Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

 

அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து ஆபத்தான  கடற்பயணத்தை மேற்காண்டிருந்த 153 இலங்கை தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மாக உள்ள அதேவேளை இவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


படகிலிருந்தவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவலகள் தெரிவிப்பதாக கிறிஸ்மஸ் தீவின் ஜனாதிபதி கோர்டன் தோம்சன்  தெரிவித்துள்ளார்.


படகிலிருந்தவர்கள் எவரும் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான அறிகுறிகளோ அல்லது படகோ தென்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108816/language/ta-IN/article.aspx

 

  • Replies 247
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய முடிவு Australia அரசுக்கு பாராட்டுக்கள்.....

கொத்தியும் நாமலும் தாமே அனுப்பி தாமே காப்பாற்றுகிறார்கள். உலக அரசியல் யுக்தியாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய முடிவு Australia அரசுக்கு பாராட்டுக்கள்.....

 

 

என்னை  இவ்வாறு ஒப்படைத்தது போல  உணர்கின்றேன்

காய்ச்சலும்

தடிமனும்

அவரவருக்கு வந்தால் தான் உணர்ந்து கொள்ளமுடியுமா  சுண்டல்??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அவர்களுக்கு, சிலவேளை ஊரில் இருக்கும் வளர்த்த நாயைத் தவிர அங்கிருந்த அம்மிக்குழவி ஆட்டுக்கல் எல்லாத்தையும் உங்களுடன் நீங்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கலாம். என்ன விடையம் யாழ் களத்தில் அட்வான்ஸ் மெம்பர் போல நீங்களும் அவுஸ்ரேலியா நாட்டின் அட்வான்ஸ் மெம்பர் அவ்வளவே.

 

சில வேளை அகதியாகக் காரணம் எதுவுமில்லாது கப்பலில் ஏறிவருபவர்கள் அதிகமாக இருக்கலாம், அதற்காக உண்மையாக சிங்களத்தின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகளோ இல்லை முன்னாட் போராளிகளோ வந்து அவர்களைத் திருப்பி அனுப்பியோ அன்றேல் காணமற்போகச் செய்தோ ஏதவது நடந்தால் அதை வரவேற்க வேண்டிய தேவை இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

 

மேலும் இங்கிலாந்து தேசத்திலிருந்து குற்றப்பின்ணணியுள்ளவர்களை நூற்றாண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தி குடியேற்றப்பட்ட மக்களை கொண்டதே தற்போதைய அவுஸ்ரேலியா அதன் வரலாற்ருடன் ஒப்பிடுகையில் மிகவும் அண்மைக்காலத்திலேயே வேண்டாத விருந்தாளியாகப் போன வந்தேறு குடியே சுண்டலான நீங்களுமாகும்.

 

அந்தமண்ணின் மைந்தர்களான அபரோஜினர்கள் இப்போது தெருப்பிச்சைக்காரர்களாகவும் குற்றப்பரம்பரையைச் சேர்ந்தவர்களாகவும் நடாத்தப்படுகிறார்கள்.

 

இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களுக்கும் சில பத்துவருடங்களுக்கு முன்பு வேண்டாவிருந்தாளியாக அன்றேல் கடைநிலை ஊழியம் செய்பவராகவோ குடியேறிய உங்களுக்கும் தற்போது சிறுதோணிகளில் ஈழத்திலிருந்து அந்தப் பெருந்தீவினை நோக்கிப் பயணப்படுபவருக்கும் இடையில் காலங்கள் வித்தியாசம் இருக்கலாமேயொழிய வேறு ஒரு காரணமும் வேறுபாடானதல்ல.

 

சொந்த நாட்டினை விடவும் அவுஸ்ரேலியா அந்தமாதிரி கனடா அந்தமாதிரி லண்டன் மற்ரும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அந்தமாதிரி எனப்புகழ்பவர்கள் அனைவரும் உங்களது கற்றக்கறியிலதான் சேருவினம்

 

நக்கிப்பிழைக்க வந்தனாங்கள் நக்கிறதவிட்டுட்டு வேற வேலை எதையும் செய்யவோ கதைக்கவோ கூடாது ஏனெண்டால் நக்கிற சட்டியை வேறு ஒரு தெருநாய் கொண்டுபோய்விடும் நான் உட்பட.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அகதிகளை தவிர இந்தியாவில் பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தும் உண்மையான அகதிகளின் நியமான கோரிக்கைகளை பின்தள்ளும் இப்பிடியான பொருளாதார அகதிகளின் வருகை நிறுத்தப்பட வேண்டியதே........

அந்தவகையில் ஆஸ்திரேலியா அரசு செய்துவரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதே......

இன்னும் ஒரு நாட்டுக்குள் நான் உற்பட யாராக இருந்தாலும் திருட்டுத்தனமாக நுழைவது கண்டனத்துக்குரியது...........

இவர்களுக்கு படகில் வர ஆளுக்கு 10000 டாலர்ஸ் கொடுத்து வர முடியும் என்றால் இவர்கள் எல்லோரும் பொருளாதார அகதிகள் தான் மாறாக உயிருக்கு அஞ்சி ஓடி வருபவர்கள் அல்ல.....அப்பிடி வருபவர்களா இருந்தால் இவர்கள் இந்தியாவிலே வாழ்ந்திருக்கலாமே.....

சுண்டல்: முதல் (1980களில்) ஜெர்மனி க்கு போனவர்களை தவிர தற்போதுள்ள 95% வீதமான புலம் பெயர் தமிழர்களும் திருட்டு தனமாக புலம் பெயர்ந்தவர்களே.....இந்தியாவில் எவ்வளவு பணம் இருந்தாலும் நிம்மதியாக வாழமுடியுமா தெரியாது...எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டும்....ஆகவே அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் போவதை குறை சொல்ல முடியாது.....ஆனால் இப்போது எல்லா நாடுகளும் குடிவரவு முறைகளை இருக்க தொடங்கியுள்ளன...ஆகவே மக்கள் ஏமாற்றுபவர்களின் பேச்சை கேட்டு தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்..மற்றும் தப்பி சென்றாலும் ஒரு பலனும் கிட்டாது என்பதை நினைத்து வேதனை தான்...ஆனால் மக்கள் புலம் பெயருவதை குறை சொல்ல முடியாது...இப்போது அவுஸ்திரேலியாவில் புதிதாக வருபவர்களுக்கு நல்ல வேலையும் கிடையாது....அரசும் பண்ணும் கொடுக்காது...அதை இவர்கள் விளங்கவும் வேண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல இலங்கை அகதிகள் என்ற போர்வையில் யுத்த வாசமே அறிந்திராத பலரும் வருகின்றார்கள் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து வரும் இந்திய தமிழர்கள்........உற்பட...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அகதிகளை தவிர இந்தியாவில் பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தும் உண்மையான அகதிகளின் நியமான கோரிக்கைகளை பின்தள்ளும் இப்பிடியான பொருளாதார அகதிகளின் வருகை நிறுத்தப்பட வேண்டியதே........

அந்தவகையில் ஆஸ்திரேலியா அரசு செய்துவரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதே......

இன்னும் ஒரு நாட்டுக்குள் நான் உற்பட யாராக இருந்தாலும் திருட்டுத்தனமாக நுழைவது கண்டனத்துக்குரியது...........

இவர்களுக்கு படகில் வர ஆளுக்கு 10000 டாலர்ஸ் கொடுத்து வர முடியும் என்றால் இவர்கள் எல்லோரும் பொருளாதார அகதிகள் தான் மாறாக உயிருக்கு அஞ்சி ஓடி வருபவர்கள் அல்ல.....அப்பிடி வருபவர்களா இருந்தால் இவர்கள் இந்தியாவிலே வாழ்ந்திருக்கலாமே.....

 

மிகவும் தப்பான கருத்து, அங்கு வாழ முடியாத நிலையில்தான் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் தங்களின் பிள்ளைகளின் ஏதிர்காலத்திற்காக ஒரு நல்ல வழிபிறக்காதா என ஏங்கி வட்டிக்கு கடன் வாங்கி ஓடி வருகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குப்பின்னும் எத்தனை சோகக்கதைகளோ? சொந்த மண்ணில் சந்தோஷமாக வாழமுடியுமென்றால், ஏன் நாம் இங்கு வந்து கஷ்டப்படனும் எல்லா உறவுகளையும் சந்தோஷங்களையும் விட்டுவிட்டு.

 

ஏன் இந்த அவுஸ்க்குள் குடியேறியவர்கள் எல்லாம் முன்னார் திருட்டுத்தனமாகதான் வந்தார்கள், அதை மறந்துவிட்டீர்கள், எல்லாம் வந்தேறு குடிகளே.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன தான் சொல்லுங்க அகதிகள் விடையத்தில் லிபரலின் கடும்போக்கான கொள்கை பாராட்டப்பட வேண்டியது......

இனி இலங்கையில் இருந்து வருபவர்கள் அகதிகள் என்றே சொல்ல முடியாது வெறும் பொருளாதார அகதிகள் தான் இவர்களுக்கு குடுக்கும் வாய்ப்பை எவ்ளவோ உண்மையான அகதிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு கொடுக்கலாம்

இந்த இலங்கையில் இருந்து வரும் அகதிகள் உயிருக்கு பயந்து வந்தால் சரி உங்களுக்கு கம்போடியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி உயிர் பாதுகாப்பு தருகின்றோம் என்றால் உடனே திரும்ப இலங்கைக்கு போக கையை உயர்த்துகின்றார்கள். ....:D :d :D

நீர்கொழும்பு பக்கம் இருந்தெல்லாம் சிங்கள மொழி பேசி சிங்களவர்களாகவே வாழுகின்ற தமிழர்கள் வந்து இருக்கின்றார்கள்...அவர்கள் தங்கள் வாயால் சொன்னது தாங்கள் உழைக்க தான் வந்தது என்று சோ இதெல்லாம் ஆஸ்திரேலியன் க்கு தெரியாமல் இருக்குமா......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டலை விட புத்தர்கள் எவ்வளவோ மேல்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்டா நாட்டாண்மை தீர்ப்ப சொல்லிட்டாரு.....

இது ஒருவகை வாழ்வியல் சுண்டல்.. லக் இருக்கிறவை வெல்லலாம்.

நாங்கள் இங்கிலாந்தில் ஆங்கிலையருக்கே வாய்சவடால் விடுவது, இது என் தாத்தன் பூட்டன் சொத்து. வட்டியுடன் அனுபவிப்பது எனது பிறப்புரிமை என...

அது மட்டுமல்ல இலங்கை அகதிகள் என்ற போர்வையில் யுத்த வாசமே அறிந்திராத பலரும் வருகின்றார்கள் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து வரும் இந்திய தமிழர்கள்........உற்பட...

 

இந்த கப்பலில் சரிபாதி இந்தியர்களும் அகதி என்கிற போர்வையில் வர இடமிருக்கு.....

(நிறைய இந்தியர்களும் இலங்கையூடாக இலங்கை தமிழர் என்கிற போர்வையில்  2000களில்  கனடா வந்ததாக கேள்விபட்ட ஞாபகம்)

 

மேலே பனங்காய் சொன்னது மாதிரி...வருபவர்களை குறை சொல்ல முடியாது..ஆனால் வந்து ஏமாற போகிறார்கள் என்று வருத்தப்படலாம்....(அவுஸ்திரேலியா கனடா தான் வரவேற்ற நாடுகள்...இப்போது அவையும் கதவைடைக்க தொடங்கி விட்டன...)

 

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் என்று வருவோரை திருப்பியனுப்பும் லிபரல் கட்சியின் கொள்கை மனிதவுரிமைகள் சாசனத்திற்கு விரோதமானது. இங்கிருந்துதான் எமது கருத்தாடல் ஆரம்பிக்கப்பட வேண்டுமே ஒழிய, எமது உணர்வுகளிலிருந்தல்ல.

 

போர்முடிந்து ஏறக்குறைய 5 ஆண்டுகள் ஆகிவிட்டபின்னரும் அகதிகள் என்று மக்கள் வருவது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், போர் முடிந்தது என்ற சிங்கள அரசாங்கத்தின் அறிவிப்பினால் மட்டும் அங்கே தமிழருக்கு தற்போது எந்தவித அடக்குமுறைகளும் இல்லையென்கிற முடிவிற்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம் என்று எனக்குப் புரியவில்லை.

 

சரி, வருபவர்கள், இந்தியாவிலிருந்து வருகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இந்தியாவில் ஈழத் தமிழ் அகதிகள் 2009 போரின்பின்னர் போய்ச் சேரவில்லையென்று எவராலும் சொல்ல முடியுமா? சுண்டலுக்குத் தெரிந்திருக்குமோ தெரியாது, சிட்னியில் சில மாதங்களுக்கு முன்னர் பாஷன அபேவர்த்தனவும், தமிழ்நெட்டின் வன்னிச் செய்திச் சேகரிப்பாளரும் கலந்துகொண்ட மெளனிக்கப்பட்ட குரல்கள் குறும்பட நிகழ்வில் தான் தமிழ்நாட்டிற்கு வந்தபின்னரும் கூட சிங்கள் புலநாய்வுத்துரையும், இந்திய புலநாய்வுத்துறையும் தம்மை எப்படி பிந்தொடர்ந்தார்கள் என்றும், தாம் எத்தனைக் கஷ்ட்டங்களுக்கு மத்தியில் அங்கே வாழ்ந்து பின்னர் முடியாமல் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியிருந்தார். சரி, அவரை விடுங்கள், இன்று தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வாழும் ஈழத் தமிழருக்கு எல்லாவித சலுகைகளும், பொலீஸ் கெடுபிடியற்ற சுதந்திரமான வாழ்வும் மற்றைய இந்தியர்களைப் போலக் கிடைக்கிறது என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையென்றால், அவர்கள் வருவதில் என்ன தவறிருக்கிறது?

 

2009 இல் முடிவுற்றது வெறும் சடங்கிற்கான போர் மட்டுமே. ஆனால் இன்றுவரை தமிழர் தாயகத்தில் சிங்களவரின் திட்டமிட்ட அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் தொடர்ந்துதான் வருகிறது. அதை இங்கிருப்பவர்கள் யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். சுண்டலுக்கு நினவிலிருக்கலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன், 2009 இல் போர் முடிவடைந்த கையோடு, அப்போது எதிர்கட்சியாக இருந்த லிபரல் கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ஜூலி பிஷப் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பியவுடன் பாராளுமன்றத்தி தனது பயணம் தொடர்பான உரையொன்றை ஆற்றியிருந்தார். அதில் தமிழர்களுக்கு அங்கே எந்தவிதமான பிரச்சனையுமில்லை, அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள், அகதிகளாக இடம்பெயர்வதற்கான எந்தத் தேவையுமில்லை என்று கூறியிருந்தார். அது பலரது கண்டனத்திற்கும் உள்ளானதோடு, ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட லிபரல் கட்சியின் எதிர்கால அகதிகள் தொடர்பான நிலை என்னவென்பதையும் அப்போதே தெளிவாகக் காட்டிற்று.

 

அதுபோலவே, ஆட்சிக்கு வந்தவுடன் அகதிகள் தொடர்பான புதிய கொள்கையை வகுத்துக்கொண்டு, அகதிகளை எப்படியாவது தடுத்து நிறுத்துவதென்று செயற்பட்டு வருகிறது. இதற்காகவே, உலக நாடுகளால் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையரசாங்கத்திற்கு இரு ரோந்துக் கப்பல்களையும், பெருமளவு பணத்தையும் அது கொடுத்து உதவியது.

 

அகதிகளை தடுத்து நிறுத்துவது அல்லது திருப்பியனுப்புவதென்கிற லிபரல் கட்சியின் கொள்கையென்பது இனக்கொலையாளிகளுடன் சேர்ந்து வேலை செய்வதையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே லிபரல் கட்சியின் அகதிகள் தொடர்பான கொள்கையை ஆதரிக்கும் சுண்டல், இனக்கொலையாளிகளுடனான லிபரலின் நட்பையும் ஆதரிக்கிறாரா என்று சொல்வது நல்லது.


கியூ ஜம்பேர்ஸ் (Queue Jumpers) என்று சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டும் வெள்ளையினத்தவர்போல சுண்டல் பேசுவது கொடுமை. எல்லோரையும் போலவே நீங்களும் அகதிகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்து வாருங்கள் என்று சொல்கிறார்கள்.

 

அப்படிக் காத்திருந்து விண்ணப்பித்தாலும் சொல்வதுபோல அனுமதித்துவிடுவார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது. அப்படி 10 அல்லது 15 வருடங்கள் காத்திருந்து அனுமதி கிடைப்பதற்கிடையில் விண்ணப்பித்தவர் உயிருடன் இருபார் என்பதற்கும் என்ன அத்தாட்சி வைத்திருக்கிறீர்கள் ?

வேலையும், கல்வியும் கேட்டு வருபவர்கள் காத்திருந்து வரட்டும். அதற்காக , உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவன் காத்திருந்து வரவேண்டும் என்று கேட்பது முட்டாள்த்தனம். அதை ஒரு தமிழரே சொல்வது வேதனை.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

The standard DIBP procedure will be to process their claims in the Manus Island facility. But if the asylum seekers opted to be returned to SL than Manus, chances are they would have been escorted/towed/transfered to SLN vessels for safety reasons and their boat will be destroyed due to quarantine issues. SLN would then hand them over to SL Immigration for investigation.

Below is a good read, specially the comments.

http://m.smh.com.au/federal-politics/political-news/tamil-asylum-seekers-handed-over-to-sri-lankan-navy-according-to-reports-20140701-zssnn.html

Mods - Sorry on mob device.

  • கருத்துக்கள உறவுகள்

Also heard the news two men who had adverse ASIO security assessments have received their Visas and will be released into the community after 5 years!

Not official yet though.

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக வந்து புலி அடிக்குது,ஆமி அடிக்குது என சொல்லி பிரஜாவுரிமை பெற்று அடுத்த நாளே சிறிலன்காவுக்கு எல்லொரும் குடும்பமாக சென்ற புள்ளிவிபரங்கள் அவுஸ்ரேலியா அரசிடம் இருக்கின்றது....ஆரம்பகாலகட்டத்தில் இரண்டு வருடத்தில் பிரஜாவுரிமையை அவுஸ்ரெலியா கொடுத்தது....மூன்றாம் வருடம் சகல அகதியும் சிறிலங்காவுக்கு சென்றார்கள்...இதுவும் ஒரு காரணம் .....ஐரோப்பா நாடுகளில் குறைந்தது 5 வருடமாவது இருந்த பின்புதான் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் என நினைக்கின்றேன்......பல்ஸ்தீனம்,ஈராக் ,ஈரான் ஆப்காணிஸ்தான்.....எல்லோரும் அப்படித்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் சென்று பிறகு அசைலம் அடித்த எல்லோரையும் திருப்பி அனுப்ப வேண்டும். மாணவராக இத்தனை காசு கொடுத்து வரமுடிந்தவர்கள் எப்படி அகதியாயிருக்க முடியும்.

அகதியாக வந்து புலி அடிக்குது,ஆமி அடிக்குது என சொல்லி பிரஜாவுரிமை பெற்று அடுத்த நாளே சிறிலன்காவுக்கு எல்லொரும் குடும்பமாக சென்ற புள்ளிவிபரங்கள் அவுஸ்ரேலியா அரசிடம் இருக்கின்றது....ஆரம்பகாலகட்டத்தில் இரண்டு வருடத்தில் பிரஜாவுரிமையை அவுஸ்ரெலியா கொடுத்தது....மூன்றாம் வருடம் சகல அகதியும் சிறிலங்காவுக்கு சென்றார்கள்...இதுவும் ஒரு காரணம் .....ஐரோப்பா நாடுகளில் குறைந்தது 5 வருடமாவது இருந்த பின்புதான் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் என நினைக்கின்றேன்......பல்ஸ்தீனம்,ஈராக் ,ஈரான் ஆப்காணிஸ்தான்.....எல்லோரும் அப்படித்தான்

 

இது அவுஸ்ரேலியாவிலை மட்டும் இல்லை ஐரோப்பா கனடா எல்லா இடத்திலையும் இதுதான் கதை... !!

 

கிட்டடியில் பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் மூலம்  நாலுவருட விசா வளங்கப்பட்ட ஒருவரின்  விசாவை பார்த்தேன்...   அதில் இலங்கைக்கு போய் வருவது மட்டும் இல்லை  அலுவலக ரீதியில்கூட  தொடர்புகளை பேணியது கண்டு பிடிக்கப்பட்டாலும்  விசா உரிமை பறிக்கப்படும் எண்று எழுதி இருந்தது... 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைகாலதில் இந்தியர் பலருக்கு அவுஸ்ரேலியா விசா கொடுத்துள்ளது அத்துடன் பிரஜாவுரிமையும் பலருக்கு கொடுத்துள்ளது.....கொடுத்துக்கொண்டுமிருக்கின்றது.

எனது நிறுவனத்தில் பெயிண்டிங் வேலை செய்யும் இலங்கை ஆட்கள் பிள்ளை குட்டி எல்லாம் இழுத்துக் கொண்டு அகதியாக வாழும் மாவட்டத்திற்கு ஓடினார்கள் 7ம் தேதி கையெழுத்து வைக்க வேண்டும் என்று....
 இங்கு வந்து இருபது வருடம் ஆகிவிட்டது இன்னும் இவர்கள் அகதிகளாக தான் வாழ்கிறார்கள்... அப்பாவிற்கு எந்த குடியுரிமையும் இல்லை மகன் இங்கு பிறந்தவன் அடிக்கடி போக சொல்லி கேட்கிறார்கள் இலங்கைக்கு ... இங்கிருந்து இலங்கை சென்று நிலையான வாழ்க்கை வாழ  உறுதி இல்லை.. வவுனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சொந்தங்கள் வசதியாக தான் உள்ளார்கள் ஆனால் உதவி கேட்டு எந்த பலனும் இல்லை...
 இரவு பன்னிரண்டு  மணிக்கு  ஊருக்கு கிளம்பும் போது ஒரு பெரியவர் சொன்னார் எங்க வாழ்க்கை  இப்படி தான் குஞ்சே விடிவு காலமே பொறக்காது...
 
 வாழ்க்கையெல்லாம்  இவர்கள் இப்படியே இருந்துவிட்டு செத்து போகட்டுமா சுண்டல் ?
 
  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல இலங்கை அகதிகள் என்ற போர்வையில் யுத்த வாசமே அறிந்திராத பலரும் வருகின்றார்கள் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து வரும் இந்திய தமிழர்கள்........உற்பட...

 

இது 100% உண்மை
 
இதை நான் என் கண்கூடக கண்டேன். ஒரு நாள் லண்டனில் நான் போகும் இன்டெர்னெட் காபேயில் ஒரு இந்திய தமிழரை சுற்றி பலர் நின்றுகொண்டு இருந்தார்கள், எல்லேரும் இந்திய தமிழர்கள், நடுவில் இருந்தவர் ஒவ்வோருவரையும் விசாரித்து, அதற்கு எற்றார்போல் கணனியில் கேஸ் எழுதிக் கொடுத்து கொண்டு இருந்தார். அதற்கு எற்ப பணம் வசூலித்திக்கொண்டார்,
 
இவர்கள் ஒருபோதும் போரின் வாசனையை அறியாத தமிழ்னாட்டு தமிழர்கள், தாங்களை இலங்கை அகதிகளாக அறிமுகப்படுதி போலியாக அரசில் தஞ்சம் கோருகிரார்கள். இத்தகையவர்கள் உடனடியாக நாடுகடத்தப்ப்ட வேண்டும், அதே சமயம் உண்மையான அகதிகள் வடக்கு/கிழக்கில் உள்ளார்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.