Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. சிங்களம் மட்டும் மொழிச் சட்டம். பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது. தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்…

  2. புறக்கணிப்போம் நிரு உற்பத்தி பொருட்களை. நிரு நிறுவனம் பெரிய அளவில் தமிழர் மத்தியில் பிரபலமானது. நிரு நிறுவனம் தான் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் கூடுதலான பொருட்களுக்கு வெளிநாட்டு உரிமம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் தான் பிரதான ஏற்றுமதியாளராக சிறிலங்காவின் பொருட்களுக்கு உள்ளார்கள். பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கன் business counsil என்ற சிறிலங்கா தூதரகத்தின் அமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒரே ஒரு தமிழர் நிறுவனம் நிரு நிறுவனம் தான். இதில் அங்கத்தவராக இருந்தால் அரசாங்கத்தின் ஏற்றுமதிக்கான பல சலுகைகள் கிடைக்கும். உறவுகளே நிரு நிறுவன பொருட்களை வாங்குவதை விட மற்றைய சிறிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க ஊக்குவிப்போம். நிரு நிறுவனம் தற்போது மெ…

  3. ஹாய் கள உறவுகளே நாங்கள் என்ன தான் புலம் பெயர்ந்து வந்தாலும் என்ன தான் வசதியான வாழ்க்கை வாழ்ந்தாலும் எங்களை இன்று வரை விட்டு பிரியாமல் இருப்பது நாங்கள் ஓடி விளையாடிய அந்த தாய் மண்ணின் யாபகங்கள் நாங்கள் மட்டும் புலம்பெயரவில்லை எங்களுடன் இணைந்து இன்று வரை பயணித்துக்கொண்டு இருப்பது அந்த பசுமையான நிகழ்வுகள் இந்த யாபகங்கள் தாலாட்டும் பகுதியினூடாக இன்று வரை நாங்கள் மறக்காமல் இருக்கும் அந்த நினைவுகளை ஏனைய உறவுகளோடும் பகிர்துகொள்ள போகின்றோம்.... அந்த வகையில் யாபகங்கள் தாலாட்டும் பகுதி 1 இல் உங்கள் ஊரில் இல்லை உங்கள் மாவட்டத்தில் இல்லை நீங்கள் எமது நாட்டில் இருந்தா பொழுது தனிய இல்லை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பல உணவகங்களுக்கு சென்று இருப்பிங்க அந்த …

    • 30 replies
    • 3k views
  4. Water contamination in Jaffna The scenario; It is believed that ground water of part of Jaffna region is contaminated by oil spillage/contamination. Let’s set aside politics and think about the solution for this long term problem. The ground water in Jaffna region is already contaminated with the excessive fertilizers and pesticides, the recent oil contamination makes the problem worse. Plants are exposed to heavy metals through the uptake of water; animals eat these plants; ingestion of plant- and animal-based foods are the largest sources of heavy metals in human. The effects; The suspected heavy metals from the oil vary from lead to mercury as given on the table. C…

  5. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன். இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இ…

  6. இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குற…

    • 30 replies
    • 3.5k views
  7. பயணங்கள் மேற்கொள்வதில் வல்லவர்களான Luke & Sabrina ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு சென்று கள்ளையும், சீவல் தொழிலையும், வடையையும் ரசித்து புகழும் பயண ஒளித்தொகுப்பு.

  8. யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைந்துள்ள கலாச்சார (கலாச்சாரம் என்பது சம்ஸ்கிரதம் என்பதாக எனது கருத்து) மண்டபத்துக்குப் பெயர் வைப்பதுதொடர்பில் அம்மண்டபத்தை வடிவமைத்தவரால் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் எனப் பெயர்வைப்பதில் அவ்வளவு உடன்பாடாகக்தெரியவில்லை. சிலவேளை எனது இக்கருத்திடுகையை பலவிதமான நிறங்கள் கொண்டு பார்க்கப்படலாம் ஆனால் கட்டிய மண்டபத்தை இடிக்கமுடியாதுதானே தவிர பத்தோடு பதிணொன்றாகப் பெயர் வைத்துவிட்டு எதிர்காலத்தில் அதை மாற்றுவதற்க்கு முக்கேனப்படவேண்டும் ஆகவேதான் அம்மண்டபத்தை வடிவமைத்தவர் தனக்குத் தெரிந்த புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் சரியான பெயர் ஒன்றைக்கூறும்படி. யாழ் களத்தில் உறவுகள் உங்களால் முடிந்…

  9. இலங்கை வரலாறும் போரும் உதவி தேவை. நண்பரொருவரின் மகன் தனது உயர்தர வகுப்பிற்கான ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரிக்கின்றார். அதற்கு இலங்கையின் பண்டைய வரலாறுகள் சம்மந்தமாக,ஐரோப்பிய சரித்திரப் பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் தகவல்களைச் சேகரித்துள்ளார். அவற்றை நான் நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது பார்க்க முடிந்தது. அவற்றில் பல சரித்திரப் பேராசிரியர்களின் கட்டுரைகளில், இலங்கையில் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த இயக்கர், நாகர் போன்றோரின் எந்த வரலாறும் இல்லை. தற்போது இலங்கையில் வாழும் சிங்கள இனத்தவர்களின் மூதாதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருநது வந்தவர்களென்றும் தமிழர்களின் மூதாதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றுமே குறிப்புகள் உள்ள…

    • 29 replies
    • 3.4k views
  10. பவளப் பாறைகள் துப்பும் மகரந்த மணிகள் தவழ்ந்து வரும் அலைகளில் கலக்க, கரை சேர்ந்த மகரந்தங்களின் வாடை கடற்காற்றில் கலந்து, பூங்கறை நாற்றமாய்க் கடல் மணம் பரப்ப பச்சை படிந்து போன தந்திக் கம்பிகளில் கடற்காற்று மீட்டிய சங்கீதம் அந்த மாலை நேரத்துப், பறவைகளின் ஒலியோடு கலந்தது! மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில், களங்கண்டித் தடிகளின் உச்சிகளில் கடற்காகங்கள் தங்கள் சிறகுகளை அகல விரித்துத் தவம் செய்ய, மேல் வானத்துச் சூரியன் தங்கத் தகடாகி, கடற் கன்னியின் மடியில் சங்கமிக்கத் தயாராகினான்! பாலத்தின் அடித்தளத்து மதகுகளின் மேலே குந்தியிருந்த மீனவர்களின் மூங்கில் தடித் தூண்டில்களில் தொங்கிய மிதப்புக் கட்டைகளுடன் அலைகள் மேல் தவழ்ந்த …

  11. அம்பனும் குரங்கும். நோர்வேயில் இருந்து வந்த எனது நண்பனை பார்க்க அம்பனுக்கு இன்று போயிருந்தேன். இதுவரையில் பருத்தித்துறைக்கு பஸ்ஸிலே போகாத எனக்கு நேரம் கணிப்பிட முடியவில்லை. எப்படியும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒன்றரை என்று யோசித்தபடி பஸ்ஸில் ஏறி அம்பனுக்கு போக எடுத்தது இரண்டரை மணிநேரம். அட யாழ் குடாநாட்டுக்குள்ளே இருக்கிற அம்பனுக்கு போக இவ்வளவு நேரமா? அம்பன் என்பது பருத்தித்துறை நாகர்கோவில் வீதியில் குடத்தனைக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வாழும் ஒரு கிராமம். வெறும் பனையும் மணலும் கட்டாந்தரையுமா இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. பச்சை பசேலென்று காணிகளும், வீடுகளும், நெல்லு இல்லாத காய்ந்த வயல்…

  12. இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது. இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன. இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம். ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்த பிறகு ஏதோ நடக்கப் போகிறது என்றும் ஒருகதை. அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல் கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்த வேண்டியது தான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்…

    • 28 replies
    • 3.8k views
  13. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  14. மே 19, 2009ஐக் கடந்த நாட்களில் பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகப் பல மட்டங்களிலும் தெரிவது தமிழ்த்தேசியம் என்பது வெறுங் கற்பிதம் மட்டுமே என்பது. அதாவது தமிழன் என்ற தனித்துவம் மட்டுமே உண்டு தமிழர் என்ற பொதுமை கிடையாது என்பது. இந்தப் பார்வையை முற்றாக உதாசீனம் செய்வதற்கில்லை. ஆனால் வளர்;த்தால் குடுமி வழித்தால் மொட்டை என்று எதையும் நாம் பார்க்க முடியாது. அந்த வகையில் தமிழர் என்பது பற்றி எனக்குத் தெரிந்த சிலதைப் பகிர்ந்து கொள்வதற்கான பதிவிது. இற்றைக்கு இருபது ஆண்டுகளிற்கு முன்னர் பதின்ம வயதுச் சிறுவனாக சிங்கப்பூர் வந்தேன். அகதி விண்ணப்பத்தைக் கனடாவில் கையளிப்பதற்குச் சிங்கப்பூரில் சில நாட்கள் நின்றே செல்ல முடியும் என்று எமது பயண முகவர் கூறியதை நாங்கள் சிரமமேதுமின்ற…

  15. யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. - ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரிய…

  16. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு "... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை வல்லவர் கடற்புலி இடித்தார் இவை வண்டியில் போனது சக்கையடி, வந்த பகைப்படை புக்கையடி!" --> போர்க்கால இலக்கியப் பாடல் இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் …

  17. பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அல்லது அண்ணையின் அம்மா என்பதுடன் நின்றுவிடாது தேசத்தின்அன்னை என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விதந்துரைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளையின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போது மானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே இவரை உலகம்முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத்தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலைநடுக…

  18. போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? சிறப்பு கட்டுரை ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார். கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49),…

  19. ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! Last updated May 3, 2020 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்ட…

  20. குருவிகளுக்காக அலைபேசி வசதிகளை நிராகரித்த புலிகளின் தலைவர். அலைபேசி வசதிகள் எல்லா மக்களுக்கும் கிடைக்கப் பெற தொலைபேசி கோபுரம் ஈழத்தின் பல பகுதிகளில் நிறுவுவதற்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இருந்த போது அதன் பலன்களைப் பற்றி அந்த நிறுவன பிரதிநிதிகள் மிகைப்படுத்தி விளக்கிய பிறகு தலைவரிடம் “உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்” என்றனர். அலைபேசி கோபுரத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குருவிகளின் கருவை சிதைக்கும் என அறிந்திருக்கின்றேன்.நீங்கள் நிறுவும் இந்த கருவியிலும் அது போல் ஏற்ப்படுமா என வினவினார் தேசியத் தலைவர். அதற்கு அவர்கள் ஆம் இதை தவிர்க்க முடியாது.எதிர் வருங்காலங்களில் வேண்டுமானால் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்திட கருவிகள் வரலாம் என…

  21. நண்பர்களே.. நீங்கள் யாராவது உங்கள் ஊர் வீட்டில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க‌ விரும்பினால்.,என்னுடன் தொடர்ப்பு கொள்ளுங்கள். என்னால் மிக மலிவாக உங்கள் வீட்டில் இடை பொருத்தி த்தர முடியும் இது எனது கன்னி முயற்சி, மேலதிக விபரங்களிற்கு கீழே உள்ளதை வாசிக்கவும் நன்றி உதயம் https://www.facebook.com/Gridtiesolarenergy?notif_t=page_new_likes

  22. தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன.கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி)சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.மார்…

    • 25 replies
    • 31.8k views
  23. போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில்.. பிச்சை போடுவது கணக்கா.. வெளியாரிடம் தங்கியிருக்கச் செய்யாதேங்கோ என்றும்.. கோழிக்குஞ்சு.. தையல் மிசின்.. ஜமுனாப் பாரி ஆடு.. என்று எல்லாரும் ஒன்றையே கொடுப்பதிலும்.. அவர்களுக்கு நீண்ட பயனளிக்கக் கூடிய வாழ்வாதாரத்தை நிரந்தரமாக கட்டி வளர்க்கக் கூடிய பொருண்மியம் ஈட்டித்தரக் கூடிய திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்லுங்கோ என்று.. கெஞ்சாத குறையாக.. நேசக்கரம் உட்பட பலரிடம் சொன்னோம். இங்கு யாழிலும் கருத்துப் பகிர்ந்திருந்தோம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களின் பழிப்புக்கும் இழிப்புக்கும் காரணமானோம்..! போர் முடிந்து.. இப்போ 3 ஆண்டுகள் கழிந்த பின் வந்திருக்கும் இந்தச் செய்தியையும் படியுங்கள்.. அன்று நாம் சொன்னதை இன…

    • 25 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.