துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
நடிகர், வினு சக்கரவர்த்தி காலமானார்! உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1945 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. தம…
-
- 1 reply
- 550 views
-
-
அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி செவாலியர் இளவாலை அமுதுப் புலவர் அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர். வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன. இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐ…
-
- 19 replies
- 4.9k views
-
-
ஆளுமையும் விவேகமும் நிரம்பிய மகளிர் அணியின் முதல் தளபதி! மேஜர் சோதியாவின் 16 ஆவது நினைவு தினம் புதன்கிழமையாகும் எம் தாயகத்தின் இதய பூமியென வர்ணிக்கப்படும் அந்தப் பெருங்காடு. அதன் இன்னொரு சிறப்பு வடதாயகத்தையும் தென் தாயகத்தையும் ஒரு சேர அணைத்துக் கொள்வதேயாகும். அந்தக் காட்டின் நடுவே அந்த முகாம். அதை யாரும் அறியவில்லை; அறிவதற்கான நேரமும் கிடைத்திருக்கவில்லை. அந்த முகாம் எப்போதும் கலகலவெனத்தானிருக்கும். காரணம் புலிகளாய்ப் பிறப்பெடுத்த பெண்கள் வாழும் அந்தக் காடு சிறியதோர் நகராய் மாறியதுதான். இங்குதான் மூத்த தளபதியாயும் மருத்துவராயும் விளங்கினாள் சோதியா. பெயர் ஆளுக்கேற்றாற் போல்தான் இருந்தது. சோதியா, சோதியாய் மிகவும் ஆற்றல் மிக்கவராய் விளங்கினார். அண்ணனி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழத்தின் மூத்த படைப்பாளி ஞானரதன் காலமானார் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளி ஞானரதன் அவர்கள் (18-01௨006 )நேற்று முன்தினம் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளிர் பொறுப்பாளப்பாளர் பிரேமிளா அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசயக…
-
- 16 replies
- 3.2k views
-
-
சண்டை எண்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது, சிம்பிளா நிப்பான்” என்று தளபதிகளால் கூறப்பட்டவரும் யாழ் மக்களை போதை பாவனைகளில் இருந்து மீட்டவருமான கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் அவர்களின் மூன்றாமாண்டு வீரவணக்க நாள் (26.12.2007) சுவிசில் நடைபெறவுள்ளது. ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது…
-
- 14 replies
- 1.7k views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
மூத்த எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார்! மூத்த எழுத்தியல் தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் (88) இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐராவதம் மகாதேவன் 1930ல் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் பிறந்தார். 1987-1991 வரை இவர் தினமணி ஆசிரியராக இருந்துள்ளார்.இவர் சிந்தி எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். கல்வெட்டு எழுத்தியல் துறையில் மிக முக்கியமான அறிஞராக பார்க்கப்பட்டார். கல்வெட்டு துறையில் தமிழ் தொடர்பாக இவர் செய்த ஆராய்ச்சி காரணமாக இவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர், அதில் ஆய்ந்த…
-
- 0 replies
- 358 views
-
-
யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன். திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) மறைவு : 18 ஒக்ரோபர் 2010 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும், நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும், பால…
-
- 144 replies
- 20k views
-
-
Published By: NANTHINI 02 AUG, 2023 | 10:46 AM மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான் எழுதிய 'லண்டனிலிருந்து விமல்' என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 10 replies
- 829 views
- 1 follower
-
-
நாளையுடன் (29-April-2009) டி.சிவராம் அண்ணா கொல்லப் பட்டு நான்கு வருடங்கள் முடிவடைகின்றன. மிகச் சிறந்த இராணுவ பத்தி எழுத்தாளராகவும், தமிழ் தேசியம் தொடர்பாக பல பங்களிப்பை ஆற்றியவருமான டி.சி யின் இழப்பு ஏற்படுத்திய வெற்றிடம் (vacuum) இன்னும் நிரப்பப் படாமல் எம் சமூகத்தில் இருப்பது வேதனையான விடயம். 70 களில் சிங்கள இனவாதம் யாழ்ப்பாணத்தில் நூல் நிலையம் எரித்து ஆரம்பித்து வைத்த 'தமிழ் புத்திஜீவிகளை, தமிழ் புலமைசார் தளத்தினை அழிக்கும் படலம்' குமார் பொன்னம்பலம் அவர்களின் கொலையுடன் மீண்டும் 2000 களில் புத்துயிர்ப்பு பெற்று டி.சிவராம் அண்ணாவையும் காவு கொண்டு இன்று பலரை தினம் தினம் கொன்று கொண்டு வருகின்றது. கிழக்கு பல்கலைகழக உபவேந்தர், விரிவுரையாளர்கள் என நீளும் இந்த பட்ட…
-
- 1 reply
- 832 views
-
-
பாசமிகு கள உறவு சுவி அண்ணா அவர்களின் தாயார் இறைபதமடைந்தார்.. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக........ சுவியண்ணாவின் தாயாரின் ஆத்ம சாந்தி வேண்டி எனது குடும்பம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.... சாந்தி சாந்தி சாந்தி........
-
- 60 replies
- 6.4k views
-
-
நிழலியின் தாய்மாமனார் காலமாகி விட்டார். நிழலியின் தாய்மாமனார் காலமானதையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றோம்.
-
- 36 replies
- 2.7k views
- 1 follower
-
-
மூதூர் தாக்குதல்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம் அறிவிப்பு மூதூர் பகுதியில் கடந்த 02ம், 03ம் நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் வீரச்சாவடைந்த 19 போராளிகளினதும், நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் வீரச்சாவடைந்த போராளி ஒருவரினதும் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. 02.08.2006 அன்று மூதூர் படைத்தளங்கள் மீதான தாக்குதலின் 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.கேணல்:- குஞ்சன் - இசையரசன். குணநாயகம்- ரதிசீலன் சொ.முகவரி:- 2ஆம் வட்டாரம் கட்டைப்பறிச்சான் மூதூர் திருமலை. வீரவேங்கை:- நம்பி வெற்றிவேல்- ஞானேஸ்வரன் சொ.முகவரி:- பூனகர் ஈச்சிலம்பற்று மூதூர் திருமலை…
-
- 5 replies
- 2.3k views
-
-
தாயகம் கேணல் ராயு ஐந்தாம் ஆண்டு நினைவு கேணல் ராயு ஐந்தாம் ஆண்டு நினைவு கிட்டு பீரங்கி படையின் சிறப்பு தளபதி அம்பலவாணன் நேமிநாதன் சுன்னாகம் யாழ்ப்பாணம் பிறப்பு 30:05:1961 வீரச்சாவு 25:08:2002 மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே........ ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவு…
-
- 8 replies
- 3.2k views
-
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அன்னார் தனது 65 ஆவது வயதில் நேற்று(செவ்வாய்கிழமை) காலமானார். இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் நடுநிலை செய்தியாளராகவும், சர்வதேச செய்தி அறிக்கையிடலின் சிறப்புத் தேர்ச்சி பெற்றவராகவும் அன்னார் அளப்பரிய பங்காற்றியுள்ளார். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நல்லதம்பி நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன. http://athavannews.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நல்ல/
-
- 1 reply
- 821 views
-
-
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் காலமானார் பிரபல பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஞாயிறன்று காலமானார். இவருக்கு வயது 81. உடல் நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் இன்று காலமானார். பல மறக்க முடியாத திரைக்காவியங்களை அளித்தவர் சி.வி.ராஜேந்திரன். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். மதுராந்தகம் அருகே சித்தமுர் இவரது சொந்த ஊர். இவர் மனைவி பெயர் ஜானகி. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் உள்ளதால் இறுதிச் சடங்கு இவர் வந்தவுடன் நடைபெறும் என்று தெரிகிறது. சி.வி.ராஜேந்திரன் படங்களில் வசனம் எழுதிய சித்ராலயா கோபு கூறும…
-
- 3 replies
- 612 views
-
-
'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்` செப்டம்பர் 25, 2006 சென்னை: பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர். தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். ஏழை படும் பாடு படத்தி…
-
- 29 replies
- 6.6k views
-
-
தேசத்தின் குரலின் வீரவணக்க மலர் நிழற்படத் தொகுப்பு:- http://www.sankathi.com/gallery/categories.php?cat_id=36
-
- 0 replies
- 982 views
-
-
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
-
- 0 replies
- 122 views
-
-
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்த்திரேலியாவில் வசித்து வந்தவருமான திரு. நோயேல் ஹரன் அவர்கள் இன்று அதிகாலை கொழும்பில் அகால மரணமானார். இவர் ஜுலிட்டா அவர்களின் அன்புக் கணவரும், ஹரினி, ஜெயஹரன் ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். 39 வயதே நிறைந்த நோயேல் ஹரன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும், மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் கட்டிடத்துறையில் பட்டம் பெற்றவருமாவர். தனது பட்டப் படிப்பின் பின்னர் மத்திய கிழக்கில் சுமார் 7 வருடங்கள் பணியாற்றிய ஹரன், 2005 இலிருந்து அவுஸ்த்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல் : ரஞ்சித்
-
- 11 replies
- 1.3k views
-
-
யாழ் களத்தில் சோழியன் என கருத்துக்கள் எழுதி இயற்கை எய்திய இராஜன் அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா இராஜன் அவர்கள் 22.10.2024 அன்று காலமாகியுள்ளார் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம்
-
-
- 31 replies
- 10.3k views
- 2 followers
-
-
யாழ் பல்கலைக்கழக பிரதம நூலகர் சிறிகாந்தலட்சுமி காலம் ஆனார்… December 25, 2019 யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பிரதம நூலகர் (chief Librarian), இலங்கை நூலகசங்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது தமிழ்தலைவர் (SLLA-Srilanka Library Association) திருமதி சிறிகாந்தலட்சுமி அருளானந்தம் தனது 59அவது வயதில் இன்று (25.12.19) மாரடைப்பு ( Heart Attack) காரணமாக காலமானார். இணுவிலில் பிறந்த சிறீகாந்தலட்சுமி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டதாரியானார். பெங்களுரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்ட பின்படிப்பினை மேற்கொண்டுள்ளார். பத்தி எழுத்தாளர், கவிஞர், நூல் விமர்சகர், என பலதுறைகளில் சிறந்…
-
- 9 replies
- 1k views
-
-
மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :cry:
-
- 6 replies
- 1.8k views
-
-
லெப். கஜேந்திரன் வித்துடல் புனித விதைகுழியில் விதைப்பு [திங்கட்கிழமை, 25 செப்ரெம்பர் 2006, 17:49 ஈழம்] [தாயக செய்தியாளர்] மாவிலாறு மோதலில் வீரச்சாவடைந்த லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. திருகோணமலை மாவிலாறில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் மோதல் நடைபெற்றது. இதில் வீரச்சாவைத்தழுவிய லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் முழுமையான தமிழீழ இராணுவ மரியாதைகளுடன் விதைக்கப்பட்டது. முன்னதாக கதிரவெளி பாடசாலையில் லெப். கஜேந்திரனின் வித்துடல் வைக்கப்பட்டு வீர வணக்க கூட்டம் நடைபெற்றது. திருகோணமலை மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் தென்ன…
-
- 11 replies
- 2.2k views
-
-
இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது. ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா …
-
- 2 replies
- 1.6k views
-