Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!

Featured Replies

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!

தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.

உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

அவை போலவே தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://news.lankasri...qyESVOUlx1.html

  • தொடங்கியவர்

tamil_eelam_001.jpg

tamil_eelam_002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கனிந்துவருகின்றது,

இந்தச் செய்தியை வாசிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இணைப்பிற்கு நன்றி இறைவன். :)

  • தொடங்கியவர்

இது நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் மலரும்.  

தமிழீழதால் உலகிற்கு கிடைக்க கூடிய  அனுகூலங்களை பிரச்சாரம் செய்யலாம். 

இந்த செய்து உண்மையானால் ? முஸ்லிமின் ஆதரவு தேவை.

காலத்துக்குக் காலம் தமிழரைச் சோர்வடைய விடாமல் உசுப்பேற்றி வைத்திருக்க இவ்வாறான செய்திகள் உதவும்.

Edited by இணையவன்

காலத்துக்குக் காலம் தமிழரைச் சோர்வடைய விடாமல் உசுப்பேற்றி வைத்திருக்க இவ்வாறான செய்திகள் உதவும்.

அடிப்படை ஆதமில்லாத இது போன்ற செய்திகள் தமிழரை தூங்க வைக்கவும் தண்ணி அடிக்கவும் அழைத்து செல்லுமே தவிர உருப்படியாக எதுவும் பலன் தராது . முதலில் இது போன்று புரளி கிளப்பும் நபர்களை பிடித்து XXXXXXXXXXXXXXXXXX ( கள விதிகளின் படி முழுதும் எழுத இயலவில்லை ). இப்படியே ரூல்ஸ் போட்டுக்கிட்டே போனா கடைசியில் எல்லா திரியிலும் XXXXXXXXXXXXXXX மட்டும் தான் எழுத முடியும். இந்த ரூல்ஸ் எல்லாம் கொதிவதனம் இருந்தப்பவே போட்டு இருக்கணும் . இப்ப போயி . ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் . யாழ் களத்தின் பல பரிணாமங்களை பார்த்தாச்சு . இதையும் பாப்போம் . க க க போ போ

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒருநாள் இது நிறைவேறும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தசெய்தி உண்மையானதாக இருந்து நடைமுறை படுத்தினால் மிகவும் மகிழ்வு அடைவேன்.

இந்த செய்து உண்மையானால் ? முஸ்லிமின் ஆதரவு தேவை.

தனி நாடு தேவையென்றால் முசுலிம்களும் இணைந்து வரலாம் வாழலாம். ஆனால் பழையவை அனைத்தும் மறக்கப்பட வேண்டும் . நடக்குமா......................................................

இதே மாதிரி கெக்கே பிக்கேன்னு சிங்களம் உளறிகிட்டே இருந்தா கண்டிப்பா வாக்கெடுப்பு நடந்தே தீரும் . ஆனா அப்பப்ப சேம் சைடு கோல போட்டு திரும்பிட்டா அப்புறம் ஹி ஹி ஹி தான் .

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்து உண்மையானால் ? முஸ்லிமின் ஆதரவு தேவை.

முஸ்லீம்கள் தமிழருடன் சேர்ந்து... இணக்க அரசியல் செய்வதற்கு சம்மதிப்பார்கள் என்பது, சந்தேகமே.

அவர்கள் ஸ்ரீலங்கா சிங்களவனுடன் சேர்ந்து, வாழப் பழகிவிட்டார்கள் என்ற படியால்...

வேலியிலை, போற... ஓணானைப் பிடித்து, வேட்டிக்குள்ளை விடக்கூடாது. :D

.

தமிழ்வின்னில் வந்த பழைய இணைப்பு அகற்றப்பட்டது.

எந்த வித ஆதாரமும் அற்ற செய்தி. சிங்களவர் சிலர் கிளப்பிய செய்தி.

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.

இலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது

2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை

3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை

4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்

5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

கையொப்பம் இடுவோரின் விபரம்

முதல் பெயர்:*

ஈழத்தமிழர்கழுக்கு தொடர்புள்ள முக்கியமான செய்திகளை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் தமிழர்களுக்கான ஒபாமா மின் அஞ்சல் குழுவில் இணைத்துக்கொள்ள விரும்பினால் இதனை அழுத்தவும்

http://www.tamilsfor...m2011/tamil.asp

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்தியின் உண்மைநிலை தெரியவில்லை.

ஆனால் இனி இது போன்ற செய்திகள் பயத்தின் காரணமாக சிங்களத்திடமிருந்து வரும்.

அதுவே ஒருநாள் நியமாகும்.

அதற்காக நாமெல்லாம் தொடர்ந்து உழைக்கணும். இனி இதுவே எமது அடுத்த கட்டநடவடிக்கையாக வரிந்து கொள்ளணும்.

அதை நாம் எமக்காக தமதுயிரைக்கொடுத்த முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு காணிக்கையாக்கணும்.

இது உறுதிப்படுத்தப்படாத தகவல். ஆனாலும் நாம் முயற்சியை கைவிட கூடாது.

செய்தி உண்மையானால் மகிழ்வோம். ஆனால் தமிழீழம் சம்பந்தமாக எமது பணியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். செய்தியைக் கண்டு யாரும் தூங்கி விடாதீர்கள்.

இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

ஜனாதிபதி நீங்கள் தான் எண்டும் நினைச்சு கொண்டிருப்பீங்க தண்ணி எடுத்து மூஞ்சி ல அடிங்க கனவு தெளியும் # ங்கொய்யால அர்ஜுன் காமெடி பண்ணிட்டாராம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திக்குரிய நக்கல் ஒருவேளைநடந்திட்டாலும் என்ற பதைபதைப்பில் வந்தது.தமிழனுக்கு உரிமை கிடைக்காமல் சிங்களவனுக்கு நிரந்தரச் சேவகம் செய்ய வேண்டும் என்றும் நினைப்பவர்களுக்குத்தான் இப்படி எழுதத் தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் தினம் எப்போது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொய்யான செய்தி உண்மையாக வேண்டுமென்பதே எமது அவா!மற்றும் படி செய்தியை நம்பி ஆனந்தக்கூத்தாடவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

இல்லை, ஆனால் உங்கட ஆக்கள் பதினாறு வயசு  குழந்தையை கற்பழித்து வெட்டி போட்டது நடந்திருக்கு. 

என்ன செய்யலாம்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.