Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்

Featured Replies

....

வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

கு.சா.அண்ணா அடிக்கடி வலைஞன் அண்ணாவை நினைத்து மனம் நெகிழ்ந்து கொள்ளுறது தெரிகிறது... :lol::D

  • Replies 163
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் தொடர்ந்து இயங்க இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. புதிய நிருவாகத்தினர் யாழின் வடிவமைப்பிலும் சில மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்க‌ள்.

முல்லை

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு  வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:

ஏன் தாத்தா வலைஞன் அவர்கள் அப்படி கண்டிப்பானவரா.... :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes:<_<

போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..

இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..

அடுத்த முறை??????..... :rolleyes::icon_idea:

அடுத்தமுறை பிள்ளை பிறந்திட்டுது எண்டு பீதியைக் கிளப்பப் போறாங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் யாழின் கொள்கைகள் என்பது மோகன் அண்ணாவின் நல்ல எண்ணங்களாகும். அதன் பால்.. ஒரு ஈடுபாட்டோடு யாழில் இணைந்திருந்தவர்கள் என்ற வகையில்.. அவர் யாழை விட்டு சற்றே விலகி நிற்பது என்பது அவர் மீது... loyalty உள்ள எம்மைப் போன்றவர்களும் சற்று விலகி நிற்கவே தூண்டச் செய்கிறது..!

யாழில் பல சர்ச்சைகள் மத்தியிலும் எமக்கு எழுத குறிப்பாக அறிவியல் சார்ந்து தமிழ் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தவர்களில் மோகன் அண்ணா.. சுரதா அண்ணா... ஜேர்மனி ராஜன் அண்ணா.. ஜேர்மனி.. சோழியண்ணா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மோகன் அண்ணா அறிவியலுக்கு என்று தனிப் பகுதியில் செய்திகளை யாழின் முகப்பில் இட ஒரு காலத்தில் நாங்களும் யாழின் நிர்வாக அலகுக்குள் நிற்க உதவி நின்றவர். அவை யாழின் வசந்த காலங்கள். அந்தக் காலம் மீண்டும் மீளவே இல்லை. காரணம் அதன் பின் வந்தவர்களால் நாங்கள் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளப்பட்டது தான்.

அதுமட்டுமன்றி.. இவன் எழுதிறதெல்லாம்.. ஒரு அறிவியல் செய்தியா என்று எமது வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இட்டவர்களும் இதே களத்தில் இன்றும் இருக்கின்றனர். அதேவேளை அந்த அறிவியல் செய்திகளுக்கு தமிழகத்தின் முன்னணி வார ஏடு ஆனந்த விகடன் கெளரவம் அளித்து அதன் இதழில்.. வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த அளவில் தான் உள்ளது இன்றைய யாழில் ஒரு சுய ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பாணி. எது எப்படியோ.. அவற்றை தமிழுக்காய் தமிழ் தாய் மண்ணுக்காய் மன்னித்தோம்... மறந்தோம்..!

எதிர் வரும் ஏப்ரல் 1 இல் இருந்து யாழின் புதிய நிர்வாக நடைமுறைகளும் விதிகளும் ஒத்து வந்தால் அன்றி யாழில் அதிகம் எழுதுவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். புதிய நிர்வாகம் அடிப்படை கொள்கை அளவில் என்றாலும் மோகன் அண்ணாவின் வழித்தடம் பற்றி பயணித்தால் யாழோடு தொடர்ந்து உறவாடுவதில் பிரச்சனை இருக்காது. இன்றேல்.. எல்லாமே யோசிக்க வேண்டிய மாற்றமடைய வேண்டிய விடயமாகவே இருக்கும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

மோகனைப்போல இணையவனும் , வலைஞனும் மிகுந்த பொறுமைசாலிகள் ரதி. இந்த 3சாதுக்களும் ஒருநாளும் மிரண்டதில்லை. இணையவன் தனிமடல் அறிவிப்புச் செய்யாவிட்டாலும் நீதி தவறியதில்லை. இதேபோலத்தான் வலைஞனும்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

யாழை மூடாமல், தொடரப்போவது நல்ல செய்தி.

I was so sad to hear about the closure plans now so glad this circle to contiue.

Weldone Mohan for all the years hard job & good luck to the new management.

-Thevaki Acca-

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சியும் தொடர்ந்து இணையத்தை நடத்த இருக்கும் மூவருக்கும் நன்றியும்.அத்துடன் மோகனும் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மகிழ்ச்சியான, நல்ல செய்தி!

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

விளம்பரங்கள் கேட்கும்போது அவர்களிடம் கருணைகாட்டுமாறு கேட்பதுபோல் அல்லாது யாழில் இணைப்பதால் எப்படியான நேரடி, மறைமுக நன்மைகள் உள்ளன என விளங்கப்படுத்தி எடுத்தால் அதாவது இங்கு விளம்பரமுதலீடு செய்வதால் எப்படியான பயன்கள் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினால் அவர் யாழுக்கு நீங்கள் விளம்பரம் பெறுவதை அவர் உங்களுக்கு உதவிபோல் செய்வதாக நீங்களோ அவரோ நினைக்கத்தேவையில்லை.

உங்கள் நண்பர் என்கின்றீர்கள், சிறீலங்கன் விமானப்பயணத்துறை சம்மந்தமானது எனவும் கூறியுள்ளீர்கள். அதாவது யதார்த்தவாழ்வில் உங்களுக்கு தெரிகின்றது எம்மைச்சுற்றியுள்ள உறவுகளிடையே குறிப்பிட்ட சில விடயங்களுக்கு (புறக்கணிப்பு) ஆதரவு இல்லை, பெறமுடியாது, சாத்தியம் இல்லையென்று. அப்படியாயின், யாழில் மட்டும் ஏன் சிலுவை சுமந்து வர்த்தகரீதியான வாய்ப்புக்களை நழுவவிடவேண்டும்? இப்படியான விடயத்தில் எமக்கு நாமே தடைகள், கட்டுபாடுகள் போட்டு சாதித்தவை எவை? யாழென்பது கொள்கைரீதியாக கற்பனையுலகில் சஞ்சரிப்பதற்கு மட்டும்தானா?

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

ரதி ... ஒரு பச்சை! ... உண்மையை உண்மையாக எழுதியதற்கு!

... தெரிந்தவர்கள் பலர், ஆனால் மதிப்பளிப்பது சிலருக்கே! அதில் மோகனும் ஒருவர்! அதிகம் எழுதாதவர் மட்டுமல்ல, அதிகம் கதைக்காத ஓர் பண்பாண ஜீவன்! ... என் 12 வருட யாழ் பயணத்தில் மோகன் என் மூலம் மட்டுமல்ல பல யாழ் உறவுகள் மூலமும் சந்தித்த நெருக்கடிகள் பல ... தாக்குப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்ற பண்பாளன்! யாழ் மூலம் பலதை செய்தோம் ... எமது விளம்பரங்களுக்காகவல்ல ... அவைகளுக்கெல்லாம் அன்று தொடக்கம் இன்று வரை ஆதரவளித்த மனிதன்! ... எல்லாவற்ருக்கும் மேலாக தமிழை வலைத்தளத்தில் பதியத்தொடங்கியதே இந்த யாழ் மூலம்தான் .. பின் சில தளங்களிலும்!

மோகன் யாழில் இருந்து தற்காலிகமாக விலகுவதை ஏற்க முடியவில்லை, ஆனால் மோகன் தற்காலிகமாக இதிலிருந்து விலகத்தான் வேண்டும் ... சிறிது மூச்சு விடட்டும்!

புதிய யாழ் நிர்வாகம் ..

நிழலி ... சுமூகமாக/சாதுரியமாக கொண்டு செல்லும் வல்லமை இருக்கிறது!

வலைஞன் ... எனக்கு பெரிதாக தெரியாது!

இணையவன் ... எனக்கு நம்பிக்கை இல்லை(மன்னிக்கவும் இப்படி எழுதுவதற்கு)!

... நான் இதுவரை யாழில் பயணித்தது போலவே ... என் கருத்துக்களாகட்டும் / கேள்விகள் கேட்பதாகட்டும் / விவாதங்கள் ஆகட்டும் ... பயணிக்க விரும்புகிறேன். என்னை மாற்றவும் முயலவில்லை/இலகுவும் அல்ல! .. அதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்குமென்று நான் உணரும்போது ... உங்களுக்கு உங்கள் பார்வையில் தொடர்ந்து தொந்தரவு தராமல் விலகுவதே நன்மை! ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி, இணையவன், வலைஞன் ஆகியோருக்கு எமது மீனகம் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். 05.09.2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை சார் ஊடகவியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது மீனகம் இணையத்தை புலம் பெயர்வாழ் உறவுகளிடமும் தமிழகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தததில் "யாழ்" கருத்துக்களத்திற்கே முதன்மை பங்கு என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோகன் அண்ணா, எனக்கு நீங்கள் யாரென்றே தெரியாது. ஆனாலும் என்னவோ உங்களை நான் miss பண்ணுறன் ....

புதிய நிர்வாகத்திற்கும் வாழ்த்துகள்...

வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தொடர்வது மகிழ்ச்சி, அத்துடன் புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். மோகன் அண்ணாவும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

ஒரு வார விடுமுறையில் இவ்வளவும் நடந்து விட்டதா? எது எவ்வாறு இருப்பினும், ஒரு கருத்துக் களத்திலாவது நாம் ஒற்றுமையாக இருக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்/அவாவாகும். இனியாவது கொஞ்சம் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் நாம் செயற்பட வேண்டும்.

மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார்.

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்போது பலர் இந்தவசனத்தை கவனிக்கவில்லை போல்த்தெரிகின்றது. மோகன் ஒரு இடமும் ஓடிஒதுங்கமாட்டார், யாழ் இணையம் உள்ளவரை திரைமறைவிலாவது இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருப்பார். 'யாழ் இணையம்' மோகனின் குழந்தை. தனது குழந்தையைவிட்டு அவர் எங்குபோய்விடமுடியும்? உங்கள் கருத்துக்களில், தெளிவான சிந்தனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிழலி பற்றியோ வலைஞன் பற்றியோ இணையவன் பற்றியோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

தொடர்ச்சிகள் தொடரட்டும். இதற்குள் எப்படிப்பட்ட பிரச்சனைகள் உண்டென எனக்குத் தெரியாது. இருந்தும் ஒன்றாயிருப்போம்.

மிக்க நன்றி . நான் இணைந்து கொஞ்ச நாட்களே .

சந்தோசமாக இருக்கின்றது . இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

மேலே காதல் சொன்னது போல் மோகன் அண்ணாவுடன் தனிப்பட்ட பரிச்சயம் இல்லாவிட்டாலும், ஒரு மிகுந்த மரியாதைக்குரிய நபராகத்தான் கருதுகிறேன். அவருடைய வழிகாட்டல் தொடர்ந்தும் தொடரவேண்டும், அவரது பங்களிப்பும் தொடரவேண்டும் என்பதே என் விருப்பமும்.

நிழலி, இணையவன், மற்றும், வலைஞனுக்கும் வாழ்த்துக்கள். தம் வேலை, வீடு, குடும்பம் போக, இதற்கும் நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் மெச்சத்தக்கது.

யாழ் களம் தொடர்ந்தும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகன் அவர்கட்கு, சில விடையங்களை நான் கடுமையாகவே சந்திக்கப் பழக்கப் படுத்தப்பட்டுவிட்டேன். எனினும் கடந்த காலங்களில் வன்னி நிலமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் தேசத்தின் தேவைகருதி நான் தங்களிடம் கேட்ட உதவிகளை உடனுக்குடன் நிறைவேற்றினீர்கள் அதற்காக, இம் முகமறியா மனிதனுக்கு நன்றி கூறுகின்றேன். தொடர்ந்தும் யாழுடன் இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

என்னால் முடிந்த பங்களிப்பினையும் நான் செய்வேன்

I was so sad to hear about the closure plans now so glad this circle to contiue.

Weldone Mohan for all the years hard job & good luck to the new management.

-Thevaki Acca-

Same here.

-Kundan Anna-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.