Jump to content

காதலிக்கும் பெண்ணின் தந்தையை சந்திக்கப் போறீங்களா? அப்ப இத படிச்சுட்டு போங்க...


Recommended Posts

காதல் செய்வது என்பது மிகவும் எளிது. ஆனால் அந்த காதலை வெற்றியடையச் செய்வது தான் மிகவும் கஷ்டம். அந்த கஷ்டமான செயலையும் எதிர்த்து போராடி திருமணம் வரை வந்துவிட்டால், அதன் பின் வாழும் வாழ்க்கையே ஒரு சுகம் தான். இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், காதல் செய்த பின்னர், அந்த காதலை பெரும்பாலான ஆண்களின் வீடுகளில் ஏற்றுக் கொள்வார்கள். சிக்கல் இருக்கும் பக்கம் என்றால் பெண்களின் வீடுகளில் தான். அதிலும் காதலிக்கும் பெண்ணின் வீட்டில் ஒப்புக்கொண்ட பின்னர், அந்த பெண் தந்தை மகளாக இருந்தால், ரொம்பவே கஷ்டம்.

ஏனெனில் அனைத்து தந்தைகளுக்கும், தன் மகள் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான இடத்தில் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று நினைப்பார்கள். அதனால், தனக்கு வரப்போகும் மருமகன் எப்பேற்பட்டவன் என்பதை அனைத்து பெண்ணின் தந்தைகளும் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் ஏதேனும் சிறு தவறு வரப்போகும் மருமகனின் மீது இருந்தால், பின் அப்பெண்ணின் தந்தையை திருப்தி அடைய வைப்பதே கடினமாகிவிடும். எனவே காதலித்த பின்னர், காதலியின் தந்தையை சந்திக்க போகும் போது, எப்படியெல்லாம் நடந்து கொண்டால், அவர்களை எளிதில் மடக்கலாம் என்று சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து, மனதில் கொண்டு நடந்தால், ஈஸியாக மாமனாரை மடக்கிவிடலாம்.

காதலிக்கும் பெண்ணின் தந்தையை எளிதில் மடக்குவதற்கான சில டிப்ஸ்...

* மாமனாரை முதன்முதலாக பார்க்கப் போகும் போது, ஷேவிங் செய்து, நன்கு அழகாக சர்ட்-பேண்ட் அணிந்து, பார்த்ததும் பிடிக்கும் மாதிரி உடை அணிந்து செல்ல வேண்டும். இதனால் அவரின் மனதில் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க முடியும்.

* பேசும் போது படபடப்பு இல்லாமல் பேச வேண்டும். அவரை நல்ல மதிப்புமிக்க நண்பன் போல் நினைத்து, அவரிடம் பேச வேண்டும். மேலும் பேசும் போதே, அவரது மனதில் "இந்த பையனுக்கு குடும்பத்தில் ஒன்றாவதில் ஆர்வமாக இருக்கிறான்" என்னும் எண்ணம் வருமாறு பேச வேண்டும். அதைவிட்டு, தம்மை தாமே புகழ்ந்து பேசக் கூடாது. இவ்வாறு பேசினால், கெட்ட எண்ணம் தான் எழும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

* முக்கியமாக எதிர்காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தில் நல்ல நிலையில் வருவதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பற்றியும் பேசினால், அவரது மனதில் நல்ல ஒரு தரமான இடத்தைப் பெற முடியும். மேலும் அவருக்கு "என் மகளை ஒரு நல்ல இடத்தில் தான் கொடுக்கிறோம்" என்று உங்களின் மீது ஒரு நம்பிக்கை எழும்.

* மாமனாரைப் பார்க்கச் செல்லும் போது, அவருக்கு முன்பே நீங்கள் உங்கள் காதலியின் மீதுள்ள அன்பை வெளிக்கொணர வேண்டும். அதற்காக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிடாதீர்கள். உங்கள் காதலி வரும் போது, அவரிடம் பேசும் பாவணையில், செயல்களில் வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக, காதலி காபி கொண்டு வரும் போது, அவர் கொண்டு வரும் தருணம் சற்று விழ நேர்ந்தால், அப்போது உடனே அவர்களை தாங்கியோ அல்லது அந்த காபியை வாங்கி டேபிளில் வைத்து உட்காருமாறு சொல்லியோ வெளிப்படுத்தலாம். இதனாலும் மாமனாரை மடக்கலாம்.

* இறுதியில் ஒன்றை சொல்ல மறக்க வேண்டாம். அது என்னவென்றால், மாமனாரிடம் நீங்கள் உங்கள் காதலி மீது வைத்துள்ள அன்பை, அவருடன் எவ்வாறு வாழ ஆசைப்படுகிறீர்கள் என்பதை மனம் உருகி சொன்னால், நிச்சயம் அவர் உங்கள் பாசத்தைப் புரிந்து, அவரது மகளை சந்தோஷத்துடன் திருமணம் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுப்பார்.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு நடந்து கொண்டால், மாமனாரை எளிதில் கவிழ்த்து, காதலில் வெற்றி வெற்றி அடையலாம்

Thastamil

:D :d :(:D

Link to comment
Share on other sites

இதெல்லாம் நடக்கிற கதையா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காதலியிடம், உங்க அப்பாவுக்கு என்ன விருப்பமானவை என்று கேட்டு அறிந்து கொண்டு...
அவருக்கு பிடித்த பொருளை.. வாங்கிக் கொண்டு போகலாம்.
சில மாமனார்... பழனி பஞ்சாமிர்தத்துக்கும், சில மாமனார் குவாட்டருக்கும் மயங்குவார்கள். :D

Link to comment
Share on other sites

சில மாமனார்... பழனி பஞ்சாமிர்தத்துக்கும், சில மாமனார் குவாட்டருக்கும் மயங்குவார்கள். :D

 

அப்ப, கொஞ்ச காலத்துக்கு பிறகு எனக்கு வார மருமகன் / மருகளுக்கு என்னை மயக்குவது ஈசியாகப் போகப் போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, கொஞ்ச காலத்துக்கு பிறகு எனக்கு வார மருமகன் / மருகளுக்கு என்னை மயக்குவது ஈசியாகப் போகப் போகுது

 

ஹஹாஹா..... :D  :D 

உங்களை நினைத்துத்தான்... அந்தக் கருத்தை எழுதினேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சில மாமனார் குவாட்டருக்கும் மயங்குவார்கள். :D

சில தகப்பன்மாருக்குத் தன்னுடன் சேர்ந்து தண்ணியடிக்கத்

தயாராக இருக்கும் மருமகனையே  பிடிக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில தகப்பன்மாருக்குத் தன்னுடன் சேர்ந்து தண்ணியடிக்கத்

தயாராக இருக்கும் மருமகனையே  பிடிக்கும் :lol:

 

அங்கை... ஒரு, சிக்கல் வாத்தியார்.

அதுக்கு... மாமியாரும், ஓம் எண்டு சொல்ல வேணுமே... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதுக்கு அவரைச்க் சந்திக்கப் போகணும் .  வழக்கமாய் அவர்தானே இவரைத் தேடிக்  கொண்டு வருவார் ! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை... ஒரு, சிக்கல் வாத்தியார்.

அதுக்கு... மாமியாரும், ஓம் எண்டு சொல்ல வேணுமே... :D  :lol:

 

மாமனாரில் ஒன்றுமில்லை

அவர் வெறும் தலை ஆட்டல்தான்.

 

நான் மாமியாரை விழுத்தினேன்

சின்ன மாமியே

உன் சின்ன மகள் எங்கே

பள்ளிக்கு போனாளோ

படிக்கப்போனாளோ என்று...............

 

:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில ஏறி கொப்பால இறங்கிறது எண்டா என்ன விசுகு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாமனாரில் ஒன்றுமில்லை

அவர் வெறும் தலை ஆட்டல்தான்.

 

நான் மாமியாரை விழுத்தினேன்

சின்ன மாமியே

உன் சின்ன மகள் எங்கே

பள்ளிக்கு போனாளோ

படிக்கப்போனாளோ என்று...............

:wub:

 

நேரடியாக... மாமியாரில், அட்டாக் கொடுத்தால், மாமனார் கோவிக்க மாட்டாரா.... th_AnimatedLaughingSmiley.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில ஏறி கொப்பால இறங்கிறது எண்டா என்ன விசுகு அண்ணா

 

இன்று வெள்ளிக்கிழமை

சிறி  பதில் சொல்லட்டும்

நேரடியாக... மாமியாரில், அட்டாக் கொடுத்தால், மாமனார் கோவிக்க மாட்டாரா.... th_AnimatedLaughingSmiley.gif

 

 

அந்த நேரம் இந்தப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் கேட்டதால் வெட்கப்பட  ஏதுமில்லை.

 

(ஆனால் யோசித்துப்பார்க்கின்றேன்.  நாங்கள் பாடும்போது மாமா (அம்மாவின் சொந்த அண்ணர்)  வீட்டில் இருந்ததாக ஞாபகம் இல்லை :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மரத்தில ஏறி கொப்பால இறங்கிறது எண்டா என்ன விசுகு அண்ணா

 

 

இன்று வெள்ளிக்கிழமை

சிறி  பதில் சொல்லட்டும்

------

 

அடி மரம், தடிப்பாக இருந்தால்.... மரத்தால் ஏறுவதில் தப்பில்லை.

ஆனால்... கொப்பால் ஏறி, அடி மரத்தை பதம் பார்ப்பது மகா.... தப்பு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி மரம், தடிப்பாக இருந்தால்.... மரத்தால் ஏறுவதில் தப்பில்லை.

ஆனால்... கொப்பால் ஏறி, அடி மரத்தை பதம் பார்ப்பது மகா.... தப்பு. :D  :lol:

 

நான் நிழைனக்கின்றேன்

 

நந்தன் எதிர்பார்த்த பதில்

கடினமான பயிற்சி

சுலபமான சண்டை...............  என்று நினைக்கின்றேன் சிறி :lol: 

(பதில் மட்டுமே. அனுபவத்தில் அல்ல :D )

Link to comment
Share on other sites

அங்கை... ஒரு, சிக்கல் வாத்தியார்.

அதுக்கு... மாமியாரும், ஓம் எண்டு சொல்ல வேணுமே... :D  :lol:

மனுஷன் தண்ணியடிக்கும் போது அவருக்கு என்ன டேஸ்ட் பிடிக்கும் என்று செய்கின்ற மாமிமாரும் இருக்கினம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மனுஷன் தண்ணியடிக்கும் போது அவருக்கு என்ன டேஸ்ட் பிடிக்கும் என்று செய்கின்ற மாமிமாரும் இருக்கினம் :icon_mrgreen:

சூப்பர் குடும்பம் ..................கொடுத்துவைத்தவர்கள் ................. :icon_mrgreen:  :D 

Link to comment
Share on other sites

முதலில் காதலியிடம், உங்க அப்பாவுக்கு என்ன விருப்பமானவை என்று கேட்டு அறிந்து கொண்டு...

அவருக்கு பிடித்த பொருளை.. வாங்கிக் கொண்டு போகலாம்.

சில மாமனார்... பழனி பஞ்சாமிர்தத்துக்கும், சில மாமனார் குவாட்டருக்கும் மயங்குவார்கள்.  :D

 
 
ஐயோ  ,முக்கியமான திரி  
Link to comment
Share on other sites

நான் மாமனாரைப் பார்க்கப் போனபோது அவுஸ்சில் இருந்தே போயிருந்தேன். போகும் போதே கட்டுநாயக்காவில் ஒரு சிவாஸ் ரீகல் ஒரு ரெட்லேபில் கொண்டு போயிருந்தேன். அண்டைக்கு இரவே ரெண்டுபேரும் ஒன்றாக சிவாஸ் ரீகலை உடைத்திருந்தோம். அப்பாவை விட மாமனாரோடு பல விஷயங்கள் செய்வது இலகு. மாமியும் இலகுவாக ஒத்துப் போபவர். அவர்களுக்கு பல வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரே ஒரு பிள்ளையை மடக்கினதால் கொஞ்சம் ஓவர் டைம் செய்யவேண்டி வந்திச்சு ஆனால் கைமேல் பலன் வந்தது திருப்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கப்பா.. நீங்கள் காலம் புரியாமல் கதைக்கிறீங்க. இப்ப எல்லாம் மாமா.. மாமி மாரோ சொல்லி அனுப்பிறாங்க.. பிள்ளை யுனியால வரேக்க.. நல்ல கார்.. வீடு.. வசதின்னு இருக்கிற.. பாய் பிரண்டோட வாடின்னு. நீங்க என்னடான்னா..! ஆனா ஒன்னு.. சாதியை மட்டும் பார்த்துப் போடடி. அவையள் வேற.. நாங்கள் வேற.  :D:lol:

Link to comment
Share on other sites

நான் மாமனாரைப் பார்க்கப் போனபோது அவுஸ்சில் இருந்தே போயிருந்தேன். போகும் போதே கட்டுநாயக்காவில் ஒரு சிவாஸ் ரீகல் ஒரு ரெட்லேபில் கொண்டு போயிருந்தேன். அண்டைக்கு இரவே ரெண்டுபேரும் ஒன்றாக சிவாஸ் ரீகலை உடைத்திருந்தோம். அப்பாவை விட மாமனாரோடு பல விஷயங்கள் செய்வது இலகு. மாமியும் இலகுவாக ஒத்துப் போபவர். அவர்களுக்கு பல வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரே ஒரு பிள்ளையை மடக்கினதால் கொஞ்சம் ஓவர் டைம் செய்யவேண்டி வந்திச்சு ஆனால் கைமேல் பலன் வந்தது திருப்தி. 

 

கல்யாணம் முடிந்து கொஞ்ச நாளைக்கு எல்லோரும் ஓவர் டைம்  பார்க்கிறதுதான்  :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. 
    • எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.
    • நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate
    • 🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣 நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை. அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣
    • இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட  நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.