Jump to content

நீங்க கன்னத்தப் பொத்தி.. பளார் விட்டிருக்கீங்களா..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

punch_in_face.jpg

இது வன்முறையை தூண்டும் பதிவல்ல. மாறாக.. நீங்கள் கோபத்தை அடக்க முடியாது.. உங்கள் பிள்ளைகளுக்கோ.. கணவனுக்கோ.. மனைவிக்கோ.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. இல்ல காதல் சொன்னப் போன இடத்தில.. இல்ல ஆசிரியரிடம் அல்லது வேறு யாரிடமும்... பளார் என்று அறைஞ்சிருக்கீங்களா..??! அல்லது வாங்கி இருக்கீங்களா..??!

அப்படி அறைஞ்சிட்டு.. நீங்க என்னத்தை உணர்ந்தீர்கள்... செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கீங்களா.. இல்ல அதை மீளச் செய்யனுமுன்னு நினைச்சீங்களா..??!

அல்லது வாங்கிய பளாருக்கு.. என்னத்தை உணர்ந்தீர்கள்.. திருப்பிக் கொடுக்கனுன்னு உணர்ந்தீர்களா.. அல்லது இயலாமையில்.. தவித்தீர்களா.. அல்லது தவறை உணர்ந்து திருத்தினீர்களா..??!

நீங்கள் கன்னத்தைப் பொத்தி பளார் விட்ட பின் எத்தனை தடவைகள்.. வருந்தி.. அதைச் செய்ய மாட்டன் என்று நினைச்சிட்டு.. மீளவும் செய்திருக்கீங்க..??!

ஏன் உங்களால அப்படி பளார் விடுவதை கட்டுப்படுத்த முடியல்ல..???!

நீங்கள் பளார் விட்டதன் மூலம் நீங்கள் எண்ணியத்தை நிறைவேற்றினீங்களா..??! அந்த நிறைவேற்றத்தில் உங்களுக்கு மனத் திருப்தி ஏற்பட்டதா..??!

நீங்கள் இதுநாள் வரை பளாரே விடல்ல.. அல்லது வாங்கல்ல என்றால்.. ஏன் என்று சொல்லுவீங்களா..???!

தமிழ் சினிமாவில அடிக்கடி பளார் விடுறாங்க. இப்ப எல்லாம் பொண்ணுங்களும் தாராளமா விடுறாங்க..! இது பற்றி என்ன நினைக்கிறீங்க..??! இப்படி சமூகத்திற்கு காட்டிறது.. தப்பா.. தப்பில்லையா..???!

இது தொடர்பா சொந்த அனுபவங்களைப்.. கண்ட கேட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் நல்லது.

(நான் யாருக்கும் இன்னும் அப்படி பளார் விடல்ல. ஆனால் சும்மா பகிடிக்கு ஒரு பளார் விட்டுப் பார்க்க ஆசை. வசதியான ஆள் தான் இன்னும் வாய்க்கல்ல..! ) :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா படுத்திருக்கிற நாய், எதிர்பாராமல் கடிக்கிற மாதிரித் தான் இந்தப் பளார்!

இது இயலாமையின் வெளிப்பாடு!

'பளார்களினால்' ஏதும் பயன்கள் விளைந்தது கிடையாது! மாறாக 'பழி வாங்கல்' தான் தொடரும்!

இது தானே தமிழ்ப் படங்களின், மூலக் கரு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை... சன நடமாட்டம் உள்ள கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்க,

மடிக்கும் படி ஊடாக மேல் மாடிக்கு ஏறிக் கொண்டிருந்த போது...smiley_rolltreppe.gif

பின்னுக்கு நின்ற பாடசாலை மாணவர் கூட்டம் ஒன்று, எனது பின் பக்கத்தில் நடு விரலால் குத்தி விட்டு, சிரித்த மாதிரி இருந்தது.

முன்னுக்கு நின்ற பையனுக்கு, விட்டேன் ஒரு பளார். அவனுக்கு என்ன.. நடந்தது என்று தெரியவில்லை.

பின்பு, அந்த மாணவர் கூட்டத்தின் பின் என்னுடன் வேலை செய்யும்... தெரிந்தவர் குத்தி விட்டு மறைந்து நின்றிருக்கிறார்.

பிறகு அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு, கவலையை தெரிவிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் "பளார்" என்று வாங்கிய அனுபவம் இருக்கின்றது. விஞ்ஞானம் படிப்பித்த ஆசிரியர் வட்டவாரியை ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்பதற்கு ஒருமுறை அறைந்தார். பஸ்ஸுக்கு யாரோ கல்லெறிந்ததற்கு கொண்டக்டர் ஓடாமல் நின்ற என்னைப் பிடித்துப் பஸ்ஸுக்குள் ஏற்றி இன்னொருமுறை அறைந்தார்.

தமிழன் என்றபடியால் கையோங்கும் பழக்கம் இருக்கும் என்பதற்கு நான் விதிவிலக்கல்ல. எனினும் கன்னத்தில் அறைந்தது எதுவும் (சுய)நினைவில் இல்லை!

Link to comment
Share on other sites

நினைவில் உள்ளது ஒரே ஒரு தடவை மட்டும். ஏழாம் வகுப்பில் (கலவன் பாடசாலை) சக மாணவியுடன் முசுப்பாத்தியாக தொடர்புபடுத்தி கதைத்த எனது நண்பனுக்கு ஓர் அதிரடியான பளார் கொடுத்தேன், அவன் அழத்தொடங்கிவிட்டான். 

அதிகப்படியாக வீட்டில் எனது அண்ணரிடம் அநீதியான முறையில் பல வாங்கியுள்ளேன் (சேர்ந்து விளையாடும்போது அவர் தோற்க போகின்றார் என்றால் அலாப்பும்போது எனக்கு பளார் இடுவார்).

வெளியாரிடம் பளார்வாங்கி நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாற்ற அனுபவமும் சுவாரசியமா இருக்குது. பெரும்பாலும் பளார் வாங்கின ஆக்களாகவே யாழ் கள உறவுகள் உள்ளார்கள். ஆனால் இந்த பளார்.. அவசியம் தானா.. என்பது பற்றி ஒருத்தரும் வடிவாச் சொல்லேல்லையே..??! ஏன்...??!

நான் எப்பவாவது இருந்திட்டு.. கம்பால.. பிரம்பால. அடி வாங்கி இருக்கிறன்.. கையால குட்டும் வாங்கி இருக்கிறன்.. ஆனால் பளார் வாங்கல்ல...! :):icon_idea:

Link to comment
Share on other sites

ஒருவருக்கும் கொடுக்கவில்லை கன்னத்தில் ,வாங்கியிருக்கின்றேன் ஒருமுறை அதை என்னால் இன்னமும் மறக்கமுடியவில்லை .

O/L படிக்கும் போது வகுப்பிற்கு வந்த சின்னத்துரை வாத்தி படிப்பிக்காமல் கதைத்துக்கொண்டு இருந்து விட்டு, பாடம் முடிந்து மணி அடிக்கும் நேரம் அடுத்த பாட வாத்தியை கொறிடோரில் கண்டுவிட்டு அப்பத்தான் ஒருகலத்தின் படத்தை பிளாக்போட்டில் வரைந்துவிட்டு மணி அடித்ததும் கேட்காததுபோல் பத்து நிமிடங்கள் பிரித்தேறிந்தார்,பின் வெளியில் போகும் போது மற்ற வாத்திக்கு சொறி சொல்லிவிட்டு போனார் .

நானும் இருக்கேலாமல் வாத்தி மணி அடித்தபின் தான் படிப்பிக்க தொடங்குது என்று அருகில் இருந்த பெடியனுக்கு மெதுவாகத்தான் சொன்னேன் ,

அடுத்த ஜன்னலால் வெளியில் போகும் போது வகுப்பை எட்டி பார்த்த வாத்தி என்ன நினைத்தோ தெரியாது வகுப்பிற்குள் வந்து அடுத்த பாட வாத்தியிடம் எக்சியூஸ் சொல்லி விட்டு விட்டுது ஒரு அறை ஒன்று எனது கன்னத்தில்.

மற்ற வாத்தி உட்பட எவருக்கும் தெரியாது ஏன் சின்னதுரை வாத்தி எனக்கு அடித்ததேன்று,எனக்கும் தான் .

Link to comment
Share on other sites

நான் வாங்கிய அறையை மறக்க முடியாது. யாழ் இந்து பிரேயர் ஹோலில், ஒரு நாள், பிரேயர் எல்லாம் முடிந்த பின், வகுப்புக்கு போவதற்காக வரிசையில் நின்ற போது, நானும் என் நண்பனும் கதைக்க அங்கு வந்த சந்தியாப்பிள்ளை விட்டார் இருவருக்கும் ஒவ்வொரு அறை. நாங்கள் அப்போது ஆறாம் வகுப்பு. சிறியவர்கள் என்ற ஈவு இரக்கம் கூட இல்லை. :unsure:

அறைவது என்பது தேவையற்ற ஒன்று!

தவமணிதாசனும் மாணவர்களுக்கு அறைவதில் சூரன். ஆனால் அவருக்கு நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இருட்டடி கொடுத்ததாகவும் கேள்வி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த பளார்.. அவசியம் தானா.. என்பது பற்றி ஒருத்தரும் வடிவாச் சொல்லேல்லையே..??! ஏன்...??!

"பளார்" என்று கன்னத்தில் அறையும் வன்முறை தவிர்க்கப்படவேண்டும். தங்களைவிட மெலியாருக்கு அறைபவர்கள் உண்மையிலேயே ஏதோ நோயினால் பீடிக்கப்பட்டவர்கள்!

Link to comment
Share on other sites

பளார் .. இந்த திரி சில எனது ஞாபகங்களையும் மீட்டுகின்றன.

நான் இரண்டு பேருக்கு பளார் விட்டு இருக்கிறேன். துரதிஸ்டவசமாக இரண்டுமே பெண்கள். ஒருவர் என் காதலியும் கூட. நான் அடித்தபோது எனக்குள் இருந்த காரணமும் கோபமும், அவளை அடித்த அந்த கணமே மறந்து போச்சு.

அவள் கண்களில் அழுகையும், கையினால் அவள் கன்னத்தை தடவியபடியும் இருந்தாள். அவள் சொன்ன வார்த்தைகளுக்கு அவள் அந்த பளாரை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் தான் சொன்னது தவறுதான் என்று இன்னொரு நாள் சொன்னாள். இருந்தாலும் அவளை அன்று அடித்தமைக்காக இன்றும் என் மனசில் ஒரு வருத்தம் இருந்து கொண்டுதான் இருக்கு.

அடுத்து என் நண்பிக்கு விட்ட பளார். அந்த பலாருக்கு ஒரு கணம் முன்பு வரை எனக்கு அவளை அட்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு கணமும் இருந்ததில்லை. அவளின் ஒரு தவாறான வார்த்தை பிரயோகம், ஒரு கணத்தில் என்னை கையோங்க வைத்துவிட்டது. அது தான் எனது கடைசி பளாராகவும் இருந்தது. அது அந்தி மாலை நேரம், அஒரு அணைக்கட்டின் விளிம்பில் அவளை அடித்தேன்.

அடுத்த நாள் தான் என் கூட பேசினாள். கன்னத்தில் விரல்கள் பதிந்த அடையாளம் காட்டினாள். வீடுக்கு பொய் சொன்னதாக சொன்னாள். முன்பை விட எங்கள் நட்பு நாராக இருந்தது.

அடிக்கும் போது இருந்த நியாயம் இப்போது இல்லை. இப்போதும் அவற்றை நினைத்து கவலைப்படுவது தான் அதிகம். இருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் அடிக்கடி ஞாபகபடுத்தும் சொல்லாக, இடமாக, சம்பவமாக அந்த பளார்கள் அமைந்துவிட்டது என்னமோ உண்மைதான். என் நண்பி கூட சொல்லுவாள் அதை மறக்க முடியுமா என்று. அனால் அவற்றை நினைக்கும் போது இனிமையாக இருபதாகவும் சொல்லுவாள்.

இன்றும் கூட என்னவளிடம் , அன்றைக்கு வாங்கின அடி பத்தாதா என்று கேட்டு விட்டு தான் இந்த பதிவை பதிகிறேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீகள்.? :lol: :lol:

அனேகமாக இன்று எனக்கு இரவுச்சாப்பாடு கிடைக்காது என்று தான் நினைக்கிறேன் :lol::icon_idea:

அறைவது உண்மையில் எங்களின் பலவீனத்தின் வெளிப்பாடே .

Link to comment
Share on other sites

வீட்டில், பள்ளியில் கையால் பிரம்பால் அடிவாங்கியதுண்டு, சிறுவயதில் அண்ணன், தம்பி, தங்கைக்குக் கையோங்கியதும் உண்டு. ஆனால் யாரிடமும் கன்னத்தைப் பொத்தி பளார் இதுவரை வாங்கியதும் இல்லை கொடுத்ததும் இல்லை.

ஒருவர் அறிந்தே தனது செயல்களாலும், வார்த்தைகளாலும் மற்றவரை கோபத்துக்குள் தள்ளுவது (பல தரம் எச்சரிக்கை கொடுத்தபின்னும்) தொடர்ந்தால் அவர் கன்னத்தைப் பொத்தி இல்லை காதைப் பொத்தி வாங்க அருகதையுடையவர் என்பது எனது கருத்து. ^_^

Link to comment
Share on other sites

இது நான் கண்ட ஓர் நகைச்சுவை அனுபவம்.இது இந்த தலைப்பிற்கு எவ்வளவு பொருந்தம் என்று எனக்கு தெரியாது. அனாலும் கன்னத்தில் பளார் என்று வாசித்தது உடனே இந்த நினைப்பு என் கண் முன்னே வந்து என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன் ...................

ஆம் நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்து படிக்கும்போது இடைக்கிடை ரகசியமாக அரியாலை என்னும் இடத்திற்கு என் நண்பர்களுடன் செல்வதுண்டு.[கள்ளு கொப்பிரேசன் பக்கம் ]

ஒருநாள் எமக்குப்போறுப்பான பாதிரியார் விடுமுறை சென்றுவிட்டார்.வழமை போல் ஆரம்பித்தது எம் பயணம் அரியாலை சொர்க்கபுரம் நோக்கி...அங்கே வழமைக்கும் அதிகமான கூட்டம். நாமும் ஒரு கரையில் ஒதுங்கினோம்.எமக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் மிக மகிழ்ச்சியாக ரசித்து குடித்துக்கொண்டு மிகவும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.திடீர் என அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் பக்கத்தில் உள்ள தனது சகாவிற்கு குடுத்தார் கன்னத்தில் பளார் என்று....தனது முழு பலத்தையும் சேர்த்து கொடுத்த அந்த பளார் உண்மையில் கடினமானதாகவும்,கோபத்தை உடன் வரவைக்க கூடியதுமானது.நான் நினைத்தேன் அங்கே பெரிய சண்டை வரப்போகிறது என்று நானும் எனது நண்பர்களும் எஸ்கேப் ஆவதற்கு தயாரானோம்........அடி வாங்கியவர் தனது கன்னத்தை ஒரு தடவை தடவி சீ......... எனக்கு நோகேலை என்றார். அதைப்பார்த்து நானும் என் நண்பர்களும் சிரித்த சிரிப்பையும்,அந்த ஆனந்தத்தையும் இந்த தலைப்பு எனக்கு நினைவூட்டியதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

இது நான் கண்ட ஓர் நகைச்சுவை அனுபவம்.இது இந்த தலைப்பிற்கு எவ்வளவு பொருந்தம் என்று எனக்கு தெரியாது. அனாலும் கன்னத்தில் பளார் என்று வாசித்தது உடனே இந்த நினைப்பு என் கண் முன்னே வந்து என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன் ...................

ஆம் நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்து படிக்கும்போது இடைக்கிடை ரகசியமாக அரியாலை என்னும் இடத்திற்கு என் நண்பர்களுடன் செல்வதுண்டு.[கள்ளு கொப்பிரேசன் பக்கம் ]

ஒருநாள் எமக்குப்போறுப்பான பாதிரியார் விடுமுறை சென்றுவிட்டார்.வழமை போல் ஆரம்பித்தது எம் பயணம் அரியாலை சொர்க்கபுரம் நோக்கி...அங்கே வழமைக்கும் அதிகமான கூட்டம். நாமும் ஒரு கரையில் ஒதுங்கினோம்.எமக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் மிக மகிழ்ச்சியாக ரசித்து குடித்துக்கொண்டு மிகவும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.திடீர் என அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் பக்கத்தில் உள்ள தனது சகாவிற்கு குடுத்தார் கன்னத்தில் பளார் என்று....தனது முழு பலத்தையும் சேர்த்து கொடுத்த அந்த பளார் உண்மையில் கடினமானதாகவும்,கோபத்தை உடன் வரவைக்க கூடியதுமானது.நான் நினைத்தேன் அங்கே பெரிய சண்டை வரப்போகிறது என்று நானும் எனது நண்பர்களும் எஸ்கேப் ஆவதற்கு தயாரானோம்........அடி வாங்கியவர் தனது கன்னத்தை ஒரு தடவை தடவி சீ......... எனக்கு நோகேலை என்றார். அதைப்பார்த்து நானும் என் நண்பர்களும் சிரித்த சிரிப்பையும்,அந்த ஆனந்தத்தையும் இந்த தலைப்பு எனக்கு நினைவூட்டியதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும்.. உங்கள் அனுபவங்களை தெளிவாச் சொல்லி இருக்கீங்க.... அதிகம் அனுபவங்கள் பள்ளி ஆசிரியர்களிடம் பளார் வாங்கினது பற்றித்தான் இருக்குது. இந்த காணொளிகளில் தோன்றுவது போல.... தேவையில்லாமல் வாயைத் திறந்து.. பளார் வாங்கியது உண்டா..??! இப்படி பளார் வாங்க நேரிட்டால்.. உங்கள் மனநிலை எப்படி இருக்கும்...???! :):icon_idea:

http://youtu.be/13yvCHyUEn4

http://youtu.be/hWu6qj8AoqE

Link to comment
Share on other sites

வெள்ளைக் கொழும்பான் மாவின் கீழ் செங்கற்களை கவனமாக அடுக்கி வை மகன் என்று அப்பா சொன்னதும், விளையாடப்போகும் அவசரத்தில் வேண்டுமென்றே அவ்வளவையும் போட்டுடைத்தற்கு அப்பா தந்த முதலும் கடைசியுமான 'பளார்'

'நன்று, எழுத்தைத் தெளிவாக எழுதவும்' என்று கணித ஆசிரியர் போட்ட குறிப்பை அவரிடம் காட்டி, 'சேர் நீங்கள் எழுதியது விளங்கவில்லை' என்று கிண்டலாக அவரிடம் கேட்ட பொழுது விழுந்த இரண்டாவது 'பளார்'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பளார் தேவையற்ற ஒன்று, கோப உணர்ச்சியின் ஒரு வெளிப்பாடே.

வேண்டியுள்ளேன் குண்டு சங்கீத ஆசிரியையிடம்.

நாங்கள் நண்பர்களா நின்று கதைத்துக்கொண்டிருக்கும் போது, ஒருவன் மற்றவனுக்கு சொன்னான், "மச்சான் வேண்டாம் அதைப்பற்றி கதைக்காதே என்று அடிவாங்குவாய்" என்றான்,

மற்றவன் கேட்கவில்லை அடிடா பார்ப்பம் என்றான், இவன் பளார் என்று போட, அவன் "ஆ" என்று திறந்த வாய்மூடாமல், "அட அடிச்சு போட்டானடா" என்றான்.

எல்லோருக்கும் சிரிப்பு அடக்க முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அனுபவங்கள்.. எத்தனை சூழ்நிலைகள்.. "பளார்" களை வைச்சே ஒரு தொடர் கதை எழுதலாம் போல இருக்கே. இன்னும் சொல்லுங்க.. அறிவம்.. அறிஞ்சதை வைச்சு.. . நீங்க சொல்லுற அனுபவ அறிவுரைகளை வைச்சு.. மற்றவங்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவும்.... திருந்தத் தூண்டவும் செய்யுமில்ல..! :):icon_idea:

Link to comment
Share on other sites

எத்தனை அனுபவங்கள்.. எத்தனை சூழ்நிலைகள்.. "பளார்" களை வைச்சே ஒரு தொடர் கதை எழுதலாம் போல இருக்கே. இன்னும் சொல்லுங்க.. அறிவம்.. அறிஞ்சதை வைச்சு.. . நீங்க சொல்லுற அனுபவ அறிவுரைகளை வைச்சு.. மற்றவங்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவும்.... திருந்தத் தூண்டவும் செய்யுமில்ல..! :):icon_idea:

சந்தியாப்பிள்ளை போன்ற மனிதர்கள் திருந்துவதில்லை.

எங்களுக்குப் பின்னும், நிறைய பேர் அடி வாங்கியதுண்டு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தாராளமாக வாங்கியிருகிறேன்.கொடுக்கதான் ஒருத்தரும் மாட்டீனம் இல்லை :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல முறை வாங்கியிருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது.

 நாலாம் வகுப்பில் எனது தத்துவ நண்பன் இதையெல்லாம் கணக்கில் வைத்திருக்க கூடாது என்று கூறினான்.  

எனது துணைவியார் பிள்ளைதாச்சியாக இருக்கும்போது குண்டு ஜோக் சொல்லி ஒருக்கால் வாங்கி இருக்கிறேன். 

இப்போது யார் குண்டு ஜோக் சொன்னாலும் கண்ணில் பயம். 

பெண்ணின் கை பூ போன்றது,  இட்லி போன்றது என்று பொய் எழுதும் கவிகளை பிடிக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைபிள் - ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு?

இரண்டு கன்னத்திலும் அறைந்தவனுக்கு எதை காட்டுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் முதல் கன்னத்தை பொத்தி வாங்கின அனுபவம். பாடசாலையில வெள்ளிக்கிழமை பிரேயர் நடக்கும்போது கீழ செருப்பை போட்டுட்டு இருந்தனான் அதை ஒரு முரட்டு வாத்தி கண்டிட்டுது வந்து விட்டிச்சே ஒண்டு கன்னத்தை பொத்தி, ஒருகிழமைக்கு காதில சிவபுராணம் கேட்டுக்கொண்டே இருந்திச்சுது :( . அதுக்குபிறகு ஒருக்கா ஆமி கன்னத்தை பொத்தி அடிச்சவன். வாங்கினது நிறைய ஆனால் குடுத்ததுதான் இல்லை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சந்தியாப்பிள்ளை போன்ற மனிதர்கள் திருந்துவதில்லை.

எங்களுக்குப் பின்னும், நிறைய பேர் அடி வாங்கியதுண்டு !

405090_10150805895740376_620340375_11684052_1208040876_n.jpg

இவர் தான்(நடுவில் ) ஈஸ் கன்னத்தில் அறைந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர்.இடதில் ராதாவின் (ஹரிசந்திரா )தம்பி,வலது பக்கம் சாரங்கன் எனது நண்பர் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.