Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதினைந்து வயது வாலைக் குமரியடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து வயது வாலைக் குமரியடி 
பார்ப்போரை மயக்கும் பருவ மங்கையடி
அதனாலோ அத்தனை பேர் உன் அழகில்
கண்மயங்கி உனைக் காண 
உச்சிப் பொழுதிலும்
உனைத்தேடி வருகின்றார்????

ஒரு முறை உனைக் கண்டார்
உன்மத்தம் கொண்டு உன்
பின்னே வருகின்றார்
ஊனின்றி உறக்கமின்றி
உன்னில் மதிமயங்கி
உன்னைப் பார்த்திருப்பார்
உள்ளத்தெழும் உணர்வை
உரைத்திட அனைவரும் 
முத்தமிழால் உனக்கு
முத்தாரம் சூட்டிடுவார் 

சொக்குப் பொடிபோட்டு
சொக்க வைப்பதில் நீ சுந்தரி
சொல்லாடல் செய்து
சூரர்களைக் கூட
சுணங்க வைப்பதில் சூத்திரி

சோலை மலர்விழியாள் உன் 
சோபை கண்டதனால்
சொற்களால் உனைச் 
செம்மையாக்கிச் சுற்றி வருகின்றோம்
கதைக்கள், கட்டுரைகள், கவிதைகளாக்கி
கண்குளிரக் காண்கின்றோம்

பதினைந்து ஆண்டுகள் முன்
உன்னைப் பிரசவிக்க
மோகன் அண்ணா பட்ட துன்பம்
நானறியேன்.
அண்ணா நீர் வாழி 

ஆடைபுனைந்து அணைத்துனை
ஆளாக்கி எம்முன்னே
அழகுறச் செய்தோர்
அத்தனை பேர் நீர் வாழி

கோலமயில் யாழ்மகளை
கோலத் தமிழாலே கொடை தந்து
குலமகளாய்க் காத்திடும்
அனைவரும்  வாழி வாழி

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழகுடன் நீயிருக்க
அத்தனை பேரும் உனை
அரவணைத்துக் காத்து நிற்பர்
யாழ் களமே நீவாழி

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் பற்றிய அருமையான கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தை ஆரம்பித்தது மோகன் அண்ணா..! :D அவர் பெற்றது பெண் பிள்ளை என்கிறீங்க.. :D சரி பரவாயில்லை.. நல்லாவே இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், சுமோ!

 

இருப்பத்தியோராம் நூற்றாண்டில் காலடி வைத்துள்ளோம்! ஆண். பெண் என்ற பேதமின்றி, யாழ் களம், ஒரு ஆலமரம் என்பேன்!

 

பதினைந்து வயதில் பொங்கும் யாழை, நாற்பது வயதில் பார்க்கும்போதும், அவளின் பொலிவு குறையாமல் இருக்கவேண்டும்! :D

 

அதனால் தான் 'ஆலமரம்' என்றேன்!

 

ஆழமாய் விழுதெறிந்து,

அகிலமெல்லாம் கிளைபரப்பி,

நாடிவரும் பறவைகளின் பசியகற்றி,

நீடூழி வாழ்ந்து தழைக்கட்டும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக வந்திருக்கு சுமோ பாட்டி. :)  ஆண்களால் அதிகம் புழங்குவதால் யாழ்களம் பதினைந்து வயது வாலைக்குமரியாகி இருப்பதும் சரிதான். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகு. :)

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.... யாழ் ஆணா.. பெண்ணா..??! :lol:



மேலும் யாழ் வாலைக்குமரியா.. வாளைக்குமரியா...??! :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பரிமாறிய உறவுகளுக்கு நன்றி.



யாழ் களம் பற்றிய அருமையான கவிதை.

 

நன்றி சாந்தி
 



யாழ்களத்தை ஆரம்பித்தது மோகன் அண்ணா..! :D அவர் பெற்றது பெண் பிள்ளை என்கிறீங்க.. :D சரி பரவாயில்லை.. நல்லாவே இருக்கு.. :D

 

ஒத்துக்கொண்டீர்களே அவ்வளவும் போதும். :D
 



கவிதைக்கு நன்றிகள், சுமோ!

 

இருப்பத்தியோராம் நூற்றாண்டில் காலடி வைத்துள்ளோம்! ஆண். பெண் என்ற பேதமின்றி, யாழ் களம், ஒரு ஆலமரம் என்பேன்!

 

பதினைந்து வயதில் பொங்கும் யாழை, நாற்பது வயதில் பார்க்கும்போதும், அவளின் பொலிவு குறையாமல் இருக்கவேண்டும்! :D

 

எத்தனை நூற்றாண்டு ஆனாலும் பெண் பெண்தானே புங்கை.
 



கவிதை நன்றாக வந்திருக்கு சுமோ பாட்டி. :)  ஆண்களால் அதிகம் புழங்குவதால் யாழ்களம் பதினைந்து வயது வாலைக்குமரியாகி இருப்பதும் சரிதான். :icon_mrgreen:

 

முதல் முதலாக எனது படைப்பை நன்றென்று கூறியிருக்கிறீர்கள். நன்றி பேராண்டி. :D
 



கவிதை அழகு. :)

 

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.... யாழ் ஆணா.. பெண்ணா..??! :lol:



மேலும் யாழ் வாலைக்குமரியா.. வாளைக்குமரியா...??! :D

 

பெண்ணேதான். வாலைக் குமரிதான். அதிலென்ன சந்தேகம்???


 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணேதான். வாலைக் குமரிதான். அதிலென்ன சந்தேகம்???

 

 

யாழ் பெண்ணாக இருக்கச் சந்தர்ப்பம் குறைவு. ஏன்னா அது பையன்களுக்கே உரிய குண இயல்பான சவால்களை சந்தித்தல் என்பதன் கீழ்.. பல சவால்களை சந்திச்சு எதிர் நீச்சல் போட்டிருக்குதே தவிர.. உலகில் எந்தக் கவலையும் இன்றி.. நுள்ளுப்பிராண்டு கிள்ளுப்பிராண்டு விளையாடிற வாலைப் பெண்களின் குணத்தைக் கொண்டிருக்கல்லையே..??! :lol::D

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பெண்ணாக இருக்கச் சந்தர்ப்பம் குறைவு. ஏன்னா அது பையன்களுக்கே உரிய குண இயல்பான சவால்களை சந்தித்தல் என்பதன் கீழ்.. பல சவால்களை சந்திச்சு எதிர் நீச்சல் போட்டிருக்குதே தவிர.. உலகில் எந்தக் கவலையும் இன்றி.. நுள்ளுப்பிராண்டு கிள்ளுப்பிராண்டு விளையாடிற வாலைப் பெண்களின் குணத்தைக் கொண்டிருக்கல்லையே..??! :lol::D

 

நெடுந்தீவுக்குப் போற வள்ளங்கள் எல்லாத்துக்கும், பொம்பிளையளின்ர பேரைத்தான் வைக்கிறது!

 

குமுதினி, ராஜேஸ்வரி, அலை அரசி எண்ட மாதிரி வரிசை போகும்! எப்ப பாத்தாலும், இடையில கொஞ்ச நாளைக்கு ஓடாம விட்டிருவினம்!

 

பிறகு ஒண்டுக்கு 'எலாறா' எண்டு பேர் வைச்சாங்கள்! (தமிழில் எல்லாளன் என்று பொருள்)

 

சிங்கன் ஒரு நாள் கூட வருத்தம் எண்டு படுத்துக் கிடந்தது கிடையாது! :icon_idea:

யாழ்கள கவிதை அருமை, பாராட்டுக்கள் சுமே.

 

 



காலேஜ் அழகியும் கான்வென்ட் குமரியும் தியேட்டர் போகிறார்,
டாக்ஸி ட்ரைவரும் பார்த்துப் பார்த்துதான் மீட்டர் போடுவார்,

 

காலை, மாலைதான் வேலை பார்க்கவர் மகிழ்ச்சி கொள்கிறார்,

வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயைப் பிளக்கிறார்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதினைந்து வயது குமரன் இவன்....
கண்டவர் மனதில் குடி கொள்ளும்
குமரன் இவன்..
சூரியன் அஸ்தமிக்காத
இராச்சியத்தை கொண்டவன் இவன்...
 
பாமரர் முதல் பண்டிதர் வரைக்கும்
தன்னுள்ளே வைத்திருக்கும் குமரன் இவன்...
பால்மணம்மாறா பச்சிளம் குழந்தைக்கும்
படம் சொல்லும் இவன்....
பருவ வயதினருக்கும் நல்வழிகாட்டுவான் இவன்..
நரை விழுந்தவருக்கும் 
ஊன்றுகோலாக இருப்பவன் இந்த குமரன்...
 
வருவோர் இருப்போர்
போவோர் எல்லோரையும்
அரவணைப்பான் குமரன்....
ஆவேசத்தில் அடிப்பவனையும்
 அன்பாக அடித்து அரவணைப்பான்
இந்த கட்டிளங்குமரன்.....
அ ஆ தெரியாதவரையும்
தெம்மாங்கு பாடல் எழுதவைத்தவன் இந்த குமரன்.....
 
ஆண்டுகள் பதினைந்து என்கிறார்கள்.....
இன்னும் பல நூறு பதினைந்துகள் வந்தாலும்
அன்றும்  மார்க்கண்டேயனாய் இருப்பான் இந்தகுமரன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து வயது குமரன் இவன்....
கண்டவர் மனதில் குடி கொள்ளும்
குமரன் இவன்..
சூரியன் அஸ்தமிக்காத
இராச்சியத்தை கொண்டவன் இவன்...
 
பாமரர் முதல் பண்டிதர் வரைக்கும்
தன்னுள்ளே வைத்திருக்கும் குமரன் இவன்...
பால்மணம்மாறா பச்சிளம் குழந்தைக்கும்
படம் சொல்லும் இவன்....
பருவ வயதினருக்கும் நல்வழிகாட்டுவான் இவன்..
நரை விழுந்தவருக்கும் 
ஊன்றுகோலாக இருப்பவன் இந்த குமரன்...
 
வருவோர் இருப்போர்
போவோர் எல்லோரையும்
அரவணைப்பான் குமரன்....
ஆவேசத்தில் அடிப்பவனையும்
 அன்பாக அடித்து அரவணைப்பான்
இந்த கட்டிளங்குமரன்.....
அ ஆ தெரியாதவரையும்
தெம்மாங்கு பாடல் எழுதவைத்தவன் இந்த குமரன்.....
 
ஆண்டுகள் பதினைந்து என்கிறார்கள்.....
இன்னும் பல நூறு பதினைந்துகள் வந்தாலும்
அன்றும்  மார்க்கண்டேயனாய் இருப்பான் இந்தகுமரன்.

 

உங்கள் கவிதை அருமை குமாரசாமி அண்ணா. :rolleyes:

ஆனாலும் நான் விட்டுக் கொடுக்க முடியாது யாழவளை. :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் முதலாக எனது படைப்பை நன்றென்று கூறியிருக்கிறீர்கள். நன்றி பேராண்டி. :D

 

 

முதன் முதலாகவா? :unsure: ஆறுதலாக வாசிக்காதவற்றிற்கு கருத்து எழுதுவதில்லை (சிலர் வாசிக்காமலேயே கருத்து வைப்பார்கள்!)

 

நன்றாக இருப்பதை நன்றென்றுதானே சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கவிதைக்கு வாழ்துக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை பகிர்ந்திருந்த வந்தி, மைத்திரேயி இருவருக்கும் நன்றி.

கவிதை நன்றாயிருக்கு நண்பி!

  • கருத்துக்கள உறவுகள்
 
சுமோ, கு.மா அண்ணா கவிதைகள் அழகு. 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக இருக்கிறது சுமோ கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்

அருமையான வாழ்த்துக் கவிக்கு மிக்க நன்றி சுமியக்கா. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் கவர்ந்ததே உங்கள் கவி,,, அருமையான எளிமையான உண்மை வரிகள்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வாழ்த்திய கவிதை, சுப்பண்ணை, சுதர்சன் ஆகியோருக்கு நன்றி. 

 

சொக்குப் பொடிபோட்டு
சொக்க வைப்பதில் நீ சுந்தரி

 

 

                                                 வாழ்த்துக்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி செம்பகன்

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ , கு.சா உங்களுக்கு நன்றிகள் கவிதைகள் மிக அழகு !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.