Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தலைவர் ?!, அவரின் கடைசி மகன், மக்கள் சித்திரவதையின் பின் படுகொலை.

Featured Replies

என்னது காந்தி செத்துட்டாரா?? :( :( :(

இந்த நேரத்தில் இந்த நக்கல் தேவையில்லை

இதன் மறு பெயர் வாய் கொழுப்பு

  • Replies 86
  • Views 10.3k
  • Created
  • Last Reply

சனல் 4 காட்டப் போகும் காணொளி ஈழத்தமிழரின் விடிவுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கப் போகின்றது. என்பதில் ஐயமில்லை.தலைவர் பற்றி அவர்கள் காண்பிக்கும் படங்கள் ஏற்கனவே வெளியாகி பல வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியவைதான்.அருச்சுனனுக்கு மாம்பழம் மட்டுமே தெரிந்தது என்பது போல எங்களுக்கு எமது விடிவு மடடுமே தெரிய வேண்டும். தலைவர் அதற்காகவே போராடினார். இந்த நிலையில் சனல்4ஐ துரோகியாக்கி புனை கதைகளை அவுpழ்த்து விடும் தமிழ் ஊடகங்களின் அரசியல் வங்குரோத்துத் தன்மையை என்னவென்பது.காட்டப்படப்போகும் உடல் தலைவரது உண்மையான உடலா அல்லது டம்மியா என்பதற்கான விவாதத்தை தொடக்கி சர்வதேசம் சொல்லும் புலிகளின் மீதான போர்க்குற்றங்களை மீண்டும் கிளறுவதால் எந்த பயனும் விளையாது.மாறாக தீமையே கிடைக்கும்.சர்வதேசத்தைப் பொறுத்தவரை தலைவரும் புலிகளும் அழிந்து விட்டார்கள்.அவர்கள் அந்த வகையிலேயே தங்கள் செய்திகளை வெளியிடப் போகிறார்கள்.ஆகவே எந்தவித சலனத்துக்கும் ஆட்படாமல் தலைவர் பற்றி ஓவ்வொருவரும் எந்த நிலைப்பாட்டில் இதுவரை இருந்தீர்களோ அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இரக்கலாம் அல்லது உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சனல் 4 இன் காணோளியை வைத்து போராடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதுத தமிழர்கள் முன்னால் தற்போதுள்ள கடமையாகும்.

புலவர் இதெல்லாம் உலகத்திலை அதிகூடிய அறிவுமிக்க இனங்களில் யூதனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் இல்லை இல்லை இப்ப யூதனையே மிஞ்சிவிட்ட தமிழனிட்டை எடுபடாது.

தலைவர் வீரச்சாவடைந்துவிட்டார் எண்டு சொல்லி இப்ப எங்களிட்ட இருக்கிற ஒற்றுமையை குலைக்கிறதுக்கு சிறிலங்காவும் இந்தியாவும் சணல் 4ற்குள் ஊடுருவி பரப்புரை செய்ய முயற்சிக்கினம். இதை விளங்காம இருக்க நாங்கள் என்ன மோட்டுச் சிங்களவனா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பாக இலங்கை அரசு சனல்4 க்கு பதிலடியாக ஒரு விபரண படத்தை தயாரிக்க ஆரம்பித்து விட்டதாம்.சம்பந்தப்பட்டவர்கள்,அப்போது அங்கிருந்தவர்கள் நேர்காணப்படுவார்களாம்.நந்திக்கடலில் நடந்த உண்மை வெளிவருமாம்.

http://www.deccanchr...r-surrender-679

LTTE's Prabhakaran was shot dead after 'surrender'

Reliable sources claim Prabhakaran was led to believe Western powers, the UN and India had brokered a surrender plan which would allow top Tiger leaders and families a safe passage out of the battle zone. Surrounded by the Lankan army, the Tiger chief had no option but to give up his fight.

Many believe Prabhakaran was expecting to be picked up by a foreign rescue vessel - perhaps UN sponsored - and live to fight another day.

But now, it has been revealed that the Prabhakaran family - wife Mathivathani, daughter Duvaraka and son Balachandran - were in government custody for days before being flown to Nanthikadal and executed. He was the last to die, sources said, adding that elder son Charles Antony was killed a couple of days earlier, while trying to break through a Lankan cordon. Many also believe Prabhakaran was made to watch the executions.

நம்பகமான ஆதாரங்கள்: பிரபாகரன் மேற்கத்திய சக்திகள், ஐ.நா. மற்றும் இந்திய உயர்மட்ட புலி தலைவர்கள் மற்றும் குடும்பங்கள் போரில் மண்டலத்தின் வெளியே பாதுகாப்பாக செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு சரணடைய திட்டம் இடைத்தரகர் வழிவகுத்ததாக கூறுகின்றனர். இராணுவ சூழப்பட்ட, தலைவர் வேறு வழியே இல்லை ஆனால் தனது போராட்டத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார்.

கப்பல் கதையை தலைவர் நம்பியிருந்தால் 30 வருடமாக போராட்டத்தை எப்படி கொண்டு நடத்தினார் என்ற சந்தேகம் தான் வரும்.

மேலும் கிளிநொச்சி விழுவதற்கு முன்பே முடிவு எப்படி இருக்கும் என்பதை அவர் ஊகித்தே இருப்பார். ஏனென்றால் களநிலமைகள், ஆள்/ஆயுத நிலவரங்கள் சம்பந்தமான தகவல்கள் அவருக்குப் போய்க்கொண்டு தான் இருக்கும். ஆகவே முள்ளிவாய்க்கால் ஒரு சடுதியான பொறியல்ல மாட்டுப்படுவதற்கு.

Channel4 இது தான் பிரபாகரனின் உடலம் என்று உறுதியாகச் சொல்லி நிரூபிக்கப் போவதில்லை.

இது தானா பிரபாகரனின் உடலம் என்ற விவாதத்திற்குள்ளும் போக மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

The programme has also obtained unofficial footage, which suggests that his father Velupillai sustained a massive head wound – when his body was shown on television his head was covered by a rag.

இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த உத்தியோகபு+ர்வமற்ற படப்பிடிப்பு அவரது தந்தையாரான வேலுப்பிள்ளையும் பாரிய காயத்தை தலையில் பெற்றிருந்தார் என்று உணர்த்துகிறது. அவரது உடல் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட போது அவரது தலை துணியால் மூடப்பட்டிருந்தது.

***

(மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்)

Edited by இணையவன்

என்னது காந்தி செத்துட்டாரா?? :( :( :(

ஜோ சாத்திரி இது 2012 ஜயா.. இன்னுமா? 1950 ல? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னது காந்தி செத்துட்டாரா?? :( :( :(

தலைவர் இருக்கிறாரோ இல்லையோ. நான் தான் தலைவர் இறந்துவிட்டார், எண்டு முதலில் சொன்னேன் என்பதில் சிலருக்கு என்ன சந்தோசமோ.?

இப்படியானவர்கள் கூட எல்லாம் விடுதலைப்புலிகளில் இருந்தார்கள் எண்டு நான் சொன்னால், நீங்க நம்பவா போறீங்க.? :lol::icon_idea:

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இருக்கிறாரோ இல்லையோ. நான் தான் தலைவர் இறந்துவிட்டார், எண்டு முதலில் சொன்னேன் என்பதில் சிலருக்கு என்ன சந்தோசமோ.?

இப்படியானவர்கள் கூட எல்லாம் விடுதலைப்புலிகளில் இருந்தார்கள் எண்டு நான் சொன்னால், நீங்க நம்பவா போறீங்க.? :lol::icon_idea:

மிக அழுத்தமாக யதார்த்தத்தைப் பேசுகின்றீர்கள்!

பொய்யும் நன்மை செய்யும் தகுதி உடையது எனில் அதுவும் உண்மையே என்கின்றார் வள்ளுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் காலம் வருகிறதா???

தலைவர் இருக்கிறாரோ இல்லையோ. நான் தான் தலைவர் இறந்துவிட்டார், எண்டு முதலில் சொன்னேன் என்பதில் சிலருக்கு என்ன சந்தோசமோ.?

இப்படியானவர்கள் கூட எல்லாம் விடுதலைப்புலிகளில் இருந்தார்கள் எண்டு நான் சொன்னால், நீங்க நம்பவா போறீங்க.? :lol::icon_idea:

அது தானே? மக்கள் செத்தால் என்ன சொந்த தாய் தந்தை சிங்களவனிடம் மாட்டினால் என்ன அதை விட சொந்த மகனை ஆர்மி சுட்டால் என்ன அந்தால் தப்பி ஓடி இருக்கும்,

தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் காலம் வருகிறதா???

இப்ப மட்டும் என்ன கொடுகட்டி பறக்கும் இனமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் நேரில் எதையும் பார்க்கவும் இல்லை அந்த இடத்தில் நின்று பார்த்தவர்கள் யாரும் தப்பி வந்ததாகவும் தனது பெயரை குறிப்பிட்டு கூறவும் இல்லை

யார்யாருக்கு மனசில் என்ன எல்லாம் தோன்றுகின்றதோ அதையெல்லாம் எழுதுகின்றார்கள் அது அவர்களின் எழுத்து சுதந்திரம் ஆனால் அந்த சுதந்திரம் என்று கருதும் விடயம் என்னும் ஒருவருடைய சுதந்திரத்தையோ மனசையோ பாதிப்பதாக இருக்கக்கூடாது

எவர் வேண்டுமானாலும் என்னத்தையும் எழுதட்டும் என்னை பொறுத்தளவில் இந்த விடயத்தை பற்றி விவாதிக்காது இருப்பது இப்போதைக்கு நல்லது என நான் எண்ணுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்ன கொடுகட்டி பறக்கும் இனமா?

நான் எழுதியதன் தாக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.

எனது கவலை எனக்குப்பின் எதை எனது பிள்ளையிடம் கொடுக்கப்போகின்றேன் என்பது. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக்குத் தேவை தலைவர் இருக்கிறார் என்கிற செய்தி..! அனைத்துலகத்திற்குத் தேவையானது தலைவர் இல்லை என்கிற செய்தி..! :rolleyes:

இன்று ஓரளவாவது போராட்டம் இழுபறியுடன்தன்னும் போய்க்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தலைவருக்கு நடந்தது என்ன என்பதில் உள்ள குழப்பநிலைதான்..! :huh: சிங்களவன் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தானென்றால் இன்று அவன் ஜெனிவாவில் நின்று குழறவேண்டிய தேவை அவனுக்கு இருந்திருக்காது..! :unsure:

தலைவர் இருக்கிறார் என்று நம்புபவர்கள் தலைவர் மீண்டும் வந்து சண்டைபிடிப்பார் என எண்ணிக்கொண்டிருக்கவில்லை...! மாறாக, அவரைத் தங்கள் ஆன்மாவென நினைத்துச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்..! ஆன்மாவற்ற உடல் பிணத்திற்கு ஒப்பாகும்..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பல் கதையை தலைவர் நம்பியிருந்தால் 30 வருடமாக போராட்டத்தை எப்படி கொண்டு நடத்தினார் என்ற சந்தேகம் தான் வரும்.

மேலும் கிளிநொச்சி விழுவதற்கு முன்பே முடிவு எப்படி இருக்கும் என்பதை அவர் ஊகித்தே இருப்பார். ஏனென்றால் களநிலமைகள், ஆள்/ஆயுத நிலவரங்கள் சம்பந்தமான தகவல்கள் அவருக்குப் போய்க்கொண்டு தான் இருக்கும். ஆகவே முள்ளிவாய்க்கால் ஒரு சடுதியான பொறியல்ல மாட்டுப்படுவதற்கு.

Channel4 இது தான் பிரபாகரனின் உடலம் என்று உறுதியாகச் சொல்லி நிரூபிக்கப் போவதில்லை.

இது தானா பிரபாகரனின் உடலம் என்ற விவாதத்திற்குள்ளும் போக மாட்டார்கள்.

இந்த கப்பல் கதைகளை நம்பும் பிரபாகரனாய் இருந்திருந்தால் சிங்களத்திற்கு இவ்ளவு காலமும், இவளவு நாடுகளும், இவளவு ஆயுதங்களும் தேவையே பட்டிருக்காது புலியை வெல்ல. வெறும் கதையாலேயே புலியை தேற்கடித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை நன்றி தங்களது விளக்கத்துகக்கும் கரிசனைக்கும்.

முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியும்( எல்லோருக்கும் தெரிந்த அளவு)

ஆனால் அதை என் மனைவி பிள்ளைகளுடன் கூட விவாதிக்க அல்லது உண்மையைச்சொல்ல முடியாதவனாகத்தான் நான் இருக்கின்றேன். காரணம் தூர நோக்கம். எல்லாவற்றையும் போட்டுடைப்பதற்கும் பொறுமை காப்பதற்கும் இடையேயான வித்தியாசம் என்றொன்று இருக்கிறதல்லவா?

ஏன் அண்மையில் இங்கு மாவீரர் நாளை இரண்டாக கொண்டாடியவர்களால் கூட தலைவருக்கு அஞ்சலி செய்யமுடியவில்லை.

உண்மை நிலை இதுதான்.

என்னைப்பொறுத்தவரை

தலைவர் இருந்தால்தான் தமிழீழம் என்ற நிலையுமில்லை.

அதேநேரம் தலைவர் தன்க்கு மாலை மரியாதை அஞ்சலி தான் தேவை என்று என்றுமே எதிர்பார்த்ததில்லை.

அவருக்கு என்ன செய்தால் சந்தோசப்படுவார் என எனக்குத்தெரியும்.

இசை நன்றி தங்களது விளக்கத்துகக்கும் கரிசனைக்கும்.

முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்று எனக்கும் தெரியும்( எல்லோருக்கும் தெரிந்த அளவு)

ஆனால் அதை என் மனைவி பிள்ளைகளுடன் கூட விவாதிக்க அல்லது உண்மையைச்சொல்ல முடியாதவனாகத்தான் நான் இருக்கின்றேன். காரணம் தூர நோக்கம். எல்லாவற்றையும் போட்டுடைப்பதற்கும் பொறுமை காப்பதற்கும் இடையேயான வித்தியாசம் என்றொன்று இருக்கிறதல்லவா?

ஏன் அண்மையில் இங்கு மாவீரர் நாளை இரண்டாக கொண்டாடியவர்களால் கூட தலைவருக்கு அஞ்சலி செய்யமுடியவில்லை.

உண்மை நிலை இதுதான்.

என்னைப்பொறுத்தவரை

தலைவர் இருந்தால்தான் தமிழீழம் என்ற நிலையுமில்லை.

அதேநேரம் தலைவர் தன்க்கு மாலை மரியாதை அஞ்சலி தான் தேவை என்று என்றுமே எதிர்பார்த்ததில்லை.

அவருக்கு என்ன செய்தால் சந்தோசப்படுவார் என எனக்குத்தெரியும்.

ஆனால் தலைவர் எது சொன்னாலும் கேட்கும் மக்கள், இவ்வளவு போராளிகளையும் ஓரணியில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தன்மை....

சுயநலமில்லாத இத்தலைவனை நம்பிய அளவுக்கு வேறெந்த தலைமையையும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியொரு வசீகரம் எம் தலைவனுக்கு.

தலைவன் இல்லாமல் தமிழீழம் கிடைத்தாலும் அதற்கு தலைவனாக இப்படியொரு தலைவனை இனியும் பெற முடியுமா?

ஒருவர் மீது பிடிப்பில் அவர் மீது விமர்சனம் வைப்பதுக்கும் ஒருவரின் வீரச்சாவையே அல்லது இருப்பையே கேள்விக் குறியாகவும் நக்கலாக பேசும் கேவலமகெட்ட பிழைப்பு இது.

கோட்டை விடுகிறோமா?

முள்ளிவாய்க்காலில் ஒரு பெரிய மானிட இனப்படுகொலை நடந்த பின்னர் என்ன செய்வது எனத்தெரியாமல் இருந்தவர்கள் நாம். எமக்கு ஆதரவாக சனல் நாலு பல ஆதாரங்களை திரட்டி சரியான நேரத்தில் சரியான இடத்தில் போர்குற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இங்கே நாம் என்ன செய்யவேண்டும்?

நிச்சயம் இந்த ஆதாரங்களை பலப்படுத்தவேண்டும், அவற்றை வைத்து பரப்புரை செய்யவேண்டும், எமது மக்களுக்கு நீதியுடன் ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும். அதிலேயே எங்கள் கவனம் இருக்கவேண்டும்.

குழப்பி குழப்பி தெளிவு வராது

இப்போதைய நோக்கம் என்ன என்று பார்த்து அதற்க்கு மட்டும் வேலையே பாருங்கப்பா தலைவர் வந்தாலும் சரி .... ( பேச வேண்டாம் விட்டுடுவோம்)

நோக்கம் : தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

( வாழ்க வெல்க தமிழீழம் )

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன் எல்லாரும் ஒற்றுமையாக போராடி எங்கட மக்களுக்கு ஒரு விடிவை பெற்று கொடுப்போம் வாங்கோ

ஒரு கரம் கொடுங்கள். வெல்லுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தேசிய தலைவரின் மகன், தன்னுயிரை கொடுத்தும், எம் மக்களின் உரிமைக்காகவும் விடிவுக்காகவும் போராடுவது உங்கள் மனச்சாட்சியை உறுத்தவில்லையா. ?

உறுத்தாவிடின் கண்ணாடி முன்னால் போய் நின்று உங்களை பார்த்து காறி துப்புங்கள். எங்களுக்கு ஒரு நாடு தேவை தானா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

இறந்தும் எம் இனத்துக்காக போராடும் அந்த பாலகனுக்காக ஒற்றுமையாக இருப்போம் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதிபூணுவோம்.

அண்மையில் தாயகம் சென்றிருந்த வேலை எனது உறவுக்காரப் பெண் போராளி ஒருவரை பார்க்க நேர்ந்தது அவருடனான நீண்ட நேர உரையாடலின் நடுவில் எனது கேள்வி.

கேள்வி-தலைவர் எங்கே இருக்கின்றார்?

பதில்-அவர் இருக்கிறார் 3000 போராளிகளுக்கு பயிற்சி நடக்குது அவருக்குத்தான் 3000 பேர் மூன்று லட்சம் மாதிரியே அது போதும் அவருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தாயகம் சென்றிருந்த வேலை எனது உறவுக்காரப் பெண் போராளி ஒருவரை பார்க்க நேர்ந்தது அவருடனான நீண்ட நேர உரையாடலின் நடுவில் எனது கேள்வி.

கேள்வி-தலைவர் எங்கே இருக்கின்றார்?

பதில்-அவர் இருக்கிறார் 3000 போராளிகளுக்கு பயிற்சி நடக்குது அவருக்குத்தான் 3000 பேர் மூன்று லட்சம் மாதிரியே அது போதும் அவருக்கு.

தாங்க முடியல...........

தேசிய தலைவர் மேல் மரியாதை வைத்து இருக்கும் போராளி இப்படி சொல்லி இருக்க மாட்டா என்று தான் எனக்கு தோனுது

தலைவரின் இருப்பை அறியும் முயற்சி - ஏகன்

இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.

ANNai%201.JPG

அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.

இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.

இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.

இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?

http://www.lankasri.com/ta/link-3m4340SdMgb6eEIcQ372.html

அண்மையில் தாயகம் சென்றிருந்த வேலை எனது உறவுக்காரப் பெண் போராளி ஒருவரை பார்க்க நேர்ந்தது அவருடனான நீண்ட நேர உரையாடலின் நடுவில் எனது கேள்வி.

கேள்வி-தலைவர் எங்கே இருக்கின்றார்?

பதில்-அவர் இருக்கிறார் 3000 போராளிகளுக்கு பயிற்சி நடக்குது அவருக்குத்தான் 3000 பேர் மூன்று லட்சம் மாதிரியே அது போதும் அவருக்கு.

உண்மையில் தலைவர் பயிற்சி கொடுத்தால் அது ரகசியமாக தான் இருக்கும். இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டு திரிய மாட்டார்கள். போராளிகளை சந்தோஷப்படுத்த இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.

அதிகளவு போராளிகளை கொண்டிருக்கும் போதே எதுவும் செய்ய முடியாத நிலை. அப்படியிருக்கும் போது 3000 பேருடன் சாத்தியமில்லை.

இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறு துண்டு பிரதேசமாவது இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் 3000 பேருடன் மீண்டும் போர் தொடங்கலாம். ஆனால் எதுவும் கைவசமில்லை. வெளிநாட்டு ஆதரவுமில்லை. எனவே இதெல்லாம் சாத்தியமில்லை. அப்படி சாத்தியமாக வேண்டுமென்றால் இன்னொரு 30 ஆண்டுகாலம் செல்லும்.

அத்துடன் வெளிநாட்டு அங்கீகாரம் கிடைக்காமல் தமிழீழம் கிடைக்க வழியில்லை. இவர்கள் ஆயுதம் தூக்குவது, தற்கொலைப்படை வைத்திருப்பது என்பன வெளிநாட்டினருக்கு பிடிக்காது. அதை ஆதரிக்க மாட்டார்கள். அரசியல் தீர்வை தான் ஆதரிப்பார்கள்.

ஆனால் ஆயுதம் இருந்த போது தமிழர்களுக்கு இருந்த பலம் ஆயுதம் இல்லாத போது இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.