Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுவதியை ஏமாற்றிய கனடா இளைஞன் கண்ணீரில் குடும்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது.

கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மாத காலம் குறித்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். இறுதியில் தான் கனடா செல்ல வேண்டும் என்று அந்த இளைஞன் புறப்பட்டுள்ளான்.

அதேவேளை குறித்த யுவதியை வெள்ளவத்தையிலுள்ள தனது பெற்றோருடன் விட்டுச் காசு இல்லை என்றதும் காணியை விற்றாவது கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு குறித்த யுவதி மேலும் கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறியதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டனர். அதேவேளை குறித்த இளைஞனும் சகல தொடர்புகளையும் நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி தனது சொந்த ஊரான மல்லாகத்துக்குச் சென்று தனது பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். இதேவேளை தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தாம் வழங்கிய சீதனத் தொகையான 15 லட்சம் ரூபாவையேனும் உடன் திருப்பித் தருமாறும் கோரி வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த இளைஞனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வந்து விவாகரத்தைப் பெற்றால் தாங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக தம்மிடம் தெரிவித்ததாக அந்தயுவதி தெரிவித்துள்ளார்.

பணம் பெறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டே குறித்த இளைஞனும் அவரது பெற்றோரும் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர் என்று கூறும் அவர் இதனால் தனது வாழ்க்கையே சீரழிக்கப்பட்டு விட்டதாகவும் மிகுந்த கவலையுடன் தெரிவித்தார். சென்றுள்ளான். இந்நிலையில் இளைஞனின் பெற்றோர் மேலும் 25 லட்சம் ரூபா உடனடியாக வைக்க வேண்டும். இல்லையேல் மகன் தொடர்பு கொள்ள மாட்டார் என மிரட்டியுள்ளனர்.

www.canadamirror.com

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கனடா இளைஞன் என்று போட்டுக் கடுப்பேத்துவது??? செய்திகள் இப்படித் தான் எழுதப்படுகின்றன. காலை விகடன் படித்தபோது, திருப்பதியில் செம்மரக்கட்டை கடத்திய தமிழர்கள் என்று ஒரு செய்தி... மற்றய செய்தி தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை கைது செய்தது என்று மற்றொரு செய்தி... ஏன் இதில் இப்படி முரண்பாடு... குற்றவாளிகளாக காட்டப்படுவர்கள் தமிழர்கள் எனவும், சிங்களக் கடற்டையால் கைது செய்யப்படும்போது அங்கே தமிழகம் என்பதை முன்நிறுத்தவும் படுகின்றது.. சிங்களக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் என்று சொல்லப்படும்போது வருகின்ற விளக்கமோ, தமிழக மீனவர்கள் என்று சொல்லப்படும்போது வருகின்ற விளக்கமோ அதிகமாக உள்ளது???? அது போல கனடா இளைஞன் என்பதற்கும் கனடாவில் வசிக்கும் இளைஞன் என்பதற்கும் வேறுபாடு உண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது.

 

தந்தையின் தொழிலுக்கும், மகனின் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படியெல்லாம் கோக்குமாக்குத்தனமாக கணக்குப் போடுவதால்தான் நடுத்தெருவில் நிற்கவேண்டி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் தொழிலுக்கும், மகனின் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படியெல்லாம் கோக்குமாக்குத்தனமாக கணக்குப் போடுவதால்தான் நடுத்தெருவில் நிற்கவேண்டி வருகிறது.

விளக்கம் தரமுடியுமா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் தரமுடியுமா?? :D

 

அது ஒரு flow இல் வந்திட்டுது.. ஆராய்ச்சி பண்ணக்கூடாது..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு flow இல் வந்திட்டுது.. ஆராய்ச்சி பண்ணக்கூடாது..  :lol:

 

Pure ஆக இருக்கவிடமாட்டமே... :D

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கனடா இளைஞன் என்று போட்டுக் கடுப்பேத்துவது??? செய்திகள் இப்படித் தான் எழுதப்படுகின்றன. காலை விகடன் படித்தபோது, திருப்பதியில் செம்மரக்கட்டை கடத்திய தமிழர்கள் என்று ஒரு செய்தி... மற்றய செய்தி தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை கைது செய்தது என்று மற்றொரு செய்தி... ஏன் இதில் இப்படி முரண்பாடு... குற்றவாளிகளாக காட்டப்படுவர்கள் தமிழர்கள் எனவும், சிங்களக் கடற்டையால் கைது செய்யப்படும்போது அங்கே தமிழகம் என்பதை முன்நிறுத்தவும் படுகின்றது.. சிங்களக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் என்று சொல்லப்படும்போது வருகின்ற விளக்கமோ, தமிழக மீனவர்கள் என்று சொல்லப்படும்போது வருகின்ற விளக்கமோ அதிகமாக உள்ளது???? அது போல கனடா இளைஞன் என்பதற்கும் கனடாவில் வசிக்கும் இளைஞன் என்பதற்கும் வேறுபாடு உண்டு....

 

இடங்கள் சூழ்நிலைகள் ஒரு மனிதனை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஏன் என்று தெரியவில்லை ............... கனடாவில் இருந்து போகிறவர்கள் இப்படியான மோசடிகளை செய்து வருகிறார்கள்.
"வெளி நாட்டு மாப்பிளை மணப்பெண்ணை ஏமாற்றி ஓட்டம்"
இப்படி செய்தி போட்டாலே உடனேயே .... எல்லோருக்கும் இவர் கனடா என்றுதான் எண்ணுவார்கள்.
அதுபோல் 
 
"கிரெடிட்கார்ட் மோசடி இரு தமிழர் கைது" அப்படி போட்டால் உடனேயே லண்டன் என்று எண்ண தோன்றுகிறது.
 
அதேபோல்." விஞ்ஞான துறையில் தமிழர் சாதனை " என்று போட்டாலே தெரிந்துவிடும் இது கல்வி சம்மந்தபட்டது .... இது அமெரிக்கா என்று.
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து போறவை தான் அதிகமாக உந்தக் குளறுபடியில் ஈடுபடுகினம். இது இப்ப நேற்றல்ல.. எப்ப எம்மவர்கள்.. புலம்பெயர் மாப்பிள்ளைகளை கட்டினால் வெளிநாட்டுக்குப் போய் வசதியா வாழலாம் என்று கண்டுபிடிச்சினமோ.. அப்ப இருந்து நடக்குது.

 

இதற்கு வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம் தாயகத்தில் தலைவிரித்தாடுவதும் ஒரு காரணம். இதில் இரு தரப்பும்.. குற்றவாளிகள் ஆவர். :)

இடங்கள் சூழ்நிலைகள் ஒரு மனிதனை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஏன் என்று தெரியவில்லை ............... கனடாவில் இருந்து போகிறவர்கள் இப்படியான மோசடிகளை செய்து வருகிறார்கள்.

"வெளி நாட்டு மாப்பிளை மணப்பெண்ணை ஏமாற்றி ஓட்டம்"

இப்படி செய்தி போட்டாலே உடனேயே .... எல்லோருக்கும் இவர் கனடா என்றுதான் எண்ணுவார்கள்.

அதுபோல்

"கிரெடிட்கார்ட் மோசடி இரு தமிழர் கைது" அப்படி போட்டால் உடனேயே லண்டன் என்று எண்ண தோன்றுகிறது.

அதேபோல்." விஞ்ஞான துறையில் தமிழர் சாதனை " என்று போட்டாலே தெரிந்துவிடும் இது கல்வி சம்மந்தபட்டது .... இது அமெரிக்கா என்று.

ஆ ஆ !! லண்டன் வாழ தமில்ழ் 'குடி' மக்களை மட்டை கள்ளன் என்று கூரிய உங்களுக்கு எதிராக தோழர் விமல் வீரவன்ச பாணியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் திட்டம் போட்டுளேன், உங்களது கொடும்பாவியும் எரிக்கப் படும், எமது பிரான்ஸ்,ஜெர்மன்,சுவிஸ் நபர்களும் ஆதரவு தந்து உதவுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல்." விஞ்ஞான துறையில் தமிழர் சாதனை " என்று போட்டாலே தெரிந்துவிடும் இது கல்வி சம்மந்தபட்டது .... இது அமெரிக்கா என்று.

 

 

அமெரிக்காவில்.. பவ்லோ பிராந்தியத்தில் கேட்டால் தெரியும்.. தமிழர்களின் வண்டவாளம். அங்கு வைச்சுத்தான் கனடாவுக்குள் அகதிகளாக ஊடுருவும் தமிழர்கள்..அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணியின் கதையைப் பார்த்தால் லண்டனில் மட்டுமே மட்டை போடுகிறார்கள் என்கிற தவறான ஒரு பொருள் வருகிறது. இங்கு கனடாவிலும்தான் போடுகிறோம்..  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சீதனம்,அழகு,வசதி,சாதி பார்த்து திருமணம் செய்ய்யாமல் ஒரு பெண்ணோட பழகிப் பார்த்து அவ உங்கள் குணத்திற்கு ஒத்து வருவா,அனுசரித்து நடப்பாவா,இருவருக்கும் மனப் பொருத்தம் இருக்கா எனப் பார்த்து திருமணம் செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய நியூஸ் பா ஏற்கனவே யாழிலும் வந்தது மறுபடியுமா....

தூயவன் சீதனம்,அழகு,வசதி,சாதி பார்த்து திருமணம் செய்ய்யாமல் ஒரு பெண்ணோட பழகிப் பார்த்து அவ உங்கள் குணத்திற்கு ஒத்து வருவா,அனுசரித்து நடப்பாவா,இருவருக்கும் மனப் பொருத்தம் இருக்கா எனப் பார்த்து திருமணம் செய்யுங்கள்

 

 

 

அப்படி என்றால் ஒரு நூறோடு "பழகிப்" பார்த்து.....
 
"அட ஒரு சனியனும் சரிவரேல்ல"  எண்டு சொல்ல வேண்டி வரும்.
 
 
(சும்மா கிடந்த சங்க‌ ஊதிக்கெடுத்தானாம் உடையாற்ற சங்கரி..)   :D
  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஆ !! லண்டன் வாழ தமில்ழ் 'குடி' மக்களை மட்டை கள்ளன் என்று கூரிய உங்களுக்கு எதிராக தோழர் விமல் வீரவன்ச பாணியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் திட்டம் போட்டுளேன், உங்களது கொடும்பாவியும் எரிக்கப் படும், எமது பிரான்ஸ்,ஜெர்மன்,சுவிஸ் நபர்களும் ஆதரவு தந்து உதவுவார்கள்.

கண்டிப்பாக எங்கள் ஆதரவும் உங்களுக்கு உண்டு...

இப்படிக்கு

பிரெஞ்சு தமிழ் சமூகம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிப்பாக எங்கள் ஆதரவும் உங்களுக்கு உண்டு...

இப்படிக்கு

பிரெஞ்சு தமிழ் சமூகம்

:D

பிரஞ்சு தமிழ்சமூகம் ஏன் தானா வந்து என்ரி குடுக்குது.
  • கருத்துக்கள உறவுகள்

பிரஞ்சு தமிழ்சமூகம் ஏன் தானா வந்து என்ரி குடுக்குது.

எல்லாம் ஒரு அண்ணன் தம்பி பாசம் தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு அண்ணன் தம்பி பாசம் தான்.. :D

 

 

பிரெஞ்சில்

நானறிந்தவரையில் எதுவும் உற்பத்தியாகுவதில்லை

பக்கத்துவீட்டு

அண்ணன் தம்பிகளுக்கு எப்பொழுதும் உடந்தையாக இருந்து வருகிறது பிரெஞ்சு தேசம்

அவ்வளவு தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சீதனம்,அழகு,வசதி,சாதி பார்த்து திருமணம் செய்ய்யாமல் ஒரு பெண்ணோட பழகிப் பார்த்து அவ உங்கள் குணத்திற்கு ஒத்து வருவா,அனுசரித்து நடப்பாவா,இருவருக்கும் மனப் பொருத்தம் இருக்கா எனப் பார்த்து திருமணம் செய்யுங்கள்

 

வருடமாகப் படுகின்ற அவஸ்தை தெரியாமல் கடுப்பேத்துகின்றீர்கள்... பார்க்கலாம்...மற்றும்படி அழகு இல்லாமல் எல்லாம் கட்டுகின்ற அளவுக்குத் தியாகி எல்லாம் கிடையாது. படிப்போ, அல்லது பொருளோ குழந்தைக்கு எதிர்காலத்தில் எம் செயலில் தங்கியுள்ளது. ஆனால் குழந்தையின் அழகு துணையாக வருபவளிலும் தான் உள்ளது. இது கொஞ்சம் அபத்தமாக இருக்கலாம். ஆனால் எல்லோர் அடிமனதிலும் இருக்கும். ஆனால் வெளிக்காட்டாமல் நடிப்பார்கள்....(குறிப்பு: அழகு என்பது வெள்ளை என்ற அர்த்தம் கொண்டதல்ல. )

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில்.. பவ்லோ பிராந்தியத்தில் கேட்டால் தெரியும்.. தமிழர்களின் வண்டவாளம். அங்கு வைச்சுத்தான் கனடாவுக்குள் அகதிகளாக ஊடுருவும் தமிழர்கள்..அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர். :lol::icon_idea:

 
 
அதுதான் நீங்களே எழுதிவிட்டீர்களே ...........
அவர்கள் இங்கு வசிக்க தகமை இல்லாதவர்கள் .......... கனடாவிற்கே உரியவர்கள்.
அவர்களுடைய விடயங்களை எம்நாட்டு உள்விவகாரம் ஆக்குவது பொருத்தம் அற்றது. 

மருதங்கேணியின் கதையைப் பார்த்தால் லண்டனில் மட்டுமே மட்டை போடுகிறார்கள் என்கிற தவறான ஒரு பொருள் வருகிறது. இங்கு கனடாவிலும்தான் போடுகிறோம்..  :lol:

 
கனடாவிலும் போடலாம் எங்கும் போடலாம் ..........
ஆனால்  கடின உழைப்பால் லண்டன் தோழர்கள் அந்த சிறப்பு பெயரை தமதாக்கி கொண்டு விட்டார்கள்.
 
நீங்கள் .......
எல்லோரும் கைவிட்ட நடிகைகளுக்கு வாழ்வு கொடுப்பதுபோல்.
  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 06:38 PM

வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் க்ளோஸ்டஷெயார் பிரதேசத்தின் வங்கி தான்னியக்க நிலையங்களில் மோசடிகளில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

13 ஏ.ரீ.எம். நிலையங்களின் வாடிக்கையாளர் தகவல்களை திரட்டி அவற்றின் ஊடாக மோசடியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பசீர் எப்ராஹிம், அசோக் பாலசுப்பரமணியம் மற்றும் தங்கவேல் வில்வானந்தம் ஆகியோர் இவ்வாறு குற்றச் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

2013ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

எப்ராஹிம் என்பவருக்கு 16 மாத கால சிறைத்தண்டனையும், ஏனைய இருவருக்கும் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டயையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

 

http://globaltamilne...IN/article.aspx

 

சுட சுட செய்தி வந்திருக்கு.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன ஒற்றுமை ஊரில இருக்கோ இல்லியோ,இங்க இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருப்பவரைப் பிடித்துப் போலீசில் ஒப்படைக்காமல்
கள்ள மட்டையில் யார் பெரியவர் என்று சும்மா அடிபாடு நடக்குது. :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதை நினைவு கூர என்று வந்துவிட்டு கொடி பிடிப்பதுதான் முக்கியம் என்று அடிபட்டவர்கள்தானே. வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் ஒரு நூறோடு "பழகிப்" பார்த்து.....

 

"அட ஒரு சனியனும் சரிவரேல்ல"  எண்டு சொல்ல வேண்டி வரும்.

 

 

(சும்மா கிடந்த சங்க‌ ஊதிக்கெடுத்தானாம் உடையாற்ற சங்கரி..)   :D

ஏன் ஈசன் பெண்கள் அவ்வளவு கேவலமா .:icon_mrgreen: பெண்களை ஆண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை :)ஆகவே தப்பு ஆண்களில் தான் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.