Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் பாலனின் பாதத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் கண்களே

 

துடிக்கும் காட்சி


பாலனின் மேனியில்

 

பலதுளைகள் கொடுங்கோற்  


சிங்களம் செய்த கொடுமை


கொலைக்களத்தின்


அதி உச்சக்கட்டம்


 

அவன் விழிகளில்


தெரிகின்றது அவன் ஒரு


வீரன் மகன் என்று


அவன் விழிகளைக்


கண்டு மிரண்டு அவன்


மேனியில் துளைத்ததா குண்டு


 

சிங்களம் செய்த


கொலை வேள்வியில்


எங்கள் குலவிளக்கை


எரித்ததா  ஈனம் இல்லாச் 


சிங்களம்   ஆடிய


கொலைவெறியில்


தங்கள் இச்சையைத் 


தீர்த்ததா  இச்சிறு வேங்கையின் 


பொற்திருவுருவில்


 

பாரெங்கும்  பரந்திருக்கும் 


நாமெல்லாம் கோர்த்திடுவோம் 


கரங்களைக் கொடுங்


கோலனை ஒளித்திடக் 


கூடிடுவோம் ஒன்றாய்  


கொலைக்களத்தின் உச்சத்தைப் 


பரப்பிடுவோம் உலகமெங்கும்  


எடுத்திடுவோம் சபதம் 


எங்கள்  பாலனின் பாதத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்களத்தின் உச்சத்தைப் 

பரப்பிடுவோம் உலகமெங்கும்  


எடுத்திடுவோம் சபதம் 


எங்கள்  பாலனின் பாதத்தில் 


நன்றி  ஐயா

உறுதியும் வலிமையும் சேர்க்கும் காலத்திற்கு ஏற்ற கவிதைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பாலச்சந்திரன்களுக்கும் (அடுத்த தலைமுறைக்கு) பாலச்சந்திரனுக்கு வந்த முடிவு வராமல் எமது இனத்தை பாதுகாக்க ஒன்று பட்டு பாடுபடுவோம்.

பாரெங்கும்  பரந்திருக்கும் 

நாமெல்லாம் கோர்த்திடுவோம் 

கரங்களைக் கொடுங்

கோலனை ஒளித்திடக் 

கூடிடுவோம் ஒன்றாய்  /////////////காலத்தின் தேவையை உணர்த்தும் வரிகள். இணையட்டும் கரங்கள் இனியாவது. நன்றி ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்

சென்று வா,

எனது சிறு குழந்தையே!

 

சிதறிப் போன முத்துக்களைத்,

தேடித் பொறுக்கி,

மாலையாக்கினாய்!

சேர்ந்து வாழலாம் என்பவரின் முகத்தில்,

செருப்பால் அடித்துத் துயிலேழுப்பினாய்!

தேவனின் சந்நிதியில் அமர்ந்திருக்கும்,

சாந்தம் உனது முகத்தில்!

 

உன்னைக் கொன்றவனின் தொண்டைக்குழியில்,

உணவாக இறங்கும் ஒவ்வொரு கவளமும்,

உன் இறப்பை அவனுக்கு நினைவு படுத்தும்!

 

சென்று வா,

எனது செல்லக்குழந்தையே!

 

நன்றிகள், வாத்தியார்!

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று..

 

கொட்டினர் நச்சு விதையை

உனக்கொரு தடாகமாம்

குளிர்பதனப் பெட்டியாம்

பெருந்திரைக் காட்சியாம்

 

துட்டர் போன தடம்

தெரியவில்லை இன்று

ஒளிந்தனர் ஆடையின்பின்

வருவரோ மறுபடி வாந்தியுடன்..

 

மற்றோர் உயிர்போல்

தன்னுயிர் நினைத்தனன்

உந்தை ஆறாத்துயரிலும்

தன்மகவுனைப் பிரிந்தனன்

 

என்றென்றும் மறவோம்!

நன்றியுடையராய் வாழ்வோம்!

பெருகட்டும் வெஞ்சினம்!

பிறக்கட்டும் தமிழ் ஈழம்!

கவிதைக்கு நன்றி வாத்தியார் .

 

வெள்ளம் வரமுன் அணை கட்டுவது ஒன்று 

வந்தபின் எப்படி  என்று படம் போடுவது ஒன்று .

நன்றி வாத்தியர் கவிதைக்கு.

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறவுகள்

இசை, ஒரு பச்சை கடன்! :o


 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கவிதை வாத்தியார் அண்ணா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலைக்களத்தின் உச்சத்தைப் 

பரப்பிடுவோம் உலகமெங்கும்  

எடுத்திடுவோம் சபதம் 

எங்கள்  பாலனின் பாதத்தில் 

நன்றி  ஐயா

உங்கள் ஆதரவிற்கு நன்றி விசுகு அண்ணா

வியட்நாமில் அன்று ஒரு குழந்தை எரிகாயங்களுடன் 

இன்று எங்கள் குழந்தை சுடு காயங்களுடன் 

அநீதிக்கு நீதி கேட்பது எங்கள் உரிமை மட்டுமல்ல எங்கள் கடமையும் கூட   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறுதியும் வலிமையும் சேர்க்கும் காலத்திற்கு ஏற்ற கவிதைக்கு நன்றிகள்.

நன்றி அகூதா

ஈழத்தமிழர்களை கருவோடு அழிக்கத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் படி இயங்கும்

சிங்கள இனவாத அரசை சர்வதேசத்தின் முன் நிறுத்தி எங்களுக்கு  நீதி கிடைக்கும் வரை ஒன்றுபட்டுப்  போராடினாலே  அது சாத்தியம்

எந்த பாலச்சந்திரன்களுக்கும் (அடுத்த தலைமுறைக்கு) பாலச்சந்திரனுக்கு வந்த முடிவு வராமல் எமது இனத்தை பாதுகாக்க ஒன்று பட்டு பாடுபடுவோம்.

உண்மை நுணாவிலான்  

பாரெங்கும்  பரந்திருக்கும் 

நாமெல்லாம் கோர்த்திடுவோம் 

கரங்களைக் கொடுங்

கோலனை ஒளித்திடக் 

கூடிடுவோம் ஒன்றாய்  /////////////காலத்தின் தேவையை உணர்த்தும் வரிகள். இணையட்டும் கரங்கள் இனியாவது. நன்றி ஐயா 

நன்றி நேற்கொழுதாசன்

சென்று வா,

எனது சிறு குழந்தையே!

 

சிதறிப் போன முத்துக்களைத்,

தேடித் பொறுக்கி,

மாலையாக்கினாய்!

சேர்ந்து வாழலாம் என்பவரின் முகத்தில்,

செருப்பால் அடித்துத் துயிலேழுப்பினாய்!

தேவனின் சந்நிதியில் அமர்ந்திருக்கும்,

சாந்தம் உனது முகத்தில்!

 

உன்னைக் கொன்றவனின் தொண்டைக்குழியில்,

உணவாக இறங்கும் ஒவ்வொரு கவளமும்,

உன் இறப்பை அவனுக்கு நினைவு படுத்தும்!

 

சென்று வா,

எனது செல்லக்குழந்தையே!

 

நன்றிகள், வாத்தியார்!

நன்றி புங்கையூரான்

 

இந்த ஈனச்செயலைச் செய்த காட்டுமிராண்டி ராணுவம் 

தன்  குழந்தைக்கு இப்படியான ஒரு நிலை வரும் போது கூட  அதை உணரமாட்டான்  

  • கருத்துக்கள உறவுகள்

வெஞ்சினம் கொண்டு நாம்
வீறுகொண்டு எழுந்திட்டால்
வீணர்கள் கொட்டம்
அடக்கிட முடியாதோ??

நன்றி வாத்தியார் கவிதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
கவிதைக்கு நன்றி வாத்தியார்,இசை
காலத்துக்கு ஏற்ற கவிதைகள். நன்றி வாத்தியார் & இசை


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கும் இணைக்கவிதை எழுதியவர்களுக்கும் என் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள் வாத்தியார்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று..

 

 

 

மற்றோர் உயிர்போல்

தன்னுயிர் நினைத்தனன்

உந்தை ஆறாத்துயரிலும்

தன்மகவுனைப் பிரிந்தனன்

 

என்றென்றும் மறவோம்!

நன்றியுடையராய் வாழ்வோம்!

பெருகட்டும் வெஞ்சினம்!

பிறக்கட்டும் தமிழ் ஈழம்!

கவிதைக்கு நன்றி இசைக் கலைஞன்

 

நினைத்திருந்தால் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கலாம்

கவிதைக்கு நன்றி வாத்தியார் .

 

வெள்ளம் வரமுன் அணை கட்டுவது ஒன்று 

வந்தபின் எப்படி  என்று படம் போடுவது ஒன்று .

அர்ஜுன் அண்ணா

 

இன்னொரு முறையும்  வெள்ளம் வரலாம் 

அதைத் தடுப்பதற்காவது இனிமேல் எல்லோரும் ஒன்று சேருவோம் 

நன்றி வாத்தியர் கவிதைக்கு.

 

நன்றி வண்டுமுருகன் 

காலத்துக்கேற்ற கவிதை வாத்தியார் அண்ணா....

 

நன்றி சுபேஸ் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெஞ்சினம் கொண்டு நாம்

வீறுகொண்டு எழுந்திட்டால்

வீணர்கள் கொட்டம்

அடக்கிட முடியாதோ??

நன்றி வாத்தியார் கவிதைக்கு.

முடியாது என்பது ஒன்றுமில்லை.

ஒன்றுபட்டால் மட்டுமே அது சாத்தியம் 

கவிதைக்கு நன்றி வாத்தியார்,இசை

நன்றி ரதி 

 

போராட்டம் என்பது நீண்ட தூரப் பயணம் 

அதில் மக்கள் புரட்சி என்பது எந்த நிமிடமும் வெடிக்கலாம் 

அந்த மக்கள் புரட்சி ஒரு அதிசயம் அல்ல 

எங்களுக்கு இப்போது அவசியம்  

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் இதை பார்த்தேன் வாத்தியார்... கவிதைக்கு நன்றி டங்கு வாத்தியார்.... அந்த பாலனின் புகைப் படத்தை பார்த்து என்னை அறியாமலே கண்ணீர் விட்டன்

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

----

அவன் விழிகளில்

தெரிகின்றது அவன் ஒரு

வீரன் மகன் என்று

அவன் விழிகளைக்

கண்டு மிரண்டு அவன்

மேனியில் துளைத்ததா குண்டு

-----

எங்கள்  பாலனின் பாதத்தில் 

 

புலிக்குப் பிறந்தது, பூனையாகாது என்ற தமிழ்ப் பழமொழியை.... நிரூபித்து விட்டான் அந்தப் பாலகன்.

கவிதைக்கு, நன்றி வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

-------

சேர்ந்து வாழலாம் என்பவரின் முகத்தில்,

செருப்பால் அடித்துத் துயிலேழுப்பினாய்!

தேவனின் சந்நிதியில் அமர்ந்திருக்கும்,

சாந்தம் உனது முகத்தில்!

 

உன்னைக் கொன்றவனின் தொண்டைக்குழியில்,

உணவாக இறங்கும் ஒவ்வொரு கவளமும்,

உன் இறப்பை அவனுக்கு நினைவு படுத்தும்!

 

சென்று வா,

எனது செல்லக்குழந்தையே!

 

நன்றிகள், வாத்தியார்!

 

சிவப்புச் சால்வை போட்ட மிருகங்களுக்கு, பாலகன் பாலச்சந்திரனின் இறப்பு... இறுதி எச்சரிக்கையாய்... அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று..

 

கொட்டினர் நச்சு விதையை

உனக்கொரு தடாகமாம்

குளிர்பதனப் பெட்டியாம்

பெருந்திரைக் காட்சியாம்

 

துட்டர் போன தடம்

தெரியவில்லை இன்று

ஒளிந்தனர் ஆடையின்பின்

வருவரோ மறுபடி வாந்தியுடன்..

 

மற்றோர் உயிர்போல்

தன்னுயிர் நினைத்தனன்

உந்தை ஆறாத்துயரிலும்

தன்மகவுனைப் பிரிந்தனன்

 

என்றென்றும் மறவோம்!

நன்றியுடையராய் வாழ்வோம்!

பெருகட்டும் வெஞ்சினம்!

பிறக்கட்டும் தமிழ் ஈழம்!

 

இசை, தமிழனின் சாபம் கோடாரிக் காம்புகள் தான்...

அதை, இந்தப் பாலகனின் கொலையைப் பார்த்தாவது ஒட்டுக் குழுக்கள் திருந்த வேண்டும்.

இல்லையேல்... இதுகள், எல்லாம்... அமாவாசைக்குப் பிறந்ததுகள் என்றோ.... ஒரு தகப்பனுக்குப் பிறக்காததுகள் என்றோ... நினைக்க வேண்டி இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.