Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளைகளை இறுக்கும், குருவிச்சைக் கொடிகள் - பாகம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]படுத்தவுடன், பத்து நிமிடத்தில் நித்திரைக்குப்போய் விடும், பழக்கமுள்ளவன் தான், சந்திரன். இப்போதெல்லாம், வெட்ட, வெட்டத் தழைக்கும், சூரபத்மனின் தலை தான் அவன் நினைவுக்கு வருகின்றது. வேறொன்றுமில்லை, இந்தக் கடனட்டை தான், அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஏதாவது, செய்யாவிட்டால், அது பூதாகரமாகி, அவனையும் விழுங்கி விடக் கூடும், என்ற பயம் அவனை ஆட்கொண்டதில்,நித்திரை அவனிடமிருந்து நிரந்தரமாகத் தள்ளி நின்றது.[/size]

[size=4]மனுசி கொஞ்சம் சந்தோசமாக இருந்த நேரம் பார்த்து,[/size]

[size=4]என்னப்பா, நீர் ஒரு சீட்டுப் போட்டனீர் எல்லே! இப்ப அது முடியிற நேரம் வந்திருக்கும் தானே. அதை எடுத்து, இந்தக் கடனட்டையைக், கட்டி விடுவமே!.[/size]

[size=4]கொட்டக் கூடிய கனிவு அவ்வளவையும், தனது குரலில் கொட்டிய படி கேட்டான்.[/size]

[size=4]அப்பா, உங்களிட்டைச் சொல்ல மறந்து போனன். எங்கட ஆக்கள் கொஞ்சப் பேர் சேர்ந்து, இந்தியாவுக்குப் போயினமெல்லே! அம்மாவும் போகப்போறன் எண்டு ஆசைப் பட்டுக் கேட்டா. நான் சரி எண்டு சொல்லிப் போட்டன், எங்களைப் பெத்து, மனுசி என்னத்தை அனுபவிச்சுது? அவ தனியப் போறதிலும் பாக்க, எங்கட ஆக்களோட போறது, அவவுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் தானே![/size]

[size=4]இஞ்சை பார், நீ செய்யிறது ஒண்டும், எனக்குச் சரியாத் தெரியேல்லை, என்று சொல்லியபடியே, குசினிக்குள் போனவனை, அம்மம்மாவின் குரல், இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது.[/size]

[size=4]என்ன, தம்பி, கனக்க யோசிக்கிறியள் போல கிடக்கு![/size]

[size=4]நீங்க, வீடு வாங்கிக் கன காலம் தானே, தம்பி![/size]

[size=4]நீங்க வாயைத் திறந்தாலே போதுமாம், ஒரு பிரச்சனையுமில்லாம, வீட்டுக் கடனைக் கூட்டலாமாம். அதை எடுத்து, உங்கட கடனுகளைக் கட்டலாம் தானே, தம்பி! இதுக்குப் போய் விடியக் காலமையும் அதுவுமா, ஏன் பிள்ளையோட ஏறி விழுகிறியள்?[/size]

[size=4]மனுசி, கோயில்ல போய், முருகனை மட்டும், கும்பிடேல்ல! என்று மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.[/size]

[size=4]தான் என்னவோ, தனித்துப் போய் விட்டது, போலவும், தனக்கென ஒருவரும் இல்லாதது, போலவும், ஒரு விதமான 'தன்னிரக்கம்' அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. பிள்ளைகள் கூட முன்பு போல, அவனுடன் கதைப்பது கூடக் குறைந்து போய் விட்டது. இந்த மனுசன் எப்ப பாத்தாலும், சிடு சிடுத்த படி தான் இருக்கு, என்ற அம்மாவின் வசனங்களை, அடிக்கடி கேட்டுக் கேட்டு, அவர்கள், கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம் எனத் தன்னைத தானே ஆறுதல் படுத்திக் கொண்டான்![/size]

[size=4]அவனுக்கும், தன்னிலையைப் பகிர்ந்து கொள்ள, இப்போது நண்பர்கள், தேவைப்பட்டனர். அவர்களை விட்டு, அவன் கொஞ்சம் விலகி விட்டாலும், அவனுக்கென ஒரு சொந்தங்களும் இல்லாத நிலையில், யாருடனாவது கதைத்தாக வேண்டும் போல இருந்தது! தனது குடும்பத்தில் இருந்தும், தான் வெகு தூரம் விலகி விட்டதையும், இப்போது உணர்ந்து கொண்டான்.[/size]

[size=4]தனது காலத்தில், அகதியாக வந்து சேர்ந்த சில நண்பர்களின் ஒருவனை அவன் அணுகினான்.[/size]

[size=4]மச்சான், சொன்னால் கோவிக்கக் கூடாது. இது இப்ப எல்லா இடத்திலையும், ஒரு வியாதி மாதிரிப் பரவுது, மச்சான். ஊரில, எங்கட கலாச்சாரம், ஒரு வலை மாதிரி, இவையளைப் போர்த்து மூடி வைச்சிருந்தது. இஞ்சை வந்தவுடன், வலையைத் திறந்து விட்ட, மீன் மாதிரித் தான் இவையின்ர நடவடிக்கைகள் போகுது. வெள்ளையளுக்கு இது பொருந்தும் மச்சான்! விருப்பமில்லாட்டி அவன் விட்டுட்டு, வேறை ஒன்றைப் பாத்தண்டு போவான். அதோட மச்சான், வெள்ளைக் காறியளுக்குக் கூட 'அண்டர்ஸ்டாண்டிங்' இருக்கு கண்டியே. அவளவை எண்டால், என்ர குடும்பத்தில என்னத்துக்குத் தலையை விடுகிற? எண்டு தாய்மாருக்குச் சொல்லி விடுவாளுகள், அல்லது அவையைக் கொண்டே, எங்கேயும் வயோதிபர் மடத்தில விட்டிருவாளுகள்! [/size]

[size=4]உனக்குச் சீதனம் தந்து போட்டினம் எண்டு தானே, இந்தத் துள்ளு, துள்ளுறா உன்ர மாமி? ஊரில இருக்கிற வீட்டுக்கு, நீ போய் இருக்கவா போறாய்? அதை வித்துப் போட்டு, உன்ர கடனட்டையைக் கட்டி விடன்! இவங்கள், இந்த மாமா, மாமி மாருக்குக் குடுக்கிற பென்சனும், அவையைச் சும்மா இருக்க விடுகுதில்லைக் கண்டியே. எதோ ஆயுள் காலம் முழுக்க உழைச்சுப் பென்சன் எடுக்கிற மாதிரி அவைக்கு ஒரு திமிர். அதோட 'ஓய்வு' பெற்ற எல்லாக் கூட்டமும், அடிக்கடி ஒண்டாச் சேர்ந்து, எங்கள்ள தான் தங்கட, அங்கத்தே 'ஸ்கில்' எல்லாத்தையும், சோதிச்சுப் பாக்கினம் கண்டியே. எதுக்கும், ஊர் வீடு விக்கிற விசயம், காயா, பழமா எண்டு ஒருக்காத் தெரியப் படுத்தன், என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.[/size]

[size=4]சந்திரனுக்கு இப்ப கொஞ்சம் தைரியம் வந்தது மாதிரி இருந்தது. [/size]

[size=4]அடுத்த நாள் காலமையே, மாமியாரும், மனுசியும் சீரியல் பாக்கத் துவங்கீட்டினம். அவனும், மனுசியைப் பார்த்து, நான் ஒரு முடிவு பண்ணிட்டன். ஊரில இருக்கிற அந்தச் சீதன வீட்டை, வித்துப் போட்டு, இந்தக் கடனுகளை, அடைக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறன். அந்த வீட்டில, இனி ஆரும் போய் இருக்கப் போயினமே?[/size]

[size=4]மாமிக்காரி தான், முதலில் வாயைத் திறந்தா. என்ன தம்பி பகிடி விடுகிறியளே? [/size]

[size=4]நீங்க, கொஞ்சம் பேசாம இருங்க, மாமி![/size]

[size=4]மாமி, நிப்பாட்டவில்லை. அதென்னண்டு, சீதன வீட்டை விக்கிறது? அதைப் பிள்ளைக்கெல்லோ கொடுக்க வேணும். இதென்ன ஒரு ஊரிலையும் இல்லாத பழக்கம்? அதோட அந்த வீடு, உங்களுக்கு மட்டுமில்லை. அதில உங்கட மனுசிக்கும் பங்கிருக்கெல்லோ? அவ சொல்லாமல், நீங்க விக்கேலாது எண்டு தெரியுமெல்லோ?[/size]

[size=4]அது தான் அவவின்ர மறுமொழியைப் பாத்துக் கொண்டிருக்கிறன் என்று மிகவும் அமைதியாகச் சொன்னான், சந்திரன்![/size]

[size=4]அவளென்ன முடிவு சொல்லுறது, அதைத் தான் நான் சொல்லிப் போட்டனே?[/size]

[size=4]சந்திரன், மனுசியின் முகத்தை ஒரு முறை மீண்டும் பார்த்தான். அவவின் முகம், சுவர்ப் பக்கம் திரும்பியது.[/size]

[size=4]சந்திரன், இது தான், உங்கட கடைசி முடிவா, என்று கேட்டான்.[/size]

[size=4]அண்ணனிட்டையும் ஒருக்காக் கதைச்சுப் போட்டுச் சொல்லுறனே, எண்டு மனுசி பதிலளித்தாள்![/size]

[size=4]சந்திரன் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. ஆனால், அவனது முகத்தில், ஒரு விதமான, தெளிவு பிறந்திருந்தது.[/size]

[size=4](இன்னும் ஒரேயொரு பாகம் மட்டும் வரும்)[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை உள்ள சீதன வீட்டை விற்கிறது என்றவுடன்... மாமியார்க்காரி இறங்கி வந்திருக்க வேணும்.

இல்லாவிட்டால்... கனடாவில், உள்ள மச்சானைக் கொண்டு, சந்திரனுக்கு.. இருட்டடி விழப்போகுதா...

மிகுதியை வாசிக்கும்... ஆவலில் உள்ளோம்... புங்கையூரான். :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தொடருங்கள், கிளைமக்ஸ் எப்படியிருக்கும் என்று யோசித்துவிட்டேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பெண்ணியக் கோட்பாளர் என்று ஆணித்தரமாகச் சொல்லுகின்றேன். அதனால் ஒளவையார் அருளியவைகளையும் படித்திருக்கின்றேன் :D :

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென்று விளம்ப -வருந்திமிக

ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்..

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே-தொண்டா

செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடியிருக்கலாம் - - சற்றேனும்

ஏறுமாறாக யிருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்நியாசம் கொள்

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பெண்ணியக் கோட்பாளர் என்று ஆணித்தரமாகச் சொல்லுகின்றேன். அதனால் ஒளவையார் அருளியவைகளையும் படித்திருக்கின்றேன் :D :

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென்று விளம்ப -வருந்திமிக

ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்..

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே-தொண்டா

செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடியிருக்கலாம் - - சற்றேனும்

ஏறுமாறாக யிருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்நியாசம் கொள்

.

[size=3]ஆலகால விடத்தையும் நம்பலாம்;[/size]

[size=3].....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;[/size]

[size=3]கோல மாமத யானையை நம்பலாம்;[/size]

[size=3].....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;[/size]

[size=3]காலனார் விடு தூதரை நம்பலாம்;[/size]

[size=3].....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;[/size]

[size=3]சேலை கட்டிய மாதரை நம்பினால்[/size]

[size=3].....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.[/size]

[size=3] [/size][size=3]இது எப்படியிருக்கு, கிருபன்? :icon_idea:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ஆலகால விடத்தையும் நம்பலாம்;[/size]

[size=3].....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;[/size]

[size=3]கோல மாமத யானையை நம்பலாம்;[/size]

[size=3].....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;[/size]

[size=3]காலனார் விடு தூதரை நம்பலாம்;[/size]

[size=3].....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;[/size]

[size=3]சேலை கட்டிய மாதரை நம்பினால்[/size]

[size=3].....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.[/size]

[size=3]இது எப்படியிருக்கு, கிருபன்? :icon_idea:[/size]

பெண்ணினத்தையே பொதுமைப்படுத்தி சிறுமைப்படுத்துவது இது. எனவே அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையுள்ளவர்கள்தான் இதனை ஏற்பார்கள்.

இணைத்த ஒளவையாரின் பாடல்கள் ஒரு சிலரை மட்டும்தான் சுட்டுகின்றது <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணினத்தையே பொதுமைப்படுத்தி சிறுமைப்படுத்துவது இது. எனவே அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையுள்ளவர்கள்தான் இதனை ஏற்பார்கள்.

இணைத்த ஒளவையாரின் பாடல்கள் ஒரு சிலரை மட்டும்தான் சுட்டுகின்றது <_<

அப்படியில்லை, கிருபன்!

உங்கள் தமிழைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தேன்!

உண்மையான பாடலில், சேலை கட்டிய மாதர், என்பதற்குப் பதிலாக,

சேலகட்டிய மாதர் என்று தான் வருகின்றது!

சேல் என்பது விழியைக் குறிக்கும்.

அதாவது விழிகளை அகட்டிய மாதர்- விழிகளுக்கு மை பூசி, அகலமாக்கிய மாதர்!

அது விலை மாதரைக் குறிக்கிறது!

இப்போது மகிழ்ச்சி தானே! :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியில்லை, கிருபன்!

உங்கள் தமிழைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தேன்!

உண்மையான பாடலில், சேலை கட்டிய மாதர், என்பதற்குப் பதிலாக,

சேலகட்டிய மாதர் என்று தான் வருகின்றது!

சேல் என்பது விழியைக் குறிக்கும்.

அதாவது விழிகளை அகட்டிய மாதர்- விழிகளுக்கு மை பூசி, அகலமாக்கிய மாதர்!

அது விலை மாதரைக் குறிக்கிறது!

இப்போது மகிழ்ச்சி தானே! :D

சேலகட்டிய மாதர் என்பது பின்னர் இடைச்செருகலாக வந்தது என்றே நினைக்கின்றேன்.

எனவே இந்த விளக்கத்தை நான் ஒருபோதும் நம்பியதில்லை. விவேக சிந்தாமணியில் உள்ளதைப் புனிதப்படுத்த எடுத்த முயற்சியாகவே பார்க்கின்றேன்.

இந்த விவாதத்தை விட்டுவிடுவோம்.. கதையின் முடிவில் சமரசம் வைக்காவிட்டால் சரி :)

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்ள தான் தங்கட, அங்கத்தே 'ஸ்கில்' எல்லாத்தையும், சோதிச்சுப் பாக்கினம்

அவையள் skilled migration ல் வந்த கோஸ்டிகள் உப்படித்தான் கதைப்பினம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

மீதியை படிக்கும் ஆவலுடன்

சந்திரன் நன்றாக நொந்து தான் இருக்கிறார்.

கணவனின் கணக்கு வழக்குகள் மனைவிக்கும் தெரிந்தால் இந்த பிரச்சனைகள் சாதாரணமாக வராது.

மாமியார் தொல்லை பெண்களுக்கு மட்டுமல்ல , ஆண்களுக்கும் தான் என்று தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு புங்கை அண்ணா...உங்கள் எழுத்துக்கள் எல்லாமும் அப்படித்தான் இருக்கும் சிறப்பாக..விரைவில் முடிவைதாங்கோ..ரொம்ப பொறுமையை சோதிக்காதைங்கோ அண்ணா.. :)

அது சரி சந்திரனுக்கு தனக்கென்றொரு அம்மா இருக்கிறா என்பது ஞாபகமிருந்ததா..?

  • கருத்துக்கள உறவுகள்

மாமியார் தொல்லை பெண்களுக்கு மட்டுமல்ல , ஆண்களுக்கும் தான் என்று தெரிகிறது!

அது சரி சந்திரனுக்கு தனக்கென்றொரு அம்மா இருக்கிறா என்பது ஞாபகமிருந்ததா..?

மனிசியும், மாமியாரும் சேர்ந்து... ரிவி சீரியல் பார்க்கிற ஆட்கள் என்பதால்....

சந்திரனை நினைத்து... கவலைப்படத்தான், முடிகின்றது.

எனக்கு இப்பிடி ஒரு மாமியார் கிடைத்தால்.... அடுத்த பிளேனிலை ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிப் போட்டுத்தான்.... அடுத்தவேலை பார்ப்பன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் கதையை எழுதப் போக, எல்லாரும் சேர்ந்து, அந்தக் காலத்து எம்.ஜி.ஆர், சிவாஜி படம் வாறத்துக்குப் போடுகிற 'விரைவில் வருகிறது. ஆவலுடன் எதிர் பாருங்கள், மிகுதி வெண் திரையில்......

எண்ட மாதிரி, ஒரு எக்கச் சக்கமான, முடிவெடுக்க வேண்டிய நிலையில கொண்டு வந்து விட்டுப் போட்டியள் போல கிடக்கு?

நீங்களே, சந்திரன் எடுக்க வேண்டிய முடிவையும் சொல்லித் தந்திட்டீங்க போல கிடக்கு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரன் நன்றாக நொந்து தான் இருக்கிறார்.

கணவனின் கணக்கு வழக்குகள் மனைவிக்கும் தெரிந்தால் இந்த பிரச்சனைகள் சாதாரணமாக வராது.

மாமியார் தொல்லை பெண்களுக்கு மட்டுமல்ல , ஆண்களுக்கும் தான் என்று தெரிகிறது!

அதூ----------து .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த, சொந்தக்களுக்கு, மிக்க நன்றிகள்!

'இருட்டடி' ஒரு நல்ல முறை தான் போல இருக்கு?

தமிழ் சிறி, கொட்டடி, நாவாந்துறை, கோனாந்தோட்டம், பக்கத்துக்கு ஆக்கள், ஆரையும் தெரிஞ்சால், சொல்லுங்கோ! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கதை விவாக ரத்திலை முடியாவிட்டால் சரி. அடுத்த பகுதியை கெதிலை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட குடும்பத்தை எல்லோரும் சேர்ந்து பிரிச்சு போட்டுத் தான் மறு வேலை பார்ப்பீர்கள் போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புன்கையூறான் நல்லாப் போகுது கதை.பல குடும்பங்களில் சொந்தத் தாயே குடும்பத்தைப் பிரிச்சிடுவ.

.

தொடருங்கள் பூங்கை.

கனகாலம் விட்டீங்கள் என்றால்..

குருவிச்சை இறுக்கின இறுக்கில் கிளை "மவுத்" ஆகிவிடும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய சக உறவுகளுக்கு, எனது நன்றிகள்! :icon_idea:

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.