Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் – மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டில நடக்கிறத்துக்கும் கால் வேணும் தானே அண்ணே..... ஆனா நீங்க ரெண்டு பெரும் வெறும் வாயாலையே நடப்பீங்க விட்டா பறப்பீங்க

  • Replies 93
  • Views 7.2k
  • Created
  • Last Reply

எமது ரதியா இப்படி எழுதுவது நம்பவேமுடியவில்லை .

கடலில் நடப்பவர்களுக்கும் தரையில் நடப்பவர்களுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கு .

இப்ப புலிகளினால்தான் எமக்கு இவ்வளவு பிரச்சனையும் என்பதை ரதி அக்கா இவ்வளவு அழகாக சொல்ல அதற்கு அதை விட அழகாக விளக்கம் கொடுக்கும் உங்களை மிக அழகாக என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாய் உள்ளது ...........எனக்கும் அழகாக விளக்கம் தர ஆசைதான் ...............அழுக்காகிடுமோ என்று நிறுத்திவிட்டேன் ..........என்னா அழகு என்னா அழகு ............... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் ஆயுதங்கள் இல்லாத அளவுக்கு இந்தியா சிறிலங்கா அரசுக்கு ஆயுதக்கப்பல்களை  காட்டிக்கொடுத்து பிடிபட்டதும்,எரிந்ததும் அறிந்ததே. இதில் தற்கொலை தாக்குதலை எப்போ செய்வது? இறுதியாக கொழும்பில் செய்யபட்ட விமான தாக்குதல்கள் தற்கொலை தாக்குதல் தானே. வடக்கு, கிழக்கு, மேற்கில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய சிறிலங்கா என்ன அமெரிக்காவோ.?போர் முடிந்து 5 வருடம் ஆகியும்  அரசின் கைதுகளும் ,கொலைகளும், பெண்களின் உடலங்கள் கிணற்றில் இருந்து இன்றும் எடுக்கும் நிலையில் அன்று அரசினை தட்டிக்கேட்க யாரால் முடியும். தட்டிக்கேட்ட ரவிராஜுக்கும் பரராஜசிங்கத்துக்கும் என்ன நடந்தது என்பதை அறியாமல் யாரும் இருக்க முடியாது.


 

கடலில் நடப்பவர்களுக்கும் தரையில் நடப்பவர்களுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கு .

 

 

உண்மை தான் ரொரண்டோவில் சிலருக்கு அதுவும் சனிக்கிழமைகளில்  இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. :lol:  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 40,000 பேர் திடீரென்று வானத்தில் இருந்து குதித்து மக்களுக்கு அழிவைத் தேடித் தந்துவிடவில்லை. ஒன்றிரண்டாய் சேர்ந்து அவர்கள் உருவானபோது அவர்களை அடைகாப்பதுபோல வளர்த்து எடுத்தவர்கள் மக்கள். பலர் சரீர உதவி, பண உதவிகள் செய்யாவிடினும் மானசீகமாக மனதுக்குள்ளாவது தமது ஆதரவை வழங்கியிருப்பார்கள்.

அப்படி மக்களால் உருவான ஒரு இயக்கம் மக்கள் அழிவுக்குக் காரணமாக இருந்தது என்பது புதுமையாக உள்ளது. :D

தமிழ் மக்கள் மடியக் காரணம் தமிழர்கள் அல்ல. சிங்களவர்கள். நின்று கொன்றது அவர்கள்தான்.

 

அண்ணே பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேணும் ....
சிங்களவர்கள் தமிழர்களை கொன்றார்களா?
 
உங்களிடம் ஏதும் ஆதாரம்  இருக்கிறதா?
 
புலிகள் அழிந்த பின்பு ஏன் தமிழர்கள் சாவதில்லை ? இதில் இருந்தே தெரிகிறது இவளவு நாளும் என்ன நடந்தது என்பது.
 
அப்பாவி சிங்கள இராணுவம் மீது இப்படி பழிபோட உங்களால் எப்படி முடிகிறது?
 
அண்ணே கன உலகில் இருந்து நிஜ உலகிற்கு போங்கோ .......
(வழிகளை ஏற்கனவே போன இரண்டு பேர் மேலே நிற்கினம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ)
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புலிகள் தற்கொலை தாக்குதல் கடைசி நேரத்தில் செய்யவில்லை எனக் கேட்டு இருந்தீர்கள்.செய்து இருக்கலாம்.செய்ய வேண்டாம் என்பது மேலிடத்து[புலித் தலைமை இல்லை] உத்தரவாக இருக்கலாம்.கப்பல் வரும் காப்பாற்றும்.எங்கட மக்கள் கொஞ்சம் அதிகமாக இறந்தால் தான் உலக நாடுகள் எங்களை திரும்பி பார்க்கும்.ஒரு தீர்வு வரும்.என்பதெல்லாம் கடைசி நேரத்தில் நடந்தது தானே!...நியாயமும்,மண்ணாங்கட்டியும் கடைசி நேரத்தில் தற்கொலை தாக்குதல் மூலம் கொஞ்சப் பேரையாவது சாகடிச்சிருந்தால் மு.வாய்க்காலில் செத்த ஆன்மாக்கள் நிம்மதியாய் சாந்தியடைந்திருக்கும்.

 

இவ்வளவு எழுதிய  நீங்கள் இதில் சறுக்குகின்றீர்கள் ரதி

காரணம் ஒன்று தான்

தமிழுருடைய  பிரச்சினைக்கான தீர்வு சார்ந்து  

பொறுப்பிலுள்ளவர்களால்  இவ்வாறு சிந்திக்கமுடியாது

எழுதமுடியாது

ஏனெனில் தீர்வு என்பது நீண்டது

அதற்கு புலிகள் இருக்கணும் என்றதுமில்லை....

 

நாமெல்லாம் ஒன்றுபட்டாலே போதும்..

ஆனால்...........??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எமது ரதியா இப்படி எழுதுவது நம்பவேமுடியவில்லை .

கடலில் நடப்பவர்களுக்கும் தரையில் நடப்பவர்களுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கு .

 

இருக்காதே பின்னே.....??? :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

1- அறிவார்ந்த அணுகுமுறை இராமநாதன் காலத்தில் பிழைத்து போய், ஆயுத அணுகுமுறை 30 ஆண்டுகள் தொடர்ந்து அதுவும் பிழைத்து போய்விட்டது. அறிவார்ந்த அணுகுமுறை காலத்தில் உண்டான உயிர் உடமை இழப்புகளிலும் பார்க்க ஆயுத அணுகுமுறையில் ஏற்பட்ட உயிர் உடமை இழப்புகள் எத்தனயோ ஆயிரம் மடங்கு அதிகம்.

 

2- இந்த இழப்புகளை கணக்கு வழக்கு பார்க்காமல் தொடரும் போராட்டத்தில், இழப்புகளும் கணக்கு வழக்கு இல்லாமல் கூடிக் கொண்டே போகும். வெற்றியின் சாத்தியத்தை கணக்கு வழக்கு பார்க்காமல் தொடரும் போராட்டம், தோற்றுப்போவது எதிர்பார்க்கப்பட வேண்டியதே.

ஆகவே, நின்று நிதானித்து, இழப்புகளையும் வெற்றியின் சாத்தியத்தையும் கணக்கு வழக்கு பார்த்து தொடரும் போராட்டமே வெற்றி பெறும் சாத்தியத்தை கொண்டிருக்கும். "எதிரி இடம் கொடுக்க" இல்லை என்று காரணம் காட்டி, அதனால் நாம் தோற்று அழிந்து போவோம் என்றும் முடிவு எடுப்பது தவறானது.

 

விசுகு,

நான் எழுதியது

"உண்மை 

நேர்மை

அறிவார்ந்த அறிவுமுறை......" பற்றி.

3- இவர்கள் தான் உண்மையும், நேர்மையும் கொண்ட, அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றும் தலைவர்கள் என்று நீங்கள் கருதினால், ஒரு திருத்தம்: நான் அவர்களை அப்படி கருதி என்றும் எழுதியதில்லை.

4- இன்று அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றுபவர்களில்:

  • முதன்மையான தலைவர் ஆனந்தி சசிதரன்.
  • அவரை அடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
  • இவரை களத்தில் இறக்கிய சம்பந்தனும்,சுமேந்திரனும் இவர்களை தொடர்ந்து வரும் அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றும் தலைவர்கள்.
  • யாழ் மற்றும் மன்னார் கத்தோலிக்க ஆயர்களும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குருபரனும் இவ்வாறாக அறிவார்ந்த அணுகுமுறையை பின்பற்றும் தலைவர்கள்.
இப்படி பலர்.

 

 

 

நன்றி  பதிலுக்கு.....

 

1- நான் சொன்னது மாறாத எதிரி. எமது கையில் என்ன  வேண்டும் என்பதை தீர்மானிப்பவனாக அவனே  என்றும்.

  நான் இது போல் நினைக்கவில்லை. 84 இல்  நான்  கிளிநொச்சியிலிருந்தபோது 

அரைவாசிப்பகுதி  சிங்களவர்  மயமாகியிருந்தது

அந்தப்போக்கில் விட்டிருந்தால்

இன்று.......?

புலிகள் அதை 30 வருடம் பின் போட்டார்கள் என்பதே நிஐம்.

அதனால்தான்

இதயபூமி  என்றே முக்கிய  இடத்துக்கு பெயர் வந்தது

முள்ளிவாய்க்காலுக்குப்பின் தான் சிங்களம் இவ்வாறு இருக்கிறது

துடிக்கிறது என்பதெல்லாம் வரலாற்றை  மறந்த எழுத்துக்கள்

 

2-   கரும் புலிகள் ஏன் உருவானார்கள் என்பதை சிந்தித்தால் விடை  கிடைக்கும். யுத்த தோல்வியை  கணக்கு வைத்துக்கொண்டு  தமிழர் விடுதலைப்போராட்டத்தை ஆராய்வதே தவறு என்றுதான் சொன்னேன்.

 

3-  நான் சொன்னது சிங்களம் விரும்புகின்றபடி செயற்பட வேண்டுமானால் இவல்கள் போலிருப்பதைத்தான் விரும்புகிறது. 

 

4- இதுபற்றி  எனக்கும் விருப்பங்களுண்டு.  ஒரு  உரிமையை சட்டப்பட  தார்மீகப்படி கேட்ட சிறுமியையே  காப்பாற்றமுடியாத  இந்த வளையம் ஏதாவது  செய்யும் என்ற  நம்பிக்கை  அடியோடு போச்சு

இப்ப தலமை செயலகம் இருக்கா இல்லையா முதல் அதை சொல்லுங்க ..,,?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு எழுதிய  நீங்கள் இதில் சறுக்குகின்றீர்கள் ரதி

காரணம் ஒன்று தான்

தமிழுருடைய  பிரச்சினைக்கான தீர்வு சார்ந்து  

பொறுப்பிலுள்ளவர்களால்  இவ்வாறு சிந்திக்கமுடியாது

எழுதமுடியாது

ஏனெனில் தீர்வு என்பது நீண்டது

அதற்கு புலிகள் இருக்கணும் என்றதுமில்லை....

 

நாமெல்லாம் ஒன்றுபட்டாலே போதும்..

ஆனால்...........??? :(  :(  :(

விசுகு அண்ணா இறுதி யுத்தம் தொடங்கைக்குள்ளேயே புலிகளுக்குத் தெரியும் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என[போதுமான போராளிகள் இல்லை,ஆயுதங்கள் இல்லை....போன்ற பல காரணங்கள் இருக்கு].அப்படி இருந்தும் வீம்புக்கு சண்டை பிடித்து அவ்வளவு சனங்களையும் தேவையில்லாமல் கொண்டார்கள் என்பது என் கருத்து[இதை நான் மு.வாய்க்காலில் கடைசி வரை நின்று சண்டை பிடிச்சிட்டு வந்த போராளிக்கு கூட‌ சொல்லி இருக்கிறேன்,இனி மேலும் சொல்லுவேன்.]மெளணிக்க நினைக்க ஆயுதங்களை கிளிநொச்சியிலே மெளணித்திருக்கலாம்.தெரிந்தோ/தெரியாமலோ புலிகள் பிழை விட்டார்கள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.புலிகள் தீர்க்கதரிசிகள் எதிர்கால அரசியலை அடிப்படையாகக் கொண்டு தான் மு.வாய்க்காலில் ஆயுதங்களை மெளணித்தார்கள் என்று நாங்கள் எங்களை ஏமாத்த சொல்லிக் கொள்ளலாம்.ஆனால் உண்மை என்று ஒன்று இருக்குதல்ல.புலிகளோடு சேர்ந்து போராடாமல் இங்கிருந்து கொண்டு அவர்களை விமர்சிக்க கூடாது தான் ஆனால் என்ட கருத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்குதல்ல.எல்லோரும் ஒன்றுபட வேண்டும் தான் அதற்கு முன் எல்லோரும் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்.நடந்து முடிந்ததை கதைத்து பிரயோசனமில்லைத் தான் ஆனால் எங்களை நாங்கள் ஏமாத்தாமல் சுய விமர்சனம் செய்வது நல்லதில்லையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவும் எல்லாரும் மற்றவங்கதான் செய்யனும்னு நினைக்கிறமே தவிர, நாம(நான்) செய்யனும்னு யாரும் இங்கு சொல்லலை.  எல்லாரும் யாரோ ஒருத்தன் செய்யணும்.  நாம பின்னால நிக்கனும்னுதான் சிந்திக்கிறாங்க.  அதனாலை தமிழினத்திற்கு விடிவு வரப்போறதேயில்ல. 

 

 

மிஸ்டர் நவம், இப்ப வளர்ற பிள்ளைங்க எல்லாருமே சுயநலவாதியா வளர்றாங்க.  அவங்க இந்தப் பிரச்னையைப் பற்றியே கவலைப்படப் போறதில்ல. சிறிலங்கா அவங்க டூர் போயிட்டு வர்ற இடம், முதலீடு பண்ற மட்டுமாவே இருக்கும்.  அவங்க, தமிழர்கள் சிங்களவங்களோடை ஏன் சேர்ந்த வாழ முடியாதுன்னுதான் கேட்கப் போறாங்க.  செய்யிறதா இருந்தா நாமதான் செய்யனும்.

 

 

ரதியக்கா,  50, 60களில பிறந்த எத்தனை பேருக்கு 80 காலப்பகுதியிலை அரசியல் தெரிஞ்சிருந்தது?  ஆனா, புலிகளோடை போராட்டத்திற்குப் பிறகு, சிறுசுங்கள பெரிசுங்க என அத்தனை பேருக்கும் அரசியல் தெரிஞ்சிருக்குது.

 

புலிகள் பிழை விட்டிருக்காங்கதான்.  அதுக்காக, அவங்களாலைதான் மக்கள் அழிஞ்சாங்கன்னு சொல்றது ரொம்ப ஓவர்.  மக்களோடை அழிவுக்குக் காரணம் சர்வதேசம்தானே தவிரப் புலிகள் இல்லை.  நாங்க மக்களைக் காப்பதறோம்.  நீங்க சண்டையை விடுங்கன்னு சொன்னதாலைதான் இவ்வளவு அழிவும் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 40,000 பேர் திடீரென்று வானத்தில் இருந்து குதித்து மக்களுக்கு அழிவைத் தேடித் தந்துவிடவில்லை. ஒன்றிரண்டாய் சேர்ந்து அவர்கள் உருவானபோது அவர்களை அடைகாப்பதுபோல வளர்த்து எடுத்தவர்கள் மக்கள். பலர் சரீர உதவி, பண உதவிகள் செய்யாவிடினும் மானசீகமாக மனதுக்குள்ளாவது தமது ஆதரவை வழங்கியிருப்பார்கள்.

அப்படி மக்களால் உருவான ஒரு இயக்கம் மக்கள் அழிவுக்குக் காரணமாக இருந்தது என்பது புதுமையாக உள்ளது. :D

தமிழ் மக்கள் மடியக் காரணம் தமிழர்கள் அல்ல. சிங்களவர்கள். நின்று கொன்றது அவர்கள்தான்.

இசை மக்களாகிய எங்களது ஆதரவு புலிகளுக்கு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா?...போராட்டத்தில் பங்கு பற்றாமல் ஓடி வந்திட்டு மக்கள் தான் புலிகள்,புலிகள் தான் மக்கள் எங்கள ஏமாத்த நாங்களே சொல்லிக் கொள்ளலாம்.அதைத் இங்கே யாழில கண பேர் செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கெரில்லா போராட்ட முறை தெரிந்தவர்களுக்கு அதாவது நடைமுறையில்  பாவித்தவர்களுக்கு பங்கரின் அருமை தெரியும். மக்கள் தமது உயிரை பாதுகாக்க பங்கர் பயன்படுத்தப்பட்டது. சில தலைவர்களும் எதிரி, முக்கியமாக துரோகிகளினால் காட்டிக்கொடுத்து வீணாக உயிரை மாய்க்காமல் இருக்கவும் பங்கர் பாவிக்கப்பட்டது. இது லெபனானில் பயிற்சி எடுத்தாலும் இந்தியாவில் பயிற்சி எடுத்தாலும் இந்தியாவில் தாடியை வளர்த்துக்கொண்டு (மாக்சிசவாதிகளாம்) தண்ணியும் சில பெக்குகளை விட்டுக்கொண்டு சிகரெட்டில் சுருள் சுருளாக புகை விட்டு "தோழர் என்று கூறுக்கொண்டு கொள்கை விளக்கம் அளி(ழி)ப்பவர்களுக்கு ஒரு போதும் விளங்காது. இப்பொழுதும் இங்கு வந்து அதே சுருள் சுருள் புகைகளை இங்கு விடுபவர்கள் தொடர்கிறார்கள். ஹி ஹி.

  • கருத்துக்கள உறவுகள்

இசை மக்களாகிய எங்களது ஆதரவு புலிகளுக்கு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா?...போராட்டத்தில் பங்கு பற்றாமல் ஓடி வந்திட்டு மக்கள் தான் புலிகள்,புலிகள் தான் மக்கள் எங்கள ஏமாத்த நாங்களே சொல்லிக் கொள்ளலாம்.அதைத் இங்கே யாழில கண பேர் செய்கிறார்கள்

 

20 லட்சம் பேர் ஆயுதம் ஏந்திப் போராடி இருந்தாலும், அதன் மூலம் நாடு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.. முதலில் ஆயுதத்தை யார் கொடுப்பார்கள்; மக்களுக்கு போராட்ட உணர்வு எப்படி வரும் என்கிற பல கேள்விகள் உள்ளன.

 

மேலும், ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு எல்லோரும் தயாராக இல்லை. சிங்களவர்கூட ஒரு கோடிப் பேர் இராணுவத்தில் இணைந்துவிடவில்லை. புலிகள் அவ்வளவு மோசம் என்றால் சிங்களவர்கள் அத்தனைபேரும் களத்தில் இறங்கியிருக்க வேணும். :D சிங்கள ஆயுதப்படை 3 லட்சம் பேர்தான் ஆயுதப் போரை முன்னெடுத்தது.

 

ஆக, இயக்கம் அடைந்தது ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு உரம் மாவீரர்கள். எல்லோரும் மாவீரர்கள் ஆகிவிட முடியாது என்பது திண்ணம்.

 

ஆகவே, எல்லோரும் போராடியிருந்தால் நாடு கிடைத்திருக்கும் என்றால் பாலஸ்தீனம் இவ்வளவுக்கும் ஒரு தனி நாடாக இருக்கும். ஆனால் கொசொவோ போன்ற நாடுகள் குறுகிய காலப் போராட்டத்துடனேயே சுதந்திரம் அடைந்துவிட்டன.

 

80/20 தத்துவத்தின்படி, 20% போராடும்போது, 80% வேடிக்கை பார்ப்பார்கள். 80% ஆதரிக்கும்போது, 20% பேர் எதிர்ப்பார்கள். எதிலும் 100% ஆதரவு என்று கிடையாது.

 

ஆக, நாங்கள் இருப்பதை வைத்துக்கொண்டுதான் அடுத்த கட்டத்திற்குள் நகர முனைய வேண்டும். 2009 இல் போர் முடிந்த கட்டம் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. சிங்களவன் சாட்சியமே இல்லாத போரை நடத்தி முடித்துவிட்டான். இனிமேல் ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறியவர்கள் 80% பேர். :D ஆனால் இன்று ஏற்பட்டிருப்பது அதைத் தாண்டிய முன்னேற்றம். இவ்வாறாக இன்னும் கொஞ்சத் தூரம் பயணிக்க வேண்டியது இருக்கும்.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

20 லட்சம் பேர் ஆயுதம் ஏந்திப் போராடி இருந்தாலும், அதன் மூலம் நாடு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.. முதலில் ஆயுதத்தை யார் கொடுப்பார்கள்; மக்களுக்கு போராட்ட உணர்வு எப்படி வரும் என்கிற பல கேள்விகள் உள்ளன.

 

மேலும், ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு எல்லோரும் தயாராக இல்லை. சிங்களவர்கூட ஒரு கோடிப் பேர் இராணுவத்தில் இணைந்துவிடவில்லை. புலிகள் அவ்வளவு மோசம் என்றால் சிங்களவர்கள் அத்தனைபேரும் களத்தில் இறங்கியிருக்க வேணும். :D சிங்கள ஆயுதப்படை 3 லட்சம் பேர்தான் ஆயுதப் போரை முன்னெடுத்தது.

 

ஆக, இயக்கம் அடைந்தது ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு உரம் மாவீரர்கள். எல்லோரும் மாவீரர்கள் ஆகிவிட முடியாது என்பது திண்ணம்.

 

ஆகவே, எல்லோரும் போராடியிருந்தால் நாடு கிடைத்திருக்கும் என்றால் பாலஸ்தீனம் இவ்வளவுக்கும் ஒரு தனி நாடாக இருக்கும். ஆனால் கொசொவோ போன்ற நாடுகள் குறுகிய காலப் போராட்டத்துடனேயே சுதந்திரம் அடைந்துவிட்டன.

 

80/20 தத்துவத்தின்படி, 20% போராடும்போது, 80% வேடிக்கை பார்ப்பார்கள். 80% ஆதரிக்கும்போது, 20% பேர் எதிர்ப்பார்கள். எதிலும் 100% ஆதரவு என்று கிடையாது.

 

ஆக, நாங்கள் இருப்பதை வைத்துக்கொண்டுதான் அடுத்த கட்டத்திற்குள் நகர முனைய வேண்டும். 2009 இல் போர் முடிந்த கட்டம் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. சிங்களவன் சாட்சியமே இல்லாத போரை நடத்தி முடித்துவிட்டான். இனிமேல் ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறியவர்கள் 80% பேர். :D ஆனால் இன்று ஏற்பட்டிருப்பது அதைத் தாண்டிய முன்னேற்றம். இவ்வாறாக இன்னும் கொஞ்சத் தூரம் பயணிக்க வேண்டியது இருக்கும்.. :D 

கடைசி காலப்பகுதியில் புலிகள் போராடுவதற்கான ஆயுதத்தை புலத்தில் இருந்து எம்மால் கொடுக்க முடிந்ததா? பணம் இருந்தால்,ஆயுதம் இருந்தால் மட்டும் போதுமா?...போராட ஆட்கள் தேவையில்லையா?...நீங்கள் எழுதியது எல்லாம் புலத்தில் இருந்து கொண்டு எல்லோரும் எழுதும் நொண்டிச் சாட்டுக்கள் :(:(

..எல்லோரும் ஆயுதம் ஏந்திப் போராட தயாராக இல்லை உண்மை தான்.ஏன் தயராக இல்லை? ஏன் எல்லோரும் எங்களுக்கு ஒரு நாடு வேண்டுமானால் சேர்ந்து போராட வேண்டும் என்று நினைக்கவில்லை? ஏன் அந்த உணர்வு மக்களுக்கு வரவில்லை? ஏன் புலிகளால் கடைசி வரைக்கும் மக்களை ஒன்றிணைக்க முடியவில்லை?...கடைசி யுத்தத்தின் போதும் கூட போராடுறவன்,போராடட்டும் தாங்கள் தப்பினால் காணும் என்று வெளிக்கிட்ட ஆட்கள் தானே அதிகம்[அவர்களை பிழை சொல்லவில்லை.சொல்லும் அதிகாரம் எனக்கில்லை].உணர்வுக்காக,உரிமைக்காக போராடுகின்ற நாங்களே 100% சேர்ந்து போராடவில்லை.காசுக்காகத் தான் சிங்களவர்கள் ஆமியில் செர்ந்தார்களே தவிர உணர்வுக்காகவோ,உரிமைக்காகவோ இல்லை.எல்லோரும் சேர்ந்து போராடினால் நாடு கிடைச்சிருக்குமோ,இல்லையோ தெரியாது.ஆனால் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம்.கொஞ்சப் பேர் மட்டும் போராடின படியால் தானே அவர்களை புலி என்று ஒதுக்கி வைக்க முடிந்தது.எல்லோரும் சேர்ந்து போராடி இருந்தால் புலி வேறு,மக்கள் வேறு என சிங்களவனால் பிரிக்க முடிந்திருக்குமா?....

நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.அது,இது என்று நீங்கள் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் ஒன்றும் நடந்த மாதிரி தெரியவில்லை.கேவலம் தமிழ்நாட்டில் ஜெயிலில் இருக்கும் 7 கைதிகளைக் கூட உங்களால் விடுவிக்க முடியவில்லை...எழுதப் போனால் கணக்க எழுதலாம்.கை தான் நோகுது.

ரெண்டில நடக்கிறத்துக்கும் கால் வேணும் தானே அண்ணே..... ஆனா நீங்க ரெண்டு பெரும் வெறும் வாயாலையே நடப்பீங்க விட்டா பறப்பீங்க

ஏதோ  எல்லாரும் போராட போய் விழுப்புண் அடைந்தவர்கள் மாதிரி இருக்கு உங்கள் கருத்து  :icon_mrgreen: .

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து குடும்பம் குட்டி வேலை வீடு என்று இருந்து கொண்டு வெறும் வாயால் வாய்ப்பான் சுடுபவர்கள் தானே தொண்ணுறு வீதம் .

போராடத்தான் போகவில்லை புலம் பெயர்ந்தாவது எதுவும் செய்தார்களோ என்றால் அதுவும் ஒரே அவியல் தான் .

நாங்கள் அதுவும் செய்து இதுவும் செய்யும் ஆட்கள் .சும்மா வாயை விட கூடாது அவல் மன்னிக்கவும் சுண்டல் .

  • கருத்துக்கள உறவுகள்

20 லட்சம் பேர் ஆயுதம் ஏந்திப் போராடி இருந்தாலும், அதன் மூலம் நாடு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.. முதலில் ஆயுதத்தை யார் கொடுப்பார்கள்; மக்களுக்கு போராட்ட உணர்வு எப்படி வரும் என்கிற பல கேள்விகள் உள்ளன.

மேலும், ஆயுதம் ஏந்திப் போராடுவதற்கு எல்லோரும் தயாராக இல்லை. சிங்களவர்கூட ஒரு கோடிப் பேர் இராணுவத்தில் இணைந்துவிடவில்லை. புலிகள் அவ்வளவு மோசம் என்றால் சிங்களவர்கள் அத்தனைபேரும் களத்தில் இறங்கியிருக்க வேணும். :D சிங்கள ஆயுதப்படை 3 லட்சம் பேர்தான் ஆயுதப் போரை முன்னெடுத்தது.

ஆக, இயக்கம் அடைந்தது ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சிக்கு உரம் மாவீரர்கள். எல்லோரும் மாவீரர்கள் ஆகிவிட முடியாது என்பது திண்ணம்.

ஆகவே, எல்லோரும் போராடியிருந்தால் நாடு கிடைத்திருக்கும் என்றால் பாலஸ்தீனம் இவ்வளவுக்கும் ஒரு தனி நாடாக இருக்கும். ஆனால் கொசொவோ போன்ற நாடுகள் குறுகிய காலப் போராட்டத்துடனேயே சுதந்திரம் அடைந்துவிட்டன.

80/20 தத்துவத்தின்படி, 20% போராடும்போது, 80% வேடிக்கை பார்ப்பார்கள். 80% ஆதரிக்கும்போது, 20% பேர் எதிர்ப்பார்கள். எதிலும் 100% ஆதரவு என்று கிடையாது.

ஆக, நாங்கள் இருப்பதை வைத்துக்கொண்டுதான் அடுத்த கட்டத்திற்குள் நகர முனைய வேண்டும். 2009 இல் போர் முடிந்த கட்டம் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. சிங்களவன் சாட்சியமே இல்லாத போரை நடத்தி முடித்துவிட்டான். இனிமேல் ஒன்றுமே செய்ய இயலாது என்று கூறியவர்கள் 80% பேர். :D ஆனால் இன்று ஏற்பட்டிருப்பது அதைத் தாண்டிய முன்னேற்றம். இவ்வாறாக இன்னும் கொஞ்சத் தூரம் பயணிக்க வேண்டியது இருக்கும்.. :D

சலாப்பல்... :D

  • கருத்துக்கள உறவுகள்

சலாப்பல்... :D

 

சலாப்பலா :D 

அவர் சொல்லவருவது

இதைத்தானே  நாம் எல்லோரும் செய்கின்றோம் என்பதை இசை.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

சலாப்பல்... :D

 

 

சலாப்பலா :D

அவர் சொல்லவருவது

இதைத்தானே  நாம் எல்லோரும் செய்கின்றோம் என்பதை இசை.. :D

 

இனிமேல் நானே அடிக்குறிப்பில் சலாப்பல் என்று எழுதிவிடுறன்..  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தமா ஈழத்திலை இருக்கிற தமிழரெல்லாம் ஆயுதம் எடுத்தால்
தமிழீழம் கிடைச்சிருக்கும் எண்டு சொல்றவையை நினைச்சாச் சிரிப்புத்தான் வருகுது.

கனபேர்வழிகள்  காலம் பாத்துக் கேள்வியளைக் கேக்கினம்
என்ன செய்ய காலம் மாறும்வரை நாமளும் காத்திருக்க வேண்டியிருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் நானே அடிக்குறிப்பில் சலாப்பல் என்று எழுதிவிடுறன்.. :lol:

சரண்டர்... :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா செய்த ஒரே சாதனை போராட்டத்திற்கு நளினியை வைத்து கலைநிகழ்ச்சி நடாத்தியது.........பாவம் அதோட பிரிஞ்சு போன குடும்பம் தான்.......ஹா ஹா ஹா

நளினியை "வைத்திருந்து" கலை நிகழ்ச்சி நடத்தினாரா?  அப்போ Telo விடம் போனது எப்போது?

 

 மேலே உள்ளது நான் எழுதியது.

 

இது நான் எழுதியதாக உங்கள் புரட்டு. நான் இதை எழுதவில்லை. இதை நான் எங்காவது எழுதியிருந்தால், அதாவது, இது உங்கள் புரட்டு இல்லையென்றால், நான் எழுதியதை காட்டுங்கள் பார்க்கலாம்?

 

நான் எங்கே எழுதினேன் பிலிப்பைன்ஸ் நாட்டில் இரத்தம் ஓடவில்லை என்று? நான் காட்டியதெல்லாம் இரத்தம் சிந்தாத புரட்சிக்கு உதாரணம் மட்டுமே. அந்த உதாரணம் மார்க்கொசை பதவியில் இருந்து அகற்றி அகிநோவை பதவியில் அமர்த்திய புரட்சி பற்றியது மட்டுமே. அதை நீங்கள் புரட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏனைய பிரச்சினைகள் பற்றி நான் எழுதியதாக புனைகதை செய்து அதற்கு எதிராக வாதாடுகிறீர்கள். எவ்வளவு நேர்மையீனமான செயல் இது?

 

சும்மா சடையாதீர்... !! 

 

ஆக நீங்கள் சொல்ல வாறது  மருத்துவம் வெற்றி நோயாளி காலி... !!!  அப்படியா...?? 

 

புரட்சி எண்றால்  அதற்கு ஒரு வரைவிலக்கணம் இருக்கு...   புரட்சி முடிவை எட்டுவது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் இல்லை குறிக்கோள்  ...  அதன் தொடர்சியின் முடிவையும் கணக்கிலை எடுக்க முடியாது எண்றா வாதிட போகிறீர்கள்....  முடிவில்லாத தொடர்ச்சியாக போய் கொண்டு இருக்கும் பிலிப்பீனை ஒரு உதாரணமாக எடுத்ததே தவறு...!!   

 

மேலோட்டமான வரலாறுகளை படித்து கொண்டு  புரட்டுகளை அதன் ஆதாரமாக தர முயற்சிக்காதீர்கள்...    

 

மார்க்கோசை பதவியில் இருந்து  அகற்றி அந்த பதவிக்கு வந்தவர் அகிநோ கிடையாது... !!   அகிவோவ்வின் மனைவி   "கொறசோன்" ...    அகினோவ்   1983 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்... 

 

மூண்று வருடம் கடந்தபின் 1986 ல் நடந்த தேர்தலில் எதிர்த்து நிண்ற கொறசோனை  மார்க்கொஸ் வெண்றார் எண்று அறிவிக்க பட்டதால்  கிளர்ந்த மக்களால் நடத்தப்பட்ட  ஆர்ப்பாட்டங்களின் காரணமாக ( அதற்கு பிலிப்பீன் இராணுவமும் துணை போனமையால் )  மார்க்கோஸ்  ஹவாய் தீவுகளுக்கு தப்பித்து செண்றார்... 

 

விசயம் அவ்வளவுதான்...  

 

புரட்சி ஈழத்தில் கூட வட்டுக்கோட்டை தீர்மானமாக  ஆரம்பிக்க பட்ட ஆயுதம் இல்லாத புரச்சி தான் சுயநல அரசியல் தமிழ்  தலைவர்களால்  ஆயுத போராட்டமாக மாற்றப்பட்டது...  

Edited by தயா

நொறுக்கும் செய்தி (Breaking News )

கனடிய அரசாங்கம் புலிகளை பாவித்து சிறி லங்காவை பிடிக்க திட்டம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=139440#entry1004928

இனி ஒட்டாவா தான் தலைமை செயலகம்.:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா நீங்கள் எங்கே இருந்து இந்த தகவல்களை எடுத்தீர்கல்லலல் தெரியாது;

நான் ஒரு பிலிபீன் காரார் உடன் 2 வருடம் வேலை செய்தேன்..அவர் சொல்லவில்லை தங்கள் போராட்டம், அமெரிக்காவின் பின்னணியில் நடந்ததாக...அவர் எனக்கு சொன்னது தங்களுக்கு அது வெற்றி தந்தாகவும், எங்களுக்கும் அது பொருத்தும் என்றுதான் சொன்னார்

எங்களால் முடியாவிடால் அதை குறை சொல்லுவதை விட, அதில் ஏதாவது இருந்தால் அதை நாங்கள் பாவிப்பதில் என்ன தவறு...

இலங்கையில் தமிழர்கள் சாத்திவீக போராட்டம் என்று நடத்தியது எதுவும் இல்லை...56 இல் காலிமுத்திடலில் அடித்தவர்கள், 10 வது தமிழ் ஆராச்சி மகாநாட்டை குழப்பியவர்கள் ...அதைவிட ஒரு உருப்படியான போராட்டம் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்...200,000 மேற்பட்டவர்கள் செத்தும், பல்லாயிரம் கோடி சொத்துக்கள் இழந்ததும் தவிர , இதுவைர அடைந்தது என்ன என்பதை உங்கள் மனம் தொட்டு சொல்ளுங்கள்

சண்டையில் இருந்து தப்பி ஓடி doctor ஆக வந்தவர், நாடு பிடிச்சு தருவார் என்று கனவு காண வேண்டாம்...இவர்கள் இப்படி பெரிய பட்டங்கள் எடுப்பதற்கு முன்பே சார் பட்டம் எடுத்த தமிழர்கள் பலர் இருந்தார்கள், அவர்கள்எங்களுக்கு எதுவும் செய்யாத்தால்தான் நாங்கள், வழி தெரியாது எடுப்பார் கைப்பிள்ளையாக ஆயுதம் தூக்கி அதனாலேயே அழிந்தோம் ...அதற்குள் சின்ன சின்ன சந்தோசம் ..telo 86/புளொட் 86/EPRLF 89, 89 LTTE 2009.......எல்லோரும் அழிவும் போது தமிழராய்தான் அழிந்தோம் ...அது உறுத்தினால், மீண்டும் தமிழராய் எழுவோம், எம்மிடம் இருக்கும் ஆயுதத்தை நம்பி ...எதிரி எந்த ஆயுதத்தை எடுத்தாலும், எம்மிடம் உள்ளதையே , பலமாக உள்ளதையே பாவிப்போம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.