Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்....

Featured Replies

1000294_459486134146955_1203184928_n.jpg

 

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் புயலாக வீசிய தேசப்புயல்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்

 

971702_459462964149272_247977731_n.jpg

 

 

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் பின்னணி.

இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.

தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.
 

1005638_459481157480786_791879467_n.jpg

 

 

விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

ஈழநாதத்தின் வெளியீடு ( 2001 நாளிதழ் )

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை

    இரண்டு எ (A) - 340 - 300 பயணிகள் விமானங்கள்
    ஒரு எ (A) - 330 -200 பயணிகள் விமானம்
    நான்கு கிபிர் போர் விமானங்கள்
    மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
    இரண்டு எம்.ஜ.ஜி (MIG) - 27 ஜெட் போர் விமானங்கள்
    இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
    இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
    இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
    மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை

    இரண்டு - A-320 பயணிகள் விமானங்கள்
    ஒரு - A-340 பயணிகள் விமானம்
    ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
    ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
    ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
    நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் சில மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .

எம் மக்கள் மீது குண்டு வீசிய குண்டுப் பறவைகள் அவற்றின் இருப்பிடம் தேடிச்சென்று தீயில் கருக்கி தாய்மண்ணின் விடியலுக்காய் உறங்கும் தேசப்புயல்களுக்கு எம் சீரம் தாழ்ந்த வீரவணக்கம்.

    || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

 

தேசக்காற்று  &  தமிழீழப்பறவை கனடாவில்

Edited by அருள் மொழி இசைவழுதி

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மாவீரர்களுக்கு நினைவு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவு வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலின் பின்னர் கொழும்பில் சிங்களவர்களுக்கு தமிழர்கள் மீது தனியான பயத்துடன் கூடிய மரியாதை இருந்தது.

 

இன்று.................

 

வீரவணக்கம் வேங்கைகளே..!

வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய மிகப் பெரும் தாக்குதல் இது.
இதில்... எந்த‌ ஒரு சுற்றுலாப் ப‌ய‌ணியும், கொல்ல‌ப் ப‌டாத‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி வீரர்களுக்கும், வீராங்கணைகளுக்கும்  வீர வணக்கங்கள் !

வணக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் வாழ்வீர்.

 

இவ்வளவு தியாகங்களும்,அர்ப்பணிப்பும், ஈழத்தமிழர்கள் துயரங்களுக்கு, விரும்பும் இறுதியான் முடிவை கொண்டுவரவில்லையே என்ற வருத்தமும், வேதனையுமே மிஞ்சுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாக்குதலின் பின்னர்தான் சிங்களம் நிலை குலைந்து பேச்சு வார்த்தைக்கு வந்தது ........ கூடவே சுயநல பிராந்திய வல்லரசுகளுக்கும் பீதியை உருவாக்கியது அதன்மூலம் சர்வதேசத்திடம் இருந்து ஸ்ரீலங்க்காவிக்கு கணிசமான உதவிகள் கிட்டினது என்பது துரதிஸ்ரமானது  :(

 

கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !

படையியல் ரீதியில் பார்த்தால் புலிகளின் முதலாவது வலிந்த தாக்குதல்...   ஒரு பொது மகன் கூட கொல்லப்பட்டு இருக்கவில்லை...    ஆனாலும்  இலங்கை அரசை விடவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடுமையான சினம் அடைந்தன... 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

கரும்புலி மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.