Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழருக்காக தூக்கமின்றி பாடுபடுபவர் கருணாநிதி: கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி karu%2830%29.jpgபாடுபடும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே டெசோ மாநாட்டினை கூட்டியுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதியின் மகளும்,திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வருகிற 12-ம் தேதி சென்னை மாநகரில் 'டெசோ’அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு அல்லவா இது.

இந்த மாநாட்டிலே கலந்துகொண்டு சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கிறார் கருணாநிதி.இந்த மாநாடே நடைபெறாது,தடை பிறப்பிக்கப்படவிருக்கிறது என்றெல்லாம் நம் எதிரிகள் கண்ட கனவு தூள் தூளாக போகின்ற மாநாடு இது.

வெளிநாட்டிலிருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கெல்லாம் ஒரு சிலர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு என்னென்னவோ கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கப்போகின்ற மாநாடு இது.

[size="2"] [/size]

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அல்லவா? ஆட்சிப் பீடத்திலே இருப்போர் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது, ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் தலைவர் கருணாநிதி இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே இந்த மாநாட்டினை கூட்டியுள்ளார்.

இதிலே கலந்துகொள்வது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை என்ற உணர்வோடு 12-ம் தேதி கூடுகின்ற "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு'' வெற்றிபெற சென்னையிலே திரண்டிடுவீர் என திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவுப்பேரவையின் தலைவர் என்ற முறையில் உங்களையெல்லாம் அழைக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

http://news.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கொசுக்கடியாக்கிடக்கு.................. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் வாழ்வை எப்படிக் கெடுக்கலாம் என்று தூக்கமின்றிப் பாடுபடுபவர் கருணாநிதி. :D

  • கருத்துக்கள உறவுகள்

கலை இலக்கிய பேரவையின் தலைவர் அழைச்சமாதிரி இல்லையே என்னமோ அறிக்கைய பாத்தா அடுத்த தி மு க தலைவர் தான் என்ற ரீதியிலை விட்ட அறிக்கையா இருக்கே

[size=4]வெளிநாட்டிலிருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்கப் புறப்பட்ட தலைவர்களுக்கெல்லாம் ஒரு சிலர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு என்னென்னவோ கூறி, அவர்களின் வருகையை தடுக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போனதை மெய்ப்பிக்கப்போகின்ற மாநாடு இது. [/size][size=4]இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை அல்லவா?[/size]

சென்னை விமான நிலையத்தில் போய் இறங்கி உள்ளே அனுமதிக்கப்பட்டவர்களுக்குத்தானே இந்த மகாநாடு.

ஈழவேந்தன் என்ற பெயர் வைத்திருப்பவர் யாரும் இந்த ஈழ ஆதரவு மகாநாட்டுக்கு போகமுடியாது. இமானுவல் அடிகளார், ஏலீன் சாண்டேஸ், உருத்திர........யார், யார் எல்லாம்?

உண்மையில் ஈழஆதரவு மகாநாடா அல்லது கருணாநிதி போன்ற ஈழத்துரோகிகளின் மகாநாடா. இதிலும் பார்க்க 2009 ஆண்டு மாதிரி இன்னொரு தமிழ் மகாநாடு கூட்டியிருந்தால் துரோகம் குறைந்திருக்கும். தனது கூட்டு கட்சியான காங்கிரசை வைத்து, குழம்பிப்போயிருக்கும் பேச்சுவார்த்தையை தொடரப்பண்ண முடியாதவர்! எந்த ஈழத்து தலைவர் இவரிடம் இப்படி ஒரு மகாநாடு கூட்டச்சொன்னார்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது அவர் நிம்மதியாக தூங்குவார் என்ற செய்தியை மட்டும் ஈழத்தமிழருக்கு சொல்லுங்கள் கனி மொழி.

அதுவே நாம் வேண்டுவது.

எவ்வளவு பெரிய மனது எமக்கு.

இந்த வயதில் அவருக்கு சிரமம் கொடுக்கவிரும்பவில்லை நாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் அரியணை ஆட்சி உங்கள்

காலடியில் இருந்த அந்த மாண்பான காலத்தில்

வராத இந்த வீரியம் இப்போது தங்களுக்கு

எங்கிருந்து வந்தது?. மாயமா மந்திரமா

அல்லது சூரணமா லேகியமா?

காணக்கிடைக்காத பூலோக அற்புதமா?

அறியத் துடிக்கின்றேன் ஈழமகன் நானய்யா!

தமிழன் என்றால் முதுகெலும்பு வேண்டும்

அதற்கும் மேல் தன்மானம் என்றும் ஒன்று வேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்துங்கள் உங்கள் துவானத்தை...!

தமிழ்த் தாயின் தலை மகனை, ஆரூர் கோமகனை, பாளை சிறை மகனை, தண்டவாளத்தில் தலை கொடுத்த சோழனை, ருசித்தும் பணங்கொடா சீமானை, எமனுக்கே சவால் விடும் பெருமானை, அண்ணாவின் அருகே அமரத் துடிக்கும் அருமகனை மலர் கணையால் வருடாதீர்கள்! தமிழ் உங்களை (வா)வீழ்த்தும்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை டாக்குத்தர்மார் மகாநாட்டில் கலந்து கொள்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது அவர் நிம்மதியாக தூங்குவார் என்ற செய்தியை மட்டும் ஈழத்தமிழருக்கு சொல்லுங்கள் கனி மொழி.

அதுவே நாம் வேண்டுவது.

எவ்வளவு பெரிய மனது எமக்கு.

இந்த வயதில் அவருக்கு சிரமம் கொடுக்கவிரும்பவில்லை நாம்.

நிரந்ததரமாக போய்ச்சேர்ந்தார். என்றசெய்தி என்காதில் விழும் நாளே பொன்னாளாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்துங்கள் உங்கள் துவானத்தை...!

தமிழ்த் தாயின் தலை மகனை, ஆரூர் கோமகனை, பாளை சிறை மகனை, தண்டவாளத்தில் தலை கொடுத்த சோழனை, ருசித்தும் பணங்கொடா சீமானை, எமனுக்கே சவால் விடும் பெருமானை, அண்ணாவின் அருகே அமரத் துடிக்கும் அருமகனை மலர் கணையால் வருடாதீர்கள்! தமிழ் உங்களை (வா)வீழ்த்தும்! :rolleyes:

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழருக்காக தூக்கமின்றி பாடுபடுபவர் கருணாநிதி: கனிமொழி

இந்த செய்தியை பார்த்தபின் எனக்கு ஒருசில நாட்கள் உளரீதியாக ஓய்வு தேவைப்படுகின்றது....... :(

பணம் கண்ட கண்ணும்

சினம் கொண்ட நெஞ்சும்

கண்மூடி களை ஆறாதையா

மெய்யை வாய் பேசாதையா

உறவெல்லாம் பகையாகும்

பெற்ற பிள்ளை பேயாகும்

சொந்த வீடு சூனியமாய்

பிசாசுப் பிணியாகும் கற்றகல்வி

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

35irvya.jpg

தா(கே)னைத் தலீவரு சொல்லீட்டாராம்...எல்லாம் உறுதியாயிடுச்சாம்...!

இப்படியும் சில ஜென்மங்கள் இங்கே சொல்லித் திரியுதுகள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

பரிதி இளம்வழுதி போய் இப்ப பரிதி இளம்சுருதியா? :D

  • கருத்துக்கள உறவுகள்

பரிதி இளம்வழுதி போய் இப்ப பரிதி இளம்சுருதியா? :D

பருதி இளம்வழுதிக்கும், இளைய தளபதிக்கும் இடையில்... முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எங்கோ வாசித்தேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

35irvya.jpg

தா(கே)னைத் தலீவரு சொல்லீட்டாராம்...எல்லாம் உறுதியாயிடுச்சாம்...!

இப்படியும் சில ஜென்மங்கள் இங்கே சொல்லித் திரியுதுகள்..!!

ithu_eppadi_irukku.jpg

தானை(தலையணை) தலைவரால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டுருப்பவர்களிடம் .. தாங்கள் இனிமேல் தான் சுதந்திரமே அடைய போவதாக சொல்வது கொஞ்சம் ஓவர்... தலையணை தலைவரை அவமானபடுத்துவது போல இருக்கு <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

வாயில நல்லாவருது ஆனா சொல்லமுடியவிலையே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.