Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எஸ்.கே.பிரசாத் வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்த பூசை வழிபாடுகளில் அமைச்சாகளான பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/81637-2013-09-07-06-01-01.html

    • 8 replies
    • 644 views
  2. யாழில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அல்லோலகல்லோலம்; நடந்தது என்ன? யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் நேற்றிரவு யானைகள் புகுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு வேளையில் ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் காட்டு யானைக…

  3. உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுப்பு அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்து அனுப்பிவிட்டனர். இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கை: உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீ…

    • 8 replies
    • 1.2k views
  4. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனி நாட்டை அமைக்க புலிகள் முயற்சித்தால் கிள்ளி எறிவோம் சபையில் அமைச்சர் மங்கள சூளுரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபடுவார்களேயானால் அதனை கிள்ளி எறிவதற்கும் அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சமாதான நடவடிக்கைகள் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது. பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான வ…

  5. சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபர்ட் ஓ பிளெக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி படுதோல்வியடைந்ததாக நம்பகமான செய்திகள் எமக்குத் தெரிவிக்கின்றன. ஈ.பி.டி.பி சார்பிலும் சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சர் என்ற வகையிலும்; ரொபர்ட் ஓ பிளக்கை சந்திக்க விரும்புவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் உயர்ஸ்தானிகராலயத்துக்கு அமைசச்ர் டக்ளஸ் தெரிவித்திருந்தும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அமைச்சர் டக்ளஸின் இந்த வேண்டுகோளை இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ரொபர்ட் ஓ பிளக்கிடம் தெரிவித்தனர். ஆனால் பிளேக் அவ்வாறான சந்திப்புக்கள் தன…

  6. கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  7. 24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று (04) அவர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, கௌரவ சபாநாயகர் அவர்களே, ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்து வைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மல…

    • 8 replies
    • 903 views
  8. பார்வதியம்மாள் பாடாய் படுகிறார்! இந்தியாவைப் போற்றி கனடாவில் ஒரு களியாட்டக் கூத்து!! செந்தமிழன் பார்வதியம்மாள் தள்ளாத இந்த 80 வயதில் தமிழகத்தில் இருந்து திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அங்கங்களின் இயக்கம் இல்லாத ஒரு படுக்கை நோயாளி என்றுகூடப் பார்க்காமல் மனிதாபினமானமற்ற முறையில் இந்தியாவால் திருப்பி அனுப்பப்பட்டார். அதனால் பின் தமிழகம் மீண்டும் ஈழத்தை நோக்கி உயிர் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஈழப் போராட்ட ஆதரவுத் தலைவர்கள் மாத்திரமல்லாமல் எல்லோரும் குரல் கொடுக்க அத்வானியும் மத்திய அரசியலில் இருந்து குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் கனடாவில் எங்கள் உடன் பிறப்புக்கள் ஜெய கே என்று இந்தியத் தேசியக் கீதத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள…

  9. பிரதியமைச்சர் அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேர்வின் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன Eelanatham.net

  10. வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு! adminDecember 17, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது பெய்கின்ற சிறிய மழையிலும் மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் இவ்வாறான பின்னணியில் நேற்று மதிய வேளையில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன் இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை ஒட்டுசுட…

  11. ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது. இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி, “நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய சிறிலங்காப் படையினர் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தியது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் சிறிலங்கா அரசுக்கே உள்ளது. இது அமைதிகாப்புப் படைக்கு படையினரை அனுப்பும் நாடுகளை சார்ந்த விவகாரம். இது அவர்களின் பிரச்சினை. இது அவர்களின் இறையாண்மைக்குட்பட்ட பொறுப்பு. அவர்களின் …

  12. மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்? வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் இன்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த பதவி கையளிப்பு இன்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது. வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவை…

  13. ஜி.சீ.ஈ. பரீட்சை முடிவுகளை இணையத்தில் பார்ப்பதில் நெருக்கடி வேம்படி, யாழ். இந்து முன்னிலையில் யாழ்ப்பாணம்,ஏப்.4 கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சை முடிவுகள் இணைத்தளம் மூலம் திங்கள் இரவு வெளியாகின. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில், சாதாரண தர பரீட்சை முடிவுகளை திங்கள் இரவே பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நேற்றுக் காலையிலிருந்தே நகரப் பாடசாலைகள், தனிப்பட்ட மாணவர்கள் என்று எல்லோரும் பரீட்சை முடிவுகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்ததால் நெருக்கடி காரணமாக இணையத்தளத்தின் வேகம் குறைந்து காணப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளும், மாணவர்களும் பரீட்சை முடிவுகளை அறிவதற்காக இணையத்தளத்தைப் பார்க்க முண்டியடித்தமையும் அதன் வேகம் குறைந்ததற…

  14. By Farhan ஏமாறாதீர்கள், இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றாதீர்கள் என்ற தலைப்பில் இல்லாமிய நிதி நிறுவனங்கள் தொடர்பாக புதிய துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்துப் பெற்ற பொருளாதாரத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மிக முக்கியமான ஒன்றுதான் நிதி நிறுவனம். ஆனால் எங்களது நாட்டில் இஸ்லாமியப் பெயர் தாங்கிய எந்த நிறுவனமும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று இஸ்லாமிய சரீஆ சட்டத்திட்குள் இயங்குகின்றது என்பதை இந் நாட்டில் எந்தவிதமான முக்கிய இஸ்லாமிய அமைப்புகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதே இன்று நாம் அறிந்திருக்காத ஒரு விடயம் என்பதை அறிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம். ஏனெனில் இலங்கையில் எங்களது பொதுவான விவகாரங்களை எ…

  15. ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்திற்கு விசாரணை அதிகாரம் கிடைத்தது இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா, வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கையை ஆதரித்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட மற்ற 12 நாடுகளும் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிகொண்டன. ஒதுங்கிக் கொண்ட நாடுகளில் எதியோப்பியா, குவைட், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும…

  16. இலங்கை எம்.பி.-க்களிடம் எகிறிய முதல்வர்! எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்? டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, 'இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்' என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் …

  17. துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்! மீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்களில் பயணித்த கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால், மோட்டார் சைக்கிளின் சாரதியான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும், மகளும் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, ஆறு வயது மகள் த…

  18. குறைந்த செலவில் உள்நாட்டிலேயே பெற்றோல், டீசல் உற்பத்தி! இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்தார். நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் இன்றையதினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டினார். இதன்போது தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய் , சாம்பல் போன்ற இலங்கையில் இலகுவாக கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து பயோ டீசலினை இலகுவாக தயாரிக்க முடியும் எனவும் அதேபோன்று நீர் மற்றும் சிரட்டைக்கரி போன்ற காபன் வகைகளை பயன்படுத்தி பயோ பெற்றோலினை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான தயாரிப…

  19. (எம்.நியூட்டன்) இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் சிவபூமியின் அறக்கட்டளைத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கருத்துத் தெரிவிக்கின்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும்தெரிவிக்கையில், தமிழர் பகுதிகளிலுள்ள ஆலயங்கள் தெய்வ விக்கிரகங்கள் அழிக்கப்படுவது சேதமாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இத…

  20. வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ் சந்தேகம் வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில நபர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மேற்படி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. இதேவேளை, மேற்படி சம்பவங்களுடன் தொர்புடைய…

  21. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது . இதன்போதே அவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டினை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் ஒருவர் முதன் முதலாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். இந்தவேளையில் மக்களது வரவேற்பு அமோகமாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கவில்லை. மிகவும் குறை…

  22. வரதரின் பாதையில் போகிறார் விக்கி! - சுசில் பிரேம்ஜயந்த [Thursday 2015-05-28 09:00] வரதராஜப்பெருமாள் அன்று எவ்வாறு தனது தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பித்தாரோ அதையே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னெடுத்து செல்கின்றார். இவர்கள் தெரிவிப்பதைப்போல் வடக்கு,கிழக்கு பூமி அவர்களின் தாயகம் அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாம் எமது அனுதாபங்கள…

  23. தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்! இஸ்லாமாபாத்: பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய "சுயநிர்ணய உரிமை" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசிஸ்தான் தனி நாடாகலாமே என்று சப்பை கட்டுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை இருமுறை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அ…

  24. COLOMBO: In a move that should help Sri Lanka out at the 19th sessi­on of the United Nations Human Rights Council in Gene­va, India has said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC. The United States was expected to move a resolution at the UNHRC session, censuring Sri Lanka over alleged war crimes against Tamils during the civil war. An Indian statement, read out by a delegate at Thursday’s session and published on UNHRC’s website, said the strength of UNHRC lay in its adherence to principles of “objectivity, transparency, non-selectivity, non-politicisation and non-co…

    • 8 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.