Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிர்க்கமுடியா ஞாபகங்கள்

Featured Replies

          இப்பொழுது எல்லாம் வீடு கலகலப்பு குறைந்து போகிறது.மகளின் பிரிவுடன் ஏதோ எழுததொடங்கிவிட்டேன்.எனக்கு ஒரே பிள்ளை ஜான்சி .

ஜான்சி இப்போது போலந்தில் மருத்துவ படிப்பு படிக்கிறாள்.ஜான்சிக்கு இப்ப பத்தொன்பது வயது.நல்ல துடியாட்டம்.தமிழ் கதைப்பாள் ஆனால் 
எழுத வாசிக்கமாட்டாள்.நானும் தமிழ் பாட்டுகளைப்போட்டு கேள் கேள் 
எண்டாள். போங்க அப்பா  நல்லா இல்லை அப்பா என்னுறாள்.கிறிஸ்மஸ் லீவில இரண்டு கிழமை நின்றவள் இப்ப மனிசி 
அவளைக்கூட்டிக்கொண்டு   போலந்துக்கு போயிட்டுது.மனிசி வாற கிழமைதான் வரும்.இன்றைக்கு ஒரு கதையை யாழில வாசிச்சன் எனக்கும் ஏதோ எழுதோணும் மாதிரி கிடக்குது. 
 
 
நானும் யாழ்ப்பாணம்தான். பள்ளிக்கூட படிப்பு எனக்கு சரிவரயில்லை.
ஒரு மினி பஸ்சில கொண்டட்டறாய் வேலை செய்தன்.அப்பதான் விக்டோரியாவை சந்திச்சன். அந்த காலம் சொல்லி வேலையில்லை . 
அவளுக்காகவே விடிஞ்ச காலங்கள்.அவள் பள்ளிக்கூடம் எங்கிட பஸ்சில்தான் வருவாள்.நான் அவள் பஸ்சுக்குள்ள இருக்கைக்க என்னென்ன பாட்டுக்கள் போடவேணும் எண்டு தீர்மானிச்சு கசற்றை 
கிளி அண்ணையிட்டை கொடுத்திடுவன்.ஒரே காதல் பாட்டுத்தான்.அவள் 
பள்ளிக்கூடத்தடியில இறங்கின உடன மனமும் அவளுக்கு பின்னாலேயே 
போயிடும்.காதலிச்ச ஆட்களுக்குத்தான் அதைப்பற்றி தெரியும்.எழுதி விளங்கப்படுத்த ஏலாது.   
நான் அவளை காதலிக்கிறதை அவள் விளங்கிட்டாள்.அவளிட பிரெண்ட்ஸ் எல்லாம் அவளை நக்கல் அடிக்கிறதை அவதானிச்சன்.
இருந்தாப்போல ஒரு கிழமையாய் எங்கிட பஸ்சில அவள் வரயில்லை.
அந்தக்கிழமை என் மனம் பட்ட பாட்டை எப்படி எழுதுறது.
அடுத்த கிழமை அவள் வழமை மாதிரி வந்தாள்.  ஒரு காதல் கடிதத்தை 
எழுதி, கிட்டத்தட்ட எல்லாம் சினிமா பாட்டு வசனங்கள்தான்.எட்டு நாளுக்கு பிறகு மிச்ச காசோட குடுத்தனான்.அவள் பதிலே தரயில்லை.
நான் சொன்னால் நம்ப மாட்டிங்கள் சின்ன தாடி வளர்த்தன். ஒரு நாள் 
பஸ் காசு தராமையே ஏறினாள். நானும் கேட்கயில்லை.இறங்கைக்க
காசு தந்தாள்.வேண்டாம் எண்டன்.இல்லை என்று கையை நீட்டினாள் .
காசுடன் ஒரு துண்டும் இருந்தது. 
துண்டை திருப்பித் திருப்பி பார்த்தேன்.சனிக்கிழமை பின்னேரம் நாலு மணிக்கு வீட்டை வரச்சொல்லி , வீட்டு முகவரியும் இருந்தது.எனக்கு 
ஏற்கனவே அந்த வீடு தெரியும்.அவளைப்பார்க்க குறைஞ்சது ஆயிரம் தடவைகள் அந்த ரோட்டால் போயிருக்க மாட்டேனா.
சனிக்கிழமை பின்னேரம் ஏப்படா வரும் என்று இருந்து அவையின்ர வீட்டை 
போனன். அவளுக்கு தாய் மட்டும்தான்.கடை ரோல்ஸ் ,வடையெல்லாம் 
வாங்கி வைச்சிருந்தினம்.இன்றைக்கும் அன்றைக்கு சாப்பிட்ட சாப்பாட்டின் சுவை நாக்கில் இருக்கிறது.தாய் கல்யாணம் கட்டச்சொல்லி சொன்னா.
அவவுக்கு என்னில நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கோணும்.நாம் ஓம் என்று சொல்லிட்டுவந்திட்டன்.
 
எங்கட வீட்டில கல்யாணத்தைப்பற்றி கதைக்க வீட்டுல அல்லோல கல்லோலம் தொடங்கிற்றுது. யாழ்ப்பாணத்துபிரச்சனைகள் உங்களுக்கு 
தெரியும்தானே.நான் போய் கல்யாணம் கட்டினன்.வீட்டுக்காரர் என்னை கைகழுவி விட்டிட்டினம்.அப்புவும் அண்ணனும் சொன்னவை தாங்கள் 
சாகுமட்டும் தங்கலில முழிக்கக்கூடாது என்று. பிறகு அக்காவை டவுனில 
கண்டனான்.அவ கதைக்கயில்லை போயிட்டா.இந்தியன் ஆமி பிரச்சனையும் 
தொடங்கிற்றுது . சரியாய் கஷ்டப்பட்டம். ஆறு வருசத்திற்கு பிறகு ஜான்சி 
பிறந்தாள்.
 
யாழ்ப்பாணத்தில இருந்து எல்லோரும் இடம்பெயரைக்க நாங்களும் 
சாவகச்சேரிக்கு போனம்.ஒரு பள்ளிக்கூடத்தில இருந்தம். அப்ப ஜான்சிக்கு 
இரண்டு வயது.வயிற்றோட்டம் வந்து செப்திசீமியா வருத்தம் வந்திட்டுது.
சாவகச்சேரி ஆஸ்பத்திரியில வைச்சிருந்தம். உடம்பெல்லாம் ஊசியால 
குத்தியும் நரம்பெடுக்கேலாமல் போச்சு.ஜான்சிக்கு சுயநினைவில்லை.
மூக்கால வயரெல்லாம் போட்டு பிள்ளையை பார்க்கேலாது.டாக்டர் சொல்லிட்டார் பிள்ளை தப்பாது .விருப்பமெண்டால் வீட்ட கொண்டு போங்கோ.விக்டோரியா குளரத் தொடங்கிட்டாள்.இன்றைக்கும் அந்த நாளை நினைச்சால் நெஞ்சு பதைக்குது.
நேசிதான்    ஒப்புரேசன் வைத்தியர் சுயந்தநிட்ட போய் பிரச்னையை சொன்னா.அவர் உடன கொண்டு வரச் சொல்லிட்டார்.  காலில கத்தி வைச்சு சேலைன் ஏத்திச்சினம்.மூன்று நாள் அந்த வோட்டுல வைச்சிருந்தம்.மூன்றாம் நாள்தான் கண்முழிச்சாள் . அடுத்த வருசமே நான் 
வெளிநாட்டுக்கு வந்திட்டன். மூன்று வருசத்தால விக்டோரியாவும், ஜான்சியும் வந்திட்டினம்.எங்கட வாழ்க்கை நல்லாப்போனது. இப்ப 
மகள் வெளிக்கிட்டதும் பழைய நினைவுகள் ஆட்டிப்படைக்குது.வந்ததுக்கு 
ஒருக்காலும் நாட்டுக்கு போகயில்லை.இன்றைக்கு கடைக்கு போகயில்லை.
பியரோட நாள் போயிடும். 
 
 

 

Edited by vili

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உணர்வுகளை எவ்வித ஒழிப்பு மறைப்பும் இல்லாது எம்முடன் பகிர்ந்துள்ளீர்கள் விழி. அந்தத் துணிவைப் பாராட்டுகிறேன். எழுத்து நடையில் மாற்றம் கொண்டுவந்தால் உங்கள் கதையும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவப் பகிர்வு மிகவும் நன்றாக உள்ளது!

ஒரு பேச்சு வாக்கிலான எழுத்து நடை, வாசிக்க நல்லாயிருக்கு!

 

பியரை அடிச்சபடியே, எழுதிட்டிங்க போல கிடக்கு!

இடமிருந்து வலமாகப் போகுது வசனங்கள்!

 

தொடர்ந்து எழுதுங்கள்! :D  

அழகாக எழுதி இருக்கிறீங்கள். எப்பவுமே அனுபவகதைகளுக்கு ஒரு சுவை இருக்கும். அது மற்றவர்களையும் அனுபவங்களை எழுத தூண்டும்.

 

விழி உங்கள் அனுபவ பகிர்வு கதைக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  இப்பொழுது எல்லாம் வீடு கலகலப்பு குறைந்து போகிறது.மகளின் பிரிவுடன் ஏதோ எழுததொடங்கிவிட்டேன்.எனக்கு ஒரே பிள்ளை ஜான்சி .

ஜான்சி இப்போது போலந்தில் மருத்துவ படிப்பு படிக்கிறாள்.ஜான்சிக்கு இப்ப பத்தொன்பது வயது.நல்ல துடியாட்டம்.தமிழ் கதைப்பாள் ஆனால் 
எழுத வாசிக்கமாட்டாள்.நானும் தமிழ் பாட்டுகளைப்போட்டு கேள் கேள் 
எண்டாள். போங்க அப்பா  நல்லா இல்லை அப்பா என்னுறாள்.கிறிஸ்மஸ் லீவில இரண்டு கிழமை நின்றவள் இப்ப மனிசி 
அவளைக்கூட்டிக்கொண்டு   போலந்துக்கு போயிட்டுது.மனிசி வாற கிழமைதான் வரும்.இன்றைக்கு ஒரு கதையை யாழில வாசிச்சன் எனக்கும் ஏதோ எழுதோணும் மாதிரி கிடக்குது. 
 
 
நானும் யாழ்ப்பாணம்தான். பள்ளிக்கூட படிப்பு எனக்கு சரிவரயில்லை.
ஒரு மினி பஸ்சில கொண்டட்டறாய் வேலை செய்தன்.அப்பதான் விக்டோரியாவை சந்திச்சன். அந்த காலம் சொல்லி வேலையில்லை . 
அவளுக்காகவே விடிஞ்ச காலங்கள்.அவள் பள்ளிக்கூடம் எங்கிட பஸ்சில்தான் வருவாள்.நான் அவள் பஸ்சுக்குள்ள இருக்கைக்க என்னென்ன பாட்டுக்கள் போடவேணும் எண்டு தீர்மானிச்சு கசற்றை 
கிளி அண்ணையிட்டை கொடுத்திடுவன்.ஒரே காதல் பாட்டுத்தான்.அவள் 
பள்ளிக்கூடத்தடியில இறங்கின உடன மனமும் அவளுக்கு பின்னாலேயே 
போயிடும்.காதலிச்ச ஆட்களுக்குத்தான் அதைப்பற்றி தெரியும்.எழுதி விளங்கப்படுத்த ஏலாது.   
நான் அவளை காதலிக்கிறதை அவள் விளங்கிட்டாள்.அவளிட பிரெண்ட்ஸ் எல்லாம் அவளை நக்கல் அடிக்கிறதை அவதானிச்சன்.
இருந்தாப்போல ஒரு கிழமையாய் எங்கிட பஸ்சில அவள் வரயில்லை.
அந்தக்கிழமை என் மனம் பட்ட பாட்டை எப்படி எழுதுறது.
அடுத்த கிழமை அவள் வழமை மாதிரி வந்தாள்.  ஒரு காதல் கடிதத்தை 
எழுதி, கிட்டத்தட்ட எல்லாம் சினிமா பாட்டு வசனங்கள்தான்.எட்டு நாளுக்கு பிறகு மிச்ச காசோட குடுத்தனான்.அவள் பதிலே தரயில்லை.
நான் சொன்னால் நம்ப மாட்டிங்கள் சின்ன தாடி வளர்த்தன். ஒரு நாள் 
பஸ் காசு தராமையே ஏறினாள். நானும் கேட்கயில்லை.இறங்கைக்க
காசு தந்தாள்.வேண்டாம் எண்டன்.இல்லை என்று கையை நீட்டினாள் .
காசுடன் ஒரு துண்டும் இருந்தது. 
துண்டை திருப்பித் திருப்பி பார்த்தேன்.சனிக்கிழமை பின்னேரம் நாலு மணிக்கு வீட்டை வரச்சொல்லி , வீட்டு முகவரியும் இருந்தது.எனக்கு 
ஏற்கனவே அந்த வீடு தெரியும்.அவளைப்பார்க்க குறைஞ்சது ஆயிரம் தடவைகள் அந்த ரோட்டால் போயிருக்க மாட்டேனா.
சனிக்கிழமை பின்னேரம் ஏப்படா வரும் என்று இருந்து அவையின்ர வீட்டை 
போனன். அவளுக்கு தாய் மட்டும்தான்.கடை ரோல்ஸ் ,வடையெல்லாம் 
வாங்கி வைச்சிருந்தினம்.இன்றைக்கும் அன்றைக்கு சாப்பிட்ட சாப்பாட்டின் சுவை நாக்கில் இருக்கிறது.தாய் கல்யாணம் கட்டச்சொல்லி சொன்னா.
அவவுக்கு என்னில நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கோணும்.நாம் ஓம் என்று சொல்லிட்டுவந்திட்டன்.
 
எங்கட வீட்டில கல்யாணத்தைப்பற்றி கதைக்க வீட்டுல அல்லோல கல்லோலம் தொடங்கிற்றுது. யாழ்ப்பாணத்துபிரச்சனைகள் உங்களுக்கு 
தெரியும்தானே.நான் போய் கல்யாணம் கட்டினன்.வீட்டுக்காரர் என்னை கைகழுவி விட்டிட்டினம்.அப்புவும் அண்ணனும் சொன்னவை தாங்கள் 
சாகுமட்டும் தங்கலில முழிக்கக்கூடாது என்று. பிறகு அக்காவை டவுனில 
கண்டனான்.அவ கதைக்கயில்லை போயிட்டா.இந்தியன் ஆமி பிரச்சனையும் 
தொடங்கிற்றுது . சரியாய் கஷ்டப்பட்டம். ஆறு வருசத்திற்கு பிறகு ஜான்சி 
பிறந்தாள்.
 
யாழ்ப்பாணத்தில இருந்து எல்லோரும் இடம்பெயரைக்க நாங்களும் 
சாவகச்சேரிக்கு போனம்.ஒரு பள்ளிக்கூடத்தில இருந்தம். அப்ப ஜான்சிக்கு 
இரண்டு வயது.வயிற்றோட்டம் வந்து செப்திசீமியா வருத்தம் வந்திட்டுது.
சாவகச்சேரி ஆஸ்பத்திரியில வைச்சிருந்தம். உடம்பெல்லாம் ஊசியால 
குத்தியும் நரம்பெடுக்கேலாமல் போச்சு.ஜான்சிக்கு சுயநினைவில்லை.
மூக்கால வயரெல்லாம் போட்டு பிள்ளையை பார்க்கேலாது.டாக்டர் சொல்லிட்டார் பிள்ளை தப்பாது .விருப்பமெண்டால் வீட்ட கொண்டு போங்கோ.விக்டோரியா குளரத் தொடங்கிட்டாள்.இன்றைக்கும் அந்த நாளை நினைச்சால் நெஞ்சு பதைக்குது.
நேசிதான்    ஒப்புரேசன் வைத்தியர் சுயந்தநிட்ட போய் பிரச்னையை சொன்னா.அவர் உடன கொண்டு வரச் சொல்லிட்டார்.  காலில கத்தி வைச்சு சேலைன் ஏத்திச்சினம்.மூன்று நாள் அந்த வோட்டுல வைச்சிருந்தம்.மூன்றாம் நாள்தான் கண்முழிச்சாள் . அடுத்த வருசமே நான் 
வெளிநாட்டுக்கு வந்திட்டன். மூன்று வருசத்தால விக்டோரியாவும், ஜான்சியும் வந்திட்டினம்.எங்கட வாழ்க்கை நல்லாப்போனது. இப்ப 
மகள் வெளிக்கிட்டதும் பழைய நினைவுகள் ஆட்டிப்படைக்குது.வந்ததுக்கு 
ஒருக்காலும் நாட்டுக்கு போகயில்லை.இன்றைக்கு கடைக்கு போகயில்லை.
பியரோட நாள் போயிடும்


நன்றாக இருக்கு. இழுந்தடிக்காலமல் சிம்பிளா கதையை சொல்லி முடித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள், அடிக்கடி பகிருங்கள் 

நன்றிகள் விலி.
சாதாரணமாக எல்லா தந்தையர்களுக்கும் மகளை பிரியும்பொழுது வாற துயரம் உங்களுக்கும் வந்துள்ளது. அதையும் கடந்து செல்வீர்கள்.


மருத்துவராக வர இருக்கும் மகளுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்.
இப்பதான் பார்த்தன் கணக்க எழுத்துப்பிழைகள்.
பொறுத்தருள்வீர். 
  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பாசம் தெரிகிறது உங்கள்முயற் சிக்கு பராட்டுக்கள். எழுத  முன் setting  ....ஐ .........சரிபாருங்கள்.
விரைவில அடுத்த கதை வரவேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களாவது ஒரு நிறைவேறிய காதல் கதையை சொன்னீங்களே.பாராட்டுக்கள்.

கதை நல்லாய் எழுதுயிருக்கிறீர்கள், தொடர்ந்தும் எழுதுங்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இன்னுமொரு உண்மையான உறவை சந்திக்கின்றேன். வணக்கம் விலி :)

  • கருத்துக்கள உறவுகள்

விலி(ழி) ,வித்தியாசமான பதிவொன்று. பாராட்டுக்கள். யாழ்களம் அண்மைக்காலமாக ஒரே தோற்ற அல்லது சொல்லாத நிறைவேறாத காதல்கதைகளையே கொண்டு வருகிறது. ஆனால் நீங்கள் வென்ற உங்கள் வாழ்க்கைக்காதலை பகிர்ந்திருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விழி நல்ல அனுபவப் பகிர்வு.

 

இந்த செப்ரிசீமியா என்பது ஒரு நேரத்தில் ஏற்படும் பல தொற்றுங்கள். இதன் தாக்கம் 1990 களில் யாழ்ப்பாணத்தில் (கோட்டை அடிபாடுகளின் போது) சிங்கள விமானப்படையால் வீசப்பட்ட மலக் குண்டுகளின் பின் அதிகமாக இருந்து வருகிறது. பல குழந்தைகள் மருத்துவர்களின் கவனக் குறைவுகளால்.. மரணத்தையும் தழுவி இருந்தனர்.

 

ஆனால் செப்ரிசீமியா குணப்படுத்தக் கூடிய ஒரு நிலை. சரியான மருத்துவம் அளிக்கப்பட்டால் குணப்படுத்தலாம்.

 

அது சரி ஏன் உங்கள் ஆக்கத்தை.. அரேபிய வடிவில்.. (alignment) இல் பதிவு செய்திருக்கிறீர்கள்.

 

மேலும் அண்மைக் காலமாக நம்ம புலம்பெயர் தமிழர்களிடம்... வாழும் நாடுகளில் மருத்துவத்துறையில்.. நுழைய முடியாத பட்சத்தில்.. கிழக்கு ஐரோப்பியாவில் மருத்துவம் படிப்பிக்கும் வியாதி பலமாகத் தொற்றியுள்ளது. அப்படியான ஒரு நிலையா உங்களதும். இல்ல.. மகளுக்கு மருத்துவராக இருந்த இயல்பான விருப்பை எப்படியாவது நிவர்த்திக்க படிப்பிக்கிறீங்களா..??!

 

பல தமிழர்கள் மந்தைகள் போல.. புலம்பெயர்ந்தும்.. மருத்துவம்.. பொறியியல் என்று தான் கிடக்கிறார்கள்.. அப்படியா நீங்களும்.. என்ற கேள்வி எழுகிறது. உலகம் மாறி வருகிறது. எதிர்காலத்தில் ஆன்லைன் மருத்துவர்கள் உருவாகிவிடுவார்கள். அப்புறம் வேலை இல்லாத பிரச்சனைகளும் இத்துறையிலும் எட்டிப்பார்க்கலாம். மேலும்.. மருத்துவத்துறையில் வேலை செய்வது நீண்ட பொறுப்புக் கூறலை கொண்டதாக ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. கெளரவத்துக்காக மருத்துவம் படிப்பிப்பது ஒரு மூடத்தனம். அதை விரும்பி படிக்கிறவை மட்டும் தான் அதனை தொழில் ரீதியில் அர்ப்பணிப்போடு பாவிக்க முடியும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பியரை பருகுங்கள்  அப்பிடியே எங்களுக்கான அடுத்த கதையை  பகிருங்கள் 

  • தொடங்கியவர்

நண்பர்களே வந்துவிட்டேன். தங்களது ஆலோசனைகளுக்கும் ,

கருத்திடல்களுக்கும் மிக்கநன்றி.

மனுசி இன்றுதான் வந்தா.பிள்ளை இல்லாதது ஒன்றும் இல்லாததுபோல்

இருக்கிறது.மனுசி வருவா என்று இன்றுதான் சமைச்சனான்.இதுவரை

கடைகளோட சமாளிச்சிட்டன்.நாளைக்கு மனுசிக்கும் வேலை.மீண்டும்

சந்திக்கிறேன்

நேரம் கிடைக்கின்றபொழுது எழுதுங்கள் .  எழுத எழுத இன்னும் மெருகேறும் . நம்பியவளிற்கும் உங்களிற்குமான உறவையும் ,  அதனால் வந்த புதிய உறவிற்குமான உணர்ச்சி வெளிப்பாடுகளைச் சொல்லியிருக்கின்றீர்கள் . மேலும் மேலும் பல நல்ல கதைகளைத்தர மனமார வாழ்த்துகின்றேன் :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.