Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"காய்....பேய்காய்"இறுதிப்பாகம் (1&2)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால் நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம் எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன் வேறு சில விடயங்களுக்கும் அது பின்பு உதவியது என்பது நான் அறிந்த உண்மை...

நான் ஆங்கில டியுசனுக்கு போகமுதல் அவனது அறைக்கு செல்வேன்.பின்பு இருவரும் ஒன்றாக டியுசன் வகுப்புக்கு செல்வோம்.ஆங்கில வகுப்புக்கு போகும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே இருவரும் அலங்காரத்துடன் செல்வோம்.சுரேஸ் ரஜனியின் ஸ்டைலில் தலைமயிரை குழப்பிவிட்டு பெல்போட்டம் காற்சட்டை ,மேற்சட்டையின் ஒரு பட்டனை கழற்றி விட்டிருப்பான்.கையில் 80 பக்க கொப்பியை சுருட்டி வைத்திருப்பான்.

ஆசிரியருக்கு எங்களின் படிப்பின் அக்கறையைவிட அவரின் பணத்தில் அக்கறை அதிகமாக இருந்தது .அதனால் எங்களது சேட்டைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.பெண்கள் இருக்கும் வாங்குக்கு அருகில் அதிகமாக நாங்கள் போய் இருப்போம்.சில பெண்கள் திரும்பிப் பார்ப்பார்கள் ,சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரியிருப்பார்கள்,சிலர் பார்க்கவே மாட்டார்கள்.புதிதாக அன்று ஒருத்தி வந்திருந்தால் பார்த்தவுடனே ஒரு இது (காதல் என நல்ல எழுத்தாளர்கள்,வர்ணிக்க கூட்டும் ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு இதுதான்)அவளும் எங்களுக்கு பக்கத்தில் இருந்த வாங்கில் வந்திருந்தாள்.

"மச்சான் காய் என்னை பார்க்குதடா"

"எந்த காய்"

"புதுசா வந்த காய்"

"என்னை பார்க்குதோ? உன்னை பார்க்குதோ?"

"என்னைட்ட நீ இப்ப அடி வாங்கப்போறாய் காய் என்னைத்தான் பார்க்குதுடா காயை மடக்கலாம் போல கிடக்குது"

நான் பார்த்தேன் காய் உடனே கீழே குனிந்து கொண்டாள்.பார்த்துகொண்டே இருந்தேன் ,எங்களை பார்ப்பதும் உடனே குனிவதாகவும் இருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.காய் அவனை பார்த்து கொண்டேயிருந்தாள்.இந்த காய் அந்த காயை மடக்கப்போகுது என்று போட்டு நான் எனது படிப்பை கவனிக்க தொடங்கினேன்.படிப்பு எறுகிறமாதிரி தெரியவில்லை.கல்வி தோல்வியை தழுவ சபலம் வெற்றி பெற்றது.

இந்த காயை விழுத்தாமல் விடுவதில்லை என்றவன் அதற்கான முயற்ச்சியிலும் ஈடுபட தொடங்கினான். பார்ப்பதும் சைக்கிளில் பின்னால் செல்வதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது.

"என்னடா காயை மடக்கலாம் என்றாய் ,காய் மடங்கிறமாதிரி தெரியவில்லை "

" அடுத்த வகுப்பில் பார் "

அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ,இவன் அந்த பெட்டையுடன்(காயுடன்) கதைத்தது தான் தாமதம் சிலர் விசில் அடித்தார்கள் வேறு சிலர் கைதட்டினார்கள்.மச்சான் நீ காயை மடக்கிப்போட்டாயடா என எல்லோரும் சொல்ல அவனுக்கு வெட்கம் வரதொடங்கி விட்டது.

அடுத்த கிழமை வகுப்புக்கு வந்த பொழது ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவில்லை இருவரும் படிப்பில் கவனமாக இருந்தார்கள் . நான் மட்டும் அவர்களை கவனிப்பதில் கவனமாக இருந்தேன்.நான் பார்த்த காயை இந்த காய் மடக்கிபோட்டுதே என்ற அதங்கம்தான்.வகுப்பு முடிந்தவுடன் வாட போவோம் என்று அவனை அழைத்தேன்.வழமையாக வகுப்பு முடிந்தவுடன் அவனது றூமூக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டை போவேன்.

"மச்சான் நீ போடாப்பா நான் லெட்டா வாரன் ,அவள் சொன்னவள் பெடியங்களுக்கு முன்னாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எல்லோரும் போன பிறகு கொப்பியை வாங்கிகொண்டு வாரன்"

"இப்ப நீ காய் வெட்டுறாய்"

"கோபிக்காதயடா"

"சரி சரி வாழ்த்துக்கள்"

என கூறியபடி நேராக வீடு சென்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து வீட்டை வந்தான் .அப்ப நாங்கள் ரோட்டில் நின்றுதான் கதைப்போம் ,சகோதரிமார் இருப்பதால் வீட்டினுள்ளே அனுமதி கிடையாது.

மச்சான் காய்யை விழுத்திப்போட்டன். எல்லோரும் போனபிறகு எனிட்ட கொப்பியை தந்து என்னோட கதைச்சது.வீட்டை கொப்பியை கொண்டு போய் பாருங்கோ என்று சொல்லிச்சுது வீட்டை போய் பார்த்தால் என்னை பிடித்திருக்கா? என்று எழுதியிருக்கு மச்சான்.நான் அடுத்த வகுப்புக்கு இதுக்கு பதில் எழுத வேணும் என்றவன் என்னை கூட்டிகொண்டு டீ வாங்கித்தந்தான்.

பின்பு நான் அவனது றூமுக்கு அடிக்கடி போய் வருவேன்.

அவனது காதல் நன்றாகவே சென்று கொன்டிருந்தது. ஒரு நாள் சொன்னான்

"மச்சான் காய் கணக்கில வீக்காம் , டியுசன் சொல்லி தரச் சொல்லி கேட்குதடா"

"சொல்லிக் கொடன்"

"இங்கிலிஸ் டியுசன் முடிந்தவுடன் அப்படியே இங்க கூட்டிக்கொண்டு வந்து டியுசன் எடுக்கப்போரன்"`

.........நாங்களும் தொடருவோமல்ல ....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாப் போகுது, புத்தன் தொடருங்கள்!!

ஆனால் உங்கட காலத்து, வார்த்தைப் பிரவாகங்கள் அவ்வளவு, பிடி படுகுதில்லை, புத்தன்! :D :D

அது சரி, 'காய்' எண்டால் என்ன? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

அது சரி, 'காய்' எண்டால் என்ன? :icon_idea:

யாழ்கள பண்டிதர்கள் விளக்கமளிக்கும்படி அன்பாக கேட்டுகொள்கிறேன்..

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

யாழ்கள பண்டிதர்கள் விளக்கமளிக்கும்படி அன்பாக கேட்டுகொள்கிறேன்..

அதுக்கேன், ஏலம் போடுற மாதிரி, இரண்டு தரம் சொல்லுறீங்கள், புத்தன்? :D

<p><p>

யாழ்கள பண்டிதர்கள் விளக்கமளிக்கும்படி அன்பாக கேட்டுகொள்கிறேன்..

புத்தனது இளமைக்காலம் சரியாக எனக்கு தெரியவில்லை :lol: . பெட்டையளைக் கூப்பிட பாவிக்கும் சங்கேதமொழி " காய் " ஆகும் :D . என்ரைகாலத்தில "சரக்கு "எண்டு சொல்லுவம் :icon_mrgreen:. இப்ப "ஃபிகர் "எண்டு சொல்லக் கேள்வி :D:icon_idea: .

அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ...........

ஆமா........... ஆமா .............உண்மையில பெரிய விசயம்தான் :lol: . அண்டு முழுக்க பெடி ஒரு மிதப்பில திரியும் :icon_idea:. அதுவும் வகுப்பிலை கெட்டிக்காற பெடியள் எண்டால் சரக்குகளுக்கை போட்டியோ போட்டி ஆர் பெடியை முதலில விழுத்திறதெண்டு . அருமையான , எழிமையான நடையில் இளமையை திருப்பிப் பாக்கவைத்த புத்துவுக்கு எவ்வளவும் பாராட்டலாம் .

கதை நல்லாப் போகுது

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாப் போகுது, புத்தன் தொடருங்கள்!!

அதுக்கேன், ஏலம் போடுற மாதிரி, இரண்டு தரம் சொல்லுறீங்கள், புத்தன்? :D

புரியலையோ தங்களுக்கு..

எத்தனை தரம் சொன்னாலும் நீங்கள் நித்திரை போல் நடிப்பதை நீறதப்போவதில்லை என்கிறார்........ :lol::D :D

நீங்கள் கேட்ட கேள்விக்குப்பதில் தெரியாது

நான் நல்ல பிள்ளையாக்கும் வகுப்பில் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அக்கா,அண்ணாட்ட கணக்கு படிச்சிட்டு அண்ணாவை கழட்டி விட்டுட்டாவோ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இப்ப நீ காய் வெட்டுறாய்"

கனகாலம் உந்த வசனத்தை பாவிச்சு...... எண்டாலும் புத்தன்! நீங்கள் பேய்க்காய்தான் :D

கதை நல்லா போகுது ,தொடருங்கோ .யார் அந்த ஆங்கில வாத்தி ? சிலவேளை நாமளும் அவரிட்டை வந்திருப்பமல்லோ ?

காய் விழுத்தவும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா போகுது ,தொடருங்கோ .யார் அந்த ஆங்கில வாத்தி ? சிலவேளை நாமளும் அவரிட்டை வந்திருப்பமல்லோ ?

காய் விழுத்தவும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் .

காயைக் கொஞ்சம் முத்த விட்டால்த் தானா விழுமே! :D

  • கருத்துக்கள உறவுகள்

எந்த காய் என்று தெரியாமல், எல்லா காய், பிஞ்சுகளுக்கும எரிஞ்சுகொண்டு திரிந்த அந்த நேரத்தில், எங்க நேரம் இருந்தது, பளுதுவில மட்டும் நேரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனது இளமைக்காலம் சரியாக எனக்கு தெரியவில்லை :lol: . பெட்டையளைக் கூப்பிட பாவிக்கும் சங்கேதமொழி " காய் " ஆகும் :D . என்ரைகாலத்தில "சரக்கு "எண்டு சொல்லுவம் :icon_mrgreen:. இப்ப "ஃபிகர் "எண்டு சொல்லக் கேள்வி :D:icon_idea: .

அப்பவும் இளமை இப்பவும் இளமை.....என்ன தாடியும் மீசையும் நரைத்துவிட்டது:D நான் இப்ப தாய்குலம் என்றுதான் சொல்லுறனான்.. நன்றிகள் கோமகன்

கதை நல்லாப் போகுது

நன்றிகள் குருவிகள்..தொடரும் என்று போட்டிட்டன் எப்படி தொடர்வது என்று தெரியவில்லை :D

<p>

கதை நல்லாப் போகுது, புத்தன் தொடருங்கள்!!

நான் நல்ல பிள்ளையாக்கும் வகுப்பில் :icon_idea:

நன்றிகள் விசுகு,கருத்து பகிர்வுக்கு.தொடரும் ஆனால் இன்னும் ஒரு பந்தி மட்டும்தான்.:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<p>

அந்த அக்கா,அண்ணாட்ட கணக்கு படிச்சிட்டு அண்ணாவை கழட்டி விட்டுட்டாவோ :D

அண்ணா அக்காவுக்கு கணக்கு காட்டி காய்வெட்டி போட்டார்? வேறு என்ன?அதுதானே முடிவு கரை சேர்ந்ததுகள் குறைவு..அடுத்த கிறுக்கலில் அக்காவின்ட கதை வரும் அது வரை பொறுமை.....பொறுமை

<p>

கனகாலம் உந்த வசனத்தை பாவிச்சு...... எண்டாலும் புத்தன்! நீங்கள் பேய்க்காய்தான் :D

எல்லா புகழும் அந்த காய்க்கே :D

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா போகுது ,தொடருங்கோ .யார் அந்த ஆங்கில வாத்தி ? சிலவேளை நாமளும் அவரிட்டை வந்திருப்பமல்லோ ?

காய் விழுத்தவும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் .

நன்றிகள் அர்ஜூன்,,நல்லூரில் இருந்த பிரபல ஆங்கில வாத்தி...நீங்கள் சொன்னது போல காய் விழுத்தவும் ஒரு திறமை வேணும்தான்..:D

,,நல்லூரில் இருந்த பிரபல ஆங்கில வாத்தி...

ஐயகோ..!

மானிப்பாயில இருந்து வைமன் ரோட்டுக்கு சைக்கிள் உழக்கின்னீங்களோ ??

முதலே எனக்குச் சந்தேகம் அவராத்தான் இருப்பார் என்டு.

"பிதுக்கி விட்டால்" என்ற வார்த்தைய அடிக்கடி பாவிச்சிருப்பாரே ? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் யாழில் உலாவுவதாக ஒரு கேள்வி?

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா பேக்காய் போலகிடக்கு அந்த நேரம்... :D தொடருங்கள் மிச்சத்தையும் படிக்கவேணும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ..!

மானிப்பாயில இருந்து வைமன் ரோட்டுக்கு சைக்கிள் உழக்கின்னீங்களோ ??

முதலே எனக்குச் சந்தேகம் அவராத்தான் இருப்பார் என்டு.

"பிதுக்கி விட்டால்" என்ற வார்த்தைய அடிக்கடி பாவிச்சிருப்பாரே ? :lol: :lol:

படிக்க வேணும் என்ற ஒரு ஆசைதான் ....சத்தியமா "காய்" பார்க்க போகவில்லை:D

புத்தன் அண்ணா பேக்காய் போலகிடக்கு அந்த நேரம்... :D தொடருங்கள் மிச்சத்தையும் படிக்கவேணும்..

வெகுவிரைவில் முற்றும்...நன்றிகள் சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடருக்கு நன்றிகள் புத்தன்.. :D ஏற்கனவே படித்துவிட்டேன். :unsure: ஆனால் அலுவலகத்தில் இருந்து திருட்டுத்தனமாக வாசித்திருந்ததால் கருத்திட முடியவில்லை..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிதந்தா மணியா படிப்பிப்பேன் என்று அடிக்கடி சொல்பவரா? அந்த ஆங்கிலவாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலம் இனிமையானது. இராணுவ அடக்குமுறை இல்லாவிட்டால் பலரது காதல்கள் கனிந்திருக்கும். சிங்கள, இந்திய இராணுவகாலங்களினால் பலர் உயிரைக் காப்பாற்ற பூமிப்பந்தின் பல்வேறு பகுதிக்கு சிதறி சென்றுவிட்டார்கள். இதனால் காதலன் எங்கே காதலி எங்கே என்று தெரியாமல் தங்களது முதல் காதலுடன் விரும்பாத வாழ்க்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடருக்கு நன்றிகள் புத்தன்.. :D ஏற்கனவே படித்துவிட்டேன். :unsure: ஆனால் அலுவலகத்தில் இருந்து திருட்டுத்தனமாக வாசித்திருந்ததால் கருத்திட முடியவில்லை..! :lol:

இசை நீங்களும் பேய்காய் போல கிடக்கு :Dஆபிசில இருந்து திருட்டுத்தனமா வாசிக்கிறீங்கள் நன்றிகள் இசை

மணிதந்தா மணியா படிப்பிப்பேன் என்று அடிக்கடி சொல்பவரா? அந்த ஆங்கிலவாத்தியார்.

நன்றிகள் நாட்டுக்கட்டை ....அந்தாள் ஒரு" மணிக்காய்"

அந்தக்காலம் இனிமையானது. இராணுவ அடக்குமுறை இல்லாவிட்டால் பலரது காதல்கள் கனிந்திருக்கும். சிங்கள, இந்திய இராணுவகாலங்களினால் பலர் உயிரைக் காப்பாற்ற பூமிப்பந்தின் பல்வேறு பகுதிக்கு சிதறி சென்றுவிட்டார்கள். இதனால் காதலன் எங்கே காதலி எங்கே என்று தெரியாமல் தங்களது முதல் காதலுடன் விரும்பாத வாழ்க்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூடகாதல்,டியுசன் காதல் எல்லாம் ஒரு இது (crush)....அது கனிந்தது குறைவு.....நன்றிகள் கந்தப்பு

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் எப்ப பாஸ் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.