Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஒரு புலி - ஒன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மீரா அண்ணா

  • Replies 103
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கந்தன் கருணை வீட்டில் இருந்த 53 ஓ 47 பேரும் திருடர்களா?

 

 

இதுக்கு நான் என்ன பதில் சொல்லாம்...53 பேரில் 47 பேர் கள்ளர்?

 

இதுக்கு பதில் எழுதி, சிவனே என்று யாழுக்கு வந்து போற எனக்கும் செம்புள்ளி கரும்புள்ளி குத்த பார்க்கிறீர்கள்- விதி யாரை விட்டது..

ஒன்றைதான் சொல்லாம், 4 -5 இயக்கம் இருந்ததை விட ஒன்றாக வந்த போது, போராடத்தில் ஒரு மாற்றம் வந்தது. ஒன்றுமை ஒன்றுமை என்று சொல்லுவதன் நோக்கம் என்ன? எல்லோரும் ஒன்றாக ஒன்றை செய்வோம் என்றுதானே. அதுதான் நடந்தது.

 

நடந்த கொள்ளை, கொலைகள் எல்லாவற்றிக்கும் டெலோவையோ அல்லது ஏனைய இயங்களை நோக்கி விரல் நீட்டுவதோ குறைகூறுவதோ, அல்ல எனது நோக்கம். ஆனால் 4-5 பேர் இருக்கும் போது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று இருந்தார்கள். ஆனால் தனியே புலி என்று  வந்த போது அவர்களின் முறையில் மாற்றம் வந்தது. ?100-200 வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளை அடிக்காமல்- அவர்கள் அதை முதலில் செய்யவில்லை என்று கூறவில்லை அதை  மறுப்பதர்க்கோ, ஏற்றுக்கொள்வுவதர்க்கோ ஆதாரம் இல்லை, எல்லோரிடமும் நகை கேட்டார்கள். இன்னொரு இயக்கம் நடத்தின தமிழீழ மீட்பு நிதிக்காக அதிர்ஷ்ட லாப சீட்டை கொண்டு நடத்தினார்கள், முஸ்லீம்கள் போன பின்பு அவர்களின் கடைகளை/அதில் இருத்த பொருட்களுடன் நடத்தினார்கள்..,கடை முதலாளிகளை தடுத்து வைத்து பணம் கேட்டார்கள். வரி இன்றி அணுவும் இல்லை என்று ஒரு நிலை வந்தது. இவ்வாறு  ஒவ்வொருவரும் தமக்கு தேவையான நிதியை ஒவ்வொரு வகையில் சேகரித்தார்கள்.

 

எனது வீட்டில் இரவில் வந்து களவெடுத்து இருந்தால் அதுதான்  பிழை என்றோ அல்லது எனது கடையை நடத்துவதர்ர்க்கு 10 கோடி தரவேண்டும் எண்டு கேட்டால் அதுதான் பிழை என்றோ சொல்ல முடியாது. இரண்டுமே பிழை. அந்த பிழை இல்லாமல் எப்படி நாடு கிடைக்கும் என்று கேட்டால் அதுவும் பிழைதான். 

மீராவை யாழ் சேலெபரெட்டீஸ் உற்சாகபடுத்துவது குறைந்து போய்விட்டது போல இருக்கு..

கம் ஒன் கய்ஸ் அண்ட் கல்ஸ் 

 

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி எழுத்து பிழைகளை கவனத்தில் எடுத்து தொடருங்கள் .

இங்கு வானத்தில் இருந்து வைகுண்டம் போபவர்கள் பற்றி அக்கறை பட தேவையில்லை .

 

 
 
நானும் இதைதான் எழுத வந்தேன்..........
நீங்கள் எழுதிவிட்டீர்கள் நன்றி!
 
எங்களிடம் தட்டச்சு செய்ய கீ போர்ட் இருக்கும்போது .....
யாரையும்  யாரையும் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்??
 
(இப்போது இரண்டாவது நாள்  புலிகள் என்னையும் கைது செய்கிறார்கள். கிட்டதட்ட இந்த இடங்களில் இருந்துதான் நான் வடமார்ச்சிக்கு சென்றேன். பயந்தவன் கண்களுக்கு எந்தானை பேய்கள் தெரிந்தது என்பதை அறிய ஆவல் )
  • கருத்துக்கள உறவுகள்

மீரா அவரது பார்வையில் எழுதுகிறார்.. அதில் தவறேதும் இல்லை. ஆனால் முழுமையான காட்சியை வெளிக்கொணர்வது ஏனைய வாசகர்களின் கடமை.. இல்லாவிட்டால் புதியவர்கள் இக்கதையை வாசிக்கும்போது பக்கத்து பங்கரில் நின்ற புலிகள் ரெலோவின் பங்கருக்குள் காரணமில்லாமல் சுட்டார்கள் என்கிற விம்பம்தான் கிடைக்கும்..

 

ஒரு உதாரணத்துக்கு இப்படி ஒரு கதை..

 

கழுத்து இறுகிகிறது.. வலியின் அகோரம் புரிந்து பின்னர் ஒரு பரவச நிலை.. நினைவு தவறுகிறது.. மனித உயிரை இன்னொரு உயிர் பறித்துவிட்டது.. :( ஆட்டோ சன்கரை தூக்கில் போட்டுவிட்டார்கள்.. :(

 

எப்பிடி இருக்கு? :D

நன்றி இசைகலைஞன் இதைத்தான் நேரடியாக எழுத நம்முடையதும் வெட்டு வேண்டுது யாரோ பெரிய கைபுள்ள ஒன்று விளையாடுது நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி நீங்கள் பார்த்ததை மட்டும் ஒரு பக்க சார்ப்பில்லாமல் எழுதுங்கோ

 

 

ரதியக்கா கோவிக்க வேண்டாம்.....
 
இது உங்களுடைய கருத்து அல்ல சிந்திக்காத ஒரு பொதுவான வேதாந்தம். அதை அப்படியே உள்வாங்கி அப்படி ஒரு நிலை இருப்பதாக எண்ணி கொள்கிறோம்.
 
அ ,
ஆ,
இருவருக்கும் இடையில் சண்டை நடக்கிறது. ஒரு நீதிபதி வருகிறார். ஒரு பக்க சார்வில்லாமல் நீதியை சொல்லுங்கள் என்று எதிர்பார்க்க முடியுமே தவிர.  நீதிக்கு சார்வில்லாத நீதிபதியால் நேர்மையான தீர்வை கொடுக்க முடியுமா?? என்று யாரும் சிந்திப்பதில்லை. இவருடைய பிரச்சனையையும் கேட்கும்போது நீதி உள்ளவர் உண்மையானவர் மீது சாராது எப்படி நீதிபதியால் நேர்மையான தீர்ப்பு சொல்ல முடியும்???
 
25 வருடங்களுக்கு முன்பு நடந்த பிரச்சனைகளை. எந்த பக்கமும் சாரதா ஒருவர் ஏன் எழுத துடிக்கிறார்?? 
குறைந்த பட்சம் சுய விளம்பரம் என்ற பக்கம் அல்லது வியாபாரம் என்ற பக்கம் சாராது. எதை எழுத முடியும்?
ஏன் எழுத வேண்டும்??
 
நேரில் பார்த்த 100 பேரில் 95 பேர்கள் சொல்கிறார்கள் அது வேப்ப மரம்தான் என்று. 3 தெரியவில்லை என்கிறார்கள். இப்போ இரண்டு பேர் அது ஆலமரம் என்று பீலா விடுகிறார்கள். இதில் பக்க சார்வில்லாமல் எப்படி விடுவது என்றொரு கேள்வி இயல்பாகவே இருக்க வேண்டும். இருந்தும் அப்படியொரு எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது . 
 
2007ஆம் ஆண்டு சுனாமியால் பதிக்க பட்ட மக்களுக்கு உதவ இங்கிருக்கும் ஒரு சேர்ச் உதவி செய்தது  அதை செயல் படுத்துவதற்காக ஊருக்கு போயிருந்தேன்  இருந்தேன். வரும்போது கொஞ்ச புத்தகங்கள் வாங்கி வரலாம் என்று கொழும்பில் உள்ள புத்தக கடை ஒன்றிற்கு  சென்றிருந்தேன். எல்லா இடமும் சுற்றி பார்த்து சில புத்தகங்களை எடுத்தேன்  இன்னொரு சுவரின்  ஒரமாக கொஞ்ச புத்தகம் இருந்தது அதை பார்க்கலாம் என்று நடந்தேன்  அங்கே வேலை செய்யும் பெண் (எனக்கு சில புத்தகங்கள் பற்றி அறிவுரை அல்லது விளம்பரம் செய்துகொண்டிருந்தவர்) சொன்னார் "அதெல்லாம் வெறும் குப்பை புத்தகங்கள் என்று" 
எந்த புத்தகங்கள் என்றாலும் படிப்பதே எனது எண்ணம் எனக்கு எதைப்பற்றி அறியவும் ஆவல். இங்கு யாழில் 6,7 வருடங்களுக்கு முன்பு இணைந்தபோதும் இன்டெரெஸ்ட் என்பதற்கு  in anything அப்படி என்றுதான் போட்டேன்.
ஆனால் ஒரு புத்தக கடையில் வேலை பார்க்கும் ஒருவர் அப்படி சொன்னது கொஞ்சம் யோசிக்க தோன்றியது. அதன் பிறகு தேடி பார்க்க தொடக்கினேன். பல குப்பை புத்தகங்களை  காண கூடியதாக இருந்தது. ஒரு வேலை அவை பக்க சார்பில்லதவைகளா ?
அப்படி என்று சிந்திக்கின்றேன்.
 
எதோ ஒரு பக்கம் சார்ந்து தான் எதையும் எழுத முடியும்.
மீரா பாரதி இடம் எதை ஆவது எதிர் பார்ப்பவர்கள் நீங்கள் சமூகம் சார்ந்து சமூகத்திற்கு பலன் கொடுக்கக கூடிய  அனுபவம் உள்ளவராக இருந்தால்..... சமூகம் சார்ந்து எழுதுங்கள் !
அப்படி என்றொரு கோரிக்கையை முன்வைக்கலாம்.
அதைவிடுத்து முன்புபோலவே பக்க சார்வில்லாமல் எழுதுங்கள் என்றால் ................
 
முன்பு போல்தான் எழுத முடியும்!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோட முடிச்சு போடாதேயுங்கோ .....

 

ஸெலெப்ரேட்ஸ்க்கு என்ன கோபமோ தெரியவில்லை ..தீட்டித்தன்னும் நாலு கருத்து இல்லை ,... :rolleyes:

  • தொடங்கியவர்

புலி ஒன்று - பகுதி 3
1987ம் ஆண்டு இரண்டாம் தரம் பரிட்சை எடுக்க  ஆரம்பித்தேன்...

இதற்கிடையில் அரசியல் மாற்றங்கள் பல நடை பெற ஆரம்பித்தன....

வடமாரட்சியை சிறிலங்கா இராணுவம் பிடித்து வைத்திருந்ததுடன்...

யாழ்  நகரை நோக்கி முன்னேறும் நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கின்றது என செய்திகள் தெரிவித்தன....

 

அதேவேளை நெல்லியடி மாகவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஒரு முகாமை  மில்லர் என்ற விடுதலைப் புலி போராளி முதன் முதலாக தற்கொலைக் தாக்குலை மேற்கொண்டு தாக்கியதுடன் தற்கொலைத் தாக்குதல் முறையையும் ஈழப் போராட்டத்தில் ஆரம்பித்து வைத்தார். ...

 

ஈழ விடுதலைப் போராட்டம் இருந்த இந்த நிலையில்….

ஒரு நாள் இந்திய மிக் விமானங்கள் பயங்கரமான  சத்தத்துடன பறந்து வந்து சாப்பாட்டு பொட்டலங்கள் போட்டன....

சனங்கள் அதை எடுப்பதற்கு ஓடினார்கள்....

நமக்காக  இந்தியா தலையிடுகின்றது என்பதை நினைத்து மக்களுக்கு மிக மகிழ்ச்சி....

இலங்கை  இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது.....

 

 இந்திய இராணுவம் அமைதிப் படை என்ற பெயரில் பெரும் இரைச்சலுடன் விமானங்களில் வந்து பலாலியில் இறங்கின... காங்கேசன்துறை துறைமுகத்திற்கும்  கப்பலில் வந்து கனரக வாகனங்களுடன்  இறங்கினர்....

 

பிரபாகரனை இந்தியாவில் விட்டுக் காவலில் தடுத்து வைத்திருப்பதாக செய்திகள் வந்தன....

சனம் அல்லோப்பட்டது.... எங்கும் பல்வேறு வகையான உணர்ச்சிப்பிரவாகம் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது....

பரிட்சைகள் பிற்போடப்பட்டன....

 

பிரபாகரனை விடுதலை செய்யாது இந்திய இராணுவம் வெளியே வருவதை புலிப் போராளிகளும் மக்களும் விரும்பவில்லை.... ஆகவே  இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வருவதைத் தடுத்து நிறுத்த படை படையாக பாலாலியையூம் கே.கேசையூம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்....

 

நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவோ அல்லது பிரபாகரன் மீது மரியாதையையோ கொண்டிருக்கவில்லை...

ஆனாலும்  இந்தியா இவ்வாறு தடுத்து வைத்து ஒப்பந்தத்தை ஏற்க நிர்ப்பந்தித்தது தவறு என உணர்ந்தேன்....

மக்களின் கோவம்...  உணர்ச்சிகள் சரியானது எனப் புரிந்து கொண்டேன்.... ஆகவே அவர்களுடன் நானும் வாகனங்களில் ஏறி இந்திய இராணுவம் வெளியே வருவதை தடுத்து நிறுத்த முகாம்களை நோக்கிச்  சென்றேன்.... பல வாகனங்கள் மக்களை திரள் திரளாக ஏற்றிச் சென்று கொண்டிருந்தன....

 இப் போராட்டங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ பிரபாகரன் விடுவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.....

பிரபாகரன் மக்கள் முன் முதன் முதலாகத் தோன்றி இன்றைய நிலை தொடர்பாகவும் தமது முடிவுகள் தொடர்பாகவும் அறிவிப்பார்  என பத்திரிகைகள் எழுதின...

 

இதற்கான கூட்டம் சுதுமலையில் நடந்தது....

மக்கள் திரள் திரளாக எல்லாப் பக்கமும் இருந்து வந்தார்கள்...

பெரும் கூட்டம்...  பெரும் பாதுகாப்பு...

 

புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் கோவம் வெறுப்பு எனப் பல உணர்வுகள் இருந்தபோதும்.... இன்றைய சுழலில் இந்தியா இவ்வாறு செய்வது சரியானதல்ல என்ற உணர்வே இருந்தது. இதற்கும் மேலாக  பிரபாகரனைப் பார்க்கின்ற ஆர்வமும் இருந்தது.

ஆகவே சுதுமலைக் கூட்டத்திற்கு  நானும் சென்றேன்.

 

பிரபாகரனும் அவரது அமைப்பான புலிகளும் கடந்த காலங்களில் செய்த பிற்போக்குத்தனமான செயற்பாடுகளையும் முன்வைத்த கொள்கைகளையும் போராட்ட விரோத செயற்பாடுகளையும் இந்தக் கணத்தில்   மறந்திருந்தேன்.

மக்களும் மறந்திருந்தார்கள் என்றே நினைக்கின்றேன்..

 

மேடையில் பிரபாகரன் மாத்தையா கிட்டு எனப் பலர் இருக்கின்றனர்.... கிட்டு ஊன்று கோலுடன் இருப்பதைப் பார்த்தபோதும் பிரபாகரன் அவர் இருப்பதற்கு உதவி செய்தபோதும்  எதை நம்புவது என்பது மனதுக்குள் கேள்வியாக இருந்தது....

பிரபாகரன்  தனது மழழைக் குரலால் ஆனால் உறுதியுடன் நாம் இந்தியாவை நம்புவதாகவும் ஆகவே ஆயூதங்களைக் கையளிப்பதாகவும் கூறினார்.

கூடியிருந்த மக்கள் கை தட்டி வரவேற்றனர்...

ஆம் இந்த நாள் பிரபாகரன் ஒரு தேசத்தின் தலைவராக முதல் முதலாக உரையாற்றிய நாள் என்றால் அது மிகையல்ல…

 

இதன் பின் இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வந்தனர்.....

மக்கள் வீதிகள் தோறும் வாழை தோரணம் கட்டி கும்பம் வைத்து கை தட்டி  வரவேற்றனர்.

 

இவ்வாறு    அரசியல் நிலமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும்புலிகளுடன் சேர்வதற்கு பல இளம் சந்திதியினர் சென்றனர்.

நாம்  குடியிருந்த பேக்கரி லேன்  வீட்டின் அயல்வீட்டு இளம் பெண் ஒருவர்  வீட்டுக்கு சொல்லாமல் இயக்கத்தில் சேர்ந்தார்.

அவரது தாய் அவரை ************************ ஆடப்போய்விட்டால் என்று பலவழிகளிலும் திட்டித் தீர்த்தார்...

மறுபுறம் அவரை வெளியில் எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இறுதியாக முக்கிய பொறுப்பாளர் ஒருவர் அந்தப் பொண்ணுடன் கதைத்து இப்பொழுது அவசியமில்லை எனவும்   தேவைப்படும் பொழுது மீள வாருங்கள் எனக் கூறி அனுப்பிவிட்டதாக ஒரு மாத்தின் பின் வீடு வந்து சேர்ந்தார். இப்பொழுது அவர் யார் யாரை சந்தித்தார் அவர்கள் என்ன கூறினார்கள் என அவரது தாய் மகளின் பெருமைகளைக் கூறத் தொடங்கினார்...

 

நானும் உயர்தரப் பரிட்சைகள் முடித்து எனது பயணத்தை ஆரம்பித்திருந்தேன்.
 

பலர் உயர்தரப்பரிட்சை எடுத்தவுடன் ஆங்கிலம் கற்பதற்குச் சென்றனர் ... அல்லது இன்னுமொரு துறையில் தம்மை வளர்ப்பதற்காக தொழில்நூட்ப கல்லுரிக்குச் சென்றனர்.  இப்படியான விடயங்களிலையே மாணவர்கள் பெரும்பாலும்  ஆர்வமாக இருந்தனர்... இருப்பர்...  இப்பொழுது புதிதாக கணணி வேறு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது...  இதைக் கற்பவர்களின் தொகை ஒரளவு அதிகரித்து  காணப்பட்டது..... எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத  ஒரு சாதனம் என்றும் கூறிக்கொண்டார்கள்... எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருக்கவில்லை... அப்படி இருந்தாலும் கற்பதற்கு முடியாத வீட்டின் சூழல். இருப்பினும் பரிட்சை எடுக்கும் பொழுதே அரசியல் செய்வது என முடிவெடுத்திருந்தேன். ஆனால் யாருடன் எப்படி எங்கே சேர்வது என்ன செய்வது என்பதில் தெளிவில்லாமல் இருந்தேன்.

 

இயக்கங்களை விட்டு பலர் விலகிய… விலகுகின்ற காலம். இயக்க அரசியல் முடங்கியிருக்கின்ற காலம். ஒரு இயக்கத்தில்  சேர்வதாக இருந்தாலும் புலிகள் இயக்கத்தில் சேர்கின்ற காலம் இது. இந்த சுழலில் நான் என்ன முடிவு எடுக்க முடியும்.

 

ஒரு நாள் ஈழநாடு பத்திரிகையின் முன் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில்  "வடக்கு கிழக்கில் நமது போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் மலையகத்தில் தொடரும்" என ஈரோஸ் தலைவர் பாலகுமார் அவர்கள் வழங்கிய  நேர்காணல் ஒன்று வந்திருந்ததுஇது என்னைக் கவர்ந்தது... ஏனெனில் நான் கரவெட்டியில் பிறந்தபோதும் மலையகத்தில் வளர்ந்தவன்.. எனது சிறு  வயதின் பெரும்பாலான காலங்கள் மலையத்திலையே கழிந்தன.... அந்த மக்களின் வாழ்வையும் கஸ்டங்களையும் பிரச்சனைகளையும் நன்கு  அறிந்திருந்தேன். உண்மையிலையே போராட்டம் அங்குதான் ஆரம்பித்திருக்கவேண்டும். ஏனெனில் அவர்களே "இருபாதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகளாக" வாழ்கின்றனர்.

எனது உணர்வுகள் சிந்தனைகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி நான் ஏன் உங்கள் இயக்கத்தில் சேர விரும்புகின்றேன் எனக் கடிதம் எழுதினேன். டெம்பில் ரோட்டில் இருந்த அவர்களது தலைமையகத்தில் கொண்டு சென்று பாலகுமாரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டேன். அவர்கள் அவர் சுன்னாகத்திலுள்ள முகாமில் இருப்பதாக கூறினார்கள். அந்த இடத்திற்கு சைக்கிளில் ஊழக்கிச் சென்றேன். நான் வந்த விடயத்தைக்  கூறினேன். எனது கடிதம் பலரின் கைகளுக்கு கை மாறியது. சிலர் என்னை ஒரு மாதிரிப் பாரத்தார்கள். எனக்கு வெட்கமாகவும் இருந்தது. சரி நான் என்ன களவா செய்கின்றேன்  நல்ல விடயம்தானே செய்கின்றேன் என நினைத்து பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தேன்.

 

 

Edited by nunavilan

தொடருங்கள் மீரா அண்ணா

மீரா பாரதி ஐயா! களத்தில் கருத்துக்கள் எழுதுவதில் ஓரிரு எழுத்துப் பிழைகள் அவ்வப்போது ஏற்படுவதை விளங்கலாம். ஆனால் இதுபோன்ற ஆக்கங்களில் பலர் சுட்டிக்காட்டியும், அதை திருத்துவதாகக் கூறிக்கொண்டே தொடர்ச்சியாக தமிழ் எழுத்துப் பிழைகளை விட்டுவருவது நெருடுகிறது.  

சகமாணவர்கள் சிலர் க.பொ.த. உயர்தரப் படிப்பில் பரீட்சை எழுதமுடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது, "எனக்கு அந்த சூழ்நிலை இல்லைத் தானே, எனது பிரச்சினை மட்டும் தான் எனக்கு முக்கியம், அவர்களைப் பற்றி  நான் ஏன் அக்கறை கொள்ளவேண்டும், எனவே நான் எப்படியும் பரீட்சை எழுதியாக வேண்டும்" என்ற மனோநிலையில் மிகவும் தைரியமாக, தொடர்ச்சியாகப் போராடிய நீங்கள், இன்று இதுவரை, பலர் சுட்டிக்காட்டியும், அந்த எழுத்துப் பிழைகளை திருத்தும் விடயத்தில் அந்தப் பழைய போராட்ட குணத்தை உங்களிடம் காண முடியாமை வருத்தமான விடயம்.  

எனவே ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், சிலரின் தூண்டுதலில் இதை வேண்டா வெறுப்புடன் எழுத முற்பட்டது போல உள்ளது. என்றாலும் எழுதி முடிக்கும்போது தான் அந்த நோக்கம் என்னவென்று சொல்ல முடியும்.

எனவே தொடர்ந்து நல்ல தமிழில் எழுதுங்கள். உங்கள் ஆக்கம் பல மறைபொருள் உண்மைகளை அதனூடாக வெளிபடுத்தியே தீரும் என்பது என் நம்பிக்கை.

  • தொடங்கியவர்

நட்புடன் நண்பர்களுக்கு...
இத் தொடரின் பகுதி ஒன்று மற்றும் இரண்டு என்பவற்றில் நான் கண்ட எழுத்துப் பிழைகளை திருத்தி சில மாற்றங்களையூம் செய்துள்ளேன்.
மூன்றாவதில் எழுத்துப் பிழைகளைக் காணவில்லை.. சிலநேரம் எனது கண்களிலிருந்து தப்பித்திருக்கலாம்....
மற்றும் படி திட்டமிட்டு எதையூம் செய்யவில்லை....
தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திவிடுவேன்.

உங்கள் ஆதரவூக்கு நன்றி பல..
நன்றி

Edited by meerabharathy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம்  குடியிருந்த பேக்கரி லேன்  வீட்டின் அயல்வீட்டு இளம் பெண் ஒருவர்  வீட்டுக்கு சொல்லாமல் இயக்கத்தில் சேர்ந்தார்.

அவரது தாய் அவரை ************************ ஆடப்போய்விட்டால் என்று பலவழிகளிலும் திட்டித் தீர்த்தார்...

 

 

 

இது போன்ற இன்னுமொரு பதிவுல் பெண்களை ஓடுகாலிகள் என்று  பலரும் தங்கள் கருத்க்களை சொல்லுகிறார்கள் ..அடிப்படையில் பெண்களை அடிமைகளாகவும் , கலாச்சார சின்னமாகவும் பார்க்கிற சமூகத்த்தில் பெண்கள் எந்த வகையிலும் செல்ல முடியாது என்பதற்ற்கு இது ஒரு நல்ல உதாரணம் . அது மாறாது .

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற இன்னுமொரு பதிவுல் பெண்களை ஓடுகாலிகள் என்று  பலரும் தங்கள் கருத்க்களை சொல்லுகிறார்கள் ..அடிப்படையில் பெண்களை அடிமைகளாகவும் , கலாச்சார சின்னமாகவும் பார்க்கிற சமூகத்த்தில் பெண்கள் எந்த வகையிலும் செல்ல முடியாது என்பதற்ற்கு இது ஒரு நல்ல உதாரணம் . அது மாறாது .

 

மனித உரிமை ஆணையாளர் நவீபிள்ளைக்கே அந்த கெதி என்றால்.......அவர் பெண் என்றபடியால்தானே மேர்வீன் அப்படி அறிக்கைவிட்டவன்

  • தொடங்கியவர்

சுன்னாக ஈரோஸ் முகாமில் சிலர் மேசைகளின் மேல் இருந்தும் சிலர் இன்னுமோரு மூலையிலும் நின்றும் இப்படி பல குழுக்களாக சிரித்தும் சீரியசாகவூம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் என்னிடம் வந்து கொ... எனத் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு கொக்குவில் ஒழுங்கை ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு போய் பண்டாரி என்பவரைச் சந்திக்கவும் எனக் கூறினார். இவரது பெயர் ர. ஆனால் எல்லோரும் அன்பாக பண்டாரி என அழைப்பார்கள். இதற்கு வேறு ஏதாவது காரண காரியங்கள் இருக்கின்றதா என நான் அறியேன்.

 

நான் மிகவும் ஆர்வத்துடன் அங்கிருந்து சைக்கிளை உழக்கிக்கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றேன். அங்கு நந்…  என்பரைச் சந்தித்தேன். அவரிடம் விடயத்தைக் கூற பண்டாரி இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார் எனக் கூறிவிட்டு அங்கிருந்த சிலபேருடன் தனது உரையாடலைத் தொடர்ந்தார்சிலர் சிங்கள மொழியில் தமக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர். இவர்கள் கொழும்பு பல்கலைக்கழத்தில் பிரதானமாக இயங்கிய சுதந்திர மாணவர் அமைப்பு (ISU) என பின்னர் அறிந்துகொண்டேன். இவர்கள் தமிழ் தேசத்தின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டவர்கள்....

இதனால் ஜேவிபியுடன் முரண்பட்டார்கள். ஆகவே ஜேவிபி இவர்களுக்கு கொலை மிரட்டல் செய்ததுடன் இவர்களது அங்கத்தவர்களை கொன்றனர்.

இது இவர்களது எதிர்காலம் தவறான பாதையில் செல்வதற்கு வழிவகுத்தது.

 

(எவ்வளவூதான் நாம் முன்னெறிய பிரிவினதாக காட்டிக் கொண்டாலும் தெளிவான உறுதியான நிலைப்பாடுகள் இல்லாவிட்டால் அதிகார வர்க்கத்தின் கைதிகளாகிவிடுவோம் என்பதற்கு இவர்களும் நல்ல உதாரணம்.

ஜேவிபியிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக பிரேமதாசாவிடம் இறுதியாக தஞ்சமடைந்து அனைத்து தலைவர்களையும் இவர்கள் இழந்தனர். உயிரோடு இருந்தவர்கள் அரசாங்கத்தின் உளவாளிகளாக கொழும்பு பல்கலைக்கழத்தில் வலம் வருகின்றனர் என ஜாதிக சிந்தனை என்ற இனவாதக் குழு சிங்கள மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. இதனால் பெரும்பான்மை தென் பகுதி மாணவர்களிடமிருந்தும் அந்நியப்பட்டனர். மேற்குறிப்பிட்டது இவர்களது எதிர்காலம் எப்படி முடிந்தது என்பதை. ஆனால் இவர்களது கடந்தகாலம்...இன்று).

 

இன்று இவர்களைக் கண்டதும் கதைப்பதைக் கேட்பதும் பெரும் உற்சாகமாக இருந்தது... சிங்கள மாணவர்களில் இவ்வளவு முன்னேறிய பிரிவினரா என பார்த்து வியந்தேன்.....

 

பண்டாரி வந்தார்... உயரமான கொஞ்சம் உடம்பான இளம் மனிதர்.... பால்வடிகின்ற சிரித்த முகம்.... தன்னைப் பற்றிய அறிமுகம் செய்த பின் இன்று தாம் என்ன செய்கின்றோம் என்பதையும் கூறினார்.... இந்த சூழலில்  இயக்கத்தில் இணைவதற்கான காரணத்தைக் கேட்டார்...
 

அறிமுகம் முடிந்த பின்னர்...

" சமைத்திருக்கின்றார்கள்... சாப்பிடலாம்" என பண்டாரி அழைத்தார்...

எனக்கு சிறிது தயக்கம்.... வந்தவுடன் சாப்பிடுவதா என.... "இல்லை வேண்டாம்என்றேன்...

"தயங்காமல் சாப்பிடுங்கள்" என்றார்....

நந்  சிங்கள மாணவர்களையும் நந் சாப்பிட அழைத்தார்....

நந் சர்வதேச மாணவர்கள் அமைப்புடன் ராஜாவிற்கு உதவியாக இருந்தார்... ராஜா திருகோணமலையைச் சேர்ந்தவர். சர்வதேச மாணவர்கள் அமைப்புகளுடன் தொடர்பாக இருந்தவர். (பின் 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தெரிவாகி ஈரோசின் பாராளுமன்றக் குழுவிற்கு தலைவராக செயற்பட்டவர். இதன்பின் கனடாவிற்கு வந்தார். கனடாவில்  அவரது அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பல முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கனடாவிலிருந்தபோதே மதுபானத்ததிற்கு அதிகம் பழக்கமானவராக இருந்தார்இலங்கை சென்று சிறிது காலத்தில் திருகோணமலையில் மரணமடைந்தார். )

 

  இந்த அமைப்பினுடாக புதிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள் தோழர்களாக...
 

சாள்... குட்டி ர... சிவே... பாலமு... கிளிநொச்சி லெ... பி.எல்... மதுரம... சாந்தீ... மயூ... சுரே...  ஜோர்... கண்... திருகோணமலை ரம... கண்... சர்... பண்ணை... வேலு அன்ப... வடமாராட்சியிலிருந்து சில நண்பர்கள் லம்போ

 

இங்குதான் முதன் முதலாக ஆவணக்காப்பகம் என்ற சொல்லை அறிந்துகொண்டேன். இதற்குப் பொறுப்பாக ஐயா(?) என்று ஒருவர் இருந்தார். அவருக்கு உதவியாக சாள்... இருந்தார். பல ரஸ்சிய நூல்கள் கிடைத்தன... ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன்....

தாய்.. விரம் விளைந்தது… என தொடர்ந்தது....

அப்பப்ப கோட்பாட்டு தத்துவ நூல்களையும் வாசிக்க முயற்சித்தேன்...

காந்தியின் சத்திய சோதனையை வாசித்து உடனடியாக மரக்கறி உண்ணுபவராக மாறினேன். ஆனால் வீட்டு நிலைமை இதைத் தொடரச் செய்யவில்லை. இடையில் கைவிட்டுவிட்டேன்.

 

வடக்கு கிழக்கு இடைக்கால சபைக்கு தலைமைதாங்க மூன்று பெயர்களை சிபார்சு செய்யும் அதிகாரம் புலிகளின் தலைமைக்கு வழங்கப்பட்டு தெரிவும் செய்தார்கள். அதில் ஒருவரை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும். அதற்கமைய தெரிவு செய்தார்கள். . மேலும் 15 பேர் கொண்ட சபையில் பெரும்பான்மையாக புலிகளின் அங்கத்தவர்களும் சக இயக்கங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தலா ஒருவரும் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இறுதியாக இவற்றில் ஒன்றையும் புலிகளின் தலைமை ஏற்கவில்லை என செய்திகள் வந்தன..

 

நாட்கள் உற்சாகமாகச் சென்று கொண்டிருக்கின்றன... நானும் ஆர்வமுடன் புதிய நண்பர்களை சந்திப்பதும் புதிய நூல்களை வாசிப்பதுமாக காலம் கடந்து செல்கின்றது...
கற்பதற்காகப் போராடுவோம் போராடுவதற்காக கற்போம் என்பதே மாணவர் அமைப்பின் சோகசம்.
மாணவர் அமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கின்றது. நான் தென்மாராட்சியில் இருந்து வந்தபடியால் தென்மாராட்சியிலுள்ள பாடசாலைகளுக்கு சைக்கிளில் பயணம் செய்து மாணவர்களின் கையெழுத்தைப் பெறுகின்றோம். மொசாடும் மயூம் நானும் இந்தப் பயணங்களில் இணைந்து செயற்படுகின்றோம்...
 

பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளை சேர்த்து யாழ் கச்சேரிக்கு பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக சென்று கைளித்தோம். மேடையில் பலர் உரையாற்றினார்கள் நண்பர் பாலமுயும் உரையாற்றினார்.

இந்த நாளில் தான் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திலிபன் மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளால் பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். இந்த உண்ணாவிரதம் பெரும் அலையை கிளப்பியதோடு உணர்ச்சியையும் உருவாக்கி விட்டிருந்தது

 

 நாம் காரைநகரில்  இறால் பண்ணை வளர்ப்புத்திட்டத்திற்காக உதவி செய்யப் போனோம். கடற்கரையில் பாத்தி கட்டுவதே நமது பணி. காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து கசோனா கடற்கரையில் குளித்து இரவு  உணவு உண்டு நிம்மதியாக படுத்தோம்.

இரண்டாம் முறையும் காரைநகருக்குச் சென்று இறால் பண்ணனைக்காக கடற்கரையில் பாத்தி கட்டுகின்ற வேலையை காலையிலையே ஆரம்பித்தோம். இந்த முறை பாலகுமாரும் வந்து சகதி மண்ணில் கால் பதித்து எங்களுடன் வேலை செய்தார். இது எங்களுக்கு உற்சாகமாக இருந்து. பாலகுமார் தொடர்பாக பலர் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருந்து வந்ததை அறிந்திருக்கின்றேன். மிகவும் எளிமையானவர்... யாருடனும் பழகுவார்...முக்கியமாக தனது அழுக்குகளை தானே சுத்தம் செய்பவர்... இதற்காக தண்ணி வாளியுடனும் தும்புத்தடியுடனும் செல்பவர் என்று அனைவரும் கூறுவார்கள்.

மதியமளவில் பாலகுமாருக்கு செய்தி ஒன்று இரகசியமாக தெரிவிக்கப்டுகின்றது. திலிபன் இறந்துவிட்டார் என்பதே அந்த செய்தி. உடனடியாக பண்ணை வேலைகளை நிறுத்திவிட்டு யாழ் நோக்கி அணைவரும் கிளம்புகின்றோம்.

 

அவர்கள் "டெம்பில் ரோட்"டில் இருக்கின்ற தலைமைக் காரியாலயத்திற்கு செல்வதால் என்னை இடைவெளியில் இறக்கிவிடும்படி கேட்கின்றேன். நான் திண்ணைவேலை சந்திக்கு அருகாமையில் பாலாலி வீதியிலிருந்த அலுவலகத்திற்குச் சென்று சில நூல்களையூம் எடுத்துக் கொண்டு நாவற்குழி வீட்டுக்குச் செல்கின்றேன். இந்தக் காலங்களில்  நாவற்குழி சந்தியில் இருந்த பெரிய பாழடைந்த வீடு ஒன்றில்  குடியிருந்தோம்.

 

எனக்கு ஏனோ திலிபன் உண்ணாவிரதம் இருந்ததிலும் அதன் பிறகு அவர் மரணிக்கும் வரை  விட்டதிலும் உடன்பாடிருக்கவில்லை

வீட்டிலும்  தங்கச்சி உண்ணாவிரதத்தில்  உணர்வுபூர்வமாக  பங்குபற்றினார்அல்லது இந்த அலையில்  அல்லுப்பட்டு சென்றிருந்தார். ஆனால் நான் அதைச் சுற்றியுள்ள வீதிகளில் பயணம் செய்கின்றபோதும் இந்த அலை என்னைப் பாதிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. நான் தவறா சரியா என்றும் தெரியாதுஆனால் அவர்களுடைய செயற்பாடுகளுடன்   உடன்பாடில்லை என்பதை மட்டுமே நான் புரிந்திருந்தேன். ஆகவே நான் ஒருபோதும் அந்தப் பக்கம் போனதில்லை.

ஆனால் நான் தனித்திருப்பதாக உணர்ந்தேன்.

 

யாழ் நகரமே சோக மயத்தில் ஆழந்துபோனது....

எங்கும் சோக கீதங்கள்... மனதைப் பிழிந்தன...

திலிபனின் உடல் ஊர்வலமாக யாழ் குடாவைச் சுற்றி வந்தது...  வாசல்களில் குத்துவிளக்கு ஏற்றி மரியாதை செய்தனர்.

இறுதியில் மக்கள் அலை அலையாக சென்று அஞ்சலி செய்தனர்.

 

இதேவேளை புலிகளின் தலைவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் கடலில் வைத்து கைது செய்தனர். இவர்களைக் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தம் செய்யப்பட்டதுஇரகசியமாக சைனைட்டைக் கொடுத்து தற்கொலை செய்வதற்கு உதவினார்கள். அல்லது ஊக்குவிக்கப்பட்டார்கள்..

எனக்குத் தனிப்பட இவ்வாறன தற்கொலைகளில் உடன்பாடில்லை. நமது போராட்டம் வாழ்வதற்கான போராட்டம். வாழ்வதனுடாகத்தான் நமது நியாயங்களை நிறுபிக்கவும் உரிமைக்காக போராடவும் முடியும்.

இவ்வாறு இறப்பது ஆற்றலுள்ள தலைவர்களை இழப்பதாகும். நமக்குத் சாதகமான சாத்தியமான எல்லா வழிகளிலும் போராடுவதற்கு தயாராக இருக்கவேண்டும். ஆனால் தற்கொலை செய்வதன் மூலம் சாத்தியமான ஒருவழியை மட்டுமே பின்பற்றுகின்றோம். ஆனால் இதனுடன் நமது வாழ்வு முடிந்து விடுகின்றது.

 

இதற்காக தற்கொலை செய்து கொண்டு (போராடி) மரணித்தவர்களை அவமதிக்கவில்லை. அவர்களைப் புரிந்து கொள்கின்றேன். இந்த சமூகம் ஒருவர் மீது கொடுக்கும் நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளலாம். ஆனால் இவற்றுக்கு இறப்பதுதான் தீர்வு என் ஒவ்வொருவரும் முடிவெடுத்தால் போராட்டம் யாருக்காக என்பதே கேள்விக்குறியாகிவிடும். ... போராட்டத்தில் தற்கொலையை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் கூறப்பட்டபோதும் அவை என்னால் ஏற்பதற்குரியவையல்ல. ஏனெனில் எல்லாவற்றையும் விட மனித உயிர் உயர்வானது பெறுமதிமிக்கது..

ஆகவே இவையெல்லாம் புலிகளின் தலைமை மீது வெறுப்பையும் எரிச்சலையும் எனக்கு உருவாக்கின.

 

இடைக்கால சபைக்கு தெரிவு செய்த தலைவரை நிராகரித்தமை மற்றவர்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரித்தமை மற்றும் புலித்தலைவர்களை தற்கொலை செய்ய அனுமதித்தமை அல்லது தூண்டியமை இவை எல்லாம் மீள்பார்வைக்கு உட்பட வேண்டியவை. இவ்வாறு மீள்பார்வைக்கு உட்படுத்தி விமர்சிப்பது என்பது புலிகளின் தலமையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கல்ல. இனிவரும் காலத்தில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கடந்த காலத்தில் எங்கே என்ன தவறு செய்தோம் என்பதை அறிந்து வைத்திருக்கவேண்டியது நம் பொறுப்பாகும்.

 

வெய்யில் கடுமையாக எறித்தபோதும் யாழ் நகரை நோக்கி கரு மேகங்கள் திரண்டு வருவதாக உணர்ந்தேன். அவை போர் மேகங்கள் என்பதை உணரவில்லை...

 

தொடரும்...

 

 

Edited by meerabharathy

மீரா அண்ணை தொடர்ந்து எழுதுங்கள் ,ஆவலுடன் வாசிக்கிறேன்.
இருந்தாலும் உங்களை ஒரு போராளியாய் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.என் கருத்தில் தவறு என்றால் மன்னித்துவிடுங்கள். 

//வடக்கு கிழக்கு இடைக்கால சபைக்கு தலைமைதாங்க மூன்று பெயர்களை சிபார்சு செய்யும் அதிகாரம் புலிகளின் தலைமைக்கு வழங்கப்பட்டு தெரிவும் செய்தார்கள். அதில் ஒருவரை அரசாங்கம் தெரிவு செய்ய வேண்டும். அதற்கமைய தெரிவு செய்தார்கள். . மேலும் 15 பேர் கொண்ட சபையில் பெரும்பான்மையாக புலிகளின் அங்கத்தவர்களும் சக இயக்கங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் தலா ஒருவரும் இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இறுதியாக இவற்றில் ஒன்றையும் புலிகளின் தலைமை ஏற்கவில்லை என செய்திகள் வந்தன..//

 

//இதேவேளை புலிகளின் தலைவர்களை சிறிலங்கா இராணுவத்தினர் கடலில் வைத்து கைது செய்தனர். இவர்களைக் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு ஆயத்தம் செய்யப்பட்டதுஇரகசியமாக சைனைட்டைக் கொடுத்து தற்கொலை செய்வதற்கு உதவினார்கள். அல்லது ஊக்குவிக்கப்பட்டார்கள்..

எனக்குத் தனிப்பட இவ்வாறன தற்கொலைகளில் உடன்பாடில்லை. நமது போராட்டம் வாழ்வதற்கான போராட்டம். வாழ்வதனுடாகத்தான் நமது நியாயங்களை நிறுபிக்கவும் உரிமைக்காக போராடவும் முடியும்.

இவ்வாறு இறப்பது ஆற்றலுள்ள தலைவர்களை இழப்பதாகும். நமக்குத் சாதகமான சாத்தியமான எல்லா வழிகளிலும் போராடுவதற்கு தயாராக இருக்கவேண்டும். ஆனால் தற்கொலை செய்வதன் மூலம் சாத்தியமான ஒருவழியை மட்டுமே பின்பற்றுகின்றோம். ஆனால் இதனுடன் நமது வாழ்வு முடிந்து விடுகின்றது.//

 

 

//இடைக்கால சபைக்கு தெரிவு செய்த தலைவரை நிராகரித்தமை மற்றவர்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரித்தமை மற்றும் புலித்தலைவர்களை தற்கொலை செய்ய அனுமதித்தமை அல்லது தூண்டியமை இவை எல்லாம் மீள்பார்வைக்கு உட்பட வேண்டியவை. இவ்வாறு மீள்பார்வைக்கு உட்படுத்தி விமர்சிப்பது என்பது புலிகளின் தலமையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கல்ல. இனிவரும் காலத்தில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கடந்த காலத்தில் எங்கே என்ன தவறு செய்தோம் என்பதை அறிந்து வைத்திருக்கவேண்டியது நம் பொறுப்பாகும்...//

 

 

எனக்கு ஏனோ திலிபன் உண்ணாவிரதம் இருந்ததிலும் அதன் பிறகு அவர் மரணிக்கும் வரை  விட்டதிலும் உடன்பாடிருக்கவில்லை

வீட்டிலும்  தங்கச்சி உண்ணாவிரதத்தில்  உணர்வுபூர்வமாக  பங்குபற்றினார்அல்லது இந்த அலையில்  அல்லுப்பட்டு சென்றிருந்தார். ஆனால் நான் அதைச் சுற்றியுள்ள வீதிகளில் பயணம் செய்கின்றபோதும் இந்த அலை என்னைப் பாதிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. நான் தவறா சரியா என்றும் தெரியாதுஆனால் அவர்களுடைய செயற்பாடுகளுடன்   உடன்பாடில்லை என்பதை மட்டுமே நான் புரிந்திருந்தேன். ஆகவே நான் ஒருபோதும் அந்தப் பக்கம் போனதில்லை.

ஆனால் நான் தனித்திருப்பதாக உணர்ந்தேன்.

 

//

 

நிறையப்பேருக்கு இது விளங்குவதில்லை.....

 

கூட்டமாக அரோகரா சொல்ல சொல்லுகிறார்கள்..

 

இங்கு நிறையபேருக்கும்....இந்தியாவில் திருட்‌டு சாமியாரின் பக்தர்களுக்கும் (கண்மூடித்தனமானவர்கள்) வித்தியாசம் இல்லை....

 

(சிலவேளை நானும் EROS ஓ) :)

 

  • கருத்துக்கள உறவுகள்
(சிலவேளை நானும் EROS ஓ)  :)

 

 

 

கருத்துக்களை பார்க்க நீங்கள் ஈரோஸ் என தெரியவில்லை. அல்லது அமத்தி வாசிக்கிறீர்களோ தெரியவில்லை.

கருத்துக்களை பார்க்க நீங்கள் ஈரோஸ் என தெரியவில்லை. அல்லது அமத்தி வாசிக்கிறீர்களோ தெரியவில்லை.

 

இடத்திற்கேப்ப நிறம் மாறும் பச்சோந்திகள் :)

rsz_rango_poster.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மீரா அண்ணா எங்கே எப்பிடி ஏன் எதற்காக எமது போராட்டம் தோல்வி அடைந்தது என்பது ஆராயப்பட வேண்டியதே......

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியாவில் எந்த மேதாவி போராட்டம் நடத்தினாலும் அது தோல்வியைதான் தழுவும்,அப்படியான ஒருபுவியல் சூழலில்தான் நாம் இருக்கின்றோம்....1971ஆம் ஆண்டுகிளர்ச்சியையும்,எமது 30 வருட போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தவர்கள் யார் என்பது தெரிந்தும் நாம் எமது போராளிகளையும்,அவர்களின் போராட்ட வடிவங்களையும் விமர்சனம் செய்து ,இன்னோரு போராட்டத்தை வெற்றியடைய செய்ய முடியாது.விமர்சனங்கள் தனிநபருக்கு ஒரு நிம்மதியை,புகழை தேடித் தரலாம் .நிச்சமாக இன்னோரு ஆயுத போராட்டதை வெற்றி பெற வைக்காது.உலகத்தில் இருந்த விடுதலை இயக்கங்கள் செய்தவற்றைதான் புலிகளும் செய்தார்கள் இதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.......

 

யசீர் அரபாத்,செகுவாரா,லெனின்,மாவோ,கஸ்ரோ போன்றோர் விடுதலை நாயகர்கள் என்றால் பிரபாகரனும் அவரது போராளிகளும் என்னை பொறுத்தவரை விடுதலை நாயகர்கள் தான்......

உங்கள் கதையை எழுதுங்கள் ஆனால் அதன் மூலம் அடுத்த போராட்டம் வெற்றியளிக்கும் என சொல்லமுடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீரா அண்ணை தொடர்ந்து எழுதுங்கள் ,ஆவலுடன் வாசிக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மீராபாரதி என்ன எழுத போகின்றார் என்று தெரியமுதலே அதை முளையில் கிள்ள மட்டுநர் தொடக்கம் கிளம்பி விட்டார்கள் ,உருப்பட்ட மாதிரிதான் .

 

 

வரலாறு ஒன்று தான். பத்துபேர் தமிழரின் வரலாற்றை எழுதினாலும் சம்பவங்கள் ஒன்றாக தான் இருக்க முடியும்.உ+ம்: திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதம். இதனை நான் எழுதினால் என்ன நீங்கள் எழுதினால் என்ன ஒன்றாக தான் இருக்க வேண்டும்.(உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டுமெனில்).2009 க்கு பின் பலர் வரலாற்றை  திரிக்க பல முனைகளில் முயல்கிறார்கள் என்பதை நீங்கள் புரிய வேண்டும்.

நான் இந்தக்கட்டுரையின் இறுதியாக பதியப்பட்டதை  இரசிக்கவில்லை... 

 

வரலாற்று ரீதியாக நடந்த  திலீபன் அண்ணாவின் வீரச்சாவும் அதன் பின்னரான குமரப்பா , புலேந்தி அம்மானுடனான வீரச்சாவு  வரலாறு திரிக்கப்பட்டு இருக்கின்றது.... !  

 

 

திலீபன் அண்ணா  5 அம்ச கோரிக்கையை வைத்து உண்ணா விரதம் இருந்தார் ...  புரட்டாதி மாதம் 26 ம் திகதி  அண்று அவரின் வீரச்சாவுக்கு பின்னர்  ஐப்பசி மாதம் 5 ம் திகதியே  குமரப்பா புலேந்தி அம்மான் ஆகியவர்களின் வீரச்சாவு நிகழ்தது....     அதன் அடுத்த நாள் இந்திய புலிகள் போர் ஆரம்பித்தது.... ! 

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் மீராபாரதி, தீலிபனின் உண்ணா விரதத்தில் உங்களுக்கு ஏன் ஈடுபாடு இல்லாமல் போனது? அவர் புலி என்பதாலா,அல்லது அகிம்சை போராட்டம் அந்த நேரத்தில் சரி வராது என்பதாலா, அல்லது இந்தியாவில் நம்பிக்கை இல்லையா?
 
குமரப்பா,புலேந்திரன் அன்று சயனைட் குடித்து தற்கொலை செய்திருக்கா விட்டால் இன்று உயிரோடு இருந்திருப்பார்களா? எப்படியாவது காப்பாற்றி இருக்காலாம் என்று நினைக்கிறீர்களா? அல்லது அரசின் கையால் செத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறீர்களா?
 
உங்கள் நேர்மையான பதிலை எதிர் பார்க்கிறேன்.தொடரை தொடர்ந்து எழுதுவதற்கு வாழ்த்துக்கள் நன்றி
 

 

 சர்வதேச மாணவர்கள் அமைப்புடன் ராஜாவிற்கு உதவியாக இருந்தார்... ராஜா திருகோணமலையைச் சேர்ந்தவர். சர்வதேச மாணவர்கள் அமைப்புகளுடன் தொடர்பாக இருந்தவர். (பின் 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தெரிவாகி ஈரோசின் பாராளுமன்றக் குழுவிற்கு தலைவராக செயற்பட்டவர். இதன்பின் கனடாவிற்கு வந்தார். கனடாவில்  அவரது அகதிக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பல முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கனடாவிலிருந்தபோதே மதுபானத்ததிற்கு அதிகம் பழக்கமானவராக இருந்தார்இலங்கை சென்று சிறிது காலத்தில் திருகோணமலையில் மரணமடைந்தார். )

 

 

 

இரட்னராஜா சில காலம் லண்டனிலும் இருந்தார். ஒரு சிங்களப் பெண்மணி துணைவியாக இருந்தார். அதன் பின்பு கனடா சென்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

85 ல் நாட்டைவிட்டு விரட்டப்பட்டதாலும் அதன் பின்னர் சிலகாலங்கள் ஈழத்தில் நடந்த பிரச்சனைகள்
சிங்கள அரசினாலும் மேற்கத்திய ஊடகங்களினாலும்
மூடி மறைக்கப்பட்டதாலும் பலவிடையங்களை செவிவழியாகவே அறியமுடிந்தது.

 

எழுதுபவர்களின் நோக்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும்
அறிய வேண்டியது இன்னும் பல இருக்கின்றது
 

உண்மை திரிபு என்பதற்கு அப்பால் நாளை நாங்கள் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வை எதிர்பார்க்கின்றோம்  என்பது தான் முக்கியம்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.