Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தனங்களோடு வந்தேன்....

Featured Replies

முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும்

வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில்
இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும்
சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே....

நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள்
நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும்
பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை
பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என
சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என்
சிரம் தாழ்ந்த வந்தனங்கள்...

புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய்
புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான்
புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள்
புனைந்து வரும் கவிக்குழந்தை யான்..

இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும்

கடைசியிலே நாக்குளறும்..............வெறும்

கட்டுத் தறியென அறிவீர்........

கட்டுரைகளும் கதைகளும் கூட -என்

கரங்கள் கிறுக்கி விடும் அதைக்

களஞ்சியத்தில் சேர்த்து வைத்தேன்

காண்பீர் பூங்கோதை படைப்புகள்..

 

ஈழத்தில் பிறந்ததால் ஏதிலியானவள்

ஈனர்கள் சிதைக்க முயன்றும் முடியா-தமிழ்

மானம் மட்டும் சொத்தாய் சுமப்பவள்

மாண்ட நம் சூரியத் தேவரை மதிப்பவள்


போர்க்காலம் முழுதும் ஆங்கே-அதன்
போர்வைக்குள் கிடந்து புழுங்கியவள்
பார் நடுங்கும் மரண பயத்தையும்
பாழும் முட்கம்பிகளையும் முகர்ந்தவள்

இன்தமிழ் வாழ்விக்க இன்னமும் தவிப்பவள்
இனியதோர் ஈழத்தில் வாழ்ந்திடத் துடிப்பவள்
வந்தனைக் குரிய நம் கலைகளில் மகிழ்பவள்
சிந்தனைக் கினிய பண் பாடுகள் ரசிப்பவள்

வேறில்லை எனைப்பற்றி அதிகமாய் பாட
பேறெனக்கொண்டேன் இணையத்தில் உலவ
நேரிய நட்புக்கள் தேடிட விழைந்தேன்
பேருவ கையுடன் யாழ் இணையம் வந்தேன்..

 

-நன்றி-

 

பூங்கோதை

http://poonka.blogspot.co.uk/

தமிழ்  வளர்க்க
கருத்து பொழிய

கவிதை படைக்க
வணக்கத்துடன் வாருங்கள் !

வேறில்லை எனைப்பற்றி அதிகமாய் பாட

பேறெனக்கொண்டேன் இணையத்தில் உலவ

நேரிய நட்புக்கள் தேடிட விழைந்தேன்

பேருவ கையுடன் யாழ் இணையம் வந்தேன்..

 

-நன்றி-

 

பூங்கோதை

http://poonka.blogspot.co.uk/

ம்ம்ம்ம்ம்ம்ம் உந்தளவு சொல்லிப்போட்டு கடைசியா வேறு இல்லையோ ........ ம்ம்ம்ம்ம்ம் வாங்கோ அக்கா வாங்கோ.என்னடா இவன் பாசமா வரவேற்கிறான் என்று ஒருத்தரும் யோசியாதையுங்கோ ....எனக்கு ஏற்கனவே தெரிந்தவ தான்.

  • தொடங்கியவர்

தமிழ்  வளர்க்க

கருத்து பொழிய

கவிதை படைக்க

வணக்கத்துடன் வாருங்கள் !

 வரவேற்புக்கு மிக்க நன்றி...   :)

ம்ம்ம்ம்ம்ம்ம் உந்தளவு சொல்லிப்போட்டு கடைசியா வேறு இல்லையோ ........ ம்ம்ம்ம்ம்ம் வாங்கோ அக்கா வாங்கோ.என்னடா இவன் பாசமா வரவேற்கிறான் என்று ஒருத்தரும் யோசியாதையுங்கோ ....எனக்கு ஏற்கனவே தெரிந்தவ தான்.

 

அட.... உவ்வளவு சத்தமா வரவேற்கிறது ஆரெண்டு பார்த்தன்...அமோக வரவேற்புக்கு நன்றி தம்பி நேற்கொழு தாசன்...  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ பூங்கோதை அக்கா!

 

உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பூங்கோதை ............எங்கோ கேட்ட  குரல் போல இருக்கு. வ ரும்போதே கவிதை நடையில் அசத்துறீங்க ...

 

தொடர்ந்து அசத்துங்க

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பூங்கோதை.

வணக்கம் பூங்கோதை, வாங்கோ

 

Quote: " நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும்
பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை"
 

பித்தனுக்கு என்ன பெண்பால் சொல்?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், பூங்கோதை!

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

வாருங்கள். :)  உங்களை அன்புடன் வரவேற்கிறேன். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும்

வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில்

இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும்

சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே....

நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள்

நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும்

பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை

பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என

சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என்

சிரம் தாழ்ந்த வந்தனங்கள்...

புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய்

புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான்

புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள்

புனைந்து வரும் கவிக்குழந்தை யான்..

இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும்

கடைசியிலே நாக்குளறும்..............வெறும்

கட்டுத் தறியென அறிவீர்........

கட்டுரைகளும் கதைகளும் கூட -என்

கரங்கள் கிறுக்கி விடும் அதைக்

களஞ்சியத்தில் சேர்த்து வைத்தேன்

காண்பீர் பூங்கோதை படைப்புகள்..

 

ஈழத்தில் பிறந்ததால் ஏதிலியானவள்

ஈனர்கள் சிதைக்க முயன்றும் முடியா-தமிழ்

மானம் மட்டும் சொத்தாய் சுமப்பவள்

மாண்ட நம் சூரியத் தேவரை மதிப்பவள்

போர்க்காலம் முழுதும் ஆங்கே-அதன்

போர்வைக்குள் கிடந்து புழுங்கியவள்

பார் நடுங்கும் மரண பயத்தையும்

பாழும் முட்கம்பிகளையும் முகர்ந்தவள்

இன்தமிழ் வாழ்விக்க இன்னமும் தவிப்பவள்

இனியதோர் ஈழத்தில் வாழ்ந்திடத் துடிப்பவள்

வந்தனைக் குரிய நம் கலைகளில் மகிழ்பவள்

சிந்தனைக் கினிய பண் பாடுகள் ரசிப்பவள்

வேறில்லை எனைப்பற்றி அதிகமாய் பாட

பேறெனக்கொண்டேன் இணையத்தில் உலவ

நேரிய நட்புக்கள் தேடிட விழைந்தேன்

பேருவ கையுடன் யாழ் இணையம் வந்தேன்..

 

-நன்றி-

 

பூங்கோதை

http://poonka.blogspot.co.uk/

வணக்கம் பூங்கோதை. வாங்கோ.

நீங்கள் ஆண், என்பதை... உங்கள் அழகிய‌ கவிதையில், உங்களை அறியாமலே... வெளிப்படுத்தி விட்டீர்கள். :D  :lol:

 
ஏன் தாயை மட்டும் போற்றுகிறார்...
என் தந்தையும் ஒரு தாய் தானே-தாய்
பத்துமாதம் சுமந்து பெறுகையில்
உறுதுணையாய் இருந்தவர் தந்தை தானே...
நான் தாயை இகழ்ந்து பேசவில்லை...
இருவரும் நமக்கு பெற்றோர்தான்..


-அனங்கன்-

anan.jpg
இது என் மகன் எழுதிய கவிதை...


 
 
 
 
 
 
 
 
 
வாழ்த்துக்கள் உங்கள் மகனிற்கு, நல்ல திறமையிருக்கு.
 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பூங்கோதை, வாங்கோ

  • தொடங்கியவர்

என்னை அன்போடு வரவேற்கும் அத்தனை உள்ளங்களுக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்... :)



 
ஏன் தாயை மட்டும் போற்றுகிறார்...
என் தந்தையும் ஒரு தாய் தானே-தாய்
பத்துமாதம் சுமந்து பெறுகையில்
உறுதுணையாய் இருந்தவர் தந்தை தானே...
நான் தாயை இகழ்ந்து பேசவில்லை...
இருவரும் நமக்கு பெற்றோர்தான்..


-அனங்கன்-

anan.jpg
இது என் மகன் எழுதிய கவிதை...


 
 
 
 
 
 
 
 
 
வாழ்த்துக்கள் உங்கள் மகனிற்கு, நல்ல திறமையிருக்கு.
 

 

என்னை வரவேற்றது மட்டுமன்றி...... என் ப்ளொக்கரைத் தேடிப்போய், என் மகனையும் அழைத்து வந்து அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்... உங்கள் பெரும் மனதுக்காகவும் வாழ்த்துக்களுக்காகவும் நன்றி வந்தியத்தேவன் அவர்களே...



வணக்கம் பூங்கோதை, வாங்கோ

 

Quote: " நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும்
பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை"
 

பித்தனுக்கு என்ன பெண்பால் சொல்?

 

வணக்கம் சகோ, வந்தவுடனேயே மாட்டி விடப்பார்க்கிறீங்களே... எனக்கும் தெரியாமல் இருந்தது... நீங்கள் கேட்ட பின் தான் தேடிப்பார்த்தேன்...பித்தனுக்கு பெண் பால் பித்தி... வழக்கில் இல்லாத சொல் தான்.. பெண் புலவர்களை மாற்பித்தியார் என்று சொல்கிறார்கள்... இங்கே காண்க...

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • தொடங்கியவர்

வணக்கம் பூங்கோதை. வாங்கோ.

நீங்கள் ஆண், என்பதை... உங்கள் அழகிய‌ கவிதையில், உங்களை அறியாமலே... வெளிப்படுத்தி விட்டீர்கள். :D  :lol:

 

வணக்கம் சகோ.. இதிலென்ன இருக்கிறது...சில பிற்போக்கான காலங்களைத் தாண்டி... இப்பொழுது பெண்களும் இணையத்தில் உலவுகிறோம் என்ச் சொல்லிக் கொள்வதில் பெருமைதான்...

  • தொடங்கியவர்

வணக்கம் பூங்கோதை ............எங்கோ கேட்ட  குரல் போல இருக்கு. வ ரும்போதே கவிதை நடையில் அசத்துறீங்க ...

 

தொடர்ந்து அசத்துங்க

 

வணக்கம் சகோதரி... அது தான் வந்திட்டோம்ல...ஆனா இத்தனை பெரியவங்களுக்கு முன் அசத்தமுடியுமா என்று தான் யோசிக்கிறேன்... நீங்க கூட இருப்பீங்கல்ல.. :)

வாருங்கள்.   உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், பூங்கோதை!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

 

 


(திரி  காலையிலேயே  இந்த ஓட்டம  ஓடுது  நம்ம தம்பிமார்தான் காரணமாக்கும் என்று எட்டிப்பார்த்தேன்.  ஆனால் வேறு விதமாக நன்றாக போகிறது) :lol:

வணக்கம், பூங்கோதை!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

 

 

(திரி  காலையிலேயே  இந்த ஓட்டம  ஓடுது  நம்ம தம்பிமார்தான் காரணமாக்கும் என்று எட்டிப்பார்த்தேன்.  ஆனால் வேறு விதமாக நன்றாக போகிறது) :lol:

 

வந்தாரை வரவேற்கவேண்டும் . :D

வணக்கம் பூங்கோதை வாருங்கள்.

யாழ் பூங்கதவு தாள் திறந்து உங்களை வரவேற்கிறது.

 

 

வணக்கம் பூங்கோதை. வாங்கோ.
நீங்கள் ஆண், என்பதை... உங்கள் அழகிய‌ கவிதையில், உங்களை அறியாமலே... வெளிப்படுத்தி விட்டீர்கள். :D  :lol:

 

அது.

மழைக்கால இருளானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ பூங்கோதை

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் பூங்கோதை. இப்பதான் யாழின் கதவு திறந்ததாக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள். :rolleyes:

  • தொடங்கியவர்

வணக்கம் பூங்கோதை வாருங்கள்.

யாழ் பூங்கதவு தாள் திறந்து உங்களை வரவேற்கிறது.

 

 

 

அது.

மழைக்கால இருளானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. :D

 

தங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி நண்பரே...

 

சரியான கொப்பில தாவாவிட்டால்.. கொப்பு காலை வாரிடுமுங்கோ...  :D

வாருங்கள் பூங்கோதை. இப்பதான் யாழின் கதவு திறந்ததாக்கும். :rolleyes:

 

வரவேற்பிற்கு நன்றி சகோதரி... யாழின் கதவு திறந்தே தான் இருந்தது... நான் தான் வழிதெரியாமல் வரத் தாமதித்தேன்... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.