனாப்பறந்தாலும்

இளையவனாப்பிறக்கக்கூடாது

விளக்கம்: தாழ்ந்த சமூகத்தில் பிறப்பதனால் வரும் அடக்குமுறையைவிட

வீட்டில் கடைசிப்பிள்ளையாகப்பிறப்பதால் வரும் அடக்குமுறை அதிகம்.

இதை என் தம்பி அடிக்கடி சொல்வான்.

இப்பவும் முழிந்து பார்த்தால் பிப்பி போகுமில்ல.... :lol::D :D

தவறு ஏழையாக பிறந்தாலும்

இளையவனாக பிறக்க கூடாது

எளியவன் ........எளிமை .....?.

எழியவன்...ஏழ்மை .....?

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் பாட்டி

பார்க்கலாம் மற்றவர்களுடைய கருத்துக்களையும்.

தெளிவு கிடைத்தால் மாற்றிவிடுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தவறு ஏழையாக பிறந்தாலும்

இளையவனாக பிறக்க கூடாது

எளியவன் ........எளிமை .....?.

எழியவன்...ஏழ்மை .....?

பாட்டி சொல்வதுதான் சரி :)

இதனை நான் எழுதலாம் என நினைத்துப் பார்த்தபோது தமிழ் சிறி எழுதியுள்ளார். நன்றி.

எனது திருப்த்திக்கு மீண்டும் அதை இணைக்கிறேன்.

குளத்தோடை, கோவிச்சுக் கொண்டு.. கு-டி கழுவாமல் இருக்கப் படாது.

  • தொடங்கியவர்

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம்

விளக்கம் :

ஒன்றை அடையும் வரைதான் அதில் சுவாரசியம் இருக்கும் . அதன்பின் அதனால் ஏற்படுகின்ற நடைமுறைப் பிரைச்சனைகளால் அவதியுறுவர் .

திருவாக்குக்கு எதிர்வாக்குக்கு உண்டா?

விளக்கம் :

நேர்மையான நல்வர்கள் சொல்கின்ற சொற்களுக்கு எதிர்கருத்துகள் இருக்க மாட்டாது.

Edited by கோமகன்

"குழந்தையில்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்"...

"வேண்டா மனைவி கால் பட்டால் குற்றம், கை பட்டால் குற்றம்"...

"பேச்சுப் பல்லாக்கு தம்பி கால்நடை.."

"விடிய விடிய ராமன் கதை , விடிந்தால் ராமன் சீதைக்கு என்ன முறை..."

எலி வளையாலானாலும் தனி வளை வேண்டும்.

ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது .

பனம் பாத்தியானாலும் பருவத்தில்தான் கிண்ட வேணும் .

நாடு கெட்ட கேட்டுக்கு நரி உளுந்து வடை கேட்டதாம் .

Edited by sudalai maadan

  • தொடங்கியவர்

கல்கி , சுடலைமாடனுக்கு மிக்க நன்றிகள் . வருங்காலத்தில் சொல்லடையை எழுதும் பொழுது அதற்கான விளக்கத்தையும் சேர்த்து எழுதினால் வாசகர்கள் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள் .

எங்கள் வீட்டில் கேள்விப்பட்டது. இவை சொல்லடை என்று தான் நினைக்கிறேன்.

ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே

(இலகுவாக/ எளிதாக கிடைத்தவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல்.)

வீடு போ போ என்குது , காடு வா வா என்குது

(தமக்கு வயதாகிவிட்டது என்ற புலம்பல்.)

கீழே உள்ளவையும் சொல்லடைகளா?

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்

கண்டதைக் கற்று பண்டிதனாகு

இது புசுசபா

வை திஸ் கொலவெறி கொல வெறி கொல வெறி டீ

விளகம்

எனகு தெரியாபா

  • தொடங்கியவர்

சொலவடை தந்த ஈஸ் குண்டனுக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்குமாம்.

விளக்கம் :

மனிதவாழ்வில் எதுவும் பிரையோசனமற்றது என்று இல்லை . ஒரு விடையம் பிரையோசனமில்லை என்று தோன்றினாலும் ,அதிலும் ஏதாவது நன்மையளிக்கும் விடையம் உண்டு

அறுப்புக்காலத்திலையும் எலிக்கு ஐந்து பெண்சாதி வேணுமாம் .

விளக்கம் :

ஒருவருக்கு அதிக அளவில் பணம் கிடைக்கும் பொழுது அதை ஆடம்பரமாக ஊதாரித்தனமாக செலவளித்தல் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக்கண்ணன்.

  • தொடங்கியவர்

சொலவடை தந்த நுணாவிலானுக்கு மிக்க நன்றிகள் . விளக்கத்தையும் எழுதினால் நன்றாக இருக்கும் .

  • தொடங்கியவர்

கைய பிடித்து கள்ளை வார்த்து , மயிரை பிடித்து பணம் வாங்குறதா ?

விளக்கம்:

தப்பானவழியில வாற காசுகள் ( நட்புகளால் கூட ) எப்பவுமே ஆபத்தானது .

புருசன் செத்து அவதி படும் போது, அடுத்த வீட்டுக்காரன் கமக்கட்டில இடிக்கிறானாம் !

விளக்கம்:

பாதுகாப்பில்லாத பெண்களிடம் , ஆண்கள் பாதுகாப்பில்லாத நிலையை அனுகூலமாக்கிப் பழகுவதைக் குறிக்கும் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .

பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !

  • 2 weeks later...

மயிரைக் கட்டி மலையை இழுத்தால்

வந்தால் மலை போனானல் மயிர்

இறால் போட்டு சுறாப் பிடிக்கிறாய்...

சிறிய விடயங்களைச் செய்து பெரிய பலனை அடைவது.

ஆனான பூனைக்கெல்லாம் ஓட்டங்காட்டிய எலியார்,

வீணான தேங்காய்ச்சொட்டில பொறியுண்டாராம்!

விளக்கம்:

பல பூனைகளிடம் இருந்து தப்பிய எலி, பொறியில் வைக்கப்பட்ட தேங்காய்ச்சொட்டை கடிக்க ஆசைப்பட்டு மாட்டுற மாதிரி...

எவ்வளவு பேருக்கோ போக்குக்காட்டின முதுபெரும் வித்துவான்கள் எல்லாரும் சின்ன வித்துக்களினை நோண்டப்போய் தங்களையே நொந்துகொள்ளுவினம்!

  • தொடங்கியவர்

ஆனான பூனைக்கெல்லாம் ஓட்டங்காட்டிய எலியார்,

வீணான தேங்காய்ச்சொட்டில பொறியுண்டாராம்!

விளக்கம்:

பல பூனைகளிடம் இருந்து தப்பிய எலி, பொறியில் வைக்கப்பட்ட தேங்காய்ச்சொட்டை கடிக்க ஆசைப்பட்டு மாட்டுற மாதிரி...

எவ்வளவு பேருக்கோ போக்குக்காட்டின முதுபெரும் வித்துவான்கள் எல்லாரும் சின்ன வித்துக்களினை நோண்டப்போய் தங்களையே நொந்துகொள்ளுவினம்!

அனேகமாகக் கவிதையின் சொந்தச் சொலவடையாக இருக்கும் என்று நினைக்கின்றேன் .அருமை கவிதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.