Jump to content

இப்படிச் செய்வது சரியா?


Recommended Posts

வணக்கம்,

எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன்.

இந்தக் கருத்தாடலின் நோக்கம் எனது மனச்சாட்சிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதே ஒழிய உங்கள் மனதைப் புண்படுத்துவதோ அல்லது கவலைப்படுத்துவதோ அல்ல.

நேற்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின்போது 21 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள்.

எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி.

ஆனால், நாங்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கின்றோமா? அவர்களின் தனிப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு பேரதிர்ச்சியில், கவலையில் இப்போது இருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கின்றோமா?

கன காலமாக சண்டை இல்லை, புலி பதுங்கி இருக்கிது பாயப்போகிது எண்டு சிலர் ஒருபக்கத்தால கொம்ண்ட அடிக்க, இன்னொரு சிலர் அவங்களால இனி ஒண்டும் ஏலாது அதான் பேசாமல் இருக்கிறாங்கள் எண்டு இன்னொரு பக்கத்தால கொமண்ட் அடிக்க இப்படி நிலமை இருந்தது.

நேற்று மீண்டும் போர், தாக்குதல். இந்தமுறை வெற்றி. ஆனால், இப்படி ஒவ்வொரு தடவையும் வெற்றி வரும் என்று இல்லை. மீண்டும் வெற்றி வரலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம்.

ஆனால், நாங்கள் இந்தப் போரினால் வரும் அழிவுகளை, துயரங்களை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கின்றோமா? பெரிய அளவில் உயிர் இழப்புக்கள் வரும்போது உங்களில் எத்தனை பேரால் வெற்றியைப் பார்த்து சந்தோசப் படமுடியும்?

போர் மூலமே தீர்வு என்று விரும்புபவர்கள், போரின் போது வரும் அழிவுகளை, துன்பங்களை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றீர்களா?

எனது மனச்சாட்சியைப் பொறுத்த அளவில் இப்படி இந்த இளம் வயதில் அவர்கள் கரும்புலிகளாக இருக்கட்டும், சாதாரண போராளிகளாக இருக்கட்டும் தமது வாழ்வை போரிற்கு ஆகுதி ஆக்கிக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்னொருவன் தனது குருதியை சிந்தி உருவாக்கும் வெற்றி மூலம் நான் எப்படி வெளிநாட்டில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு கொண்டாடி மகிழ முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

நேற்று பத்து விமானங்கள் அழிந்து போனால், நாளைக்கு இருபது விமானங்களை சிறீ லங்கா அரசாங்கம் கடனுக்கு வாங்கி தமது பலத்தை மீண்டும் இரட்டிப்பு செய்யப் போகின்றார்கள். சிறீ லங்கா அரசுக்கு இப்போது ஏற்பட்டு இருப்பது ஒரு தற்காலிக மந்தநிலையே.

போரை நான் விரும்புபவனாக இருந்தால் அல்லது ஆதரிப்பவனாக இருந்தால் போரில் எனது தனிப்பட்ட வாழ்வை அல்லது சுகத்தை நான் இழக்க தயாராக இருக்கின்றேனா? இல்லை என்றால், எப்படி நான் என்னைப் போன்ற இன்னொருவர் தனது வாழ்வை போரில் தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள அல்லது ஆதரிக்க முடியும்? எனக்கு மட்டும் ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயமா?

எனக்குள் ஆயிரம் கேள்விகள்... பதில் தெரியவில்லை. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். அவ்வளவுதான். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்துக்கு அஞ்சினால் போல மரணம் உங்களையோ என்னையோ உயிர்களையோ விட்டுப் போய்விடப் போவதில்லை. மரணத்தின் மூலம் சாதிக்கக் கிடைத்தால் அதுதான் முதன்மைத் தேர்வாக இருக்க வேண்டும்.

தலைவருக்கு பெற்றோருக்கு குடும்பத்தினருக்கு நண்பர்களுக்கு எல்லோருக்கும் ஒரு போராளியின் இழப்பு கவலைதான். இருந்தாலும் அவனின் சாதனை என்பது அந்த நினைவுகளை கொஞ்சம் ஒதுக்கி வைக்கச் செய்ய வைக்கிறது. அது கூட அந்த வீரர்களால் தான் சாத்தியமாகிறது. நாம் இறந்தால் என்ன கிடைக்கும்..???! ஒரு துண்டுப்பிரசுரம்.. நாலு நாள் கவலை....????! அவர்கள் அப்படியன்று. மனித வரலாற்றின் கதாநாயகர்களாக திகழப் போபவர்கள். ஒரு இனத்தின் வரலாற்று நாயகர்கள் அவர்கள்.

இன்று வெளிநாட்டில் இருந்து இச் செய்தியைக் கேட்டு மகிழ்பவர்கள் என்று சொல்வதிலும்.. அந்த போர் வெற்றி தந்த மகிழ்வு என்பதில் போராளிகளின் இழப்பு தந்த சோகமும் கலந்திருந்ததை இங்கும் சரி வெளியிலும் சரி அவதானித்தேன். அதுதான் மனித இயல்பு.

மரணத்துக்கு இழப்புக்கு பயந்தால் வெளிநாட்டில் அசைலம் அடிச்சு பிள்ளைக்குட்டி பெத்திட்டு இருக்கிறதுதான் வாழ்க்கை என்று கருதினால்.. தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை தமிழர்கள் நிறுவ முடியாது.அந்த இடத்தை நிரப்பி சிங்களவர்கள் தங்களுக்கு என்று வரலாற்றை நிறுவிக் கொள்வார்கள்.

நாம் நாளை வாழுவோம் என்ற ஆசையால் ஆட்ப்பட்டிருப்பதால் கவலைப்படுகிறோம். ஆனால் எம்மைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்ற தன்மையை நாம் கணக்கில் கொள்வதே இல்லை. நாளை இந்த பூமி அழிகிறது என்று கொள்ளுங்கள்.. என்னாகும்.. உங்கள் நிலை...???! நாம் நிச்சயமற்ற சூழலில்.. நிச்சயமா இருக்க விரும்புறம். ஆனால் வீரர்கள் நிச்சயமற்ற சூழலில் நிர்ணயிக்கப் பிறந்திருக்கிறார்கள். அதுதான் எமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

மனித வரலாறு யுத்தங்களை இழப்புக்களைக் கடக்காததல்ல. மரணம் என்பது இயற்கையின் சுழற்சியில் நிகழப்போவது. அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும். அதற்குள் சாதித்துக் கொள்ள முயலுங்கள். வரலாறு படைக்கலாம். காசு சம்பாதிப்பதும் காதலிப்பதும் கலியாணம் முடிப்பதும் குட்டி போடுவதும் தான் மனித வாழ்வா...??! அதுதான் சந்தோசமா...???! குடித்துக் குடித்தே தினம் அழியும் மனிதகர்கள் எத்தனை...??! அளவுக்கு அதிகமா சாப்பிட்டே சாகும் மனிதர்கள் எத்தனை..???! ஒரு மொபைல் போனுக்கே கத்தியால் குத்துப்பட்டு சாகும் நிலை... தவறான பாலியலால் நோய் வந்து அழிவது எத்தனை..???! இப்படி சாவிலும்.. வீரனின் சாவு எவ்வளவு அர்த்தமுள்ளது. உங்களை உலகை அவனை நோக்கி திரும்பிப் பார்க்கச் செய்கிறது. நாளை நான் இறந்தால்.. நீங்கள் கூட அறியமாட்டீர்கள்... இதுதான் நாம். நாம் எம்மைப் பற்றி மிகைப்படுத்திக் காட்டும் வகையில் உள்ள உலகின் போக்கில் இருந்து சிந்தித்து வீரனின் இழப்பை குறைவாக மதிப்பிடுவதால் தான் சோகம் அதிகமாகிறது.. கவலை முதன்மைப் படுகிறது வீரனின் சாதனையை மறைக்க முயல்கிறது.

போர்க்களத்தில் சக தோழனின் இழப்பு துக்கம் ஆனால் அவனின் வீரம் சாதனை துணிச்சல் நல்ல பாடம். தெம்பு. வழிகாட்டல். இவையின்றேல் வெற்றியில்லை.. வரலாறில்லை. நாம் போராடித்தான் ஆக வேண்டும் வாழ வேண்டின். அதுதான் இயற்கையின் விதிப்பே..! மரணத்தை தவிர்த்து யாரும் வாழ்ந்திட முடியாது உலகில்.ஆகவே மரணத்துக்காக கவலைப்படுவதிலும் சாதிப்பதில் கவனம் செலுத்துவதே சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பை எழுத முதல் சற்று யோசித்திருக்கலாம் என்பது எனது கருத்து.

மாவிரர்களை நினைத்து கவலைப்படுவதால் நாம் அவர்களிற்கு மரியாதை செலுத்தி விடமுடியாது.

நான் தாயகத்திற்கு சென்ற பொழுது எத்தனையோ மாவீரர்களின் குடும்பங்களை பார்த்திருக்கிறேன். யாரும் கவலைப்பட்டதில்லை. அவர்களின் பேச்சில் மாவீரர் ஆகிய அவர்களின் பிள்ளைகளை நினைத்து பெருமையடைவதை உரணமுடியும். கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்களில் வாழ்கின்ற அவர்களின் பிள்ளைகளை நினைத்து கவலைபடுவதை விட பெருமைப்படுவதே சரியானது.

இருட்டில் இருப்பவனுக்கு திடீரென வெளிச்சம் வந்தது எப்படி சந்தோசப்படுவானே அதே போல் தான்நேற்று நடந்த தாக்குதலை நினைத்து நாம் சந்தோசப்பட்டதும். வெளிச்சத்தை எமக்கு தந்துவிட்டு அளிந்துபோன இருட்டை நினைத்து நாம் கவலைபடுவதை விட வெளிச்சத்தின் அருமையை எமக்கு உணர்த்திய இருட்டிற்கு நன்றி சொல்லி தொடர்ந்து பயணிப்பதே சிறந்தது.

இங்கு கவலைப்படாதவர்கள் யாருமே இல்லை! ஆனால் இந்த விமானங்கள் அழிந்ததால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதனை நினைத்து சந்தோசமடைவோம்.

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் தங்களுடைய மனச்சாட்சியை பார்த்துக்கேட்கவேண்டிய கேள்விகள் கலைஞன்.

அதுசரி, அப்ப நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்????

எனக்குத்தெரிந்தவரையில், இந்த புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கட்டுப்பாடான சட்டதிட்டங்களுக்கு

மத்தியிலும் பல உள்ளங்கள் நேரகாலம் பாராது மலரப்போகும் எமது தாயகத்திற்கான தமது பணிகளை

செய்துகொண்டுதான் இதுக்கிறார்கள்.நான் சொல்வது,மாதா மாதம் 25,50 ,யோ கொடுதுப்போட்டு--

இது தான் தாயகப்பணி என்று நினைப்பவர்களை பற்றியோ அல்லது வாய் கிழிய கதைப்பவர்களை பற்றியோ அல்ல....

நீங்கள் எவ்வளவு காலமாய் புலத்தில் வாழ்கிறீர்கள் ஏன்று எனக்குத்தெரியாது,ஆனால் நேற்று நடந்த

சம்பவத்திற்குப்பிறகுதான் உங்கள் மனச்சாட்சி திறந்திருக்குதென்றால்,வரவேற

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் கூறுவது சரிதான்..

நாம் இன்றைய நாளையே எண்ணி வாழப்பழகிவிட்டோம்.

ஒரு காலத்தில் இந்த பூமியில் நாம் இருக்கப்போவதில்லை இது

ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது.

சும்மா வாழ்தோம் திண்டோம் செத்தோம் என்பதை விட

வீரனாக மடிவது மேல்.. எமக்கு அந்த துணிவு இருந்தால்

ஏன் இங்கு ஓடிவரபோகிறோம்...??

அந்த வீரர்களின் தியாகத்தை மெச்சி தலைவணங்குவதை தவிர

என்னால் எங்களால் என்ன செய்யமுடியும்..

வீரவணக்கம் சொல்லக்கூட எனக்கு தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

மாவீரர்கள் தாங்களாக எடுத்த முடிவு அதாவது நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென்று.இதன் மூலம் புலத்திலோ அல்லது வெளி நாடுகளிலோ வாழும் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமென்று உத்வேகம் வருமேயொழிய சாவை பற்றி அல்லும் பகலும் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்.சும்மா வீதியால் நடந்து போகும் போது பின்னால் வந்து காரால் மோதி சாகிறோம்.அந்தளவுக்கு மனித உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஏதாவது நாட்டுக்கு செய்து விட்டு இறப்பது எவ்வளவோ மேல்.

மாவீரர்கள், எனது குடும்பத்திலும், நண்பர்களின் குடும்பத்திலும் உள்ளார்கள்.ஆனால் மாவீரர்களின் இறப்பு குறித்து எந்த வித சலனமும் இல்லாமல் இருக்கும் அவர்களின் பெற்றோர் மாறாக மிக உறிதியாகவே உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்புடிச் சொல்லிச் சொல்லியே புலத்தில நாங்க சொகுசா வாழுவம்....... வெற்றி வந்தொடன துள்ளிக்குதிப்பம்..... வீரர்கள் இறந்தோடன ஒப்புக்கு கவலப்படுறம் எண்டுவம்...... அடுத்த நாள் வழமையான வாழ்க்கை..... இன்ரர்நெட்..... அரட்டை...... நாடகம்...... சினிமா...... எங்களுக்காக அவங்கள் ஏன் சாகோணும்? எங்களுக்காக அவங்கள் ஏன் போராடோணும்????????????????????? எங்களுக்காக நாங்கள் எப்ப போராடுறது?????? அதுசரி..... நாங்க சாப்பிட்ட கோப்பையை நாங்க கழுவவே பஞ்சிபடுற எங்களுக்கு எங்கட விடுதலைக்கு நாங்களே போராட எப்பிடி மனசு வரும்............................

புலத்தில இருக்கிற ஆக்கள் இங்க இருந்து கொண்டே தலைவரின்ர கரத்த பலப்படுத்தலாம் எண்டு சொல்லிக்கொண்டு வேளைா வேளைக்கு திண்டுகொண்டும் வேளா வேளைக்கு கதை அளந்துகொண்டும் திரிவம் நாங்கள். எங்களுக்கென்ன.... எத்தனை விமானம் உடைஞ்சதெண்டுறது தானே எங்களுக்கு முக்கியம்..... எத்தின ஆமிக்காரர் செத்தவை எண்டுறது தானே எங்களுக்கு முக்கியம்........................... எத்தின காம்ப் அடிச்சது எண்டது தானே எங்களுக்கு முக்கியம்..................... அதுக்காக எத்தினை பேர் செத்தா எங்களுக்கென்ன............... எங்கட பிள்ளையள் யூனிவர்சிட்டில படிக்குது........................... எங்கட பிள்ளை நோக்கியால வேலை செய்யுது........................ எங்கட பிள்ளை மெடிசின் படிக்குது....................... எங்களுக்கு பிரான்ஸ் குடியுரிமை கிடைச்சிட்டு.............................. நாங்கள் சொந்தமா ஒரு வீடு வாங்கிட்டம்...................... உங்களுக்கு தெரியுமோ???? நாங்கள் ரண்டு கார்ட் போடுற ரிசீவர் வாங்கிட்டம்............. அதில இப்ப சன் ரிவியும் பாக்கலாம்........ ஜெயா ரிவியும் பாக்கலாம்..................... நாங்கள் அடுத்த லீவுக்கு கனடா போவமா லண்டன் போவமா எண்டு யோசிச்சு கொண்டிருக்கிறம்.............. வேற என்ன புலியள் மாவீரர் நாளுக்கு முதல் இன்னுமொருக்கா விமானத் தாக்குதல் நடத்துவாங்களோ?????? சும்மா சொல்க்கூடாது....... புலியளின்ர கரும்புலியணி உலகத்திலயே பலமிக்கது தெரியுமோ?????? சும்மா 12 ....18 விமானங்கள சுக்கு நூறாக்கிட்டாங்களாம்........ இனி என்ன இப்பிடியே புலியள் பலத்தோட போனா கிட்டடில தமிழீழம் கிடைச்சிடும்...................... அதுக்கு பிறகு பிள்ளையள இங்க விட்டிட்டு நாங்கள் ஊருக்கு போவம்........... அங்க ஒரு காணி ஒண்டு வாங்கி போட்டிருக்கிறம்..... ஒரு வீட்ட கட்டி கடைசிக் காலத்தில அங்க இருக்குலாம்...... நல்ல காத்தோட்டம்தானே அங்க....... வருத்தங்களும் இங்க கூடிப்போச்சு.......... பிள்ளையளும் விரும்பினா அங்க வரட்டும்............படிப்ப முடிச்சுப்போட்டு.................... இங்க உழைச்ச காசில அங்க ஒரு கம்பனிய தொடங்கி சீவிக்கலாம் தானே................. *** :D

*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

அடிப்படைகளில் இருந்து இவ்விடயத்தை அணுகுதல் பொருந்தும். முதலில் தமிழர் போராட்டம் என்பது உண்மையில் எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பில் எமது நம்பிக்கைகளை நாம் பரிசீலித்தல் அவசியம். தமிழர் போராட்டம் ஆசையினால் அல்லது பேராசையினால் உந்தப்பட்டதா? அல்லது அவசியத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டதா? என்பது தொடர்பில் எமது மனதிற்குள் முதலில் நாம் ஒரு தளம்பலற்ற முடிவு நோக்கி எம்மோடு நாமே விவாதிக்க வேண்டும்.

எப்போதுமே ஒரு விடயத்தின் முக்கியம் பற்றிய பரிசோதனையானது, சமன்பாட்டில் இருந்து அவ்விடயத்தை நீக்கிவிட்டுப் பார்க்கும் ஒரு படிமுறையையும் கொண்டிருக்கும். அவ்வகையில், எமது போராட்டம் தொடங்கப்பட்டிராவிடின் எமது நிலை எவ்வாறிருக்கும் என்று முதலிலும், எமது போராட்டம் தற்போது நிறுத்தப்பட்டால் எமது நிலை எவ்வாறிருக்கும் என்பதை இரண்டாவதாகவும் நாம் எமக்குள் ஆராய்வது அவசியம். இம்முனைகளில் ஆராயும் போது, சிங்கள பேரினவாதம் என்பது எமது நிலங்களை அபகரித்தல் என்பதற்கும் மேலால் எம்மை அப்புறப்படுத்தல் என்றொரு ஆசையினையும் கொண்டிருப்பதோடு அவ்வாசையை நோக்கி எப்போதுமே தொழிற்பட்டும் வந்துள்ளது என்பது வெளிப்படையாகும்.

சிங்கள பேரினவாதத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் இலங்கைத்தீவில் இருந்து முற்றாக அழித்தொழிக்கப்படவேண்டும் என்பது மாற்றங்களிற்கப்பாற்பட்டதாய

Link to comment
Share on other sites

இப்புடிச் சொல்லிச் சொல்லியே புலத்தில நாங்க சொகுசா வாழுவம்....... வெற்றி வந்தொடன துள்ளிக்குதிப்பம்..... வீரர்கள் இறந்தோடன ஒப்புக்கு கவலப்படுறம் எண்டுவம்...... அடுத்த நாள் வழமையான வாழ்க்கை..... இன்ரர்நெட்..... அரட்டை...... நாடகம்...... சினிமா...... எங்களுக்காக அவங்கள் ஏன் சாகோணும்? எங்களுக்காக அவங்கள் ஏன் போராடோணும்????????????????????? எங்களுக்காக நாங்கள் எப்ப போராடுறது?????? அதுசரி..... நாங்க சாப்பிட்ட கோப்பையை நாங்க கழுவவே பஞ்சிபடுற எங்களுக்கு எங்கட விடுதலைக்கு நாங்களே போராட எப்பிடி மனசு வரும்............................புலத்தில இருக்கிற ஆக்கள் இங்க இருந்து கொண்டே தலைவரின்ர கரத்த பலப்படுத்தலாம் எண்டு சொல்லிக்கொண்டு வேளைா வேளைக்கு திண்டுகொண்டும் வேளா வேளைக்கு கதை அளந்துகொண்டும் திரிவம் நாங்கள். எங்களுக்கென்ன.... எத்தனை விமானம் உடைஞ்சதெண்டுறது தானே எங்களுக்கு முக்கியம்..... எத்தின ஆமிக்காரர் செத்தவை எண்டுறது தானே எங்களுக்கு முக்கியம்........................... எத்தின காம்ப் அடிச்சது எண்டது தானே எங்களுக்கு முக்கியம்..................... அதுக்காக எத்தினை பேர் செத்தா எங்களுக்கென்ன............... எங்கட பிள்ளையள் யூனிவர்சிட்டில படிக்குது........................... எங்கட பிள்ளை நோக்கியால வேலை செய்யுது........................ எங்கட பிள்ளை மெடிசின் படிக்குது....................... எங்களுக்கு பிரான்ஸ் குடியுரிமை கிடைச்சிட்டு.............................. நாங்கள் சொந்தமா ஒரு வீடு வாங்கிட்டம்...................... உங்களுக்கு தெரியுமோ???? நாங்கள் ரண்டு கார்ட் போடுற ரிசீவர் வாங்கிட்டம்............. அதில இப்ப சன் ரிவியும் பாக்கலாம்........ ஜெயா ரிவியும் பாக்கலாம்..................... நாங்கள் அடுத்த லீவுக்கு கனடா போவமா லண்டன் போவமா எண்டு யோசிச்சு கொண்டிருக்கிறம்.............. வேற என்ன புலியள் மாவீரர் நாளுக்கு முதல் இன்னுமொருக்கா விமானத் தாக்குதல் நடத்துவாங்களோ?????? சும்மா சொல்க்கூடாது....... புலியளின்ர கரும்புலியணி உலகத்திலயே பலமிக்கது தெரியுமோ?????? சும்மா 12 ....18 விமானங்கள சுக்கு நூறாக்கிட்டாங்களாம்........ இனி என்ன இப்பிடியே புலியள் பலத்தோட போனா கிட்டடில தமிழீழம் கிடைச்சிடும்...................... அதுக்கு பிறகு பிள்ளையள இங்க விட்டிட்டு நாங்கள் ஊருக்கு போவம்........... அங்க ஒரு காணி ஒண்டு வாங்கி போட்டிருக்கிறம்..... ஒரு வீட்ட கட்டி கடைசிக் காலத்தில அங்க இருக்குலாம்...... நல்ல காத்தோட்டம்தானே அங்க....... வருத்தங்களும் இங்க கூடிப்போச்சு.......... பிள்ளையளும் விரும்பினா அங்க வரட்டும்............படிப்ப முடிச்சுப்போட்டு.................... இங்க உழைச்ச காசில அங்க ஒரு கம்பனிய தொடங்கி சீவிக்கலாம் தானே................. ***

*** இப்படி எழுதுவதால் நீங்களோ நானோ வித்தியாசப்பட போவதும் இல்லை.......இப்படி எழுதுவதே மற்றவர்களை முட்டாள் ஆக்கி தன்னையும் முட்டாள் ஆக்குவதே என்னால் முடியாததை அவர்கள் செய்கிறார்கள்.உங்களால் முடியாததையும் அவர்கள் செய்கிறார்கள். எல்லாரும் எல்லார ஆக முடியாது குறிப்பாக கரும்புலிகளின் இறப்பை வைத்து மற்றவர்களை தாக்குவது பூனையின் குணம் அல்லா அது நரிதான் செய்யும்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இப்படியே பேசிக்கொண்டு அடிபட்டுக்கொண்டு இருப்பம்.

அப்படியே தமிழீழம் கிடச்ச பிறகு அதையும் இரண்டா பிரிச்சு ஒன்டு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மற்றது ஈழத்து தமிழர்களுக்கு என்டு கொண்டாடுங்கோ....

Link to comment
Share on other sites

"எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி.

வெற்றி கொள்ளும் போது சந்தோசம் அடைவது மனித இயல்பே.அதே நேரம் தோல்வியடையும் போது மனசோர்வடவதும் மனித இயல்பே.

"ஆனால், நாங்கள் இந்தப் போரினால் வரும் அழிவுகளை, துயரங்களை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கின்றோமா? பெரிய அளவில் உயிர் இழப்புக்கள் வரும்போது உங்களில் எத்தனை பேரால் வெற்றியைப் பார்த்து சந்தோசப் படமுடியும்?

போர் மூலமே தீர்வு என்று விரும்புபவர்கள், போரின் போது வரும் அழிவுகளை, துன்பங்களை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றீர்களா?"

போரை யார்தான் விரும்புவார்கள்? போரின் கொடுமையை எமது மக்கள் 30 வருடங்களாக அனுபவிக்கிறார்கள்.அவர்கட்கு இப்பொழுது வாழ்க்கையோடு ஒன்றாகி விட்டது. ஊரில் இருக்கும் அம்மா அப்பாவோடு உரையாடிய போது "என்ன ஆக மிஞ்சினால் 4 குண்டை மேலே இருந்து போடுவாங்கள் பங்கர் வெட்டி வைச்சிருக்கிறோம் இதற்கு மேலும் சாக வேண்டுமென்று விதியிருந்தால் என்ன செய்வது.சாவகச்சேரியில் ஒவ்வொரு வீடாக அழித்த போதே நாங்கள் சாகவில்லை இனி இவக்கட குண்டுக்கு நாங்கள் சாவம் எண்டு நாங்கள் நினைக்கவில்லை என்று அம்மா மன உறுதியோடு கூறுகின்றார்."வயோதிப அம்மாவுக்கே இந்த துணிவென்றால் இளையர்களை சொல்ல தேவையில்லை.

"எனது மனச்சாட்சியைப் பொறுத்த அளவில் இப்படி இந்த இளம் வயதில் அவர்கள் கரும்புலிகளாக இருக்கட்டும், சாதாரண போராளிகளாக இருக்கட்டும் தமது வாழ்வை போரிற்கு ஆகுதி ஆக்கிக்கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்னொருவன் தனது குருதியை சிந்தி உருவாக்கும் வெற்றி மூலம் நான் எப்படி வெளிநாட்டில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு கொண்டாடி மகிழ முடியும் என்று எனக்கு தெரியவில்லை."

என்னாலும் சீரணிக்க முடியவில்லை.ஆனால் ஆயுதம் தூக்குவதால் மட்டும் போராட்டம் நிறைவடையப்போவதில்லை.வெளி நாடுகளில் இருந்து பண உதவியீறாக நிறையவே செய்யலாம்.குறிப்பாக கலைஞன் போன்ற மாணவர்கள் தமது வெளி நாட்டு நண்பர்களிடம் சிறிலங்கா அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தலாம்.ஒரு நாடு உருவாவதற்கு வெளி நாட்டு ஆதரவு என்பது இன்றியமையாதது.

"நேற்று பத்து விமானங்கள் அழிந்து போனால், நாளைக்கு இருபது விமானங்களை சிறீ லங்கா அரசாங்கம் கடனுக்கு வாங்கி தமது பலத்தை மீண்டும் இரட்டிப்பு செய்யப் போகின்றார்கள். சிறீ லங்கா அரசுக்கு இப்போது ஏற்பட்டு இருப்பது ஒரு தற்காலிக மந்தநிலையே."

கட்டு நாயக்கா விமான நிலையம் தாக்கப்பட்ட பின்னர் தான் பேச்சுவார்த்தைக்கு அரசு ஒத்துக்கொண்டது.இவர்கட்கு அடியை தவிர வேறொரு வகையிலும் விளங்கப்படுத்த முடியாது என்னும் போது தமிழ் மக்களிடம் எந்த தெரிவும் இல்லை.தமிழ் மக்கள் போர் பிரியர்கள் அல்ல. மாறாக அவர்கள் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது.மேலும், 10 அல்ல 20 விமானத்தையும் வாங்கட்டும். ஒரு சில மாதங்களுக்கு முன் எத்தனை விதமான ராடார்களை எத்தனை நாடுகளிடம் மகிந்த பிச்சை கேட்டு வாங்கினார்.அவர்களால் புலிகளின் வாலை கூட பிடிக்க முடியவில்லை.இது எமக்கு வெற்றி நெருங்குகிறது என்ற சமிக்ஞையாக கூட எடுக்கலாம்.

"எனக்குள் ஆயிரம் கேள்விகள்... பதில் தெரியவில்லை. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். அவ்வளவுதான். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்."

எவ்வளவோ மேடு பள்ளங்களை தமிழ் மக்கள் தாண்டி விட்டார்கள்.எனது வயோதிப அம்மாவுக்கே இந்த மிடுக்கு இருக்கும் போது ஓட்டு மொத்த தமிழ் மக்களுக்கு எந்தளவு மிடுக்கு இருக்க வேண்டும் கலைஞன்?

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர் நானும் எனது மனசாட்சிக்கு பட்டதை எழுதுகின்றேன்.

இன்று இருபத்தொரு கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியது ஒரு வேதனையான சம்பவமாக உள்ளது மறுக்க முடியாதது ஆனால் நேற்று முல்லையில் அறுபது சிறுமிகள் சிதறிப்பலியானபோதும் வேதனையாக உள்ளது.

நேற்று அவர்கள் இறந்தபோது சர்வதேசம் சிங்கள அரசின் கண்மூடித்தனமாக குண்டுவீச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா?

சர்வதேசங்களில் வாழும் எமது உறவுகளில் ஐந்து வீதமான சனங்களும் கிளர்ந்து எழுந்து கண்டன ஊர்வலங்கள் செய்யவில்லை. சர்வதேசத்தின் மனச்சாட்சியை போதுமானதாக உலுப்பவில்லை.

இவை இரண்டும் நியாயமான முறையில் நடந்திருந்தால் இன்று இந்த இருபத்தொரு செல்வங்களையும் இழந்திருக்க தேவையில்லை.

சிங்களம் என்னும் இருபது விமானம் வாங்கலாம் என்னும் இருபது புலிகள் தம்மை ஆகுதியாக்கலாம் இல்லையேல் முல்லையில் நவாலியில் என்னும் ஆயிரக்கணக்கான குண்டுவீச்சுக்களில் கொல்லப்படும் மக்கள் போல் சாகலம். உலகில் உள்ள ஏனைய இனங்களைப்போல் எம்மினமும் வாழத்தான் பிறந்தது. அதற்காக முயற்சிப்பார்கள். அந்த முயற்சிக்கு என்னால் என்ன ஆதரவை வழங்க முடியுமோ அதுவே சிறந்தது தவிர வேறு ஒரு மார்க்கத்தையும் யாரும் எமக்கு வழங்க முன்வரவில்லை.

நான் கவலைப்படவில்லை என்று சொல்லவில்லை ஆனால் அழுது கொண்டு அவர்கள் தியாகத்தை ஏற்றுக்கொள்கின்றேன். அழுகையோடு மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் நிறுத்திவிட்டால் முல்லை படுகொலைபோல் ஆயிரம் படுகொலைகளை ஏற்றுக்கொண்டவன் ஆகிவிடுவேன். புலம் பெயர் நாட்டில் இருந்து கொண்டு தமிழனுக்கு எவ்வகையான நீதியும் நியாயமும் இலங்கை அரசாலும் சர்வதேசத்தாலும் வழங்கப்படுகின்றது என்று தெரிந்து கொண்டு எம் இனம் வாழ முற்படும் முயற்சியில் கேள்வி தொடுக்க என் கண்ணீரால் முடியாது. என் மனவேதனையால் முடியாது. ஏனெனில் என்னை விட அதிகம் எம் மக்களைப்பார்த்து அழக்கூடியவன் என்னவிட அதிகம் எம்மக்களை நேசிப்பவன் தான் கரும்புலியாகி போகின்றான்.

Link to comment
Share on other sites

Mr.கலைஞன்,

எந்த ஒரு மனித இனமும் இப்படித்தானுங்கோ.

உதைத்தானுங்கோ மனிதம் எண்டும் சொல்லுவாருங்கோ.

உங்கடை கதையை பார்த்தால்.......

நிர்வாணஊருக்கு போன கோவணகுண்டியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகுது.

:D

Link to comment
Share on other sites

கலைஞன் இதைக்கருத்தாகச் சொல்லவில்லை. ஒரு கதைக்குச் சொல்லியிருக்கிறார். மரணிப்பதற்கு யாருக்கு விருப்பமுண்டு. அப்படியிருக்க இவர்களேன் யாருக்காக இறக்க வேண்டும். இதுதான் இவரது முக்கிய கேள்வி. நாம் புலத்திற்கு ஓடிவந்துவிட்டோம். நாம் மட்டுமா தமிழர். களத்தில் தமது வாழ்வைத் தேடிக்கொண்டு நிற்கிறார்களே அவர்கள் என்ன செய்வது.

இழப்பின்றி எதனையும் பெற்றுவிட முடியாது. இது எந்த இடத்திற்கும் பொருந்தும். சுதந்திரம் விடுதலை என்பன உணர்வுகள். அவைகளைப் பெறவதற்கு போராடித்தானாகவேண்டும். அதில் மரணமும் ஏற்படும். இந்த வீரர்கள் யாருக்காக மரணிக்க வேண்டும். தங்களின் எதிர்காலச் சமூகத்திற்காக. நம்பிக்கையுடன் போராடும் அவர்களிடத்தில் ஏற்படாத தளர்வு, எப்படி இங்கு வந்தது.

Link to comment
Share on other sites

நிர்வாணஊருக்கு போன கோவணகு**யின் கதைதான் ஞாபகத்துக்கு வருகுது.

பனங்காய் அண்ணை, அது என்ன நிர்வாணஊருக்கு போன கோவனகு**யின் கதை? எங்களுக்கும் சொல்லுங்கோ. இந்தக்கதையை இதுவரை நான் கேள்விப்படவில்லை.

Link to comment
Share on other sites

என்ன இருந்தாலும் கலைஞனின் ஆதங்கத்தை நாம் சரியாக புரியாமல்தான் பதில் கருத்துக்களை முன் வைக்கின்றோம் என்பது எனது கருத்து.

இதில் நாம் இரண்டு வகையான முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

(1) மனிதாபம் என்ற கோணத்திலும்

(2) விடுதலை உணர்வு அல்லது யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் உங்களுடைய ஆதங்கம் புரிகிறது இருந்தும் நாம் அப்படியான சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளோம் சிங்கள பேரினவாத சக்திகளாள்.தேசியதிற்காக உயிர் துறந்த அந்த தியாக தீபங்களை பற்றி புலத்தில் இருக்கும் எமக்கு பேசுவதிற்கு கூட தகுதி இல்லை.

ஆனால் புலத்தில் வாழும் அநேகர் இப்படியான வெற்றி கிடைக்கும் போது தாங்கள் நின்று சண்டை பிடித்தவர்கள் போல்,எங்கன்ட பெடியள் அடித்து போட்டாங்கள் இவங்களுக்கு இப்படி தான் அடிக்க வேண்டும் என்று வீரம் பேசுவார்கள்.ஆனால் இதே கூட்டம் (வர்க்கம்) நாளைக்கு கிரிகேட் நடைபெற்றால் சிங்களவனின் கொடியும்,டீசேட்டும் போட்டு பைலா பாட்டு பாடி கொண்டு முன்னுக்கு நிற்பார்கள்.இந்த வர்கதிற்கு எங்கையும் எதிலும் வெற்றி பெற வேண்டும் அதை நாலு பேருடன் பகிர வேண்டும் என்ற ஆசை.உணர்வுபூர்வமாக சிந்திக்கமாட்டார்கள்.தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவடிவில் மட்டும் பிறந்தால் மட்டுமே மனிதனாகிவிடலாம் என்று பலரும் நினைக்கின்றார்கள்........ மனிதம் என்பது மிருகநிலைக்கு மேன்மையானது என்ற உட்பொருளை புரியாதவரை "மனிதம்" என்ற நிலையை பற்றி பல வித்தியாசமமான ஒன்றொடு ஒன்று முரண்பட கூடிய கரத்துக்களை முன்நிறுத்தலாம். அப்டியானால்........................

"மகான்கள்" "மாவீரர்கள்" என்ற நிலைமை மனித நிலைமைகளில் இருந்து எவ்வளவோ மேன்மையானது அதை எளிதாக யாராலும் எட்டிவிட முடியாது. அதற்கான விலையையும் வலுவையும் பெற்று அதை வாங்க சக்த்தியுடையவர்களாலேயே அதை சாதிக்க முடியும். அப்படியான மாவீரர்களின் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே எனக்கு மகிழ்சியை தர கூடிய ஒன்றாக இருக்கிறது............. தமிழ் மக்கள் இன்னலற்ற மகிழ்வான வாழ்வை பெறவேண்டும் என்பதற்காகவே அவர்கள் மாவீரராக பிறப்பெடுக்கிறார்கள் மனித வாழ்வை புதைக்கிறார்கள் ..............

Link to comment
Share on other sites

அனைவரினதும் அக்கறையான கருத்துக்களிற்கு மிகவும் நன்றி!

நான் எனது மனச்சாட்சியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவுதான். ஒவ்வொருவருக்கும் சுயமாக சிந்தனை செய்வதற்கு, தீர்மானங்கள் எடுப்பதற்கு பூரண சுதந்திரம் உண்டு. ஒருவருக்கு சரி என்று தோன்றும் விடயம் இன்னொருவருக்கு பிழையாக தோன்றுவது இயல்பு.

என்னைப் பொறுத்தளவில் எனது மனச்சாட்சிப்படியே எனது வாழ்க்கையை வாழமுடியும். உங்கள் மனச்சாட்சிக்கு எது சரியென்று தோன்றுகின்றதோ அதன்படி நீங்கள் வாழுங்கள்! நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்றால் உங்களால் தமிழீழம் அங்கிகரிக்கப்பட்டாலும் சந்தோசப்படமுடியாதா? நீங்கள் சந்தோசப்படுகின்ற ஒரு சில விடயங்களை சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படிப் பார்க்கப்போனால் நாம் எமது வாழ்வில் எந்த ஒரு விடயத்திற்கும் சந்தோசப்படவே முடியாதே.

ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற முடியும் என்பது இயற்கை என்றே நான் நினைக்கின்றேன்.

இரவை இழந்து பகலை பெறுகின்றோம்...

காசை இழந்து பொருளை பெறுகின்றோம்...

உழைப்பை இழந்து பலனை பெறுகின்றோம்...

இளமையை இழந்து முதுமையை பெறுகின்றோம்...

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். இழந்தவற்றை நினைப்பது இயல்பு. அதற்காக பெற்றுக்கொண்டதை நினைத்து சந்தோசமடைவதும் இயல்பு. இங்கு யாரும் கரும்புலிகளை நினைக்காமல் இல்லை!

Link to comment
Share on other sites

கலைஞனின் ஆதங்கம் தவறாக விளங்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தில்....

ஈழவிடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகள் தோன்ற வேண்டிய நிர்ப்பந்தம் எமது பலவீனத்தை நிவர்த்தி செய்யவே. இந்த நிர்ப்பந்தங்களின் தன்மையை தாக்குதல் அறிமுகமான 1987 இன் சூழல் முதல் பின்னர் கடலிற்கு விரிவாகி இறுதியில் கொமாண்டா பாணியாக மாறிய ஒவ்வொரு படிநிலைகளிலும் காணலாம்.

அதே போல் கரும்புலிகளின் ஆரம்ப தரைத் தாக்குதல் வடிவங்கள் அண்மைய காலங்களில் தோவை அற்றுப் போனதற்கு காரணமும் அந்த தேவைகளை மரபுவழியில் நிவர்த்தி செய்யும் வளங்களை புலிகள் பெற்றுக் கொண்டது தான். அதே போன்று கடலில் கரும்புலித்தாக்குதல்களின் தேவையை குறைத்தது கடற்புலிகளின் தாக்குதல் படகுகளின் வேகம் அவற்றில் உள்ள சுடுகலன்களின் திறன்களிற்கும் சிறீலங்கா கடற்படை அதிவேகத் தாக்குதல் படகுகளின் சம்பந்தப்பட்ட திறன்களோடான இடைவெளி குறைந்ததால். ஆனால் இந்த நிலமை மாறலாம் சிறீலங்க கடற்படைகள் தரத்தை உயர்த்தும் போது. இது வழமையாக பகமையான அல்லது யுத்தத்தில் ஈடுபடும் தரப்புகளிற்கு மத்தியில் உள்ள ஆயுதப் போட்டி.

இலங்கைத் தீவில் உள்ள மிகவும் சிறப்பான precision weapon கரும்புலிகள் தான் என்று பிதற்கு கொள்ளும் புலம்பெயர்ந்தவர்கள் கூட இருக்கிறார்கள். கரும்புலிகளாக தியாகம் செய்ய போராளிகள் தயாராக இருக்கிறார்கள். என்பதால் எமது பலவீனங்களை அவர்களது தியாகத்தால் தொடர்ந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்ற மாயை இருக்கக் கூடாது.

சுதந்திரப் பிரகடனத்திற்கு பஞ்சாங்கத்தில திகதி தேடுற கூத்துக்கு முதல் சிறுவர் ஆட்ச் சேர்ப்பு என்ற பிரச்சாரம் போல் கரும்புலிகள் என்பது தற்கொலைப் படை என்ற பரவலான முத்திரை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். கரும்புலிகள் என்பது அதி உச்ச தியாகத்திற்கு தயாரானவர்களை கொண்ட விசேட படையணியாக மாற்றம் அடைய அவர்களது தற்கொலை நிர்ப்பந்தங்களை முடிவுகட்டுவதற்குரிய தொழில்நுட்ப ரீதியான மாற்றீடுகள் தேவை. இவற்றை அடைவதற்கு புலம்பெயர்ந்தவர்களின் அறிவியல் ரீதியான பொருளாதார ரீதியான பாரிய பங்களிப்புகள் முக்கியம்.

தமிழர்கள் எண்ணிக்கையில் சிங்களவர்களை விட 3...4 மடங்கு பலவீனமானவர்கள். எனவே தொழில்நுட்பரீதியில் மேலாண்மை நிலை நிறுத்துவதால் தான் வலுச் சமநிலையைப் பேண முடியும். பலமடங்கு அரபியர்களால் சூழப்பட்ட இஸ்ரேலியர்களிற்கும் இந்த நிலை தான். இஸ்ரேலியர்கள் தமது இனத்தவர்களில் 1...2 பேர் இறந்தாலே அதை பெரிய விவகாரமாக்கி அதை பாதுகாக்க தமது பொருளாதார தொழிநுட்ப வழங்களை பயன்படுத்தி ஆபத்துகளை நீக்குகிறார்கள் அல்லது மந்தப்படுத்துகிறார்கள். ஆனாம் நாமோ கொத்துக் கொத்தாக மக்களின் உயிர்களையும் கொடுக்கிறம் அதற்கு பின்னர் போராளிகளாகவும் கொத்து கொத்தாக கொடுக்க வேண்டியிருக்கிறது.

இதை ஒண்டைக் கொடுத்துத்தான் இன்னொன்றை பெறலாம் என்ற மோலோட்டமான வியாக்கியானத்திற்கு அப்பால் எமது வளங்கள் எல்லாம் முடியுமான அளவு திசை திருப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு அதற்கும் அப்பால் தான் அதி உச்ச அர்பணிப்புக்கு தயாரானவர்களை இழக்க வேண்டி இருக்கிறதான் என்று இதய சுத்தியுடன் ஒவ்வொருவரும் கேளுங்கள்?

எமது சனத்தொகையின் பலவீனத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த போக்கு தக்க வைக்கப்படக் கூடியதா என்று சிந்தியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது.. புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும் ரெக்குனோலொஜி படிச்சி.. மிசைல்ஸ் செய்து.. கட்டுநாயக்கா உட்பட எல்லா விமான நிலையங்களையும் தாக்கி அழிப்பம் வாங்கோ..! தலைவருக்கு மிசைல்ஸ் செய்து அனுப்புவமா..??! சீக்கிரம் கிளம்புங்கோ. சும்மா.. றோட்டில நின்று கரும்புலியலைப் பற்றி பறைஞ்சு பறைஞ்சே புலம்பெயர்ந்து ஓடிவாங்கோ... மிசைல்ஸ் செய்து அனுப்புவம்.

ஏனென்னா சிங்களவன் குறட்டை விடுறான்.. இந்தியன் தூக்கில தொங்கிறான்.. அமெரிக்க.. செவ்வாய்க்குப் போட்டான். பூமியே புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆராய்ச்சிக் கூடமாத்தானே இருக்குது. நீங்க தான் இன்னும் தெளியுறீங்க இல்ல.

லண்டன் தமிழ் கடைகளில உள்ள உழுத்துப்போன அரசி மாவை பை வன் கெற் திறிக்கு போட்டு அதில வாற காசில பலஸ்ரிக் மிசைல் செய்து ராஜபங்கசமேல வீசி விளையாடுவம் வாங்கோ...!

குந்தி இருந்து பட்டனைத் தட்ட அது போய் அடிக்க.. ஈழம் கிடைக்கும். ஒருத்தரும் சாகாமல்.. ஈழம் எடுக்கலாம். பிரபாகரனுக்கும் பொட்டமானுக்கும் உந்த வித்தை தெரியல்ல. நாங்கள் புலம்பெயர்ந்து சும்மாவே இருந்தம். குவாண்டம் ரெக்குனோலொஜி படிச்சு.. சற்றலைட் கொம்முனிகேசனில.. எலக்ரோ மைக்னற்றிவ் வேவை பற்றி ஆராய்ஞ்சி.. இப்ப மிசைல் செய்திட்டு இருக்கம். பிரபாகரன் இப்பதான் இரண்டாம் உலக யுத்த காலத்தில நிற்கிறார். ஜப்பான் காரன் அமெரிக்காவிட பலம் தெரியாம.. தற்கொலை விமானத்தாக்குதல் நடத்தினது போல.. கரும்புலி அனுப்பி உயிரோட விளையாடுறார்.

புலம்பெயர்ந்த அதி புத்திசாலிகளான எங்கட திட்டத்துக்கு ஆனந்த சங்கரி அம்மானும் கருணா அம்மானும் டக்கிளசின் பிசாக் கடைகளும்.. தங்க சொத்தை வித்து பவுன்ஸ் டொலர் என்று தருகினமாம். மிசைல்ஸ் லண்டன் கைப்பார்க் கோணர்ல இருந்து விரைவில் கட்டுநாயக்கா நோக்கி ஏவப்பட இருக்குதாம். அடுத்த கட்டமா ரொரண்டோ.. சிட்னி என்று தொடர்சியா அடிச்சு.. ரொக்னோலொஜியாலயே ஈழம் எடுக்கப் போறம்.. எல்லாரும் ஓடி வாங்கோ.. ஆதரவு தாங்கோ. சிறீலங்கா ஆனை மார்க் சோடாவை தூக்கி உடைச்சுப் போட்டு.. கொக்ககோலா சகிதம் ஓடி வாங்கோ. அதை மறந்திடாதேங்கோ. ஆனை மார்க் பொருளாதாரத்தில தான் ராஜபங்ச சாப்புடுறார். அதை நாங்க புறக்கணிச்சிட்டா.. அவருக்கு சாப்பாடே கிடைக்காது. மிசைல்ஸ் வந்து இறக்கிற சத்தம் கூடக் கேட்க சக்தி இருக்காது. எங்க திட்டம் பெரு வெற்றியாகும் என்பதில நம்பிக்கையோட இருக்கிறம். புலம்பெயர்ந்தவை *** ரெக்னோலொஜி படிங்க.. நமக்கு உதவுவீங்க மிசைல்ஸ் செய்யுறதில. :lol:<_<

*** கள விதிகளுக்கமைய தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இத வாசிக்க  வாசிக்க எனக்கு அந்த தம்பியின்ரை நினைப்புத்தான் வருது. அந்த தம்பியும் உப்புடித்தான் அச்சு தவறாமல் உதே மாதிரி எழுதும். யாழ்களத்தில எங்கையெண்டாலும் மிளகாய்த்தூள்  பிரச்சனை எண்டால் முதல் ஆளாய் வந்து நிக்கும் அந்த தம்பி...🤣 இப்ப எங்க நிக்குதோ.......என்ன செய்யுதோ...சாப்பிட்டுதோ....என்னமோ?  ஒரு நேரம் சும்மா இருக்காது அந்த தம்பி....குறு குறுவெண்டு ஏதாவது எழுதி/கிறுக்கிக்கொண்டே இருக்கும்...😂  
    • @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால்  இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில்  கிடைக்காது.  
    • மிக்க நன்றி, உங்கள் ஆழமான கருத்துக்கு  "அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய? குறை கூறும் சமூகத்தில் இருக்கும் வரை  ஏசுவே இனி என்ன செய்ய? கறை பிடித்த வம்பு பேசு பவர்களால்  ஏசுவே  நிம்மதி இழந்தாளே என்னவள்? சிறை வாழ்வு கொண்டு நான் இங்கு  ஏசுவே நிம்மதியைத் தேடுகிறேன்?"    
    • "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 04  [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]   விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his].   எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.   “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி”   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று :   “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!"   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].   இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது.   எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன.   நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை.   ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் 'திருமணம்' என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.   மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம்.   இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood].   பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்.   அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  முற்றிற்று   "same-sex marriages" / Part 04     [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.]     With the introduction of agricultural civilisation, Such as Sumeria, the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability, in other words the primary purpose of the marriage is to ensure that the man’s children are biologically his. So, While sexuality in ancient Babylon was actually extremely liberal, that was only for single persons, and marriage was rigidly stiff and controlled, as a societal function.   `Sumerian love songs’ also attests to the commonality of deep romantic attachment between couples. In The Epic of Gilgamesh (dates back to Ancient Sumer), one of the first surviving written works of the human race itself, the main character can be quoted as saying:   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   This line from The Epic of Gilgamesh paints a clearer picture of what the Babylonians thought of love. But love in Ancient Mesopotamia wasn’t at all that different from what it is today, also, as so writes a poet nearly 5,000 years ago:   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   Again during the third Tamil Sangam. We found marriage as a System in the ancient Tamil Grammar Book, Tholkappiyam, written by Tholkappiar, around 700 BC. Here he say "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் யர் யாத்தனர் கரணம் என்ப (1091)", meaning: He states that the society was being ruined by indiscriminate copulation, involving Lies, frauds. Hence the learned organised the system of marriage.   The historian Bertman writes, Among both the Sumerians and the Babylonians marriage was fundamentally an arrangement designed to assure and perpetuate an orderly society. Its prime intent was not only companionship but procreation; not only personal happiness in the present but communal continuity for the future. So marriage, as man & woman come together to form a family, is part of the culture more than 5000 years. Above all, Sumerians [ancestors of Tamils ?] were the first inventor of marriage system, as other first inventions such as writings,The Wheel, plow, sailboat, Agriculture and Irrigation.   A large and growing body of scientific evidence indicates that the intact, married family is best for children. If we were asked to design a system for making sure that children's basic needs were met, we would probably come up with something quite similar to the two-parent ideal. Such a design, in theory, would not only ensure that children had access to the time and money of two adults, it also would provide a system of checks and balances that promoted quality parenting.   The fact that both parents have a biological connection to the child would increase the likelihood that the parents would identify with the child and be willing to sacrifice for that child, and it would reduce the likelihood that either parent would abuse the child.   Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction and that society organised around the family to survive and for society to survive. It created a recognition of the idea of couples committing for life and raising children together and sharing the struggles of survival.   In general, these social rules had more benefits to society and helped our cultures and species survive. However in the last 100 years, the human race has dramatically changed. No longer we are tribes of hunter-gatherers or agriculturally based communities. We are a society of high technology. Now have telephones, radio, TV, airplanes, trains, cars, advanced medicine, genetic engineering, the Internet, birth control, abortion, cloning, test tube babies, and other things that affect society in general. We live twice as long as people did 200 years ago. In many significant ways, we are not really the same species of human as we were then.   Yes, genetically we are almost identical compared to 200 years ago, but with our new technologies, and the resulting cultural changes, there are a lot of significant differences. And those differences have made changes that directly affect marriage. For example, "till death do us part" is a lot longer commitment than it used to be. Also there is nothing that restricts individuals from committing to each other and deciding between themselves, that they are a couple, and that they intend to share their lives together. This includes people of the same sex as well as marriages between more than two people. These personal commitments are between individuals and we have freedom to choose whom we live with and whom we commit to without the State or society interfering in our personal lives.   Having said all this, my personal belief is that the title of marriage, and the word marriage, refers to the union of one man and one woman and that the word properly belongs to the heterosexual community. I base this on the biological fact of sexual reproduction and thousands of years of tradition and the biological family as the basis for my opinion.   If we open up the definition of marriage to include same sex union, then why limit it to two people? Why not three, four, or five people. Why not let people marry their pets? After all, your cat is much more likely to make a life long commitment to you than a human will and can be trusted to be more loyal and respectful of the relationship. Whatever two women / men choose to do in their private lives is nobody’s business but their own. Married love is not the same as the love between parent and child, or the love and affection between brother and sister, or other deep and lasting friendships. Sexual intercourse — not simply sexual stimulation — remains an essential element of marriage.   Where sexual intercourse is not possible in principle, marriage cannot exist. Same-sex partnerships, like friendships, can be deep and lasting, but they cannot be marriages because they lack the capacity for conjugal union. We see this truth clearly in the very etymology of the word marriage.   The word "MARRY" is from Latin maritus (married), from Indo-European “root” mari (young woman). French word for “mother” is mere or Matri [matrimony=matri+mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood.].   The natural outcome of conjugal relations is that the woman becomes a mother, thus the connection between the words “conjugal” and “marriage.”   That is why we have no problem with civil partnerships, a new institution with a new purpose for same sex couples and any others.     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   Ended         
    • முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும்  மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌..............................   ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால்   வ‌ங்க‌ளூர் ப‌ஞ்சாப் டெல்லி ல‌க்னோ இந்த‌ 4 அணிக‌ள்......................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.