Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பிரதிநிதிகள் தாமே எனக் கூறி தேர்தல் 2004இல் விஞ்ஞாபனம்;

புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்

விரைவில் பல உண்மைகளை வெளியிட உள்ளேன் என்கிறார் சங்கரி

Sangari.jpg2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும்.

அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்ட மைப்பினரே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

புலிகள் இருந்தபோது ஒரு கதையும், இப்போது அவர்கள் இல்லையென்றதும் மற்றொரு கதையும் பேசக் கூடாது. புலிகள் செய்த பல குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அதனால் இவர்கள் விசாரணைக் குட்படுத்தப்பட வேண்டியவர்கள். குறைந்தது புலிகளைப் பற்றிய வெளிவராத உண்மைகளையாவது இவர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப் பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் பாரதூரமான விடயம். இலங்கை அரசாங்கம் தடை செய்த ஒரு அமைப்பை அவர்கள் தமதும், தமிழ் மக்களதும் பிரதிநிதிகள் என வர்ணித்துள்ளனர். தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வெறும் துண்டுப் பிரசுரம் அல்ல. அது ஒரு கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணம். எனவே இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் பதில் கூறியே ஆக வேண்டும் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இன்று என்னை விமர்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பலர் அன்று புலிகளை கடுமையாக விமர்சித்தவர்களே. பதவி ஆசையால் குத்துக்கரணம் போட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பலரதும் இரட்டை வேடம் எனக்குத் தெரியும். விரைவில் அவற்றை முழுமையாக அம்பலப்படுத்து வேன் எனவும் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

thinakaran.lk/Vaaramanjari/2014/08/31/?fn=n1408317

 

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் இது சரிபோலத்தான் தெரியுது ..........
சமந்தன் ஐயாவை ஒருக்கா நாலாம் மாடிக்கு இறக்கி ஏற்றினால்தான். இந்த பதவியை யாரும் பொறுப்பானவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

அப்போ இதை எங்கே ஏத்தி இறக்கிறது?!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இன்னும் உயிரோட இருக்கிறன் என்று காட்ட கொழும்பில் இருந்து கொண்டு கடிதமும்.. கொக்கரிப்பும் செய்து கிட்டு இருக்குது.

 

இதனை பாடையில் ஏற்றி சுடுகாட்டில இறக்கினால்.. எல்லாம் சரியாகிடும்.

 

இப்படிக் கொக்கரிக்கிறவர்.. புலிகளை உருவாக்கிய 1981 இந்தியாவையும்.. புலிகளை அழிக்கின்றன் என்று தமிழர்களை அழித்த 2009 இந்தியாவையும் விசாரிக்கச் சொல்லிச் சொல்லட்டும் பார்க்கலாம். ரோவே.. கொழும்பில வந்து பொட்டு வைச்சிட்டு போயிடும். :lol:


ஒரு காலத்தில் அரச ஏரிக்கரை பத்திரிகை என்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தினகரன்.. தான் இப்ப யாழின் முதன்மை செய்தி ஒட்டுத்தளமாக மாறி இருக்குது.தினகரன் எப்போதுமே... சிங்கள அரச பேரினவாதத்திற்கு சார்ப்பான வாதங்களை.. செய்திகளை மட்டுமே காவிவரும்.. ஒரு பிரச்சாரப்பத்திரிகை ஆகும். அது பத்திரிகை தர்மத்துக்கு அப்பாற் செயற்படும் ஒன்று. :icon_idea::):rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இதை எங்கே ஏத்தி இறக்கிறது?!  :o  :lol:

பொறுத்த துடன் இன்னும் ஒன்று இரண்டு வருடம் பொறுத்து விட்டு பாடை  ஏற்றவேண்டியதுதான் 

என்னே ஒரு வில்லத்தனம் இந்த மனுஷனுக்கு? விசாரணையை வைச்சு முடியுங்கோ அதுக்குப்பிறகு யாரை யார் பிடிப்பது எண்டு யோசிப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தசங்கரி சொன்னதை புலம்பெயர் அன்பர்கள் உண்மையாக விடக்கூடாது. ஏனெனில் புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினர் பதில் கூறினால் தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழரின் ஒரே பிரதிநிதியாகி விடுவார்கள். எனவே இதற்கான பதிலை புலம்பெயர் அன்பர்கள்  கஜேந்திரன் மற்றும்  அனந்தி போன்றவர்களை வைத்துப் பதில் கூற முற்படவேண்டும்.

இந்தியாவில் புலிகளிடம்  வாங்கிய அடி அப்படி . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்

 

 

இது அடுத்த வெங்கடாந்தி  :D

கூனி இல்லாவிட்டால் இராமாயனம் இல்லை.   :D

 

தேர்தல்களில் மக்களிடம் வாங்கிய அடி வலி தாங்க முடியாமல் புலம்புகிறார். பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியின் கலகம் பல உண்மைகளை வெளி கொணரலாம், 2009 மக்கள் படுகொலையை தடுக்க உலகத்தமிழர் பாடுபட்டனர்,எங்கெயோ இருந்த முத்துக்குமாரன் தீக்குளித்தார்,சம்பந்தர் என்ன செய்தார் சிங்களம் சாட்சியமில்லாமல் படுகொலை செய்த்தது மக்களின் பிரதினிதிகள் குறைந்த்து அதனையாவது வெளிக்கொணர்ந்திருக்கலாம்.புலிகள்தான் இதற்கெல்லாம் காரணம் போல் உலகத்திற்கு தோன்றும் வண்ணம் புலிகளுக்கு பகிரங்க கடிதம் எழுதினார் சம்பந்தர் புலிகள் தமிழரது குரலாக இவர்கள் ஒலிபார்கள் என்று நம்ப கடைசியில் நிலமை மாறியது, கூடவே இருந்த கருணவையும் , மாத்தையாவையும் மாத்துவதற்கு அவர்களால் முடியுமென்றால் இது சின்ன எல்லாம் விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்  சரியாகத்தான் சொல்கிறார்

புலிகள் செய்த அனைத்துக்கும் தமிழர்கள்  அனைவரும் பொறுப்பு

அந்தவகையில் தமிழ்களின் பிரதிநிதிகள் கூட்டமைப்பினர்  என்பதை ஏற்றுக்கொள்கிறார்

நல்ல முன்னேற்றம் தானே....

 

 

புலிகள் விட்டதிலிருந்து தொடங்க இது உதவும்...

இந்தமானிடருக்கு திடீர் என கூத்தமைப்பில் வெறுப்பு ஏற்பட்டு இப்படி வெறுத்து கொட்ட காரணம் என்ன? இலங்கையரசுக்கு இவர்களால் எதாவது நெருக்கடி வந்துடுமோ எனத்துடிக்கிறார் போலத்தெரிகிறது..இந்திய விஜமும் அதோடு தொடர்பான செய்திகளும் எஜமானுக்கு(ராஜபக்ச) பாதிப்பு ஏற்படுத்திவிட்டதுபோல..இனி இவற்றை வாரிசு எத்தனை அடி பாயுமோ?....

ஓகே சரி சங்கரி குற்றச்சாட்டுக்கு பதில சொல்லவேண்டுமென்றால் சர்வதேச விசாரணையை அனுமதிக்குமாறு மிஸ்ரர் ரஜபக்சவை ஊக்கப்படுத்த வேண்டியதுதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.