Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கி எழுவோம் பொங்குதமிழாய் 2014

Featured Replies

முதல் முறையாக எம் நெதர்லாந்து  வாழ்  கலைஞ்சர்களை ஒருங்கிணைத்து .யாழ் கள கவி புங்கையூரானின் வரிகளில்  ஒரு காட்சிப்படுத்தலுடன் இந்த பாடலை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
 
வரிகள் --புங்கையூரான்
 
குரல் --   ராஜீவ் ,விஜயன் .நாதன் 
 
நடனம் --ஆஷா விஜயன் , கஸ்தூரி கண்ணப்பு , ரேவதி இராஜதுரை .அஸ்வினி சிவரூபன் ,சங்கவி குகன் .
 
ஒளிப்பதிவு --ஜெயபாலன் ,குகன் .சிவரூபன் 
 
இயக்கம் ,படக்கலவை -- ராஜீவ் 
 
இசை - சேகர் [தமிழ்சூரியன் ]
 
தயாரிப்பு -- கலைபண்பாட்டுக்கழகம் ,நெதர்லாந்து .
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வர்ணிப்பதற்கு வார்த்தைகளைத் தேடுகின்றேன்.

 

வருவதற்கு மறுக்கின்றன!

 

அளவான இசை, அதற்கேற்ற நடனங்கள்...

 

அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்ற கம்பீரத்துடன்...

 

பாடகர்களின் குரல்கள்..!

 

எதையெல்லாம் இழந்து நிற்கிறோமோ..

 

அதையெல்லாம் கண் முன் கொண்டு வருகின்ற ஒளிப்பதிவு....!

 

அனைத்தையும் மேவி நிற்கின்றது,

 

அழகிய இசையமைப்பு....

 

வாழ்த்துக்கள் சொந்தங்களே...

 

வரலாறு என்றும் வாழ்ந்திருக்கட்டும்...!

 

வெறும் நன்றியென்று சொல்லிவிட்டு,

 

விடை பெறும் எண்ணமில்லை...

 

வீறு கொண்டு எழுவோம்...

 

விதி தனை எழுதி நிற்போம்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்.

மிகவும் அழகாக இருக்கிறது.

கவிக்கும் கலைஞ்ர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும்  யாழும் தலை  நிமிர்ந்து சொல்லலாம்

தலை  நிமிர்வோமென........

 

பெருமையாக இருக்கு

நான் பழகும் இடத்தை  நினைக்க........


தொடரட்டும் தங்கள் பணி

வாழ்க  வளமுடன்

  • தொடங்கியவர்

நன்றி விசுகு அண்ணா உண்மையில் இந்த்கப்பாடல் பலரது இன மானம் கொண்ட தமிழர்களை உற்சாகப்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது .................ஏனனில் இந்தப்பாடல் வெளியிட்ட கணத்தில் இருந்து எனக்கு கிடைத்த தொடர்புகளை இங்கே நான் கூறி என்னை பெரிய மனிதனாய் காட்ட விரும்பவில்லை ...ஆனாலும் எதோ ஒரு உந்து சக்தியாய் இந்த களத்தில் இருந்து பிறந்த நானும் ஏனைய கலைஞ்சர்களும் அடைந்த பெருமை இந்த யாழ் என்னும் இனிய களத்திற்கே சொந்தமானது .இந்த களத்தின் உறவுகளின் மௌனம் எனக்கு மட்டும் அல்ல தமிழீழத்தின் சொத்து நான் கவியாக பார்க்கும் புதுவை அண்ணாவுக்கு அடுத்த படியாக பார்க்கும் புங்கை அண்ணாவையும் பாதித்துள்ளது ...என்றால் எதோ ஒன்று இருக்கு...........ஆனால் இவை அனைத்துக்கும் மேலாய் எமது வரலாற்று கடமை .என்ற உணர்வு எம்மை இன்னும் இன்னும் எதையோ செய்ய தூண்டுது  .........

  • தொடங்கியவர்

உண்மையில் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியை கூறிக்கொள்கிறேன் ஆஷா ,கஸ்தூரி ,ரேவதி ,அஸ்வினி ,சங்கவி .............நீங்கள்  இந்த புலம்பெயர் மண்ணில் பிறந்து வளர்ந்தாலும் உங்கள் கலை ,தாயாக உணர்வு என்னை மெய் சிலிர்க்க வைக்குது உங்களை பெற்றோர்க்கு தலை சாய்க்கிறேன் .தொடர்வோம் கலை ஊடாக . :)

நன்றாக இருக்கிறது. பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

 

தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.

நன்றாக இருக்கிறது. பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

தொடரட்டும் உங்கள் முயற்சிகள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகளும், படக் கலவையும், இசையும்.... ஒரு வித்தியாசமான பாடலைக் கேட்ட, அனுபவத்தை தந்தது.
யாழ்களம் அமைதியாக, ஒரு புரட்சியை செய்து கொண்டுள்ளது. நன்றி கலைஞர்களே... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சூரியன்....

 

ஒரு திறமையான ஆக்கம்...

 

குரல்களும் சரி, இசையும் சரி, பாடல் வரிகளும் சரி, நடனமும் அதில் அவர்கள் காட்டும் முகபாவங்களும் சரி, படக்கலவை மற்றும் எல்லாமே அருமை....

 

நேங்கள் எதிர்காலங்களில் உருவாக்கப்போகும் படைப்பு இன்னும் சிறந்ததாய் வரவேண்டுமென்பதற்காக இந்த இடங்களில் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாமே என்று நான் எண்ணும் சில விடயங்களைச் சுற்றிக்காட்டுகிறேன்...குறை சொல்லுவதாக நினைக்கவேண்டாம்....

 

லொக்கேசன் ஒரே இடங்களே திரும்பத்திரும்ப வருவதால் சற்றுச் சலிப்பு ஏற்படுகிறது, மற்றும் லொக்கேசனுக்கேற்ப பரதனாட்டியம் ஆடும் பிள்ளைகளின் உடை நிறம் அமைந்திருந்தாலும்..உதாரணம் பச்சை புல் தரைக்கு அமைவாக அவர்களின் பச்சை உடை, ஆனால் ஆரம்ப இடத்தில் வெள்ளை பாலமும் கறுப்பு நிற மரங்களின் background ஆதிக்கம் அதிகமுள்ள இடத்தில் மஞ்சல் நிற உடைக்கு துளியளவும் பொருத்தமற்றதான அமைவு உங்கள் படைப்பின் professionalism ஐ குறைத்துக்காட்டிவிடும். மற்றும் படி எல்லாமே அருமை....

 

இந்தப்படைப்பின் நோக்கம் புரட்சிப்பாடல் என்பதால் அதில் தான் கவனம் அதிகம் குவியப்படுத்தப்பட்டுள்ளது என்பது புரிகிறது... எனவே எதையும் குறையாக எடுக்கவேண்டாம்....எல்லாமே அருமை.... தொடருங்கள் உங்கள் பணி....

அருமையான வரிகளுக்கு இதமான இசைகொடுத்து உயிர் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமாய் இருக்கின்றது  தமிழ்சூரியன் .  பங்குபற்றிய கலைஞர்களுக்கும் இசையுடன் எல்லோரையும்  ஒருங்கிணைத்த உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள்...! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு, தமிழ்ச்சூரியன் மூச்சு விட நேரமில்லாமல் நிற்கிற படியால, அவருக்காக நான் எழுதுகின்றேன்!

 

இந்தப் பாடல் யூ டியூப்பில், இது வரை (நான்கு நாட்களில்) இரண்டாயிரத்து, இருநூறு தடவைகள் பார்வையிடப்பட்டிருக்கின்றது!  :D

 

அத்துடன் ஜெனீவாவில், இம்மாதம் நடைபெற இருக்கும் 'பொங்கு தமிழ்' நிகழ்வில், அமைப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடகர்கள் ராஜீவ், விஜயன், நாதன் அவர்களால் நேரடியாக பாடப்பட இருக்கின்றது என்பதையும், மகிழ்வுடனும், பெருமையுடனும் கள உறவுகளுக்கு அறியத் தருகிறேன்!  :icon_idea:

 

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை,

செய்நன்றி கொன்ற மகற்கு!

 

என்னும் வள்ளுவன் வார்த்தகளுக்கிணங்க,

 

நன்றிகள், யாழ்களம்! :D 

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய 'பதிவு' இணையப்பத்திரிகையில் பின்வரும் செய்தி இணைக்கப்பட்டுள்ளது!
 
 
புதன், மார்ச் 5, 2014 - 06:11 மணி தமிழீழம் |
ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக நெதெர்லாந்து கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்படும் எழுச்சிப் பாடல்.

 

 

nithikkana3.jpg

 

 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களஉறவுகளின் இணைந்த அழகான முயற்சிக்குப் பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பணி. வரிகளை தந்த புங்கையூரான் முதல் இசை நடனம் படத்தொகுப்பு படப்பிடிப்பு என அத்தனைகலைஞர்களுக்கும் பாராட்டுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.