Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் யாதுமாகி நிற்கும் தோழி: கவிதை-நிழலி

Featured Replies

பேராவலுடன் பெய்யும் பெருமழையாய்
எனக்குள் இறங்கிச் செல்கின்றாள்
என்னுயிர்த் தோழி

 

என்
வரண்ட காடுகளுக்கிடையே
பாய்ந்து செல்லும்
பெரும் ஆறாய்
பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும்
பனிக்காற்றாய்
மனவெளிகளில் புரண்டு எழும்
கடலலைகளாய்
எப்பவும் எனக்குள்
வியாபித்த பெரும் பொருளாய்
நீக்கமற நிற்கின்றாள்
என் தோழி

 

ஆயிரம் முத்தங்களை பதியும்
இரு இதழ்களில்
கோடி கணங்களை உறையவிடும்
தந்திரக்காரி
மார்புகளின் இடையே
என்னை சோழிகளாய் சுழட்டி
எறிந்து வித்தைகாட்டும்
சாகசக்காரி
தன் வாசல்கதவுகளால்
வாரிச் சுருட்டி தனக்குள்
பொதித்து இன்னும் இன்னும் என
என்னை தனக்குள் பருகிக் களிக்கும்
பேராசைக்காரி

 

ஆற்றாத் துயர் மேவி
நான் எனைத் தொலைந்த
கணங்களில் எல்லாம்
ஆயிரம் விரல்கள் கொண்டு
தலை தடவி விடும்
கோடி அன்னை.
பேருவுகை கொண்டு ஆர்பரிக்கும்
வேளைகளில் பெரும் மெளனம்
கொண்டே சிறு புன்னகை சிந்திடும்
பெரும் அணை.

 

அடியே,
மெய்யுருகி மொழியுருகி
நானுருகி போனது எல்லாம்
உன் வருகையின் பின் தானடி,
ஆயிரம் காலங்கள் பறந்தபின்
நான் அமர்ந்த கிளையும்
நீதானடி

 

 

தோழியே,
இன்னும் இருக்கடி
நாமிருவரும்
பருகித் தீர்க்க கோடி
தீர்த்தங்கள்
காத்து இருக்கடி
இணைந்து கடக்க
ஆயிரம் வருடங்கள்...

 

:நிழலி சனவரி 28,2013

அடியே,

மெய்யுருகி மொழியுருகி

நானுருகி போனது எல்லாம்

உன் வருகையின் பின் தானடி,

ஆயிரம் காலங்கள் பறந்தபின்

நான் அமர்ந்த கிளையும்

நீதானடி

 

ஆணாகப் பிறந்தவனின் எழுச்சி மென்மைகளால் கட்டியெழுப்பப்படுவது வரலாறு .  இதை மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் . சத்தான கவிதைக்கு நன்றி நிழல் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாதுமாகி நிற்கிற தோழியால 'நீங்கள் 'காதலாகி கசிந்துருகி நிற்கிறீங்கள் நிழலி அண்ணன்:)

 

தமிழும்,நயமும் விளையாடுது!!! விளையாடட்டும்!......:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதம், வார்த்தைகளில் விளையாடியுள்ளீர்கள்.

அழகான தமிழ்நடை வாழ்த்துக்கள் அண்ணா, தரமான கவிதை தந்ததுக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் முத்தங்களை பதியும்

இரு இதழ்களில்

கோடி கணங்களை உறையவிடும்

தந்திரக்காரி

மார்புகளின் இடையே

என்னை சோழிகளாய் சுழட்டி

எறிந்து வித்தைகாட்டும்

சாகசக்காரி

தன் வாசல்கதவுகளால்

வாரிச் சுருட்டி தனக்குள்

பொதித்து இன்னும் இன்னும் என

என்னை தனக்குள் பருகிக் களிக்கும்

பேராசைக்காரி

 

தேனருந்தும் வண்டு,

தேனின் போதையில் மயங்க,

அதன் கூரிய நகங்களில்,

மகரந்தத் துகள்கள்,

கூடுகள் கட்டும்!

 

வண்டின் மயக்கத்தில்,

தனது பரம்பரையின்,

நீட்சியொன்றை,

நிகழ்த்தி முடித்த பெருமிதத்தில்,

ஆறுதல் பெருமூச்சொன்று,

அந்த மலரிலிருந்து விடை பெறும்!

 

மலருக்கும் வண்டு வேண்டும்!

வண்டுக்கும் மலர் வேண்டும்!

பிரித்தளிக்க முடியாத,

வைரம் பாய்ந்த புனிதம், அது! 

 

 

அந்த உணர்வுகளையும், ஏக்கங்களையும், இத்தனை அழகுடன் கவிதையில் வடிக்க, அந்த உணர்வுகளை, மனப்பூர்வமாக அனுபவித்தவனால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்!

நன்றிகள், நிழலி!

 

 

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது..றோட்டுவழிய வேலையிலை எண்டு பாத்து வீணிவடிக்கிறதை விட்டிட்டு கண்டகண்டதுகளை விட்டிட்டு இப்பவாவது அக்காவின் அருமை புரிந்ததே...மகிழ்ச்சி...அருமையான கவிதை... :)

  • தொடங்கியவர்

அடியே,

மெய்யுருகி மொழியுருகி

நானுருகி போனது எல்லாம்

உன் வருகையின் பின் தானடி,

ஆயிரம் காலங்கள் பறந்தபின்

நான் அமர்ந்த கிளையும்

நீதானடி

 

ஆணாகப் பிறந்தவனின் எழுச்சி மென்மைகளால் கட்டியெழுப்பப்படுவது வரலாறு .  இதை மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் . சத்தான கவிதைக்கு நன்றி நிழல் .

 

 

நன்றி கோமகன்.  ஆணுக்குள் இருக்கும் மனிதத்தை பெண் ஒருவரால் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டு வர முடியும் தருணங்கள் அழகானவை.

 

எல்லாரினது எழுத்துகளையும் பாராட்டி ஊக்குவிப்பதில் முன்னிற்பவர்களில் நீங்களும் ஒருவர்.

 

 

 

யாதுமாகி நிற்கிற தோழியால 'நீங்கள் 'காதலாகி கசிந்துருகி நிற்கிறீங்கள் நிழலி அண்ணன் :)

 

தமிழும்,நயமும் விளையாடுது!!! விளையாடட்டும்!...... :)

 

நன்றி தமிழ்தங்கை.... காதலாகி கசிந்துருகி மடியில் வீழும் சுகமே அலாதியானது தானே....

 

 

அற்புதம், வார்த்தைகளில் விளையாடியுள்ளீர்கள்.

அழகான தமிழ்நடை வாழ்த்துக்கள் அண்ணா, தரமான கவிதை தந்ததுக்கு. :)

 

நன்றி ஜீவா....

 

இப்படியான அனுபவங்களை விரைவில் பெற என் வாழ்த்துகள் :D

 

 

தேனருந்தும் வண்டு,

தேனின் போதையில் மயங்க,

அதன் கூரிய நகங்களில்,

மகரந்தத் துகள்கள்,

கூடுகள் கட்டும்!

 

வண்டின் மயக்கத்தில்,

தனது பரம்பரையின்,

நீட்சியொன்றை,

நிகழ்த்தி முடித்த பெருமிதத்தில்,

ஆறுதல் பெருமூச்சொன்று,

அந்த மலரிலிருந்து விடை பெறும்!

 

மலருக்கும் வண்டு வேண்டும்!

வண்டுக்கும் மலர் வேண்டும்!

பிரித்தளிக்க முடியாத,

வைரம் பாய்ந்த புனிதம், அது! 

 

 

அந்த உணர்வுகளையும், ஏக்கங்களையும், இத்தனை அழகுடன் கவிதையில் வடிக்க, அந்த உணர்வுகளை, மனப்பூர்வமாக அனுபவித்தவனால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்!

நன்றிகள், நிழலி!

 

கவிதைக்கு கவிதையால் கருத்துச் சொன்ன விதமே தனி அழகு. எதனையும் மனபூர்வமாக ஆழ்ந்து அனுபவிக்கும் போதுதானே அதன் முழுமையை நுகரமுடியும்.

 

 

நல்லது..றோட்டுவழிய வேலையிலை எண்டு பாத்து வீணிவடிக்கிறதை விட்டிட்டு கண்டகண்டதுகளை விட்டிட்டு இப்பவாவது அக்காவின் அருமை புரிந்ததே...மகிழ்ச்சி...அருமையான கவிதை... :)

 

அது வேற இது வேற தம்பு....நீங்கள் இன்னும் அனுவப்பட இன்னும் எவ்வளோ இருக்கு :)

அருமையான கவிதை நிழலி, உணர்ச்சிபூர்வமகா எழுதியுள்ளீர்கள்.

 

PS: நிழலி சனவரி 28,2013 -  தை 28,2013  யென எழுதியிருக்கலாம்

  • தொடங்கியவர்

அருமையான கவிதை நிழலி, உணர்ச்சிபூர்வமகா எழுதியுள்ளீர்கள்.

 

PS: நிழலி சனவரி 28,2013 -  தை 28,2013  யென எழுதியிருக்கலாம்

 

நன்றி வந்தி...

 

தை 28 என்று குறிப்பிடும் போது அது தமிழ் மாதக் கலண்டரில் வரும் தினத்தினை குறிப்பிடுவதாக அமைந்து விடாதா? தை 28 இன்னும் வரவில்லையே. அத்துடன் தமிழ் தேதி கண்டு பிடித்து குறிப்பிட்டால், பின் எல்லாவற்றையும் அதன் படி தான் தொடர வேண்டி வரும் என்று நினைத்து முந்தியில் இருந்து ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டு வருகின்றேன். அதுதான் வசதியானதும் கூட.

 

தோழியே,

இன்னும் இருக்கடி

நாமிருவரும்

பருகித் தீர்க்க கோடி

தீர்த்தங்கள்

காத்து இருக்கடி

இணைந்து கடக்க

ஆயிரம் வருடங்கள்...

 

:நிழலி சனவரி 28,2013

மிகத்துல்லியமான முடிவிடம். என்றுமே தீர்வதில்லை உண்மைக்காதல். வாழ்த்துக்கள் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை நிழலி, மூடு வந்தால் மட்டும்தான் இப்படிப்பட்ட கவிதைகளை ரசிக்க தருவீர்களா. அடிக்கடி பகிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை படைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள் :wub:

 

ஆனால் இந்த வளர்ச்சி  எனக்கு சரிவராது

கொஞ்சம் எமக்கு புரியும்படி   எழுதினால் நல்லது. :D

அருமையானதொரு கவிதைக்கு மிக்க நன்றி நிழலி :)

  • கருத்துக்கள உறவுகள்

பேருவுகை கொண்டு ஆர்பரிக்கும்

வேளைகளில் பெரும் மெளனம்

கொண்டே சிறு புன்னகை சிந்திடும்

பெரும் அணை.

 
- நிழலி-
 
இயல்பான தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் அழகிய கவிதை தந்திருக்கிறீர்கள். கவிதையின் ஒவ்வொரு வார்த்தையையும் ரசிக்கின்றேன்.  நன்றி.
 
 

 

.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் முத்தங்களை பதியும்

இரு இதழ்களில்

கோடி கணங்களை உறையவிடும்

தந்திரக்காரி

மார்புகளின் இடையே

என்னை சோழிகளாய் சுழட்டி

எறிந்து வித்தைகாட்டும்

சாகசக்காரி

தன் வாசல்கதவுகளால்

வாரிச் சுருட்டி தனக்குள்

பொதித்து இன்னும் இன்னும் என

என்னை தனக்குள் பருகிக் களிக்கும்

பேராசைக்காரி

 கிறங்க வைக்கும் வரிகள்.

 

வரண்ட காடுகளுக்கிடையே

பாய்ந்து செல்லும்

பெரும் ஆறாய்

பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும்

பனிக்காற்றாய்

மனவெளிகளில் புரண்டு எழும்

கடலலைகளாய்

எப்பவும் எனக்குள்

வியாபித்த பெரும் பொருளாய்

நீக்கமற நிற்கின்றாள்

என் தோழி

நட்புக்கான உவமான உவமேயங்கள் அருமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் முத்தங்களை பதியும்

இரு இதழ்களில்

கோடி கணங்களை உறையவிடும்

தந்திரக்காரி

மார்புகளின் இடையே

என்னை சோழிகளாய் சுழட்டி

எறிந்து வித்தைகாட்டும்

சாகசக்காரி

தன் வாசல்கதவுகளால்

வாரிச் சுருட்டி தனக்குள்

பொதித்து இன்னும் இன்னும் என

என்னை தனக்குள் பருகிக் களிக்கும்

பேராசைக்காரி

:நிழலி சனவரி 28,2013

காதலும்.. காமமும் வழிந்து ஓடுகின்றது..

அழகான உங்கள் படைப்பிற்கு என் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பேராவலுடன் பெய்யும் பெருமழையாய்

எனக்குள் இறங்கிச் செல்கின்றாள்

என்னுயிர்த் தோழி

 

என்

வரண்ட காடுகளுக்கிடையே

பாய்ந்து செல்லும்

பெரும் ஆறாய்

பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும்

பனிக்காற்றாய்

மனவெளிகளில் புரண்டு எழும்

கடலலைகளாய்

எப்பவும் எனக்குள்

வியாபித்த பெரும் பொருளாய்

நீக்கமற நிற்கின்றாள்

என் தோழி

 

 

:நிழலி சனவரி 28,2013

 

கவிதைக்குள் இறங்கி அணுவணுவாக யாதுமான பெரும்பொருளாய் கவிதையின் வீரியம் ஒரு சித்திரமாய் வடிக்கப்பட்டுள்ளது. நிழலிக்குள் உறைந்திருக்கிற கவிஞன் எழுத்திலும் கொஞ்ச நேரத்தை செலவிடலாம். காத்திரம் மிக்க கவிதைகளை தமிழ்க்கவிதை பெற்றுக் கொள்ளும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.