Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு - உள்ளக சீர்திருத்த வேண்டுகோள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

 

என்னை  அறிய

என்னை புடம்போட

அதை  எதிர் கொள்ள

என்றுமே பின்னிற்பதில்லை..

 

அந்தவகையில் எனது சில  எழுத்துக்கள்

அல்லது கலந்துரையாடல்கள்

என்னைப்பற்றியோ

அல்லது எனது வயது சார்ந்தோ வெளியில் விமர்சிக்கப்படுவதாக அறிந்தேன்....

 

என்றுமே பின் முதுகில் குத்துபவர்கள் பற்றி  நான் கவலைப்பட்டதில்லை

அத்துடன் அது தெரியவரும் போது

அதற்காக நேரடி விவாதங்களை  எதிர்கொள்ள  தயங்குவதில்லை............

 

இங்கு

திறக்கப்படும் அனைத்து திரிகளிலும்

அனைத்து கருத்தாளர்களுடனும் விவாதிப்பவன்  அல்லது  கலந்து கொள்பவன் யான்.

நான் ஒரு எழுத்தாளனோ

அல்லது படைப்பாளியோ  அல்ல

ஆனால் படைப்புக்கள்

கருத்துக்கள்  மற்றும் தாயகம் சார்ந்து  விவாதிக்க  என்னால் முடியும்.

அநேகமாக சீரியசான  விடயங்களைப்பேசுவதால்

ஒரு மாற்றீடாக சில திரிகளில் சிரிக்க  

அல்லது  பொழுது போக்கிற்காக வர்ணம் தீட்டிஎழுதுவதுண்டு.

 

அவை  யாவும் நீங்கள் அறிந்ததே...

 

எங்கே  நான் இருந்தாலும்

அந்த இடம்

மகிழ்ச்சியாக

கலகலப்பாக  

ஒரு குடும்பமாக இருக்கும்

அப்படி வைத்துக்கொள்வேன்

 

வயசு

திருமணம்

பிள்ளைகள்

பொறுப்புக்கள்

பதவிகள்............... எவையும்  என்னை  மாற்றவேண்டிய  அவசியத்தை இதுவரை  தரவில்லை...

 

உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

நான் இங்கு வந்த புதிதில்

எனக்கு உடன்பாடான  கருத்துக்கு

அல்லது நான் எழுதவேண்டியதை இன்னொரு கருத்தாளர் எழுதியிருந்தால்

அதற்கு ஆமென் என  மட்டும் எழுதிச்செல்வேன்.

 

நிலாமதி  ரீச்சர் அதை  தவிர்க்கமுடியுமா? என ஒருமுறை  கேட்டார்

அன்றிலிருந்து அந்த சொல்லை  நான் எங்கும் (யாழுக்கு  வெளியிலும்) பாவிப்பதில்லை.

 

உங்கள் கருத்துக்களை  எதிர் பார்க்கின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கடும் நீலத்தைக் குறைத்து மெல்லிய நீலத்தில் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களிற்காக உங்களை மாற்ற வெளிக்கிட்டால் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். 

நீங்கள் நீங்களாக இருப்பது தான் சரி. உங்களின் மனது சொல்வதை கேளுங்கள். 

 

ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் ஒரு குழந்தையும் மிருகமும் உண்டு என்று நான் படித்த காலங்களில் அறிந்துகொண்டேன். 

அந்தந்த இடத்தில் அதற்கேற்றாற்போல் மாற வேண்டும். அந்தவகையில் நான் உங்களிடமிருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருப்பதே சிறந்தது :wub:

மற்றவர்களுக்காக மாறவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். இது உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பொருந்தும்!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் சேரும் இடத்தில் எட்டு விமர்சனம் வைக்கிறது வழமைதானே. நீங்களும் ஒரு பேசுபொருள், பாடுபொருளாகி வருகின்றீர்கள் என்று பெருமைப்படுங்கள். ஏற்கனவே லாசப்பலில் பெரும் புள்ளி. இனி பிரான்சில் முக்கிய வி.ஐ.பி. ஆவீர்கள். பிறகு எல்லோருக்கும் அருள்பாலிக்கும் அதிகாரம் தானே வந்து சேரும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

av-2820.jpg?_r=0 Posted by விசுகு on 05 June 2014 - 07:51 PM

ஜனநாயக அரசியல் பரப்பில் எமது பரப்புரைகளை விட்டுகொடுக்காமல் முன் கொண்டு சென்றால்தான், பொதுஜன கருத்தோட்டங்களை உருவாக்கினால்தான், சளைக்காமல் போராடினால்தான், இன்றில்லாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள், ஒருநாள் விடிவு வரும் என நம்புகிறேன். இப்படி நல்லது நடக்கும் என சளைக்காமல் நம்பும் என்னை நான் நம்புகிறேன். வேறு எதையும், எவரையும் நான் நம்புவது இல்லை.

 

 

இன்று நம்பிக்கை தளர்ந்ததென்ன???

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு,சில விடையத்திற்காக மாற நினைத்தால் எப்போதும் எங்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படும்....உண்மையாக மாற வேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கிறது...என் அனுபவம் யார் மனதும் நோக கூடாது என்பதற்காக யாரு என்ன சொன்னாலும் ம்ம்ம்.என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்..

ஆனால் அந்த அமைதியான போக்காலயே,அமைதி இளக்கும் தருணங்களில் நிறையக் காயப்பட்டு இருக்கிறன்.மாற்றம் என்பது  ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசப்படும்.

மாற்றம் என்பது என்ன.....???? எங்களுக்கான தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு சார்ந்ததாகவோ இல்லை என்றால் எங்களுக்காக வாழுபவர்களுக்கான மாற்றமாக இருந்தால் பறவா இல்லை.ஒரு பொது வெளியில் எழுதுவதற்காக மட்டும் எங்களை மாற்றுவது என்பது வேண்டாத விடையம் என்று நினைக்கிறேன்.

Edited by யாயினி

விசுகு அண்ணா நீங்கள் யாழில் உள்ளவர்களை அரவணைத்து தட்டிக்கொடுத்து வரும் ஒருவர். உங்களைப்பற்றி கருத்து வைப்பவர்கள் தம்மை முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பகிடியாக எழுதும் சில விடயங்கள் யாரையாவது முகம் சுழிக்க வைத்தால் மட்டுறுத்தினர்களுக்கு தெரியப்படுத்தலாம் அதை விடுத்து இப்படி முதுகுக்கு பின்னால் கதைப்பதோ அதை பற்றி எழுதித்திரிவதோ ஏற்புடையதல்ல...அப்படியானவர்களுக்காக நீங்கள் மாற நினைப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.

நீங்கள் நீங்களாகவே இருங்கள் ...மற்றவர்களுக்காக உங்களை மாற்றி நீங்கள் யாழில் எழுதுவதோ கதைப்பதோ  தேவையில்லாதது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நீங்களாகவே இருங்கள் :) 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

உதுதான், உதுக்குத்தான், போத்தலை திறந்தால், இப்படி எதையாவது எழுதிப் போடுவன் எண்டு தான், ஒன்லி ரீடிங், நோ றைடிங்க்...

டுடே றைடிங்க்.போர் யு ஒன்லி. ok பிரதர் கோ டு பெட். யு வில் பி பைன் இன் தி மோர்னிங் 

 

:icon_mrgreen:

Edited by Nathamuni

களவு எடுப்பவனுக்கு தான் களவு எடுக்கின்றன் என்று தெரியும் பொய் சொல்பவனுக்கு தான் பொய் சொல்லுகின்றேன் என்று தெரியும் நடிப்பவனுக்கு தான் நடிக்கின்றேன் என்று தெரியும் .அதே போலத்தான் பிழை செய்பனுக்கும் தான் பிழை செய்கின்றன் என்று தெரியும் .

இவையெல்லாம் மற்றவன் சொல்லி தெரியதேவையில்லை .

அதே போல நீங்கள் எழுதும் போது உங்களுக்கே  நிட்சயம் தெரியும் அது சரியோ தவறோ என்று .தவறு என்று படுவதை தவிர்த்துவிடுங்கள் .

 

இனி  சில வேளை உங்களால் எதுவும் எழுதமுடியாமல் போய்விடும் :icon_mrgreen: .

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, இதென்ன விளையாட்டு?
உங்களின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டுவதே, உங்கள் எழுத்தின் நடைமுறை தான்...

அதில் மாற்றம் வேண்டாம். நீங்கள், நீங்களாகவே இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா.. உங்களை நீங்கள் தான் மீளாய்வு செய்து கொள்ளனும். அடுத்தவன் சொல்லி உங்களை மாற்றிக்கிற நிலைக்கு ஒரு நாளும் நீங்கள் வரக்கூடாது. அடுத்தவன் சொல்வதை உள்வாங்கி மீளாய்வில் அதனை வைச்சுக் கொள்ளலாம். அதற்கா மற்றவன் சொல்லுற படியே நான் மாறனுன்னு நினைக்கும் பகுத்தறிவற்ற தனத்தை வளர்க்கக் கூடாது. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நானாகவே இருப்பேன்......இன்றுவரை என் மனைவி பிள்ளைகளுக்காகக் கூட ...... என்னை நான் மாற்ற தயாரில்லை.........அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி.......ஒருவன் மற்றவனிடம் சரிபிழை கேட்பது தப்பில்லை......icon6m_zps6069767e.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு ஜகா வாங்கிட்டீங்கள்.. :o அவர் உங்கட கருத்தைத்தானே கேட்டார்? முடிவு எப்பவும் அவர் கையில்தானே??

  • கருத்துக்கள உறவுகள்

......உங்களில் யாருக்காவது

என்னை  மாற்றணும்

நான் மாறணும்

அல்லது கட்டுப்படுத்தணும்  என்று நினைத்தால்

அதனை  தயவு செய்து தெரியப்படுத்தவும்.......

 

இதுவரை இல்லை...... இனிமேல் அப்படி ஒரு நிலை வந்தால் தெரியப்படுத்துகின்றேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடும் நீலத்தைக் குறைத்து மெல்லிய நீலத்தில் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. :D

 

 

நன்றி  தம்பி

கவனத்தில் எடுக்கப்பட்டு விட்டது........

(ஆனால் அதற்கு ஆசிரியர் நீங்கள் தான் :D ...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களிற்காக உங்களை மாற்ற வெளிக்கிட்டால் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். 

நீங்கள் நீங்களாக இருப்பது தான் சரி. உங்களின் மனது சொல்வதை கேளுங்கள். 

 

ஒவ்வொரு மனிதனிற்குள்ளும் ஒரு குழந்தையும் மிருகமும் உண்டு என்று நான் படித்த காலங்களில் அறிந்துகொண்டேன். 

அந்தந்த இடத்தில் அதற்கேற்றாற்போல் மாற வேண்டும். அந்தவகையில் நான் உங்களிடமிருந்து எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருப்பதே சிறந்தது :wub:

 

நன்றி  தம்பி

மிகவும் காரமான ஆள் நீங்கள் என்று தெரிகிறது.

 

என்னை  நான் கேள்வி  கேட்டபோது

இந்த இருநிலையை  உணர்ந்து கொண்டேன்

அதை நீங்களும் கவனித்திருக்கலாம்

 

வாழ்க்கை எல்லாவற்றையுமே  பகிரக்கூடிய  அகண்ட திரை

பெற்றோருக்கு மகன்

சகோதரர்களுக்கு தம்பி

மனைவிக்கு கணவன்

பிள்ளைகளுக்கு அப்பா....

 

இதில் அந்தந்த  இடங்களில் அவைகளுக்கு ஏற்றது போல் நடந்து கொள்வதே வாழ்வு என்ற  

தங்கள் கருத்து ஓங்கி அடித்தள்ளது

நன்றி

மற்றவர்களுக்காக மாறவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள். இது உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பொருந்தும்!!! :)

 

நன்றி  சகோதரி.....

உண்மையில் நீங்கள் இது பற்றி  

என்னில் தவறான பார்வை  வைத்திருப்பீர்கள் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு

 

மேலும்

மேலும்  நன்றாக போகவேண்டாமா?? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் சேரும் இடத்தில் எட்டு விமர்சனம் வைக்கிறது வழமைதானே.

நீங்களும் ஒரு பேசுபொருள், பாடுபொருளாகி வருகின்றீர்கள் என்று பெருமைப்படுங்கள். ஏற்கனவே லாசப்பலில் பெரும் புள்ளி. இனி பிரான்சில் முக்கிய வி.ஐ.பி. ஆவீர்கள். பிறகு எல்லோருக்கும் அருள்பாலிக்கும் அதிகாரம் தானே வந்து சேரும். :icon_idea:

 

நான்  இதை இங்கு எழுதியதற்கான  பல  காரணங்கள்  உங்களது கருத்தில் உள்ளது

அவைக்கான ஒரு  உள்ளக தேடல் தான் இது.... :icon_idea:

 

நன்றி ராசா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

av-2820.jpg?_r=0 Posted by விசுகு on 05 June 2014 - 07:51 PM

ஜனநாயக அரசியல் பரப்பில் எமது பரப்புரைகளை விட்டுகொடுக்காமல் முன் கொண்டு சென்றால்தான், பொதுஜன கருத்தோட்டங்களை உருவாக்கினால்தான், சளைக்காமல் போராடினால்தான், இன்றில்லாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள், ஒருநாள் விடிவு வரும் என நம்புகிறேன். இப்படி நல்லது நடக்கும் என சளைக்காமல் நம்பும் என்னை நான் நம்புகிறேன். வேறு எதையும், எவரையும் நான் நம்புவது இல்லை.

 

 

இன்று நம்பிக்கை தளர்ந்ததென்ன???

 

நாம்  நம்புவது என்பது ஒருபுறம்

நம்மைப்பற்றிய  சமுதாயப் பார்வை  எவ்வாறு உள்ளது என்பதை அறிதலே எனது நோக்கம்

அது எனது பாதை சரி என்பதையே இங்கு 100வீதம் சொல்லிநிற்கிறது

 

யாழ் உறவுகள் எனது எழுத்தால் எவ்விதத்திலும்  காயப்படவில்லை என்பது  தெரிகிறது

இனித்தான் இருக்கு ராசா  மிச்சம்...

 

நன்றி  வருகைக்கும் நேரத்திற்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு,சில விடையத்திற்காக மாற நினைத்தால் எப்போதும் எங்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படும்....உண்மையாக மாற வேண்டுமா இல்லையா என்று முடிவு எடுக்க வேண்டியது உங்கள் கையில் தான் இருக்கிறது...என் அனுபவம் யார் மனதும் நோக கூடாது என்பதற்காக யாரு என்ன சொன்னாலும் ம்ம்ம்.என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்..

ஆனால் அந்த அமைதியான போக்காலயே,அமைதி இளக்கும் தருணங்களில் நிறையக் காயப்பட்டு இருக்கிறன்.மாற்றம் என்பது  ஒவ்வொரு இடங்களிலும் வித்தியாசப்படும்.

மாற்றம் என்பது என்ன.....???? எங்களுக்கான தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு சார்ந்ததாகவோ இல்லை என்றால் எங்களுக்காக வாழுபவர்களுக்கான மாற்றமாக இருந்தால் பறவா இல்லை.ஒரு பொது வெளியில் எழுதுவதற்காக மட்டும் எங்களை மாற்றுவது என்பது வேண்டாத விடையம் என்று நினைக்கிறேன்.

 

நன்றி  பிள்ளாய்.........

 

நேரடி  எதிரிகள் பற்றி  பார்த்து

யோசித்து முடிவெடுக்கலாம்

மறைமுக  எதிரிகளை ....?

இது   போன்று கூட்டுப்பொறுப்புடன் முறியடிக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா நீங்கள் யாழில் உள்ளவர்களை அரவணைத்து தட்டிக்கொடுத்து வரும் ஒருவர். உங்களைப்பற்றி கருத்து வைப்பவர்கள் தம்மை முதலில் திருத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பகிடியாக எழுதும் சில விடயங்கள் யாரையாவது முகம் சுழிக்க வைத்தால் மட்டுறுத்தினர்களுக்கு தெரியப்படுத்தலாம் அதை விடுத்து இப்படி முதுகுக்கு பின்னால் கதைப்பதோ அதை பற்றி எழுதித்திரிவதோ ஏற்புடையதல்ல...அப்படியானவர்களுக்காக நீங்கள் மாற நினைப்பதும் வரவேற்கத்தக்கதல்ல.

நீங்கள் நீங்களாகவே இருங்கள் ...மற்றவர்களுக்காக உங்களை மாற்றி நீங்கள் யாழில் எழுதுவதோ கதைப்பதோ  தேவையில்லாதது.

 

நன்றி  சகோதரி

 

 

அண்ணனின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு

அவரும் கொஞ்சம் சிரிக்கட்டுமே என உணர்த்தும் தங்களது எழுத்துக்கள்

உண்மையில் நெகிழ வைக்கின்றன...

 

நான் இங்கு பலமுறை  எழுதியது தான்

நான் ஒரு திறந்த புத்தகம் என.

ஆனால் இங்குள்ள  பலருக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்

நான் முகம் காட்டுபவன்

முகம் காட்ட தயாராக உள்ளவன்

நேற்றுக்கூட ஒரு உறவு குடும்பத்துடன் ஐரோப்பாவிலிருந்து வந்து என்னைச்சந்தித்தார்

(அவருடைய  அனுமதி  பெறாததால் அவரது பெயரை இங்கு தவிர்க்கின்றேன்.  அவர் வேண்டுமானால் எழுதட்டும்)

அதனால் தான் மறைமுக எதிரிகளுக்கு இந்த திரியை  விடுகின்றேன்

வாங்கோ

கேளுங்கோ

பதில் தரப்படும்.....

எனது கருத்து வேண்டாம் என்றால்

யாழ் கள  உறவுகளைக்கேளுங்கோ.

 

நன்றி  தங்கையே.......

நீங்கள் நீங்களாகவே இருங்கள் :) 

 

அதே...

நன்றி  பாட்டி...

விசுகர்,

உதுதான், உதுக்குத்தான், போத்தலை திறந்தால், இப்படி எதையாவது எழுதிப் போடுவன் எண்டு தான், ஒன்லி ரீடிங், நோ றைடிங்க்...

டுடே றைடிங்க்.போர் யு ஒன்லி. ok பிரதர் கோ டு பெட். யு வில் பி பைன் இன் தி மோர்னிங் 

 

:icon_mrgreen:

 

எனக்கு உந்தப்பழக்கம் இல்லை

அதால

களத்தில  இறங்கிடுவன்

களமாடினால்

விழுப்புண்கள் தவிர்க்கமுடியாதை  தானே........ :D

 

நன்றி ஐயா

வருகைக்கும் நேரத்திற்கும்...

களவு எடுப்பவனுக்கு தான் களவு எடுக்கின்றன் என்று தெரியும் பொய் சொல்பவனுக்கு தான் பொய் சொல்லுகின்றேன் என்று தெரியும் நடிப்பவனுக்கு தான் நடிக்கின்றேன் என்று தெரியும் .அதே போலத்தான் பிழை செய்பனுக்கும் தான் பிழை செய்கின்றன் என்று தெரியும் .

இவையெல்லாம் மற்றவன் சொல்லி தெரியதேவையில்லை .

அதே போல நீங்கள் எழுதும் போது உங்களுக்கே  நிட்சயம் தெரியும் அது சரியோ தவறோ என்று .தவறு என்று படுவதை தவிர்த்துவிடுங்கள் .

 

இனி  சில வேளை உங்களால் எதுவும் எழுதமுடியாமல் போய்விடும் :icon_mrgreen: .

 

நன்றியண்ணா

நாமே நம்மை அளவெடுப்பது 100 வீதம்  சரியாகுமா?

 

இனி  சில வேளை உங்களால் எதுவும் எழுதமுடியாமல் போய்விடும்  :icon_mrgreen: .

இதை எழுதி  இந்தக்கருத்தை முடிக்காவிட்டால்

அர்யூன் அண்ணா தெரிவாரா?? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen: 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, இதென்ன விளையாட்டு?

உங்களின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டுவதே, உங்கள் எழுத்தின் நடைமுறை தான்...

அதில் மாற்றம் வேண்டாம். நீங்கள், நீங்களாகவே இருங்கள்.

 

நாம  விளையாடுவோம் சிறி

அதில் எந்த மாற்றமும் இல்லை

 

நாம் விளையாடிபோது

சக விளையாட்டுக்காரர்கள்  எவராவது காயப்பட்டார்களா  என அறியும் முயற்சியே  இது.

இல்லை  என உறுதிப்படுத்தப்பட்டால்

இன்னொரு ஆயுதம் என்னிடம் அதிகமாக இருக்கும்...

 

நன்றி  சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.