Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் கண்களெனும் வலையில் சிக்கிய கயல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tw2.jpg

 

 

நான் கண்டது என்ன

கனவா கனவா..

கன்னி அவள் கண்கள்

எனைத் தீண்டியது என்ன

நனவா நனவா..!

 

பாதைகள் ஆயிரம் இருக்க

பக்கம் வந்து முட்டிப் போனது என்ன

முட்டுமுட்டு பாடலின்

விளைவா விளைவா..!

பார்வைகள் பரிமாறி

மெளன மொழி பேசியது என்ன

நாட்டியமா நாடகமா..!

 

கருங் கூந்தல் பரப்பிய

அவள் முதுகு என்ன

சந்தனம் பரப்பிய அம்மிக்

கல்லா கல்லா

என் கண்கள் என்ன

அதில் உருளும் அம்மிக்

குழவியா குழவியா..!

 

காற்றிலாடும் சுடிதார் என்ன

சாமிக்கு வீசும் சாமரமா

இந்த ஆசாமி

அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன

விதியா சதியா..!!

 

முடிவாய் என்ன

கண்களுக்குள் சிக்கி

மூளையில் பதிவானது

அவள் நினைவா நினைவா

அதன் தவிப்பில்

இவன் கமராவை

நோண்டுவது என்ன தலை

விதியா விதியா..!

 

இதன் பெயர்தான்  என்ன

காதலா காதலா

அல்லது என்ன

ஈர்ப்பா ஈர்ப்பா..!

பட்டிமன்றம் நடத்த

இது என்ன

தலைப்பா தலைப்பா..!

விட்டிட்டுப் போடா

அடுத்த பிகர்

இதை விட அழகு என்று

மனம் அலை பாய்வது என்ன

இயற்கை தந்த

வரமா வரமா..!

 

பிரம்போட அம்மா

கிட்ட வராத வரை

இது தான் என்ன

என் விளையாட்டா விளையாட்டா..!

காலம் பதில் சொல்லும்

"பிளே பாய்" உனக்கு

ஆப்பு வருமடி ஓர் நாள்

காத்திரு காத்திரு...

மனச்சாட்சி மனசுக்குள்

மல்லுக் கட்டுவது தான் என்ன

இயற்கையா இயற்கையா..! :):lol:

 

(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)

Edited by nedukkalapoovan

  • Replies 67
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் அவதாரமும் மாறிவிட்டது.. :wub: நல்லா இருந்தால் சரிதான்.. :D

"ஆண்டவன் யாரையும் விட்டதில்லை வாழ்க்கையின் வட்டதில , ஆசையை நெஞ்சில வெச்சு புட்டா சோதனை கொஞ்சம் இல்லை"

 

வாழ்த்துகள் நெடுக்ஸ்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தரம் நெடுக்ஸ் தப்பவே முடியாது என நினைக்கிறேன்.  :)  :)

 

  • கருத்துக்கள உறவுகள்
ஓவ பில்டப் உடம்புக்கு ஆகாது அப்பு :) ஒவ்வொரு வருடமும் இப்படி வந்து ஒப்பாரி வைக்கிறதே வேலையாப் போயிட்டுது ^_^
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையாவது கனவு பலிக்கட்டும் :D  

 

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்  

 

 

அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகேல்லை தானே? :lol: இல்லைன்னா மிஸ் பண்ணிடாதையுங்கோ. :icon_idea::)
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில நெடுக்ச்சுமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ :lol: :lol: :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாவே கற்பனைக் குதிரையை தட்டி விட்டிருக்கிறீங்க..! :)

 

நாங்க எங்க சொல்லி இருக்கம்.. கண்களெனும்.. வலையில்..  சிக்கிய கயலை.. கவர்ந்து வைச்சிருக்கப் போறமுன்னு..! அப்படி எதுவும் சொல்லேல்லையே.. அப்படி இருக்கும் போது. வலையில் சிக்கிய கயலை.... கச்சிதமா பிடிச்சு.. மீண்டும்.. கடலில் விட்டுவிடுவதே உத்தேசம்..! :lol::D

 

கருத்துப் பகிர்ந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி. :icon_idea:

எல்லாரும் நல்லாவே கற்பனைக் குதிரையை தட்டி விட்டிருக்கிறீங்க..! :)

 

நாங்க எங்க சொல்லி இருக்கம்.. கண்களெனும்.. வலையில்..  சிக்கிய கயலை.. கவர்ந்து வைச்சிருக்கப் போறமுன்னு..! அப்படி எதுவும் சொல்லேல்லையே.. அப்படி இருக்கும் போது. வலையில் சிக்கிய கயலை.... கச்சிதமா பிடிச்சு.. மீண்டும்.. கடலில் விட்டுவிடுவதே உத்தேசம்..! :lol::D

 

கருத்துப் பகிர்ந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி. :icon_idea:

சரி சரி புரியுது ................வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ............. :D 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாவே கற்பனைக் குதிரையை தட்டி விட்டிருக்கிறீங்க..! :)

 

நாங்க எங்க சொல்லி இருக்கம்.. கண்களெனும்.. வலையில்..  சிக்கிய கயலை.. கவர்ந்து வைச்சிருக்கப் போறமுன்னு..! அப்படி எதுவும் சொல்லேல்லையே.. அப்படி இருக்கும் போது. வலையில் சிக்கிய கயலை.... கச்சிதமா பிடிச்சு.. மீண்டும்.. கடலில் விட்டுவிடுவதே உத்தேசம்..! :lol::D

 

கருத்துப் பகிர்ந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி. :icon_idea:

 

ஒரு பெண்ணின் சுவாசம்  உங்களைத் தட்டி நித்திரையால் எழுப்பிவிட்டதே 

 

பெரிய விடயம். மிகுதியெல்லாம் பின்னர் தன்னால் வெளிவரும்  :D  :D  :lol:  

எல்லாரும் நல்லாவே கற்பனைக் குதிரையை தட்டி விட்டிருக்கிறீங்க..! :)

 

நாங்க எங்க சொல்லி இருக்கம்.. கண்களெனும்.. வலையில்..  சிக்கிய கயலை.. கவர்ந்து வைச்சிருக்கப் போறமுன்னு..! அப்படி எதுவும் சொல்லேல்லையே.. அப்படி இருக்கும் போது. வலையில் சிக்கிய கயலை.... கச்சிதமா பிடிச்சு.. மீண்டும்.. கடலில் விட்டுவிடுவதே உத்தேசம்..! :lol::D

 

கருத்துப் பகிர்ந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி. :icon_idea:

 

நெடுக்ஸ் அண்ணாக்கு ஒரு பெண்ணை பிடிக்கப் பண்ணுவதென்றால் அது பெரிய பாடு. :icon_idea:

அப்படியிருக்க ஒரு பெண் உங்கள் கண்ணில் சிக்கி விட்டார் என்று வேறு சொல்கிறீர்கள். :lol: அது தான் பிடித்திருந்தால் காதலிக்க அல்லது கல்யாணம் செய்ய மிஸ் பண்ணி விடாதீர்கள். :) இதையும் திரும்ப கடலுக்குள் விட்டிட்டால் பிறகு நெடுக்ஸ் அண்ணா கண்ணில் எப்ப அடுத்த கயல் மாட்டும் என்ற கவலை தான். :( :( :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாரும் ஏதோ தம்பதி சமேதராய் நெடுக்ஸ் காட்சி அளிக்கிற கணக்கா வாழ்த்துறீங்க. வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வது பண்பு. ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் காரணம் நீங்கள் குறிப்பிடுவதனையிட்டு அல்ல. உங்களின் இதயபூர்வமான அன்பிற்காக..!

 

கண்ணில் கண்ட.. கவர்ச்சியான (அழகான) கன்னியை கனவு காண்பது.. கவிதை பாடுவது.. கூட குற்றமா..?! உடனவே காதல்.. கலியாணம்.. குழந்தை.. குட்டி என்ற ரேஞ்சுக்கு போறது தான் தப்புங்க..! அது வேற. இது வேற..! அதுமட்டுமில்லாம இந்தப் பொண்ணு வேற.. நம்மளையே இரண்டு மூன்று தரம் கிராஸ் பண்ணினாவா.. அது தான் கவிதையில் வரும் அளவிற்கு.. கவனத்தையும் கவர்ந்தா. அவ்வளவும் தான்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாக்கு ஒரு பெண்ணை பிடிக்கப் பண்ணுவதென்றால் அது பெரிய பாடு. :icon_idea:

அப்படியிருக்க ஒரு பெண் உங்கள் கண்ணில் சிக்கி விட்டார் என்று வேறு சொல்கிறீர்கள். :lol: அது தான் பிடித்திருந்தால் காதலிக்க அல்லது கல்யாணம் செய்ய மிஸ் பண்ணி விடாதீர்கள். :) இதையும் திரும்ப கடலுக்குள் விட்டிட்டால் பிறகு நெடுக்ஸ் அண்ணா கண்ணில் எப்ப அடுத்த கயல் மாட்டும் என்ற கவலை தான். :( :( :)

 

சும்மா விடுங்க.. இதுக்கெல்லாமா மனிசன் கவலைப்படுவான். இந்தக் கயல் போனா இன்னொரு கயல். ஆத்தில.. குளத்தில.. கடலில கயலுக்கா பஞ்சம்..! :lol::D

Edited by nedukkalapoovan

எனது வாழ்த்துக்கள். கவிதைக்கல்ல, கவிஞரின் மனதைக் கொள்ளை கொண்ட அந்தக் கன்னிக்கு.

பாறையை முட்டி பனித் துளியாக்கிய, முகம் தெரியாத பெண்ணே! நீ வாழ்க.

 

  • கருத்துக்கள உறவுகள்

சலனம் எனும் குழந்தை,

செல்ல நடை நடந்து,

சபலம் எனும் பெண்ணாக,,

பெண்ணின் விழிகளுக்குக்,

கயல் மீன் உவமையாகையில்,

கண் திறந்த விசுவாமித்திரன்,

தன் மோனத்தவம் முடித்து,

மன்மதனுக்கு மலர்த் தூவ வைத்த,

பெண்ணணங்கே,

உனக்குக் கோடி வணக்கங்கள்! :D

 

சலனம் எனும் குழந்தை,

செல்ல நடை நடந்து,

சபலம் எனும் பெண்ணாக,,

பெண்ணின் விழிகளுக்குக்,

கயல் மீன் உவமையாகையில்,

கண் திறந்த விசுவாமித்திரன்,

தன் மோனத்தவம் முடித்து,

மன்மதனுக்கு மலர்த் தூவ வைத்த,

பெண்ணணங்கே,

உனக்குக் கோடி வணக்கங்கள்! :D

 

அந்தப் பெண்ணுக்கு தனியே வாழ்த்துத் திரி தொடங்கலாம் என்றிருந்தேன். கவிதை வரவில்லை. :(

இப்படி நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று தெரிந்திருந்தால் தொடங்கியிருக்கலாம்.   :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண்ணுக்கு தனியே வாழ்த்துத் திரி தொடங்கலாம் என்றிருந்தேன். கவிதை வரவில்லை. :(

இப்படி நீங்கள் கவிதை எழுதுவீர்கள் என்று தெரிந்திருந்தால் தொடங்கியிருக்கலாம்.   :D

 

கண்கள் கொண்டு அழகை ரசித்தது நான். கயலை கைது செய்தது நான். கவிதை வடித்ததும் நான். அப்புறம் கயலை பத்திரமாக கடலில் விட்டதும் நான். இப்படி இருக்க.. வாழ்த்து கவிதைக்கு அன்றி.. கயலுக்கு சொந்தமாவது.. ரெம்ப ஓவர்..! 

 

நன்றி புங்கையூரன் அழகான குட்டிக் கவிதை.

 

ஆனால் ஒன்று நான் விசுவாமித்திரர் போல கள்ளச் சாமி அல்ல.. ஆசாமி..!  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.  பெண்ணை ரசித்தால் மட்டும் போதாது ருசிக்கவும் வேணும் (ஒராளை மட்டும்)

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.  பெண்ணை ரசித்தால் மட்டும் போதாது ருசிக்கவும் வேணும் (ஒராளை மட்டும்)

 

அவர்... இன்னும், கொஞ்சம் பட்டினி கிடந்தால்தான்... வழிக்கு வருவார், சுப்பண்ணை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.  பெண்ணை ரசித்தால் மட்டும் போதாது ருசிக்கவும் வேணும் (ஒராளை மட்டும்)

 

ருசிக்க பெண்ணென்ன ஐஸ்கிறீமா..??!  பூவும் பூவையும் கைபடாத வரை தான் அழகு..! கண்ட இடத்திலும் கை வைச்சு என்னையும் பூவையும் கலங்கப்படுத்த நான் தயார் இல்லை..!  :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்... இன்னும், கொஞ்சம் பட்டினி கிடந்தால்தான்... வழிக்கு வருவார், சுப்பண்ணை. :D

 

நான் பட்டினியில் அலையும் பிறவி அல்ல. அழகை ரசிக்கும் கலைஞன்..! இதோ.. கண்ணும்.. கயலும்..! இதைப் பார்த்திட்டு சொல்லுங்க.. இதைப் பார்த்தா.. இந்தக் கண்கள் உங்களையே அடிக்கடி.. பார்த்தா கவிதை வருமா வராதா என்று..??! :lol::D

 

tw3-1.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்ப கொஞ்சநாளாய் இரண்டுபேர் இஞ்சை கவிதை கதையெண்டு என்னத்தையோ சொல்லாமல் சொல்ல வரீனம்.ஆருக்கும் விளங்குதோ????
 
ஆழமறியா ஆழ்கடலில் ஆவாரம்பாடி ஆட்சிசெய்ய வாழ்த்துக்கள். :lol:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப கொஞ்சநாளாய் இரண்டுபேர் இஞ்சை கவிதை கதையெண்டு என்னத்தையோ சொல்லாமல் சொல்ல வரீனம்.ஆருக்கும் விளங்குதோ????
 
ஆழமறியா ஆழ்கடலில் ஆவாரம்பாடி ஆட்சிசெய்ய வாழ்த்துக்கள். :lol:  :icon_idea:

 

 

யாம்... பெற்ற இன்பம், பெறுக இவ் வையகம்.

வேறோன்றும்.. அறியோம்.. பராபரனே....

ம்ம்...... கவிதை நல்லாய் இருக்கு நெடுக்ஸ்!

 

நெடுக்ஸ்,  இவையள் எல்லாரும் சேர்ந்து பாழ்ங்கிணறுக்கை தள்ளி விடுகிற பிளான்.  ஜாக்கிரதை  வாழ் நாள் முழுவதும் ஒரு ஆளாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கணும், சுதந்திரமாகக் கவிதை வரையணும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.