Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்த உருப்படியான வேலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uru1.jpg

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுடனோ, உயர்மட்ட அதிகாரிகளுடனோ நேரடிப்பேச்சு நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை” என்று தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தார்.

“ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்தும், அது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் பற்றியும் விளக்கி அம்மா (ஜெயலலிதா) இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகனுக்கு அனுப்பினார். அந்த இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படவில்லை. அவற்றை கிஞ்சித்தும் மத்திய அரசு கவனிக்கவில்லை. இந்த நிலையில், அதிகாரிகளைச் சந்திப்பது அர்த்தமற்ற செயல். இதனால்தான் மேனனின் கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சரின் இந்த நிராகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, மூத்த அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

http://www.vannionli...-post_5639.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தலைவி.  அம்மாவிற்கு  பரிசு பொருட்கள் அனுப்பி நன்றியை தமிழ் அமைப்புக்கள் தெரிவிக்கவேண்டும்.

முதலமைச்சருக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளின் கபடத்தனம் ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றாக இப்போது புரிந்திருக்கு என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக சிந்தித்து இருப்பா....மனசாட்சி இருக்குபோல....

அங்கு கருணாநிதியாம் ... எங்கள் அழிவை ... தன் குடும்ப நலன்களுக்கு ... பதவிகள் முதல் ஊழல்களில் இருந்து தப்புவது வரை ... பேரம் பேசுகிறது! இப்போதும் குத்திக்கரணம் அடித்து விட்டது போல் உள்ளது!

... பதவிக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஜெயலலிதா, எதை சொன்னாரோ, அதை செய்வதிலும், அதில் உறுதியாக இருப்பதிலும் நேர்மையாக நடக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு கருணாநிதியாம் ... எங்கள் அழிவை ... தன் குடும்ப நலன்களுக்கு ... பதவிகள் முதல் ஊழல்களில் இருந்து தப்புவது வரை ... பேரம் பேசுகிறது! இப்போதும் குத்திக்கரணம் அடித்து விட்டது போல் உள்ளது!

... பதவிக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஜெயலலிதா, எதை சொன்னாரோ, அதை செய்வதிலும், அதில் உறுதியாக இருப்பதிலும் நேர்மையாக நடக்கிறார்.

அது தான் மனித குல‌‌த்துக்கு அழகு...... :)

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைகாலமும் புரட்சித்தலைவி என்ற பெயருக்கு அவருக்குப் பொருந்துமா என்று யோசித்துப் பார்த்ததில்லை இப்போது அது பொருத்தமாக வந்து கொண்டு இருக்கிறது என்று மனம் சொல்லுகிறது.

ஜெயலலிதா அம்மையாரை ஆந்திரா வரை இழுத்துப் பார்த்தவர்கள். அவவுக்கு தெரியும் இவர்கள் அடுத்தவருடம் போய்விடப் போகிறவர்கள், என்வே அவர்கள்தான் வளைந்து கொடுத்து பிச்சை கேட்க வேண்டுமென்று. மேலும் அவ, தான் அல்லது தனது நண்பர்கள் அடுத்தமுறை மத்தியில் பதவிக்கு வந்தால், இவர்களில் யாரையாவது (சோனியா வரைக்கும்), சென்னைக்கு இழுத்து வர முடியுமாயின் அதற்கேற்ற நடவடிக்கைகளில் இறங்கியும் இருப்பா. இலங்கையை வைத்து சென்னையூடாக பல தில்லு முல்லுகளை மத்திய அரசு செய்தது. நிறைய லஞ்சமும் கறுப்பு பணமும் பரிமாறப்பட்டது. அவவின் தமிழ்நாட்டு உதவியாளர்கள் தடையங்கள் தேடிக்கொடுத்திருப்பார்கள். விசேட ரயில், கப்பல், பாகிஸ்தான் கள்ளநோட்டுக்கள்..... . நாம் முடிந்தால், அடுத்த வருடம், இந்தியாவில் ஒரு போர்குற்ற வழக்கு மனமோகன் சின் அரசுக்கெதிராக சென்னயில் போடவும் முயலவேண்டும். இந்த மேனன், நாராயண் எல்லோரையும் மாட்ட பார்க்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் எவ்வளவு தூரம் எல்லாம் போகுமென்று.

Edited by மல்லையூரான்

தமிழக முதல்வரின் உறுதியான செயற்பாடுகள் தொடர வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு கருணாநிதியாம் ... எங்கள் அழிவை ... தன் குடும்ப நலன்களுக்கு ... பதவிகள் முதல் ஊழல்களில் இருந்து தப்புவது வரை ... பேரம் பேசுகிறது! இப்போதும் குத்திக்கரணம் அடித்து விட்டது போல் உள்ளது!

... பதவிக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஜெயலலிதா, எதை சொன்னாரோ, அதை செய்வதிலும், அதில் உறுதியாக இருப்பதிலும் நேர்மையாக நடக்கிறார்.

தனிக்கட்டைகள் என்றும் நீதி நேர்மைகளிலிருந்து தவறமாட்டார்கள்.

தனிக்கட்டைகள் என்றும் நீதி நேர்மைகளிலிருந்து தவறமாட்டார்கள்.

ஆயிரத்தில் ஒரு வார்த்தை!! கு.சா. அண்ணயா இதை எழுதினது???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் துணிவிற்கும், அரசியல் நேர்மைக்கும் பாராட்டுக்கள்.

இவர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கும் நிலையில்....

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கோ அல்லது குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கோ அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

தொடர்ந்து தமிழர் உரிமைகளை வெல்ல கடும் போராட்டம் நடாத்தவேண்டும்.

அம்மாவும் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்கட்டைகள் என்றும் நீதி நேர்மைகளிலிருந்து தவறமாட்டார்கள்.

ஆயிரத்தில் ஒரு வார்த்தை!! கு.சா. அண்ணயா இதை எழுதினது???

அண்ணா என்னத்திற்காக சொன்னார் என்று குட்டிக்கு விளங்கேல்லை

அம்மா ,,, கருத்து எல்லாம் ...

கருணாநிதிக்கு எதிராவே! எங்களுக்காக இல்ல!

எனிவே........

யுத்ததில மக்கள் சாவுறது நார்மல் என்னு நீங்க சொன்னாலும்......

இன்னும் சாகாம இருக்குற எங்களுக்கு ,,,

உங்கள கொஞ்சூண்டு புடிக்குது மாம்! :)

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அங்கு நடக்கின்றது அதில் தனித்தே போட்டியிடுகின்றார்கள் .அதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் அரசியல் இலாபம் எமக்கும் எதோ ஒருவகையில் நன்மை தேடித்தரும் என்றால், எமக்கும் நல்லதுதானே .......

மேனனை சந்திக்க மறுத்தமை ஒன்றையும் இன்னும் தமிழருக்காக பெற்றுத்தரவில்லை, ஆனால் இப்படியான நடவடிக்கைள் டெல்லியில் மாற்றம் தராவிடில் அடுத்த கட்ட நவடிக்கை பற்றி முதல்வர் நிச்சயம் திட்டம் வைத்திருப்பார்.

இல்லாவிடில் இது கூட ஏமாற்றமாக அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில நாட்களில் ஜெனிவாவில் வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.மத்திய அரசிடம் பேசி தமிழருக்கு சார்பான முடிவை எடுக்கும் படி தூண்டுவதை விட்டு விட்டு பகிஸ்கரித்து தமிழர்களுக்கு என்ன நடந்து விடப்போகிறது?

இந்தியா தமிழர்கள் செய்வது போல் கெஞ்சினால் ஏறி மிதிச்சுப்போடும்.

சீனா, இலங்கை செய்வது போல் ஏறி மிதிச்சால் காலில் விழுந்து கெஞ்சும்.

புலிகள் உரப்பாக இருக்கும் வரை இலங்கையில் தலையிடாக்கொள்கை என்று நடித்தது. அவர்கள் தோற்கிரார்கள் என்று கண்டவுடன் இரசாயனக் குண்டு இலங்கைக்கு கொடுத்தது. (இது ஒரு நாளைக்கு இந்தியாவில் போர்குற்ற வழக்குகில் மனமோகன் சிங்க் அரசுக்கெதிராக நிரூபிக்க படவேண்டிய உண்மை)

இது பாஞ்சசீலத்தில் அடிப்படைத் தத்துவம்.

சிறிலங்கா பிரமுகர்களின் தமிழக பயணம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும்! - தமிழக அரசுக்கு மன்மோகன் சிங் உறுதி!!

சிறிலங்கா பிரமுகர்களின் தமிழக பயணம் குறித்து முன்கூட்டியே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா பிரமுகர்களின் திடீர் பயணத்தால் தமிழகத்தில் பல்வேறு சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், சிறிலங்கா பிரமுகர்களின் பயணம் தொடர்பாக தமிழக அரசுடன் அவசியம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடிதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பிரமுகர்களின் தமிழகம் பயணம் தொடர்பாக தமிழக அரசுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு குறிப்பிட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை ஊக்குவிக்கக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதம் ஒன்றில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார்.

சிறிலங்காவின் முக்கியப் பிரமுகர்களின் தமிழக வருகை குறித்து தமிழக அரசுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்றும் அவர் இந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3/17/2012 3:34:57 AM

Edited by மல்லையூரான்

சிறிலங்கா பிரமுகர்களின் தமிழக பயணம் குறித்து முன்கூட்டியே தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இன்னொரு காதில் பூ சுற்றும் நடவடிக்கை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.