Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெல்லச் சாகும் தமிழ் மொழி.....

Featured Replies

Edited by அலைமகள்

  • Replies 81
  • Views 6.3k
  • Created
  • Last Reply

[size=1]

[size=4]எமக்கு ஒரு நாடு அதற்கு ஒரு நல்ல தலைமை இருந்தால் மட்டுமே தமிழும் தமிழனும் பூவுலகில் வாழ்வார்கள். [/size][/size][size=1]

[size=4]இல்லை வாழ்ந்தார்கள் என்பதே மிஞ்சி இருக்கும். [/size][/size][size=1]

[size=4]மனம் அழுதது. ஆனால் காலம் இன்னும் கடக்கவில்லை. [/size][/size]

[size=4]இணைப்பிற்கு நன்றிகள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த தேசங்களில் மட்டுமல்லாது, தனது தேசத்தில் கூட, தமிழ் மொழி, எவ்வாறு சாகடிக்கப் படுகின்றது, என்பதை மிக அழகாக விளக்குகின்றது, இந்தக் காணொளி!

வெறும் சங்கங்களும், சபைகளும் தமிழ் மொழியை வளர்க்குமெனில், மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், பீஜித்தீவு, மொரிசியஸ், றிபுனியன் போன்ற தீவுகளில், தமிழ் வாழ வேண்டுமே!

ஆனால், உண்மை நிலை அதுவல்ல!

ஆயினும், மலையகத்தில் தமிழ் வாழ்கின்றது!

ஏனெனில் வீடுகளில், அவர்களின் குழந்தைகள் தமிழ் பேசுகின்றன!

யாரைப் பார்த்தாலும், அவர்களது மொழியிலேயே குரைக்கும் நாம், எமது உண்மையான குரலில் குரைப்பதற்கு மட்டும் தயக்கம் காட்டுகின்றோம்!

[size=4]இங்கே ஏன் சாகடிக்கப்படுகின்றது? [/size][size=1]

[size=4]எவ்வாறு நாம் தமிழை காப்பாற்றலாம்? [/size][/size][size=1]

[size=4]என்ற கேள்விக்கான தேடலை ஆராய்வது பயன்தரும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில இருக்கிற எத்தன பேரோட பிள்ளைங்க ஒழுங்கா தமிழ் கதைப்பினம்? விடை: பெரும் பாலும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இங்கே ஏன் சாகடிக்கப்படுகின்றது? [/size]

[size=1][size=4]எவ்வாறு நாம் தமிழை காப்பாற்றலாம்? [/size][/size]

[size=1][size=4]என்ற கேள்விக்கான தேடலை ஆராய்வது பயன்தரும். [/size][/size]

பீஜித் தீவுகளுக்குக், கரும்பு வெட்ட, முதலில் போனவன் தமிழனே!

அதைத் தொடர்ந்து, ஒட்டுண்ணியாகி, அவனுடன் சென்றவன் வட இந்தியன்!

ஆனால், அங்கு தமிழ் இல்லை. இந்தி கோலோச்சுகின்றது! அந்தத் தீவின், சுதேச மொழியில் கூட ஹிந்தி கலந்துள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்?

தாய்லாந்தில் , அரச பட்டாபிசேகத்தின் போது,இப்போதும் ;சிவபுராணம்' தான் பாடப் படுகின்றது!

ஆனாலும், அவர்களின், பல் பொருள் அங்காடிகளில், வணக்கம் என்பதற்குப் பதிலாக 'நமஸ்தே' என ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கின்றது! இவ்வளவுக்கும், அதிகமான வாடிக்கையாளர், புலத்துத் தமிழர்களே!

இங்கு எனது அயலவர்கள், பிஜித் தீவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்களைத் தமிழர் என்று கூறுவதில்லை! வட இந்தியா என்று கூறினார்கள்! ஆனால், அவர்கள் வீட்டில் ஒரு திருமணம், நடந்த முதல் நாள், பேத்திமார், தேங்காய்களை உருட்டி, தமிழில் நலங்கு பாடியதை, என் காதாலேயே கேட்டேன். எதற்காக இந்த வெட்கம்?

தமிழின் அடையாளம், திட்டமிட்ட முறையில் அழிக்கப் படுகின்றது!

காலத்திற்குக் காலம், வேறு வடிவங்களை, இந்த அழிப்பு எடுக்கின்றது!

தமிழ், நீச பாசை, சூத்திரர்களின் மொழி, என்பது ஒரு வகை!

தமிழனின் வரலாற்றுச் சுவடுகளின், திட்டமிட்ட அழிப்பு அல்லது 'திரிபு படுத்தப் படுதல்!

இறுதியாக, எம்மை, அடையாளப் படுத்த, எமக்கென ஒரு தேசம் இல்லை!

எமக்கான முடிவுகளை, இன்னொரு இனம் தான், எமக்காக எடுத்துக் கொண்டிருக்கின்றது!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில இருக்கிற எத்தன பேரோட பிள்ளைங்க ஒழுங்கா தமிழ் கதைப்பினம்? விடை: பெரும் பாலும் இல்லை

 

முதலில் யாழில் எழுதுபவர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கதைக்க தெரியுமோ என்று கேளுங்கோ சுண்டல் :lol: 

முதலில் யாழில் எழுதுபவர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கதைக்க தெரியுமோ என்று கேளுங்கோ சுண்டல் :lol: 

 

 

பச்சை.......................

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் தமிழ் தவிர எந்த மொழியிலும் கதைப்பதில்லை என்ற விதிமுறையை பெற்றோர்,மற்றும் அங்கு இருக்க கூடிய பெரியவர்கள் ஏற்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக சிறிய பிள்ளைகள் தமிழில் தாங்களும் கதைக்க தொடங்கி விடுவார்கள்...தமிழ் வகுப்புக்களிலும் பெரும் பாலும் கதைக்க பழகுகிறார்கள் என்று சொல்ல முடியாது..எழுத ஆரம்பிக்கிறார்கள்,எழுத்துக் கூட்டி ஏதாவது வாசிக்கிறார்கள்..ஆனால் கதைப்பது மிகவும் குறைவு.அத்தோடு வேண்டாத பழக்கவழக்கங்களை,ஊத்தை பேச்சுக்களை கற்றுக் கொண்டு வருகிறார்கள்...எனக்கும் அடிக்கடி சிறு பிள்ளைகளோடு பழகும் சந்தர்பங்கள் ஏற்படுதனால் அவர்களின் நடவடிக்கைகள் பற்றி அவதானித்து கொண்டதனால் சொல்கிறேன்.. முதலில் பிள்ளைகள் தமிழில் கதைக்க வேணும் அதன் பின் எழுத,வாசிக்கப் பழக்கலாம்..வீட்டில் ஆங்கிலம்,போகும் இடம் எல்லாம் ஆங்கிலம் என்றால் தனியாக பிள்ளைகளை குறை சொல்ல முடியாது...நான் சிறு பிள்ளைகளை கண்டால் எனக்கு ஆங்கிலம் தெரியாது,பிரெஞ் தெரியாது தமிழில் கதையுங்கோ என்றால் வேறு வழியில்லாமல் மெது,மெதுவாக கதைப்பார்கள்...அடிச்சு,குத்தித் தான் எங்கள் வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று இல்லை. பெற்றோரும் ஒரு விதிமுறைறை வைத்துக் கொண்டீர்களேயானால் பிள்ளைகள் இலகுவில் தமிழ் கற்றுக் கொள்வார்கள்...ஆனால் சிறு குழந்தைகளை நாங்கள் சொல்கிறம் பெரியவர்களோடு ,தமிழர்களோடு கதைக்கும் சந்தர்பத்தில் போது சொறி எனக்கு தமிழ் தெரியாது ஆங்கிலம் தான் தெரியும் என்று சொல்லி ஆங்கில மோகம் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்..அப்படியானவர்களை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது..

அதிகளவு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.

 

 

கூகிள் மொழிபெயர்ப்பு  சேவை அவ்வாறான ஒன்று.


இப்பொழுது உள்ள ஐபாட் இல்லை அன்றோய்த் அப்ஸ் மூலமும் தமிழை வளர்க்கலாம். பிள்ளைகள் கற்க சிறு கதைகளை, பாட்டுக்களை உருவாக்கலாம்.

இணைப்புக்கு நன்றி அலை.

வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டுமே பிள்ளைகள் தமிழ் கதைக்க பழகுவார்கள். வெறும் வகுப்புகளுக்கு போய் தமிழ் படிப்பதால் அதுவும் விஞ்ஞானம், கணிதம் மாதிரி ஒரு பாடமாக மட்டுமே அவர்களுக்குள் தோன்றும். வீட்டில் தமிழில் கதைக்கும் போது, பிள்ளைகளுக்கு பெரிய வார்த்தைகள் புரியாமல் போய்விடும் என்று தவிர்ப்பது கூட சரியல்ல. தமக்கு விளங்காத வார்த்தைகளை 'அதன் அர்த்தம் என்ன' என்று கேட்டு புரியமுயலும் தலைமுறை இது.




 

யாழ் களத்தில இருக்கிற எத்தன பேரோட பிள்ளைங்க ஒழுங்கா தமிழ் கதைப்பினம்? விடை: பெரும் பாலும் இல்லை

 

 


என் இரு பிள்ளைகளும் சரளமாக தமிழில் உரையாடுவார்கள்.

எம் பிள்ளைகள் தமிழில் கதைக்கின்றார்கள் தெரியுமோ என எழுதிப் பெருமைப்பட்டுக் கொள்வது கூட ஒரு வித மோசமான நிலைதான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில இருக்கிற எத்தன பேரோட பிள்ளைங்க ஒழுங்கா தமிழ் கதைப்பினம்? விடை: பெரும் பாலும் இல்லை

சுண்டல் எனது பிள்ளைகள் இருவரும் தமிழ் எழுத வாசிக்க பேசத்தெரியும். வீட்டில் தமிழில்தான் கதைப்பார்கள். எனது மகள் 8வயதில் யேர்மன் பள்ளியில் தமிழ்பற்றி எழுதிய 10வசனங்கள் இப்பவும் அந்தப்பள்ளியில் காத்து வருகிறார்கள்.அந்த 10வசனங்களும் தமிழில்தான் எழுதுவித்தார் ஆசிரியர்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

 பிள்ளைகள் வலு  கெட்டிக்காரர் . தாய் தந்தையருக்கு ஆங்கிலம் தெரியுமென்பதால் தமிழில்  கேட்டா லும் ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால் இங்க்லீஷ் தெரியாத் அம்மம்மாவிடம் .. நீங் கட( உங்கட )  கப் இல நான் குடிக்கலாமோ என்று கேட்பினம். காலை  ப த்து மணிக்கே அம்மம்மா 

சோறுதா ங்க அப்பதான் ஐஸ்  கிரீம் குடிக்கலாம் ( சோறு உண்ட பின் தான்  கிரீம் கிடைக்குமேன தெரியும்.)
 தம்பி ராசா போய்குளியுங்கோ (.பேரன் ). அம்மம் மா  ஹெட் ( தலை யிலா ) ...or  தோள் .
....அபார்ட் மென் இல் ...........fire அலாரம் அடிக்கிறது . அம்மம்மா சப்பாத்து போடு .. ஜாக்கெட் போடு .. வீட்டை பூட்டி வெளியே வா  என  இழுத்து செல்கிறான் குழந்தை ...வயதான பாட்டன் பாட்டி வீட்டில்  இருந்தால் ஓரளவு தமிழ் பேசுவார்கள். ( தாய் தந்தை அது அநாகரிகம்   என கருதாவிட்டால்.).. வில்லங்க படுத்தி  தமிழ்  வகுப்புக்கு விட்டாலும் ஒரு வயது  வர அதன் கடுமை ( மனனம்செய் )தாங்க்காமல்விட்டுவிடுவர்கள். தமிழ்   தாய்ப் பாலுடன்  சேர்ந்து ஊட்டப்பட வேண்டும்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணாக்கு ஷாந்தி அக்காக்கும் hats off to you

ஆஸ்திரேலியா சரியான மோசம் அடுத்த ஒரு பரம்பரை முற்று முழுதாக மொழி தெரியாமலே வளர்ந்து வருது இங்கு சிலர் விதி விலக்கு

பிரான்ஸ் German Swiss பெற்றோர்களை இந்த விடையத்தில் பாராட்டனும் அங்க பிறந்து வளர்ந்த பொண்ணுங்க எல்லாம் என்ன மாதிரி தமிழ் கதைக்கினம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரொம்ம கஸ்ரப் படுறேன்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழில் எழுதுபவர்களுக்கு ஒழுங்காகத் தமிழ் கதைக்க தெரியுமோ என்று கேளுங்கோ சுண்டல் :lol:

அதானே அப்பிடி கேளுங்க

சுண்டல் ஒண்டு தான் இங்க அழகிய தமிழில் எழுத கூடியவன் மிச்ச ஆக்கள் எல்லாம் வேஸ்ட் :D

 

 

நான் ரொம்ம கஸ்ரப் படுறேன்

சாரி நாங்க லோன் கொடுக்கிறல்ல

 

 

 

 

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தாம் பிள்ளைகளுடன் தமிழில் கதைத்து தமது பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்ப்பித்தால் ஓரளவேனும் அழிவிலிருந்து காக்கலாம். பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் தமிழர் எமது மொழி தமிழ் என்பதை இரு தடவையாவது சொல்வோமானால் பிள்ளைகள் மனதில் அது பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். மிக முக்கியமான விடயம் என்னவெனில் எமது பிள்ளைகளுக்கு நாம் தமிழில் பெயர் வைப்பது. பாஸ்போர்ட் இல் நாமும் தமிழில் ஒப்பமிட்டு அவர்களையும் ஒப்பமிட வைப்பது. எனது பாஸ்போர்ட் அடுத்த வருடம் முடிவடைகிறது. நான்கூட முட்டாளாக ஆங்கிலத்தில் ஒப்பம் இட்டிருக்கிறேன். ஆனால் எனது பிள்ளைகள் தமிழில் ஒப்பமிட்டு என்னைத்  குனிய வைத்தார்கள். இந்தத் திரியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தாம் பிள்ளைகளுடன் தமிழில் கதைத்து தமது பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்ப்பித்தால் ஓரளவேனும் அழிவிலிருந்து காக்கலாம். பிள்ளைகளுக்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் தமிழர் எமது மொழி தமிழ் என்பதை இரு தடவையாவது சொல்வோமானால் பிள்ளைகள் மனதில் அது பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். மிக முக்கியமான விடயம் என்னவெனில் எமது பிள்ளைகளுக்கு நாம் தமிழில் பெயர் வைப்பது. பாஸ்போர்ட் இல் நாமும் தன்மிளில் ஒப்பமிட்டு அவர்களையும் ஒப்பமிட வைப்பது. எனது பாஸ்போர்ட் அடுத்த வருடம் முடிவடைகிறது. நான்கூட முட்டாளாக ஆங்கிலத்தில் ஒப்பம் இட்டிருக்கிறேன். ஆனால் எனது பிள்ளைகள் தமிழில் ஒப்பமிட்டு என்னைத் தலைகுனிய வைத்தார்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

Wow

  • கருத்துக்கள உறவுகள்

கால் நூற்றாண்டு கால, வெளிநாட்டு வாழ்வு! அத்துடன் எனது மகள், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே, புலத்தில்!

 

ஆனால், அவளால், நல்ல தமிழில்,(செல்லத் தமிழ் அல்ல), கதைத்து, உரையாட முடியும்!

 

இதற்கு ஒரே காரணம், நாங்கள் வீட்டில், தமிழில் கதைப்பது மட்டும் தான்! (சண்டை பிடிப்பதும் கூடத் தமிழில் தான்! :wub: )

 

 

இணைப்புக்கு நன்றி அலை.

வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டுமே பிள்ளைகள் தமிழ் கதைக்க பழகுவார்கள். வெறும் வகுப்புகளுக்கு போய் தமிழ் படிப்பதால் அதுவும் விஞ்ஞானம், கணிதம் மாதிரி ஒரு பாடமாக மட்டுமே அவர்களுக்குள் தோன்றும். வீட்டில் தமிழில் கதைக்கும் போது, பிள்ளைகளுக்கு பெரிய வார்த்தைகள் புரியாமல் போய்விடும் என்று தவிர்ப்பது கூட சரியல்ல. தமக்கு விளங்காத வார்த்தைகளை 'அதன் அர்த்தம் என்ன' என்று கேட்டு புரியமுயலும் தலைமுறை இது.

 

 

 

என் இரு பிள்ளைகளும் சரளமாக தமிழில் உரையாடுவார்கள்.

எம் பிள்ளைகள் தமிழில் கதைக்கின்றார்கள் தெரியுமோ என எழுதிப் பெருமைப்பட்டுக் கொள்வது கூட ஒரு வித மோசமான நிலைதான்.

 

 நன்றாக என் பிள்ளைகள் கதைப்பார்கள், சிறுவயது இப்பதான் எழுத வாசிக்க தொடங்குகின்றனர், காலம் தாய்மொழியை பேசுகின்றார்கள் என பெருமைப்பட

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சூப்பர் புங்கை அண்ணா பாராட்டுக்கள்

ஏனைய யாழ் கள அப்பாமார் அம்மாமார் வந்து சொல்லுங்க உங்கட பிள்ளையால் தமிழ் பேசுவினமா?

Visu அண்ணா

அர்ஜுன் அண்ணா

தமிழ் Sri அண்ணா

Kums தாத்ஸ் எல்லாரும் வாங்க

நன்றாக என் பிள்ளைகள் கதைப்பார்கள், சிறுவயது இப்பதான் எழுத வாசிக்க தொடங்குகின்றனர், காலம் தாய்மொழியை பேசுகின்றார்கள் என பெருமைப்பட

வாழ்த்துக்கள் வாழ்த்துகள் பாராட்டுக்களும்

முதலில் இந்த வீடியோ பற்றி , தொழில் நுட்பம் மிக நன்று, கரு வெறும் சப்பை.தமிழ் சாகின்றது என்று ஒப்பாரிவைப்பது புலம் பெயர்ந்த தமிழர்களுக்குள் இப்ப ஒரு பாஷன் ஆகிவிட்டது.முன்நூறு வருடங்களுக்கு மேலாகஅன்னியர் ஆட்சியில் அழியாத தமிழ் இனி அழிய போகுதாம். புலம் பெயர்ந்த இடத்தில் தமிழை பிள்ளைகளுக்கு கற்பிப்பது மிக நல்லவிடயம் .ஒன்று தாய் மொழியை மறக்காமல் இருக்க ,அடுத்து எந்த மொழிஎன்றில்லை கூடுதல் தெரிந்திருப்பது நல்லது . நம்மட இருவருக்கும் தமிழ் அப்படி இப்படித்தான் ,மூத்தவர் நன்றாக தமிழ் பாட்டு பாடுவார் .அவராக சொந்த ஈடுபாட்டில் உருவானது அது. இரண்டாம் ஆள் அம்மம்மாவுடன் வளர்ந்ததால் நான்றாக விளங்கும். இருவரும் இடைக்கிடை தமிழ் பள்ளிகூடம் போனதும் நின்றதுமாக போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழை வளர்க்க தமிழ் திரைப்பட பாடல்களும் உதவுகின்றன என்பதனை யாராலும் மறக்க முடியா நன்றிகள் annaa

Next....

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் சுண்டல் மச்சி வாய் திஸ் கொலை வெறி அப்படியான பாடல்கள் வந்தா தமிழ் வளக்க இன்னும் கொஞ்சம் சுகமாய் இருக்கும்டா...போடா நீயும் உன்ர தமிழ் சினிமா பாட்டும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.